All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

மனதில் நின்றவள் 18

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Member Author
Joined: 3 months ago
Posts: 20
Topic starter  

மனம் -18
சிறிது நேரப் பயணத்தின் பின் ஒரு காஃபி ஷாப்பின் முன் காரை நிறுத்தினான் ரிஷி. அவளும் அவனை கேள்வியாய் பார்க்க "காஃபி குடிச்சிடு போகலாம்" என்றான் அவளும் இறங்கிக் கொண்டாள்.

இருவரும் காபி ஷாப் நுழைந்து ஓரிடத்தில் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டனர். ரிஷியும் இரு காஃபிகளை ஓடர் கொடுத்துவிட்டு.கொஞ்சம் இரு வாரேன் என எழுந்து சென்றான். அப்போது அவன் மேசையில் வைத்து விட்டுச் சென்ற அலைபேசியில் அழைப்பு வந்தது, அதன் திரையை பார்த்தவள் அதிர்ந்து போனாள்!!! இத பாத்துட்டாரா??? என நகத்தை கடித்தபடி ஒருவித பதட்டத்தில் இருந்தாள். அலைபேசியும் அடித்து ஓய்ந்தது.

சிறிது நேரத்தில் அவ்விடம் வந்து அமர்ந்தான் ரிஷி. மீண்டும் அழைப்பு வர திரையில் அவள் வரைந்த சுவரோவியம் மின்னியது. அதனைப் பார்த்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ தலையை குனிந்து கொண்டாள்.

பிரகாஷ் தான் அழைத்திருந்தார்," ஹலோ அப்பா ம்ம் ஆமா உங்க மருமகளோட வாரேன்" என்றான் புருவத்தை உயர்த்தி அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து கொண்டாள்.

அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது "சகா" என்றால் மென்மையாக தனக்கான அவனது பிரத்தியேக அழைப்பு, அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அவளும் அவனை ஏறிட்டு பார்க்க அவன் பார்வையோ அவளை உள்ளிழுத்துக் கொண்டது.

"சீக்கிரமா கல்யாணம் பண்ணிப்போம் உன்ன தள்ளி வச்சு பாத்துட்டு இருக்க முடியல" என்றான். அவளோவு அவனை அதிர்ந்து பார்க்க!!!" முட்ட கண்ண விரிக்காத டால்" எவ்வளவு கண்ட்ரோல்ல இருக்கனு எனக்கு தான் தெரியும்" என்றான்.

அவளும் வெட்கச் சிரிப்புடன் வேறு பக்கம் தலையை திருப்ப காஃபியும் வந்ததுஅவளை ரசனையுடன் பார்த்தபடி காஃபியை குடித்தான்.

அவளும் தனக்கான காஃபியை மிடரு மிடராக உறிஞ்ச அவள் தொண்டைக் குழியும் அதற்கேற்ப ஏறி இறங்கியது. அவளையே பார்த்திருந்தவன் பெருமூச்சுடன் தன் காஃபி கப்பை சத்தத்துடன் மேசையில் வைக்க, அவளும் அவனை அச் சத்தத்தில் ஏறிட்டு பார்க்க கண நேரத்தில் அவள் காஃபிக் கப்பை கைப்பேற்றி இருந்தான்.

அவளோ "ஐயோ அது என்னோடது" என்றாள்,அவள் இதழை பார்த்தபடியே அவள் இதழ் பட்ட இடத்தில் தன் இதழையும் வைத்து காஃபியை அருந்த அவனது பார்வை வீச்சை தாங்க முடியாது அவன் அருந்திய காஃப்பிய கையில் எடுத்தாள் அவன் இதழ்களிலும் கண்டிக்கட்டாத புன்னகை ஒன்று.

இருவரும் காபி ஷாப்பை விட்டு ஒருவித இதமான மனநிலையில் வெளியே வந்தனர். இருவரும் காரில் ஏறியதும் காரைக்கிளப்பினால் காரும் வீதியில் விரைந்தது.
காரின் பிளேயரியை இயக்க அதிலும்

" முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்களும் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே " என பாடல் ஓடியது,

பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க அவளும் அவளைப் பார்த்தாள் இருவரின் பார்வையிலும் மின்னலோன்று.மௌனமாகவே பயணம் தொடர்ந்தது. அவளது வீடு வந்ததும் அவளை இறக்கி விட்டவன், தானும் இறங்கிக் கொண்டான் சாருமதி வெளியே கார் சத்தம் கேட்டு வர சகஸ்தாவும் ரிஷியும் வந்து கொண்டிருந்தனர் அவனை உள்ளே வரவேற்றவர். அவன் வந்து சிறிது நேரத்தில் வெளியே. சென்ற சீலனும் வந்தார் " சாருமதி தேனீர் தயாரிக்க உள்ளே செல்ல "ஆன்டி எதுவும் வேணா இப்போ வரும் போது தான் காஃபி சாப்பிட்டோம் என்றான் ரிஷி.

பின் "சுபி எங்க ஆளக் கானோம் என ரிஷி கேட்க" அவன் "மெட்ச் என்று கிரவுண்ட் போயிருக்கான் என்றார் சாருமதி. ஓகே. ஆன்டி பிறகு அவன் கூட பேசிக்கிறன் என்றான்.சிறிது நேரம் அவர்களுடன் பேசினான்." சகஸ்தாவோ தம்பியோட எப்படி பழக்கம் என யோசித்தவளை ரிஷியின் குரல் தடுத்தது.

அப்போ நான் போயிற்று வாரன் என அவன் சத்தத்தில் அவளும் அவனைப் பார்க்க ஒரு தலையசைப்புடன் விடை பெற்றான்.

மாலை ஐந்து மணி இருக்கும் ரிஷிக்கு அழைப்பதா? வேண்டாமா? என யோசித்தபடி அலைபேசியுடன் நடந்து திரிந்தாள் சகஸ்தா.

ஹாலில் டிவி பார்த்திருந்த சுபியும் நடந்து திரியும் சகஸ்தாவை பார்த்துவிட்டு "என்னடி யோசனை எந்த கோட்டையை பிடிக்க அதான் அத்தான சுத்த விட்டுட்டியே என்றான்" அவளோ போடா பாஸுக்கு கால் பண்ணுறதா?? வேணாமா? என தன் தம்பியை பார்த்து கேட்க தன் தலையில் அடித்தவன் "கொஞ்சம் ஃபோனத் பாப்போம்'' என அவளிடம் இருந்து அலைபேசியை வாங்கியவன் "ரிஷி பாஸ்" என்னும் எண்ணுக்கு அழைப்பெடுத்தவன், "இந்தா பிடி அத்தான் லைன்லான் இருக்கார் "என அவளது அழைபேசியை அவளது கையில் கொடுத்தபடி "இதுக்குதான் இவளோ பாடு என்றவன் டிவியை பார்க்கத் தொடங்கினர்.

சாஸ்தாவோ " அடேய் என கத்த ரிஷியும் ஹலோ ஹலோ ....... என்றான். சகஸ்தாவும் அலைபேசியுடன் தனதறைக்கு வந்தவள், "ஹலோ என்றாள் வீட்ட போய்ட்டீங்களா பாஸ்????" என்றாள் அவள் "இப்பதான் வந்தேன் என்றான்" அப்படியே சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

இதோ மனதில் நின்றவள்-18
எப்படி இருக்குனு சொல்லுங்க செல்லம்ஸ் 😍😍😍😍


   
ReplyQuote

You cannot copy content of this page