All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

மனதில் நின்றவள் 16

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Member Author
Joined: 3 months ago
Posts: 20
Topic starter  

மனம் -16
ரிஷிக்கு அழைப்பெடுத்து பிரகாஷ் பேச,"சரிப்பா நான் பாத்துக்கிறன் என்றான்.

சீலனுக்கு இப்போது தான் நிம்மதி சகஸ்தா திருமணத்துக்கு சம்மதித்தது ஒரு புறம் மாப்பிள்ளையிடம் தான் வேலைக்கு செல்கிறாள்,என பிரகாஷ் சொல்ல அதில் பெருத்த நிம்மதி சாரு மற்றும் சீலனுக்கு.சுபிக்கும் மகிழ்ச்சியே.....

ஆறு நாட்கள் வேலை ஒரு நாள் லீவு,லீவில் வீட்டிற்கு வருவதாக பேசி முடிவெடுத்தனர். அன்று பாசிக்குடா ஹோட்டலில் இருந்து பொத்துவிலில் அருகம்பேக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லவென ஹோட்டல் பிரத்தியேக வாகனத்தில் ஏறி அமர்ந்தாள் சகஸ்தா அதில் மொத்தமாக பதினைந்து பேர் இருந்தனர்.ஏழு பெண்கள் அதில் உள்ளடங்கினர்.

சில மணி நேர பயணத்தின் பின்ஸபொத்துவிலை வந்தடைந்தனர். வாகறத்தில் இருந்து அனைவரும் இறங்குவதைக் கண்டவன் இதழ்களில் புன்னகையுடன் "வெல் கம் மை குயின்" என முனுமுனுத்தான்.

தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் தஞ்சமடைந்தனர்.அனைவரும் பின் அன்று மாலை வேலையில் இணைந்து கொண்டனர்.

சகஸ்தாவும் தனக்கான மேனேஜ்மென்ட் பகுதியில் அமர்ந்து கொண்டாள்.அலுவலகப் பகுதியும் இயற்கையோடு இணைந்ததாகவே அமைக்கப்பட்ட குடில்களே அவை.

இவ்வாறு இரு நாட்கள் சென்றிருக்கும் வேலை குடும்பத்தாருடன் பேசுவது என சகஸ்தாவின் நாட்களும் நகர்ந்தது.

ரிஷியும் தூர இருந்து அவளை ரசித்தான் அவளை நெருங்கவில்லை நெருங்கும் நாளும் வந்தது, அவள் திருமணத்திற்கு சம்மதித்ததோடு சரி ரிஷியும் அவளோடு பேசவில்லை அவளை நேரில் பார்த்தே மாத கணக்காகியிருக்கும்.

ரிஷியும் திருவோணமலை சென்றிருந்தான். ஜெட்விங் ரிஷாட்டில் வெளிநாட்டு பிரியாணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. டே நைட் என ஊழியர்கள் வேலையில் மாறி மாறி ஈடுபட்டனர் ரிசிக்கும் வேலைப்பளு அதிகரித்தது அன்று இரவு வேலை அதிகமாகையால், இரவு உணவை அலுவலக பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து சக பணியாளர்களுடன் உண்டாள் சகஸ்தா.

அப்போது அங்கே சலசலப்பு ஏற்பட்டது அனைவரும் வாசலை பார்க்க றிஷி வந்து கொண்டிருந்தான்.

சகஸ்தாவிற்கு விழிகள் கீழே தெறித்து விழுந்து விடுவது போல் இருந்தது. அவர்கள் இருந்த மேசைக்கு அடுத்து வந்து அமர்ந்தவன் தனக்கான உணவை ஆர்டர் கொடுத்து விட்டு சகஸ்தாவை நிமிர்ந்து பார்க்க வெகு நாட்களுக்குப் பிறகு அவனைக் கண்டதும் மனதில் ஒருவித பரவசம் அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது.

அடுத்த மேசையிலிருந்து அதனை கவனித்தவன் அவளருகில் வர அவளோ தலையை குனிந்து கொண்டாள்.

" ஹாய் என்றான் றிஷி "பதிலுக்கு நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் எதுவும் பேசவில்லை, அவள் பாதி உணவில் எழ," நான் பரிச்சி ஒன்னும் சாப்பிட மாட்டேன்" இங்கு இருந்தே சாப்பிடலாம் என்றான்.

அனைவரும் அவர்களை திரும்பிப் பார்க்க அவளோ சங்கடமாக அப்படியே மறுபடியும் உணவில் கை வைத்தாள் சிறிது உணவை கொறிக்கத் தொடங்கினாள். மீதம் அங்கு உணவு உண்ட சிலரும் அங்கிருந்து வெளியேறினர்.

விஷயம் தனக்கான உணவை உண்டும் முடித்தான் சாஸ்தாவோ இதற்கு மேல் உணவினை உண்ண முடியாது எழ," உன் கூட கொஞ்சம் பேசணும் என்றான் அவன் குரலில் தான் இத்தனை மென்மை அவளும் கைகளை கழுவிக் கொண்டு வர அவன் முன்னே நடக்க அவன் பாதச்சுவட்டை பின்பற்றி தானும் அவ் உணவுண்ணும் அறையை விட்டு வெளியேறினாள்.

கடற்காற்று இருவரையும் தொட்டுச் செல்ல ஆங்காங்கே சில வெளிநாட்டு பிரியாணிகள் சாய்வு இருக்கையில் இருந்தனர். அவர்களுக்கான தேவையை அங்குள்ள ஊழியர்கள் கவனித்துக் கொண்டு அங்கும் இங்கும் திரிந்தனர். சற்று தூரம் வந்ததும் குரலை செருமிய றிஷி, பக்கவாட்டாக அவளை திரும்பிப் பார்க்க மெல்லிய வெளிச்சத்தில் கோட்டோவியம் போல் தெரிந்தாள் அச்சூழல் அவனுக்கு மனதிற்கு இதத்தை தந்தது.

சகஸ்தாவைப் பார்த்து "தேங்க்ஸ்" என்றான். அவள் புருவத்தை ஏயற்றி ஏன் ???என வினவ" அவள் மேனரிசத்தில் தன்னை தொலைத்தான். "வெட்டிங் க்கு ஓகே சொன்னதுக்கு" என்றான்.

அவளோ எதுவும் பேசாதே கடலில் வெறிக்க அவளைப் பார்த்தவன் "ஸ்டில் லவ் யூ டால், எப்பவும் உனக்காக காத்து நானிருப்பேன் என்றான்."

அவள் கண்கள் கூட கலங்கி விட்டது, விறுவிறுவென்று அங்கிருந்து தனக்கான காட்டேஜிற்கு வந்து கதவை தாழிட்டு அதன் மேல் சாய்ந்து நின்றாள்.

அவனை மிகவும் பிடிக்கும் அவனை காதலிக்கவும் செய்கிறாள்.அவன் ரத்னாவுடன் சேர்ந்து திரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது. தான் பட்ட காயம் அப்படி அவளும் தான் என்ன செய்வாள்.

தாய் தந்தையர் தன்னை நினைத்து அதிகமாகவே மனம் வேதனைப்பட்டனர் அவர்கள் பேசும்போது இதனை அடிக்கடி கேட்டிருக்கிறாள், அவர்கள் குற்றணர்ச்சியில் வேதனையில் உளர்கின்றனர் தங்களால் தான் தங்கள்மகள் திருமணத்தை வேண்டாம் என்கிறாள் என எண்ணிக்கொண்டுள்ளனர், தாய் தந்தையை வேதனைப்படுத்த நினைப்பாளா???? அவள் அதனாலே திருமணத்திற்கு சம்மதம் சொன்னாள் ஆனால் அவள் மனதிற்கு தெரியும் ரிஷி மேல் கொண்ட காதலை.

பின் குளித்து படுக்கையில் சரிய தூக்கம் தான் வரவில்லை அவள் எண்ணங்களின் நாயகனே வீற்றிருந்தான்.

மறு நாள் காலை அவனை அங்கு ரிஷாட்டில் காண "இங்க ஸ்டே பண்ணியிருக்கீங்களா??? என சகஸ்தா கேட்க," ம்ம் என்றான் அவளை குறுகுறு என பார்த்தபடி......

சாதானணமாகயாவது இனி றிஷியோட பேசனும் என எண்ணிக் கொண்டவள் வெகு நேரம் சென்றே தூங்கினாள்.

அப்போது அவ்விடம் வந்த மேனேஜர் "சார் அவசரம் சைன் பண்ணும் என ஒரு கோப்பை அவன் முன் வைக்க அவறை முறைத்தபடி அவனை திரும்பித் திராம்பி பார்த்தபடி நடந்தாள்."முன்னாடி பார்த்து போ" என்றான் ரிஷி சத்தமாக......

இப்படியே நாட்கள் செல்ல வேலையில் தன்னை புகுத்திக் கொண்டாள்.விடுமுறை நாட்களில் வீட்டிடிற்கு செல்வாள்,ரிஷியுடனும் அடிக்கடி பேசிக் கொள்வான்.

அன்று சில வெளிநாட்டுப் பயணிகள் புதிதாய் வந்து விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக தங்கியிருந்தனர் அந்த மாலை வேளையை அவ் வெளிநாட்டு பயணிகள் சிறப்பாக்கவென அவர்களுடைய இசைக் குழுவினர் ஆடலும் பாடலும்மாய் மிகுந்த கொண்டாட்டத்துடன் கூடியிருந்தனர்.

அப்போது தனது வேலை முடிவடைந்ததும் தனக்கான காட்டேஜ்க்கு திரும்பினாள் சகஸ்தா... அவளுடைய அழகும் அமைதியும் அங்கிருந்த ஒரு வெளிநாட்டு இளைஞரை கவர்ந்து விட அவளைப் பின்தொடர்ந்து வந்து வழிமறித்தான் அவன்.

"ஹாய் பியூட்டி..... என்று வழிந்தவன்," ஐ அம் ஜான் ரீசெட் இன்னைக்கு எனக்கு கம்பெனி கொடுக்க முடியுமா??? இல்ல உனக்கு வேற யாருடையாவது டேட் இருக்கா??? என குழறலாக ஆங்கிலத்தில் கேட்டான்.

மனம் உடனே விதிர்விதித்துப் போனாலும் எத்தனை பிரச்சனைகளுக்கு என ஓடி ஒளிவது எண்ணியவள் "சாரி சார் அந்த மாதிரி பொண்ணு இல்ல, அதோட உங்கட கல்ச்சர் வேற,எங்களது வேற, அங்க பாருங்க உங்க கேர்ள் ஃபிரண்ட் உங்களுக்காக காத்திருக்காங்க என ஆங்கிலத்தில் மெதுவாக கூறினாள்.

இவை அனைத்தையும் ரிஷியும் தூர இருந்து பார்த்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்து கொணடிருந்தான். அவள் தைரியமாக அச்சுழலை முகம் கொடுப்பதை எண்ணி பெருமிதம் கொண்டான் இதழ்களில் புன்னகையோடு வந்து கொண்டிருந்தவனின் முகம் திடீரென இரத்த சிவப்பாக மாறியது.

" ப்ளீஸ் ஹனி" என அவன் கையைப் பிடிக்க வர சகஸ்தா பதட்டத்துடன் விலகும் போது தான் அது நிகழ்ந்தது.

இதோ மனதில் நின்றவள் 16
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க


   
ReplyQuote

You cannot copy content of this page