About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 4
அவளின் அறைக்குள் அழைத்து சென்று படுக்க வைக்க, அவளோ படுக்க மாட்டேன் என்று எழுந்து அமர்ந்து போதையில் உளற,
"உளராம படுத்து தூங்கி தொலடி"
"தூங்கனும்ன்னா ஒரு டீப் கிஸ் கொடு.." என்று அவனை தன் இதழ் அருகில் இழுக்க,
அவள் செயலில் சுதகரித்தவனோ பெண்ணவளை படுக்கையில் தள்ளிவிட்டு நகர்ந்து நிற்க,
"டேய்.." என்று கத்தியவாறே எழுந்து அமர்ந்தவளோ "காலைல.. நான் கொடுக்கும் போது மட்டும் இனிச்சுது.. இப்போ மட்டும் கசக்குதோ"
"அது தெரியாம நடந்த இஞ்சிடன்ட்.." என்று கூறியவனோ, சற்று நிறுத்தி அவள் கூறியதை மறுபடியும் நினைத்து பார்த்து "இப்போ.. என்ன சொன்ன.. நீ கொடுத்தியா.. அப்போ அது எதார்த்தமா நடக்கல"
"ஆமா.. எவ்வளவு நாள் தான் சைட் மட்டுமே அடிக்கிறது.. அப்படியாவது நமக்குள்ள ரொமான்ஸ் சீன் ஓட்டலாம்ன்னு தான்..
நீ ஓடுறது பாத்து வேணும்ன்னே பின்னால வந்து தடுமாற வச்சி கிஸ் அடிச்சேன்.." என்று கூறி முடிக்கும் முன் பளாரென்று கன்னத்தில் ஒன்று விட,
இருப்பினும் காலையில் அவள் பேசிய அதிகபடியான வார்த்தையை நினைத்தவனுக்கோ ஆத்திரம் ஏறியதில் "இதுக்கு மேல எதாவது கிறுக்குத்தனம் பண்ணின.. அப்புறம் உயிரோட புதச்சிடுவேன்" என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றான்.
அவன் அடித்த அடியில் கன்னத்தை தேய்த்துவிட்டு "ஆமா.. நான் அப்படி என்ன பண்ணிட்டேன்னு அடிச்சான்" என்று நினைத்து பே பே என்று விழித்தவளோ, அவன் சென்றதும் எதுவுமே நிகழாதவாறு படுக்கையில் சாய்ந்து உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் வழக்கத்திற்கு தாமதமாக கண் விழித்தவளோ தலையை பிடித்தவாறு எழுந்து அமர்ந்து "டேய்.. எங்கடா இருக்க.. எனக்கு காபி வேணும்.. தல வலிக்குதுடா.. எங்கடா போய் தொலைஞ்ச.. இங்க ஒருத்தி தல வலி தாங்க முடியாம கத்திட்டு இருக்கேன்.. செவிடு கேட்குதா இல்லையாடா.. வந்து தொல" என்று கூச்சலிட்டதை கேட்டு மூக்கு புடைக்க அவளுக்கான தேனீருடன் வந்தவனோ
"காலைலயே கத்திட்டு இருந்த மவளே சங்க நெரிச்சிடுவேன்.. மூடிட்டு இத குடிச்சிட்டு கம்முன்னு இரு" என்று தேனீரை நண்பியின் கையில் கொடுத்தான்.
"என்னடா திட்டுற" என்று பாவமாக மூஞ்சை வைத்தவாறே அவனிடமிருந்து தேனீரை வாங்கி குடிக்க,
அவளின் செயல் கண்டு உதடு மடித்து சிரித்தவனோ "அடியே.. உன்னோட பர்த்டேக்கு மட்டும் தான்.. நீ என்ன பண்ணினாலும் சகிச்சிப்பேன்.. ஏன் அது உனக்கே தெரியும்.. சோ இதுக்கு மேல உன் வாலுயும் ரைஸ் ஆச்சு.. அப்புறம் வாய தச்சிப்புடுவேன்" என்று தான் கூறியதை கேட்டு மொளனகாக இருப்பவளின் அருகில் அமர்ந்து தோல் மேல் கை போட்டவனோ
"கேஸ் விஷயமா திங்கிங்ல இருந்தேன்டி.. நீ இப்படி கத்திட்டு இருந்தா என்னால கான்சென்றட் பண்ண முடியல.. செம்ம டென்ஷன் ஆகுது.. இனி இப்படி என்னோட வொர்க்க டிஸ்டர்ப் பண்ணின.. அப்புறம் அடிச்சி வெளிய தான் பத்துவேன்.. பாத்துக்க" என்று தான் கூறியதை கேட்டு முகத்தை வெட்டிவிட்டு மீதமுள்ள தேனீரை குடித்து முடித்தவளோ நண்பன் புறம் திரும்பி
"அது சரி.. நான் அவ்வளவு தூரம் சொல்லியும் ரெண்டு பேரும் ட்ரிங்க் பண்றீங்க தான.. அதுலயும் நேத்து எனக்கு தெரிய கூடாதுன்னு ஜுஸ்ல மிஸ் பண்ணிருக்க.. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல.. அப்போ ஏன்டா நீ சாகிறது காணாதுன்னு அவனையும் சேந்து சாகடிக்குற.. இனிமே நான் உங்கள எதுவும் சொல்ல போறது இல்ல.. உங்க இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பண்ணுங்க.. நான் இந்த வீட்டு பக்கம் இனி தலை வச்சி படுக்க மாட்டேன்" என்று கூறி, எழும்பியவளின் கையை பிடித்து இழுத்தவனோ
"அப்போ தலவாணி வச்சி படுத்துக்கோடி சரவெடி" என்று கூற,
அதைக் கேட்டு மூக்கு புடைக்க முறைத்தவளோ பதில் எதுவும் பேசாமல் மொளனம் காக்க எண்ணி திறன்பேசியினுள் பார்வையை புததைத்து கொள்ள,
அவளின் செயலை கண்டு சிரிப்பை கட்டுப்படுத்திவிட்டு குரலை செருமியவனோ "கோவமா இருக்கியா சரவெடி.. இனி உன் பெர்மிஷன் இல்லாம குடிக்க மாட்டேன்டி.. ஆனா, தயவு செஞ்சு கோவப்படுறன்னு மூஞ்ச தூக்கி வைக்காத சிரிப்பு தான் வருது" என்று கூறி சத்தமாகவே சிரித்து விட்டான்.
"சிரிச்சி கடுப்பு ஏத்தாம மூடிட்டு போடா" என்று கூறி படுக்கையிலிருந்த தலையணை எடுத்து அவன் மேல் வீசிவிட்டு வெளியே வந்தவளோ, ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த சசியை ஒரு கணம் நின்று முறைத்துவிட்டு உடற்பயிற்சி அறைக்குள் புகுந்து கொண்டாள்.
*******************************
"டேய்.. தவளை வாயா எவ்வளவு நேரமா தூங்குவ எந்திரிடா.. இன்னைக்கு ஒருத்திய மீட் பண்ண போறோம்ன்னு நேத்தே சொன்னேனேடா" என்று தூங்கும் அருயிர் தோழனை எழுப்புவதற்கு அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தவளின் பொறுமையோ காற்றில் பறக்க அருகில் இருந்த தலையனையை எடுத்து அவன் மண்டையில் அடித்தாள்.
அவனோ "ஏய்.. பிளீஸ்டி தூக்கம் வருது டிஸ்டர்ப் பண்ணாம கொஞ்சம் நேரம் தூங்க விடுடி" என்று தன்னை தூங்க விடாமல் தொந்துரவு செய்யும் நண்பியிடம் தூக்கத்திலே கெஞ்சினான்.
"அடேய்.. உன்கிட்ட கேட்டு தானடா அவள மீட் பண்ண வர சொன்னேன்.. பிளீஸ்டா நீ என் பெஸ்ட் பிரண்ட் தான.. நைட் பீர் வாங்கி தரேன்டா.. போடா போய் குளிச்சு ரெடியாயிட்டு வாடா" என்று தான் கூறியும் அவன் அசையாமல் உறங்கி கொண்டிருப்பதில் கடியானவளோ அருகிலிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து அதிலிருந்த தண்ணீர் மொத்தத்தையும் அவன் மூஞ்சிலே ஊற்ற,
அதில் எழும்பாதவனோ இடியே விழுந்தாலும் எழும்ப மாட்டேன் என்ற ரீதியில் உறங்கி கொண்டிருக்க, படுக்கையில் அவன் படுத்திருக்கும் மறுபுறம் ஏறி தன் கால் கொண்டு உதைத்து தரையில் தள்ளி விட்டாள்.
வலியில் கையை தேய்த்தவாறு எழுந்து அமர்ந்து தன் தோழியை முறைத்தவனோ "ஏய் இம்ச.. என்ன தாண்டி உன் பிரச்சன மனுஷன நிம்மதியா தூங்க கூட விடாம தள்ளி விட்டு கைய உடைக்குற.."
"அன்பா எழுப்பும் போதே எழும்பிருந்தா நான்.. எதுக்கு வன்முறைய கைல எடுக்க போறேன்.. கை உடையல தான போய் எழும்பி ரெடியாகி வா"
"இருடி சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு.. என் பொண்டாட்டி விட்டு உன்ன கழுத்த பிடிச்சி வெளிய தள்ள வைக்கிறேன்"
"அதுக்குள்ள நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போடா புண்ணாக்குன்னு சொல்லிட்டு போயிடுவேன்டா வெண்ண"
"ஓ அப்படியா.. இன்னைக்கு யாரையும் நான் பாக்க வர முடியாதே" என்று கூறி நக்கலாக சிரிப்பவனை கண்டவளோ அவன் கரம் பற்றி
"டேய் டேய்.. பிளீஸ்டா நீ எனக்கு உதவி பண்றதுல தான் என்னோட வேலையே அடங்கிருக்கு.. அதுனால போய் சம்மத்தா ரெடியாகி வாடா.. நீ மட்டும் ஹெல்ப் பண்ணினா இன்னைக்கு நைட் கண்டிப்பா பீர் வாங்கி தாரேன்"
"சரி சரி அழாத.. உனக்காக இல்லனாலும் பீருக்காக ஹெல்ப் பண்றேன்.. அதுனால நீ போய் எனக்கு வாய்க்கு ருசியா சமச்சி வைப்பியாம்.. நான் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வருவேணாம்"
"ஏதெய்.. நான் சமைக்கணுமா.. ரெஸ்டாரன்ட்ல தானடா மீட் பண்ண போறோம்.. அங்க போய் சாப்பிட்டுக்கலாம்"
"எனக்கு கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ண விரும்பல.. நீ எங்க வேணாலும் சாப்பிடு.. ஆனா, எனக்கு இன்னைக்கு நீ தான் சமைக்கணும்.. அதுவும் நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வருறதுக்குள்ள சுட சுட இருக்கணும்.. அண்டர்ஸ்டன்ட்" என்று அவள் கன்னம் தட்டி நக்கல் நகை சிந்தியவனோ குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
போகும் அவனை கடுப்புடன் பார்த்தவளோ "ச்ச.. நேரம் பாத்து கரெக்ட்டா பலி வாங்குறியாடா தவளை வாயா.. இரு வேலை முடியட்டும் உனக்கு பாயசத்த போடுறேன்" என்று புலம்பி கொண்டிருக்க,
இவளின் புலம்பல் குளியல் அறையில் இருந்தவனுக்கு கேட்டதோ என்னவோ உள்ளே இருந்தே "அந்த பொண்ணு கூட கூட மீட்டிங் கேன்சல் பண்ணிட வேண்டி தான்"
"இதோ போயிட்டேன்டா.. போயிட்டேன்" என்று கூறி அறையை விட்டு வெளியே வந்தவளோ வேகமாக சமையல் புகுந்து அவனுக்கு பிடித்த உணவுகளை சமைக்க தொடங்கிவிட்டாள்.
*******************************
"நாரே நாரே நாரே
நாரே நன்னாரே நாரே நாரே
நாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நான ரே
வெண்மேகம் முட்ட
முட்ட பொன்மின்னல் வெட்ட
வெட்ட பூவானம் பூத்து
கொண்டதோ....."
என்ற பாடலை கேட்டவாறே, ஷவரின் மூலம் தன் உடலை நனைக்கும் தண்ணீரை மழை என்று ரசித்து ஆடியவாறே குளித்து கொண்டிருக்க,
அப்போது அறை கதவை தட்டியபடி "ஏய்.. இன்னும் எவ்வளவு நேரம்டி குளிச்சிட்டு இருப்ப.. வெளிய வாடி" என்று விடாமல் தட்டிக் கொண்டிருக்க, அதில் எரிச்சல் அடைந்த பெண்ணவளோ பாடலை அணைத்துவிட்டு மார்பில் பூந்துவலையுடன் குளியல் அறையிலிருந்து வெளியே வந்து கதவை திறந்து,
"இப்போ எதுக்கு கதவ உடைக்குற.. குளிக்க கூட என்ன நிம்மதியா விட மாட்டியா"
"ஏன்டி.. இங்க கல்யாணம் வேலை ஆயிரத்து எட்டு இருக்கு.. நீ என்னடான்னா குளிச்சே நேரத்த அழிக்குற.. பிரெண்ட் வீட்டுக்கு இன்விடேஷன் வைக்கணும்ன்னு சொன்னேல.. அந்த வேலைய முடிச்சிட்டு வரும் போது ஸ்வீட்ஸ் ஆர்டர் கொடுத்துட்டு.. அதோட சில பொருள் வாங்க வேண்டிருக்கு நான் லிஸ்ட் தாரேன் அப்படியே அதையும் கையோட வாங்கிட்டு வந்துரு"
"அம்மா.. சண்டே தான் ஃப்ரீயா இருக்கேன்.. அப்போவும் வேலை சொல்லியே கொல்லுற.. அது கூட பரவாயில்ல குளிக்க கூட விடாம டார்ச்சர் பண்ற"
"ஏதோ.. அடுத்த வீட்டு விஷசத்துக்கு வேலை பாக்குற போல சளிச்சிக்குற.. உன் சொந்த அக்கா கல்யாணத்துக்கு வேலை பாக்க என்னடி வலிக்குது.. திருப்பி திருப்பி பேசாம சொன்ன வேலைய மட்டும் செய்"
"செஞ்சி தொலைக்குறேன்.. முத குளிச்சி ரெடியாக விடு"
"ரெண்டு மணிநேரம் குளிச்சது பத்தாதா உனக்கு.. மறுபடியும் குளிக்க போறேன் சொல்லுற.. கொன்றுவேன் இன்னும் அரமணி நேரத்துல நீ ரெடியாகி கீழ வரல அப்புறம்.. உன் முடிய ஆஞ்சி நானே தர தரன்னு இழுத்து போவேன்" என்று கூறிவிட்டு சென்றார்.
தன் அன்னை சென்றதும் கதவை தாழிட்டவளோ "நீ சொன்னா.. நான் அரை மணிநேரத்துல வரணுமா போமா நான் வரும் போது தான் வருவேன்.. சதாசிவம் பொண்ணு யாருக்கும் அடி பணிஞ்சதா சரித்திரமே இல்ல" என்று கூறி சிரித்தவளோ,
"எனக்கு ராணியா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராணியா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
ஹே ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ" என்ற பாடலை பாடி விசிலடித்தவாறே மறுபடியும் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
தேடல் தொடரும்...
இப்படிக்கு
Vsv42😍😍
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Mohana Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page