About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
முத்தம் 11
பிறகு சானக்கியாவின் உடல்நிலையை பற்றி மருத்துவர் கூறியதை கேட்ட மோனிகா "அப்ப சானக்கியாவுக்கு குழந்தை பெத்துகிற பாக்கியம் இனி கிடையாதா? எப்ப டாக்டர் கண் முளிப்பா?" என இரண்டு கேள்வியை முன்னிறுத்தி கேட்க அதற்கு மருத்துவர் ஆங்கிலத்தில் மோனிகாவிடம் "அவங்க நிலைமை ரொம்ப கிரிட்டகலா இருக்கு. கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாங்க. சோ, எந்திரிக்க இரண்டு நாள் ஆகலாம், ரெண்டு வருஷம் ஆகலாம்,எவ்வளவு நாள் என்று இப்ப சொல்லமுடியாது. ஆனால் உயிரோடு இருக்க சான்ஸ் அதிகமாக இருக்கிறது. முன்ன சொன்ன ப்ரொசீஜர் படி யூட்ரஸ்ல நிறைய அடிபட்டு இருக்கிறதுனால அவங்க கர்ப்பமானாலும் அவங்க உயிருக்கு நிறைய ஆபத்திருக்கு. சோ பாத்துக்கோங்க நான் போய் மத்த பேசன்ஸ் பாத்துட்டு வரேன்." இந்த விஷயத்தை சானக்கியாவின் பெற்றோரிடம் கூறினால் மோனிகா. சானக்கியாவின் விழிகள் திறக்க இரண்டு வருடங்கள் ஆனது. கடந்த இரண்டு வருடங்களாக அவளது தாயாரும்,தந்தையாரும் மாற்றி மாற்றி அவளை பார்த்துக் கொண்டாலும்.. தன்னுடைய மகள் இப்படி படுத்த படுக்கையாக இருப்பதை பெற்றோர்களால் பார்க்க முடியாமல் போனது. கண்ணீரோடு அவர்கள் அவளது நிலையைக் கண்டு காத்திருக்க முடியாமல் இறைவனை நாடி பல பரிகாரங்கள் செய்து தொடங்கினார்கள். அவள் கண் விழித்ததும் பேசிய முதல் வார்த்தை "என்னை ஏன் இப்படி சித்திரவதை படுத்துறீகள்? நான் என்ன தப்பு பண்ணேன்? என்னை ஏன் அவர் அப்படி பண்ணனும்? நான் என்ன தப்பு பண்ணேன்?" என புலம்பினாள். பின்னர் அவளை மனநல மருத்துவரின் கவுன்சிலிங் பின் கடந்த கால சோக நினைவுகளை மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிய வண்ணமாக இருக்கும் வேளையில்.. அதிரூபனை பார்த்ததும் அவளுக்கு பிடித்துப் போயிற்று. அவனோட வாழ வேண்டும்! என்கிற ஆசை வந்தது. அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் அழகாக அவளை ஈர்த்த காரணத்தினால்.. அவள் இன்று நடந்த அனைத்தையும் கூறிய பின் அதிரூபனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"எனக்கு இன்னும் உங்கள ரொம்ப பிடிக்கும் ரூபன். ஆனா இதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் இப்போ நீங்க என்ன பதில் சொல்ல போறீங்கன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். இந்த தவிப்ப ரொம்ப நாளைக்கு நீடிக்க விட்டுறாதீங்க! என்னை நீம்க கல்யாணம் பண்ணிக்க விருப்பமா?" எனக் கேள்வியை இறுதியாக கேட்டுவிட்டால் அவனின் சானக்கியா "சானக்கியா ஐ ஸ்டில் லவ் யூ! இந்த விஷயத்தை நீ ஏற்கனவே என்கிட்ட சொல்லி இருக்கலாமே? அமுதனை பார்த்ததுக்கு அப்புறம் தான் சொல்லனுமா? அதுவும் நானா கேட்க போய் சொல்லனுமா? ஏன் சானக்கியா, இது கடந்து போனது. உன்னை விட்டு முடிஞ்சிருச்சு. எனக்கு உன்கிட்ட இருக்கிற குறை பெருசா தெரியல, உன்னோட காதல் தான் எனக்கு பெருசா தெரியுது. நம்ம குழந்தைகளே இல்லைன்னா என்ன? தத்தெடுத்து வளர்க்கலாமே! இதுல என்ன இருக்கு, இனி இப்ப சொல்றது தான்! எப்பவுமே நான் உன் கைய விட மாட்டேன். என்னை நம்பி, என் வாழ்க்கைல வருவ தானே?" இதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டும் தன்னுடைய அதிருபனை கட்டி அணைத்து முத்தமிட்டால். "ஆஹா! என் சானக்கியா முத்தம் ஒன்றை பிச்சு தந்துட்டுடா! அதுவும் நான் கேட்காம ஒரு முத்தத்தை பிச்சு தந்து இருக்க. உன்கிட்ட முத்தங்களை பிச்சு வாங்குறதுக்குள்ள நான் எத்தனை தடவை பிச்சை எடுக்கப் போறேன்னு தெரியல? சரி வா வீட்டுக்கு போலாம். முதல்ல உன் அம்மா அப்பா கல்யாண வேணாம்னு சொல்லி இருக்காங்க. வீட்ல குழப்பம் ஏற்பட்டு இருக்கு. அத நம்ம தீர்க்க வேண்டும் வா.. வா.." என அதிரூபனின் வீட்டை நோக்கி சென்றார்கள்.
சரியாக அந்த நேரத்தில் தான் சுதாகரிடம் "ரொம்ப நேரமா மௌனமாவே இருக்கீங்க. இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொன்னதுக்கான காரணத்தைக் கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறீங்க. நீங்க என்ன காரணம்னு சொன்னீங்கன்னா.. நாங்க அதுக்கு ஏத்த மாதிரி கடைசி நேரமா இருந்தாலும் சொந்தக்காரங்க முன்னாடி அவமானப்பட்டாலும் பரவாயில்லைன்னு சொல்லி பொண்ணு பேரு மாத்தி கொடுத்துடுவேன். நந்தகிக்கு கொடுத்த வாக்கையாக நாங்க காப்பாற்றலாம்." என அதிரூபனின் தாயார் ஜெயவள்ளி பேசியதை கேட்டவன் "ஜெயு அதுக்கு வேலையில்லை. சாணக்கியா என்னை கட்டிக்க சரின்னு சொல்லிட்டா. நேர்ல போய் எல்லாத்தையும் பேசி அவ மனசுல இருக்குற சஞ்சலம் எல்லாத்தையுமே தீத்து விட்டுட்டேன். பத்திரிக்கையில பொண்ணு பேரு மாத்தவும் வேணாம், கல்யாணத்துக்கு பொண்ண மாத்தவும் வேணாம். எனக்கானவ என் பக்கத்துல இருக்கும்போது, நீங்க எப்பயோ குடுத்த வாக்க காப்பாத்த முடியும்னு நினைக்கலாம்? உங்க தோழிக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தணும் என்கிறதுக்காக என் வாழ்க்கையை பணயம் வைக்காதீங்க ஜெயு." "ஆமா அம்மா எனக்கு ரூபன் தான் முக்கியம். அவனோட வாழ எனக்கு பரிபூரன சம்மதம். மாதங்கிக்கு நா தான் அண்ணி." என சிரித்தபடி பேசியது நடந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் முடிவு கிடைத்து "அப்ப இனி கல்யாணத்துக்கு டிரஸ் வாங்க போவோம்." என வைனவேந்தன் கேட்டதும் "கண்டிப்பா நாளைக்கு வெள்ளிக்கிழமை. நல்லநாள் நாளைக்கு போய் நம்ம பையனுக்கு, மருமகளுக்கும், மருமகனுக்கும் டிரஸ் வாங்கிடலாம்." என்றார் ஜெயவள்ளி.
*******
"ஆராதனா.. என்னை புரிஞ்சுக்கோ ஐயம் லவ்விங் யூ. ஆனா.. அவ அதிரூபன கல்யாணம் பண்ணப்போறதா சொல்றா மச்சிக்கு ஃபோன் பண்ணனும்." என அலைபேசியை எடுத்து பேச முயல அவனுடைய தந்தை "அமுதா, அதி வந்திருக்கான்." என்றதும் "அதிரூபா! நா உன்கிட்ட முக்கியமான விஷயத்தை சொல்லணும்." என அவனை தனியாக கூட்டி சென்று அதிரூபன் பேச வரும் போது "அதிரூபா! ஐ லவ் ஆராதனா. எங்க கனவுக்காக கான்டிராக்ட் பெயரில் கல்யாணம் பண்ணி கடைசில உன்னை தேடி வந்திருக்கா. நா அவளை கல்யாணம் பண்ணிக்கணும். அந்த அளவுக்கு எனக்கு அவ இஷ்டம்." என தன் மனதில் உள்ளதை உள்ளபடி பேசினான். "நீ கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் தானே? ஆராதனாவை கைவிட மாட்ட தானே?" என இறுதியாக கேட்க "ஏய்! கண்டிப்பா நா அவளை உள்ளங்கையில் வைச்சு பாசமா பார்ப்பேன். என்ன அவகிட்ட போய் பேசப்போறியா?" என்றதும் "ஆமாடா பேசணும்." என்றதோடு அமுதனிடம் வேறு எதுவும் பேசாமல் வெளியே சென்றான். பிறகு சானக்கியாவிற்கு அழைத்தவன் அவளிடம் அமுதன் ஆராதனாவை நேசிப்பதை சொன்ன பின் சானக்கியா "ரூபன். அப்ப மூனு கல்யாணமா செஞ்சுடலாம். நிச்சியதார்த்தம் அன்னைக்கி நம்ம நடுவுல நிப்போம். புதுசா நம்ம மாப்பிள்ளை முகத்தை கட்டி நிச்சியத்தின் போது செய்வோம். கல்யாணம் அன்னைக்கி நாங்க ஒரே நிறத்தில் புடவை கட்டி முகத்தை மூடிக்கிவோம். இதுக்கு, மாதங்கி சம்மதம் சொல்லணும். இப்படி பண்ணா ஆராதனா அமுதனை நீங்கனு நினைப்பா. உங்களை அமுதன்னு நினைப்பா. எப்படி என் ஐடியா?" என தன்னவளின் இந்த யோசனை அவனுக்கு மிகவும் பிடித்தது உடனே அவளை தூக்கி குழந்தை போல் தாலாட்ட பாவையவள் பாட தொடங்கினாள் "மழையாய் நீ வந்தாய்.. நான் குடைக்கு கொண்டு நின்றேன், பனியாக நின்றால்.. நான் வெளியாகி வந்தேன்.. உரையாட முன்பு மொழியெதும் இல்லை. என் நிழல் கூட இன்று கேட்கும் உன் சொல்லை.. அதிரூபனே! அதிகாரனே! எப்படி இருக்கு என் பாட்டு?" என சானக்கியா கேட்க இது "நீ பாடுனது இல்லையே! இந்த வரிகள் எல்லாம் விவேகா எழுதினாங்க, இந்த வரிகளை பாடுனது எம் எம் மனசி. பரவால்ல நீ அவங்க அளவுக்கு பாடலைன்னாலும் நல்ல தான் பாடுற. எனக்கு பிடிச்சிருக்கு. என் பெயர் இந்த பாட்டுல இருக்கு. அதனால, இந்த பாட்டை எப்பயும் என்னை நீ நினைக்கும் போதெல்லாம் பாடிக்கோ. நீ கல்யாணத்துக்கு சொன்ன ஐடியா சூப்பரா இருக்கு. இத நானா ஆராதனை கிட்ட போய் தனியா பேசினா மட்டும் தான் முடியும். அதுக்குனு அவகிட்ட ஒரேடியா தனியா பேசிட மாட்டேன். ரஞ்சனா மேம் இருக்காங்க அவங்ககிட்ட பேசி, அவங்க ஆராதனை கிட்ட பேசுவாங்க. ப்ராமிஸ் நீ நம்பலைனா நான் லைவ்வா காஸ்ட் பண்ணட்டுமா?" "ஐயோ வேணா ரூபன்! எனக்கு உங்க மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு. அதனால நீங்க போய் பேசிட்டு வாங்க. நீங்க என்ன சொன்னாலும் பரவால்ல, குறுக்க இருந்த ஆராதனா இப்போ உங்களை விட்டு, என்னை விட்டு, தூரமா போக போறத நினைச்சா.. எனக்கு சந்தோஷம் தான்! நீங்க என்னனாலும் சொல்லுங்க, ஆனா என்ன சொன்னீங்களோ.. அதை என்கிட்ட வந்து சொல்லிருங்க. மறைக்காதீங்க?" என தன் மனதில் என்ன விரிகிறதோ அதை அனைத்தையும் அவள் கொட்ட அவனும் 'சரி' என தலையாட்டினான்.
ரஞ்சனாவின் இல்லத்தில்..
அதிரூபன் வந்திருப்பதை பார்த்த ரஞ்சனா "கம் இன், ஆருமா யார் வந்திருக்காங்கனு பார்?" என்றதும் "பெருசா யார் வந்திருக்கப்போறாங்க. என் ஆர்யன் மாமா தான்." என அழகாக நடந்து வந்தவள் அவனுக்கு தேநீர் போடுவதற்கு சமையலறைக்கு சென்று விட "மேம், எனக்கு ஆராதனாவ கட்டிக்க இஷ்டம். சானக்கியாவுக்கு நகுலன் அங்கிள் மகனை கட்டிக்க சம்மதம் வாங்கிட்டோம். ஆனா.." முதலில் இவன் பேசியதை கேட்டதும் இருவரும் சந்தோஷ நிலைக்கு துள்ளி குதிக்க திடீரென இந்த ஒரு வார்த்தையை கேட்டதும் "என்ன ஆனா?" என தன் மகள் கேட்கும் முன் ரஞ்சனா கேட்டார். "மாதங்கி ஒரு வேண்டுகோள் வைச்சிருக்கா. மூனு மணப்பெண்களும் ஒரே நிறத்தில் புடவை கட்டணும்னு அதோட, தாலி கட்டும் வரை முகத்தை மூடி இருக்கணும். இந்த மாதிரி புதுசா கொண்டாடலாம்னு சொல்லிட்டா. பிறகு சானக்கியாவும் சரினு சொல்லிட்டா. ஆராதனா எதிர்ப்பு சொன்னா என்ன ஆகுறது?" என விளக்கமாக பேச "ஓ.. உன் தங்கச்சி ஆசை. அதோட, என் மகளுக்கு நடுவுல வந்தவள் காத்தோட காத்தா காணாமல் போகப்போறா. சந்தோஷம் நாளைக்கு நாங்க பிசி. நீங்களே இந்த புடவை எல்லாம் எடுத்துடுறிங்களா?" என்றதும் அதிரூபன் 'சரி' என புன்னகை செய்ய "மாமா.. நிச்சியதார்த்தம் அன்னைக்கி நாங்க முகத்தை மூட தேவையில்ல தானே? இந்த ஃபோட்டோஸ்.. அதுலாம் எடுக்கலாம் தானே மாமா முகத்த மூடிக்காம?" "கண்டிப்பா, முகத்தை மூட தேவையில்ல. ஆனா ஃபோடோ ஷூட் கல்யாணம் செஞ்ச பிறகு ஜோடி ஜோடியா போட்டோ. ஏனா ஸ்கந்தனுடைய ஹையர் ஆபிசர் வரார். அதான், நிச்சயத்தன்னைக்கி நாங்களும் ஜோடியா எடுக்க வேணாம்னு முடிவு செஞ்சிருக்கோம். ஐயோ டயமாகிடுச்சு மோனிகா படிக்க வருவா நா கிளம்பணும் மேம்." "போயிட்டு வாங்க மருமகனே." என அன்பாக பேச சிரித்துக்கொண்டே அதிரூபன் சென்றான் வண்டியில் ஏறி பறந்து சென்றவன் தனியாக இருந்த ஒரு கோயிலின் முன் வந்து நின்று அலைபேசியில் "எல்லாத்தையும் கேட்டியா சானு?" என்றதும் ஓடோடி வந்த அவனின் சானக்கியா "ஹூம், கேட்டேன் ரூபன் அந்த மேடம் லூசுனு பார்த்தா ஆராதனாவும் லூசா இருக்கா. ஃபோன்ல நீ பேசின எல்லாத்தையும் நா மாதங்கியை கேட்க வைச்சேன்." "எனக்கு சத்தம் வரல?" "அட மக்கு ரூபன். முதல் மாதங்கி ஃபோன் பண்ணிட்டு உன்ன கயைக்ட் பண்ணேன்..எனக்கு பிரிசூட் கிடையாதா?" "கிடையாதாவா? நாளைக்கு நம்ம இரண்டு ஜோடிக்கும் பிரிசூட். துணி வாங்கி முடிச்சதும் அமுதன் வீட்டுக்கு போறோம். அவன் அழகா ஃபோடோ எடுத்து தருவான். அவன் கொஞ்ச நாள் புரோஃபசனல் புரோடோகிராபரா இருந்தான்." இருவரும் காதலில் மிதக்க பின் தொடர்ந்து சானக்கியாவை தூக்க வர அவள் "கண்டிஷன்!" என்றதும் இறைவனை வணங்கிவிட்டு வீடு திருப்பினார்கள்
இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..! (முதல் பாகம்) - Comments Thread Our newest member: Vijianand Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page