About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 3
"இது என்னோட கார்ட் அதிகமா யாருக்கும் ஷேர் பண்ண மாட்டேன்.. உனக்கு கொடுக்கணும்ன்னு தோணுச்சு தேவைப்பட்டா யூஸ் பண்ணிக்க" என்று கூற,
அதை வாங்கி நோட்டமிட்டவளோ "சீக்ரெட் டெடக்டிவ்" என்று விழி விரித்து அவனை கண்டு இதழ் அசைக்க,
தன்னை காண்பதை கண்டவனோ "ஆம்" என்றவாறு கண்கள் சிமிட்டி தலை அசைக்க,
"ச்ச ஒரு டிபார்ட்மெண்ட் ஆபீஸர மரியாதை இல்லாம பேசிட்டேனே" என்று நினைத்தவாறு, தன் கையில் வைத்திருந்த அவனின் வருகை அட்டையை பார்த்தவளுக்கோ,
அவன் அதிகமாக யாரிடமும் பகிராததுக்கு அவனின் வேலை மிகவும் ரகிசயமானதே காரணம் அப்படி இருக்கையில் தன்னிடம் தெரியப்படுத்த என்ன காரணமாக இருக்க முடியும் என்று சிந்தித்த பாவையோ "உங்க சீக்ரெட் வொர்க் பத்தி யாருக்கும் ஷேர் பண்ணாத நீங்க.. என்கிட்ட ஷேர் பண்ண என்ன காரணம்"
"என்னோட வொர்க் சீக்ரெட்ங்குறதுனால என்னோட ஃபேமிலி அப்புறம் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் தவிர அதிகமா யாருக்கும் ஷேர் பண்ணினது இல்ல.. என்னமோ தெரியல உன்கிட்ட சொல்ல சொல்லி மனசு பிராண்டுச்சு அதான் ஷேர் பண்ணிட்டேன்.. அப்புறம் இத நீ யாருக்கும் ஷேர் பண்ணாத" என்று கூற
அதற்கு சம்மதம் தெரிவித்தவாறு தலையசைத்தவளோ, அவன் கொடுத்த அட்டை தன் கைபையினுள் வைத்து பாதுகாத்து கொண்டாள்.
இப்போது சாப்பிட்டு முடித்து காரில் அவளுடன் கேமராவை பழுது பார்க்க கொடுத்த கடைக்கு வந்து பழுது செய்யப்பட்டதற்குக்கான தொகையை கொடுத்துவிட்டு கேமராவை திரும்ப பெற்று, அவளிடம் ஒப்படைக்க,
அதைக் வாங்கியவளோ "தேங் யூ சோ மச் மிஸ்டர் ஆர்வகோளாறு.. இனியாவது ஹெல்ப் பண்றேன்னு கிறுக்குத்தனம் பண்ணாம பாத்து சூதானமா இருந்துக்கோங்க" என்று கூறியவாறு கையில் வாங்கிய கேமராவை ஆராய்ந்து கொண்டிருக்க,
ஆதிரனோ "என்ன பத்தி எல்லா தெரிஞ்சுக்கிட்ட உன்ன பத்தி எதுவுமே சொல்லல"
"என்ன பத்தி.. உங்ககிட்ட சொல்ல அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்"
"உனக்கு விருப்பமில்லன்னா சொல்ல வேண்டாம்"
"நம்ம ரெண்டு பேரும் நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணிக்கிட்டா கண்டிப்பா சொல்லுறேன்.. மே பீ வாய்ப்பிருக்காதுன்னு தான் தோணுது.. பாக்கலாமே"
"ம் பாக்கலாம்.. ஆனா கண்டிப்பா நீ தான் என்ன தேடி வருவ"
"ஐ அம் வெயிட்டிங்" என்று அவனிடமிருந்து விடை பெற்று சிறிது தொலைவு நடந்தவளோ சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறி சென்றாள்.
தன் கண் பார்வையிலிருந்து, அவள் விலகும் வரை பார்த்திருந்தவனோ "ஐ அம் ஆல்சோ வெயிட்டிங்டி சவுண்ட் சரோஜா" என்று கூறி தலைகோதியவாறே எண்ணைத்தை நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தவனோ, கையிலிருந்த அவளின் புகைப்படத்தையே கண் இமைக்காமல் ரசித்து, அவள் புகைப்படத்தை யாரும் அறியாத வண்ணம் சோஃபாவிலிருந்த தலையணை அடியில் மறைத்து வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக மீதி புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தான்.
அப்போது தயாராகி அறையிலிருந்து வெளியே வந்த சசியோ நண்பன் செய்த செயலை கண்டு "கொய்யால திருட்டு வேலை பாக்குறியோ.. உனக்கு இருக்குடா" என்று நினைத்தவாறே அருகில் சென்று தலையணை அடியிலிருந்த புகைப்படத்தை எடுக்க
அதை கண்டவனோ, அவனிடமிருந்து புகைப்படத்தை வாங்க முற்பட்டவாறே ஓடியவனோ "டேய் கொடுடா.."
"இருடா.. நீ ஒளிச்சு வச்சி சைட் அடிக்குற பொண்ணு யாருன்னு பாத்துட்டு தரேன்" என்று கூறி, அவனின் பிடியிலிறுந்து தப்பித்து ஹாலை சுத்தி ஓடி கொண்டிருந்தவனோ நிலை தடுமாறியதில் தயாராகி அவர்களின் விளையாட்டை கண்டவாறு வந்த தாராவின் மேலே சரிய, பெண்ணவளும் நிலை தடுமாறியதில் ஆடவனின் கழுத்தை பற்றியவாறு அவனுடனே சரிய அதில் இருவரின் இதழ்களும் இணைந்த நேரம், இது தான் சந்தர்ப்பம் என்று அவனின் கையிலிருந்த புகைப்படத்தை எடுத்து மறைத்து வைத்தான்.
இதை எதிர்பாராத சசியோ அதிர்ச்சியில் இதழ்யணைப்பில் விலகாமல் உறைந்து விட, அதில் கோபம் கொண்ட தாராவோ அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு எழ, அதில் சுயநினைவு வந்து அவன் எழுந்த மறுகணமே பளாரென்று ஒன்று விட்டவளோ "அசிங்கமா இல்ல.. கொஞ்சம் நேரம் முன்னாடி தான் பிடிக்கலன்னு வசனம் பேசிட்டு கேப் கிடைச்சதும் மொத்தத்தையும் உறிஞ்சிருர வேண்டியது.. இதுக்கு மேல நீ என்ன தொட்டு பேசினா கூட செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்" என்று கத்திவிட்டு மறுபடியும் அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.
நடப்பதை எல்லாம் வாயில் கைவைத்து வியந்து பார்த்த ஆதியோ நண்பனை சமாதானம் படுத்த எண்ணி தோலில் கை போட, அவனோ "டேய்.. நான் அவள ஆசப்பட்டு கிஸ் அடிச்சது போல ஓவர் சீன் போட்டுட்டு போறா"
"யாருக்கு தெரியும் ஆசப்பட்டு கூட அடிச்சிருக்கலாம்" என்று கூற, அதில் கடுப்பானவனோ தன் தோலிலிருந்த அவனின் கையை தட்டிவிட்டு விட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
அவன் சென்றதும் மறைத்து வைத்திருந்த புகைப்படத்தை பார்த்தவாறு "சவுண்ட் சரோஜா.. ஐ வில் பீ சூன்" என்று கூறிவிட்டு புகைப்படத்துடன் தன்னறைக்கு சென்று யாரும் காண முடியாதவண்ணம் மறைத்து வைத்துவிட்டு இருவரையும் சமாதானம் செய்து வெளியே அழைத்து செல்ல, அங்கையும் இருவரும் கிரி பாம்பு போல் சண்டையிட்டு கொண்டிருக்க அவர்களை சமாதானம் செய்தே தோழின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.
இரவு சாப்பாடு முடித்து வீட்டிற்கு வந்த மூவரும் அவரவர் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு இரவு அடைக்கு மாறினார்கள்.
தோட்டத்தில் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவது மூவருக்கும் பிடித்தமான செயல் என்பதால் அதற்கு என்று ஓரமாக இடமும் அமைத்து வைத்திருந்தார்கள்.
இப்போது தோட்டத்தில் அமர்ந்து மடிக்கணினியில் எதையோ ஆராய்ந்தவாறு இருந்த சசியை கண்ட தாராவோ முறைத்தவாறே, அவன் எதிரே அமர்ந்து கோப்பு ஒன்றினை புரட்டிக்கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த ஆதியிடம் "டேய் வெளிய சாப்பிட்டுட்டு வந்ததுல இருந்து வயிறு ஒரு மாதிரி மந்தமா இருக்குடா.. ஃப்ரிட்ஜ்ல போவொண்டோ இருக்கும் எடுத்துட்டு வாயேன் பிளீஸ்"
"ஏன்டி.. அத நீ வரும் போதே எடுத்துட்டு வந்தா ஆகாதா.. வெளிய தான் அவன் கூட சண்ட போட்டே என்ன பாடு படுத்துற.. வீட்டுலயும் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டல"
"இப்போ என்ன உனக்கு நிம்மதி குறஞ்சி போச்சு.. உன் பிரென்ட்னால நான் தான் மனநோய் வந்து நிம்மதி இல்லாம இருக்கேன்.." என்று கூறியவாறே தன்னதிரே இருப்பவனை முறைக்க,
அதியோ "அடியே மறுபடியும் எதையாவது ஆரம்பிக்காத.. போவொண்டா தான வேணும் எடுத்து வந்து தொலைக்குறேன்" என்று கூறிவிட்டு சமையல் அறையிலிருந்து மூவருக்கும் குளிர்பானத்தை எடுத்து வந்தவனோ இருவருக்கும் கொடுத்துவிட்டு அமர்ந்து குடிப்பனை கண்டவளோ "ஏன்டா இத எடுத்துட்டு வர.. இவ்வளவு நேரமா"
"கால் வந்துருச்சுடி பேசிட்டு எடுத்து வர லேட் ஆயிடுச்சு.. சும்மா எதையாவது கேட்டு நொயி நொய்யுன்னு கத்தாம குடி" என்று கூறிவிட்டு எழுந்து சிறிது தூரம் தள்ளி சென்று திறன்பேசியில் யாருக்கோ அழைத்து பேச சென்ற நேரம் அவன் கொடுத்த குளிர்பானத்தை கணினியில் மூழ்கியவாறே ஒரு மிடர் குடித்துவிட்டு கீழே வைத்த சமயம், அவன் எச்சியை குடிக்க ஆசை கொண்ட பெண்ணவளோ தனக்கு கொடுத்ததையும் ஒரு மிடர் குடித்துவிட்டு எழுந்து செல்வது போல் அவன் அறியாதவண்ணம் அவனுடையதை வைத்து தன்னுடையதை மாற்றி வைத்தவளோ,
தோட்டத்தில் அங்குமிங்கும் நடந்துவிட்டு ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளை போல் அமர்ந்து தன்னவன் எச்சி செய்த குளிர்பானம் மொத்தத்தையும் குடித்துவிட்டு தான் அமர்ந்திருந்த சோஃபாவில் கண்கள் மூடி சாய்ந்திருக்க,
அப்போது அழைப்பு பேசி முடித்து அவளருகிலிருந்து சோஃபாவில் அமர்ந்து தனக்கான குளிர்பானத்தை குடித்த ஆதியோ "டேய் மச்சான்.. இன்னும் ரெண்டு வாரத்துல நான் வந்த வேலை முடிஞ்சிடும்.." என்று கூறி கொண்டிருக்க,
தாராவோ "அப்புறம் என்ன.. உன் பிரென்ட்க்கு மாமா வேலை பாத்து சூப்பர் ஃபிகர் ஒன்னு பிடிச்சி கொடு" என்று போதையில் வாய் கோளாரியபடி பேசுவதை கேட்டவன்
"என்னாச்சிடி ஒரு மாதிரி பேசுற" என்று கேட்டு "அய்யோ மிக்சிங்க இவகிட்டயா கொடுத்தேன்" என்று சிந்தித்தவனோ அவள் கையிலிருந்த பாட்டிலை வாங்கி முகர்ந்து பார்த்து தலையில் கை வைத்து "டேய் மச்சான்.. மிக்சிங் மாறிடுச்சுடா"
"என்னடா சொல்லுற"
"உனக்கும் எனக்கும் தான்டா.. மிக்சிங் பண்ணினேன் ஒருவேளை மாத்தி கொடுத்துட்டேனா"
"மிக்சிங் பண்ணியா.. நான் ஒரு மிடர் தான் குடிச்சேன் வேலைல இருந்த ஃபோகஸ்ல எனக்கு ஒன்னும் ஃபீல் ஆகலையே"
"அடேய் மிச்சம் வைக்காம மொத்தமும் குடிச்சிட்டாளேடா.. வச்சி செய்ய போறா" என்று கூறி கொண்டிருக்க தாராவோ "டேய் மாமா பையலே"
"அடியே.. நான் டிபார்ட்மெண்ட் ஆளுடி அந்த மரியாதை கொஞ்சமாவது இருக்கட்டும்"
"அப்படி தான்டா கூப்பிடுவேன் என்னடா பண்ணுவ மாமா பையலே.. நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் அவன் ரொம்ப தான் ஓவரா போறான்.. என்ன விட்டுட்டு வேற பொண்ணு கழுத்துல தாலி கட்டிருவனோ"
"டேய் உன்ன தான்டா கேக்குறா சொல்லி தொலையேன்.. உங்ககூட பழகுனதுக்கு என் கழுத்த அறுக்கிரீங்கடா"
"டேய் மாமா பையலே.. அது என்ன இவனுக்காக நான் வருஷ கணக்கா தவம் கிடக்கணுமா என்ன.. ஒழுங்கா என் கழுத்துல அவன தாலி கட்ட சொல்லு இல்லன்னா நடக்கிறதே வேற" என்று கூற,
அதற்கு சசியோ "கட்டலன்னா என்னடி பண்ணுவ"
"நீ என் கழுத்துல தாலி கட்டலன்னா உன்ன ரேப் பண்ணிடுவேன்டா" என்று கூற,
அதைக் கேட்ட ஆதியோ "எதே ரேப்பா.."
"ஆமா.. நான் அவன ரேப் பண்ணிட்டா எனக்கு தான அவன கட்டி வச்சியாகனும்"
"அடியே உள்ள போனவன் உன்ன ஜெண்டரே மாட்டிட்டான் போல.. டேய் எதுக்கும் இவ கிட்ட உஷாரா இருடா ரேப் பண்ணினாலும் பண்ணிடுவா" என்று கூற, சசியோ அவளின் செயலை கண்டு சிரிப்பை அரும்பாடு பட்டு அடக்கியவாறு "ம் பண்ண கூடிய ஆளு தான்" என்று கூற,
தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து அவன் அருகில் சென்று கை பற்றி இழுத்து "டேய் வாடா"
"மச்சான் அவள விட சொல்லு.."
அதற்கு ஆதியோ "ஏய் அவன விடுடி.. உனக்கே நிக்க ஆவியில்ல இதுல அவன எங்கடி இழுக்குற"
"இன்னைக்கு ரேப் பண்ணினா தான் நாளைக்கு என் கழுத்துல அவன் தாலி கட்டுவான்"
"என்னடா லட்டு திங்குற கூப்பிடுற போல கூப்பிடுறா" என்று கூற,
தாராவோ "டேய் மாமா பையலே.. அவன் இப்போ என்கூட வரலன்னா இங்கேயே அவன ரேப் பண்ணிடுவேன்" என்று கூறியவாறு இழுக்க, அவனும் அவளின் இழுப்பிற்கு கூடவே செல்ல,
ஆதியோ "என்னடா அவ கூப்பிடுறான்னு போற"
"வேற என்ன செய்ய சொல்லுற பர்த்டே அதுவுமா ஆசப்பட்டு கேக்குறா கொடுக்கலன்னா மனசு வருத்தப்படும்ல" என்று கூறியவாறே, அவளின் அறைக்குள் அழைத்து சென்று படுக்க வைக்க, அவளோ எழுந்து அமர்ந்து போதையில் அவள் உளற, அதைக் கேட்டு கோபம் கொண்டவனோ ஓங்கி பளாரென்று அறைந்தான்.
தேடல் தொடரும்..
இப்படிக்கு
Vsv42😍😍
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Mohana Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page