All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 03

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் - 03

கிளாசிக் ராயல் ரிசாட் என தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெரிய கட்டடத்தின் முன் கார் நிற்க காரில் இருந்து இறங்கிய சகஸ்தாவும் பிரகாஷும் உள்ளே நுழைந்தனர்.

ரிசப்சனில் இருந்த பெண்ணிடம் அறிமுகப்படுத்திவிட்டு,பிரகாஷும் அப்புறம் பார்க்கலாம்மா என்றபடி சகஸ்தாவை ரிசெப்சனிஸ்டின் பொருப்பில் விட்டு சென்றார்.

ஆம்....இது பிரகாஷுற்கு சொந்தமான ரிசாட் தான் அதன் கிளைகள் நாட்டின் பல பாகங்களில் காணப்படுகின்றன.இதன் ஒரு பகுதியான பீச் ரிசாட் தான் திருகோணமலையில் இருப்பது.

பிரகாஷ் அலுவலகம் வந்தது முதல் சகஸ்தாவை பணியில் அமர்த்தியது வரை ரிஷி சென்றடைந்தது.

இவ்வாறு நாட்கள் செல்ல நம் நாயகனும் நாயகியும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பமும் அமைந்தது.

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒரு மாதம் சென்ற போதிலும் இருவரும் சந்திக்கவில்லை ஆனால் ஸ்ரீ தம்பி பற்றி பல முறை பேசியுள்ளாள்.

அத்தோடு ரிசாடிலும் ரிஷியின் உதவியாளரிடம் தகவல்கள் கொடுக்கப்படுவதால் ரிஷியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை சகஸ்தா நல்ல நித்திரையில் இருக்க ஒரு உருவம் அறையினுள் நுழைந்தது.பின் கதவு திறக்கப்படும் சத்தத்தில் கண்விழித்தவளோ கண்ட காட்சி.......

குளியலறைக் கதவைத் திறந்து தலையைத் துவட்டிய வண்ணம் வெளியே வந்த ரிஷியைத் தான் .

அவனைக் கண்டதும் பயத்தில் வீருட்டுக் கத்த இவனோ சடுதியில் மறுபுறம் பார்க்க கட்டிலில் நலுங்கிய உடையுடன் தலைமுடி கந்தல் கோலமாக, காட்டியளித்தாள் சகஸ்தா.......

அதிர்ச்சியுடன் மறுபடி கத்தப் போனவளை உறுத்து விழிக்க மிரட்சியுடன் அவனை ஏறிட்டாள் .

அவள் பார்வை அவனை மேல் இருந்து கீழ் வரை செல்ல இடையில் சாட்ஸ்சுடன் உடற்பயிற்சியினால் பிட்டான உடலில் நீர்த்துளிகள் வழுக்கிச் செல்ல ஆண்மைக்கே உரிய கம்பீரத்துடன் நின்றிருந்தான்.

அவளையும் அவள் பார்வையையும் கண்டவன் முகமே வெறுப்பைக் காட்ட மேலும் பயந்து போனாள்.

"மூச்" என வாயில் விரலை வைக்க அவளும் அவ்வாறே செய்ய கதவை திறந்து கொண்டு வெளியே சென்றவன்.திரும்பிப் பாரக்க வாயில் விரல் வைத்தபடி மிரண்டு பார்த்தாள்.

அவன் மனமோ தடுமாற கதவை 'டமால்' என அடித்து சாற்றி விட்டு வெளியேறினான்.

அவன் மனமோ ரிசாட்டில் அவளை கண்ட பொழுதிலிருந்து தடுமாறச் செய்கிறது.

எந்த நேரமும் சிரிப்புடன் வலம் வருபவள் அனைவரோடும் இயல்பாகப் பேசிக் கொள்பவள்,சிறு பிள்ளை போன்ற செயற்பாடுகள், வேலையில் நிதானம் என ரிசாட்டின் நிராவாகப் பிரிவில் தனித்துத் தெரிந்தாள்.

இவை அனைத்தையும் ரிஷியும் கவனிக்கத்தவறவில்லை.இங்கு பணிபுரியும் கரணின் பார்வை சகஸ்தாவில் ரசனையோடு படிவதையும்,அவளும் அவனுடன் அதிகமாக பேசுவது,இருவரும் உணவுண்ணச் செல்வதும் என இருப்பவர்களைக் கண்டும் உள்ளான்.

வேலை திறம்பட செய்வதால் இது கண்ணில் பட்டாலும் கருத்தில் கொள்ள வில்லை...

சில சமயங்களில் சகஸ்தாவுடன் யாரும் பேசினால் கோபம் தோன்றுகிறது இது ஏன் ?எதனால் என அறிய அவனும் முற்படவில்லை......

இப்போது கூட தன்னை கண்டு மிரண்டு போய் பார்ப்பதையும் வைத்து கோபம் கொண்டான்.

அவன் அறையை விட்டுச் சென்றதும் தானும் குளித்து மலர்ச்சியாய் வேணியைத் தேடி வந்தவள் அவரோடு கதையளந்தபடி இருக்க வேணி இடியாப்பம் செய்து வைத்தார்.

அதற்கு தோதாய் காரமாய் தேங்காய் சம்பலும் செய்து வைக்க...அவசர வேலையாக பிரகாஷ் சாப்பிட்டு வெளியே சென்று விட காலை பத்து மணியாகியும் காலை உணவை
ரிஷி உணவுண்ண வரவில்லை.

சகஸ்தாவும் ஸ்ரீயும் கூட சாப்பிட்டுவிட்டனர்.ரிஷியை
அழைத்த வேணி அவனுக்கு உணவு பரிமாரியபடி பேச்சுக் கொடுத்தார்.

ரிஷி ...."எவ்வளோ நாளைக்கு தான் இப்பியிருக்க போற , பொண்ணு பார்த்தாலும் வேணாம் என்ற லவ் ஏதும் இருந்தாலும் சொல்ல மாட்டென்ற என கேட்க....

தாயைப் பாரத்து முறைத்து விட்டு தாயின் முகம் சுருங்க "ஜம் நாட் இன்ரஸ்ட் கொஞ்சம் நாள் போகட்டும் மா"......என சற்று இலகுவான குரலில் சொல்ல...

வேணியும் ஏமாற்றத்துடன் அனைத்தையும் ஒழுங்கு படுத்த தொடங்கினார்.

தனது அறைக்கு திரும்பிய றி

ரிஷியோ அக்காவின் அறையில் கேட்ட பேச்சுச் சத்தத்தில் நின்று கவனிக்க சகஸ்தாவோ......".நீங்க வேணும்னா பாருங்க சிஸ் என்னோட பெயின்டிங்க பார்த்து மெர்சலாகிடுவீங்க"என கூறி கலகல என சிரித்தாள்.

"இவ பெரிய லியானாடோ டாவின்சி" என நினைத்தவாறு சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அன்றைய நாள் அப்படியே செல்ல..... ஆன்டி நான் நாளைக்கு ஊருக்கு போறன் என சகஸ்தா வேணியிடம் கூறினாள்.பின் ஸ்ரீயிடமும் பிரகாஷுடனும் சொல்லிக் கொண்டு தனது தம்பியுடன்
பயனமாணாள்.

அடுத்த நாளும் புலர்ந்தது.அன்று ரிஷி சகஸ்தாவை வீட்டிலும் சரி ஆஃபிஸுலும் சரி வழக்கமாக அவள் நிற்கும் பஸ் ஸ்டாண்டிலும் சரி காணவில்லை.

தனது காரில் ஆஃபிஸ் வந்தடைந்த ரிஷி சகஸ்தாவின் இருக்கையைப் பார்த்துத் விட்டு தனது உதவியாளரான செரினிடம் வினவ....

"சகஸ்தா லீவ் சார் என்றாள்.

அவ்வாறே அடுத்தடுத்த நாட்கள் செல்ல.. வியாழன் அன்று அலுவலகம் வந்தாள் சகஸ்தா.

மூன்று நாட்களும் வேலையில் சென்றாலும் ஏதோ ஒரு மூலையில் றிஷிக்கு அவளின் எண்ணம் எழுந்து கொண்டு தான் இருந்தது .

இதுவே அவளின் பாலான தேடலை உணரச் செய்தது. தான் உணர்ந்தாலும் எப்படி அவளோடு பேசியதில்லை பழகியதில்லை.........

பின் வேறெப்படி அவள் பின் தன் மனம் செல்லும் என சுய அலசலில் ஈடுபட்டான் ரிஷி.

வீட்டிலும் அலுவலகத்திலும் அவள் இருந்தாலும் பேசியதில்லை... ஆனால் தன் தாய் ,சகோதரிக்கு அவளின் பேச்சு தான் எந்நேரமும் அவளின் குறும்புகள் என அவளுடன் இருவரும் ஒன்றிவிட்டனர்.

அலுவலகத்திலும் அவளே......
சொல்லாமல் கொள்ளாமல் ரிஷியின் மனதில் நின்று விட்டாள் சகஸ்தா...

இது எதனையும் உணராது வழமை போல் அலுவலகம் வந்தவள் அன்று வேலை அதிகமாகையால் ஆறு மணியாகியும் சகஸ்தாவை விடாது செரின் மூலம் வேலை வாங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.

சோர்ந்து போன சகஸ்தாவின் முகத்தை பார்த்த பின் தான் விட்டான்.இதுவரை வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி றிஷியுடன் பேசும் சநத்ர்ப்பம் கிடைத்ததில்லை வீட்டில் எப்போதும் சகஸ்தாவைக் கண்டால் முறைத்தபடி திரிவதால் தானும் அவன் புறம் திரும்புவதே இல்லை அப்படி காணக் கிடைத்தாலும் சிறு புன்னகையுடன் கடந்துவிடுவாள்.

இன்று தன் முன் நிற்பவனை நிமிர்ந்து பார்க்க....சார் ஏதும் ப்ராப்ளமா??? என செரின் அவ்விடம் வர......

"நோ நீங்க வீட்டுக்கு கிளம்புங்க செரின்.... என்றபடி

சகஸ்தாவைப் பார்த்து ......
"கெட் அப் போகலாம்..... என்றபடி முன்னே நடக்க சகஸ்தாவும் தனது பையுடன் அவனை அவனை பின் தெடர்ந்து சென்றாள்.

இதோ அத்தியாயம் 03

படித்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க😁


   
ReplyQuote

You cannot copy content of this page