All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 10

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 7 months ago
Posts: 22
Topic starter  

முத்தம் 10

 "அதிரூபன்! நம்ம பயணத்தை நீ தான் நிறுத்த வைச்ச!" என தன்னால் எவ்வளவு தூரம் கத்த முடியுமோ அவ்வளவு தூரம் கத்தினாள் சானக்கியா. இதை கேட்டதும் வண்டியை நிறுத்தினான். பிறகு தனது வாகனத்தில் இருந்து இறங்கியவன் விறுவிறுஎன அவள் பக்கம் நடந்து சென்றவன் "என்னது நான் நம்ம பயணத்தை நிறுத்துனதுக்கு முக்கியமான காரணம் ஆயிட்டேனா? நீ தான் ஏதோ அம்மு என்று சொன்ன? அந்த அம்மு யாரு? எனக்கு அதை முதல்ல சொல்லு. என்கிட்ட இருந்து எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாதுனு நீ நினைக்கல. அப்படி இருந்தால் சொல்லிருப்ப. பொண்ணு பார்க்க வந்த அன்னிக்கு மட்டும் பெருசா கண்டிஷன் போட்ட! தொடக் கூடாது,அங்க போக கூடாது, இங்க போகக்கூடாது என்கிற மாதிரி ரொம்ப கண்டிஷன்ஸ் போட்ட. அந்த கண்டிஷன்சோட ஏன் இந்த விஷயத்தை சொல்லவே இல்ல யார் அந்த அம்மு?" என்றதும் சானக்கியா "கொஞ்சம் வீட்டுக்குள்ள வரீங்களா ரூபன். நான் உங்ககிட்ட தெளிவா எல்லாத்தையும் சொல்லிட்டுறேன்.” பிறகு இருவரும் தனிமையாக வீட்டின் நடுவரையில் அமர்ந்திருக்க "என்ன சொல்லனுமோ எல்லாத்தையும் சொல்லு, நான் கேட்கிறேன் பொறுமையா நிதானமா கேட்கிறேன்." தாமதம் செய்யாமல் அதிரபனின் காலை பிடித்து அழுகத் தொடங்கினால் சானக்கியா "என்னை மன்னிச்சிடு ரூபன். முதலையே இந்த விஷயத்தை சொல்லி இருக்கணும். நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு. உங்ககிட்ட இருந்து எல்லா விஷயத்தையும் மறைச்சது தப்பு. அம்மா அப்பா கல்யாணத்த நிறுத்த சொல்ல போயிருக்காங்க. அத தடுத்து நிறுத்துங்க. நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க ரொம்ப விரும்புறேன். நீங்க என் உயிர். ஆனா இந்த உண்மை தெரிஞ்சு நீங்க எங்க வேணான்னு சொல்லிடுவீங்களோ பயமா இருக்கு, தயவு செஞ்சு நான் சொல்றத கேட்டு நீங்க தப்பா நினைச்சுட்டீங்கன்னா? என்ன என்னமாவது பண்ணிடுவீங்களோ பயமா இருக்கு? இந்த சமூகம் என்ன என்ன சொல்லுன்னு பயமா இருக்கு? அதனால.. என்ன செய்றதுன்னே தெரியல, மோனிகாகிட்ட எதுவும் சொல்ல கூடாதுனு சத்தியம் வாங்கிட்டேன்." என இவ்வளவு தூரம் அழுது கொண்டு கூறும் போது ஒரு காதலனாக, அவளது வருங்கால இணையாக, அவளுடன் எப்போதும் துணை நிற்பது போல் இது நாள் வரை கனவு கண்டு வந்தவன். இன்று அவளை நிமிர்ந்து எழ வைத்து கண்களைப் பார்த்து "இந்த அதிரூபன் சத்தியம் பண்ணி சொல்றேன். உன் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை, எல்லாமே கடந்து போனது. அத நிகழ்காலத்தில் கொண்டு வரமாட்டேன், எதிர்காலத்திலும் கொண்டுவரவிடமாட்டேன். உனக்கு ரக்ஷனா நான் இருப்பேன். என்ன நடந்துச்சுனு மட்டும் சொல்லு என்கிட்ட இருந்து ஒளிவு மறைவு இருக்கக் கூடாது, அதே மாதிரி நானும் உன்கிட்ட எந்த ஒரு ஒளிவு மறைவும் வச்சுக்க மாட்டேன் சானக்கியா." என கூறி முடிக்கவும் "உங்க தோழன் அமுதன் அவருடைய தோழர்களோட சேர்ந்து என்னை அவமானம் செஞ்சார்." என்றதும் அதிரூபனின் விழிகள் விரிந்தன மேலும் கேட்க தொடங்கினான் "பல கனவுகளோட பி.ஜி படிக்க லண்டன் போனேன் அங்க.." 

 

நான்கு வருடங்களுக்கு முன்..

 

சானக்கியா தனது இளங்கலை பட்டத்தை பெங்களூரில் முடித்துவிட்டு நல்ல மதிப்பெண்ணுடன் முதுகலை படிக்க லண்டன் வந்தவள் தனக்கான இருப்பிடத்தை நாடிச்சென்றாள். சானக்கியாவின் அதிஷ்டம் கல்லூரி பக்கத்தில் வீடு ஒன்று அமைய வாடகையும் மற்ற இருப்பிடத்தை கூறியதை விட கம்மியாக இருக்க வசதி குறைவாக இருந்தாலும் ஒப்புக்கொண்டாள். அங்கு தான் முதல்முறையாக "ஹலோ நா சானக்கியா நீங்க?" என அவளை மோனிகாவிடம் ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொள்ள "நா மோனிகா." இவர்களுடன் ஒரு வெளிநாட்டு பெண் அவளது பெயர் லான்ஸ்பேரி "நா லான்ஸ்பேரி நீங்க இந்தியன்ஸா?" என லான்ஸ்பேரி அவர்கள் இருவரிடமும் அவளது மொழியில் கேட்க 'ஆம்' என தலையசைத்தார்கள். 

 

பிறகு மோனிகாவிடம் சில "என்னல இவ ஜூஸ் பேரி, ஸ்டிராப் பேரிங்கிற மாதிரி ஒரு பேரிய பேர்னு சொல்லிட்டு போறா?" "வெளிநாட்டுக்காரங்க, அப்படி தான் சானக்கியா பேர் வைப்பாங்க." பிறகு சில நாட்கள் கல்லூரியில் சந்தோஷமாகவே சென்றன அதோடு லான்ஸ்பேரிக்கு சாணக்யாவின் பெயரை சரியாக உச்சரிக்க முடியவில்லை அதேபோல் சானக்கியாவினால் இவளது பெயரை உச்சரிக்க முடியவில்லை. இப்போது மோனிகாவை நடுவராக வைத்து இருவரில் அவர்கள் தங்களது தோழிகளின் பெயரை சரியாக உச்சரிக்கிறார்களா? இல்லையா? என்பதை மோனிகாவிடம் ஒப்படைத்துவிட்டு, சாணக்கியாவும் அந்த வெளிநாட்டு பெண்ணும் போட்டியிடத் தொடங்கினார்கள். முதலில் சானக்கியா "சரியா உச்சரிக்கணும் நல்லா கேட்டுக்கோ சா ன க் கியா எங்க சரியா சொல்லு பார்க்கலாம்?" பிறகு அந்த ஆங்கிலப் பெண்மணி "சாணிக்காய் (ச)ஜரியா சொல்லிட்டேனா?" ஐயோ சாணிக்காய் கிடையாது. சானக்கியா!" "(ரொ)பம்ப (க)ஜஷ்டமா இருக்குது. நீ ஜொ(சொ)ல்லு லான் ஸ் பேரி." என அவளது பெயரை உச்சரிக்க "லாஸ்பரி செம்மையா இருக்கு இனி நா அப்படி தான் உன்ன கூப்பிடுவேன்." என்றதும் அந்த ஆங்கிலப்பெண்ணிடம் "(அ)பப்ப நான் சாணிக்காய்னு தான் சூ(கூ)ப்பு(டு)வேன்." இரண்டு தமிழ் பெண்மணிகளோடு சேர்ந்து இவளது வாழ்க்கை சென்றதனால் அந்த ஆங்கில பெண்மணி அவர்களோடு இணைந்து அவர்களது தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள ஆரம்பிக்க எளிதாக இறுதியில் பேசவும் ஆரம்பித்துவிட்டது. பிறகு பெயர் சண்டைகள் இருவருக்கும் இடையில் வரவில்லை. இந்தப் பெயர் சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்த சந்தோஷத்தில் சாணக்கியா மோனிகா மற்றும் அந்த ஆங்கில பெண் இருவரும் சேர்ந்து ஒரு இடத்திற்கு சென்றார்கள். 

 

" ஹாய் இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. லண்டனுக்கு வந்ததே இதுக்காக தான். ஸ்நோபால் பார்க்குறது, செம்மையா இருக்கு. எங்க அப்பா கிட்ட எல்லாம் இன்னைக்கு பேசவே மாட்டேன். என் அப்பா போன் போடும்போது போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவேன்." என சானக்கியா சொல்ல "அப்படிலாம் பண்ண கூடாது சானக்கியா டாடி கிட்ட தினமும் பேசணும், ஓகேவா. பேசிட்டு போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு." என அந்த ஆங்கில பெண் தமிழை அழகாக உச்சரித்து பேசியது சானக்கியாவிற்கும், மோனிகாவிற்கும் பிடித்து போயிட்டு. "ஏய் அங்க பாரு. யாரோ அழகா டான்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. அங்க போயி என்ன செய்றாங்க நம்ம தூரத்துல நின்னு பாத்துட்டு இருப்போமா?" மூவரும் ஒன்றாக சென்று ஒரு மரத்திற்கு பின்னாடி நின்று கொண்டு அந்த ஆணவன் என்ன செய்து வருகிறான் என்பதை பார்த்து வந்தார்கள். 

 

 "மை டியூட் ஷார்ட் பிலிம்க்கு ஆக்டர்ஸ் கிடைக்கவே மாட்டேங்கிறாங்க. இப்போ எப்படி நான் எடுக்கிறதுன்னு தெரியல இந்த டிராமாக்கு என்ன தான் பண்ண போறேன்? என்னடா செய்யலாம் நான் ஒருத்தன் தனித்தனியா புலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்ன அங்க தூரத்தில் பார்த்துட்டு இருக்க?" "அமுதன் அங்க மூணு பேர் நிக்கிறாங்க. அந்த மூணு பேர்ல யாராவது ஒருத்தர் உன்னோட இந்த ஷார்ட் பிலிம் காம்படிஷன்ல ஜெயிக்க வைக்க மாட்டாங்களா? வா அங்க போய் பார்ப்போம். என்ன தான் அந்த கேர்ள்ஸ் பண்றாங்கன்னு." என தோழனை வம்படியாக கூட்டி சென்றான். 'இவேன் வேற சும்மாயில்லாமல். என் தல எழுத்து' என நினைத்து கொண்டே இருந்தவன் சானக்கியாவை பார்த்ததும் "வாவ்! மச்சி இந்த பொண்ணு என் கதைக்கு ஹீரோயினா நடிச்சா..சும்மா எனக்கு ஒரே சமயத்துல இரண்டு படம் பண்ண வாய்ப்பு கிடைக்கும். இந்தா பொண்ணு உன் நம்பர் சொல்லு?" என சானக்கியா மற்றும் மோனிகாவிற்கு குழப்பம் "யாரை கேக்குற நீ? எவ்வளவு திமிரு இருந்தா என்னை படம் நடிக்க கூப்பிட்டது மட்டுமில்லாமல் நம்பர் கேக்குற? உன்ன மாதிரி தெரியாதவங்களுக்கு நம்பர் தர மாட்டேன் என் செருப்ப தான் தருவேன். இனி என் வழியில் வந்த நா பேச மாட்டேன், என் செருப்பு தான் பேசும். வா லான்ஸ்பேரி, மோனிகா." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றார்கள். 

 

இவை அனைத்தையும் கேட்டவன் "நா என்ன பெருசா கேட்டேன். இந்த மாதிரி திமிரு பிடிச்ச பொண்ணை எல்லாம் இனி வாழ்க்கையில் நா பார்க்காமல் இருந்தா சரி. எல்லாம் உன்னால தான் டியூட்." "நா என்ன செஞ்சேன் அமுதன்?" "என்ன செஞ்சியா? நீ மட்டும் இங்க கூட்டிட்டு வராம இருந்தால் இந்த இம்சைகிட்ட நா தேவையில்லாத பேச்சு வாங்க வேண்டி இருக்காது. பார் ?" என திட்ட மௌனமாக அமுதன் பின் அவன் நண்பன் சென்றான். 

 

****

 

இரண்டு வருடம் படிப்பை நன்றாக சானக்கியா முடித்தாலும்.. அன்று நடந்த அந்த சம்பவம் அவளை பெரியதாக தாக்கியது. ஆனாலும், மறந்து சென்றவளின் பாதை இன்று மாற்றம் பெற போகும் என்பதை தெரியாது ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தாள் சானக்கியா. லான்ஸ்பேரியுடன் ஊரை சுற்றி பார்க்க சென்றவள் இறுதியாக ஒரு டிஸ்கோதேக்கு தோழிகளை கூட்டி சென்றதும் சானக்கியா "பிளீஸ்பா நா இந்த இடத்துக்கு வரல. மோனிகா நீ வேணும்னா அவகூட போயிட்டு வா." என்றதோடு வெளியே நிற்க தூரத்தில் அமுதனின் நண்பன் சானக்கியா தனியாக இருப்பதை பார்த்ததும் தனது நான்கு சக்கர வாகனத்தில் இருந்து வெளியே வந்து சானக்கியாவிடம் "ஹாய்! சி இந்த பர்பியூம் பார்க்க அழகா இருக்குல?" என பேச்சு கொடுத்தவன் "ம் ஆமா." "அப்ப இந்தா." என அந்த பர்பியூமை அடிக்க பாவையவள் மயங்கி போக அவளை தூக்கி வண்டியில் கிடத்தியவன் சல்லென பறந்து சென்றான் அமுதனின் இருப்பிடத்தை நோக்கி.

 

 அன்று பனியில் சானக்கியாவிடம் வாங்கிய வார்த்தைகள் அனைத்தும் அமுதனுக்கு விஷமாக தோன்றியது. மேலும் கோபத்தை தனிய முடியாத அளவுக்கு கோபத்தை கிளப்பிவிட்டான் அமுதனின் ஆருயிர் நண்பன். என்னவோ அந்த நேரத்தில் இருந்து நண்பனின் பொய் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்தான். வேலையில் இருந்த போது பல முறை அமுதனின் உழைப்புக்கு ஏற்ற அளவு பாராட்டு கிடைத்தாலும் உடனிருந்த இந்த தோழனுக்கு பொறாமை இருந்து வந்தது. ஆனால், திடீரென ஒரு நாளில் இவனுக்கு கீழ் வேலை செய்த அமுதன் மேலே பெரிய பதவியை அடைந்ததும் வேலை பளுவின் காரணம் நண்பனிடம் பேச முடியாமல் நேர்ந்தது. அந்த சம்பவங்கள் தான் இவனை வாட்டியது 'எனக்கு கீழ வேலை பார்த்த நாய் நீ! இப்ப என்னை அதிகாரம் பண்ணும் அளவு வளர்ந்தாலும். அதுக்கு நான் தான் காரணம்னு சொல்ல மனசு வரல.' என அமுதனின் வாழ்வை கெடுக்க நினைத்து வந்தவனுக்கு சானக்கியா பேசிய வார்த்தைகள் உதவி செய்ய. அவை அனைத்தும் அழகாக படம் பிடித்த தோழன் சமூகவலைதளத்தில் பதிவிட அமுதனின் வேலை பறிபோனது. பின், நாளுக்கு நாள் கவலையில் இருந்தவன் சானக்கியாவை மறந்து தன்னை மறந்து போதைக்கு அடிமையாக இருந்த இந்த சமயத்தில் தான் இந்த தோழன் சானக்கியாவை கடத்தி வந்து அவனின் வீட்டில் (நண்பனுக்கு அமுதன் பரிசாக வழங்கிய அறையில்) அடைத்து கைக்கால்களை கட்டிப்போட்டு வைத்திருந்தான். அமுதனை அழைத்து வந்தவன் "மை டியூட் உன்ன கேவலப்படுத்தின இந்த பொண்ணை என்ன செய்யலாம்?" என கேள்வி கேட்டதும் "ஆஹா!! தங்கச்சிலையாட்டம் இருக்காளே? இது என்ன அவ கையில.." என அந்த பச்சையை வாசித்தான் "அனைத்தும் நிலையற்றது. செம்ம." அந்த வார்த்தைகள் ஆங்கில மொழியில் இருந்தது. "எல்லாமே நிலையற்றது னா நீயும் இன்னைக்கி நிலையற்றதா மாற போற. டியூட், உனக்கு என்ன தோணுதோ அதை செய்." என இவர்கள் இருவர் பேச்சின் சத்தம் கேட்டு எழுந்த சானக்கியா "ஏய்! யார் நீங்க? எதுக்கு என்னை கடத்தி வச்சிருக்கீங்க?" என அமுதனிடம் கேட்க "பொலி போட போறோம். என்ன அவமானப்படுத்தின உன்னை நா தண்டிக்க போறேன்." என அமுதன் அவனுடைய மூன்று வெறி பிடித்த (நண்பர்களை) மிருகங்களை வைத்து சானக்கியாவின் உடலை காயப்படுத்தி முடித்ததோடு மட்டுமல்லாது கயிற்றை அவுத்தவுடன் படபடவென ஓடியவள் வேகமாக வந்த வாகனத்தில் மோதி ரத்தவெள்ளத்தில் மிதந்து கிடந்தாள். இந்த சமயத்தில் தான் மோனிகாவும் லான்ஸ்பேரி இருவரும் நிறைய இடங்களில் தேடி இறுதியாக சானக்கியாவை கண்டுபிடித்து மருத்துவமனை நோக்கி அழைத்து சென்றார்கள்.

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘


   
ReplyQuote

You cannot copy content of this page