About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் -20
சுவர்ணமாலினி சொல்ல விஜேந்திரன் அவளை ஒரு பார்வை பார்த்தவர்.
விஜயன் “ நீ சொல்ல வருவது புரிகிறது சுவர்ணா பட்ஷே( ஆனால்) ஈ விவாகம் நடக்கில்லா ( இந்த கல்யாணம் நடக்காது) ஏன் தெரியுமா? பைரவ் ஆ!. பெண் குட்டி மேலே வைத்து இருக்கும் பிரேமம் (காதல்) அப்படி நிங்கள்யறியாம் ( உனக்கு தெரியும் தானே) “ என்றார்.
அஜந்தா “ அம்மே அச்சன் சொல்வது சத்தியம் ( உண்மை) சேட்டா ( அண்ணன்) சேட்டத்தி ( அண்ணி) மேலே யதார்த்த ஸ்நேகம் ( உண்மையான அன்பு) வைத்து இருக்கிறார்…அதனால் அவந்தியை விவாகம் செய்ய மாட்டார்.
அவர் விவாகம் செய்யவில்லை என்றால் பட்டம் கட்ட மாட்டார் முத்தச்சன்…அப்போ அடுத்த வாரிசு யாரு? அச்சன் தானே!. இது தான் நடக்கும் “ என்றாள்.
அருள்மொழிவர்மன் அறையில் அவன் தன் மனைவி தாரணி கூட பேசி கொண்டு இருந்தார்.
அருள்மொழி “ தாரணி இந்த பட்டம் சின்ன சேட்டனுக்கு போக கூடாது…அதற்க்கு பிறகு ஈ கொட்டாரத்தில் நம்ம தாமசிக்கான்( தங்குவது) என்பது சொப்பனம்(கனவு) தான்.
காரணம் சின்ன சேட்டனுக்கு ஸ்வார்த்ததா ( சுயநலம்) அதிகம் அவர் பையனும் அப்படி தான்…ஆனால் பெரிய சேட்டன், பைரவ் அப்படி இல்லை அவங்க எல்லாருமே சமம் என நினைப்பவங்க…
நானும் ஈ கொட்டாரத்தில் பிறந்தவன் தான் ரவிவர்மன் பையன்…எனக்கும் என் மகன், மகளுக்கும் உரிமை வேணும்…பைரவ் மூத்த வாரிசு என்பதால் சரி ஆனால் சின்ன சேட்டன் மகனுக்கு பதவி போனால் என் பையனுக்குரிய உரிமை போய் விடும்.
அது மட்டுமல்ல தாரணி பைரவ், யுவராஜ் இங்கே பெரிதாக தங்க வர மாட்டார்கள்…அப்போ நம்ம கொட்டார கணக்கு காட்ட தேவையில்லை… பட்ஷே சின்ன சேட்டனுக்கு நம்ம கணக்கு காட்ட வேணும்…பிறகு தனியாக சொத்து சேர்ப்பது எப்படி? என்றார்.
தாரணி “ பட்ஷே அம்மாயியப்பன்( மாமனார்) அவர் அவஸ்தா ( நிபந்தனை) போட்டு விட்டாரே…பைரவ் அவந்தியை தான் விவாகம் செய்ய வேணும் என்று இல்லை என்றால் பிருதம்( பட்டம்) நிங்களட சின்ன சேட்டனுக்கு போய் விடும் என்று…பைரவால் பிறகு என்ன செய்ய முடியும் “ என கேட்டாள்.
அருள்மொழி “ பைரவை யாரென நினைத்த தாரணி அவன் பிரின்ஸ் சாம்ராட் பைரவ்…பெயரில் மட்டுமல்ல அவன் நிஜமுகம் கூட அப்படி தான்… அதை ஈ கொட்டாரம் மட்டுமல்ல உலகமே அறியும்... இந்த கொட்டாரத்து சொத்தை போல பல மடங்கு சொத்தை தன் சொந்த உழைப்பில் பெருக்கி வைத்து இருக்கிறான்.
அது மட்டுமா? ஆரணியின் சொத்தை எல்லாம் அவன் மாமனார் இவன் பெயரில் எழுதி வைத்து விட்டார்…அப்படிப்பட்ட பைரவ் ராஜா ரவிவர்மன் வார்த்தையை ஏற்று நடப்பானா!.
அதை விட அவனை கட்டி போடும் இன்னொரு ஆயுதம் நம்ம பெண்ணு…அஜந்தாவை விட நிலா மோள் மேலே பைரவ் அதிக வாத்சல்யம் (பாசம்) வைத்து இருக்கிறான்…அவளுக்காக நிறைய பரிசு சம்மானம் ( பரிசு) எல்லாம் வாங்கி அனுப்பி இருக்கிறான்.
அஜந்தா இல்லை என்றால் என் அனியத்தி ( தங்கை) மகன் யுவராஜை என் மருமகனாக கேட்டு இருப்பேன்…என்ன நிலாவுக்கு வயது குறைவு மட்டுமல்ல யுவராஜ் அவளை அனியத்தியாக பார்க்கிறான்… அதனால் நாளை நடப்பது நமக்கு தெரியாது பார்க்கலாம் “ என்றார்.
நிலா கொஞ்ச நேரம் அண்ணன் கூட பேசி இருந்து விட்டு போக கார்த்திகா தன் கையால்…பைரவுக்கு ஊட்டி விட்டு போனாள் தன் அறைக்கு வந்த பைரவ் யுவராஜ்க்கு கால் பண்ண அவன் இரண்டாவது ரிங்கில் எடுத்தவன்.
யுவராஜ் “ என்ன பையு நம்ம கொட்டாரம் உன்னை லாக் பண்ணி விட்டது போல…உன் கிட்ட போய் சேர்ந்து விட்டேன் என்ற தகவல் மட்டும் தான் வந்தது…பிறகு ஏதும் வரவில்லை அம்மே என்ன உன்னை தன் கரையுனு( அழுகையால்) கட்டி போட்டு விட்டாங்களா? என கேட்டான்.
பைரவ் “ நீ இந்த கொட்டாரத்திற்க்கு என் கூட வந்து இருக்க அப்போ தெரிந்து இருக்கும் உனக்கு…உன் நல்ல காலம் ஆரபி உருவத்தில் மலையாள பகவதி உன்னை காப்பாற்றி இருக்கு…என்ன புரியவில்லையா?
உனக்கும் உன் சின்ன அம்மாவன் மகள் அஜந்தாவுக்கும் உன் அச்சாச்சா விவாகம் ஏற்பாடு பண்ணி விட்டார்…எப்படி வசதி சார் எப்போ ஈ கொட்டாரத்திற்க்கு வருவதாக உத்தேசம் “ என கேட்டான்.
யுவராஜ் “ எந்த மலையாள பகவதி தாயே!. என சத்தம் போட்டவன்…பையு உண்மையாகவா சொல்கிற என்ன டா இவர்… என் கிட்ட என் விருப்பத்தை கேட்காது எப்படி முடிவு பண்ணலாம்…
அதுவும் அஜந்தாவும், என் அனியத்தி அவந்தியும் லங்கிணிகள்… அதில் ஒன்றுக்கு என்னை கோர்த்து விட்டு இருக்கிறார்.
நான் கேரளா பக்கம் வந்தால் தானே!. என்ன வழமை போல அம்மே நிசப்ததா ( மெளனம்) மாக இருந்து இருப்பாங்க…
அவங்களுக்கு அவங்க பையன் வாழ்க்கையை விட அச்சன் பேச்சு தான் முக்கியம்… ஆனால் நீ அப்படி இருந்து இருக்க மாட்ட என தெரியும்…அங்கே என்ன நடந்தது என சொல்லு “ என்றான்.
பைரவ் “ நீ என்னை நல்லா தான் புரிந்து வைத்து இருக்க…இந்த முறை அம்மாயி வாய் திறந்து உனக்காக மட்டுமல்ல எனக்காகவும் பேசினாங்க…என்ன ஆச்சரியமாக இருக்கா!.
உனக்கு எப்படி அஜந்தாவை முத்தச்சன் விவாகம் செய்ய ஏற்பாடு பண்ணினாரோ… அது போல எனக்கு அவந்திகாவை விவாகம் செய்ய சொன்னார் “ என சொன்னவன் நடந்த எல்லாம் சொன்னான்.
யுவாரஜ் “ எந்த பறஞ்ஞு( என்ன சொல்கிற) பையு உனக்கு விவாகம் ஏற்பாடு செய்து இருக்கிறாரா அச்சாச்சா? எப்படி உன் கிட்ட கேட்டாது ஏற்பாடு செய்யலாம்…அதுவும் அவந்தியை எனக்கு உண்மையில் அச்சாச்சாவை என்ன சொல்வது என்று தெரியவில்லை.
போதாது என்று நீ வேற அந்த கூட்டத்திற்க்கு கிட்ட என்னை கோர்த்து விட்டு இருக்க…ஞான் ஸ்நேகிக்குது ( நான் காதலிப்பதாக ) என்று விஜயன் அம்மவான் இப்போ என்னை கண்காணிக்க ஆளுங்களை ஏற்பாடு பண்ணி இருப்பார்…
நான் எந்த பெண்ணு கூடவும் இனி வேலை விஷயமாக பேசினால் கூட …பாவம் அந்த பெண்ணுக்கு தான் அது ஆபத்தாக முடியும்” என்றான்.
பைரவ் “ எனக்கரியாம் ( எனக்கு தெரியும்) ஆனால் ஊட்டியில் உன் கூட வேலை விஷயமாக பேசும் அளவுக்கு யாருமே இல்லை…அதை விட உன் பாதுகாப்பு மட்டுமல்ல உன்னை சுற்றியுள்ளவங்க பாதுகாப்பும் என் பொறுப்பு “ என்றான்.
யுவராஜ் “ என் பாதுகாப்பை விடு என் எதிரிங்களை நேருக்கு நேராக சந்திக்கும் தைரியம் எனக்கு இருக்கு…ஆனால் என்னால் மற்றவங்களுக்கு ஆபத்து ஏற்பட கூடாது நல்ல வேளை டா என் கூட ஒரு பஜாரி தான் வேலை பாக்குது… அதை யாராலும் ஓட வைக்க முடியாது அது தான் மற்றவங்களை விரட்டி அடிக்கும்” என்றான்.
பைரவ் முகத்தில் சின்ன புன்னகை மலர்ந்தது….அவன் யாரை சொல்கிறான் என்று தெரியும்.
பைரவ் “ யு மீன் ராதிகா அவங்களை தானே!. சொல்கிற ஹோம் வேலை எல்லாம் ஸ்டாட் பண்ணி விட்டாயா? யுவா நான் சொன்னது போல தானே!. செய்த ஆரபிக்கு எல்லாம் ஓகே தானே!. என கேட்டான்.
மறு பக்கம் ஒரு நிமிடம் அமைதியாக இருந்த யுவராஜ் பிறகு.
யுவராஜ் “ அவளே! தான் மச்சான் அவள் என்ன செய்தாள் என்று தெரியுமா? என நடந்ததை எல்லாம் சொன்னவன்…சரி எதற்க்கு ஆரபி ஓகே!. சொல்ல வேணும் “ என கேட்டான்.
பைரவ் “ இது தெரிந்த விஷயம் தானே!. நீ என்ன கேட்ட யுவா…உன் சோத்தியம் (கேள்வி) எனக்கு புரியவில்லை” என்றான்.
யுவராஜ் “ இன் பர்ஸ்ட் டைம் என் பேச்சு உனக்கு புரியவில்லை என்று சொல்வது…ஓகே!. தெளிவாக சொல்கிறேன் பாதர் தான் எல்லாம் சரியாக திருப்தியாக இருக்க வேணும் என சொல்ல வேணும்.
ஆரபி எதற்காக சொல்ல வேணும் மச்சான்…அவள் அங்கே வளர்ந்த பெண்ணு மட்டும் தான் “ என்றான்.
பைரவ் “ இருக்கலாம் பட்ஷே அவள் அந்த இல்லத்தை நேசிக்கும் அளவுக்கு…மற்றவங்க நேசிப்பாங்களா என்று தெரியாது அதற்காக தான் கேட்டேன் “ என்றான்.
யுவராஜ் “ ஓ!. நீ சொன்னது போல தான் வந்து பார்த்து ரொம்ப சந்தோஷபட்டாங்க…உனக்கு பல தடவை தன் நன்றியை தெரிவிக்க சொன்னாங்க… நீ எப்போ வருவ உன்னை நேரில் கண்டு சந்திக்க முடியுமா? என கேட்டாங்க.
நான் இனி நீ இங்கே வர மாட்டேன் என்று சொன்னேன் அவங்க முகம் வாடி போய் விட்டது…அது உண்மை தானே!. நீ இங்கே ஒரு சாதாரண பிரச்சனைக்கு வருவ என்று நானே எதிர்பார்க்கவில்லை” என்றான்.
பைரவ் “ நம்ம ஜீவிதத்தில் (வாழ்க்கையில்) எதிர்பாராத விஷயங்கள் தான் யுவா நடக்கிறது…நான் நாளைக்கு நம்ம இடத்தை எல்லாம் சுற்றி பார்க்க போகிறேன்.
நிலா குஞ்சும்(குட்டி)அம்மாயியும் ஏதோ என் கிட்ட சொல்ல வருவது போல தெரிகிறது…நம்ம முத்தச்சி கண்களில் கூட ஏதோ என் கிட்ட சொல்ல காரியம் ( விஷயம்) இருப்பது போல தெரிகிறது…நாளைக்கு தான் சத்தியம் ( உண்மை) என்ன என்று தெரிய வரும் “ என்றான்.
யுவராஜ் “ நிலா குஞ்சு பறஞ்ஞு( சொன்னால்) அதில் ஏதோ ஒன்று இருக்கும் பையு…அம்மே அச்சாம்மா எல்லாம் சொல்லும் போது நீ போய் பாரு…பட்ஷே கவனம் காவலை அதிகபடுத்து நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை “ என்றான்.
மறுநாள் காலை பைரவ் கார்த்திகாவிடம் மட்டும் சொல்லி விட்டு…தன் கார்ட்ஸ் கூட தன் ஸ்டேட் எல்லாம் சுற்றி பார்க்க கிளம்பி விட்டான்…பெரும்பாலும் கேரளாவின் பிரதான தொழிலாக தென்னை, தேநீர் , காப்பி, மிளகு, ஏலம் முந்திரி, மீன் பிடி இருக்கின்றது.
அதை விட வேளாண்மை, கைவினை பொருட்கள் தும்பு, தறிகள் உற்பத்தி இருக்கிறது…ரவிவர்மன் சொத்துக்கள் பாதி அந்த ஊரில் இருக்கிறது மீதி தான் அரசாங்கமும் அவரும் எடுத்து நடத்துகின்றனர்.
ரவிவர்மன் கொட்டாரத்தில் காலை சாப்பாட்டுக்காக அனைவருமே கூடி இருந்தனர்…பைரவ் பொதுவாக ஆரணி இறந்த பிறகு வருவது இல்லை ஏன் அவன் இங்கே வருவதும் குறைவு… இன்று அவன் வந்து இருப்பதால் மற்றவர்களை விட ரவி வர்மன் எதிர்பார்த்தார்.
ரவிவர்மன் “ மீனு சொச்சமேன் எவிட காணுலில்லா ( பேரன் எங்கே காணவில்லை) என்று கேட்டார்.
மீனாட்சி “ எனக்கு தெரியாதுங்க கார்த்திகா மா எங்கே பைரவ்? அவன் ரூம்மிலா இருக்கிறான் தூங்குகிறானா” என கேட்டார்.
கார்த்திகா “ இல்ல மா அவன் வெளியே போய் இருக்கிறான் “ என ….என்ன? என அதிர்ச்சியாக விஜேந்திரன், அருள்மொழி கேட்டார்கள்.
மலர் பூக்கும்….
Latest Post: பாரிஜாத மலர் என் கை சேருமா? -24 Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page