About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நைட் லைஃப் - 15
அஷ்வின் இறப்பு செய்தியே ஊர் முழுதும் பரவிக் கொண்டு இருக்க அதற்கு காரணமானவர்களின் ஒருவரான ‘அந்த’ பெரியவர் பயங்கர கோவத்தில் வீட்டின் உள்ளே நடந்துக் கொண்டு இருந்தார். இந்த செய்தியை கேட்டதும் அவருக்கு பிரஷர் கூடியது. விஷயம் வெளியே தெரிந்தால் மாட்டிக் கொள்வோமே என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் வெளிநாட்டில் இருந்து வந்தவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நிச்சயம் தமக்கு ஆபத்து என்று நினைத்து உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டு இருந்தார். அவன் தெளிவாக விஷயம் செய்திகளில் வரும் அளவிற்கு செல்லக் கூடாது என்று கூறி விட்டு தான் சென்றான். ஆனால் இப்பொழுது ஊரு முழுக்க தெரிந்து விட அவன் என்ன செய்வானோ என்ற பதட்டத்தில் நடந்துக் கொண்டு இருந்தார். அந்த கூடத்தில் இருக்கும் சோபாவில் கணினி உடன் சித்தார்த் அமர்ந்து இருந்தான். நடக்கும் பிரச்சனைக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவனால் இந்த இடத்தை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான். அந்த பெரியவர் யோசனை உடன் நடந்துக் கொண்டு இருந்தவர் சித்தார்த் அருகே வந்து, “சித்தார்த், அவருக்கு இந்த விஷயம் தெரியாம பாத்துக்க..இந்த விஷயம் தெரிஞ்சா எல்லாருக்கும் பிரச்சனை.. உன் கிட்ட அவரு ஏதாவது விசாரிச்சாருன்னா இங்க நடக்குறதை சொல்லாத.. எதையாவது சொல்லி சமாளி.. நான் இங்க நடக்குற பிரச்னையை கண்ட்ரோல் பண்றேன்” என்று அழுத்தமாய் கூறினார். சித்தார்த் மறுப்பு கூறும் இடத்தில் இல்லை. அவர்கள் என்ன சொன்னாலும் அவன் கேட்டே ஆக வேண்டும் என்ற நிலையில் மாட்டி இருக்கிறான். அவர் கூறியதற்கு சம்மதமாய் தலை அசைத்தான்.
அந்த நேரம் இரண்டு அடியாட்கள் பெரியவரை பார்க்க உள்ளே வேகமாய் ஓடி வந்தார்கள். அவர்கள் வந்ததும், “என்ன டா ஆளுங்களை கண்டு புடிச்சாச்சா இல்லையா? என்ன ஆச்சு?” என்று பதட்டமாய் கேட்டார். அதற்கு சற்று உயரமாய் இருந்த ஒருவன், “ஐயா இல்லைங்க.. அவிங்க நாலு பேரும் ஆளுக்கு ஒரு தெசையில ஓடி இருக்கானுவ.. எவன் எங்குட்டு போனான்னு கண்டு புடிக்க முடியல.” என தலையை சொறிந்துக் கொண்டே கூறிட அவனை ஓங்கி அறைந்தார் பெரியவர்.
“இந்த பதில கேக்கவா நான் உங்களை வேலைக்கு வச்சி இருக்கேன்.. போய் அவனுங்கள கண்டு புடிச்சி கொன்னு போடுங்க.. சொன்னது ஒரே ஒரு வேலை.. அத கூட ஒழுங்கா முடிக்காம கோட்ட விட்டு வந்துட்டானுங்க.. அவனுங்க மட்டும் உயிரோட யாரு கைலயாவது கிடச்சானுங்க அப்பறம் மொத்த பேரும் உள்ள போக வேண்டியது தான்.. போய் அவனுங்கள கண்டம் துண்டமா வெட்டி போடுங்க டா.. இன்னும் ரெண்டே நாள்ல அவனுங்க சாவு செய்தி எனக்கு வரல உங்களை நானே கொன்னுருவேன்” என்று கர்ஜனையாக அவர் மிரட்டிட வந்த இரண்டு பேருக்கும் அல்லு விட்டது. சித்தார்த் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான். மிகவும் சாதாரணமாய் ஒரு உயிரை எடுக்க சொல்வதை நேராக கேட்டவன் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டான். ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோமோ என்று இருந்தது அவனுக்கு.
மித்திரன் வீட்டில் இருவரும் ஆருத்ரா வர சொன்ன இடத்திற்கு கிளம்பிக் கொண்டு இருக்க ராகவ் போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசிய ராகவ் யோசனையாக பேசி விட்டு அழைப்பை துண்டித்தான். அவன் முக மாற்றத்தை கண்ட மித்திரன், “என்ன ஆச்சு? யாரு?” என்று கேட்க, “சைபர் டீம் லீட் கெளதம் தான் கால் பண்ணாரு,.. ஊருல புதுசா ஸ்கம் பண்றதுனால அது சம்பந்தமா அவருக்கு டிபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்காம்.. அதனால நம்ம மீட்டிங் நாளைக்கி வச்சிக்கலாம்ன்னு சொல்லிட்டாரு” என்றிட கடுப்பில் கையில் இருந்த சீப்பை விசிறி அடித்தான் மித்திரன்.
“என்ன டா இவங்க இப்படி இருக்காங்க.. இத்தோட மூணாவது முறை மீட்டிங் கேன்சல் பண்றது.. நம்மளை என்ன வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைச்சிட்டான்களா..” என்று கடுப்படிக்க, “விடு டா இவங்க வேணும்ன்னே இதை எல்லாம் டிலே பண்றாங்க.. நமக்கு தான் இப்போ அதுக்கான காரணம் தெரிஞ்சிடுச்சுல.. விடு..” என்று ஆறுதல் கூறினான் ராகவ். அதில் மறுப்பாக தலையை அசைத்த மித்து, “இருந்த ஒரே ஒரு எவிடன்ஸ் அஷ்வின் அவனையும் இப்போ கொன்னுட்டாங்க.. அடுத்து என்ன எல்லாம் பண்ண போறாங்களோ.. எனக்கு ஒண்ணுமே புரியலை.. ஏன் எதுக்காக இது எல்லாம் நடக்குதுன்னு தெரியலை.. குழப்பமா இருக்கு..” என்று தலையை பிடித்துக் கொண்டான்.
“முதல்ல ஆருவ பாப்போம்.. அப்பறம் நம்ம ரெண்டு பேரும் பழைய கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்.. அதுல நமக்கு ஏதாவது ஹின்ட் கிடைக்குதான்னு பாக்கலாம்.. நம்ம இதுல நிதானமா இருந்து தான் ஆகணும்” என ராகவ் கூறிட சம்மதமாய் தலை அசைத்த மித்து, “சொல்றது எல்லாம் சரி தான்.. ஆனா அவ உனக்கு ஆருத்ரா.. என் பொண்டாட்டி அவ.. ஆருன்னு சொல்லாத” என்று சீரியசாக கூறிட ராகவ் முழித்தான். மித்திரன் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிட, “நீ இன்னும் திருந்தவே இல்ல டா.. ச்சே.. உனக்கு ஆறுதல் சொன்னேன் பாரு” என்று கத்திக் கொண்டே அவன் பின்னே சென்றான் ராகவ். இருவரும் ஒரே பைக்கில் ஒன்றாய் ஆருத்ரா சொன்ன காப்பி ஷாப்பிற்கு சென்றார்கள்.
அவர்கள் சென்ற நேரம் தான் சரியாக யுகி உடன் ஆருத்ரா அங்கு வந்தாள். இருவரையும் பார்த்து முகம் மலர கையை அசைக்க மித்திரன் புன்னகைத்தான். ராகவ் தான் யுகி வந்திருப்பதை கண்டு குழம்பினான். அவள் வருவதை பற்றி மித்திரன் கூறாததனால் அவனுக்கு தெரியாது.
“இந்த பொண்ணுங்க எப்போதும் கொடுக்கோட தான் சுத்துவாங்க போல” என்று நினைத்துக் கொண்டு அவர்கள் பின்னே சென்றான்.
நான்கு பேரும் ஒரு கேபின் உள்ளே சென்று அமர்ந்துக் கொள்ள, மித்திரன் தான் பேச்சை ஆரம்பித்தான், “சொல்லு ஆரு எதுக்கு வர சொன்ன?” என்று கேக்க, ஆரு சுற்றி முற்றி பார்த்து, “ரெண்டு முக்கியமான விஷயம் நானும் யுகியும் சொல்லணும்” என்றாள். அதில் மித்திரனும் ராகவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன என்பது போல் பார்க்க ஆரு யுகிக்கு கண்ணை காட்டினாள். உடனே யுகி அவளின் போனை எடுத்து ஒரு வீடியோவை அவர்கள் இருவருக்கும் போட்டு காட்டினாள். அன்று அஷ்வினை கடத்திக் கொண்டு சென்ற வீடியோவை இருவருக்கும் காட்டிட இருவரும் திகைத்தார்கள். போனை வாங்கிய மித்திரன் உற்று பார்த்து, “இது.. இது.. எப்படி உன் கைக்கு கிடைச்சது?” என்று ஆச்சரியமாய் கேட்டான். வீடியோவை பார்த்த ராகவ் யோசனையாக, “இரு… இது கொஞ்ச நாள் முன்ன யாரோ ஒரு பையனை கடத்திட்டு போன வீடியோ தானே.. அந்த வீடியோல ஃபேஸ் கிளியரா தெரியலை.. அப்போ அவன் தான் இவனா? இது எப்படி உன் கிட்ட வந்துச்சு?” என்று ஆச்சரியமாய் கேட்டான் ராகவ்.
“இந்த வீடியோ தான் நான் எடுத்தேன்.. அதனால தான் மினிஸ்டர் ஆளுங்க எனக்கு டிரக் குடுத்தாங்க.. இன்னிக்கு இந்த பையன் இறந்து போன நியூஸ் தெரிஞ்சதும் உடனே இந்த வீடியோவை என் பிரென்ட் கிட்ட இருந்து வாங்கி உங்க கிட்ட காட்ட வந்தேன்..” என்றாள் யுகி. மித்திரன் இன்னும் குறையாத அதிர்ச்சியுடனே அந்த வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்தான். “அப்போ அஷ்வினை கடத்தி கிட்ட தட்ட ரெண்டு வாரம் இருக்குமா?” என கேட்க யுகி ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.
மித்திரன் மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடியது. அஷ்வின் காணாமல் போய் இத்தனை நாட்கள் ஆகியும் ஏன் தனக்கு தகவல் கூறவில்லை, இத்தனை நாட்கள் கழித்து அவனை கொன்று இருக்கிறார்கள் என்றால் இடைப்பட்ட நாட்களில் அவனை என்ன செய்து இருப்பார்கள் என்று பலவாறாக யோசித்துக் கொண்டு இருந்தான். அவனின் எந்த கேள்விக்கும் விடை தெரியாமல் இருக்க அவனுக்கு எரிச்சல் தான் அதிகரித்தது.
“யுகி அப்போ அஷ்வினை யாரு வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்கன்னு தெரியுமா?” என்று மித்திரன் கேக்க, “ம்ம் மினிஸ்டர் சதாசிவம் வீட்டுக்கு தான் அவனை கூட்டிட்டு போனாங்க.. அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னா எங்களோட கேமராவை அவன் தூக்கிட்டு ஓடிட்டான். திவா தான் புடிக்க போனான். அப்போ அவனை அடிச்சி பேக் வாங்குனப்போ தான் அந்த பையன் நாக்கு கட் ஆகி இருந்ததை பாத்தான். அப்பறம் ரெண்டு பேரு போலீஸ்ன்னு பேருல அவனை இழுத்துட்டு போய்ட்டாங்க..” என்றாள் யுகி. அதில் இருவரும் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தார்கள்.
“சாதாசிவம்.. அவரு ஏன் இதுல இன்வால்வ் ஆகி இருக்கணும்? ஒரு வேலை இவருக்கும் அஷ்வின்க்கும் ஏதாவது லிங்க் இருக்குமா?” என்று ராகவ்வை பார்த்து மித்திரன் கேக்க அவனும் ஆழமாய் யோசித்தான். எதையோ யோசித்த ராகவ் மித்திரனை பார்த்து லேசாய் தலையசைக்க அவனும் அமைதியாகினான்.
“தேங்க்ஸ், இந்த விஷயத்தை எங்க கிட்ட சொன்னதுக்கு.. இது எங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும், இனிமேல் இந்த விஷயத்தை பத்தி நீ வெளிய சொல்லாத.. உனக்கு பிரச்சனை ஆகும்” என யுகி மீது உள்ள அக்கரையில் கூறினான் மித்திரன். லேசாய் தலை அசைத்த யுகியின் விழிகள் ராகவ் மீது படித்தது. அவனோ அவளை கண்டும் காணாமல் அமர்ந்து இருந்தான். அவள் பார்வை போன திசையை உணர்ந்த மித்திரன் தொண்டையை செருமிட யுகி நடப்பிற்கு வந்தாள்.
“ஆமா இதை ஏன் என் கிட்ட கொண்டு வந்து காட்டணும்ன்னு நினைச்ச? லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்க்கு போக வேண்டியது தானே” என்று மித்திரன் சந்தேகமாய் கேட்டிட ஆருத்ராவும் யுகியும் திருட்டு முழி முழித்தார்கள். ராகவ் சுவாரசியமாய் இருவரையும் பார்க்க மித்திரன் விழிகள் ஆருவை துளைத்தது. அதில் தடுமாறியவள், “ஹிஹி.. மித்து.. அத விடுங்க…” என்று சமாளிக்க பார்க்க, மித்திரன் பார்வை யுகி மீது படிந்தது. “ரிப்போர்ட்டர் மேடம் சொல்றிங்களா?” என்று அழுத்தமாய் கூறிட ஆரு கண்ணாலே வேண்டாம் என்று சமிஞ்சை காட்டினாள். “நீ இப்போ சொல்லலன்னு வையேன்” என்று கூறிய மித்து அவளை பார்த்து விட்டு ராகவ்வை பார்க்க யுகி அதிர்ச்சியில் கண்களை விரித்தாள். அவன் எப்படி கண்டுக் கொண்டான் என்று அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
“சொல்லிறேன்… ஆரு சொல்லி தான் உங்களை பத்தின டீட்டெயில்ஸ் எல்லாத்தையும் நான் கலக்ட் பண்ணேன்.. உங்க பழைய கேஸ் நியூஸ் எல்லாம் கலக்ட் பண்ணி குடுத்தேன்” என்று உண்மையை உடைக்க ஆரு தலையில் கை வைத்தாள்.
Latest Post: நெஞ்சம் 18 Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page