About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம் 14
காரில் ஏறிய ரிஷிக்கு சகஸ்தாவின் நினைவு தான் ஸ்டேரிங்கை அழுத்திப் பிடித்தவன்,பெரும் மூச்சுக்களை இழுத்து விட்டான். "டால், எப்படி துடித்திருப்பாள், அவளை தனக்குள் பொத்திப் பாதுகாக்க வேண்டும்" என எண்ணிக் கொண்டான்.
அப்போதுதான் அவனுக்கு நிதர்சனம் உரைத்தது, தன்னோடு நன்றாக பேசியவள் திடீரென பேசாமல் விட்டது, ரத்னாவின் வரவு என எண்ணியவன் தன் தலையில் தட்டிக் கொண்டான்.
அவளிடத்தில் இருந்து பார்த்தால், தன் தவறும் புரிந்தது, அவளது பொறாமையை தூண்ட ரத்னாவுடன் பேசியதே, ஆனால் சகஸ்தா அதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பாள் என அனைத்தையும் யோசித்தான்.
தனது அலைபேசியை எடுத்து பார்க்க,அதில் வால்பேப்பராக, அவள் வரைந்த சுவரொவியம் இருந்தது. அவள் காதலும் புரிந்தது,அவள் மனநிலையும் புரிந்தது.
எக்காரணம் கொண்டும் அவளை இழக்க மாட்டேன் என தன்னுள் உறுதி கொண்டவன் காரை எடுத்தான்.
பாசிக்குடாவிற்கு வந்த ரிஷி, அடுத்த கிழமை திறக்கவிருக்கும் பொத்துவில் அருகம்பே பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட" ஜெட்விங்" ரிசாட்டிற்கான ஊழியர்களை தேர்வு செய்ய, பாசிக்குடாவில் இருக்கும் தன் நண்பனிடம் தெரிவிக்க,அவனும் அத்துறையில் இருப்பதால் அவனது ஹோட்டலில் தான் இன்டர்வியூ நடைபெற்றது.
"ஹாய் டா என கைகுகிலு றிஷியை வரவேற்றான் "ரேத்திக்" ஸ்விட்சர்லாந்தில் வசித்தவன் தற்போது தான் சொந்த ஊருக்கு வந்து ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறான்,பரஸ்பர நல விசாரிப்பிற்கு பிறகு, "லைஃப் எப்படி போகுது" என ரேத்திக் கேட்க, றிஷியின் பேச்சு நின்றது தன் இறுக்கம் தவிர்த்து பேசும் ஒரு நபர் எனில் அது ரேத்திக் தான்.
சிறுவயதில் ஒன்றாகப் படித்தவர்கள், பின் கால ஓட்டத்தினால் ரேத்திக்கு சுவிட்ச்லாந் செல்ல ரிஷியும் வேலையில் சேர்ந்து கொண்டான். பிஸினஸ் மீட்டிங் ஒன்றில் தான் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
தனது லவ்வை பற்றியும் சாஸ்தாவைப் பற்றியும் ரிஷி சொல்ல, " சான்ஸ்லெஸ் மச்சான் உன்யே ரீல் எடுக்கா" யாருடா??? என சிரித்தபடி ரேத்திக் கேட்டான்.
தனது அலைபேசியில் சகஸ்தாவின் புகைப்படத்தை காட்டினான் றிஷி அதனைப் பார்த்து ரேத்திக்.
"எங்கேயோ பார்த்து இருக்கேன்",என யோசித்தவன் இன்டர்வியூவிற்க்கு வந்த விண்ணப்பங்களை பார்த்தவன் அதிலிருந்து ஒன்றை எடுத்து ரிஷியின் முன்வைக்க அதை கையில் எடுத்த றிஷி சிரித்தபடி ரேத்திகை பார்த்து கண் சிமிட்டினான்....
சுபி, றிஷியை சந்தித்து பற்றி மூச்சும் விடவில்லை. வெளியே மணிச்சத்தம் கேட்க, வெளியே சென்ற சுபி கையில் கடிதத்துடன் வந்தான். தொலைக்காட்சி பார்த்திருந்த சகஸ்தாவோ,"என்னடா எனக் கேட்க, உனக்கு தான் என்றான் அவளும் அதனைப் பிரித்து பார்த்தவள் ,சந்தோசத்தின் உச்சம்.
"அம்மா ஜாப் கன்பார்மேசன் லெட்டர் வந்திருக்கு அடுத்த வாரம் ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க என்றாள்.மிகுதியைப் பார்த்து விட்டு ,ஆனால் பொத்துவிலுக்கு கிடைச்சிருக்கு என்றாள் சோர்ந்து போன குரலில்.
தந்தையும் வர அவரிடம், விடயத்தை கூற சீலனோ,அவ்வளவு தூரம் போக வேண்டாம் என்றார்.
மனதே இன்றி அவளும் சம்மதித்தாள்.
நாட்களும் செல்ல "ஜெடவிங்
ரிசாட் திறப்பு விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது., பிரகாஷ் தான் அதனை திறந்து வைத்தார்.
சம்மர் வெகேஷன் காலம் என்பதால் புதிதாக திறந்த ரிசாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் அதிகமாகவே வந்திருந்தனர்.
அன்று இரவு தாய் ,தந்தை தனது அக்கா மற்றும் அத்தான் அனைவரும் ரிசாட்டில் தங்களுக்கான பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது றிஷியின் அலைபேசி தன் இருப்பை காட்ட,அழைப்பை ஏற்று பேசினான்.
சற்று நேரத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தான்,ரேத்திக் "ஹாய் ஆங்கிள்,என பிரகாஷிடம் கைலுக்கியவன்,ஹாய் மாம்ஸ் என ரஞ்சித்தையும் ரிஷியையும் அனைத்து விடுவித்தவன் வேணி மற்றும் ஸ்ரீயிடம் முகமன் கூறிக் கொண்டான்.
"ரேத்திக்கின் பேச்சில் அவ்விடமே கலகல என இருந்தது.இரவுணவை வரவழைத்து அனைவரும் உண்டனர்.
வேணியோ,"எப்பப்பா கல்யாணம்,"எனக்கேட்க,ரேத்திக்கின் முகம் கொஞ்சம் சுருங்கி பின் சரியான நிலைக்கு வந்தது.
நண்பனின் வாழ்க்கையில் நடந்தவை பற்றி தெரிந்த றிஷியோ ,சீக்கிரமே பண்ணிப்பான் என்றான்.
ரேத்திக்கும் "ஆமா ஆன்டி அடுத்த வருஷம் செய்ற ஐடியா இருக்கு" என்றான்.
"சுவிட்சர்லாந்து போறதா?? இல்ல இங்க தானா???" என ரஞ்சித் கேட்க போற ஐடியா இல்ல பார்ப்போம்.
பிரகாஷ்,வேணி , ரஞ்சித்,ஸ்ரீ தூங்கச் செல்ல,ரேத்திக்கும் றிஷியும் வெளியே பேசிக் கொண்டிருந்தனர்.
"என்னடா முகம் ரொம்ப டல்லா இருக்கு" தங்கச்சி ஜாயின் பன்னிடா? தானே எனக் கேட்க.....
அவனோ பெருமூச்சுடன் " இல்லடா என்றான்,ஏன்டா?? அவள்ட தம்பிட பேசினன், ரொம்ப தூரம் என்று அவங்க அப்பா போக வேனாம் என்றிருக்கார்."
"ம்ம் என்றான் ரேத்திக்"நாளைக்கு அம்மாவும்,அப்பாவும், மட்டக்களப்புக்கு போயிற்று தான் போவாங்க,என்றான் ரிஷி.
"ஓகே அத விடு உன்னோட விஷயம் என்னாச்சு" என றிஷி கேட்க.......ரேத்திக்கோ கடுப்புடன்" என்ன பேசினாலும் பதிலே இல்ல ,மௌனம் மௌனம் ,மௌனம், மௌனம் மட்டும் தான் கடுப்பா இருக்குடா"என்றான்.ரேத்திக் சத்தமாக சிரித்த ரிஷி,
நண்பனின் தோளில் கை போட்டபடி , "மச்சி அப்போ ஆளத் தூக்கிடு" என்றான் ஒன்றைக் கண் சிமிட்டி......
"ம்ம்..... அதான் செய்யப் போறன் இனி என்றான் அதே கடுப்புடன்.
"ஏங்க ,நல்ல வாழ்க்கை வந்திருக்கு இவ எதுக்கும் பிடி கொடுக்க மாட்டெங்கிறா!!!! என்றார் சாரு.அதற்கு சீலனோ....." அவ பட்ட கஷ்டம் அப்படி அவள அதிலிருந்து மீட்க எவ்வளோ கஷ்டப்பட்டம் ,வேணி ,பிரகாஷ் ரொம்ப நல்லம் ஆனா சகஸ்தாட விருப்பம் இல்லாம ,எதுவும் செய்ய முடியாது. என்றார் தீர்மானமாக......
"அந்த கேடு கெட்டவன் கைல என் பொண்ணு வாழ்க்கை சீரழிஞ்சே போயிருக்கும். அது நம்ம பார்த்த கல்யாணம்,அந்த குற்றவுணர்ச்சி தான் எனக்கு சாரு என்றார் சீலன்.
"யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத எம் பொண்ணு,அவள் சந்தோசத்த தொலைச்சி இறுக்கமா மாற நாமும் தான் காரணம் ,அவள் இப்போ இயல்பா இருந்தாலும் ,அவ மனநிலை. தெரியும் ,தம்பியும் எவ்வளோ கஷ்டப்பட்டான்.
"அவள நல்லவன் ஒருவன்ட கைல புடிச்சு கொடுத்தா, தான் எனக்கு நிம்மதி என்றார்.சீலன் ,சாதாரண மிடில் கிளாஸ் தகப்பனின் உச்சபட்ச ஆசை,தன் மகளை நல்ல மாப்பிள்ளை,வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே, அதற்கு சீலனும் விதிவிலக்கல்ல,முதல் தங்களால் மகளுக்கு தெரிவு செய்யப்பட்ட வாழ்க்கை மகளின் வாழ்க்கையை எண்ணிக் கலங்கினர் அப் பெற்றோர்.
ஹாலிற்கு வந்த சகஸ்தாவிற்கு,தாய்,தந்தை தங்களது அறையில் பேசுவது கேட்டது.ஒரு பெருமூச்சுடன் தனதறைக்கு வந்தவளின் எண்ணங்கள் ரிஷியையே சுற்றி வந்தது. சற்று நேரம் அமைதியாக யோசித்தவள்,ஒரு முடிவுடன் தூக்கத்தை தழுவினாள்.
மனதில் நின்றவள் 14
எப்படி இருக்குனு சொல்லுங்க ப்ரண்ட்ஸ் 😁
Latest Post: சித்திரையில் நீ மார்கழி..!! - (Comment Thread) Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page