All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா? -21

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம்: 21

 

கார்த்திகாதேவி பைரவ் வெளியே போய் இருப்பதாக சொன்னாள். 

 

விஜேந்திரன் “ கார்த்திகா எந்து பறயுன்னு ( என்ன சொல்ற) பைரவ் வெளியே போய் இருக்கிறானா? எதற்க்கு அவன் வெளியே போக வேணும்” என கேட்டார். 

 

அருள்மொழி “ அது தானே அவன் இங்கே வந்தால் பெரிதாக வெளியே போக மாட்டான்…ஏன் இரண்டு நாளைக்கு மேலே தங்க கூட மாட்டான் தீடீரென வெளியே போவது என்றால்…ஆச்சரியமாக இருக்கு அதுவும் அச்சன் கிட்ட இல்ல எங்க கிட்ட அனுமதி கூட வாங்கவில்லை “ என்றான். 

 

கார்த்திகா “ எனக்கு தெரியாது சேட்டா காலையில் என் கிட்ட நான் வெளியே போகிறேன் அம்மாயி…என மட்டும் தான் சொல்லி விட்டு போனான் நான் பூஜையில் இருந்தால் வேற விபரம் ஏதும் கேட்கவில்லை” என்றாள்.

 

விஜயன் “ நிங்கள் ஒரு மதியில்லா மனுஷி ( நீ ஒரு அறிவில்லாத பெண்) அவன் சொன்னால் போக விடுவதா? எங்க கிட்ட கேட்க சொல்லி இருக்கலாம் தானே” என்றான். 

 

ரவிவர்மன் “ மோனே விஜயன் பார்த்து வாக்கு( வார்த்தையை) விடு அவள் உன் அனியத்தி மட்டுமல்ல ஈ ராஜா ரவிவர்மனோட மோளும் கூட…உனக்கு பைரவ் வெளியே போனதில் என்ன பிரஸ்னம்” ( பிரச்சனை) என கேட்டார். 

 

விஜயனும் அருள்மொழியும் பதில் சொல்ல தடுமாற..

 

“ ஞான் அதை பறயட்டே முத்தச்சன் ( நான் அதை சொல்கிறேன்) என சொல்லி கொண்டு பைரவ் வந்தான்…அவன் பின்னால் முன்னா கூடவே வேற இரண்டு பேர் ஆறடி உயரத்தில் வந்து நிற்க… விஜயன், அருள் மொழி வாய் மூடி கொண்டது காரணம் பைரவ் கார்ட்ஸ் பற்றி திருவனந்தபுரம் அறியும். 

 

பைரவ் “ முத்தச்சன் அதை அவங்களால் எப்படி சொல்ல முடியும்…என்ன சித்தப்பா சரி முத்தச்சன் உங்க கிட்ட ஒரு கேள்வி எனக்கு உங்க உண்மையான பதில் வேணும்…அதற்க்கு பிறகு நீங்க நேற்று சொன்ன விஷயத்திற்க்கு நான் என் பதிலை சொல்கிறேன் “ என்றான். 

 

ரவிவர்மன் “ சொச்சு மோன் கேட்டு நான் பதில் சொல்லாமல் இருப்பதா?  ஈ கொட்டாரத்தின் அடுத்த வாரிசு நீ கேளு மோனே” என்றார். 

 

பைரவ் “ நீங்க உங்க கொட்டாரத்தை விட்டு வெளியே போய் நம்ம பிசினஸ்…ஏன் நம்மை நம்பி வாழும் மக்களை போய் பார்த்து இருக்கிறீங்களா? என கேட்டான்…அவன் கேள்வி புரியவில்லை என்றாலும் அவர் பதில் அளித்தார். 

 

ரவிவர்மன் “எனக்கு நிங்களட கேள்வி புரியவில்லை சொச்சு மோனே…இருந்தால் என் பதில் நான் நிங்களட அச்சன், அம்மே மரணசோஷம் ( இறந்த பிறகு) பெரிதாக வெளியே போனது இல்லை. 

 

அது மட்டுமல்ல என் மோள், சொச்சு மோன் வாழ்க்கை இப்படி ஆன பிறகு…எனக்கு எதிலும் ஈடுபாடு இல்லை அது தான் நிங்களட கொச்சச்சன் இரண்டு பேரும் தான் பார்த்து கொள்வது…இப்போ ஈ சோதியம் (கேள்வி) எதற்க்கு மோனே” என கேட்டார். 

 

பைரவ் “  ஒன்றுமில்ல முத்தச்சன் நான் விவாகம்…. பண்ணி கொள்ளலாம் என்றுமுடிவெடுத்தது இருக்கிறேன் “ என்றான்….அவன் பதிலை கேட்ட ரவிவர்மன், மீனாட்சி, கார்த்திகா முகம் மலர்ந்தது…விஜயன், அருள்மொழி மட்டும் அவனை யோசனையாக பார்த்தனர். 

 

மீனாட்சி” தாயே மதுரை மீனாட்சி என் வேண்டுதலை ஏற்று கொண்டு விட்ட…உன் கோவிலுக்கு என் குடும்பத்தோடு வந்து என் நேர்த்திகடனை நிறைவேற்றுவேன் தாயே “ என சொன்னவர் பேரன் முகத்தை தடவி நெட்டி முறித்தார். 

 

கார்த்திகா பைரவ்வை கண்களில் சந்தோஷ கண்ணீர் வர அணைத்து கொண்டாள். 

 

ரவிவர்மன் “ என் சொச்சு மோன் என்றால் மோன் தான்…எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை….சந்தோஷத்தில் எனக்கு பறகுகா ( பறக்கனும்) போல இருக்கு…மோனே நான் விவாகத்திற்க்கு ஏற்பாடு செய்யவா?  என கேட்டார். 

 

பைரவ் “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க முத்தச்சன் …எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் தாங்க நான் ஊட்டியில் ஒரு ஹோட்டல் வாங்கி இருக்கிறேன்…அந்த கணக்கு வழக்கு எல்லாம் பார்த்து விட்டு வருகிறேன் “ என்றான். 

 

ரவிவர்மன் “ ஆ!. எனக்கரியும் ( எனக்கு தெரியும்) நிங்களை வேவு பார்க்கவில்லை சொச்சு மோனே நிங்களட பாதுகாப்புக்காக ஞான் வைத்து இருந்த ஆளுங்க சொன்னாங்க…அது மட்டுமல்ல என் மோளோட ஒரேய வாரிசு யுவா அவனையும் பாதுகாக்க வேண்டியது என் கடமை தானே” என்றார். 

 

பைரவ் “ நான்  அப்படி நினைக்கவே இல்லை முத்தச்சன் ஈ கொட்டாரத்தில் உள்ள… உங்க அனைவரின் எண்ணமும் எனக்கு தெரியும் “ என்றான். 

 

ரவிவர்மன் “ மோனே நிங்கள் வரும் போது யுவராஜையும் அழைத்து வாங்க…அவன் என் பேச்சை விட உன் பேச்சை தான் கேட்பான்.. உன் அனியத்தியை அவனை விவாகம் பண்ண சொல்லு” என்றார். 

 

பைரவ் “ உங்களுக்கே தெரியும் முத்தச்சன் நான் யாரையுமே கட்டுப்படுத்த நினைக்க மாட்டேன்… அவனை அழைத்து வருவது என் பொறுப்பு மற்றதை எல்லாம் நீங்க பேசி கொள்ளுங்க” என்றான். 

 

ரவிவர்மன் பைரவ் குணம் தெரிந்து அதற்க்கு மேலே பேசவில்லை…அவன் இறங்கி வந்ததே பெரிய விஷயம் என நினைத்தார் யுவராஜ் இங்கே வரட்டும்…அதற்க்கு பிறகு மீனா, கார்த்திகாவை வைத்து அவனை சம்மதிக்க வைக்கலாம் என நினைத்தார். 

 

அன்று இரவே பைரவ் ஊட்டி கிளம்பி விட்டான்….அவன் முடிவு விஜயனுக்கு, அருள்மொழிக்கு யோசனையாக இருந்தது…ஆனால் அவந்தி, அஜந்தா சந்தோஷமாக இருந்தனர் ரவிவர்மன் மறுநாளே…கல்யாண ஏற்பாடுகளை தொடங்கி விட்டார் திருவனந்தபுரம் நகர் விழாக்காலம் கொண்டது .

 

அன்று பைரவ் ,யுவராஜ் வரும் நாள் அவன் ஹெலிகாப்டர் அரண்மணை வளாகத்தில் தரையிறங்கியது…ஹொலிகொப்டர் சத்தம் கேட்டு. 

 

ரவிவர்மன் “ மீனு, மோளே கார்த்திகா பைரவ் வந்து விட்டான் போல…சீக்கிரமாக ஆரத்தி தயார் பண்ணி கொண்டு வாங்க என் சொச்சு மோன் சொன்ன வாக்கை காப்பாற்றி விட்டான் “ என்றவர் சந்தோஷமாக அரண்மனை வாயிலுக்கு போனார். 

 

அவரை தொடர்ந்து குடும்ப உறவுகள் எல்லாம் போனார்கள்…ஓமனகுட்டி ஆரத்தியை பெரிய வெள்ளி தாம்பாள தட்டில் கரைத்து கொண்டு ஆவலாக நின்று இருந்தாள். 

 

முதலில் யுவராஜ் இறங்க அவன் பின்னால் ஒரு பெண் இறங்கினாள் அடுத்து இன்னுமொரு பெண் இறங்கியவள்… பைரவ் இறங்க உதவி செய்ய வர அவன் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் அவள் உதவியை மறுத்து விட்டு அவனே இறங்கி வந்தான்…அவர்கள் அரண்மனை வாயிலுக்கு போக அதிக தூரம் என்பதால்.. கார் வர அதில் ஏறி அரண்மனை வாயிலுக்கு போனார்கள். 

 

அவர்கள் இறங்கி அரண்மனை வாயிலுக்கு வர… அனைவரும் அந்த பெண்களை தான் கேள்வியாக பார்த்தனர்…அதை வாய் திறந்து கேட்டவர் ரவிவர்மன் தான். 

 

ரவிவர்மன் “ சொச்சு மோனே  அவர் யார்ரானு ( இவங்க யாரு) என கேட்டார்…பைரவ் நிதானமாக அவரை நேராக பார்த்தவன். 

 

பைரவ் “ முத்தச்சன் இவள் பெயர் ஆரபி எந்த பார்யா ( என் மனைவி) என்றான்…’ எந்த என அனைவருமே அதிர்ச்சியாக கேட்டனர். 

 

யுவராஜ் “ அச்சாச்சா இவள் பெயர் ராதிகா  எந்த பாகவி பார்யா ( என் வருங்கால மனைவி) என அறிமுகப்படுத்தினான்…பைரவ், யுவராஜ் என ரவிவர்மன் போட்ட சத்தில் அந்த அரண்மனையே ஆடியது. 

 

ரவிவர்மன் “ யாரை கேட்டு நிங்கள் இந்த முடிவை எடுத்தீங்க ஆ! ஈ கொட்டாரத்திற்க்கு என்று ஒரு மதிப்பு இருக்கு…அதை விட வாக்கு இருக்கு பைரவ் நீ உன் அம்மாயி மகளை விவாகம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து இருக்க…பிறகு யாரோ ஒரு குட்டியை பார்யா என அழைத்து வந்து இருக்க. 

 

யுவராஜ் என்ன தைரியம் இருந்தால்…ஈ குட்டியை உன் வருங்கால மனைவி என அறிமுகப்படுத்துவ “ என கேட்டார்...நிதானமாக 

 

பைரவ் “  நீங்க என் முத்தச்சன் என்பதால் தான்…நான் இத்தனை நிதானமாக பேசி கொண்டு இருக்கிறேன்…இல்லை என்றால் என் பார்யாவை அவமானப்படுத்ததுபவரை நான் உயிரோடு விட மாட்டேன்…அதை ஈ தரவாடு அறியும். 

 

என்ன கேட்டீங்க வாக்கா? யஸ் நான் கொடுத்தேன் தான்…பட் என்ன என்று கொடுத்தேன் என யோசித்து பாருங்க…நான் விவாகம் செய்கிறேன் என்று தான் கொடுத்தேன் யாரை என்று சொல்லவில்லை… சொல்லுங்க ஒரு இடத்தில் கூட நான் அவந்தியை விவாகம் செய்வதாக வாக்கு கொடுத்தேனா.

 

இல்லை தானே பிறகு எப்படி நீங்க சொல்லாம் நான் வாக்கு தவறி விட்டேன் என்று…எனக்கு பிடித்தவளை தான் நான் விவாகம் செய்து வந்து உள்ளேன் வாழ போவது நான் தான் நீங்க இல்லை” என்றான். 

 

யுவராஜ் “ அச்சாச்சா நாங்க நிங்களட சொச்சு மோன்கள் தான்…ஆனால் அடிமை இல்லை உங்களால் தான் உங்க மோள் என் அம்மேயின் வாழ்க்கை இப்படி ஆனது…என் அம்மே அந்த வயதில் விதவையாக நிற்க காரணம் நீங்க தான். 

 

அம்மாவன் மட்டும் இல்லை என்றால் அம்மே வாழ்க்கை என் அச்சனோட கொட்டாரத்திலே அழிந்து போய் இருக்கும்…அந்த கொட்டார ஆளுங்க உங்களை விட ஜாதி, சம்பிரதாய வெறி பிடித்த ஆளுங்க…என் அச்சனோட ஆரோக்கியம் (உடல்நிலை) மறைத்து என் அம்மேக்கு விவாகம் செய்து கொடுத்த ஆளுங்க . 

 

ஆனால் தப்பு என் அம்மேவின் ராசின்னம் (ராசி) என்று இப்போ வரைக்கும் சொல்லி கொண்டு இருக்கும் ஆளுங்க…இதற்க்கு எல்லாம் காரணம் நிங்கள் சரியாக விசாரிக்காதது தான் தான். 

 

இப்போ அடுத்து எங்க இரண்டு பேர் வாழ்க்கையும் அழிக்க போகிறீங்களா? என கேட்டான்…மோனே யுவா என கோபமாக அழைத்த கார்த்திகா அவன் அருகில் வந்து விட்டாள் அறை…அம்மாயி என பைரவ் சத்தமாக அழைத்தான். 

 

கார்த்திகா “ யுவா, பைரவ் நீங்க இரண்டு பேருமே… யாரிடம் பேசி கொண்டு இருக்கிறீங்க என தெரியுமா? என் அச்சன் ராஜா ரவிவர்மனிடம் அவர் தன் மோள் வாழ்க்கையை அழிப்பாரா? அறிவு இருக்கா உங்க இரண்டு பேருக்கும்…

உங்க வாழ்க்கையை தீர்மானிக்க உங்களுக்கு உரிமை உண்டு…அதில் நான் தலையிட மாட்டேன் ஆனால் என் அச்சனால் தான் என் வாழ்க்கை அழிந்து விட்டது என நீங்க பேச கூடாது…எந்த அச்சனும் தன் கண் முன்னாடி பெண்ணு வாழ்க்கை அழிவதை விரும்ப மாட்டாங்க…நீங்க நான் வளர்ந்த பசங்க  நீங்க இப்படி நடந்து கொள்வது என் வளர்ப்பை தான் தப்பாக காட்டும்” என்றாள். 

 

விஜயன் “ கார்த்திகா நீ நடிக்க வேணாம் இவங்க உனக்கு தெரியாமல் ஏதும் செய்ய மாட்டாங்க என்று…தரவாடு மொத்தமும் அறியும் நீ கூட என் பெண்ணை…  உன் பையன் விவாகம் செய்ய சம்மதம் சரியாக சொல்லவில்லை தானே. 

 

அப்போ நிச்சயமாக உனக்கும் இவங்க விஷயம் எல்லாம் தெரிந்து இருக்கும்…பைரவ் ஈ பெண்குட்டியை விவாகம் செய்து வருவான் என்றும் தெரியும்…உன் பையன் தன் காமூகியை ( காதலியை) ஈ கொட்டாரத்திற்க்கு அழைத்து வருவான் என்றும் தெரியும். 

 

சும்மா எங்க முன்னாடி சீன் போட்டு நடிக்க வேணாம் அச்சா என்ன இது நீங்க சமாதானமாக ( அமைதியாக) நிற்கிறீங்க…ஈ இரண்டு பெண் குட்டிகளையும் தரவாடு விட்டு விரட்டி விடுங்க…நம்ம ஆளுங்களை அழை அருள்” என சொன்னார். 

 

அஜந்தா “ அச்சா நம்ம ஆளுங்க எதற்க்கு இந்த இரண்டு மோகினிகளையும் நானே…விரட்டி விடுகிறேன் அவந்தி என்ன வாய் பார்த்து கொண்டு இருக்க வா” என்றவள்…முதலில் நின்ற ராதிகா மேலே கை வைக்க போனாள். 

மலர்  பூக்கும்….


   
ReplyQuote

You cannot copy content of this page