About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 14
'ஹாஹ்ஹா.... ' என்ற சிரிப்புச் சத்தம் அங்கிருந்த ப்ரஜித்தையும் துகிராவையும் ஒருசேர திரும்பி இளவேந்தனை பார்க்க வைத்தது.
பார்த்தார்கள் என்பதை விட முறைத்தார்கள் என்பது தான் சரி. ஏனென்றால் அவர்கள் இருவர் மட்டுமல்ல இன்னும் சிலரும் இருந்தனர். அவர்கள் தீவிரமான ஒரு ஆலோசனையில் இருந்தனர். மீட்டிங் ஹாலில் இருந்தான் இளா.
ஒரு காஸ்மெட்டிக் நிறுவனத்துடன் டையப் செய்திருந்த ப்ரஜித் அதன் தயாரிப்பை நம் நாட்டில் சந்தைப்படுத்தும் டிஸ்கசனில் இருக்க, இடையே கேட்ட சிரிப்புச் சத்தம் அவனுக்கு பிடிக்கவில்லை. அவனை விடவும் கடுப்பாகி முறைத்தது துகிரா தான்.
இருவரும் வைத்த கண் வாங்காது அவனைப் பார்க்க, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தொண்டையைச் சொருமி அதை கட்டுப்படுத்த எத்தனையோ முயன்றும் ஃபோன் திரையில் தெரிந்த புகைப்படம் அவனின் சிரிப்பை கட்டவிழ்த்து விட்டது.
"மிஸ்டர் இளவேந்தன்." என்ற ப்ரஜித், 'என்னதிது.?' என்பது போல் பார்வையால் கேட்க,
"ஸாரி பாஸ். ஸாரி கைஸ்." என வருத்ததைத் தெரிவித்து விட்டு,
"Excuse me." என்ற படி அந்த ஹாலை காலி செய்து விட்டு வெளியே வந்தான் ஃபோனுடன்.
‘எப்படி இருந்தது முதல் நாள்?’ என அவன் கேட்டு அனுப்பிய வாட்சப் குறுஞ்செய்திக்கு கோகோ அனுப்பி வைத்த புகைப்படம் அப்படி.
ஒரு சென்ட் விளம்பத்தில் புயல் காற்று வீசும். ஒரு ஆண் மட்டும் கம்பியைப் பிடித்துக் கொண்டு காற்றில் கொடி போல் பறப்பானே, அதை அனுப்பி ரிபேக்கா புயல் தன்னை தாக்கி விட்டதாக கூறியிருந்தாள்.
புன்னகை மாறா அதே முகத்துடன் அவளுக்கு அழைப்பு விடுத்தவன், "எப்படி ரிபேக்காவ தடுத்த.?" என்றான்.
"நா எங்க தடுத்தேன். புயல் வந்திட்டு போன பூஞ்சோல மாறி என்னப் பிச்சி எரிஞ்சிட்டாங்க. என்னால அவங்கள தடுக்கவே முடியல. அவங்க கோவம் அடங்குற வர காத்துல நாந்தா பறந்தேன். என்னோட ராஜ மாதா என்ன திட்டிட்டாங்க." என அழுகுரலில் கூற இந்த பக்கம் இளா, அவள் திட்டு வாங்கும் காட்சியை மனதில் ஓட விட்டு சிரித்தான்.
ரிபேக்காவைப் பற்றி அவனுக்குத்தான் தெரியுமே. பார்க்க அமைதியாக சாதுவாக இருந்தாலும் வேலை என்று வந்து விட்டால் அவள் எடுக்கும் அவதாரமே வேறாக இருக்கும். எத்தனை முறை நேரில் பார்த்திருக்கிறான். இன்று சிக்கிய ஆடு கோகோ போலும்.
"ரொம்பலாம் லேட் இல்ல அத்தான். ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான் தாமதமா போனோன்."
"அடிப்பாவி.! ஒரு மணி நேரங்கிறது 60 நிமிடம்."
"360 செக்கேன்ட். அதான?"
"ஆமாம். பத்து நிமிடம் அஞ்சி நிமிசம்னா கூட சரின்னு சொல்லலாம். ஏ அவ்ளோ நேரம்.? முதல் நாள் வேலைக்கி போற. இப்படியா? என்ன பண்ண நீ? " என அடுத்தடுத்து கேள்வி கேட்க, அவனிடம் 'தூங்கி எழ நேரமானது' என பொய் கூறி சமாளித்தாள்.
ஏனோ மனம் சத்யாவை ஃபாலோ செய்ததை சொல்ல விடாததால் கள்ளத்தனம் செய்தாள்.
"சரி முதல் நாள் எப்படி இருந்தது?."
"சத்தியமா நல்லாவே இல்ல அத்தான். என்ன அவ்ளோ நேரம் காய்ச்சி எடுத்த ரிபேக்கா மேம் தெய்வம்னு ஃபில் பண்ண வச்சிட்டாங்க என்னோட கொலிக்ஸ்."
"ஏ?. புல்லிங் பண்ணாங்களா?" என்றவனுக்கு காலையில் நடந்ததை விளக்கிக் கூறினாள்.
"இதோ பாரு. புதுசா இந்த ஆஃபிஸ்க்கு யாரும் தேவையே இல்லன்னாலும் உன்ன நா அப்பாயின் பண்ண காரணம் உன்னோட இன்ஸ்டா வீடியோஸ் தான். அது எக்சலண்டா க்ரியேட் பண்ணிருந்த. உன்னோட கிரியேட்டிவிட்டி சூப்பரா இருந்தது. பட் அத மட்டும் வச்சி உன்னால இந்த கம்பெனில காலம் தள்ள முடியாது. உன்னோட திறம என்னென்னு காட்டனும். அதவிட முக்கியம் சின்சியாரிடி. ஒரு பண்சுவாலிட்டி இல்லாம விளையாடிட்டு இருந்தா இங்க உனக்கு வேலை கிடையாது. என்னால கான்ட்ராக்ட்ட கேன்சல் பண்ணி இப்பவே தூரத்தி விட முடியும். நா அத செய்யக் கூடாதுன்னா. "
"இனி சின்சியரா இருப்பேன் மேம். சாரி." எனச் சின்னக் குரலில் கூறினாள் கோகோ.
" குட். ஒரு தப்பு, சின்னதா ஒரு கம்பளைண்ட் உம்மேல விழுந்தாலும் தயவு தாட்சண்யம் பாக்க மாட்டேன். கெட் அட். " என்க, கோகோ வேகமாக வெளியேறப் போனாள்,
"ஹேய்! வனிஷா யாருன்னு கேட்டு அவங்க கூட ஜாயின் பண்ணிக்க. வீக்லி ஒன்ஸ் உன்னோட ரிப்போர்ட்ட நீ எங்கிட்ட சப்மிட் பண்ணனும். யூ மே கோ நௌ." என்றாள் ரிபேக்கா கடுப்புடன்.
வெளியே வந்தவள் " ஹூ இஸ் வனிஷா மேம்?" என்க, எந்தத் தலையிடும் அவளைத் திரும்பி பார்க்கவில்லை. சில நொடிகள் அவள் அங்கேயே நிற்க, அப்படி ஒருத்தி இல்லை என்பது போல் அனைவரும் தத்தம் பணியில் இருந்தனர்.
"ஓகே! நா ரிபேக்கா மேம்கிட்டயே கேட்டுக்கிறேன்." என உள்ளே சென்று கேட்க,
"உனக்கு நாந்தா இங்க இருக்குற எல்லாரயும் இன்டர்டியூஸ் பண்ணி வைக்கனுமா?" என்க, மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தாள். இதை ஒருவித திரும்பதியுடன் ரசித்த வனிஷா ப்ரியங்காவின் ஆள்.
திட்டு வாங்கிய பின், 'நான் தான் அது...' என அவளை பின்னே வருமாறு அழைத்துச் சென்று, ஒரு ஐந்து பேர் கொண்ட குழுவைக் காட்டி விட்டு, எதுவும் சொல்லாது சென்றுவிட்டாள்.
"ஹாய். ஐ ஆம் கோகோ. " என வழியச் சென்று தன்னை அறிமுகம் செய்ய, வனிஷாவின் முறையான அறிமுகம் இல்லாதமையால் யாரும் அவளை கண்டு கொள்ளவில்லை.
ஏன் ஒரு நாற்காலி கூட குடுக்காது இருக்க, கோகோவிற்கு எதுவோ போல் ஆனது. ஆனாலும், "லட்சியத்த அடைய பல தடைக்கற்கள் வரத் தான் செய்யும். அத படிக்கல்லா நினைச்சிக்க வேண்டியது தான்." என அவளே சென்று ஒரு நாற்காலியை தேடிப்பிடித்து லேப்டாப்பைத் திறந்து அமர்ந்து கொண்டாள்.
ஆனால், என்ன செய்வது என்று தான் தெரியவில்லை. கன்னத்தை கரத்தில் தாங்கிக் கொண்டு மடிக்கணினியின் திரையை வெறித்தவளுக்கு நித்திரா தேவி வேலை குடுத்தார்.
"சும்மா இருந்தா எனக்கு தா தூக்கம் வந்திடுமே! அதுனால தூங்கிட்டேன் அத்தான். என்ன எழுப்பி விடாம அந்த வாணரங்க ரிபேக்கா மேம கூட்டீட்டு வந்து எம்முன்னாடி நிக்க வச்சிடுச்சிங்க. நாந்தூங்கி வழிய, அவங்க பில்லோ வேணுமா பெட்ஷீட் வேணுமான்னு கேட்க, புயல் காத்தோட சேந்து அட மழையையும் எம்மேல கொட்டிட்டு போய்ட்டாங்க." என புலம்பு புலம்புவென புலம்பித் தள்ளி விட்டாள்.
அதை கேட்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
"முதல் நாள். இதுக்கே இப்படின்னா. இன்னும் ஒரு வர்ஷம் எப்படி சமாளிப்ப." என நக்கலாக இளா கேட்க,
"தெரியல. ஆனா நா பின் வாங்க மாட்டேன். கான்ட்ராக்ட்ல போட்டிருக்குற நாள் வர நா அங்க தா வேல பாப்பேன். வேலைய நல்லா கத்துக்கிட்டு சென்னைல இவங்களுக்கு போட்டியா ஒரு ஏஜென்சி தொடங்கி, விருது வாங்குவேன்." என்றவளின் தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு, ‘ச்ச.. எவ்ளோ நம்பிக்கை இந்த பிள்ளைக்கி.’ ஒன் நினைக்கத் தோன்றியது.
தெரியாத ஊரில் தெரியாத மொழி பேசுபவர்கள் மத்தியில் புதிதாக ஒரு ஆள் சேரும் போது சில அசௌகரியங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்கு பயந்து போனால், அடுத்த அடியை எடுத்து கூட வைக்க இயலாது. அதனால் அவளுக்கு சில அறிவுரைகளை வாரி வழங்க,
" போதும் அத்தான். உங்க அட்வைஸ்ஸ கேக்குற அளவுக்கு எங்கிட்ட தெம்பில்ல. இன்னைக்கி நா லன்ச் சாப்பிடவே இல்ல தெரியுமா.?"
"ஏ?"
"யாருமே என்ன கம் டூ ஜாயின் வித் அஸ் ன்னு கூப்பிடல. அத்தோட நா சாப்பாடும் எடுத்திட்டு போகல" என்றவளிடம்,
"உனக்கு தா சமைக்க எல்லாத் திங்க்ஸ்ஸையும் நா வாங்கிக் குடுத்திருந்தேனே. ஏ செய்யல. " என்றான் வேகமாக.
அரிசி, பருப்பு, சாதத்தில் பிசைந்து சாப்பிட சில தொக்கு வகைகள், ஊறுகாய், ப்ரெட், பாஸ்தா, நூடுல் போன்ற உடனடியாக செய்து சாப்பிடவென வந்த அன்றே வாங்கி குடுத்து விட்டுத் தான் வந்தான். அருகில் இருக்கும் சூப்பர் மார்கெட்களுக்கு அழைத்துச் சென்று சில அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடத்தையும் காட்டி வைத்திருந்தான்.
அவளின் அறைகுறை ஹிந்தியால் யாரின் கேலிக்கும் ஆளாகிடக் கூடாது என்று தான் ஹாஸ்டலை விடுத்து தனி வீடே பார்த்தது.
அப்படியிருக்க ஏன் பிறரின் கேலிக்கி ஆளானாள் என்று கேட்டான்,
" டிப்பன் பாக்ஸ்ல எடுத்திட்டு போனேன் தான். பட் அத சத்யாட்ட குடுத்திட்டேன்." என்றுவிட்டு நாக்கை கடவாய் பற்களுக்குள் வைத்துக் கொண்டாள், சத்யா பெயரை சொல்லியதால்.
"யாரு சத்யா.? உன்னோட ஃப்ரெண்ட்டா!" என கேள்வியை சரியாக கேட்டு பதிலயும் சொல்லி அவனே அது பெண் என தவறாக நினைத்துக் கொண்டான்.
"யாரு அந்த பொண்ணு?"
'பொண்ணா?' என விழி விரித்தாள் கோகோ.
"அந்த சத்யா எப்டி உனக்கு பழக்கம்னு கேட்டேன். எந்த ஊரு. நிச்சயம் வேல பாக்குற இடத்துல பழகிருக்க மாட்ட. ட்ரெயில் பாத்தியா? இல்ல அப்பார்ட்மெண்ட்ல பழக்கமா?" என்றவன் சடுதியில் அவளுக்கு தந்தையாக அண்ணனாக மாறி பல கேள்விகளை கேட்டான்.
"ட்ரெயின் அத்தான். அதுவும் போறப்ப மட்டும் தான். தமிழ்ல பேசுனா. அதா பழகினேன். " என்றாள் குதுகலத்துடன்.
அவன் தான் யார் என்று கேட்டு ஆப்ஷன் தந்தானே. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தால் போதாது. ஏன் ஆப்ஷனில் இல்லாத ஒன்றைச் சொல்லி சத்யா யார் என்று விளக்கம் குடுப்பானேன். அதனால் வந்த சந்தோஷம்.
அப்போது கண்ணாடி கதவுகளுக்கு பின் அனைவரும் எழுந்து நிற்பது தெரிந்தது. அது மீட்டிங்கை முடித்து விட்டனர் என்று சொல்லியது.
மற்றவர்கள் வெளியேறும் முன் வெளியேறிய துகிராவிற்கு இளவேந்தன் அந்த வளாகத்தில் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தது தெளிவாக காதில் கேட்டது. இல்லை அவள் கேட்க வேண்டும் என்றே பேசினானா?. தெரியாது.
"சட்டர்டே லீவ் தான.?"
"ம்... "
"நாம வெளில போலாமா? நீ மும்பைல பாக்க வேண்டிய இடம் நிறைய இருக்கு. சட்டர் டே மார்னிங் உன்ன வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்." என்க., துகிரா அவனை முறைப்பதை விடவே இல்லை.
இவன் அவளுக்கு தன் முகத்தைக் காட்டாது முதுகைக் காட்டிக் கொண்டு சிரித்து சிரித்து பேச, இவள் நின்று கொண்டு உக்கிரமாக முறைக்க, என்ன நடக்கிறது இவர்களுக்குள் என்ற கேள்வி நமக்கு மட்டுமல்ல ப்ரஜித்திற்கும் எழுந்திருக்க வேண்டும்.
"என்னாச்சி துகி. உனக்கு டென்னிஸ் க்ளாஸ் இருக்குன்னு சொன்ன. கிளம்பளயா?" என்றான்.
"என்னோட கார் ரிப்பேர். " என்றதும், ப்ரஜித் இளவேந்தனை அழைத்தான்.
ப்ரஜித் வெளியே வருவதை இளா, அறிந்து காலை கட் செய்து விட்டு பவ்யமாக அவனின் முன் வந்து நிற்க, ப்ரஜித் துகிராவை ட்ராப் செய்யும் படி பணித்தான்.
"நா டாக்சி புக் பண்ணி மேடம பத்திரமா அனுப்பி வைக்கிறேன் பாஸ்.? என்க,.
"ஏ? உ பைக் என்னாச்சி?" என்ற துகிராவிற்கு பதில் சொல்லாது,
"நான் கால்டாக்சி புக் பண்ணிட்டேன் பாஸ். டாக்ஸி நம்பர்..." என்றவனிடம்,
"டாக்ஸி புக் பண்றதா இருந்தா நானே புக் பண்ணிருப்பேன். I have a phone. எனக்கு எப்படி டாக்ஸி புக் பண்றதுன்னு நல்லாவேத் தெரியும். " என கோவத்துடன் தடக் தடகென நடந்து சென்றாள் துகிரா.
இளா சின்னத் தோல் குளுக்கலுடன் தன் நாற்
காலியில் அமர்ந்து கொண்டான்.
ப்ரஜித்திற்கு இந்த இருவருமே வித்தியாசமாகத் தெரிந்தனர்.
அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்.
மயக்கம் தொடரும்...
மயக்கம் : 15
https://kavichandranovels.com/community/topicid/195/
@vsv11 கோகோ 🤣🤣🤣 அந்த சத்யன் பச்சை விழிகாரன் நீ சைட் அடிச்ச கதை எல்லாம் அத்தான் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லையா 🤭
அப்புறம் அம்மணி செம்மத்தையா வாங்கி கட்டி இருப்பாங்க..துகிக்கு ஏன் இளா மேல காண்டு 😳😂 ஆல்ரெடி கனெக்ஷன் வெச்சி இருபீங்களோ அதான் இளா அவள புகைச்சல் கொடுத்துட்டு அசால்ட்டா போறான்.. நடுவில் குழம்பிய குட்டையான ப்ரஜித் நிலை 👉😵😫🤥😲🤯
Latest Post: நம் காதல் நாணலன்றோ Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page