All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் கை சேருமா? -16

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம்: 16

ராதிகா யுவராஜ் ரூம்க்கு வந்தவள் குட் மார்னிங் சார் என சொன்னாள்…அவள் குரலில் யுவராஜ் அவளை நிமிர்ந்து பார்த்தான். 

ராதிகா “ சார் நீங்க ஏதோ என் ஹெல்ப் கேட்டதாக மேனேஜர் சார் சொன்னார்…பொதுவாக என் வேலை நேரத்தில் நான் வேற வேலை செய்வது இல்லை… பட் இது என் பசங்க சம்பந்தப்பட்ட வேலை என்பதால் தான் வந்தேன். 

ஆனால் உங்களுக்கு ஹெல்ப் பீரியாக செய்ய முடியாது எனக்கு அதற்க்கு…தனி பேமெண்ட் வேணும் ஒரு ஐந்தாயிரம் தர வேணும் அதை விட எனக்கு மதிய லன்ச்… நம்ம ஹோட்டலில் வேணாம் பைப் ஸ்டார் ஹோட்டலில் இருந்து வேணும்…

பிறகு நான் ஆட்டோவில் எல்லாம் வர மாட்டேன் தனுஜ் காரில்.. தனியாக தான் வருவேன் அவனை ஆட்டோவில் இல்ல நடந்து வர சொல்லுங்க “ என்றான். 

யுவராஜ் நிதானமாக எழுந்து நின்றவன்…தன் கைகளை மார்ப்புக்கு குறுக்கே கட்டி கொண்டவன். 

அவன் “ மேடம் பேசி முடித்து விட்டீங்களா? சரி உனக்கு அண்ணன் இல்ல தம்பி இருக்கா?  என கேட்டான்.

ராதிகா “ அதை நீங்க ஏன் கேட்கிறீங்க? இல்லை நான் என் குடும்பத்தில் மூத்த பெண்ணு… என் அப்பா என்னை என் சிங்க குட்டி என சொல்வார் “ என பெருமையாக சொன்னாள். 

யுவராஜ் “ அது தான் நீ இப்படி ஆம்பள பையன் போல பிகேவ் பண்ணி கொண்டு இருக்க…பிறப்பால் நீ பெண்ணாக இருந்தாலும் அவங்க கிட்ட இருக்கும் மென்மை, நளினம், அடக்கம்… உன் கிட்ட சுத்தமாக இல்லை ஏன் அது உனக்கு சுட்டு போட்டாலும் வராது. 

உனக்கு முதலில் நாவடக்கம் என்றால் என்ன என்று தெரியுமா? ஆரபி உன் ப்ரண்ட் தானே!. அவங்களை பார்த்து கற்று கொள்ளு… எப்போ பாரு வாயடித்து கொண்டு இருந்தால்… ஒரு நாள் உன் வாய் மட்டுமல்ல மூஞ்சி பஞ்சராவது நிச்சயம். 

உன் அப்பா உன்னை சிங்கக்குட்டி என சொன்ன காரணம் நீ தைரியமாக…. இந்த உலகத்தை பேஸ் பண்ண வேணும் என்று ஆனால் அதை நீ வேற விதமாக எடுத்து கொண்டு இப்படி அடாவடி பண்ணி திரியற…தனுஜ் உன்னை விட பெரியவன் அவன் கிட்ட போய் என்ன எல்லாம் பேசி சண்டை போட்டு இருக்க. 

அவன் பெண்ணுங்களை மதிப்பவன் என்பதால் பேச்சோடு விட்டான்…இல்லை என்றால் உன் நிலையை யோசித்து பாரு ஒரு அன்னிய ஆண் கிட்ட…. இன்னொரு ஆணின் உள்ளாடை வரை பேசி கமெண்ட் அடித்து இருக்க… இதை உன் அம்மா கேட்டு இருக்க உனக்கு துடைப்பம் பிய்ந்து போகும் அளவுக்கு விளாசி இருப்பாங்க. 

உன் அப்பாவுக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும்…என் பெண்ணா இப்படி பேசி நடந்து கொள்வது என்று… பெண்களுக்கு தைரியம் நிச்சயமாக இந்த காலத்தில் அவசியம் ஆனால் அது எல்லை மீறாது போக வேணும்…உனக்கு பைரவ் பற்றி சரியாக தெரியாது அவன் இப்படி நின்று பேசி புரிய வைத்து கொண்டு இருக்க மாட்டான். 

உன் அப்பா, அம்மாவை அழைத்து அவங்களை தான் கேள்வி மேலே கேள்வி கேட்பான்…லுக் எனக்கு தெரியும் நீ நல்ல பெண்ணு மற்றவங்களுக்கு உதவி செய்பவள்…நட்புக்காக எதையும் செய்ய துடிப்பவள் என்று உன்னை படைக்கும் போது கடவுள் வாயை மட்டும் காது வரை வைத்து படைத்து விட்டார். 

அது தான் நீ இப்படி இருக்க நான் ரொம்ப பொறுமைசாலி தான் பட் எனக்கு கோபம் வந்தால்…அதை நீ தாங்கி கொள்ள மாட்ட அது என்னை சேர்ந்தவர்களுக்கு தெரியும்…சோ இந்த ஹோம் வேலை முடியும் வரைக்கும் உன் வாலை சுருட்டி கொண்டு இரு. 

மீறின நான் உன் அப்பா கிட்ட பேச வேண்டி இருக்கும்…இப்போ இந்த ஹோட்டல் எனக்கு சொந்தம் புரிகிறதா? ஓகே போய் கிளம்ப ரெடியாக இரு… நீ கேட்டது நியாயம் என்று எனக்கு பட்டால் அதை நீ கேட்காது  உனக்கு செய்து தருவேன் “ என்றான். 

ராதிகா  ஏதுவுமே பேசாது வெளியே வர தனுஜ் நக்கலாக சிரித்தான்…அவனை முறைத்து விட்டு வந்தவள் கிளம்ப ரெடியாக இருந்தாள்.. மீறினால் யுவராஜ் தந்தையிடம் சொல்லி விட்டால்…அவரை கூட சமாளிக்க முடியும் தாயை முடியவே முடியாது அதனால் ஹோம் வேலை முடியும் வரைக்கும் அமைதியாக இருந்தாள். 

ஆரபி இன்று தான் மன நிம்மதியோடு ஸ்கூலுக்கு வந்தாள் ஹோம் விஷயம் தெரிந்த சிலர்…அவளிடம் அது பற்றி விசாரித்து தங்கள் சந்தோஷத்தை தெரிவித்து விட்டு போனார்கள்…அப்போது முகம் இறுக சதீஷ் வந்தான். 

சதீஷ் “ என்ன ஆரபி பெரிய பெரிய ஆளுங்க கூட தொடர்ப்பு வைத்து இருக்க போல…அது தான் என்னை போல ஆளுங்க உன் கண்ணுக்கு தெரியவில்லை “ என ஒரு மாதிரியாக சொன்னான். 

ஆரபி “ சதீஷ் சார் பார்த்து வார்த்தை விடுங்க… ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் இது நிச்சயமாக உங்களுக்கு தெரிந்து இருக்கும்…நீங்க கற்று கொடுக்கும் இடத்தில் இருக்கிறீங்க பார்த்து நடந்து கொள்ளுங்க. 

பைரவ் சார் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு வள்ளல் என்ற பெயருக்கு அர்த்தம் அவர் தான்…பணம் இருந்தால் மட்டும் போதாதது அதை கொடுக்க மனமும் வேணும்…எனக்கு உங்க எண்ணத்தை பற்றி நன்றாக தெரியும் உங்க நண்பர்… அந்த இன்ஸ்பெக்டர் பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன்.

அது தான் நான் உங்க கிட்ட பேச்சு வார்த்தை வைத்து கொள்வதில்லை…நீங்க நினைக்கலாம் இல்லத்தில் வளரும் பெண்களுக்கு பணத்தை காட்டினால் மயங்கி விடுவாங்க என்று…அது உங்க எண்ணம் எங்களை நாங்களே உருவாக்கி கொண்டவங்க அன்பை தவிர நாங்க எதற்க்குமே  அடிபணிய மாட்டோம். 

நீங்க குரு கற்று கொடுப்பவர் எப்பவுமே உயர்ந்த எண்ணத்தில் இருக்க வேணும்…இல்லை என்றால் அந்த கற்றலுக்கு மதிப்பு இல்லாது போய் விடும் புரிந்து கொள்ளுங்கள்…இனி இப்படி பேச வேணாம் “என சொல்லி விட்டு போகும் அவளை சதீஷ் வன்மமாக பார்த்தான். 

யுவராஜ் ராதிகா, தனுஜை அழைத்து கொண்டு ஹோமுக்கு வந்தான்…ராதிகா கேட்டது போல அவளை தனி காரில் தான் அழைத்து வந்தான் அதில் தனுஜ்க்கு மன வருத்தம்…யுவராஜ் பாதரை சந்தித்து அவன் வந்த வேலையை பற்றி சொன்னான். 

யுவராஜ் “ குட் மார்னிங் பாதர் பைரவ் ஹோம்மில் சில வசதிகள் செய்து கொடுக்க சொல்லி இருக்கிறான்…உங்க கிட்ட அனுமதி கேட்க சொன்னான் அது தான் நான் ராதிகாவை அழைத்து வந்தேன் “ என்றான். 

பாதர் “ குட் மார்னிங் மை சன் பைரவ் உன்னை போல பசங்களை இப்போ காண்பது ரொம்ப அரிது…கர்த்தர் இந்த குழந்தைகளை காக்க தான் உங்களை அனுப்பி இருக்கிறார். 

என் அனுமதி நல்லது செய்ய எதற்க்கு மை சன் வேணும்…செய் பட் ஆடம்பரமாக ஏதுவுமே வேணாம்… ஆடம்பரம் தான் வாழ்க்கையின் அழிவுக்கு அடிதளம்…அடிப்படை வசதிகள் மட்டும் போதும் மை சன் “ என்றார். 

யுவராஜ் “ சூவர் பாதர் நான் எல்லாம் பார்த்து விட்டு உங்க கிட்ட சொல்கிறேன்…நீங்க ஓகே என்ற பிறகு தான் வேலையை ஸ்டாட் பண்ண முடியும்” என்றான். 

பாதர் சரியென அனுமதி அளிக்க ராதிகாவோடு போக அவளை கண்ட குழந்தைகள்…ராதிகா அக்கா என்று அவளை சூழ்ந்து கொண்டு அவளை அணைக்க…. அவளும் சந்தோஷமாக அவர்களை அணைத்து கொண்டாள்…அப்போது யுவராஜ்க்கு ஒன்று புரிந்தது இவளுக்கும் தாய்மையுணர்வு இருக்கு என்று. 

யுவராஜ் ஹோமை சுற்றி பார்த்தவன் ராதிகாவிடம் சிலதை கேட்டு தெரிந்து கொண்டவன்…தனுஜ்யிடம் குறித்து வைக்க சொன்னான்…அவனும் குறித்து கொண்டான்.

யுவராஜ் “ தனுஜ் வரும் போது குழந்தைகளுக்கு வாங்கி வந்த சாக்லேட், பிஸ்கெட், ஸ்நாக்ஸ் எல்லாம்… ராதிகாவிடம் கொடு அவள் அதை குழந்தைகளுக்கு கொடுக்கட்டும்…ராதிகா கொடுக்கலாம் தானே இல்ல  பாதரிடம் பர்மிஷன் கேட்க வேணுமா? என கேட்டான்.

ராதிகா “அப்படியில்லை ஆரூ தான் சொல்வாள் இலவசமாக வாங்கி ஒரு நாள் இரண்டு நாள் சாப்பிட்டால் …பிறகு மனம் அந்த சுகத்திற்க்காக ஏங்க ஆரம்பித்து விடும்…அதற்க்கு பிறகு அதை வாங்க பணம் தேவைபடும்.

அதுவே தப்பான பாதையை தேர்ந்தேடுக்க சொல்லும் குறுக்கு வழியில் தானே …பணம் சட்டென சம்பாதிக்க முடியும் அது தான் பண்டிகை நாட்களை தவிர… மற்ற நாளில் அவள் யாரு கொடுத்தாலும் அழகாக மறுத்து விடுவாள்.

அதற்க்கு பதிலாக நோட் புத்தகம்,பென்சில்,டிரஸ் வாங்கி கொடுங்க என சொல்வாள்…அது போல கட்டாயமாக வாரத்தில் சனி, ஞாயிறு நான்வெஜ் சமைக்க சொல்வாள்.

அதற்காகவே அவள் லீவு நாட்களில் கூட பணக்கார பசங்களுக்கு பாட்டு டியூசன் எடுப்பாள்…பசங்களுக்கு தேவையான டிரஸ், சாப்பாடு எதிலுமே… அவள் குறை வைத்தது இல்லை நானும் என்னால் முடிந்தளவு உதவி செய்வேன்” என்று சந்தோஷமாக சொன்னாள்.

யுவராஜ்க்கு புரிந்து நண்பிகளுக்கு இந்த ஹோம் மேலே உள்ள பற்று பற்றி.

யுவராஜ் “ ராதிகா நான் இப்படி கேட்பதை தப்பாக நினைக்க வேணாம்…ஏன் ஆரபி இங்கே தங்குவதில்லை  இது அவங்க வளர்ந்த ஹோம் தானே “என கேட்டான்.

“பறவை  தன் பிள்ளைகளை சிறகு முளைத்து பறக்கும் வரைக்கும் தான் …தன் கூட்டியில் வைத்து பறக்க கற்று கொடுக்கும் மை சன் பிறகு அது சுயமாக பறந்த பிறகு அதை தன் கூட வைத்த கொள்ளாது…பிகாஸ்  அது தன் சுயத்தை இழந்து விடும் “என சொல்லி கொண்டு பாதர், சிஸ்டர் வந்தார்கள்.

கேத்தரின் “ ஆரபி மட்டுமல்ல யுவராஜ் இங்கே வளர்ந்ந பிள்ளைங்க ஒரு நிலைக்கு வந்ததும் ..இந்த ஹோமை விட்டு போக வேணும் ஏன் என்றால்… இட பற்றாகுறை அடுத்த குழந்தைங்க வர முடியாத சூழ்நிலை உருவாகும்.

அவங்க தங்க சொந்த காலில் நின்றதும் நாங்க சந்தோமாக வழி அனுப்புவோம்…அவங்களும் தங்களுக்கு என ஒரு வாழ்க்கை அமைத்து கொள்வாங்க…அது தான் எங்களுக்கு வேணும்.

அவங்க சந்தோஷம் தான் எங்க சந்தோஷம்…பட் அவங்க ஒரு கஷ்டம்  என எங்களை தேடி வந்தால்… நாங்க இரு கை நீட்டி வரவேற்போம் அது போல தான் ஆரபியும் “என்றார்.

தனுஜ் “சிஸ்டர் தப்பாக நினைக்க வேணாம் அவங்க கொஞ்சம் உதவி செய்து இருந்தால்… இந்த ஹோம் இன்னும் நல்ல நிலையில் இருந்து இருக்குமே “என கேட்டான்.

கேத்தரின் “நோ மை சன் பலனை எதிர்பார்த்து செய்வது உதவி அல்ல…சூழ்நிலைகள் மாறும் அவங்க தந்தால் சந்தாேஷமாக ஏற்று கொள்வோம்… தரவில்லை என்றால் கூட அவங்க எங்க பிள்ளைங்க தான்…பட் ஆரபி கர்ததரின் மகள் அவளை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது” என்றார்.

மலர் பூக்கும்…

     

This topic was modified 2 weeks ago by VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?

   
ReplyQuote

You cannot copy content of this page