All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 11

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

நைட் லைஃப் - 11

காலையிலே தமிழ்நாட்டு முதலமைச்சர் வீட்டில் கட்சி தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள் என பல பேர் அங்கு கூட்டம் கூடி இருந்தார்கள். வீட்டின் பின் பக்கம் இருக்கும் கெஸ்ட் ஹவுசில் அனைவரும் முதலமைச்சர் சிதம்பரத்திர்காக காத்திருக்க சற்று தாமதமாகவே அவர் வந்தார். அவர் வந்ததும் அனைவரும் மரியாதையாக எழுந்து வணக்கம் கூறிட பெரிதாய் இருக்கும் சோபாவில் அமர்ந்தார். 

 

அனைவரையும் ஒரு முறை பார்த்து, “எதுக்காக கூப்ட்டேன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். நம்ம எல்லாருக்கும் இப்ப பிரச்சனை தான் நடந்துட்டு இருக்கு. எல்லாரும் கவனமா இருக்க சொல்லி தான் கூப்ட்டேன்.. சூழ்நிலை கை மீறி போகுது.” என்று கூறிட, ஒரு சட்டமன்ற உறுப்பினர், “ஐயா, இந்த போலீஸ் எப்ப இவனுங்கள கண்டு புடிப்பாங்க? என்ன பத்தி மொத்த விசயத்தையும் கூடவே இருந்து பாத்தவன் மாதிரி புட்டு புட்டு வச்சி இருக்கான் எவனோ.. கேக்கவே எனக்கு அல்லு விடுது.. என் பொண்டாட்டி கிட்ட கூட இத பத்தி சொல்ல முடியல.. எனக்கு எந்த எந்த ஊருல சின்ன வீடு இருக்குன்னு எல்லாம் அவன் சொல்லி என்ன மிரட்டி வச்சி இருக்கான்.” என பதட்டத்துடன் கூறினார்.

 

“அத விடுங்க ஐயா, ரியல் எஸ்டேட்ன்னு நான் பண்ண மோசடி கணக்க எல்லாம் எனக்கே தெரியாம என் கிட்ட இருந்து எடுத்து இப்ப அத வச்சி என்ன மிரட்டிட்டு இருக்கான்” என இன்னொருவர் புகார் கூறினார். அவரை தொடர்ந்து அனைவரும் அவர்களுக்கு நடந்த பிரச்சனையை பற்றி கூறிக் கொண்டு இருந்தார்கள். சிதம்பரம் அமைதியாய் அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தார். அவருக்கே எவனோ அழைத்து அவரின் சொத்து விவரங்களை கூறி மிரட்டல் விடும் பொழுது எவ்வாறு இவர்களுக்கு தீர்வு சொல்லுவார்.

 

“இங்க பாருங்க எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு.. நான் டெல்லி போய் இப்ப தான் பேசிட்டு வந்தேன்.. சீக்கிரமே ஹேக் பண்ணது யாரு, எப்படி விஷயம் போச்சுன்னு கண்டு புடிச்சிடுவாங்க. எல்லாம் அது வரை ஒழுங்கா இருங்க.. ஏற்கனவே எதிர்கட்சிகாரன் எப்போ டா ஏதாவது கிடைக்கும் நம்மள அசிங்கப்படுத்தலாம்ன்னு இருக்கான்.. அதுக்கு நம்மலே இடம் குடுக்க கூடாது. விசாரிக்க அதிகாரிங்க வருவாங்க.. என்ன ஆச்சுன்னு தெளிவா அவங்க கிட்ட சொல்லுங்க. ஆள் யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் மிச்சத பாத்துக்கலாம்” என்று சிதம்பரம் கூறிட அனைவரும் சம்மதமாய் தலையசைத்தார்கள். 

 

“ஐயா எனக்கு என்னமோ எதிர்க்கட்சி ஆளுங்க தான் இப்படி பண்ணி இருப்பானோன்னு தோணுது.” என்று ஒருவர் பேச்சை ஆரம்பிக்க அங்கு இருப்பவர்கள் அதனை விவாதமாய் மாற்றினார்கள். சிதம்பரம் அமைதியாய் யோசனையில் மூழ்கி இருந்தார். 

 

சில நிமிடங்கள் கழித்து, “நிறுத்துங்க” என்று சிதம்பரம் சத்தமாய் கூற அனைவரும் அமைதியானார்கள்.

 

“நமக்குள்ள பேசி ஒன்னும் ஆக போறது இல்ல, எல்லாரும் ரொம்ப கவனமா இருங்க, அவசரப்பட்டு முட்டாள் தனமான எதுவும் பண்ணாதீங்க.. அப்பறம் ஐயா நொய்யான்னு வந்து நின்னா நான் ஒன்னும் பண்ண மாட்டேன்..” என அவர் மிரட்டலாக கூற ஒட்டுமொத்த பேரும் அமைதியானார்கள். 

 

“முதல்ல யாருன்னு தெரியட்டும்.. அப்பறம் இருக்கு, நம்ம ஆளுங்களை மட்டும் அவன் மிரட்டி இருக்கான்.. கண்டிப்பா கூடிய சீக்கிரமே சிக்குவான் அவனுக்கு அப்போ இருக்கு” என்று கண்கள் சிவக்க கோபத்துடன் கூறினார் சிதம்பரம். அவரின் கோவத்தை அறிந்தவர்கள் அப்படியே அமைதியானார்கள்.

 

 

நேரம் அப்படியே கடக்க மதிய உணவு இடைவேளை போது ஆருத்ரா காப்பி ஷாப் ஒன்றிற்கு வந்தாள். இரண்டு நாட்கள் முன்பு மித்திரன் கூறியது போல் அவளும் சாதனாவும் மற்ற கம்பெனிகளில் சென்று இதே போல் சோதனை செய்து பார்த்தார்கள். அதை பற்றி நேரில் பேச தான் மித்திரனை இங்கு அழைத்திருந்தாள். அவள் வந்த பத்து நிமிடத்தில் மித்திரனும் அங்கு வந்தான். இருவரும் ஓரமாக இருக்கும் கேபின் ஒன்றில் அமர்ந்துக் கொண்டார்கள். 

 

“சொல்லு பொண்டாட்டி.. இந்நேரம் வேலைய கண்டிப்பா முடிச்சி இருப்பியே.. உன் பிரென்ட் இப்ப எப்படி இருக்கா?” என அக்கரையாக கேட்டபடியே அவளின் கையை பற்றிக் கொள்ள, “இப்போ நல்லா இருக்கா, வீட்டுல தான் ரெஸ்ட் எடுக்குறா, நீங்க சொன்ன மாதிரியே நானும் சாதுவும் மத்த கம்பெனிக்கு போய் டெஸ்ட் பண்ணி பாத்தோம். ஸ்னப் அப்ல நடந்த மாதிரியே தான் அங்கயும் நடந்து இருக்கு. குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் சர்வர் பிரீஸ் ஆக வச்சி இருக்காங்க. பட் ஒரு விஷயம் வித்தியாசமா நடந்து இருக்கு. சர்வர் பிரீஸ் ஆகுறதுக்கு முன்னவே குறிப்பிட்ட டேட்டா பேஸ்ஸ மட்டும் பப்ளிக்கா வச்சி இருக்காங்க. எப்படி சொல்றது.. குறிப்பிட்ட விசயத்தை மட்டும் கோட் பன்றப்போ பப்ளிக்கா வச்சி இருப்பாங்க. சில வெப்சைட்ஸ் அவங்க பேஜ் யாரு வேன்னாலும் அக்சஸ் பண்ற மாதிரி வச்சி இருப்பாங்க. அது போல பிரீஸ் ஆகுறதுக்கு முன்னாடி அவங்க டேட்டா பேஸ் ஆகி இருக்கு. இது மூலமா திர்டு பார்ட்டி ஆளுங்க யாரு அச்செஸ் பண்ணாலும் டேட்டா பேஸ் பாக்கலாம்.” என்று கூறிட கவனமாய் கேட்டுக் கொண்டு இருந்தான் மித்திரன். 

 

“சோ அப்போ அந்த கம்பெனில இருக்குற யாரோ இதை வேணும்ன்னே பண்ணி இருக்கலாம்ன்னு சொல்ற அப்படி தானே?” என கேட்டான் மித்திரன். அதற்கு மறுப்பாக தலையை அசைத்த ஆரு, “அது உறுதியா சொல்ல முடியலை.. இது அவங்க நெட்வொர்க் புரொடக்ஷன் வீக்கா இல்ல அவங்க கோட் விசிபிளிட்டி கொடுத்ததுனாலியான்னு தெரியலை. அந்த நேரத்துல எந்த அச்செஸ்யும் நடக்கல இது ஒரு விஷயம் தான் குழப்பமா இருக்கு” என்று கூறி தலையில் கை வைத்துக் கொண்டாள். அவளின் கையை பிடித்துக் கொண்ட மித்திரன் அவனை ஆதரவாய் அனைத்து, “ரிலாக்ஸ் விடு ரொம்ப போட்டு நீ பிரஷர் ஆகாத.. இவ்ளோ தூரம் நீயும் உன் பிரென்ட்டும் கண்டு புடிச்சி குடுத்து இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ்..” என்று கூறி அவளின் உச்சந்தலையில் லேசாய் முத்தமிட்டான். 

 

“ஆமா மினிஸ்டர்ஸ்க்கும் இப்படி நடந்து இருக்குள்ள அவங்களை விசாரிக்க போகும் போது நாங்களும் வரட்டுமா? ஏதாவது கிளு கிடைக்குதான்னு பாக்குறோம்.” என ஆரு கேக்க உடனே மறுத்தான் மித்திரன். ஏற்கனவே யுகி நிலையை கேள்விபட்டதும் அவனுக்கு ஆருத்ராவையும் சாதனாவையும் நினைத்து பயமாக இருந்தது. இப்பொழுது இருவரையும் அவன் விசாரிக்க செல்லும் இடத்திற்கு அழைத்து சென்று இவர்களுக்கும் ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்தான். 

 

“இல்ல ஆரு, நீங்க வர வேணாம்.. நாங்க விசாரிச்சிட்டு வந்து சொல்றோம்” என மித்திரன் கூறிட, “அதலாம் முடியாது, அவங்களோட சிஸ்டம் பாத்தா தான் எங்களுக்கு புரியும்.. அதான் நேருல வரோம்ன்னு சொல்றேன்” என பிடிவாதமாய் கூறிட,

 

“சொல்றதை கேளு ஆரு, அது எல்லாம் ரிஸ்க், இதுல உங்க ரெண்டு பேருக்கும் ஆபத்து இருக்கு புரிஞ்சிக்க” என அவளை சமன் செய்ய பார்த்தான். ஆனால் அவளோ கேட்பதாக இல்லை, “சி.எம்க்கும் இப்படி ஆகி இருக்குன்னு சொன்னிங்கல.. அட்லீஸ்ட் அவரு வீட்டுக்கு என்ன மட்டும் கூட்டிட்டு போங்க.. அதான் எனக்கு துணையா நீங்க இருக்கிங்களே.. அப்பறம் என்ன.. கண்டிப்பா மிரட்ட நினைச்சவன் அவரு கிட்ட பெருசா ஏதாவது பண்ணி இருப்பான்.. சோ அங்க மட்டும் என்ன கூட்டிட்டு போங்க.. இந்த கேஸ்ல என்னால முடிஞ்ச ஹெல்ப் உங்களுக்கு நான் பண்றேன்” என்று கெஞ்சலாய் கேட்க அவனால் மறுக்கவும் முடியவில்லை ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. அவனின் தோளில் சாய்ந்துக் கொண்டவள், “மித்து ப்ளீஸ் இந்த ஒரு முறை கூட்டிட்டு போங்க.. அதுக்கு அப்பறம் நான் எந்த விசாரணைக்கும் உங்க கூட வர மாட்டேன்.. இதுக்காக தானே பெர்மிசன் எல்லாம் வாங்கிட்டு வந்திங்க” என்று கேக்க,

 

“அது கம்பெனில விசாரிக்க தான்” என்றிட,

 

“பரவாயில்ல இந்த ஒரு தடவை கூட்டிட்டு போங்க. கண்டிப்பா உங்க கேஸ்க்கு நான் கிளு எடுத்து குடுக்குறேன்” என்றாள்.

 

“ஏற்கனவே எங்களுக்கு ஒரு விசயத்துல சந்தேகமா இருக்கு.. அது கன்பார்ம் ஆக தான் வெயிட் பண்றோம்” என மித்திரன் கூறிட அவனை கேள்வியாக பார்த்தாள் ஆரு.

 

“என்ன விசயம்ன்னு அப்பறம் சொல்றேன்.. இப்போவே நீ போட்டு ரொம்ப குழம்பாத என் கியூட் பொண்டாட்டி” என்று கூறி அவளின் மூக்கை செல்லமாக நிமிண்டினான் மித்திரன். அவர்கள் இருவரும் கேபின் உள்ளே தனியாய் அமர்ந்து இருந்தாலும் அவர்களே அறியாமல் மர்ம நபர் ஒருவன் அவர்களை புகைப்படம் எடுத்து விட்டு சென்றான். 

 

இருவரும் வேலை விடையத்தை பேசி விட்டு அவர்கள் காதல் உலகிற்கு வர கரடியாக ராகவ் அவனுக்கு அழைத்தான்.

 

“இவனுக்கு மட்டும் எப்படி மூக்கு வேர்க்குமோ..” என்று புலம்ப ஆரு அழகாய் சிரித்தாள்.

 

“ஆமா ஏன் நீங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கீங்க?” என்று கேக்க, “காலேஜ்ல ஒண்ணா படிக்குறப்போவே இப்படி தான், அவன் ஸ்டுடென்ட் கவுன்சில் பிரஸிடேன்ட், நான் ஸ்போர்ட்ஸ் பிரஸிடேன்ட், எங்க ரெண்டு பேருக்கும் ஆகவே ஆகாது” என லேசான சிரிப்புடன் கூறிட ஆருவும் சிரித்தாள். 

 

“சரி நான் கிளம்புறேன் ரூம்க்கு போயிட்டு எனக்கு மெச்செஜ் பண்ணு” என மித்திரன் கூற, “ஆமா அப்படியே பாத்துட்டாலும்” என சலித்துக் கொண்டாள். அவளின் கன்னத்தை கில்லி செல்லம் கொஞ்சியவன், “கோச்சிக்காதிங்க பொண்டாட்டி, நம்ம கல்யாணம் நேரத்துல ரெண்டு மாசம் லீவ் எடுப்பேன், அதான் இப்போ லீவ் இல்லாம வேலை பாக்குறேன்” என்று கூறிட அவனை கேள்வியாக பார்த்தவள், “ரெண்டு மாசம் லீவ்வா? எதுக்கு அவ்ளோ நாளு?” என்று கேட்க, “நம்ம ஹனிமூன் போக வேணாமா?” என்று கேட்டு கண்ணடிக்க வெக்கத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள் ஆரு. 

 

“பாரு டா என் பொண்டாட்டிக்கு வெக்கம் எல்லாம் இருக்கு..” என போலியாய் ஆச்சரியப்பட்டு கூறிய மித்திரன் அவளின் காதருகே நெருங்கி இதழ் உரச, “ரெண்டு மாசம் நம்ம ஹனிமூன்ல தான் இருப்போம்.. திரும்ப வரப்போ நீ பிரேக்னன்ட்டா தான் வருவ.. அது வரை ஹனிமூன் தான்” என்று காதுக்குள் கிசுகிசுக்க அவனை அவசரமாய் தள்ளி விட்டு ஒரு கையால் முகத்தை மூடிக் கொண்டாள். இன்னுமே அவன் காதுக்குள் பேசிய குறுகுறுப்பு இருக்க நெளிந்தவள், “என்ன மித்து இப்படி பண்றிங்க, நீங்க முதல்ல கிளம்புங்க” என்று கூறி அவள் எழுந்து சென்றாள். அவளின் கையை பிடித்து இழுத்து கன்னத்திலே அழுத்தமாய் முத்தம் ஒன்றை கொடுத்தவன், “அடுத்த முறை லிப்ஸ்ல தான் குடுப்பேன் சோ ரெடியா இரு” என்று கூறி அங்கு இருந்து கிளம்பினான். ஆருத்ரா தான் வெக்கத்தில் அங்கயே சில நொடிகள் நின்றாள். 

 

அங்கு ஆல்வின் ஆபிசில், ஆல்வின் காலையில் இருந்து டென்ஷன்னாகவே திரிந்தான். அவனின் தந்தையிடம் இங்கு இருப்பவர்கள் தான் அச்சஸ் கோட் மூலமாக டேட்டா லீக் செய்து இருக்கிறார்கள் என்று சொன்னதும் ஆல்வினை இனி அவர் சொல்லும் வரையிலும் ஜெர்மன் பக்கமே வரக் கூடாது அங்கு இருக்கும் கம்பனிகளை ஒழுங்காய் பார்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். அந்த கடுப்பில் தான் சுற்றிக் கொண்டு இருந்தான். அது மட்டும் இல்லாமல் அவனுக்கு திலக் மீது சந்தேகமாய் இருந்தது. அக்சஸ் கோட் கம்பனியில் அவனை தவிர யாரிடமும் இல்லை. அப்படி இருக்கையில் அவனை தவிர யார் டேட்டாக்களை வெளியிட்டு இருப்பார் என்று யோசித்தான்.

 

“ஏன் சார் காலையில இருந்து இவ்ளோ டென்ஷன்னா இருக்கீங்க.. எந்த பிரச்சனையா இருந்தாலும் சால்வ் பண்ணிரலாம்.. பிராப்ளம்ல கான்செண்டிரெட் பண்றதை விட கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.. அப்போதான் மைண்ட் சரியா யோசிக்கும்” என இனி அவன் மேஜையில் கலைத்து போட்ட ஃபைல்களை அடுக்கி வைத்தபடியே கூறினாள். 

 

“சொல்றது ஈஸி, என் கவலை எனக்கு தானே தெரியும் அதுவும் இந்த ஊருல என்ன ரிலக்ஸ் பண்றது” என கடுப்பாக கேட்க,

 

“நீங்க பொதுவா என்ன பன்னுவிங்களோ அதையே பண்ணுங்க” என இனி கூறி வேலையை தொடர, “அப்போ என் கூட கிளப்க்கு வரியா” என கேட்க அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் இனி.

 

“கமான் கேரமல், ஜஸ்ட் ஒரு டேட் வரியா? இல்ல நைட் அவுட் போலாமா? ஆர் டின்னர்? எதுனாலும் எனக்கு ஓகே” என கேலியாக ஆல்வின் கூறிட அவனை பயங்கரமாக முறைத்தாள் இனி. 

 

“கேரமல் நான் உன் பாஸ்ஸா கேக்கல.. உன்னோட ப்ரெண்ட்டா கேக்குறேன்” என்றிட, “செருப்பால அடிப்பேன் இன்னொரு முறை இப்படி கூப்ட்டன்னா.. அப்பறம் முழுசா ஜெர்மன் போய் சேர முடியாது..” என்று கூறியவள் அவனை பாத்து தன்மையாக சிரித்து, “நானும் உங்க அசிஸ்டன்ட்டா சொல்லலை” என்றிட அவளை ஆச்சரியமாய் பார்த்தான் ஆல்வின். “மை காட்.. திஸ் வுமன்..” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன் அவளை நினைத்து சிரித்துக் கொண்டான்.  


   
ReplyQuote

You cannot copy content of this page