All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

மனதில் நின்றவள் 10

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Member Author
Joined: 3 months ago
Posts: 21
Topic starter  

மனம் 10

நாட்களும் அதன் போக்கில் செல்ல சகஸ்தாவும் தாய், தந்தை, தம்பி மற்றும் நண்பர்களுடன் நாட்களை கடத்தினாள் பகல் பொழுது அனைவரோடு கடந்தாலும் இராப் பொழுதை ரிஷி களவாடியே சென்றான்.

இங்கு ரிஷி யோ ஒருவித அழுத்தத்துடன் தான் நாட்களை கடத்தினான் அலுவலகத்தில் கூட அவளின் செயற்பாட்டினால் ஊழியர்கள் கூட அஞ்சு நடுங்கினர்.

இத்தகவல் பிரகாஷை வந்தடையவே அன்று அலுவலகம் வந்த பிரகாஷ் ரிஷியின் அறைக்குச் செல்ல சுழல் நாற்காலியில் கண்களை மூடி கைகளை தலையின் பின்புறம் கட்டியபடி அமர்ந்திருந்தார் ஏதோ ஒருவித அழுத்தம் அவன் மனதை அழுத்துவதை பிரகாஷ் உணர்ந்து கொண்டார் கதவு திறக்கும் சத்தத்தில் கண் விழித்தவன் தந்தையே இங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது.

அவரும் அவன் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவர் ரிஷி ஆழ்ந்து பார்த்து "என்ன பிரச்சினை"?? என கேட்க என்ன சொல்வான்

"அவன் நத்திங் பா "என்றான் "ஓகே, ஆபீஸ் பற்றி கேட்கலாம் தானே" என்றவர் இந்த வீக்ல. ரெண்டு ஸ்டாப் வேலையை விட்டு தூக்கி இருக்க, எனக்கேட்க.

" அவங்கட வொர்க்ல திருப்தி இல்ல என்றவனை மேலும் தொடர விடாது

" சார் மீட்டிங் இருக்கு பதினொரு மணிக்கு" என அங்கு வந்து சேர்ந்தாள் பீ.ஏ செரின்.

ரிஷி யும் கைக் கடிகாரத்தை பார்த்தபடி ,"நீங்களும் வாங்க" என தந்தையை அழைத்தபடி இருவரும் மீட்டிங் நடக்கும் ஹால் நோக்கி சென்றனர்.

அனைத்து ஊழியர்களும் அங்கு குழுமியிருந்தனர் பிரகாஷைக் கண்டதும் தங்களுக்குள் கிசுகிசுக்கத் தொடங்கினர்.

''குட் மார்னிங் எவ்ரி ஒன்'' என்ற சத்தத்தில் அவ் அறை முழு அமைதி அங்கு நிலவியது ,பின் ரிசாட்டின் வளர்ச்சி பற்றியும்,புதிதாக செய்ய வேண்டிய வேலை பற்றியும் பேசினான்.

மேலும் தொடர்ந்தவன் உங்களுக்கு தெரிந்திருக்கும் இதுவரை இரண்டு பேர் இந்த வாரம் வேலை விட்டு தூங்கப் பட்டிருக்காங்க,

இங்க மேனேஜ்மெண்ட் ஒர்க் மட்டும் தான் நடக்கிறது.சோ நம்ம ரிசாட்ல தங்கியிருக்கிறவங்களுக்கும் நமக்கும் நேரடித் தொடர்பு இல்ல , ஆனால் இங்க தங்கியிருந்த ஃபாரினர்ஸிடம் மிஸ் பிஹேவ் செய்ததால தான் அவங்க வேலைல இருந்து தூக்கப்பட்டாங்க.,

இனி ஒரு சம்பவம் இது போல நடக்கக் கூடாது.அத நான் விடவும் மாட்டன் என தனது கம்பீரமான குரலில் பேசினான் ரிஷி .

பிரகாஷிற்கு மகனை நினைத்துப் பெருமையே....தந்தையை இப்போது ரிஷி ஆழ்ந்து பார்க்க,அவரும் குறிப்பறிந்து ஊழியர்களிடம் சில நிமிடங்கள் பேச மீட்டிங்கும் நிறைவடைந்தது.

அன்றைய பொழுது அவ்வாறே கழிய இரவில் தான் சகஸ்தா அவனை தூங்க விடுவதில்லை, வீட்டிற்கு வந்தாலே அவள் நினைவு தான்.

சில வேளைகளில் வீட்டிற்கு வராது அலுவலகத்திலே தங்கியும் கொள்வான்.

அன்று வீட்டிற்கு வந்தவனுக்கு அவள நினைவுகள் தன்னை சூழ்வதை தடுக்கவே முடியவில்லை அலைபேசியில் அவள் புகைப்பத்தை சில நிமிடங்கள் பார்த்தவன் நேரம் சென்றே தூங்கினான்.

ரிசாட் ஏழு நாளும் இயங்கும் ஆனால் அங்கு இருக்கும் அலுவலகம் தான் மெயின் மற்ற இடங்களில் இருக்கும் அலுவலங்களையும் முகாமை செய்யும் இடம் ஆகவே அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சனி , ஞாயிறு விடுமுறை

அடுத்த நாள் சனிக்கிழமை , விடுமுறை எழுந்தவன் தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு கீழே வர வேணி சமையலறையில் தான் ஏதோ செய்து கொண்டிருந்தார்.

"குட் மார்னிங் ம்மா" என்றபடி சாப்பாட்டு மேசையில் அமர இரவு சாப்பிடாத வயிறு வேறு பசித்தது.

வேணியும் சுடச்சுட தோசை வார்த்துக் கொடுக்க அவனும் உண்டான்.பின் ஸ்ரீ எப்போ வார "எனக் கேட்க........

அப்போது அவ்விடம் வந்தார் பிரகாஷ்....அவருக்கும் தோசையை கொடுத்த படி....
"அவ வாரத்ப் பற்றி சொல்லல" என்றார்.

"ஸ்ரீயும் இல்ல ,சகஸ்தாவும் இல்ல ஏதோ போல இருக்கு எப்படி கலகலனு இருந்த வீடு மாயான அமைதி" என பிரகாஷிற்கு சட்னியை வைத்தபடி தன்பாட்டிற்கு பேசத் தொடங்கினார்.

நீயாச்சும் கல்யாணத்த கட்டி ஒருத்திய கூட்டி வாட என சலித்துக் கொண்டார்.

" என்ன வேணி மாட்டக் கட்டுற போல சொல்ற" என பிரகாஷ் கிட்டல் பண்ண நீங்க வேற " இவனொருத்தன் வாயே தொரக்கானில்ல கொஞ்ச நாளா ஆளும் சரியா இல்ல சாப்பிடுறானும் இல்ல என புலம்பினார்.

ரிஷி யும் அவர் புலம்பலைக் கேட்ட படி உணவுண்டு முடித்தவன், கையைக் கழுவிக் கொண்டு தனதறைக்கு வந்தவன் , சற்று நேரம் படுக்கையில் கண்மூடி சாய்ந்தான்.

பின் என்ன நினைத்தானோ சகஸ்தா தங்கியிருந்த அறைக்கும் தனது அறைக்கும் இடையிலான கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.நெஞ்சின் ஓரத்தில் ஓர் வலி எழுவதை தடுக்கவே முடியவில்லை.

அவ்வறையில் அவள் வாசம் இருப்பதாகவே உணர்ந்தான்.அறையை சுற்றி பார்வையை சுழல விட அவனின் பார்வை அங்கு மேசையில் இருந்த சில ஓவியங்களில் பட்டது.

"அன்றோரு நாள் ஸ்ரீயிடம் அவள் ஓவியங்கள் பற்றி பேசியது ஞாபகம் வந்தது."

ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க அவை அனைத்தும் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வரையப்பட்டிருந்தது.

ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் ஒரு வாசகமும் அவளது கையொப்பமும் காணப்பட்டது.

அவற்றை அவ் மேசையிலே வைத்து விட்டு திரும்பும் போது சுவரோரம் பெயிண்டிங் பிரஸ் கிடந்தது,

அதனை குனிந்து எடுக்கும் போது அச் சுவரில் கர்டின் தொங்கிக் கெண்டிருந்தது.

இங்க கர்டின் எப்படி என எண்ணியபடி அதனை சரி செய்ய முற்பட்டவன் கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

என்ன உணர்வென்றே அவனால் சொல்ல முடியவில்லை அப்படியே அக் கர்டினை இழுத்தெடுக்க,அச் சுவரை நிரப்பியிருந்தது இருவரினதும் ஓவியம்.

அதுவோ தத்துருபமாக வரையப்பட்டிருந்தது.தனது ஃபோனில் இருந்த ஒவியத்தையும் சுவரோவியத்தையும் பார்க்க எந்த வித்தியாசமும் இல்லை....

அன்றொரு நாள் ப்ரொபோஸ் செய்த நேரம் அவளின் இடையைப் பிடித்து இழுக்க அவளோ அதிர்ச்சியுடன், அவனைப் பார்க்க அவனும் அவளப் பார்க்க அப்போது எடுக்கப்பட்ட செல்ஃபியே அச் சுவரை நிறைத்திருந்தது.

சுவரோவியத்தின் கீழ்
" என் திகட்டாத கவிதை நீ என் தீரா காதலில்" எனும் வாசகமும் அதன் கீழ் உன் பேபி டால் என்றும் ஒரு மாதம் முன்னரான திகதியுடன் அதில் எழுதப்பட்டிருந்தது.

மகிழ்ச்சி,கோபம், ஆற்றாமை, என அத்தனை உணர்வுகளும் அவனுள் அவ் சுவரோவியத்தை வருடியவன் . அவள் கையெழுத்தை சில நிமிடங்கள் பார்த்தவன் அவ்வறையை பூட்டிக் கொண்டு தனதறைக்கு வந்தான்.

"இந்த போட்டோவ இவ எப்ப பார்த்தா என யோசிக்க..... ஃபோனில் இருந்ததை பார்த்திருக்கா போல என எண்ணியவன்

எவ்வளவு அழகாக தத்துரூபமாக வரைஞ்சிருக்கா இவளோ லவ் வச்சிருக்கிறவ ஏன் சொல்லாம போனா????ஏன் என் லவ்வ கூட ஏற்றுக் கொள்ளல????என பல கேள்விகள் அவனுள்.

தனது மடிக்கணியுடன் அமர்ந்தவன், வேலையில் மூழ்கிப் போனான்.

அவ்வாறு மறு நாளும் கழிய அன்று இரவுணவின் போது "நாளைக்கு பொத்துவில் போகனும்மா" என்றான்.

பின் தந்தையுடன் தாங்கள் பொத்துவில் பகுதியில் நிறுவவுள்ள ரிசாட் பற்றி பேச்சு நீண்டது.அடுத்த நாள் காலை பொத்துவில் நோக்கி தனது கறுப்பு நிற காரில் பயணமானான்.

ஹாய் ப்ரண்ட்ஸ் 😁
மனதில் நின்றவள் 10
எப்படி இருக்குனு சொல்லுங்க 😔

This topic was modified 5 days ago by VSV 31 – மனதில் நின்றவள்

   
ReplyQuote

You cannot copy content of this page