All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா? - 18

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம்: 18

பைரவ் ரவி வர்மனை அழுத்தமாக பார்த்தவன்….

அவன் “ இதுவே வேற ஒருவராக இருக்க இந்த பைரவ் அவங்களை இந்த உலகத்தை விட்டு அனுப்பி இருப்பான்…ஆனால் நிங்கள் எந்த அச்சனோட அச்சன் ( நீங்க என் அப்பாவின் அப்பா) அதனால் தான் என் தேஷியதை ( கோபத்தை) அடக்கி கொண்டு இருக்கிறேன். 

எந்த பார்யா இறந்தது ஆரால் நிங்களால் நிங்க பாகுமானத்தால் (என் மனைவி இறந்தது யாரால் உங்களால் உங்க கெளரவத்தால் )... ஞான் அவளை பிரேமிச்சு விவாகம் கழிச்சு ( அவளை நான் காதலித்து கல்யாணம் செய்தவன்).

அது மட்டுமல்ல என் விஷயத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் உங்களுக்கு யார் தந்தது? என கேட்டான்.

ரவி வர்மன் “யாருக்கு கொடுக்கனும் ஞான் நிங்களட முத்தச்சன் ( யார் தர வேணும் நான் உன் தாத்தா ) என் பையன் இருந்தாலும் இல்லை என்றாலும் …உன் விஷயத்தில் மட்டுமல்ல மற்ற பேர பசங்க விஷயத்தில் முடிவெடுக்க எனக்கு உரிமை இருக்கு…

உன் விவாகம் (கல்யாணம் ) எப்படி நடந்தது நான் அனுமதி கொடுத்தேனா? இல்ல ஈ தரவாடு ( உயர் குடும்பங்கள், அரண்மைனயை குறிக்கும் ) அனுமதி கொடுத்ததா? உன் விவாகத்தை ஞான்( நான்) எப்படி செய்ய வேணும் என்று நினைத்து இருந்தேன்.

ஆனால் நீ பாரிஸில் படிக்க போய் அங்கே உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்த…உன் முத்தச்சி, அம்மாயி மூலமாக என் கிட்ட அனுமதி கேட்ட…அப்போ நான் என்ன சொன்னேன் நினைவு இருக்கா?

உறவுக்குள்ளே பெண் இருக்கும் போது வெளியே பெண் எடுக்க முடியாது…ஏன் என்றால் அது தான் கேரளாவில் உள்ள எல்லா தரவாடுகளின் சட்டம்.

அது மட்டுமல்ல நீ அடுத்த வாரிசு என்பதால் உனக்கு ஆபத்து இருக்கு…அதற்க்கு உன் தரவாடு உதவி மட்டும் போதாது உன் பார்யாவின் தரவாடு உதவியும் வேணும் என்றேன்.

அப்போ தான் உன்னை மட்டுமல்ல உன் பார்யா நின் நிங்களோட ராஜவம்சத்தை ( உன் வம்சத்தை) காப்பாற்ற முடியும் என்றேன்…ஆனால் நீ என் சொல் பேச்சு கேட்காது போன விளைவு.

உன் பார்யாவை மட்டுல்ல உன் காலையும் இழந்த… உன்னால் அந்த சம்பவத்திற்க்கு பிறகு நடக்க முடியவில்லை…அவந்தி உனக்கு என்று பிறந்தவள்.

அவள் நின்ன வளரியதிகம் சிநேகிக்கின்னோ ( உன் மேல ரொம்ப அன்பு வைத்திருக்கிறாள்)... இத்தனை நடந்த பிறகும் உன்னை கல்யாணம் கட்டி கொள்ள ஆசைபடுகிறாள்.

உன் பல்லவி அம்மாயியும் தன் சேட்டன் மோன் ( அண்ணன் மகன் ) தனக்கு மருமகனாக வர வேணும் என்று ஆசைபடுகிறாள்…அம்மாவன் (மாமா) தரவாடும் நம்மை போல தான் பிறகு என்ன பைரவ்” என்றார்.

பைரவ் “ எனக்கு ஒரு சம்சயம் (சந்தேகம் ) இருந்தது என் பார்யா சாவுக்கு… என் தரவாடு காரணமாக இருக்குமே!. என்று இப்போ தெரிந்து விட்டது…

சோ என் சந்தோஷத்தை அழித்தது என் பந்தம்( உறவு) நாட் பாட் எதற்காக? இந்த கொட்டாரத்தின் அடுத்த வாரிசு பட்டத்திற்க்காக தானே.

இனி அது நடக்காது நான் விடவும் மாட்டேன் என் பார்யா சாவுக்கு நிச்சயமாக… நான் சிஷா( தண்டனை) வாங்கி கொடுப்பேன்…அடுத்த வாரிசு பட்டம் எனக்கு தான்” என்றான்.

அவன்  சொல்ல விஜேந்திரன், அருள்மொழி, பல்லவி முகம் மாறியது…

ரவி வர்மன் “ எனக்கி வளர சந்தோஷமுண்டு (எனக்கு ரொம்ப சந்தோஷம் ) ஆனால் அதற்க்கு நீ ஒன்று செய்ய வேணும்…என்ன தெரியுமா? அவந்தியை நீ விவாகம் செய்ய வேணும் “ என்றார்.

பைரவ் “ நான் முடியாது என மறுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்…தரவாடு சட்டம் தெரியும் தானே முதல் வாரிசு இருக்கும் போது மற்றவங்க பட்டம் கட்ட முடியாது “என்றான்.

ரவி வர்மன் “எந்த சொச்சு மோனே  ஞான் நிங்களட முத்தச்சன் ( நான் உன் தாத்தா )... எனக்கு தரவாடு சட்டத்தை பற்றி சொல்லாதே… உனக்கு ஒன்று மறந்து போய் பாரினில் இருந்ததால் உனக்கு நம்ம தரவாடு சட்டம் தெரியவில்லை.

வாரிசு பட்டம் கட்ட வேணும் என்றால் அதற்க்கு பார்யா வேணும் ஏன் தெரியுமா? அப்போ தான் மகா பூஜாவில் உட்கார முடியும்…மற்ற விசேஷங்களுக்கு நீ கலந்து கொள்ள முடியும் இது இங்கே உள்ள பொதுவான தரவாடு சட்டம்.

இப்போ சொல்லு உன் பதில் என்ன? உனக்கு மட்டும் விவாகம் அல்ல…மோளே கார்த்தியாயினி உன் மோன் யுவாராஜ்க்கும் உன் விஜயன் சேட்டன் மகள் அஜந்தாவுக்கும் விவாகம் செய்து வைக்க ஞான் தீர்மானிச்சு” என்றார்.

கார்த்திகாவுக்கு தெரியும் அவந்தியும், அஜந்தாவும் ஒன்றுக்கு ஒன்று சலித்தவர்கள் அல்ல…சுயநலத்தின் மொத்த உருவங்கள் அது என்றால் கூட பரவாயில்லை…

சொத்து தான் அவர்களுக்கு முக்கியம் தன் இரு புள்ளைங்க வாழ்க்கை பட்டு போவதா? 

என் வாழ்க்கை தான் இப்படி… இவங்க மனதுக்கு பிடித்த வாழ்க்கை வாழ வேணும் …அதற்க்கு நான் வாய் மூடி அமைதியாக இருக்க முடியாது பேசியே ஆக வேணும் .

கார்த்திகா “ அச்சன் உங்களை மறுத்து பேசுவதாக நினைக்க வேணாம் வரு (வந்து)… பைரவ்,யுவா ஆசையை ஒரு தடவை கேட்கலாம் இல்லையா? வாழ போவது அவங்க தானே” என்றாள்.

விஜயன் “ நீ எப்போ இருந்து சம்சாரிச்ச ( பேச ஆரம்பித்த) கார்த்திகா…. ஏன் என் மோள் உனக்கு மருமகளாக வருவது பிடிக்கவில்லையா? என கேட்டார்.

கார்த்திகா” அது அல்லா சேட்டா( அது இல்லை அண்ணா ) என பேச தொடங்க …அம்மாயி என அழைத்தான் பைரவ்.

பைரவ் “கொச்சச்சன் ( சித்தப்பா) உங்க அனியத்தி( தங்கை) பேச தொடங்கி ரொம்ப வருஷம் ஆயிற்று…பட் நீங்களும் உங்க அச்சனும் தான் அவங்க பேச்சு வெளியே வராது தடுத்து இருக்கிறீங்க.

அவங்க கேட்டதில் என்ன தப்பு ஒரு அம்மாவாக கேட்டாங்க அது மட்டுல்ல… யுவா வேற ஒரு பெண்ணை காதலிக்கிறான் சோ உங்க பெண்ணை அவன்  எப்படி விவாகம் செய்ய முடியும்? என கேட்டான்.

எந்தா ( என்ன) என அங்கே இருந்த அனைவருமே அதிர்ச்சியாக கேட்டார்கள். 

ரவி வர்மன் “ பைரவ் களம் பறயாண்டாம் ( பொய் சொல்லாதே) நான் நிங்களட முத்தச்சன் ( உன் தாத்தா) நிங்க ஈ கொட்டாரத்தை விட்டு வெளியே போனாலும் என் பார்வை உங்க மேலே தான் இருக்கும்…யுவராஜ் எந்த பெண்ணையும் ஸ்னேகம் செய்தில்லா ( காதல் செய்யவில்லை) சோ உன் கதையை இங்கே சொல்லாதே!. என்றார். 

பைரவ் அவரை பார்த்து நக்கலாக சிரித்தவன். 

பைரவ் “ ராஜா ரவிவர்மாவுக்கு ஸ்னேகம் என்ன என்று தெரியவில்லை…அது எப்படி யாரிடம் வரும் என்று கெளரவத்தையே மூச்சாக நினைக்கும்…இந்த கொட்டாரம் அறியாது நான் யுவாவுக்கு அம்மாவன்( மாமா)மகன் மட்டுமல்ல நண்பன் கூட… சோ உங்களை விட அவன் பற்றிய விஷயம் எல்லாம் எனக்கு தெரியும். 

இன்னும் ஒன்று நிங்கள் கொச்சு மகள்களை ( உங்க பேத்திகளை) நானும் யுவாவும் இப்போ என்று இல்லை எப்பவுமே விவாகம் செய்ய நினைக்க மாட்டோம்…காரணம் அவங்க குணம் பற்றி ஈ தரவாடு அறியும்.... எங்களுக்கு இந்த கொட்டாரத்தில் பிறந்த பெண்கள் மேலே இருப்பது அம்மாவன் மகள்கள் என்ற பந்தம் (உறவு) மட்டும் தான். 

உங்க முடிவை நீங்க சொல்லி விட்டீங்க இது எங்க முடிவு…நானும் யுவாவும் எப்பவுமே ஒரேய எண்ண அலைகளை தான் கொண்டவங்க…அதனால் அவன் பற்றி உங்களை விட எனக்கு தெரியும்.

உங்க பேத்திகள் எப்பவுமே எங்களுக்கு பார்யா ஆக முடியாது…அவங்களுக்கு வேற கொட்டாரத்தில் மாப்பிள்ளை பாருங்க அம்மாயி என் ஊனை( சாப்பாடு)  என் ரூம்க்கு எடுத்து வா…இதற்காக தான் நான் இங்கே வர மாட்டேன் என்றேன் நீ தான் கண்ணை கசக்கி இங்கே வரவழைத்த இப்போ புரியுதா? 

முத்தச்சி நான் என் ரூம்க்கு போகிறேன்… உன் பேரனை பார்க்க ஆசைப்பட்டால் அங்கே வா” என்றவன் …தன் சக்கர நாற்காலியை திருப்ப. 

“ ஒன் மினிட் பிரின்ஸ் சாம்ராட் பைரவ் ரகுந்தன் “ என அழைத்தார் ரவிவர்மன்…பைரவ் அவரை திரும்பி பார்த்தான். 

ரவி வர்மன் “நீங்க பிடிவாதக்காரர் என்றால் உங்க முத்தச்சன் அதை விட பிடிவாதம் உள்ளவர்…உங்க வயது என் அனுபவம் நான் அதிகம் பேச விருப்பவில்லை…. நீங்க அவந்தியையும் யுவராஜ் அஜந்தாவையும் அடுத்த வரும் முகூர்த்தில் விவாகம் கழிக்க வேணும்.

இல்லை என்றால் அடுத்த நாள் ஈ கொட்டாரத்தின் எனக்கு அடுத்த வாரிசாக… உங்க சித்தப்பா விஜேந்திரனை நான் அறிவித்து விடுவேன் …நிங்களுக்கு என்னை பற்றி சரியாக தெரியாது எனக்கு என் கொட்டாரமும் வம்சம் முக்கியம்… அதற்க்கு எந்த விதத்திலும் பங்கம் வர கூடாது.

என்னை பற்றி உங்க முத்தச்சி, அம்மாயி கிட்ட கேட்டு பாருங்க சொல்வாங்க…முடிவு உங்க கையில் அடுத்த முகூர்த்திற்க்கு இன்னும் இரண்டு வாரம் தான் உள்ளது…

அடுத்த வாரம் நான் கேரளம் முழுவதும் விவாக மாசிகா (திருமணபத்திரிகை) வைக்க போகிறேன்... இனி முடிவு எடுக்க வேண்டியது நீ தான் “ என்றார் பைரவ் ஏதும் பேசாது லிப்ட் ரூம் நோக்கி போனான். 

அவன் பின்னால் கார்த்தியாயினி போனாள் …மீனாட்சி போகும் பேரனை கவலையாக பார்த்தார். 

பல்லவி “ அச்சா என்ன இது பைரவ் இப்படி பேசி போகிறான்…என் மோளை நான் இவனுக்கு இத்தனை நடந்த பிறகும் விவாகம் செய்து கொடுக்க நினைக்க காரணம்…என் சேட்டனின் மகன் என்று ஆனால் இவன்  உங்க கொச்சு மோளை பற்றி இப்படி பேசி போகிறான்” என்றாள். 

விஜயன் “ அச்சா பல்லவி சொல்வதும் சரி இவங்க இரண்டு பேரையுமே நீங்க விட்டு பிடிக்க நினைத்தது எவ்வளவு தப்பு என்று பாருங்க…அப்போ பைரவ் இப்போ யுவா நான் இப்படி நடக்கும் என நினைத்தேன் அது போல நடந்து விட்டது…நம்ம கொட்டாரத்து மதிப்பை கெடுப்பதே இவங்க இரண்டு பேர் தான். 

நீங்க இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேணும்…நம்ம ஆளுங்க கிட்ட யுவா காதலிக்கும் ஸ்திரீ யாரென என விசாரிக்க சொல்ல வேணும்” என்றார். 

அவந்திகா “அச்சாச்சா ( அம்மாவின் அப்பா) எனக்கு அத்தானை விவாகம் கழிக்கன் (.கல்யாணம் செய்ய வேணும்) நான் அவர் மேலே எவ்வளவு ஆக்கிரகம்( ஆசை) வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும் தானே!.

முன்னே அந்த பெண்குட்டியால் என் அத்தான் என்னை விட்டு போய் விட்டார்…இப்போ அவள் இல்லை ஆனால் அவள் விஜாரம் ( நினைப்பு) இருக்கு அச்சாச்சா இந்த தடவை எனக்கு அத்தான் வேணும் இல்லை நான் ஞான் மரிக்கும் ( நான் செத்து போய்விடுவேன்)” என்றாள். 

அஜந்தா “ முத்தச்சன் நாங்க உறவில் பெண்கள் இருக்கும் போது …பைரவ் சேட்டன், யுவா அத்தான் மற்றவங்களை எப்படி விவாகம் செய்ய முடியும்…

நான் அவந்தி போல யுவா அத்தானை… விட்டு கொடுக்க மாட்டேன் அவர் தான் என் புருஷன்…இது நடக்க வேணும் இது உங்க பொறுப்பு “ என்றாள். 

ரவி வர்மன் “ நீங்க இரண்டு பேருமே யாரிடம் பேசி கொண்டு இருக்கிறீங்க என தெரிகிறதா? உங்க கட்டளை இந்த ராஜா ரவி வர்மன் கிட்ட செல்லாது…எனக்கு என்ன செய்ய வேணும் என தெரியும் “ என்றார். 

மலர் பூக்கும்….


   
ReplyQuote

You cannot copy content of this page