About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம்-09
உடையை மாற்றி விட்டு படுக்கையில் சரிந்தாள்.ஒரு பத்து மணி இருக்கும் றிஷி தனது அறைக்கும் சகஸ்தாவின் அறைக்கும் இடையில் இருக்கும் கதவின் ஊடாக நுழைந்தவன் சில நிமிடம் குழந்தையாய்த் தூங்கும் அவளை ரசித்து விட்டு வெளியேறினான்.இது அவனின் வழக்கமும் கூட
அடுத்த நாள் சனிக்கிழமை தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்த சகஸ்தாவை பார்த்தபடி வந்தான் றிஷி.... அவளோ அவனைப் பார்க்காது மற்றொரு பக்கம் நகர்ந்தாள்.
சகஸ்தாம்மா குட் மார்னிங் என கை, காலை வீசி நடந்தபடி அவ்விடம் வந்தார் பிரகாஷ்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது றிஷியும் அவ்விடம் வந்தான்.
பூக்கூடையை தோட்டத்தில் போடப்பட்ட கல் இருக்கையில் வைத்தவள், இருங்க ஆங்கிள் காஃபி கொண்டு வரேன் என அங்கிருந்து நகர்ந்தாள்.
சிறிது நேரத்தில் ட்ரேயில் இரண்டு காஃபி கப்புகளை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு வந்தாள் சகஸ்தா அதனை றிஷிக்கும், பிரகாசிக்கும் கொடுத்தவள் பூக்கூடையை எடுத்துக் கொண்டு மறுபடியும் பூக்களை பறிக்க தொடங்கினாள்.
தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாலும் றிஷியின் பார்வை சாஸ்தாவையே அளந்தது.
பூக்களை பறித்தவள் வீட்டுக்குள் நுழைந்தாள் இறைவனுக்கு பூவை வைத்து வணங்கியவள் பூஜை அறையில் இருந்து வெளியே வர "சாஸ்தா ரெடி ஆயிட்டியா என கேட்டபடி ஸ்ரீ வந்தாள்."
"ஆமாக்கா என்றாள் ஸ்ரீ அப்போது றிஷியும் நெக் டிசைன் ஜீன்ஸில் தயாராகி கீழே வந்தான்.
சும்மாவே அவன் புறம் அலைபாயும் மனது இப்போது ஆண் அழகாக இருப்பவனை கேட்கவும் வேண்டுமா???
அவளை நெருங்கி அவள் காதருகே குனிந்தவன் எத்தனை மாக்ஸ் போடலாம் என்றபடி புருவத்தை உயர்த்த அப்போதுதான் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது உரைத்தது.
அக்கா எல்லாம் இருக்காங்க என பதட்டத்துடன் பார்வையை சுழல விட அவ்விடம் யாரும் இல்லை
தன்னை சுதாகரித்தவள் றிஷியை முறைத்தபடி வெளியே செல்ல அங்கு காரருகில் ஸ்ரீயும் ரஞ்சித்தும் நின்றிருந்தனர் தானும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.
றிஷி டிரைவர் சீட்டில் அமர அவன் அருகில் ரஞ்சித் அமர பின்புறம் ஸ்ரீயும், சகஸ்தாவும் அமர்ந்தனர் .கார் மிதமான வேகத்தில் புறப்பட்டது றிஷியின் பார்வை சகஸ்தாவையே தழுவியது அதை அறிந்தாலும் முகத்தில் இதையும் காட்டாது அமர்ந்திருந்தாள் சகஸ்தா.
ஸ்ரீயோ..." என்ன டால் வர வர ரொம்ப சைலண்டாகிட்ட உன் ஸ்மைல் மிஸ்ஸிங் வந்த போ இருந்த போலவே இல்ல ரொம்ப மாறிட்ட என்றாள்".
அதற்கும் சிறு புன்னகையை சிந்தியவள் ஸ்ரீக்கு பதில் எதுவும் சொல்லவில்லை நால்வரும் அன்று முழுவதும் ஊர் சுற்றியும் ஷாப்பிங் என அன்றைய பொழுது உற்சாகத்துடன் கழித்தனர்.
சகஸ்தாவும் உற்சாகத்துடன் இருப்பதாகவே காட்டிக் கொண்டாள் இது றிஷியின் கண்ணில் இருந்து தப்புமா என்ன.....
அன்று இரவுணவினை நிலாவளி பீச்சில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் உண்ண முடிவெடுத்தனர் அதன்படி அக் ஹோட்டலின் முன் கார் நின்றதும் நால்வரும் இறங்கி ஹோட்டலினுள் நுழைந்தனர்.
றிஷியின் எதிரே சகஸ்தாவும் ரஞ்சித்தின் எதிரே ஸ்ரீயும் அமர்ந்தனர்.
தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்தபடி பேசிக் கொண்டிருந்தனர். எப்போதும் துருதுருவென இருக்கும் சகஸ்தாவோ சமீப நாட்களாக ஒரு ஆழ்ந்த சிந்தனையில், முகத்தில் இறுக்கம் ஸ்ரீ மீண்டும் இதை சொன்னதும். சற்று இறுக்கம் கலைந்து சிரித்துப் பேசுவாள் மீண்டும் அவ்விறுக்கம் அவளை சூழும்..
றிஷி இதனை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அந்தக் கடற்கரை நிலாவளி பீச்சில் கடற்கரையில் நடக்க வேண்டி ஸ்ரீயும், ரஞ்சித்தும் செல்ல சகஸ்தாவும் றிஷியும் தனித்து இருந்தனர்.
சகஸ்தாவோ நிமிர்ந்து கூட பார்க்காது உணவைக் கொறித்துக் கொண்டிருந்தாள்.
நேரம் செல்லச் செல்ல அவ் அமைதியைக் கலைக்கு முகமாக றிஷி சகஸ்தாவை பார்த்து "இன்னுமா சகஸ்தா என் காதல் புரியாம இருக்க"
எனச் கேட்க......
அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கலக்கம் உதடுகளோ ஏதோ சொல்ல துடிக்க இதழ் கடித்து அதனை தடுத்தவள் கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தவள்.
உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் ஏண்டி கஷ்டப்படுத்துற..... என்றான் றிஷி.
தனது கைப்பையை திறந்து உள்ளிருந்து ஒரு சிறிய பெட்டியை அவன் முன் வைத்தாள் அன்றொரு நாள் அவன் அவளுக்களித்த மோதிரம் அது.
அன்று அவள் அதனை மறுக்க மீண்டும் அதனை அவள் அறையில் அவள் மேசையில் வைத்திருந்த ஞாபகம் றிசிக்கு வந்தது.
அவனோ எப்படி அவளுக்கு தன் காதலை புரிய வைப்பது என தெரியாது அவளையே வெறிக்க அவள் எதுவுமே கூறவில்லை அவனிடம்
அவள் பார்வையில், ரசிப்பு இன்று காலையில் கூட தன்னில் படிந்த அவள் பார்வையை எண்ணிப் பார்த்தவன் அது காதல் இல்லாம வேறென்ன முட்டாள் என எண்ணியது அவனது மனம்.
"சகஸ்தா" என அழுத்தமாக அழைத்தவன், அவளோ ஒருவித அச்சமான மனநிலை எதுவுமே பேசவில்லை.
"உன்னோட பார்வை சொல்லுச்சுடி,என் உணர்வுகளோட விளையாடிட்டு இருக்க நீ என அவளை உறுத்து விழிக்க.....
அப்போது "போலாமா" என்றபடி அங்கு வந்தனர் ரஞ்சித் மற்றும் ஸ்ரீ தம்பதியினர்.
வீட்டுக்கும் வந்துவிட்டனர் ஸ்ரீயியும் ரஞ்சித்தும் குட் நைட் என தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.
சகஸ்தாவைப் பார்க்காது றிஷியும் அறைக்குள் நுழைய சாஸ்தாவோ சிறு குளியலை போட்டபடி தன் தந்தைக்கு அழைத்து "ப்பா நாளைக்கு காலைல ஏழு மணிக்கு பஸ், ஆமா ஓகே ஓகே.... என்றபடி அழைப்பை துண்டித்தாள்.
எப்படி தூக்குவது தூக்கம் வந்தால் தானே, றிஷியோ இருளை வெறித்தபடி பால்கனியில் நின்றிருந்தான் சின்னப்பென் தன்னை நிராகரித்ததை மனம் ஒப்பவே இல்லை
மறுநாள் காலைப் பொழுது யாருக்கும் காத்திராமல் அழகாகப் புலர்ந்தது.அலாரச் சத்தத்தில் கண் விழித்த சகஸ்தா,
எழுந்து காலைக்கடன்களை முடித்து, குளித்து தயாராகும் வேளை கதவு தட்டும் சத்தத்தில் கதவைத் திறக்க றிஷி நின்றிருந்தான்.
ஒருவித பதட்டத்துடன் "என்ன இந்த நேரத்தில" என அவள் வினவ அவளை உள்ளே தள்ளியபடி அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டான்.
அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க அவளை இழுத்து அணைத்தவன் அப்போதுதான் குளித்தவளின் உடலில் இருந்து சோப்பின் வாசம் வீசியது.
அவள் முகத்தை இரு கைகளாலும் பற்றியவன் இதழ்களில் ஆழ முத்துமிட்டு "ஜஸ்ட் குட்பை கிஸ், இனி என் முகத்துல முழிச்சிராத" என எச்சரித்தபடி அவள் நிலைகொள்ள முதலே அறையை விட்டு வெளியேறினான்.
றிஷியின் இச் செய்கை ஒருவித அச்சத்தையே தந்தது.
சகஸ்தாக்கு படபடக்கும் தனது மனதை அமைதிப் படுத்தியவள் தன்னுடைய பொருட்களுடன் கீழிரங்கி அனைவரிடமும் விடை பெற்று பேருந்து தரைப்பிடம் வந்தாள்.
ரஞ்சித் தான் அழைத்து வந்திருந்தான்அவள் வெளியேறுவதைபால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் றிஷி அவன் கைகளோ பால்கனி கம்பியை இறுக பற்றியது.
மனம் எல்லாம் வலி இந்தக் காதல் எவ்வளவு கொடியது. இறுக்கமான அவன் மனதிலும் நுழைந்து அவனை இம்சித்து விட்டதல்லவா.
"போயிட்டாளா? போயிட்டாளா? நானும் என் காதலும் ஈசியா போயிட்டு இல்ல அவளுக்கு" என தனக்குகேட்டுக் கொண்டான்.
அவன் இருக்கும் இடம் வந்த ஸ்ரீ அவன் கை மேல் தன் கையை வைக்க அவளை நிமிர்ந்து பார்த்த றிஷியின் முகமோ உணர்ச்சி துடைக்கப்பட்டு இருந்தது.
சகஸ்தாவை வழியனுப்பி விட்டு, ரஞ்சித்தும் பேருந்து கிளம்பியதும் தான் வீடு திரும்பினான்.
வேணியோ "ஏங்க சகஸ்தா இருக்கும்போது எவ்வளவு கல கலனு வீடு இருந்துச்சு ரொம்ப மிஸ் பண்றேன் அவள என்றார்.
அனைவரினதும் மனதைக்கவர்ந்தவள் இன்று தன் வீடு நோக்கி செல்கிறாள் றிஷி அன்று முழுவதும் அறையை விட்டு வெளியே வரவில்லை உணவுக்கு கூட அவன் வரவில்லை.
வேணியோ மாடியேறிச் சென்று அழைக்கவே சிறிது உணவை உண்டான்.மறுபடியும் தனதறையை தஞ்சமடைந்தான்.
"இவனுக்கு என்னாச்சி "என எண்ணியபடி வேணி தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.
நான்கு மணித்தியாலத்தின் பின் மட்டக்களப்பு நகரை வந்தடைந்தவள் பேரூந்தில் இருந்து இறங்கினாள் சகஸ்தா.
தனக்காக காத்திருந்த தந்தையுடன் இணைந்து தன் இல்லம் நோக்கி பயணித்தாள்..
இதோ மனதில் நின்றவள் 09
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லி செல்லலாமே ப்ரண்ட்ஸ் 😁
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Jayam Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page