All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 07

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம்-7
"ஹாய் பேபி" என அவளருகில் அமர அவளும் ஹாய் என்றாள் சோகையாக,

"என்ன யோசனை" என ரிஷி கேட்க, ஒன்றுமில்லை என தலையாட்டினாள்.

பின் எழுந்து சென்றவன் கையில் இரண்டு ஐஸ்கிரீமுடன் வந்தான்.ஒன்றை அவளிடம் நீட்டியவன் அவளோ 
தயக்கத்துடன்....அவனைப் பார்க்க" ம்ம் வாங்கிக்கோ" என்றான். அவளும் அதனை வாங்கிக் கொண்டவள் உண்ணத் தொடங்கினாள்.

அவனோ தனது ஐஸ்கிரீமை உண்ணாமல் அவளையே பார்த்திருக்க ......

"வேணுமா??? என அவள் தனது ஐஸ்கிரீமை பார்த்துக் கேட்க

"அவனோ தந்தா சாப்பிடுவன்" தான் என நாவால் இதழை ஈரப்படுத்த....
"கரைது சாப்பிடுங்க பாஸ்"
என்றாள்.

அப்படியே சில நாட்கள் சென்றிருக்கும், ரிஷியும் நுவரெலியாவிற்கு சென்று அங்கு நிலைமையை நேரில் கண்டு திரும்பியிருந்தான்.

ஸ்ரீயும், ஸ்ரீயின் கணவன் ரஞ்சித்தும் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் சென்றிருக்கும்.

அன்று விடுமுறை தினம் ஹாலில் இருந்த ஸ்ரீயிடம் வந்த சகஸ்தா "அக்கா அடுத்த வாரம்
இன்டர்ன்ஷிப் முடிது, இனி வீட்ட தான் உங்கள ரொம்ப மிஸ் பன்னுவன் என்றாள்.

சகஸ்தா அடுத்த நாள் அலுவலகம் சென்றவள் வழமை போல் தனது வேலைகளைச் செய்யத் தொடங்கினாள்.

ரிஷியோ வேலைப் பழுவானாலும் அவளில் ஒரு பார்வை இருந்து கொண்டு தான் இருந்தது.

சகஸ்தா ரிஷியின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் அவன் மீது ஈர்ப்பு இருப்பது உண்மை அவனின் ஆளுமை பேச்சு அனைத்தையும் ரசிக்கும்படி இருக்கும் ,ரசித்தும் கொள்வாள்.

வேலையை விட்டு வந்தவள் பால்கனியில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

"ஆமாம்மா,எப்படியும் வன் வீக்ல இன்டர்ன் முடிச்சிடும் எல்லா பார்மலிடீஸையும் முடிச்சிடு சர்விஸ் லெட்டரும் எடுத்துடு வாரன்" என்றாள்.

"சுபி எங்க?" என சகஸ்தா கேட்க "அவளது தாயோ ,அவன் எங்க வீடு தங்கிறான் ஊர் சுத்துறதே வேலையா வச்சிருக்கான்".

"ம்ம்...சரிமா அப்பாவோட அப்புறமா பேசுறன் என அலைபேசியை துண்டித்தாள்.

ஆரம்பத்தில் ரிஷி ,சகஸ்தாவை காயப்படுத்தினும் காதலை  சொல்லி அவளை கட்டாயப்படுத்தியும் அவளுக்கு கடைசியாக அறைந்தன்று அவள் கடைசியாக அவள் பேசிய போது தான்  அவள் பக்கமும் புரிந்தது.  அவள் மீதான ஈர்ப்பு எப்போது காதலாக  மாறியது  என  தெரியாது.அவள் மீது பைத்தியத்தனமான காதல் தனது காதலை அவள் ஏற்றுக் கொள்ளாதது ஒருபுறம் ஆச்சரியம், தன் கண் அசைவிற்காக அவளவள் காத்திருக்க , இவனோ அவளின் ஒரு பார்வைக்காக காத்திருந்தான்.

அவளோடு யாரும் பேசினாலும் கோபம் , என தனக்குள் போராடயவன் அவள் பக்கம் யோசிக்க நிதர்சனம் உணர்த்தியது.

அவளோடு அன்பா ,பாசமா தான் பேசியதும் இல்லை , பழகியதும் இல்லை கோபம், கோபம் மட்டுமே அப்படி இருக்க தன் காதலை எப்படி ஏற்றுக் கொள்வாள்.

அதன் பின் தான் அவளுடன் அவன் சகஜமாக பேசத் தொடங்கியதே, அவளின் பார்வை அவனை தழுவுவதை சமீபமாக உணரத் தொடங்கினான்.

தன் மேசை மேல் சகஸ்தாவின் இன்டர்ட் முடிவடைந்ததை குறிப்பிட்டு சர்விஸ் கடிதமும் கேட்டு கடிதம் கொடுத்திருந்தாள்.

அதனைப் பார்த்தபடி தன் எண்ணத்தில் மூழ்கியிருந்தவனை அலைபேசி நிகழுலகத்திற்கு கொண்டு வந்தது.

அலைபேசியை எடுத்து காதில் வைக்க ஸ்ரீ தான் எடுத்திருந்தாள்."சொல்லுக்கா ம்ம் ஓகே ஓகே" என்று அலைபேசியை துண்டித்தாள்.

அலுவலக அறையை விட்டு வெளியேறியவன் வரும் வழியில் ஐஸ்கிரீம் பெக்கை வாங்கியவன் வீட்டை நோக்கி காரைச் செலுத்தினான்.

வீட்டிற்கு வர "ஹாய் அத்தான்" என அவன் தோளில் வந்து தொங்கினாள்.அத்தை மகள் ரத்னா.

தன்னில் இருந்து அவளை பிரித்தவன்.ஒரு தலையசைப்புடன் வாங்கிய ஐஸ்கிரீமை அங்கிருந்த ஸ்ரீயிடம் கொடுத்து விட்டு தனதறைக்கு விரைந்தான்.

படியால் ஏறும் போது சகஸ்தா படியினால் இறங்கிக் கொண்டிருந்தாள்.அவள் முகத்திலோ ஏதோ ஒன்று,அவள் பார்வையோ ரத்னாவையும்,ரிஷியையும் மாறி மாறிப் பார்க்க,அவளை சில நொடி அழுத்தமாகப் பார்த்தவன் விரைந்தது அறைக்குள் நுழைந்தாள்.

இரவுணவின் போது கூட ரத்னா ரிஷி மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வதாகவே தோன்றியது.

அவளின் உடை வேறு முகம் சுளிக்க வைத்தது,முட்டி வரையான சாட்ஸ் மற்றும் கை இல்லாத உடலை ஒட்டியதான டீ சர்ட் என அணிந்திருந்தாள்.

ரிஷியோ சகஸ்தாவைப் பார்க்க ,அவளோ அமைதியாக உணவை உண்டு கொண்டிருந்தாள்.

ரிஷியின் மனதில் சகஸ்தா இருப்பதை ஸ்ரீ கண்டு கொண்டாள்.இருப்பினும் யாராவது ஒருவர் வாய் திறந்தால் தான் தெரியும் ஆகவே ஸ்ரீயும் நடப்பதை வேடிக்கை பார்த்தாள்.

ரிஷியோ தாயைப் பார்க்க அவருக்கோ சங்கடம் ,"அத்த நான் ரிஷி அத்தான் பக்கத்து அறைல தங்கிகுறன் என்றாள்.
அங்க சகஸ்தா இருக்கா நீ ஸ்ரீ பக்கத்து அறைல தங்கிக்கோ என்றார் அவர்.
.
அப்போது தான் சகஸ்தாவை ரத்னா முறைத்துப் பார்க்க அவளோ தனது வேலையை செய்து கொண்டிருந்தாள். அதாவது உணவுன்னும் வேலையை செய்து கொண்டிருந்தாள்.

அடுத்த நாளும் விடிந்தது,ரத்னாவும் வோரிங்கா இருக்கு என ரிஷியுடன் தொங்கியபடி அலுவலகம் வந்தாள், பின் ரிஷியின் அறையில் கொஞ்ச நேரம் இருந்தவள் ஆஃபிஸ சுற்றி பார்த்துடு வாரன் என வெளியே சென்றாள்.ரிஷியும் அவள் வழ வழ பேச்சில் எரிச்சலடைந்தவன். ஓகே என்றான் 

ரத்னா ஆபிஸை சுற்றி வரும் போது சகஸ்தாவையும் கண்டு கொண்டாள்."ஓ இவ இங்க தான் வேலை செய்றாளா??" என எண்ணியபடி, அங்கிருந்து சில அலுவல ஊழியர்களுடன் இயல்பாக நட்பாக பேசிப் பழகினாள்.

இரண்டு மூன்று நாட்கள் ஆஃபிஸ் வந்தாள் ரத்னாஅங்கு வேலை செய்யும் ஊழியர்களுடன் பேசும் போது.......

"என்ன மேம் அடிக்கடி இபிஸ் வாரீங்க என இழுக்க ,அவளோ வெட்கப்பட்டபடி ,"ம்ம் உங்க சாரால் என்ன விட்டுது இருக்க முடியல ,

"வாவ் கங்ராட்ஸ் மேம் எப்போ வெடிங் ....."

"கமிங் சூன் என்றாள்" அக் கதையோ புகைந்து புகைந்து சகஸ்தாவிடமும் போய்ச் சேர்ந்தது.

ஹாய் ப்ரண்ட்ஸ் 😁
மனதில் நின்றவள் 07
படித்து எப்படி இருக்குனு சொல்லுங்க.......


   
ReplyQuote

You cannot copy content of this page