About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நைட் லைஃப் - 12
மித்திரனும் ராகவ்வும் மந்திரிகள் வீட்டிற்கு சென்று ஒவ்வொருவராய் விசாரணை செய்தார்கள். அவர்களை விசாரணை செய்ததை வைத்து அவர்கள் கணினிக்கு ரூட்கிட்ஸ் என்று சொல்லக் கூடிய மால்வேர் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிய வர, கூடவே அவர்களின் தனிப்பட்ட விடயங்களும் திருடு போய் இருப்பதாக கூறினார்கள். இதை எல்லாம் குறித்துக் கொண்ட இருவரும் இன்று ஆருத்ரா உடன் முதலமைச்சரை சந்திக்க சென்றார்கள். காரை ஒட்டிக் கொண்டு இருந்த ராகவ், “ஆரு, ரூட்கிட்ஸ் வைரஸ்ன்னா என்ன? கூகிள்ல பார்த்த வரைக்கும் டேட்டா எடுக்குற வைரஸ் தான் இருக்கு.. அது என்ன பண்ணும்ன்னு தெளிவா சொல்றியா?” என்று கேட்க, “ரூட்கிட்ஸ்னா உங்க கம்ப்யூட்டர்ர நான் அப்படியே என்னோட சிஸ்டம்ல பாக்கலாம்.. உங்களுக்கே தெரியாம.. இன்னும் தெளிவா சொல்லணும்னா நீங்க உங்க சிஸ்டம் ஆன் பண்ணதுள்ள இருந்து அதுல என்ன எல்லாம் பாக்குறிங்க பண்றீங்கன்னு கூடவே இருந்து பார்த்த மாதிரி எனக்கு தெரியும். மொத்த டேட்டாவும் எனக்கு வந்துரும்.” என்று கூற மித்திரனும் ராகவும் யோசனை உடன் தலையை அசைத்தார்கள். மித்திரன் கொடுத்த ஃபைல்லை படித்துக் கொண்டே வந்தாள் ஆரு.
“மித்து, இந்த ரிப்போர்ட் உங்களுக்கு யாரு ரெடி பண்ணி குடுத்தா?” என கேட்க, “சைபர் டீம்ல இருந்து கொடுத்தாங்க, அவங்க இதுக்கு முன்ன ஒரு ஹேக்கர் வச்சி பாத்தாங்களாம். அவரால இவ்ளோ தான் கண்டு புடிக்க முடிஞ்சிதுன்னு சொல்லிட்டாராம்.. முதல்ல லோக்கல்ல இவங்களே இப்படி பண்ணி இருக்காங்க.. அதுக்கு அப்பறம் தான் எங்க கிட்ட கேஸ் வந்து இருக்கு ஏன் திடீர்ன்னு இப்படி கேக்குற?” என யோசனையாக கேட்க, “இல்ல ரூட்கிட்ஸ் மால்வேர் சிஸ்டம்ல இருக்குறதே தெரியாது.. சில சாப்ட்வேர் போட்டு பாத்தா தான் தெரியும் எத வச்சி இந்த மால்வேர் இருக்குன்னு சொல்றாங்கன்னு தெரியலை.. அதே போல ரூட்கிட்ஸ் சிஸ்டம்ம பிரீஸ் பண்ணாது.. அதுக்கும் சிஸ்டம் பிரீஸ் ஆகுரதுக்கும் சம்பந்தமே இல்ல.. பிரீஸ் ஆச்சுன்னா அதுக்கு வேற வைரஸ் இருக்கு அதை பத்தி எதுவுமே சொல்லலையே அதான் கேட்டேன்.” என்று கூறிட ராகவ்வும் மித்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னிருக்கையில் ஆரு அமர்ந்து இருந்ததனால் முன்னாள் அவர்களை அவள் கவனிக்கவில்லை.
“சரி மா இப்போ சி.எம் வீட்டுக்கு போறோம்ல அங்க உன்னோட சந்தேகத்த கிளியர் பண்ணிக்க.. எல்லாம் ஒரே பட்டர்ன்ல தான் நடந்து இருக்கு.” என்றான் ராகவ்.
“நான் மினிஸ்டர் வீட்டுக்கும் வரேன்னு சொன்னேன் அவரு தான் கேக்கவே இல்ல ண்ணா” என மித்துவை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டாள் ஆரு. மித்திரன் அவளை பார்த்து லேசாய் சிரித்துக் கொண்டான்.
“என்ன பண்ணாலும் இவ அழகா இருக்காளே.. ச்சே.. எப்போ டா கல்யாணம் ஆகும்ன்னு இருக்கு..” என்று பின்னே இருக்கும் ஆருவை கண்ணாடி வழியே பார்த்தபடி மித்திரன் நினைக்க ராகவ் கண்ணாடியை சரி செய்தான். அதில் அவனை முறைத்தான் மித்திரன்.
சி.எம் வீட்டிற்கு வந்ததும் முதற்கட்ட சோதனைக்கு பின் அவர்களை வரவேப்பரையில் அமர கூறினார்கள். சிதம்பரம் வந்ததுமே மூவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
“சார் உங்களுக்கு முதல்ல என்ன மாதிரியான மிரட்டல் வந்துச்சுன்னு சொல்றிங்களா?” என்று மித்திரன் கேக்க அதனை எல்லாம் குறித்துக் கொள்ள ராகவ் தயாராக இருந்தான்.
“என்னோட லேப்டாப்ல என் சொத்து விவரம் எல்லாம் இருக்கு.. உங்க கிட்ட சொல்ல என்ன, வருமான வரி கட்டுற கணக்கு என்னோட மத்த பிசினஸ் கணக்கு எல்லாம் அதுல தான் இருக்கு. அத எல்லாம் எடுத்து வச்சிட்டு நியூஸ்ல போட்டுருவேன் அப்படி இப்படின்னு மிரட்டுறான். என் அரசியல் மொத்தமும் இதுல தான் இருக்கு.. இது வெளிய வந்தா திரும்ப என்னால சி.எம் ஆக முடியாது.” என கூற, “வேற ஏதாவது மிரட்டல் வந்துச்சா சார்? கொலை மிரட்டல் அந்த மாதிரி ஏதாவது?” என ராகவ் கேக்க, “ஹான் வந்துச்சு.. முதல்ல பணம் கேட்டு மிரட்டுனான் அப்பறம் கொன்னுருவேன் அப்படி இப்படின்னு சொன்னான்” என்றார் சிதம்பரம்.
“கால் பண்ணி மிரட்டுனானா? அந்த நம்பர் இருக்கா உங்க கிட்ட?” என மித்திரன் கேட்டிட, “இல்ல எனக்கு மெயில் வந்துச்சு. அதுல நூறு கோடி கணக்குல பணம் கேட்டு இருந்தான்” என்றார்.
“நீங்க குடுத்திங்களா?” என ராகவ் கேக்க, “இல்ல” என்க, “அதுக்கு அப்பறம் உங்களை மிரட்டுனானா? என்ன சொன்னான்?” என கேட்டான் மித்திரன். ஆழமாய் மூச்சை இழுத்து விட்ட சிதம்பரம், “பணத்த தரலன்னா மீடியாக்கு போகும் இல்லன்னா கொல்லுவேன்னு சொல்லி இருந்தான். அதுக்கு அப்பறம் அவன் கிட்ட இருந்து மெயில் வரல” என்றார். ராகவ்வும் மித்திரனும் யோசனை உடன் அவரை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
“சார் எது எது ஹேக் ஆச்சு, ஹேக் ஆன போன், லேப்டாப் மத்த எல்லாத்தையும் குடுக்குரிங்களா? எங்க டீம்ல இருக்குறவங்க என்ன ஆச்சுன்னு பாத்து சொல்லுவாங்க.” என மித்திரன் கூறிட, உடனே, “அதான் ரெண்டு வாரத்துக்கு முன்னவே சைபர் டீம்ல இருந்து ஒரு தம்பி வந்து பாத்துட்டு போச்சே. திரும்ப எதுக்கு?” என கேட்டார்.
“இவங்களால ஏதாவது கண்டு புடிக்க முடியுமான்னு பாக்க தான் சார்.” என ராகவ் கூற, “சார் நான் அப்படியே ஆண்டி வைரஸ் போட்டு தந்துருவேன், அதுக்காக தான் என்ன இவங்க இங்க கூட்டிட்டு வந்து இருக்காங்க.” என்றாள் ஆரு. அதில் சம்மதமாய் தலை அசைத்த சிதம்பரம் அவரின் அசிஸ்டன்ட்டிடம் கண்ண காட்ட மூன்று போன் இரண்டு லேப்டாப் ஒரு டேப்லட் என அனைத்தையும் எடுத்து வந்தார்.
மூன்று பேரும் ஆருத்ரா செய்வதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். கொடுத்த அனைத்தையும் வைத்து ஆருத்ரா அவளின் லேப்டாப்பில் ரிப்போர்ட் எழுதிக் கொண்டே கூடவே சி.எம் பொருட்களில் என்ன ஆனது என்று பார்த்துக் கொண்டு இருந்தாள். அவற்றை அனைத்தையும் பார்த்து முடிக்கவே அவளுக்கு மூன்று மணி நேரம் ஆனது. வேலையை முடித்த ஆருத்ரா அவர்களை பார்த்து, “ஏற்கனவே சொன்னது போல தான் இருக்கு. வேற எதுவும் ஆகலை. அப்பறம் சார் ஆண்டி வைரஸ் ஏற்கனவே போட்டு இருந்ததுனால நான் இப்போ போடலை.” என்று சிதம்பரத்தை பார்த்து கூறினாள்.
அவர்களை சோதிக்க தான் சிதம்பரம் ஆண்டி வைரஸ் போடப்பட்டு இருப்பதை பற்றி கூறவே இல்லை. “இத பண்ணது யாருன்னு கண்டு புடிக்க முடியுமாமா?” என்று சிதம்பரம் கேக்க, “முயற்சி பண்ணி பாக்கணும் சார், மெயில் வந்த ஐபி அட்ரஸ் சரியான இடத்த காட்டலை.. ஆனா உங்களுக்கு ரெண்டு முறை இதே மெயில்ல இருந்து தான் வந்து இருக்கு அதனால ஒரு செக்யூரிட்டி ஒன்னு கிரியேட் பண்ணி இருக்கேன்.. திரும்ப இதே மெயில்ல இருந்து உங்களுக்கு ஏதாவது வந்துச்சுன்னா கண்டிப்பா அப்போ கண்டு புடிக்கலாம் அந்த மெயில் ஐடிக்கு மட்டும் ட்ரக்கர் மாதிரி ஒன்னு செட் பண்ணி இருக்கேன்” என்று கூறிட, “பரவாயில்லையே புத்திசாலி பொண்ணா இருக்க..” என்று பாராட்டினார் சிதம்பரம். அதில் லேசாய் புன்னகைத்தாள் ஆருத்ரா.
“ஓகே சார் நாங்க கிளம்புறோம், உங்களுக்கு மெயில் வந்தா உடனே எங்களுக்கு சொல்லுங்க” என்று கூறி மித்திரன் எழ மற்ற இருவரும் எழுந்தார்கள்.
“தம்பி ஒரு நிமிஷம்,” என சிதம்பரம் அமர்ந்து இருந்தபடியே கூறிட மூவரும் அவரை கேள்வியாக பார்த்தார்கள்.
“ஆளு யாருன்னு கண்டு புடிச்சா முதல்ல என் கிட்ட சொல்லுங்க.. எனக்கும் என் கட்சி ஆளுங்களுக்கும் ரொம்ப தொல்லை குடுத்துட்டான்” என்று கோவமாய் அவர் கூறிட, மித்திரன் லேசாக புன்னகைத்து, “கண்டிப்பா சார்” என்றான்.
அதன் பின் மூவரும் அங்கு இருந்து கிளம்பி வெளியே வந்தார்கள். காரில் ஏறிக் கொண்ட பின் அந்த தெருவை தாண்டும் வரை ஆரு வாயை திறக்கவே இல்லை. அதன் பின் தான் இழுத்து வைத்த மூச்சை வெளியிட்டாள்.
“இப்போ புரியுது மித்து ஏன் வர வேணாம்னு சொன்னிங்கன்னு.. என்னமோ நான் தீவிரவாதி மாதிரி அவரு குறுகுறுன்னு பாக்குறாரு. இதுல வேற கடசில உங்களையே மிரட்டுற மாதிரி ஆள கண்டு புடிச்சதும் அவரு கிட்ட சொல்ல சொல்றாரு. எப்பா” என்று வாயளந்தாள் ஆரு. அதில் இருவருமே லேசாய் சிரித்துக் கொண்டார்கள்.
“சரி உன்னோட ரிப்போர்ட் எனக்கு அனுப்பு ஆரு, நீ என்ன பாத்த சொல்லு” என்று மித்திரன் கேக்க ஆரு கூற ஆரம்பித்தாள்.
“சி.எம் லேப்டாப்ல ஏற்கனவே ஆண்டி வைரஸ் போட்டு இருந்ததுனால ரூட்கிட்ஸ் இருந்துச்சா இல்லையான்னு தெரியலை. ஆனா அவருக்கு வந்த ஈ-மெயில் ஒரு வோர்ம் (worm) அதாவது வைரஸ்க்கும் வோர்ம்ஸ்க்கும் நெறையா வித்தியாசம் இருக்கு. வைரஸ் எல்லாம் யூஸர்ஸ் எவ்வளவு யூஸ் பண்றாங்களோ அந்த அளவு அது பரவும், வோர்ம்ஸ் தானாவே பரவும். ரூட்கிட்ஸ் வைரஸ் ஆர் வோர்ம்ன்னு சொல்ல முடியாது அது மால்வேர். அது அவரோட போன்லியோ இல்ல லேப்டாப்லையோ இருந்துதான்னு தெரியலை. ஆனா அந்த மெயில் வச்சி பாத்தப்போ அது ஒரு வோர்ம்ன்னு தெரிஞ்சிது” என்று கூறிட இருவரும் அவளை கேள்வியாக பார்த்தார்கள்.
“அது என்ன மாதிரியான வோர்ம்ன்னு தெரியுமா?” என மித்து கேக்க, “ம்ம் sasserன்னு ஒரு வோர்ம், இது கூட ஒரு முறை விண்டோஸ் சிஸ்டம் எல்லாத்தையும் அப்பெக்ட் பண்ணுச்சு. அதே போல தான் இவரோட லேப்டாப்க்கும் நடந்து இருக்கு. மத்தபடி பழைய ரிப்போர்ட் வச்சி பாத்தா ரூட்கிட்ஸ் மூலமா டேட்டா எடுத்து இருக்காங்கன்னு தோணுது. அப்போ மத்த மினிஸ்டர்ஸ்க்கும் இப்படி தான் நடந்து இருக்கும் போல” என்று கூறிட மித்திரன் ராகவ் மனதில் வேறு சில கணக்குகள் ஓடியது. ஆருத்ரா அமைதியாய் அவர்களை பார்த்துக் கொண்டு வந்தாள்.
ஆருத்ராவை ஆல்வின் ஆபிசில் இறக்கி விடும் வரையிலும் யாருமே பேசிக் கொள்ளவில்லை. ஆடவர்கள் இருவரும் யோசனையில் இருக்க அவர்களை தொந்தரவு செய்யாமல் மித்திரனை சைட் அடித்துக் கொண்டு வந்தாள்.
ஆல்வின் ஆபிசில் அவளை இறக்கி விட அவர்களிடம் இருந்து விடைப்பெற்று சென்றாள் ஆரு. ராகவ் காரை ஓட்ட மித்திரன் தீவிர சிந்தனையிலே இருந்தான். அவனை பார்த்த ராகவ், “நான் நினைக்குறது தான் நீயும் நினைக்குரியா?” என்று கேக்க, அவனை பார்த்து இதழை ஒரு பக்கமாய் விரித்தவன் தலையை திருப்பிக் கொண்டான்.
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page