About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம் 17
வேகமாக வந்த ரிஷி அந்த இளைஞனின் கையை அழுத்திப் பிடிக்க அவனும் ஆ.......என்ற அலறலுடன் நிமிர்ந்தவனின் சப்தம் குழுவுக்கு கேட்கவில்லை.
ஏய் என்றபடி அவனை இழுத்துச் செல்ல சகஸ்தா பயந்தே போனாள்.
பாஸ் பிளீஸ்! அவரை விடுங்க அவங்க கல்சர் வேற ,நம்ம ஊர் பொண்ணுங்க பற்றி தெரியாது ,சொன்னாப் புயிஞ்சுப்பாங்க என்றான்.
தீக்கங்களாய் மின்னிய கண்களுடன் அவள் புறம் திரும்பியவன்,ஏன்? அவனுக்கு சப்போர்ட் பண்ற ......அப்போ இவனுக்கு கம்பனி கொடாக்கலாம்னு நீ முடிவு பண்ணிட்டியா????? என கோபத்துடன் உறுமினான்.
சுள்ளென்று மனதில் மூன்ட கோபத்துடன் " மிஸ்டர் சப்தரிஷி" திஸ் இஸ் லிமிட் " சே.....என அவளும் சீறியபடி வேகமாக அழுதபடி வெளியேறினான்.
அறைக்கு வந்ததும்,அவன் மீது கோபம் அவன் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அசை போட்டது உள்ளம்.
அவளுக்கு ஒரு ஆபத்து என்றதும் துடித்த அவனின் அக்கறை உணர்வு மனதிற்கு பூஞ்சிறகாய் வருடியது. இருப்பினும் அவன் விட்ட வார்த்தைகள் வலிக்கத்தான் செய்தது.
"சிட்...... என்ன பண்ணி வச்சிருக்கேன் நான்" என தலையைக் கோதியவன் அலைபேசியை எடுத்து அவளுககு அழைக்க ,அவள் அழைப்பை ஏற்கவில்லை,
"இவளை........ என பல்லைக் கடித்தவன் தன் தலையில் தட்டிக் கொண்டான்.
ஆறு ,ஏழு முறை அழைத்த பின் அழைப்பை ஏற்றாள்,அவன் "ஹலோ ஹலோ என அழைத்ததும் பதிலேதும் வராமல் இருக்க,அவள் மௌனம் ஏதோ செய்தது."சாரி டால் " என்றான் மென்மையாக.
மேலும் தொடர்ந்தவன்"அவன் உன் கையப் பிடிச்சதும் என்னால தாஙக முடியல, அவனை கொல்லனும் போல ஆத்திரம், அந்த கோபத்தில் தான் உன்னை பேசிட்டன் லட்சம் சாரி" என்றான்.
"ம்ம்... பரவாயில்லை சார் என்க்ஷாள் தழுதழுத்த குரலில் ,உங்க கோபம் புரியுது"என இறுக்கத்துடன் கூறினாள்.
"அவனை வார்ன் பண்ணிடன் ட்ரிங்க்ஸ் எடுத்ததால தான் அப்படி நடந்திருக்கான் என சொல்ல " "ம்ம் வைக்கிறன் சார் என அழைப்பை துண்டித்தாள்.
ரிஷியோ பெருமூச்சுடன் தானும் தனக்கான அறைக்குச் சென்றான்.
இச் சம்பவத்தின் பின் அடுத்த நாளே ரிஷி அலுவலகப் பணியாளர்களை ஒன்று கூட்டி "இன்றிலிருந்து பெண்கள் இரவு நேரத்தில் இங்கு வேலை செய்யத் தேவை இல்லை அவர்களின் வேலை மாலை ஐந்து முப்பது வரை தான் அதற்கு ஏற்றது போல் டே, நைட் சிப்ட்டை மாற்றும் படி முகாமையாளருக்கு பணித்தான்.சகஸ்தாவிற்கோ அவனின் இவ் முடிவில் பெருத்த நிம்மதியும் மகிழ்ச்சியும் தனக்கு தானே தெரியும் அந் நிமிடங்கள் எவ்வளவு கடினமானதென்.
அதிகாலையில் விழிப்பு வர கண்விழித்த சகஸ்தாவின் இதழில் வெட்கப் புன்னகை , சகஸ்தா வேலைக்கு வந்து ஒரு மாதம் சென்றிருக்கும்.
ரிஷியைக் கண்டால் மென் புன்னகையுடன் கடந்து விடுவாள்.
வீட்டில் திருமணம் செய்ய நாளும் குறிக்கப்பட்டது.வேணி மற்றும் ஸ்ரீயுடன் அடிக்கடி பேசுவாள் சகஸ்தா அப்போது ரிஷியின் பேச்சும் அதில் அடிபடும்.
இரு நாட்கள் கடந்திருக்கும் ரிஷி முன் அமர்ந்திருந்தாள் சகஸ்தா ஊருக்கு போக வேண்டும் எனும் கோரிக்கையுடன். "டால் நானும் ஊருக்கு போகத்தான் வெயிட் பண்ணு" என்றவன் அவள் பதிலை எதிர் பாராது முகாமையாளரிடம் சில விஷயங்களை ஒப்படைத்து விட்டு அவளுடன் வெளியேறினான்
காரை வந்தடைந்தவர்கள் ரிஷி ஏறி அமர்ந்ததும் முன் கதவை திறந்து விட அதனை மறுபடியும் மூடியவள் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
"உன்ன ஒன்னும் பண்ண மாட்டன்".என்றான் ரிஷி, "உங்க ஆசை அத்த மக ரத்தினத்துக்கு கொடுத்த முக்கியத்தவம் எனக்கு வேணாம்" என்றாள் முறைப்புடன்.
ஓ.....அன்று ரத்னாவ முன்னிருக்கையில் அமரத்தியதை சொல்கிறாள் என புரிய " கொஞ்சம் இறங்கு என்றான் அவளும் யோசனையுடன் இறங்க.
சற்றுத் தள்ளிச் சென்று யாருக்கோ அழைப்பெடுத்தவன்."டேய் மச்சான் .....ஆஆஆ குட் மார்னிங்டா என்றான் ரேத்திக் கொட்டாவி விட்டபடி....உன் வண்டிய அனுப்பு என்னோட வண்டிய பார்கிங்ல விட்டுறன்,எங்கயும் வெளிய போறதுனா எடுத்துக்கோ" என்றான்.
சற்று நேரத்தில் அவர்கள் முன் கார் வந்து நிற்க,கொண்டு வந்தவனுக்கு நன்றி சொல்லி விட்டு.கார்க் கதவை திறந்து சகஸ்தாவை அமர வைத்தவன், சுற்றி வந்து தானும் சாரதி இருக்கையில் அமர்ந்து காரைக் கொண்டு கிளப்பினான்.
அவளோ அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை, தான் சொன்னதுக்காகவா!!!!! என நகத்தைக் கடித்தபடி அவனை அடிக்கடி, பார்க்க......
வண்டியை ஓட்டியபடி என்ன என புருவம் உயர்த்தி கேட்க,ஒரு கையால் வண்டியை ஓட்டியபடி மறு கையால் அவள் கையைப் பற்றியவன்,"எப்பவும் நீ மட்டும் தான் முக்கியம்" என்றான்.
அவள் கண்கள் கலங்க அவனைப் பார்க்க.....வண்டியை வீதியோரம் நிறுத்தியவன் அவள் கண்ணீரைத் துடைக்கத் துடைக்க அது மேலும் கூடியதே தவிர குறையவில்லை.
"என்ம்மா!!!!என மென்மையாக கேட்டபடி முன்னுச்சி முடியை சரி செய்தான்,அது ரத்னா .....நீங்க என அவள் திக்கித் தினற .....அவள அவிழிகளை ஆழ்ந்து பாரத்தவன் எப்பவும் இங்க என தன் இடது பக்க மார்பைத் தொட்டுக் காட்டியவன் நீ மட்டும் தான் இருக்க" என்றான்.
"நீங்க அவளத் தான் கல்யாணம் செய்துக்ப் போறதா ஆஃபிஸ் க்ஷல பேசினாங்க ,என தேம்பித் தேம்பி அழ அவள் அழுகையை காண சகிக்காதவன் அவளை இழுத்து அணைத்தான்.
"ஸ்.....ஒன்னுமில்ல ஒன்னுமில்ல அவங்க ஏதோ அப்படி பேசிப்பாங்க ,நான் உன்னோட ஒரு பார்வைக்குத் தானேடி காத்திருந்தன் என்றான்".
அவனில் இருந்து தலையை நிமிர்த்தி பார்த்தவள் " நீங்களும் அவ கூப்பிட்டானு அவகூட டின்னருக்கு போயிட்டீங்க" என மேலும் அழுகைக்கு உதட்டை பிதுக்கினாள்.
அவளை தன்னில் இருந்து பிரித்தவன்."ஹேய்.... வெயிட், வெயிட் அவ கூட நானா என யோசித்தவன் அவ வீட்ட விட்டு போயிட்டா ,நான் தான் அவள போகச் சொன்னன்.!!!!!
"ஓவரா அட்வான்டேஜ் எடுத்துகிடா நான் வாரப்போ அவ இருக்க கூடானு அம்மாட சொல்லிடு நான் ஆஃபிஸ் வந்துடன் என்றான்.துடிக்கும் அவள் இதழை பெருவிரலால் வருடியபடி ,அதில் சிலிர்த்தது அடங்கினாள்.
"உன்ன பொறாமைப் பட வைக்கத் தான் அவ கூட பேசின்ன என்றான்.சகஸ்தாவோ அவனை முறைத்துப் பார்க்க,சாரி டால்"என்றான் ரிஷி.
அழுததில் அவள் குரலுப் கட்டிப் போனது வேற ஏதும் இருந்தாசொல்லு டால் ,என்றான்.ஒன்னும் இல்ல என்றாள்.
"அன்று அவன் மேல இருந்த கோபத்துல தான் அப்படி பேசிட்டன் சாரி" என்றான் மறுபடியும்....."ம்ம் புரிது" என்றாள்.
எவ்வளவு உயரத்தில் இருப்பவன் சாரி சொல்றான் தன்னிடம் காதை யாசிக்கிறான்.,தனக்காக எதனையும் செய்ய தயாராக இருக்கிறான் தானும் ,தன் மனதில் பூட்டி வைத்த காதலும் இவனொருவருக்கு தானோ.......என சிந்தனையில அஅவளிருக்க......
"அது மட்டும் தானா புரிது ,என்னோட காதல் புரியலையா"என்றான்.அவளோ தலையை குனிந்து கொண்டாள்.அவனும்,பெருமூச்சுடன் காரை செலுத்தினான்.அவனிடம் இருக்கும் காதல் அவளிடமும் உண்டு ஆனால் அதை அவள் வெளிக்காட்டவே தயங்குகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான்.
இதோ மனதில் நின்றவள் 17
பதித்து விட்டேன் படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க 🙄
Latest Post: கள் விழி மயக்கம் - 25 Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page