About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 15
கார்த்திகா பைரவ் எல்லாம் மாற்றி விடுவான் என சொன்னாள்.
மீனாட்சி “ வேணாம் பாப்பா என் பேரன் ஏதுவுமே மாற்ற வேணாம்…அவன் மாற்ற நினைத்ததால் தான் அவன் வாழ்க்கை இப்படி மாறி போனது.
எனக்கு ஒரு ஆசை தான் என் இரண்டு பேரன்கள் கல்யாணத்தை நான் பார்த்து விட்டு கண் மூட வேணும் என்று…உன்னை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என் மூத்த பேரன் பார்த்து கொள்வான்” என்றார்.
ஓமனகுட்டி “ தம்புராட்டி எந்தயொரு சம்சாரமானது ( என்ன பேச்சு இது) நீங்க ஈ கொட்டாரத்தின் (அரண்மனை) மகாராணி இப்படி பேசலாமா? வேணாம் தம்புராட்டி சின்ன தம்புரான் வந்திருக்னோ ( வந்து விட்டார்) தானே அவர் பார்த்து கொள்வார் “ என்றாள்.
கார்த்திகா “ ஓமனா சொல்வது தான் சரி மா நீ கவலைப்படாதே என் மகன் பார்த்து கொள்வான்…அவனுக்கு என் கையால் சமைக்க போகிறேன் நீயும் வா சேர்ந்து சமைக்கலாம் “ என்றாள்.
மீனாட்சி “ கண்ணு அது பற்றி தான் சொல்ல வந்தேன் உங்க ஐயா…பைரவ் நம்ம கூட சாப்பாட்டு அறையில் தான் சாப்பிட வேணும் என கட்டளையாக சொல்லி விட்டார்…அப்போ தான் எனக்கு என் பேரன் வந்தது தெரியும்” என்றார்.
ஓமனா “ எந்த அம்மே!. இப்போ ஒரு பிரளயம் வர போகிறது… எந்த மலையாள பகவதியே நீ தான் இதில் இருந்து காக்க வேணும்…தம்புராட்டி இப்போ இதை போய் சின்ன தம்புரானிடம் யார் சொல்வது”என கேட்டாள்.
மீனாட்சி” என்னால் என் பேரனை வற்புறுத்த முடியாது அவன் கேட்கும் கேள்வி அத்தனையும்…நியாயமாக இருக்கும் போது நான் எப்படி அவனை வற்புறுத்த முடியும்…கண்ணு கார்த்தியாயினி நீ தான் இதை செய்ய வேணும் தங்கம்” என்றார்.
கார்த்திகா “ அம்மா நானா? ஏன் அம்மா அவன் டைனிங் ரூம்க்கு வந்தால் …அவனால் நிம்மதியாக ஒரு வாய் கூட சாப்பிட முடியாது இது உனக்கு தெரியாதா? என கேட்டாள்.
மீனாட்சி “ அதற்காக என் பேரனை தனி தீவாக நிற்க வைக்க முடியுமா? அவன் தன் குடும்பத்தோடு சேர்ந்து வாழ வேணும் கண்ணு… நமக்கு பிறகு அவன் தனியாக நிற்க கூடாது.
நீ தான் பக்குவமாக அவனை பேசி அழைத்து வர வேணும் கண்ணு…அம்மாவுக்காக இதை செய் மா சரி யுவா எப்போ வருவதாக சொன்னான் “என கேட்டார்.
கார்த்திகா “பைரவ் ஏதோ வேலை கொடுத்து இருக்கிறான் போல… அதை முடித்து விட்டு தான் வருவான் என சொன்னான் மா “ என்றாள்…மீனாட்சி ஒரு பெரும் மூச்சை விட்டவர்.
மீனாட்சி “எப்படி இருக்க வேண்டிய என் பேர பசங்க இங்கே இருக்கும் ஆளுங்களால் தனியாக இருக்கிறாங்க… மதுரை மீனாட்சி தாயே இதை எல்லாம் மாற வேணும்… யார் மாற்ற வர போகிறாங்க என பார்க்கலாம்” என்றார்.
யுவராஜ் மறு நாள் தன் வேலைகளை செய்ய தொடங்கி விட்டான்…அதற்காக ஹோம் பற்றி தெரிந்த ராதிகாவை தன் உதவிக்கு அனுப்ப முடியுமா?... என ஆரியபாதம் கிட்ட கேட்க அவரும் சரி என்றார்.
ராதிகாவும் அனிதாவும் தான் ரிசப்ஷனில் நின்று இருந்தார்கள்…அப்போது கால் வர அனிதா எடுத்து பேசி விட்டு வைத்தவள்.
அனிதா “ ராது மேனேஜர் சார் உன்னை வர சொன்னார் போய் பாரு “ என்றாள்.
ராதிகா “ யாரு சற்குவா எதற்காக என்னை வர சொன்னார் அது தான் அந்த ஆளு கேரளா அழகன்… வம்பு தும்புக்கு கூட நான் போவது இல்லை பிறகு சற்கு என்னை எதற்காக பார்க்க வேணும் “என கேட்டாள்.
அனிதா “ ஏய் கொஞ்சம் மரியாதையாக பேசு டி யார் காதிலாவது விழுந்து தொலைத்தால்… உனக்கு தான் ஆபத்து நீ முதலில் போய் சாரை பாரு “என்றாள்…ராதிகா சற்குணம் கேபின் கதவை தட்டி விட்டு வந்தவள்.
ராதிகா “ குட் மார்னிங் சார் எதற்காக என்னை வர சொன்னீங்க …எனக்கு தலைக்கு மேலே வேலை இருக்கு சீக்கிரமாக சொல்லுங்க “என்றாள்…சற்குணம் அவளை பார்த்தவர்.
சற்குணம் “ ராதிகா இது ஜிம் சார் ஆடர் நீ யுவராஜ் சாருக்கு ஹொல்ப்பாக இருக்க வேணும் என்று…அவர் வெளியே ஏதோ புரஜெக்ட் எடுத்து இருக்கிறார் போல நீ தான்அதற்க்கு வர வேணும் என்று சொன்னார்…அது தான் ஜிம் சார் போக சொன்னார்” என்றார்.
ராதிகா “ வாட் நான் அவன் கூட வேலை பார்க்க வேணுமா? நோ நெவர் அவன் என்னை பழி வாங்க… வேலை என்ற பெயரில் கொடுமை பண்ண போகிறான்…என் வேலையே போனாலும் பரவாயில்லை என்னால் முடியாது” என்றாள்.
சற்குணம் “ நான் இன்னும் முழுதாக சொல்லி கூட முடிக்கவில்லை …அதற்க்குள்ளே உனக்கு அவசரம் ஆரபி உன்னை எப்படி தான் சமாளிக்கிறாளே தெரியாது.
உன் வேலை என்ன தெரியுமா? கருணை இல்லம் ஹோம்… அதை கொஞ்சம் சரி செய்ய போகிறாங்க போல அதற்க்கு என்ன தேவை என்று…. உனக்கு தான் நல்லா தெரியுமே அதற்காக தான் உன்னை அழைத்தார்.
பாதர், சிஸ்டர், ஆரபியை அவர் தெந்தரவு செய்ய முடியாது அவங்களுக்கு வேலை இருக்கு…அண்ட் அவரிடம் வேலை பார்ப்பது நீ அது தான் உன் உதவியை கேட்டார் .
நான் நினைத்தேன் நீ அந்த இல்லத்தின் மீது பாசம் உள்ளவள் என்று…பட் உனக்கே அக்கறை இல்லாத போது அவருக்கு என்ன என இருந்து விடுவார் “என்றார்.
ராதிகா “ இதை முதலில் சொல்லி இருக்க வேண்டியது தானே!. சும்மா டைம் வேஸ்ட் பண்ணி கொண்டு…சரி சரி நான் அந்த ஆளுக்கு உதவி செய்கிறேன்” என்றாள்.
சற்குணம் “ இங்கே நீ மேனேஜரா இல்ல நான் மேனேஜரா என்று தெரியவில்லை… ராதிகா அவரிடம் மரியாதையாக நடந்து கொள்ளு உன் துடுக்குதனத்தை அங்கே காட்டி விடாதே” என்றார்.
ராதிகா சரி சரி என தலையை ஆட்டி விட்டு போக அங்கே நின்றது தனுஜ்…கெத்தாக அவனிடம்.
ராதிகா “ தனுஜ் போய் உன் பாஸ் கிட்ட சொல்லு… அவரின் புது பிஏ ராதிகா வந்து இருக்கிறேன் என்று” சொன்னாள்….தனுஜ் முகம் மாற.
தனுஜ் “மேடம் நீ எந்த பறயுனு ( என்ன சொல்றீங்க ) இப்போ நீங்க எந்தன இவிட வந்தது ( எதற்காக இங்கே வந்தீங்க )என கேட்டான்.
ராதிகா “ ஏய் என்ன எனக்கு மலையாளம் தெரியாது என்று என்னை கெட்ட வார்த்தையால் திட்டுகிற தானே!.இனி நான் தான் உனக்கு பாஸ் என்ன பார்க்கிற உன் வேலை சரியில்லை என்று… உன்னை தூக்கி விட்டு என்னை நியு அப்பாயின்மென்ட் பண்ணி இருக்கிறார்…உன் பாஸ்
உன்னை எனக்கு எடுபிடி வேலை செய்ய சொல்லி இருக்கிறார்…அடுத்து உனக்கு தமிழ் தெரியும் தானே…பிறகு என்ன பருப்புக்கு நீ மலையாளம் பேசுகிற.
என்ன என்னை விட நீ பெரிய ஆள் என்று காட்டுகிறாயா?இனி உன் வாயில் இருந்து மலையாளம் வந்தது….வாயில் சூடு வைத்து விடுவேன்.
போ போய் உன் பாஸ் கிட்ட நான் வந்து இருப்பதாக சொல்லு…நான் உன் கிட்ட பர்மிஷன் கேட்டு இருக்க மாட்டேன்…நேராக உள்ளே போய் இருப்பேன்.
பட் என் போதாத டைம் உன் பாஸ் ஜட்டி மாற்றி கொண்டு இருந்தால்…எனக்கு தான் பப்பி சேம் ஆகிவிடும் அதற்க்கு தான் உன்னை போக சொன்னேன் “ என்றாள்…தனுஜ் அவளை முறைத்து விட்டு உள்ளே போனான்.
யுவராஜ் தன் லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்து கொண்டு இருந்தவன் தனுஜ்…முகம் தொங்கி போய் வந்து இருப்பதை பார்த்தவன்.
யுவராஜ் “தனுஜ் என்ன உடம்புக்கு ஏதும் முடியவில்லையா? ஒரு மாதிரியாக இருக்க “என கேட்டான்.
தனுஜ் “சார் என் வேலையில் என்ன தப்பு செய்தேன் அதை சொல்லாது… நீங்க என்னை இப்படி இன்சல்ட் பண்ணி இருக்க கூடாது.
நான் எத்தனை வருடம் உங்க கிட்ட வேலை பார்க்கிறேன் இன்று… அந்த பெண் குட்டி முன் எனக்கு ஒரேய அசிங்கமாக போய்விட்டது “ என்றான்…யுவராஜ் அவனை புரியாது பார்த்தவன்.
யுவராஜ் “ தனுஜ் நினக்கு பிராந்தோ (உனக்கு பைத்தியமா) என்ன உளறி கொண்டு இருக்க…என்ன வேலை எந்த பெண் தெளிவாக சொல்லு “ என்றான்…தனுஜ் ராதிகா வந்ததையும் அவள் பேசியதையும் சொன்னான்
யுவராஜ் இவளுக்கு மட்டும் கொழுப்பு அடங்வே அடங்காது என்ன பேச்சு எல்லாம் பேசி இருக்கிறாள்…அதுவும் நான் ஜட்டியோடு நிற்பது வரை…ஆரபிக்கு அப்படியே ஆப்போசிட் தான் இவள் என நினைத்தவன்.
யுவராஜ் “ உண்மையில் நீ ஒரு முட்டாள் தான் அறிவு இருக்கா உனக்கு…நான் உன் கிட்ட ஏதும் சொன்னேனா!. அவளா உனக்கு பாஸ் ஒரு சின்ன பெண்ணு… உன்னை எப்படி முட்டாளாக்கி இருக்கிறாள் என்று பாரு.
உன் படிப்பு என்ன அவள் படிப்பு என்ன அதை கூட யோசிக்க மாட்டாயா? படிப்பை விடு நானும் பையுவும் பெண் பிஏ வைத்து இருப்பதை நீ பார்த்து இருக்கிறாயா? அவங்க திறமை இல்லாதவங்க இல்லை.
பட் அதற்க்கு பிறகு அவங்க உயிரோடு இருக்க மாட்டாங்க அது ஏன் என்றும் உனக்கு தெரியும்…பிறகு இவளை கொண்டு காவு கொடுக்க சொல்கிறாயா? இவளை நான் உதவிக்கு அழைத்தது ஹோம் சம்மதமான வேலையில் உதவி செய்ய …
உனக்கும் எனக்கும் ஹோம் பற்றி சரியாக தெரியாது… பையுவுக்கு எதுவுமே பெர்பெக்டாக செய்ய வேணும்…அது உனக்கு நன்றான தெரியும் அதற்க்கு தான் இவளை அழைத்தேன்.
அவள் விளையாட்டு குணம் தெரிந்தும் நீ அவள் கிட்ட ஏமாந்து விட்டு இங்கே வந்து …விருதா( கிழவி) போல பிலாகானமா( பிலாக்கணமா ) வைக்கிற அதுவும் அவள் ஜட்டி வரை பேசுவதை கேட்டு கொண்டு இருக்க…
மரியாதையாக போய் விடு என் வாய்யில் பிறகு வேற மாதிரியாக வந்து விடும் …நீ போய் அவளை அனுப்பு இன்று அவளுக்கு கொடுக்கும் பரிசில் அடங்கி இருப்பாள் “என்றான்.
தனுஜ் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் ராதிகாவை அழைக்க போனான்…
அவனுக்கும் சரி யுவராஜ்க்கும் சரி ராதிகாவை பற்றி… சரியாக தெரியவில்லை தனுஜ் கெத்தாக வந்து.
தனுஜ் “ எக்ஸ்க்யூஸ் மீ நியூ பிஏ மேடம் உங்களை பாஸ் அழைக்கிறார்.. .பீளிஸ் உள்ளே போங்கள்” என்று… போலி பணிவு காட்டி சொன்னான் ராதிகா என்ன பயபுள்ள பேச்சே சரியில்லை.
உள்ளே போகும் போது மூஞ்சை தொங்க போட்டு விட்டு போனான்…இப்போ நக்கலாக வேற சிரிக்கிறான்… என்னவாக இருக்கும் என யோசித்தவாறே கதவை தட்டி விட்டு உள்ளே போனாள்.
மலர் பூக்கும்…
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page