About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நைட் லைஃப் - 1
சென்னை விமான நிலையத்தில் தனியார் தாரை விமானம் ஒன்று தரை இறங்கும் இடத்தில் பத்து பதினைந்து பேர் நின்றிருந்தார்கள். வாட்டசாட்டமாய் கருப்பு நிற பனியன் அணிந்து பதினான்கு பேர் வரிசையாக பாதுகாப்பிற்கு நிற்க வெள்ளை வேட்டி சட்டையில் நடுத்தர வயதுடைய சரவணன் குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டு இருந்தான். அவன் முகத்திலே பயம் அப்பட்டமாய் தெரிந்தது. காரணம் வரப்போகிறவன் அப்படி.
கடல் கடந்து வருபவன் தரையிறங்கிய மறு நொடியே வானத்திற்கும் பூமியிற்கும் குதிப்பான் என்று அவனுக்கு தெரியும். அவனை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் நின்றிருந்தான். “ஐயோ, இவரை சமாளிக்க என்ன மட்டும் தனியா அனுப்பி வச்சிட்டாங்க.. வீடு போற வர எப்படி சமாளிக்க போறேனோ..” என சரவணன் தன் போக்கில் புலம்பிக் கொண்டு இருக்க, பெர்லினில் இருந்து வந்த தாரை விமானம் ஒன்று அங்கு மிதமான வேகத்தில் தரை இறங்கியது.
இரண்டு விமான பணிப் பெண்கள் கதவை திறந்திட அடர் நீல நிற கோட் சூட்டில் இறுகிய முகத்துடன், கண்களில் கோபம் கொப்பளிக்க வேக வேகமாய் இறங்கி வந்தான் ஆல்வின் ஹிர்திக். கோப நடையுடன் சரவணனை நோக்கி வந்தவன், “வாட் த ஹெல் இஸ் ஹாப்பனிங் சரவணன்? Ein Problem, das Sie nicht einfach lösen können?” என வந்ததும் ஜெர்மனில் திட்ட ஆரம்பிக்க அவன் புரியாமல் முழித்தான். அதில் கடுப்பில் கண்களை மூடி திறந்தவன், “இங்க நடந்த ஒரு பிரச்சனைய மீடியா முழுக்க பரப்பி எனக்கு ஏகப்பட்ட நஸ்ட்டத்தை உண்டாக்கி வச்சி இருக்கீங்க.. எங்க உங்க ஐயா.. பேருக்கு தான் சி.ம் பையன், அவன் பொறுப்புல விட்ட கம்பெனிய ஒழுங்கா பாத்துக்க துப்பு இல்ல?” கோவத்தில் அவனின் சித்தப்பா மகனை பொரிந்து தள்ள சரவணன் அவனை சமாதானம் செய்யும் வழி அறியாமல் நின்றிருந்தான்.
“ஆல்வின், ப்ளீஸ் கோவப்படாதிங்க.. சார் முடிஞ்ச அளவு சமாளிக்க பாத்துட்டு இருக்காரு.. நீங்க வாங்க நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. ஐயா உங்களுக்காக வெயிட் பண்றாரு.” என்று கூறிய சரவணா பயத்துடன் ஒரு ஆடி காரின் கதவை திறந்து விட கோபத்துடனே காரில் ஏறிக் கொண்டான் ஆல்வின்.
அவனின் கார் கிளம்ப மற்ற ஐந்து கார்களும் கிளம்பியது. சென்னையில் வெப்ப அலையை காட்டிலும் அவனின் கோப அலை பல மடங்கு அதிகமாய் இருந்தது. அவனின் கோவத்திற்கு இரண்டு காரணம் இருக்கிறது. முதல் காரணம் அவனின் இ-காமர்ஸ் செயலியில் நடந்த பிரச்சனை. இன்னொன்று அவனுக்கு மருந்தாக கசக்கும் தமிழ்நாடு. ஆம், ஆல்வினுக்கு தமிழ்நாடு என்றாலே பிடிக்காத. இன்று வர வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டான்.
ஆல்வின் ஹிர்திக், ஜெர்மனில் பிறந்து படித்து வளர்ந்த ஆணழகன். அவனின் பூர்வீகம் தமிழ்நாடு தான். அவனின் அப்பா சிவகுமார் தமிழ்நாட்டை சேர்ந்தவர். படிக்கும் காலத்தில் உடன் படிக்கும் ஜெர்மன் நாட்டு பைங்கிளியை காதலித்து கரம் கோர்த்து ஜெர்மன் பறந்து விட்டார். ஆல்வின் அம்மா ஸ்டெல்லாவின் தந்தை வழி தாத்தா தமிழ்நாட்டை சேர்ந்தவர். அதனால் அவருக்கு தமிழ் மீது அலாதி பிரியம். இருவரும் ஜெர்மனில் குடிபேர்த்திட சிவகுமார் அங்கு இருக்கும் இன்னொரு தமிழ் நண்பனுடன் சேர்ந்து தொழிலை துவங்கினார். ஆரம்பத்தில் கட்டுமான தொழிலில் ஆரம்பித்தவர்கள், இரு நண்பர்களும் சேர்ந்து அதனை பல கிளைகள் ஆக்கி திறம்பட நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். பெரும்பாலும் வீட்டில் தமிழ் பேசுவதனால் ஆல்வினுக்கு தமிழ் நன்றாய் தெரியும். அவன் கல்லூரி படிப்பை படிப்பதற்கு கூட சென்னை வந்து இருந்தான். ஆனால் சிலபல காரணத்தினால் வெறுத்து விட்டு ஜெர்மனுக்கே சென்று விட்டான்.
ஜெர்மனிலே படிப்பை முடித்தவன் அவன் அப்பா தொழிலை எடுத்துக் கொள்ளாமல் சுயமாய் ஒரு தொழிலை அவன் நண்பனுடன் தொடங்கினான். அவன் தந்தையை விட அவனுக்கு அபார வெற்றி கிடைத்தது. உலகம் முழுக்க அவனின் செயலில் புகழ்பெற்றது. ஸ்னப் அப் என்ற செயலியை உருவாக்கி இருந்தான். இணையதளம் மூலமாய் பொருட்களை வாங்கும் செயலி. இந்திய, ஜெர்மன், அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா என உலகில் இருக்கும் பல முக்கிய நாடுகளில் அவன் செயலி இயங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது தமிழ்நாட்டு கிளையில் அவன் செயலியை யாரோ ஹேக் (hack) செய்து விட்டார்கள், அதன் மூலமாய் பொது மக்களின் தகவல்கள் இணையதளத்தில் பரவிக் கொண்டு வருகிறது என்று செய்தி கிடைத்திட உடனே மின்னல் வேகத்தில் புறப்பட்டு வந்து விட்டான். இதில் அவன் அப்பா வேறு பிரச்னையை சரி செய்யாமல் ஜெர்மன் திரும்ப வரவே கூடாது என்று கட்டளையாக கூறி இருக்க கோவத்தில் பல்லை கடித்துக் கொண்டு காரில் அமர்ந்து இருந்தான்.
ஆல்வின் எரிமலையாக கொதித்துக் கொண்டு இருக்க சரவணன் அதன் வெப்பம் தாங்காமல் வெந்து எரிந்துக் கொண்டு இருந்தான். வீடு வந்ததும் சரவணன் கார் கதவை திறந்து விட, “இனிமேல் நீ எனக்கு அசிஸ்டன்ட்டா இருக்க வேணாம்..” என கோவத்துடன் கூறிய ஆல்வின் வீட்டின் உள்ளே புயலென நுழைய சரவணன் நிம்மதி மூச்சி விட்டான். பின்னே, எந்த நேரத்தில் எப்படி கடித்து குதருவான் என்ற பயத்தில் இனி இருக்க வேண்டாம் அல்லவா.
கடும் கோவத்தில் வருபவனை இன்முகத்துடன் வரவேற்றார் அவனின் சித்தப்பா. தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிதம்பரம்.
“வெல்கம் ஹோம் ஆல்வின் கண்ணா..” பாசமாக வரவேற்று அவனை கட்டிக் கொள்ள அவரை ஏகத்துக்கும் முறைத்தான் ஆல்வின். “என்ன நடக்குது அங்கிள் இங்க? இந்த பிரன்ச் ரோகன் பொறுப்புல தானே விட்டுட்டு போனேன்… எப்படி இது நடந்துச்சு.. மீடியாக்கு எப்படி விஷயம் போச்சு?” வந்ததுமே கோவ அம்புகளை எய்திட சிதம்பரம் அவனை அழைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார்.
“ரிலாக்ஸ் ஆல்வின்.. விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான் நான் இல்லன்னு சொல்லலை.. ஆனா தமிழ்நாடுல இப்போ வேற பிரச்சனை ஓடுது.. உன்னோட அப் மட்டும் ஹக் ஆகலை… ஏகப்பட்ட அப்ஸ் ஹக் ஆகி இருக்கு.. இது சீரிஸ் பிரச்சனையா இருக்கு..”
“அங்கிள் எனக்கு அதை பத்தி கவலை இல்ல.. இங்க நடக்குற பிரச்சனைனால எனக்கு மில்லியன் டாலர் கணக்குல லாஸ் ஆகிட்டு இருக்கு.. நேத்து நைட்டே மீடியாக்கு விஷயம் தெரிஞ்சி இருக்கு.. இதனால எனக்கு எத்தனை காண்ட்ராக்ட் கான்செல் ஆகி இருக்குன்னு தெரியுமா.. டேம்.. எல்லாமே மில்லியன் டாலர்ஸ் டீலேர்ஷிப்..” கோபமாக ஆல்வின் கூறிக் கொண்டு இருக்க அவனின் ஜெர்மன் அசிஸ்டன்ட் ஒருவன் ஆப்பிள் டேபிலட் ஒன்றை அவன் முன்னே நீட்டினான். சிவகுமார் தான் அவனுக்கு வீடியோ காலில் அழைத்து இருந்தார்.
“ஒஹ்.. ஷிட்..” வாய் விட்டே புலம்பிய ஆல்வின் அழைப்பை ஏற்றிட சிவகுமார் அவர் பங்கிற்கு கத்த ஆரம்பித்தார்.
“ஆல்வின் நீ லேன்ட் ஆகி முக்கால்மணி நேரம் ஆச்சு.. இன்னும் நீ உன்னோட கண்ட்ரோல்க்கு கொண்டு வரலை… என்ன கிழிச்சிட்டு இருக்க?”
“டாட்.. அதை பத்தி தான் நான் அங்கிள் கிட்ட பேசிட்டு இருக்கேன் சீக்கிரமே இதை எல்லாம் முடிச்சிட்டு நான் திரும்ப வரேன்..”
“இந்த பிரச்சனைய நீ கம்ப்ளீட்டா சால்வ் பண்ற வரைக்கும் நீ பெர்லின் வரவே கூடாது. இது என்னோட ஆர்டர். உன்னால என்னோட பிசினஸ் சர்கிள்ல இருக்குறவங்களும் என்ன கேள்வி கேக்குறாங்க.. வித்தின் டூ ஹார்ஸ்ல மீடியாவ உன்னோட கண்ட்ரோல்ல கொண்டு வா.. காட் இட்” என்று அதிகாரமாய் கூறியவர் அழைப்பை துண்டித்திட எரிச்சலில் தலையை பிடித்துக் கொண்டான் ஆல்வின். இனி அவன் தந்தை திரும்ப அழைக்கும் வரையிலும் தாம் இங்கு தான் இருக்க வேண்டும் என்று நினைக்கவே அவனுக்கு பாகற்காயாய் கசந்தது.
“பாத்திங்கல்ல அங்கிள்.. அவரு என்ன சொன்னாருன்னு.. முழுசா நான் சால்வ் பண்ணனுமா? ஹொவ் த ஹேக் இஸ் தட் ஈவன் பாசிபல்..”
“உன் நிலைமை புரியுது ஆல்வின்.. நீ கவலைபடாத.. ரோகன் போர்டு மெம்பெர்ஸ் எல்லாரையும் சமாளிக்க போய் இருக்கான்.. என் ஆளுங்களை அனுப்பி மீடியாவை கவர் பண்ண சொல்லி இருக்கேன்.. இப்போதிக்கு இந்த பிரச்சனைய முடிப்போம்..” ஆல்வின் தோளில் ஆதரவாக கைகளை பதித்து சமாதானம் கூறிட கடுப்புடனே அமர்ந்து இருந்தான் அவன்.
“எப்படி அங்கிள் இந்த விஷயம் மீடியாக்கு போச்சு? நீங்க இந்த ஸ்டேட் சி.ம் தானே.. எல்லலாமே உங்க கண்ட்ரோல்ல வச்சிக்க மாட்டிங்களா? இவ்ளோ பெரிய பிரச்சனை ஆக்கிட்டிங்க..”
“ஆல்வின் இது வேற மாதிரியான பிரச்சனை இதுல என்னால நேரடியா தலையிட முடியாது. ஒரு அரசியல்வாதியா எனக்கு ரெண்டு உலகம் இருக்கு.. இதுல நான் தலையிட்டா விஷயம் இன்னும் பெருசாகும்..”
“காட் இட் அங்கிள்.. ஆனா எப்படி நான் இந்த ஊருல இருக்க போறேன்னு எனக்கு தெரியலை.. எனக்கு எரிச்சலா இருக்கு இங்க இருக்கவே எனக்கு புடிக்கலை..” சலிப்பாக கூறிய ஆல்வின் அவனின் கழுத்தில் இருக்கும் டையை லேசாக தளர்த்திக் கொண்டான். அதில் மென்மையாய் புன்னகைத்த சிதம்பரம், “இங்க உனக்கு எல்லா ஏற்பாடையும் நான் பண்ணி தரேன்.. நீ இந்த வீட்டுலையே இருக்குறதுனாலும் இருக்கலாம். இல்ல உனக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ணி தரனுனாலும் எனக்கு ஓகே.. நீ இங்க இருக்குற வரை உனக்கு வேண்டிய எல்லாத்தையும் நான் பண்ணி தரேன் சரியா?” பாசமாக அவனை பார்த்து கூறிட அத்தி பூர்த்தார் போல் மென்னகை ஒன்று ஆல்வின் உதட்டில் பூத்தது.
“எனக்கு தெரியும் அங்கிள் நீங்க எல்லாத்தையும் எனக்காக ஏற்பாடு பண்ணி தருவிங்கன்னு.. பட் யு நோ வாட்.. எனக்கு ஜெர்மன் மாதிரி இங்க இருக்காது.. என்னோட பொழுது போக்கே வேற..”
“வேறன்னா என்ன அண்ணா? அவுடிங், டேடிங், க்ளபிங், இதானே? அதுவும் பொண்ணுங்க முக்கியமா அதானே?” கேலியாக கேட்டபடியே ஹால் உள்ளே வந்தான் ரோகன். சிதம்பரத்தின் மகன்.
“வா டா நல்லவனே.. இப்படி பேசி என்ன கெட்டவனா ஆக்க பாக்காத.. என்னோட லிமிட் எனக்கு என்னன்னு தெரியும்.. இந்த ஊருல தான் இப்படி பண்றவனை வில்லத்தனமா பாக்குறாங்க.. என் கதை இருக்கட்டும் நீ என்ன டா வேலைய பண்ணி வச்சி இருக்க மீட்டிங் என்ன ஆச்சு?” விளையாட்டு பேச்சை விட்டு விட்டு நேராக விடையத்திற்கு வந்தான் ஆல்வின். அதில் அவன் அருகில் அமர்ந்துக் கொண்ட ரோகன், “ அண்ணா சில்.. தமிழ்நாடுல உங்க ஒரு அப்க்கு மட்டும் இந்த பிரச்சனை இல்ல.. வேற நிறைய அப்ஸ்க்கும் இதே போல ப்ரோப்ளேம்ஸ் இருக்கு.. சோ போர்டு மெம்பெர்ஸ் இதை பக்குவமா ஹான்டில் பண்ணிக்கிட்டாங்க.. அடுத்து மீடியா கிட்ட தான் கொஞ்சம் சிக்கலா இருக்கு.. காசை வாரி கொட்டிட்டு வந்து இருக்கேன்… கொஞ்ச நேரத்துல அடங்கிருவாங்க..” கடைசி வாக்கியத்தை மட்டும் இழுவையாக கூறிட அவனை அழுத்தமாய் பார்த்தான் ஆல்வின். “ரோகன் உடனே கிளம்பு நான் நம்ம ஆபிஸ் நெட்வொர்க் செக்யூரிட்டி டீம் கிட்ட பேசணும்..” என்று கூறி ஆல்வின் வேகமாய் எழுந்திட அவனை கை பிடித்து தடுத்தான் ரோகன்.
“அண்ணா அவசரப்படாதிங்க.. மீடியா கொஞ்சம் அமைதியாகட்டும்.. அதுக்கு அப்பறம் நீங்க ஆக்சன் எடுங்க.. இப்போ தான் நீங்க இங்க வந்து இருக்கீங்க.. இன்னிக்கு ரெஸ்ட் எடுங்க நாளைக்கு நம்ம ஆபிஸ் போய் பாத்துக்கலாம்.”
“சரி.. ஆமா அங்கிள் ஏன் நெறைய அப்ஸ்க்கு இந்த மாதிரி பிரச்சனை? எனிதிங் சீரியஸ் இன் தமிழ்நாடு?”
“ஆமா ஆல்வின்.. மீடியாக்கு தெரியாத சில விஷயங்கள் நடந்துட்டு இருக்கு.. நான் மேல் இடத்துல பேசி இருக்கேன்.. இந்த பிரச்சனைய சமாளிக்க ஸ்பெஷல் டீம் அரேஞ்ச் பண்ண போறாங்க.. இது சாதாரண ஹக் சம்பந்தப்பட்டது இல்ல.. இன்னும் இருக்கு.. அதை பத்தி நம்ம தனியா பேசுவோம்” என்ற சிதம்பரம் சுற்றி இருக்கும் ஆட்களை கண்களாலே காட்டிட ஆல்வின் லேசாக தலையை அசைத்தான்.
“ஓகே அங்கிள், அப்பறம் நான் சரவணனை எனக்கு இனிமேல் அசிஸ்டன்ட்டா இருக்க வேணாம் சொல்லிட்டேன்.. எனக்கு ஜெர்மன் தெரிஞ்ச நல்ல பொண்ணா எனக்கு வேணும்”
“பொண்ணா? ஏன் அண்ணா தமிழ்நாட்டு பொண்ணுங்க மேல உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் வந்துடுச்சா?” கேலியாக ரோகன் புருவங்களை ஏற்றி இறக்க சிதம்பரம் சிரித்துக் கொண்டார்.
"சாரி பிரதர்.. நான் என்னைக்குமே தமிழ்நாட்டு பொண்ணுங்க பக்கம் திரும்பவே மாட்டேன்.. உங்க ஊரு பொண்ணுங்க ஆனா ஊனா அழுக ஆரம்பிச்சிடுவாங்க.. எனக்கு அது எல்லாம் செட் ஆகாது.. தப்பான எண்ணத்தை யோசிக்காத.. நான் சொன்னதை மட்டும் செய்..” என்று கூறிய ஆல்வின் மேலே அவனுக்காய் ஏற்பாடு செய்து இருக்கு அறையை நோக்கி சென்றான். பாவம் அவனையே ஒருவள் அழ விட போகிறாள் என்று தெரியாமல்
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page