About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம் 13
மதிய உணவிற்கு வந்தவன் பிரகாஷ் மற்றும் வேணியை பார்த்து சிறிது நேரம் அவர்களுடன் பேசி விட்டு வெளியே சென்ற சுபி கொஞ்சம் நேரத்திற்கு முதல் தான் வந்தான் .
தாய் மற்றும் தந்தையின் முகமோ சரியில்லாது இருக்கவே "தாயிடம் என்னமா? "எனக் கேட்க ,அவரோ பிரகாஷ் ,வேணி வந்தது முதல் நடந்தவற்றை கூறினார்.
"நீங்க என்ன நினைக்கிறீங்க,? எனக் கேட்க ?,சகஸ்தாவ நல்லா பார்த்துப்பாங்க ,அவளும் ஒருநாளும் அவங்கப் பற்றி குறை சொன்னதில்லையே,
"அந்த தம்பியும் ,புடிச்சி தான் கேட்டிருக்கார் போல,ஆனா அத விட என் பொண்ணு விருப்பம் தான் முக்கியம் அவ எவ்வளோ கஷ்டப் பட்டானு தெரியும் தானேடா!!!!!"என்றார் சாருமதி.
அப்போது தான் சகஸ்தாவின் அலைபேசிச் சத்தம் வர,அதை ஏற்றிருந்தான் சுபி.
இரவுணவு அனைவருக்கும் அமைதியாகவே கழிய ,தன் அறைக்கு வந்த சகஸ்தாவோ,சிந்தனையுடனே தூங்க, ரிஷியோ அவள் புகைப்படத்தைத் தான் வருடியபடி இருந்தான்.
அவன் கண்ணிலோ, வலி ஏமாற்றம் தன் காதலை அவள் புரிந்து கொள்ள வில்லை என்ற ஆதங்கம்.
சிறிது நேரத்தில் தாய் தந்தையை பார்த்து விட்டு வந்தவன் ,தனதறையில் இருந்து வெளியே இருளை வெறித்தான். பின் பெருமூச்சுடன் தூங்கியும் போனான்.
மறு நாள் காலை அழகாகப் புலர்ந்தது, தாய் தந்தையுடன் காலை உணவை முடித்தவன் அவர்கள் திருகோணமலை செல்லத் தயாராக,அவர்களை வழியனுப்பி விட்டு,முடிக்கப்படாது இருந்த சில ரிசாட் வேலைகளை பார்வையிட்டு,அதற்கான அறிவுருத்தல்களைக் கொடுத்து விட்டு மட்டக்களப்பிற்கு பயணமானான் ரிஷி.
சகஸ்தாவின் வீட்டிலோ ,தந்தை அலுவலகம் செல்ல, தாய்க்கு சமையலில் உதவியபடி நின்றாள் சகஸ்தா நேரமும் மதிய வேளையை நெருங்க,
தயாராகி வந்த சுபி,"அம்மா ப்ரண்ட்ஸோட வெளிய போரன் அங்கே சாப்பிடுறன்" என்றான்.
சாருமதியோ சிந்தனை வயப்பட்டவராக இருக்க.... "உன்ன எத்தனை தடவை சொல்லி இருக்கேன் வெளியே சாப்பிடக்கூடாதுனு" என சகஸ்தா சுபியின் முடியை கலைக்க,
அவள் கையில் தட்டி விட்டவன் அவளைப் பார்த்தபடி அவளோடு தணகிக் கொண்டே வெளியேறினான்.
சுபிட்ஷன் வந்து நின்றது என்னவோ, மட்டக்களப்பில் பிரபல்யமான கிரிபோஜன் ஹோட்டலில் முன் தான்.
உள்ளே நுழைந்தவனை கண்ட ரிஷி கையசைத்தான். ரிஷியும் பன்னிரண்டு முப்பது மணி அளவில் ரேத்திற்கே வந்தவன் சுபியை தன் முன் அமரச் சொல்ல அவனும் அமர்ந்தான்.
கம்பீரமான றிஷியின் தோற்றம் ஸ்வீட்ஷனை மிகவும் கவர்ந்தது. "ம்ம் இனி பேசினா தான் தெரியும் எனது தன்னூள் எண்ணியபடி இருக்க....
குரலைச் செருமிய ரிஷி" என்ன சாப்பிடுற என சுபீட்ஷனிடம் கேட்க...... றிஷி தனக்கான உணவை ஆடர் செய்து விட்டு சுபியைப் பார்க்க, சுபியும் தனக்கு வேண்டிய உணவினை ஆர்டர் கொடுத்து விட்டு உதவுக்காக காத்திருந்தனர்.
இலகுவாக இருவரும் பேசப் பேச சுபிக்கு றிஷியை மிகவும் பிடித்து விட்டது." சாஸ்தாவுக்கு பொருத்தமா இருப்பான் என எண்ணிக் கொண்டான்.
பேச்சுத் திசை மாறி "சாஸ்தாவின் நிறுத்தப்பட்ட திருமணத்தில் வந்து நின்றது. சுபீட்ஷனும் அதனைப் பற்றி சொல்ல தொடங்கினான், கூர்மையாக அவனையே பார்த்திருந்தான் ரிஷி.
சீலன் மற்றும் சாருமதியினால் பேசி நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளை தான் தரணி இருப்திஎட்டு வயது இருக்கும், தூரத்து சொந்தமும் கூட நுண்கடன் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறான்.
மாமாங்க திருவிழாவில் சாருமதியுடன் துருவுதுருவென திரியும் சகஸ்தா தரணியின் தாயின் கண்ணில் விழுந்தாள் யார் நீ விசாரிக்க சீலனின் மகள் எனத் தெரிய வரவே இதோ பேசி திருமணம் வரை வந்துவிட்டது.
சகஸ்தாவோடு அலைபேசியில் பேசத் தொட்ங்கினான் தரணி அச் சமயம் அவன் பேச்சு எல்லை தாண்ட முற்படும் போதெல்லாம் ஏதேதோ பேசி அப் பேச்சுக்களை தவிர்த்து வந்தாள் சகஸ்தா.
அவளும் அப்போது தான் கல்லூயியில் இரண்டாம் வரும் படித்துக் கொண்டிருந்தாள்.
வாரத்தில் ஒருமுறை அலைபேசியால் அழைக்கும் தரணி , சிறிது நாளில் வாரம் மாதமாக மாறியது,
தரணியின் பிறந்தநாள் அன்று , காலையில் இருந்து வாழ்த்துச் சொல்ல அழைத்தாள் சகஸ்தா அலைபேசி அனைக்கப்பட்டிருந்தது. அழைத்துப் பார்த்து விட்டு வாழ்த்தைச் சொல்லி குறுச்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு தனது வேலையைப பார்க்கத் தொடங்கினாள்.
அன்று மாலை சாருமதியும்,சுபீட்ஷனும் தரணியின் வீட்டிற்கு செல்ல, அவனும் அங்கு தான் இருந்தான் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை கொடுத்துவிட்டு சமந்தி நான்கு மாதம் கல்யாணம் பேச்சு வந்து வாரமாவது என்ன மாதிரி என்றார் சாருமதி ஓம் சம்மந்தி வார வியாழன் ஆயிட்ட நாள் குறிப்போம் என்றால் அவரும்.
வீட்டுக்கு வந்ததும் சுபிட்ஷன், "ம்மா இனிமேல் அங்கே நான் வரமாட்டேன், ரூம்ல தானே இருந்தான் என்னோட பேசினா என்ன எனக் கேட்க......
சாருவுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை......
சகஸ்தாவிற்கும் மனதில் சஞ்சலம், அடிக்கடி பேசுபவன் திருமண நாள் நிச்சயிருத்த பின், அடியோடு பேசுவதில்லை ,
"சுபி....சகஸ்தாக்கா அத்தானோட வெளில போறதா?? நேற்று பாசிக்குடால கண்ட நான் என நண்பன் ஒருவன் கேட்க,.....
சுபியும் யோசனையோடு ,இல்லை என்றான், சுபியும் தந்தையிடம் தயக்கத்துடன் இதனைச் சொல்ல, அவரோ வேற யாரோவா இருக்கும் என்றார்.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அன்று சகஸ்தாவிற்கு அழைப்பெடுத்த தரணி, நண்பர்களுக்கு பார்ட் கொடுக்கவென மாலை வேளை சகஸ்தாவையும் அழைத்தான்.
அவளோ மறுக்க பின் சீலனிடம் பேசிய தரணி "மாமா நேரத்துக்கே வந்துடலாம் ஆஃபிஸ் ஸ்டாப் எல்லாரும் வாராங்க சகஸ்தாவை அழைச்சி போகவா?? என கேட்க அவரும் மருமகன் தன்னிடம் அனுமதி கேட்கவே. உச்சி குளிர்ந்தவர்.சகஸ்தாவை சென்று வரச் சொன்னார்.
தரணியோடு செல்ல பிடித்தமே இல்லை ,முச்சக்கர வண்டியில் தான் சென்றாள்.,தரணியும் வந்திருந்தான். சில ஆண்களும் பெண்களும் அங்கு வந்திருந்தனர்.
அந்த ஹோட்டல் ஒருவித ஒவ்வாமையே தந்தது சகஸ்தாவிற்கு . பார்ட்டியும் ஆரம்பமானது,உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. தரணியோடு ஒரு அசௌகரியமான நிலையில் தான் நின்றிருந்தாள் சகஸ்தா.
சிறிது நேரத்தில் மது வகைகள் பயிமாறப்பட டீ ஜே சத்தம் காதைப் பிளந்தது.
ஆண் ,பெண் பேதமின்றி இடையசைத்து ஆடியபடி கையில் மதுக் கோப்பையுடன் நின்றனர்.
அவ்விடமே அவளுக்கு ஒவ்வாமையைத் தர ,அவளுடன் நின்ற தரணி " இங்க இருந்து சாப்பிடு இதோ வாரன்" என்றபடி அங்கிருந்து அகலவே,அவளுக்கு மூச்சு வந்தது.
உணவை கையில் எடுத்தவள் அதனை உண்ணவே இல்லை சுற்றி தனது பார்வையை சுழல விட தன் பார்வை வட்டத்தினுள் வந்தான் தரணி அவன் கையைப் பற்றியபடி நவநாகரீக பெண்ணொருத்தி நின்றிருந்தாள்.
மனம் 13.1
அப்போது அவள் அருகில் அசைவு தெரிய பக்கவாட்டாக திரும்பிப் பார்க்க கையில் மதுக் குவளையுடன் ஒருவன் அவளுடன் உரசியபடி இருக்க,அவள் பதறி எழ அவளை மறித்தபடி நின்றவன்" "ஹேய், பியூட்டி ஜாயின் வித் மீ" அசிங்கமாக பேச துடித்துப் போணவள், தரணியை கண்களால் தேட ..........
தரணியோ " இந்த உலகத்திலே இல்லை ஆஆஆஆஆ அப்படி தான் சொல்லலாம்" அவ நகனவநாகரீக பெண்ணுடன் மிக நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்தான்.
சட்டென அவ் பார்ட்டி ஹாலை விட்டு வெளியே வர அங்கு இருவர் பேசிக் கொண்டிருந்தனர்" தரணிக்கு வந்த வாழ்வைப் பாரத்தியா ??? ஆஃபிஸ்ல ஒன்னு ,இப்போ ஒருத்தி ,ஆளப் பார்தியா???அப்பாவி இவனப் பத்தி தெரியாம வந்து மாட்டிகிட்டா!!!!!
என அவர்கள் பேசப் பேச சகஸ்தாவிற்கு மனமே விட்டுப் போனது.
சற்று நேரத்தில் சகஸ்தாவைத் தேடி அவ்விடம் வந்த தரணி அவளின் அதிர்ந்த முகத்தைப் பார்க்க, அவ்விடம் வந்த மற்றொருவன் " சகஸ்தாவை கண்களால் காட்டி "எல்லாம முடிச்சிருப்பியே, எனக்கொரு சான்ஸ் தாரது "என்றான். சகஸ்தாவை பார்வையாலே துகிலுரிந்தபடி.
தள்ளாடியபடி அவ்விடம் வந்த நவநாகரீக பெண் "டார்லிங்" என தரணியை அணைக்க, அவனும் அவளை அணைத்தபடி ,
மது போதை"உனக்கில்லாததா மச்சான் என்றான்.மிரட்சியுடன் நின்ற சகஸ்தாவை நண்பணிடம் கண்காட்டி விட்டு அப் பெண்ணுடன் ஹோட்டலின் அறையொன்றினுள் நுழைந்து கொண்டான்.
விக்கித்து நின்ற சகஸ்தாவின் தோளில் அவன் கை வைக்க,அவனைத் தள்ளிவிட்டவள் அங்கிருந்து விரைந்து வெளியேறி, ஹோட்டல் வாசலிற்கு வந்தவள் " தனது தம்பிக்கு அழைப்பெடுத்தவள் தான் நிற்கும் ஹோட்டலை சொல்லி விரைந்து வரச் சொல்ல, அவளின் குரலே ஏதோ சரியில்லை என உணர்ந்த சுபியும் சில நிமிடத்தில் அவ்விடம் வந்தான்.
சகஸ்தாவோ ஹோட்டலின் வாசலிலே கண் கலங்க நின்றிருந்தாள்.
சுபியும் எதுவும் கேட்காது சகஸ்தாவை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அறைக்குள் நுழைந்தவள்,அழுது தீர்த்தாள்.தரணியிடம் இருந்து அழைப்பு வரவே அலைபேசியை அனைத்துப் போட்டவள் விம்மி வெடித்து அழுதாள். எவ்வளவு பெரிய துரோகம்.அவளால் இவ் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, கடந்து வரவும் முடியவில்லை.
நேரமும் கடந்தது சாருமதி சகஸ்தாவின் அறையைத் தட்டி " சாப்பிடியா சகஸ்தா" எனக் கேட்க அவள் எதுவுமே பேசவில்லை ,தூங்கிவிட்டாள் என எண்ணியவரும் தூங்கச் சென்றார்.
"ஹலோ சாருமதி வீட்டுக்கு கொஞ்சம் வந்துட்டு போங்க" என அலைபேசியில் பேசினார், தரணியின் தாய்.
" ஏங்க சம்பந்தி கால் பண்ணினாங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வாருவோம் என்றார் சாருமதி. சுபிய அழைச்சிடு போ, நான் வர பிந்தும் என்றார் சீலன், மகனை அழைத்துக் கொண்டு சென்றார் சாருமதி.
அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது." தரணி சொல்றான் உங்க பொண்ணுக்கு காலேஜ்ல லவ்வாமே போட்டோ இல்லாம போட்டிருக்காளாம் என மேலும் சாஸ்தாவை பற்றி பேச.....
அத்தாய் உள்ள துடித்து போனது," என்ன சம்பந்தி இது என் பொண்ணு அப்படி எல்லாம் இல்ல" என சாருமதி சொல்ல....
"அதல்லாம் வயசுக் கோளாறு சாரு அப்படின்னா சீதனத்தை கொஞ்சம் கூட பேசுவோம் என்றார் தரணியின் தாய் எந்தவித சங்கோஜமும் இன்றி.
இதில் கோபமடைந்த சுபியோ.... "அப்போ போட்டோவ காட்டுங்க என்றான்!!! "என்னடா நீ இப்படி பேசுர" என சாருமதி அழுகையுடன் சொல்ல.....
சுபியும் தரணியிடம் போட்டோவை காட்டும்படி முரண்டு பிடிக்க, தரணியோ என் போன்ல இருந்து அழிஞ்சு போயிட்டு என்றான் தோள்களை உலுக்கியபடி.
சுபிக்கோ கோபம் உச்சகட்டம்,"ம்மா வாங்க போவோம்"என தாயையும் இழுத்துக் கொண்டு சென்றான்.
அப்படியே திருமணமும் நின்றது. அறைக்குள் அடைந்தபடியே இருந்தாள் சகஸ்தா,
வெளியே லவ்வாலான் திருமணம் நின்றது என பேசப்பட்டது. அவளால் இதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை
இப்போதுதான் ஓரளவு தெளிவடைந்துள்ளாள். அவளை மீட்க ரொம்பவே கஷ்டப்பட்டனர். பின்னர் தான் தெரிய வந்தது தரணிக்கு அலுவலகத்தில் தனது வயதுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வயது கூடிய பெண்ணுடன் தொடர்பு இருப்பதும் அக்கம் பக்கத்தில் உட்பட அனைவரும் பேசுவதை கேட்டனர்....
இப்போது நிம்மதி தான், இப்படி ஒரு கயவனை தன் பொண்ணுக்கு திருமணம் செய்யவிருந்ததை எண்ணி
அதன்பின் விட்டபடிப்பை தொடர்ந்தவள், படிப்பு முடிவடைந்ததும் இன்டர்ன்ஷிப் வந்தது என அனைத்தையும் றிஷியிடம் சுபி சொல்லி முடித்தான்.
ஒரு பெருமூச்சு மட்டுமே றிஷியிடம் "அக்காவ பிடிச்சு தான் கேட்டீங்களா???என சுபி கேட்க
"ம்ம்.... என்றவன் சகஸ்தா மீதான சுபியின் பாசத்தையும் புரிந்து கொண்டான்.
இருவரும் உணவை உண்டு விட்டு ஹோட்டலில் இருந்து வெளியேறினர்,சுபியும் ரிஷியிடமிருந்து விடை பெற்றான்.
மனதில் நின்றவள் 13
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க
Latest Post: சித்திரையில் நீ மார்கழி..!! - (Comment Thread) Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page