All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 8

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

முத்தம் 8

 

நேரங்கள் கடந்தன சானக்கியாவின் அலைபேசி அலறியது. அழைத்திருந்தது அதிரூபனின் தங்கை மாதங்கி "ஹலோ சொல்லு மாதங்கி என்ன விஷயம்? என்ன காலம் காத்தாலே எழுப்பி விட்டுட்டீங்க சரி சொல்லுங்க." என மாதங்கியின் அலைபேசியின் உதவியாள் மட்டுமே அவள் கண் விழித்து பேச தொடங்கினாள். "அண்ணாவுக்கு அடிபட்டுருச்சி அண்ணி ஹாஸ்பிடல் சேர்த்திருக்கோம் வந்து பாத்துட்டு போங்க அம்மா அப்பா விஷயத்தை சொல்லவே இல்லையா?" "என்னது ரூபனுக்கு அடிபட்டுருச்சா? அம்மா அப்பா யாரும் சொல்லவே இல்ல. தங்கச்சி கூட ஏதோ சொல்லிட்டு போனா நா தூக்கத்துல இருந்தேன். என்ன ஆச்சு இப்போ பரவாயில்லையா? என்னாச்சுன்னு சொல்லுமா? மாதங்கி என்னை ஏன் இப்படி தவிக்க வச்சிக்கிட்டு இருக்கீங்க?" என தன்னவனுக்கு அடிபட்ட விஷயத்தை கேட்டு சானக்கியாவிற்கு இருதயம் துடிதுடித்தது. "அண்ணாவுக்கு ஒண்ணுமே இல்ல. அண்ணா தான் உங்ககிட்ட இன்பர்மேஷன் சொல்ல சொன்னாங்க. அதுக்காக சொன்னேன். நேர்ல வந்து பார்க்கணுமா நீங்க நேர்ல வந்து பார்த்து அவரை கவனிச்சுக்கணும்னு ஆசைப்படுறாரு. அதனால, நீங்க நேர்ல வாங்க நிதானமா வாங்க." என்றதோடு அழைப்பை துண்டித்தாள் மாதங்கி.

மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததும் சானக்கியா அதிரூபனை பார்த்து "ரூபன் என்ன பண்ணி வச்சிருக்கீங்க? ஏன் கை இப்படி.. என்ன விஷயம்? எதுவும் பிரச்சினையா? இல்ல வேற ஏதாவதுனு சொல்லுங்களேன்? எதுவுமே பேசாம? என்ன பாக்காம? அந்த பக்கமே திரும்பி உட்கார்ந்து இருக்கீங்க." கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்த சானக்கியாவை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான் அவளின் ரூபன். "இல்ல சானக்கியா எனக்கு ரொம்ப கை வலிக்குது. நான் என் நண்பன வர சொல்லி இருக்கேன். உனக்கு படிக்க வேண்டியது இருக்குல? அதை பாரு மத்ததை நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம். அப்போ நீ வந்து என்னை பார்க்கலாம்." என்றதோடு அதிருபன் முடித்துக் கொண்டான். சானக்கியா அறையை விட்டு வெளியேறுவதற்காக திரும்ப எதிரே ஓடோடி வந்தான் அதிரூபனின் நண்பன் "அதிரூபா?? ஏன் உன் கைய நீ இப்படி காயப்படுத்திகிட்ட? காலங்காத்தால் அப்பா எழுந்து போகும் போது எதுவுமே சொல்லல, இப்பதான் எல்லாத்தையுமே சொன்னார். இப்படியா நீ பண்ணுவ? நான் உன்ன பார்க்க வரதுக்குள்ள உன்ன நீயே காயப்படுத்திக்கிட்டு.. நம்ம ரொம்ப வருஷம் கழிச்சு சந்திக்கிற முதல் இடம் இப்படியா இருக்கணும். ஏன் அதிரூபா இப்படி பண்ண?" "அமுதன் வந்துட்டியா! உன்ன பாத்து ரொம்ப வருஷம் ஆச்சு அமுதன் இப்படியா இவ்வளவு வருஷம் கழிச்சு வருவ? படிக்கணும்னு போன சரி, வேலை கிடைச்சதுன்னு போன சரி, கிடைச்ச வேலை இப்போ என்ன ஆச்சு?" "அதிரூபா கிடைச்ச வேலைய நான் வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆமா இந்த பொண்ணு யாரு?" அப்போதுதான் சானக்கியாவை அவன் பார்க்கவே செய்தான். அவள் இன்னும் கிளம்பவில்லை என்றதை தெரிந்து கொண்டு "உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? வீட்ல போய் படின்னு சொன்னேன். நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் மத்தத பாத்துக்கலாம்னு சொன்னேன். இப்போ அழுதுகிட்டு இருக்க காலங்காத்தால என்கிட்ட வந்து புலம்பாத சானக்கியா!" பிறகு மனதை சமநிலைப்படுத்திக் கொண்டவன் "அமுதன் இவதான் சானக்கியா நான் கட்டிக்க போற பொண்ணு." என்றதும் "வாவ் மச்சான்! பொண்ணு சானக்கியா இங்க வாங்க." என சானக்கியா அமுதனின் குரல் கேட்டதும் தனது துப்பட்டாவை பிடித்து பிடித்துக் கொண்டபடியே மெல்ல மெல்ல நடந்து வந்தால் அமுதனை நோக்கி ஆனால் அவளது விழிகளோ அவனைப் பார்க்கவில்லை மாறாக அவளது வருங்கால துணைவனை தான் பார்த்தது. "என் பிரண்ட கட்டிக்க நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். ஆனா ஒரு ரகசியம் தெரியுமா? உன்ன நான் எங்கேயோ பார்த்திருக்கேன். இந்த கையில குத்திருக்குற டாட்டூயும் நான் பார்த்திருக்கேன். நீ எங்க படிச்ச?" "அது.. அது.. நான் வந்து இங்க படிக்கல வெளிநாட்டில் தான் படிச்சேன். "ரூபன் நீங்க சொல்ற மாதிரி நான் வீட்டுக்கு போய் படிக்கிறேன். எனக்கு நேரமாச்சு நான் போனும் நேரமாச்சு நான் போனும் நேரமாச்சு நான் போனும்." பதட்டத்தில் படபடவென பட்டாசு போல் பேசியவள் பள்ளி முடிந்த குழந்தைகள் எவ்வாறு வீட்டை நோக்கி ஓடுவார்களோ அப்படி ஓடிச் சென்றால் சானக்கியா.

 

 "சரி அமுதன் நீ ஏன் உன் வேலையை விட்ட?" "அதிரூபா எனக்கு டேரைக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசை. அதான், ஒரு வருஷம் வேலை செஞ்ச சம்பாத்தியத்தை எல்லாத்தையும் பாதி சேமிச்சு வச்சேன். அந்த சேமிச்சு வச்ச பணத்துல ஒரு ஷார்ட் பிலிம் எடுக்க ஆசை. அந்த ஷார்ட் பிலிம்க்கு ஹீரோயின் வேணும். அந்த ஹீரோயின் நல்லா அழகா அவளோட பேச்சு இனிமையா.. எல்லாத்தையும் நான் வந்து பாக்கணும். அதான் உன்கிட்ட தேடி வந்தேன். நீ காலேஜ் புரொஃபஸர் ஆச்சே உன் காலேஜ்ல நிறைய கேர்ள்ஸ் இருப்பாங்க. அதுல யாரையாவது சூஸ் பண்ணலாம்னு தோணுச்சு." "நீ யாரையாவது சூஸ் பண்ணனும்னு என் காலேஜ் பக்கம் வந்துடுடாத. அங்க டைரக்டர்ஸ்க்கு நாட் அலோட். ஆனா என்கூட கைடுக்கு ரெண்டு பேர் வராங்க, அவங்கள நீ பாரு அவங்க ரெண்டு பேர்ல யார் புடிச்சிருக்கோ.. அவங்களுக்கு உன்னுடைய இந்த ஷார்ட் பிலிம்ல நடிக்கிற விஷயத்த சொல்லு. பிடிச்சு போய் இரண்டு பேரும் எவளாது ஒருத்தி வந்தானா, அவள தயவு செஞ்சு கூட்டிட்டு போயிரு. ஆனா ஒன்னு! நான் சொல்லி இருக்கிற அந்த நாட்கள்ல அவங்க என்கிட்ட வந்து பாடம் கத்துக்கணும். இதுக்கு சரின்னு சொன்னேனா உனக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன் இல்லனா ஹெல்ப் பண்ணலாம் பண்ண முடியாது நீயாதான் போய் ஹீரோயின் தேடணும்." உடனே ஆர்வமாக அமுதன் அவனிடம் "நான் நாளைக்கு வரட்டுமா?" "என் கைல காயம் ஆறினதும் எப்படியும் கொஞ்ச நாள் கழிச்சு நானே கூப்பிடுறேன். அன்னைக்கு வந்தா போதும்! சரியா மை டியர் அமுதன், இப்போ வீட்டுக்கு போ! நகுலன் அங்கிள் கேட்டதா சொல்லு எனக்கு தூக்கம் வருது நான் தூங்கணும்.”எப்படி வைனவந்தனும் நகுலனும் ஒன்றாக வளர்ந்து தோழமையை வளர்த்துக் கொண்டார்களோ. அதே போல் தான் அமுதனும் அதிரூபனும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக தோழமை உறவு வளர்ந்து வந்தவர்கள். பள்ளிக்கூடத்தில் இருந்து ஒன்றாக பழகியதால் என்னவோ தெரியவில்லை தூரத்தில் இருந்தாலும் தினம்தோறும் இருவரும் பேசிக் கொள்வதும் வழக்கமாக வைத்துக் கொண்டும் இருந்தார்கள். சானக்கியாவை பெண் பார்த்து வந்ததற்குப் பின் அமுதனிடம் பெரியதாக அவன் பேசிக்கொள்ளவில்லை அதனால் அதிரூபன் தன்னிடம் பேசாதி இருப்பதனால் அவனிடம் பேசுவதற்காகவே வேண்டி விருப்பப்பட்டு வேலையை முறித்துவிட்டு தன் லட்சியத்தை நோக்கியும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தான் வந்து சேர்ந்த ஓரிரு நாட்களிலேயே இவனுக்கு இப்படி காயம் ஏற்பட்டது பார்த்த அவனது மனது உடைந்து போனது அதனால் தோழன் தூங்கினாலும் பரவாயில்லை என்று அவன் பக்கத்திலேயே அமர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

***

 

 ஹேய் சாக்லேட் பேபி நானே! இது டாலர் கொட்டும் மீனே! ஒற்றைத் தூக்கி ஒன்று முழு உலகம் சுற்றுவேனே! சடர்டே நான் நோ நோ!! அட சண்டே நாளும் நோ நோ!! நான் சமத்து பொண்ணு தானோ? அடி சத்தியமா நோ நோ! நான் வெர்ஜின் பொண்ணு தானா? ஹே என்னை யாரும் கேட்டா? இவ ஆமா சொல்ல மாட்டா? அட வெக்கப்பட்டு போவேன். என் வயசு யாரோ கேட்டா? நான் வாய திறக்க மாட்டேன் என் மனச யாரும் கேட்டா? அட மாட்டேன்னாவே மாட்டேன். சோ வாட்? என்னை ஊரே பாக்குது! சோ வாட்? என் செல் நம்பர் தேடுது! சோ வாட்? செம பிகர்னு சொல்லுது! சோ வாட்? சும்மா பணம் விட ஏங்குது! சோ வாட்? டாலர்ஸா குவியுது! சோ வாட்? அட யூரோ அடிக்குது! சோ வாட் பிளாக் பிளாக் மணி பறக்குது! சோ வாட்? எங்க பேங்க் பணி இருக்குது! என ஆராதனா இன்ஸ்டாகிராமில் ரீல் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு அவளே "எனக்காகவே பிறந்தான் இவன் எனக்காகவே வருவான் இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பான என் ஆர்யன்! எனக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்று ஆசை ஆனா இது உன்கிட்ட சொன்னா நடக்குமா?" என அதிரூபனின் புகைப்படத்தை பார்த்து காதலோடு பேசினாள். 

 "ஆரு என்ன நீ உன்னோட இந்த ஆசைய என்கிட்ட ஏன் சொல்லாமல் இருந்த?" என அவளது பெரியம்மா ரஞ்சனா கேட்டார் "அம்மா. நீங்க என்ன சொல்லுவீங்கனு எனக்கு தெரியலை. ஆனா.. ஆர்யன் மாமா என்னை ஏத்துப்பாரா?" என இறுதியாக ஏங்க "கண்டிப்பா உன்னை ஏத்துப்பார். நீ சும்மா அவன்கிட்ட பழக தான அங்க போற? படிக்க போகலை தானே? ஜெயவள்ளி கிட்ட எப்ப நம்ம வாக்கு கொடுத்து சொன்னோமோ அப்ப இருந்து அவ அந்த வாக்கை காப்பாத்த போராடுவா. கண்டிப்பா உன்னை அவன் ஏத்துப்பான். சரிமா நா காலேஜ் போயிட்டு வரேன். நீ வீட்ட பார்த்துக்கோ." என்றதோடு கிளம்பினார். ஆராதனா வைனவேந்தனை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தாள். "அங்கிள் ஆன்ட்டி யாராவது இருக்கீங்களா?" ஆராதனா வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் வைனவேந்தன் அதிரூபனுக்காக உடையை எடுத்துச் செல்வதற்கு வீட்டிற்கு வந்திருந்தார் ஆதலால் அவளைப் பார்த்த அவர் "ஓ ஆராதனா வந்து உட்காரு. என்ன விஷயம்?" "அது வந்து ஒரு உண்மையான விஷயம் பேசணும். நீங்க இப்போ ஃப்ரீயா அங்கிள்?" "இல்லப்பா காலையில பையனுக்கு காயம் பட்டுருச்சு. ஹாஸ்பிடல் இருக்கான், எதுனாலும் நாளைக்கு பேசுவோம்." என்றதோடு வீட்டை விட்டு கிளம்ப அவர் பின்னாடியே ஓடினால் ஆராதனா. "அங்கிள் நாளைக்கு நான் கண்டிப்பா வருவேன்! உங்க கிட்ட பேசணும்!" என்றதோடு முச்சுவாங்கினாள். 'ஆர்யன் மாமாவுக்கு காயமா? நா..போகலாமா? மாமா.. எனக்கு வேற வழி தெரியல. நா விஷயத்தை அங்கிள்கிட்ட சொல்லி தான் ஆகணும்.' என நினைத்தவள் "அங்கிள்!!! பிளீஸ் எனக்காக ஒரு மூனு நிமிஷம் ஒதுக்க முடியுமா?" என ஆராதனா கேட்டாலும் "ஏன்? அப்படி என்ன விஷயம் சொல்லணும்? சி என் பையனுக்கு உடம்பு சரியில்லை. நா அவனை தான் பார்க்கணும். உன்னோட கதை பேச எனக்கு டயம் இல்ல." என வைனவேந்தன் தடுக்க "ஆர்யன் மாமாவ பத்தி பேச வந்திருக்கேன்." 'ஆர்யன்' என்ற வார்த்தையை கேட்டதும் "ஆர்யனா? நீ.." என ஏதோ கேட்க பாவை முந்தினாள் "நா நந்தகி பொண்ணு. பிளீஸ் அங்கிள் ஒரு மூனு நிமிஷம்?" 

 

நடுயறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து ஆராதனாவை பார்த்தவர் "சொல்லு ஆராதனா என்ன சொல்லணுமோ சொல்லு." என பெண்ணவளுக்கு வாய்ப்பு தர "உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல. அத்தகிட்ட நா அவங்க என் அம்மாவுக்கு கொடுத்த வாக்கு, அதோட ஆர்யன் மாமாவுக்கு ஏன் வேற பொண்ணு பார்த்துட்டாங்க. எப்படி அங்கிள் நீங்க என்னை மறக்கலாம்?" என சோகமாக கேட்க "இங்க பார் ஆராதனா.. நந்தகி என் சொந்த தங்கை இல்லை. ஆனா அவளை நா சொந்த தங்கையா தான் பாசம் வைச்சு வந்தேன். தோழிகள் இரண்டு பேரும் அவங்களுக்குள்ள கொடுத்துகிட்ட வாக்கை எனக்கு எப்படி தெரியும்? அதோட, ஆர்யன் பத்தி உனக்கு எப்படி தெரியும்?" ஆராதனாவிற்கு அவரது வார்த்தைகள் பொய் சொல்லவில்லை என்பதை அவளுக்கு உணர்த்தியது இருப்பினும் இவரது இந்த கேள்வியை கேட்டு ஆராதனா சிரித்தாள். "என்ன இது சின்னபிள்ளைதனமா அ..அங்கிள் ஆர்யன் அவரை நீங்க மறந்திருக்க வாய்ப்புகள் இல்ல. உங்க பையன் அங்கிள்! அதிரூபனுடைய தம்பி?" என்றதும் வைனவேந்தன் "அதிரூபன் எங்களுக்கு ஒரே பையன். நீ சொல்றதும் உண்மை தான். ஆனா ஆர்யன் இப்ப இங்க இல்ல. ஆர்யன் வேற!" என்றதோடு அவ்விடம் விட்டு சென்றார். 'அங்கிள் எதையோ மறைக்கிறார். அது நல்லாவே தெரியுது. இப்ப நா ஹாஸ்பிட்டல் போனா? பிரச்சனைகள் தான் வரும். பேசாமல் வீட்டுக்கு போகலாம்.' என்றதோடு மனதை திடப்படுத்தி கொண்டு வந்த வழியை நோக்கி சென்றாள்.

 

*

 

சானக்கியா மருத்துவமனை நோக்கி வரவும் சுதாகரும், பைரவியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். சிறிது நேரம் அவர்கள் கடவுளை பிராத்தனை செய்தார்கள் அப்போது தான் சானக்கியா வீட்டிற்கு வந்தாள் உள்ளே வந்தவுடன் தாய் தந்தையிடம் பேசாமல் இருக்கவும் "என்னங்க சானக்கியாவையும் நம்ம மாப்பிள்ளையையும் யாரோ கண்ணு வைச்சுட்டாங்க. அதான், இன்னைக்கி இப்படி நடந்திருக்கு. நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?" என தன்னவனின் மார்ப்பில் சாய்ந்து அழுதார் பைரவி. அவருடைய கேசத்தை தடவி அவளிடம் "ஏற்கனவே நிறைய பிரச்னை மழை போல் வந்தாலும் பனி போல விலகிருக்கு. இது, அப்படி இல்ல யாரும் கண்ணு வைச்சிருக்க வாய்ப்பு இல்ல. நீ வருந்தி அவளையும் வருந்த செய்யாத. நம்ம சானக்கியாவுக்கு அவகாசம் கொடுக்கணும்." இதெலாம் கேட்ட சுதாகரின் மகள் விழியில் வேளி போல் தடுத்து வைத்திருந்த கண்ணீரை துடைத்தபடி அறையினுள் சென்று கதவை பூட்டியவள்.

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘


   
ReplyQuote

You cannot copy content of this page