All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 06

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் 6

அடுத்த நாள் அலுவலகம் வந்த சகஸ்தாவின் முகமே சரி இல்லை யாரும் இது பற்றி கேட்டால் தலைவலி என்று சமாளித்து விடுகிறாள்.

சகஸ்தாவை தனது அறையில் இருந்த சிசிடிவி மூலம் கவனித்த ரிஷி அவளை இண்டர் காமில் அழைத்தான்.

" மிஸ் சகஸ்தா கம் டு மை கேபின்" என்றான் அவளும் முகத்தை கழுவிக்கொண்டு உள் நுழைய அவள் நேற்று கொடுத்த ரிப்போர்ட்டை காட்டியவன் அதில் அன்றைய தரவுகள் யாவும் பிழையாக தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

"சாரி சார்" இனி சரியா செய்றன் என்றாள் படபடப்புடன் அவள் நார்மலாக இல்லை என எண்ணியவன் அவள் ரிப்போர்ட்டை தன் பக்கம் இழுக்க அவனும் கையை ரிப்போர்ட் மீது வைத்தான்.

அவள் கலங்கிய கண்ணுடன் அவனை நிமிர்ந்து பார்க்க,தான் பிழையை சுட்டிக் காட்டியதால் கலங்குகிறாளோ என எண்ணியவன் இயன்றவரை குரலில் மென்மையாக்கி ஈஸி ஈஸி என்றான்.

கண்ணீர் அப்பவோ இப்பவோ என வழியும் நிலை அவனை ஏறிட்டு பார்க்கவும் கைகள் நடுங்க ரிப்போர்ட்டை எடுத்தாள் அதில் பதறியவன்.

அவள் கைகளைப் பிடித்தபடி "என்ன ஆச்சு பேபி என மென்மையாக வீணவ" கண்ணில் இருந்து பொல பொல என கண்ணீர் வழிந்தது.

அவளை இருக்கையில் அமர வைத்தவன் கிளாசில் தண்ணீரை எடுத்துக் கொடுக்க அவள் கைகளை ஆதரவாக பற்றிய படி "என்னாச்சும்மா" என கேட்க.

அவளோ தேமித் தேமி அழுதபடி கூறத் தொடங்கினாள்.

கரன் தன்னிடம் லவ்வ சொல்லி தான் மறுத்து நண்பன் எனக் கூறியதை சொல்ல......

ரிஷியின் மனமோ அட லவ் ஹார்மோன் இவளுக்கு இல்லவே இல்ல போல என மனதில் செல்லமாக திட்டிக் கொண்டான்.

மேலும் தொடர்ந்தவள் சமீபமாக தன்னிடம் அதீத உரிமை தொட்டு பேசுவது என இருந்த கரன் நேற்று ஒன் நைட் ஸ்டேண்ட் எப்படி பானு என கேட்க அவன் பேச்சில் கோபம் அடைந்தவள் அவ்விடம் விட்டு அகன்றாள்.

அன்று மாலை பேருந்திக்கு காத்திருக்கும் போது பைக்கில் தனது நண்பனுடன் வந்தான் கரன்" மச்சான் நான் சொன்னாள் இவ தாண்டா என சொல்ல"

"மச்சி" என அவனும் அவளை அசிங்கமாக வர்ணிக்க அவளுக்கு அருவருப்பில் உடல் கூசி போனது பேருந்தும் அப்போது வர உடனே அதில் ஏறிக்கொண்டாள்.

இன்றும் அப்படி என ரிஷியிடம் சொல்லி தேமித் தேமி அழ ரிஷிக்கோ கோபத்தில் உடல் இறுகியது.

அவளை ஆறுதல் படுத்தியவன் அவள்,தான் ரிப்போர்ட்டை சரி செய்வதாக கூற வேண்டாம் "வீட்ட போய் ரெஸ்ட் எடு" என்றவன்.

தானே அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எதுவுமே பேசாது அவனுடன் பயணித்தாள்.

கார் வீட்டை அடைந்ததும் இதப் பற்றி வீட்ட சொல்ல வேணாம் தூங்கி ரெஸ்ட் எடு என அவளை இறக்கி விட்டவன் தாயிடம் அவளுக்கு காய்ச்சல் எனக்கூறி ஆபீஸ்க்கு கிளம்பினான்.

பாரசிடமால் மாத்திரையை வேணி கொடுக்க அதனை அருந்தியவள் "ஆன்ட்டி நான் தூங்குறேன் என தன் அறைக்கு சென்றாள்.

ஆபீஸ் வந்தவன் கரணை வரவழைத்து அவன் வந்ததும் அவன் முன்பு ஒரு லெட்டர் வைத்தான் அதனைப் பார்த்ததும் கரனுக்கோ அதிர்ச்சி

"சார் நான் என்ன தப்பு பண்ணேன்" என பதைப்பதைப்புடன் கேட்க என்னோட ஸ்டாஃபையே நீ டீஸ் பண்ணி இருக்க.

"உன்னை வேலையில் இருந்து தூக்கி இனி எங்கேயும் வேலை செய்யாத அளவுக்கு தான் உன்ன மார்க்கோட அனுப்புறேன்." மேலும் தொடர்ந்த ரிஷி

உன் மேல போலீஸ்ல கம்ளைன்ட் பண்ற சின்ன விஷயம் ஆனா இதெல்லாம் என் ரிசாட்ர பேர்தான் கெடும் சோ நீ போகலாம்" என வெளியே கையை காட்ட ரிஷியின் காலை பிடித்தவன்.

"சார் நான் ப்ளீஸ், இப்படி இனி பண்ண மாட்டேன்".

இந்த வேலை எனக்கு ரொம்ப அவசியம் சார். என் தங்கச்சிக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கன். என கெஞ்ச அவனை அழுத்தமாக பார்த்த ரிஷி.

"சகஸ்தாவுக்கும் உன் தங்கச்சி வயசு தானே இருக்கும் என்றான்" கரனுக்கு நா எளவே இல்லை கூடுவாரோரடு கூடிய நட்பு தன்னை எங்கு கொண்டு வந்துள்ளது என தன்னையே நொந்தவன் தன் வேலை பறிபோனதால் மனம் உடைந்து அலுவலகத்தை விட்டு தளர்ந்த நடையுடன் வெளியேறினான்.

ரிஷிகோ சகஸ்தாவின் நினைவுதான் சின்னப் பிள்ளை போல் செயல் தானே அவளை அவன்பால் இழுத்துச் சென்றது எப்போதும் சிரித்தபடி தெரியும் அவள் முகமே கண்முன் தோன்றியது.

மாத்திரையின் வீரியத்தால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் சகஸ்தா மதிய உணவிற்கு அவளை அழைக்க வந்த வேணி அவள் தூங்குவதைக் கண்டு அறையை சுற்றிப் பார்க்க அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது.

மேசையின் ஒருபுறம் சில ஓவியங்கள் பரப்பப்பட்டிருந்தது அதை எடுத்துப் பார்த்துவிட்டு." சாஸ்தாம்மா எழுந்திருடா என எழுப்பினார் வேணி.

அவள் எழும்பாது இருக்க மறுபடியும் அவர் "சகஸ்தாமா எழுந்திரு சாப்பிட்டு தூங்குமா" என எழுப்ப அப்போது கண் விழித்தவள் வேணியைக் கண்டு அவசரமாக எழுந்தமர......

" சாப்பிடாம தூங்கிறஅதான எழுப்பினன்.எழுந்து சாப்பிட்டு தூங்குடா" என்றார்.அவளும் "நீங்க போங்க ஆன்டி பீரஸாகி வாரன் " என்றாள்.

வேணியும் கீழிறங்கிச் செல்ல மூவரும் மதிய உணவை உண்டனர்.அனைத்தையும் சுத்தம் செய்தபடி வேலையை இருவரும் முடித்தனர்.

அன்று மாலை அலுவலகம் இருந்து விரைவாக வந்தான் ரிஷி , வந்தவன் தாய் தந்த காஃபியை பருகியவனது கண்கள் சகஸ்தாவையே தேடியது.

"ம்மா ஸ்ரீ எப்போ வாரா? "எனக் கேட்க ,அவரோ " இரவைக்கு வந்துருவா கிளம்பிடாங்களாம் ஃபோன் பண்ணா என்றார்.

"ம்ம் என்றபடி தனதறைக்குச் சென்றவன் முதல் வேலையாக சகஸ்தாவின் அறைக்கும் தனது அறைக்கும் இடையிலான கதைத் திறக்க அதுவோ மற்றைய பக்கம் பூட்டப்பட்டிருந்தது.

"இவள !!என பல்லைக் கடித்தபடி தனது அறையில் இருந்து வெளியேறியவன் அவளது அறையை திறக்க அதுவோ திறந்து கொண்டது.

உள்ளே அவள் இல்லை எங்க போயிருப்பா ??? என அவளுக்கு அழைப்பெடுக்க சில ரிங்கிலே அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ பேபி எங்க இருக்க"எனக் கேட்க நான் பீச்ல என்றாள் உட்சாகமற்ற குரலில் ,தங்களது வீட்டிற்குப் பின்புறம் சிறிது தொலைவில் தான் பீச் நட்ந்தே போகலாம்.

ரிஷியும் பீச்சை நோக்கிச் செல்ல அங்கு சகஸ்தாவோ சவுக்கு மரமொன்றின் கீழ் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்.ஆங்காங்கு ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

இதோ அத்தியாயம் 06
படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க 😁


   
ReplyQuote

You cannot copy content of this page