About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் :9
வந்தனாவையே பாவமாக பார்த்தபடி நின்றிருந்தாள் ஆராதனா.
அவளருகே வந்த வந்தனா அவளின் தோளினைத் தொட்டு, " இங்க பாரு ஆரா... சிம்பிளா சொல்லனும்ன்னா பின்னாடி கஷ்டப்படாதே... அவ்வளவுதான் சொல்லுவேன்.நீ பச்சை மண்ணு இல்ல, புரிஞ்சு நடந்துக்க..." எனக்கூறி நகர்ந்தாள்.
வந்தனாவின் அறிவுரை மனதில் பதிந்தாலும் அறிவு ஏற்க மறுத்தது.
வாரங்கள் மாதங்கள் ஆகின.ஆராதனாவும் தன் ஆய்வறிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.
அதை மீறி தேவ் விடம் அநாவசியமாக பேசவில்லை.அவனும் அவளின் சிகிச்சை முறைகள் சம்பந்தமான அவளது ஆர்வத்தை கண்டு அவளுக்கு உதவினான்.
தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளின் சிகிச்சை முறை பற்றியும் உடல் நிலைக்கேற்ப சிகிச்சை தருவது எவ்வாறு என்று விளக்கினான்.
அன்று வேறு மருத்துவமனையில் அவசரமாக ஒரு குழந்தையின் சிகிச்சைக்கு அவனை அழைத்திருந்தனர்.
மாலை மங்கத் துவங்கிய நேரம் அவனது அலைபேசி அலறியது, " ஹலோ.. மம்.. சொல்லுங்க சார்…அப்படியா…சரி ஓகே… …நான் வர்றேன் சீக்கிரமே…இல்ல சார்…நோ ப்ராப்ளம்….” எனக்கூறி அலைபேசியை வைத்தான்.
எதிரே இருந்த ஆராதனா ஏதோ குறிப்பெடுத்து கொண்டிருந்தாள்.அவள் கிளம்பினால்தான் அவன் கிளம்ப முடியும் எனவே, “ஆராதனா, ஒரு எமர்ஜென்சி….. பி.எம்.ஹாஸ்பிட்டல்ல ஒரு கான்ஜெனிட்டல் ஹார்ட் டீசிஸ்(congenital heart disease) கேஸ் ,சோ நம்ம மீதிய நெக்ஸ்ட் வீக் பாக்கலாம்…” என்றவாறே கிளம்ப தயாரானான் .
“சார்….” எனத் தயங்கிவாறே நின்றாள்.
அவன் திரும்பி என்னவென்பது போல் பார்த்தான். “தப்பா நினைக்காதீங்க சார்…இந்த கான்ஜெனிட்டல் கேஸ்க்கு நானும் உங்க கூட வந்து அபசர்வ் பண்ணலாமா...? தீசிஸ்க்கு இன்னும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்...சோ...இப் யூ டோன்ட் மைண்ட் ?..“ எனத் தான் கேட்க நினைத்தவற்றை தயங்கி தயங்கி கேட்டுவிட்டு ஏதேனும் திட்டி விடுவானோ என மிரண்டு பார்த்தாள்.
அவனும் அவளது ஆர்வத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறான்.சிறு சிறு நுணுக்கமான விஷயங்களையும் நன்றாக கிரகித்துக் கொள்கிறாள்.
“ அன்னிசியா ஃபீல் பண்ணுனீங்கன்னா வேணாம் சார்” என அவசரமாக முடித்தாள் .
” நோ …நோ…நாட் லைக் தட்,நீ ஹாஸ்டல்ல பர்மிஷன் கேக்கனும்…. அப்புறம் ரிட்டர்ன் லேட்டானா உனக்கு கஷ்டமாகும்.. அதான் யோசிச்சேன்….” என்றான்.
“ நான் பர்மிஷன் வாங்கிட்டு ஆட்டோல வந்துடுறேன் சார்.. பக்கம் தானே சார். உங்களுக்கு டைமாகும்.. நீங்க கிளம்புங்க…நா வந்து ஜாயின் பண்ணிக்குறேன்..” என்றாள்.
சிறு தயக்கத்துடன்,
“ ஓகே…பாத்து வா” என்று கூறிவிட்டு சென்றான்.
அவளும் ஹாஸ்டல் வார்டனிடம் அனுமதி பெற்று அந்த மருத்துவமனைக்கு சென்று விட்டாள்.
அங்கு அவன் அவசர சிகிச்சை பிரிவில் சில மருத்துவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
இவளுக்குத்தான் “எப்படி உள்ளே செல்வது…” எனத் தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
அவளை கண்ட தேவ் அவளை உள்ளே வருமாறு அழைத்து அவளை அறிமுகப்படுத்தினான். அங்கிருப்பவர்களுக்கு அவள் இருப்பதில் விருப்பமில்லையென்றாலும் தேவ்விற்க்காக சரி என்றனர்.
தேவ் குழந்தையின் பரிசோதனை மாதிரிகளை பார்த்து விட்டு குழந்தையை பரிசோதித்தான். கான்ஜெனிட்டல் (cogential) பாதிப்பில் பல வகை உள்ளது அதில் எந்த வகையான பாதிப்பு என்பதை தெளிவாக கூறி குழந்தையின் அறுவை சிகிச்சை பற்றி விவாதித்தான். ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை செய்யலாம் , என்று பரிந்துரைத்துவிட்டு, அங்கிருந்த மூத்த மருத்துவர்களிடம் சிலவற்றை தெளிவுபடுத்திவிட்டு கிளம்பத் தயாரானான், அப்போது தான் ஆராதனா என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை கவனித்தான்.
அவள் குறிப்புகளை எடுத்து முடித்து நிமிர்ந்தாள்.
அவளைத்தான் அவனும் பார்த்தான், அவளருகே வந்து ,” எல்லாம் நோட் பண்ணிக்கிட்டயா?..., நெக்ஸ்ட் கிளாஸ் ல மத்த ஸூடுடண்ட்ஸ்க்கு செமினார் ரெடி பண்ணிடு“ என்றான்.
“சரி சார்” என்றாவது மணியைப் பார்த்தாள், ஒன்பதரையை நெருங்கியது.
வெளியில் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.இதமான மெல்லிய மண்வாசனையுடன் கூடிய தென்றல் வீசியது.
இரவினை ரம்மியமாக்கும் இதமான சூழ்நிலை நிலவியது.
வேகமாக இருவரும் கிளம்பி கீழே வந்தனர்.
ஆராதனா, “ ரொம்ப நன்றி சார்.ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருந்தது, கிளம்புறேன் சார்” என வேகமாக திரும்ப ,தேவ் ,”எப்படி போவ?... மழை பிடிக்கும் போலவே?...” என்றான்.
.
அத்தியாயம் 10
தெளிவான நீரோடை போல இருந்த தேவ்வின் வாழ்வில் சிறு கல்லெறிந்து கலங்கியது போல் இருந்தது ஆராதனா வின் மேல் வந்த சிறு சலனம்.
மனம் முழுவதும் முதல் முறையாக ஒரு தடுமாற்றம்.
" இல்லை இது வேண்டாம்" என மனதில் ஒரு உறுதியான முடிவினை எடுத்த பிறகுதான் தேவ்வால் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடிந்தது.
தேவ் -ஆராதனா நிலை திரிசங்கு நிலையிலிருக்க , அங்கு வந்தனா ரிஷியின் மனதில் ஆழப் பதிந்து கொண்டு இருந்தாள்.
அவளது தைரியம், தெளிவான சிந்தனை, எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும் மற்றவருக்கு ஓடிப்போய் உதவும் குணம், எளிமையான தோற்றம் என ஒவ்வொரு விடயத்திலும் அவள் பால் அவன் மணம் சென்று கொண்டிருந்தது.
எத்தனையோ அழகான பெண்களிடம் பேசி பழகி நட்பு பாராட்டி இரவு விருந்தில் கூட கலந்து கொண்டிருக்கிறான் ரிஷி, அதுவும் அளவோடுதான்.
அவர்களிடம் தோன்றாத ஒரு உரிமையுணர்வு வந்தானா விடம் மட்டுமே தோன்றியது.
அவனால் தன் மனதினை பூட்டி வைக்க முடியவில்லை.உடைத்துஅவளிடம் கூற நேரம் பார்த்து கொண்டு இருந்தான்.
ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்த்து கொண்டு இருந்தாள்.
மருத்துவமனை வளாகம் ஒரு பக்கம் இருக்க ,சிறிது தூரம் தள்ளி தான் கல்லூரியும் இருக்கும்.
வகுப்பினை
தவிர்த்து மற்ற நேரங்களில் தேவ்வும்,ரிஷியும் மருத்துவமனை வளாகத்தில், தங்களுடைய அறையில் புறநோயாளிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே
வகுப்புகள் என்பதால் மீதி நேரம் புற நோயாளிகளுக்கான பார்வை நேரத்திலோ அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சையிலலோ இருப்பார்கள்.
ஒரு நாள் மாலை நேரத்தில் வந்தனா மட்டும் ஆய்வறிக்கைக்காக நோயாளிகளின் புள்ளி விபரங்கள் சரி பார்க்க ரிஷியினை பார்க்கச்சென்றாள்.
” மே ஐ கம் இன் சார்?....” என்றாள்.
” எஸ்…,கம் இன்..” என்றான் ரிஷி.
“ சார் இந்த ஸ்டாடிஸ்டிகல் ரிப்போர்ட் கரெக்டா வந்துருக்கான்னு பாருங்க சார்” என்றாள்.
ஏனெனில் எந்த ஒரு ஆய்வறிக்கைக்கும் புள்ளி விபரங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது சரியாக இருந்தால்தான் அவளால் அடுத்தடுத்து செய்ய முடியும்.எனவே தான் நேரம் காலம் பார்க்காமல் கடந்த ஒரு வாரமாக இந்த புள்ளி விபரங்களை மிகச் சரியாக தயாரிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறாள்.
அவனும் பார்த்து கொண்டே தான் இருக்கிறான் இந்த ஒரு வாரமாக அவனை கேள்விகளை கேட்டும், சந்தேகங்களால் அவனை திணறடித்தாள்.
இப்போது கடைசியாக ஒருவழியாக முடித்து கொண்டு வந்திருக்கிறாள். அதனை வாங்கி பார்த்தவன் சில நிமிடங்களில்,
” ஃபெர்பக்ட்,வந்தனா …வெரி குட்.இத நீ தாராளமா மெயின் காப்பி போட்டுக்கலாம்,
ஃபர்தரா என்ன புரோசீட் பண்ணனுமோ பண்ணிட்டு எனக்கு ஒரு சாஃப்ட் காபி அனுப்பிரு” என்றான்.
அவள் முகம் இப்போது தான் தெளிந்தது.தான் மிகவும் பிரயத்தனப்பட்டு செய்த ஒன்று மிகச் சரியாக வந்த திருப்தி அவளிடத்தில்.
.” ஓகே சார்…. தாங்க்யூ” என்றாள்
அவனோ,” இப்பதான் உன் முகம் டென்ஷன் இல்லாம இருக்கு,ஒரு வாரமாக ரொம்பவே டென்ஸ்டா இருந்த,ஹோப் யூ ஃபீல் ரிலாக்ஸ்ட்” என்றான்.
அவள் அதற்கு பதிலேதும் சொல்லாமல் பேச்சை கத்திரித்தாள்,” ஓகே சார், தாங்க் யூ,நான் மெயில்ல சாஃப்ட் காபி அனுப்பிடுறேன்” என்றவாறே வாயிலை நோக்கி திரும்பும்முன்
“ வந்தனா …ஒரு நிமிஷம்” என நிறுத்தினான் ரிஷி.
அவளோ திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
“ நான் நேரடியாகவே சொல்லிடுறேன்.நான் உன்ன மனப்பூர்வமா விரும்புறேன்.லைப் லாங்கா நீ என் கூட இருக்கனும் ன்னு ஆசைப்படுறேன். அதுக்காக நான் உன் பின்னாடி சுத்தி உன்ன தொந்தரவு பண்ணிட்டு இருக்க மாட்டேன்.டேக் யுவர் ஓன் டைம்.” என சொல்லிக்கொண்டே இருக்கும்போது அவள் ஏதோ பேச வர அவளை கையமர்த்தி,” இரண்டு நிமிஷம் நா சொல்றத முழுசா கேட்டுட்டு பேசு” என்றான்.
“ இப்ப இல்லன்னாலும் லைப்ல கல்யாணம் பண்ணனும்னு நினைச்சின்னா என்னோட ரிக்வஸ்ட கன்சிடர் பண்ணு,பொத்தாம் பொதுவா முடியாது ன்னு சொல்லிடாத" என முடித்தான்.
அவளோ ,”இது சரி வராது சார்….நாட் இன்ட்ரெஸ்டட்” எனக் கூறி அவனை வலிக்கச் செய்தாள்.
ஆனால் அவனோ சுருக்கென்று குத்திய வலியை பொருட்படுத்தாமல்,
“ இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லன்னா… பின்னாடி இன்ட்ரெஸ்ட் வரும் வந்தனா" என்றான்.
அவளோ,
“ கொஞ்சமாவது டாக்டர் மாதிரி பிகேவ் பண்ணுங்க,விடலப் பையன் மாதிரி பேசிட்டு இருக்காதீங்க” என்றாள்.
" ஏன் விடலைப் பையனுக்கு மட்டும் தான் காதல் வரணுமா,டாக்டர்ஸ்க்கெல்லாம் வரக்கூடாதா என்ன?....” என்றான்.
“ சார்…ப்ளீஸ்… இதோட இந்த டாபிக்க விட்டுருங்க,இனிமே வேண்டாம் , அப்புறம்….அப்புறம்….
ஒரு ரெக்வஸ்ட் உங்க புரோபோசல அக்சப்ட் பண்ணல்ன்னு இன்டர்னல்ஸல கம்மி பண்ணிடாதீங்க “ என்றாள் அவசரமாக.
அவனுக்கு சிறிது
சினம் வந்துவிட்டது உடனே ரிஷி,
“ அந்த அளவுக்கு சீப்ஃபா பிகேவ் பண்ணமாட்டேன்.
புரபஷன் வேற பெர்சனல் வேறன்னு எனக்கு நல்லாவே தெரியும் நீ கவலைப்படாத.எப்பயும்போல பேசு. ஏதும் டவுட்ஸ்ன்னாலும் தயங்காம கேளு” என்றான்.
“ ம்ம் “ என மட்டும் அவனை நோக்கி கூறிவிட்டு வெளியேறினாள்.
இவ்வளவு நேரம் அவனிடம் விறைப்பாக பேசினாலும் அறையினை விட்டு வெளியே வந்ததும் சிறு படபடப்பு வந்தது.கோடிக் கணக்காண சொத்துகளுக்கு அதிபதி இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியே அவனுடைய தந்தையினுடையது. அவன் தன்னிடம் காதலைக் கூறுவது போலித்தனமாக இருந்தது.
“ சும்மா டைம்பாஸுக்கு சொல்லிருப்பாரு , இதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத வந்தனா” எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு விடுதியை நோக்கி செனறாள்.
அதன் பின்னர் வந்த நாட்களில் அவனும் வந்தனாவை தொந்தரவு செய்ய வில்லை அவளும் வெறுப்பைக் காட்ட வில்லை.விலகி நின்றாள் அவ்வளவே.
ஆராதனாவின் பார்வை மட்டும் கொஞ்சமும் மாறவில்லை.
அவன் செல்லும் இடங்களில் எல்லாம் அவளது கண்கள் அவனை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அவனும் கவனித்தான் அவளது பார்வையை.
அது கூட அவனுக்கு ஒரு வித எரிச்சல் தரவே அவளை தனியாக அழைத்து ,"இது போல எல்லா இடத்திலும் என்னையே பார்க்காதே.. ,இனி இப்படி நடந்தா ....நா வேறவிதமா ஆக்ஷ்ன் எடுக்க வேண்டிவரும்" என எச்சரிக்கை விடுத்தும் அவளைத் திட்டியும் அவனது பலவீனத்தை அழகாக மறைத்துவிட்டான்.
அவளுக்கோ கண்கள் எல்லாம் கலங்கி விட்டது.
தவறென்று நன்றாக தெரியும் ஆனாலும் அவனை ரசிப்பது மட்டுமே பிறவிப் பயன் போல் செய்து கொண்டிருந்தாள் அவள்.
அவளும் "சாரி... சார் ..... இனிமேல் இப்படி பண்ணமாட்டேன், உங்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் " எனக் கூறி விட்டு விறுவிறுவென வகுப்பினை நோக்கி சென்றாள்.
அங்கு ஒரு அறையிலிருந்த டாக்டர் விக்டருக்கு இவையனைத்தும் கேட்க நேர்ந்தது .
ஆனால் பாவம் ஆராதனாவிற்கு தெரியவில்லை அடுத்தமுறை அவனுடான அவளுடைய சந்திப்பு , அவளுக்கு பலத்த அடியினை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறதென்பதை.
அப்போது வந்தனாவின் வார்த்தை எவ்வளவு உண்மையாக இருக்கும் என்பதை உணர்வாள்.
ஆம்! காலம் அவளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்க தயாராகிவிட்டது.
யாரின் மேல் தவறு என்று பிரித்தறிய முடியாத நிலை ஏற்படும்.
அத்தியாயம் 11:
ஏனோ ஆராதனாவின் மனம் சோர்ந்து போய் இருந்தது தன்னை தானே முயன்று சமாதானம் செய்து கொண்டாள்.
அவனுக்கு விருப்பமில்லையேல் அவளால் என்ன செய்ய முடியும் .
முதலில் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டு ...பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தன்னை தேற்றிக்கொண்டு பாடத்தில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
எவ்வளவு பட்டாலும் மனம் அவனையே சுற்றியது.
அதனை கவனமாக தன் முகத்தில் காட்டாமல் இருந்தாள்.
அவளது பாராமுகம் தேவ்வினை ஏதோ செய்தது.
”ரொம்ப திட்டிட்டோம் போலவே...., பாக்கவே மாட்டேங்குறாளே... “ என நினைத்தான்.
அவனது மனசாட்சி அவனை காறி உமிழ்ந்து,
” வேண்டாம் ன்னு தானே அவள திட்டுன, அப்புறம்….. எதுக்கு அவ பாக்கல,திரும்புல ன்னு என்ன புலம்புற…இது சரியா வராது….உன் முடிவுல உறுதியா இரு...” என மதில் மேல் பூனையாக யோசித்தான்.
டாக்டர் விக்டர் ஆராதனா மற்றும் வந்தனாவின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர் ,எனவே அவர் தேவ் ஆராதனா உரையாடலை கேட்க நேர்ந்தால் அவளை அழைத்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறி தன் புதிய வீட்டு முகவரி மற்றும் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் மருத்துவமனையின் பெயரினை அவளுக்கு தந்துவிட்டு ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு டெல்லிக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.
முதலாமாண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்பு தொடங்கியது.
வெற்றிகரமாக வந்தனா மற்றும் ஆராதனா தங்களுடைய ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.
வாய் மொழித் தேர்வில் இருவரும் அருமையாக பதிலளித்து மருத்துவக் கல்லூரி டீன் களின் பாராட்டைப் பெற்றனர்.
ரிஷி வெகுவாக வந்தனாவைப் பாராட்டினான்.வந்தனா அதனையும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.அவளது இந்த அலட்டலில்லாத குணம் அவனை இன்னும் இன்னும் பிடித்தது.
தேவ் ஒரு மெச்சுதல் பார்வையுடன் நகர்ந்து விட்டான்.ஆராதனாவிற்கு சிறிது ஏமாற்றமே , ஏதாவது ஒரு வார்த்தை கூறுவான் என்று எதிர்பார்த்தாள் ,அவனோ வெறும் பார்வையுடன் சென்று விட்டான்.
ஏனோ அவளுக்கு அவன் சாதரணமாகக் படிப்பு விஷயமாகக்கூட சரியாக பேசாமலிருப்பதுஒரு வித அழுத்தத்தை கொடுத்தது.
இப்படியே மூன்று மாதங்கள் சென்றது.
ஆராதனாவின் அக்காவிற்கு திருமணம் முடிந்து முதல் வருடம் திருமண நாளைக் கொண்டாடினார்கள்.
ஆராவும் மகிழ்ச்சியாக தன் அம்மா, அப்பா,அக்கா மற்றும் மாமாவுடனும் அவர்களின் கைக்குழந்தையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி விட்டு விடுதிக்கு திரும்பியிருந்தாள்.
வந்தனாவோ, “ என்னடி அக்காவோட முதல் வருஷ கல்யாண நாளை நல்லா செலிப்ரேட் பண்ணியாச்சா? குட்டி பையன் எப்படியிருக்கான்?...”
என்றாள்.
"ம்ம்... நல்லா செலிப்ரேட் பண்ணினோம் டி, பாவம் மாமா ஆசிரமத்தில படிச்சு வளர்ந்துனால அவங்களுக்குன்னு சொந்தம் ன்னு யாருமில்லை அதனால அவர் வளர்ந்த ஆசிரமத்திலயே போய் செலிப்ரேட் பண்ணிட்டு வந்தோம்.அக்காவும் மாமாவும் செம ஹேப்பி ,எனக்கும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு . எங்க அக்கா.. மாமா… இப்படியே ஹேப்பி கப்பிள்ஸா இருக்கனும் டி....குட்டி பையன் நல்லா இருக்கான் . எல்லாரையும் ஃநைட் ட்யுட்டி செய்ய வைக்கிறான் டி, குட்டி வாலு” என கண்கள் மின்ன நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
அவளின் தலையை வருடி விட்டு தூங்கச் சென்றாள் வந்தனா.
சொன்னபடியே வந்தனாவை காதல் என்னும் போர்வையில் தொந்திரவு செய்யாமல் இருந்தான் ரிஷி.
அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது , "தன்னிடம் உண்மையாகவே ரிஷி தன் காதலைக் கூறினானா?..... அல்லது ஏதேனும் கனவு கண்டிருப்பேனா?” என்று.
ஏனெனில் அந்த அளவு சிறு பார்வையில் கூட கண்ணியத்தை கடைப்பிடித்தான் ரிஷி.பின்னாளில் அந்த கண்ணியத்தை உடைக்க போகிறவனே அவன்தான் எனப் புரியவில்லை அவனுக்கு.
ஒரு மாதம் கடந்த நிலையில் ஆராதனாவின் அலைபேசி அலறியது அவளது அக்கா அழைத்திருந்தார், “ஹலோ!...சொல்லுக்கா,
எப்படியிருக்க? நல்லாயிருக்கியா, குட்டி பையன் என்ன பண்றான்?....தூங்க விடுறான?..” என மடமடவென பேசிக் கொண்டே இருந்தாள்.
அவள் தமக்கையோ ஒரு பெருமூச்சுடன், ”இங்க பாரு ஆராதனா இப்போதைக்கு உன் கிட்ட பேச நேரமில்லை ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் கூப்பிட்டேன் .நாள கழிச்சு உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க.அம்மா அப்பாவோட தீடீர் ஏற்பாடு.நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் மாமாவும் சொல்லி பார்த்தார் இப்ப வேணாம் நீ படிச்சு முடிச்சப்பறம் பாத்துக்கலாம் ன்னு.ஆனா ரெண்டு பேரும் பிடிவாதமா உனக்கு கல்யாணம் பண்ணனும்னு நிக்குறாங்க.ஏன்னா உனக்கு பின்னாடி நேரம் சரியில்லை இப்பவே பண்ணனும் இல்லன்னா ஆறு வருஷத்துக்கு மேலதான் பண்ணனும்னு ஜோசியர் சொல்லிருக்காங்களாம்.அதனாலதான் இந்த ஏற்பாடு.இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா ஃபோன் பண்ணுவாங்க .நீ என்ன பேசனுமோ பேசிடு டி” என வைத்து விட்டாள் .
"என்ன தீடீரென்னு... இப்படி யோசிக்கக் கூட நேரம் கொடுக்காம...." என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்து அவளது அலைபேசி அலறியது.
எடுத்துப் பார்த்தாள் அவளது தந்தையின் எண் ஒளிரியது.
இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்தது அவளது அலைபேசி.
அதனை எடுக்காமல்... தந்தையிடம் என்ன சொல்வது... ஏது சொல்வது எனக் குழப்பம் அவளுள்.
இன்னும் அவளின் காதலை ஏற்கவில்லை தேவ்.அப்படியிருக்கும் போது எப்படி "தேவ்வை விரும்புகிறேன்..." எனக் கூறுவது.
அவளால் ஏதும் செய்ய இயலாத கையறு நிலை.பின் சற்று தன்னை சமன்படுத்திக் கொண்டு அவளது தந்தைக்கு அழைத்தாள்.
பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர் நேரடியாக அவளது தந்தை விஷயத்தைக் கூறினார், “ ஆரா ம்மா …அப்பா ஒரு விஷயத்தை பண்ணினா உங்க ரெண்டு பேரோட நல்லதுக்குத்தான்னு நினைச்சேன்னா உடனே கிளம்பி வா. உனக்கு நல்ல வரன் வந்திருக்கு மா.மாப்பிள வீட்டுல நீ படிச்சு முடிக்கறது, வேலைக்கு போறதெல்லாம் பிரச்சினை இல்லை ன்னு சொல்லிட்டாங்க மா.நல்ல குடும்பம், நல்ல வசதி,ஒரே பையன் பார்க்கவும் நல்ல இருக்கான்.அவனும் டாக்டரா தான் இருக்கான்.இத விட பெத்தவங்களுக்கு வேற…என்ன வேணும்……சொல்லு.முடியாதுன்னு சொல்லிடாதம்மா உன்னைய நம்பி அவங்கள வரச்சொல்லிட்டேன்..” என்றார்.
ஆராதனாவோ, ” அப்பா ஏன் இப்படி கொஞ்சம் கூட டைமே கொடுக்காம தீடிர்ன்னு ஏற்பாடு பண்ணிருக்கீங்க?....நான் இன்னும் படிக்கனும் பா. ப்ளீஸ் வேண்டாமே…. இப்ப கல்யாணம் …” எனக் குரல் தழுதழுக்க கூறினாள் .
அவளுடைய தந்தையோ பிடிவாதமாக, “ என் மேல் மரியாதை வைச்சிருந்தா உடனே கிளம்பி வா,இல்லனா உன் இஷ்டம்" என வைத்துவிட்டார்.
அந்த “ உன் இஷ்டம் “ என்ற வார்த்தையிலேயே வரவேண்டும் என்றமறைமுக கட்டளையிருந்தது.
அவருக்கு நன்றாகத் தெரியும் மகள் தன் சொல்லை மீறமாட்டாள் என.
தொப்பென அமர்ந்தாள் நாற்காலியில்.அடுத்து அவள் கிளம்ப வேண்டும்..அவளுக்கோ மனம் முழுவதும் தேவ்வின் நினைவு.
எவ்வளவோ அவமானம் பட்டாகி விட்டது.
கடைசியாக ஒரு முறை பேசிப் பார்க்கலாமா? எனத் தோன்றியது.
வந்தனாவின் அறிவுரையெல்லாம் காற்றில் பறக்க விட்டு தேவ்வினை நேரில் காணச் சென்றாள்.
முகம் வெளிறிப் போய் நடை தடுமாறியது.
மனமோ, ” மீண்டும் அவமானப்படத் தயாராகி விட்டாயா” எனச் சாடியது .
மாலை நேரம் கருமேகங்கள் சூழல தொடங்கியது வானம் பெயர்ந்து கீழே விழுமளவு இருள் சூழ்ந்து வந்தது .
ரிஷியின் அறைக்கு அனுமதிப் பெற்று சென்றாள்.
“ குட் இவ்னிங் சார்…தேவ் சார….பாக்க அவரோட ரூமுக்கு போனேன் ஆனா…காணோம்.. எங்க இருக்கார் சார்” எனத் தொண்டை கமறக் கேட்டாள்.
அவளது முகத்தை பார்த்த ரிஷி ஏதோ சரியில்லை என நினைத்து “அவன் பின்னாடி இருக்குற லேப் பில்டிங்க்கு போணும்ன்னு சொன்னான்.மே பீ அங்க இருக்கலாம் மா,ஏன்?...ஏதாவது முக்கியமா கேக்கனுமா “ என்றான்.
“ ம்ம். ஆமா… சார் கேக்கனும்” என்றாள்.
” பார்த்து சீக்கிரம் ஹாஸ்டல் போயிடு மா,லேப் பில்டிங் கொஞ்சம் தூரம் போகனும் யாரையும் துணைக்கு கூட்டிட்டுப் போ மா” என்றான்.
அந்தக் கட்டிடம் விடுதியில் இருந்து சற்று அதிக தூரத்தில் உள்ளது…
“தேங்க்யூ சார்” எனக் கூறி விட்டு அவனிருக்கும் கட்டிடத்திற்குள் சென்றாள்…
அங்கிருந்த அறை ஒன்றில் தேவ் ஏதோ மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
சற்று நேரத்தில் வேகமாக கீழே இறங்கி வந்தான்.
அவளோ மறுபக்கத்தில் இருந்து வருவதற்குள் காரை இயக்க அமர்ந்து விட்டான்.
வேகமாக ஓடி வந்த ஆராதனா அவனின் காரின் முன்னால நின்றாள்.
“ சார் சாரி. சார் அர்ஜன்டா உங்க கிட்ட பேசணும்….. முடியாதுன்னு சொல்லிட்டாதீங்க” என கண்கள் கலங்க கேட்டாள்.
அவனோ மிகவும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.இவள் வந்து நிற்கவும் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
"ஏய், உனக்கு அறிவில்ல எத்தனை தடவை சொல்றது, எனக்கு உன் மேல எந்த ஒரு இன்ட்ரெஸ்டும் இல்லைன்னு, இந்த காதல் கண்றாவி எல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு.உனக்கென்ன டீனேஜ் பொண்ணு ன்னு நினைப்பா , கொஞ்சம் புரபஷனலா இரு ,என் கோவத்த கிளறாம இங்கிருந்து முதல்ல கிளம்புடி எனக்கு வழிய விடு முதல்ல “என்றவாறே அவசரமாக கிளம்பும் போது,
“ப்ளீஸ் நா சொல்றது கேளுங்க “என்று தவிப்புடன் அவசரமாக அவன் கையை பிடித்தாள்.
“ஏய் சீ டோன்ட் டச் மீ இடியட், அதான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் ல, உலகத்துல வேற ஆம்பளயே இல்லையா, ஓஓ என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வசதியா செட்டில் ஆயிடலம்ன்னு நினைக்கிறியா? “ம்ம்..” என தன் தாடையை தடவியபடி”இல்ல வேற ஏதாவது என்கிட்ட இருந்து எதிர்பாக்குறியா”என்று வார்த்தையால் அவளை காயப்படுத்தினான்.
“ பிளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்...”என்று அவள் மீண்டும் அவன் கையை பிடிக்க வர, அவன் வேகமாக கைகளை உதறி தள்ளியதில் நிலை தடுமாறி கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்தாள்.
அவனின் இந்த பரிணாமம் கண்டு அதிர்ந்தே போனாள்.
கீழே விழுந்ததில் முழங்கையும், உள்ளங்கையும் கூரிய கல்லில்பட்டு இரத்தம் வழிந்தது .
அவள் எழுவதற்கு முன் தனது காரினை வேகமாக ரிவர்ஸ் எடுத்ததில் அவள் மீது முழுவதும் மழைநீரோடு சேறும் இறைந்தது.
அவள் கீழே விழுந்ததும் அவன் கவனிக்கவில்லை அடிபட்டதும் அவன் கவனிக்கவே இல்லை. அத்தனை வேகமாக அவன் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.
அவள் மெல்ல புடவையின் தலைப்பை தன் முழங்கை இரத்தத்தில் வைத்து அழுத்தி பிடித்து கொண்டு எழுந்தாள்.
எதற்கும் கண் கலங்காதவள் அடிவயிற்றில் இருந்து “ஹோ” வென வெடித்து அழுதாள்.
தன்மானத்தையும் ,சுய மரியாதையையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் இன்று அனைத்தும் தன் காதலுக்காக அவனின் காலடியில் மிதிபட வைத்து கோழையாக நின்றிருந்தாள்.
அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை போல் விழித்திருந்தால்.
” ஏன் இப்படி ஆனேன்”என மனதினுள் போராடினாள்
உடலில் உள்ள ஜீவன் வற்றயது போல் உணர்ந்தாள்.
அடித்த பேய் மழையில் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் எனத் தெரியவில்லை.
அவள் நனைந்தபடி வரவும் வந்தனா வாயிலேயே நின்றிருந்தாள்.
“ஏய் ஆரா …எங்கடி போன எவ்வளவு நேரம் உன்னய தேடுறது.உங்க அப்பா ஃபோன் பண்ணினார் டி…” எனத் தயங்கி நிறுத்தினாள்.
ஆராதனா சலிப்புடன் ,” அதான் நாளைக்கு கிளம்பறேன் டி” என அவளுடைய தந்தை வீட்டிற்கு வரச் சொன்னதே நினைத்து கூறினாள்.
ஆனால் வந்தனாவோ ,
"இல்லஆரா இன்னிக்கே நீ கிளம்பனும்..ஏன்னா ….உன் மாமா கடைக்குப்போய்ட்டு வரும்போது லாரி மோதி ஸ்பாட் அவுட் டி…..”என்றாள்.
” என்னடி... என்னடி... சொல்ற மாமாக்கு என்ன ஆச்சு ,காலையில் கூட..
அய்யோ!... கடவுளே!..... நான்ஒரு பைத்தியம் நான் ஒரு பைத்தியம்” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
ஆராதனாவிற்கு குற்ற உணர்வு மேலோங்கியது.
முக்கியமான நேரத்தில் கூட தான் எப்படி இருந்திருக்கிறோம் என.
"ஆரா..! ஏய் ஆரா.. ! என்னடி… என்ன …ஆச்சு?... ஏன்டி ஒரு மாதிரி இருக்க …கையில என்னடி இரத்தம், சொல்லேன் டி” என்றாள்.
“ இல்லடி நான் கிளம்புறேன் , அப்புறமா... சொல்றேன் டி” என கொட்டும் மழையில் கிளம்பினாள் தன் ஊருக்கு.
இனி திரும்ப வரவே மாட்டாள் என இருவருக்கும் தெரியவில்லை பாவம்.
ஊருக்குச் சென்றவள் தன் மாமாவின் இறுதி காரியத்தை முடித்து விட்டு அமர்ந்தாள்.
” அம்மாடி வந்து ரொம்ப நாளாச்சு காலேஜ் போலயா? …” எனக் கேட்டார் தந்தை.
அவளோ அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்வையில் தலை குனிந்தார் அவளது தந்தை.
பின் ஆராவே,” நான் இனிமேல் அங்க போகல டெல்லியில இருக்குற காலேஜ் ல ரிஜாய்ன் பண்ணப்போறேன்.டாக்டர் விக்டர் கிட்ட பேசிட்டேன். அவரும் இன்னும் மூணு மாசம் கழிச்சு திரும்ப செகண்ட் இயர் ஜாய்ன் பண்ணிக்கோ ன்னு சொல்லிட்டார்.இனி நீங்க எனக்காக பண்ற ஒரே விஷயம் நான் டெல்லிக்கு போய் சேந்தத யாருகிட்ட யும் சொல்லாதீங்க. இப்ப லீவு விட்டுருப்பாங்க காலேஜ் ல, நம்ம போய் பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு ஹாஸ்டல் வெகேட் பண்ணிட்டு வந்துடுலாம். டீன் கிட்டயும் நான் டெல்லிக்கு போறத யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிடுங்க பா” என்றாள்.
ஏனோ அவளுக்கு அத்தனை துக்கமாக இருந்தது.
யாரையும் பார்க்க பிடிக்கவில்லை.
வந்தனாவின் முகத்தில் விழிப்பதற்கும் சங்டமாக இருந்தது எனவே அவளிடம் கூட தகவல்களை சொல்ல வேண்டாம் முடிவெடுத்து கிளம்பி விட்டாள்.
டெல்லியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு ஆண்டு முடித்து மேற் கொண்டு இதயநோய் சம்பந்தமாக சிறப்பு படிப்பினை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருந்த நேரத்தில்,தங்ககளுடையதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது ஆராதனாவின் பெற்றார், தமக்கை மற்றும் குழந்தை சூர்யா சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்தனர். குழந்தை சூர்யா மட்டும் கொஞ்சம் காயங்களுடன் தப்பினான்.
இறக்கும் முன் ஆராவின் தந்தை அவளது அலைபேசி எண்ணை மருத்துவருக்கு கொடுத்து தகவல் அளிக்கக் கூறிவிட்டு உயிரிழந்தார்.
அதனை கேள்வியுற்று துடிதுடித்து போய் வந்து சேர்ந்த ஆராதனா மூவரின் உடலைக் கண்டு கதறினாள்.
டாக்டர் விக்டரும், டாக்டர் நேத்ரனும் தான் அவளின் கூட இருந்து அவளுக்கு தேவையானதை செய்து விட்டு குழந்தை மற்றும் ஆராதனாவுடன் டெல்லி சென்றனர் .
அத்தியாயம் 12:
வந்தனாவோ ஆராதனாவிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள்.
ஆராவின் தாயின் அலைபேசி எண்ணும் தெரியவில்லை, தந்தையின் அலைபேசியும் வேலை செய்யவில்லை.
ஆராவின் பெற்றோர் மற்றும் தமக்கை உயிருடன் இருந்த போது ஒரிரு முறை அவளின் அன்னையிடம் நேரில் சென்று “ஆரா ஏன் இப்படி செஞ்சா?...,எங்க இருக்கான்னு சொல்லுங்க..? “எனக் கேட்டாள்.
ஆராவின் பெற்றோரோ அவளது முடிவினைக் கூறி “அவளை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்…” என தெரிவித்திருக்கிறாள் என்றும், “ஏன்?... தீடீரென இப்படி முடிவெடுத்தாள் என தெரியவில்லை...”எனக் கூறி மிகவும் வருந்தினார்கள்.
வந்தனாவோ மிகவும் உடைந்து போய் விட்டாள். அவளது முடிவிற்கு சரியான காரணம் தெரியாவிட்டாலும், தேவ்வினால் ஏதாவது காயப்பட்டிருப்பாளோ என யூகித்தாள் .
வந்தனாவோ மேற்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றினாள்.
இவ்வாறு ஒரு வருடம் கடந்தது.ரிஷியோ இப்போது அவளை விட்டு பிடிக்க எண்ணவில்லை.
அதிரடியாக வந்தனாவின் தாய் மூலம் அழகான காய் நகர்த்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தான்.
அரைமனதாகத்தான் திருமணத்திற்கு சம்மதித்தாள்.அவளால் ஆராவின் செயலை ஏற்க முடியவில்லை . முதலில் முடியாது என்று தான் மறுத்தாள், ரிஷிக்கும் தனக்கும் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம்,இதனால் ரிஷிக்கும் அவனது பெற்றோருக்கும் மனக்கசப்பு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஒருநாள் ரிஷியோ, ”இங்க பாரு வந்தனா.. எப்படியும் நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்கத் தான் போற…..அது ஏன் நானா இருக்கக்கூடாது.அப்பா அம்மா கிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசி சம்மதம் வாங்கிடுவேன்.உன்னோட சம்மதம் மட்டும் எனக்கு போதும் டி…என்னய ரொம்பவே காய வைக்கிற வந்தனா… இதுக்கு மேல கெஞ்ச முடியாது டி…என்ன உன் காலுல விழனுமா?..”எனக்கூறி அவளின் பாதங்களை பிடிக்கவே குனிந்து விட்டவனை கைப்பிடித்து தடுத்து, ”ஏன் இப்படி பண்றீங்க? என்ன விட அழகான... வசதியான.. பொண்ணுங்க இருக்காங்க” என்றாள் .
அவன் அவளை முறைத்து விட்டு கோபத்துடன் சென்றுவிட்டான்.
ஒரு வாரத்திற்கு அவன் கண்ணிலேயே படவில்லை.
அப்போது தான் வந்தனா மிகவும் தவித்துப் போனாள்.
அவளுக்குமே அவனை பிடித்தது தான்.ஆனால் அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அவள் விரும்பவில்லை.
ஏமாற்றம் அடைந்தால் அதனை தாங்கக்
கூடிய மனபலம் அவளிடம் இல்லை என்பதே உண்மை.
ஆனால் ரிஷியோ வெகு சீக்கிரத்தில் தன் பெற்றோரிடம் அனுமதி பெற்று அவளது தாயாரை வைத்து வந்தனாவை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.
ஆனால் திருமணத்திற்கு பின் அவனது அன்பை மட்டுமல்ல அவனது பெற்றோரின் அன்பையும் பெற்றாள்.
நன்றாக கலகலப்பாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின்னும் அதே இயல்புடன் இருக்கின்றார்களா? என்றால் ,”ஆம்..”
என்பது சந்தேகமே.
ஆனால் வந்தனாவை பொறுத்தவரை அவளது கூட்டிலிருந்து வெளிவரத் செய்து அவளை கலகலப்பாக மாற்றியது ரிஷியும் அவனது பெற்றோரும்தான்.
அந்தவகையில் வந்தனா மிகவும் அதிர்ஷ்டசாலியே!... இப்படி ஒரு குடும்பம் அமைவதற்கு....இப்படி ஒரு காதல் நாயகன் கிடைப்பதற்கு.....
அதன் பின்னர் வந்தனா, சில வருடங்களுக்கு ஆராதனாவினுடய தொடர்பிலேயே இல்லை .அவளது அலைபேசியும் பழுதாகி விட்டால் ஆராவின் பெற்றோருடைய எண்கள் கூட அழிந்து போனது.
எனவே அவர்கள் சிறிது காலம் டெல்லியில் இருந்தது , பின்னர் இங்கு வந்து அவர்கள் இறந்ததோ வந்நனாவிற்கு தெரியவில்லை.
அதே சமயம் அளவிற்கு அதிகமாக கோபமும் வந்தனாவிற்கு ஆராதனா மேல் இருந்தது.
எனவே தன் கல்யாணத்திற்கு கூட ஆராதனாவை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை.
திருமணத்திற்கு பின் அவளை ராணியாக உணரவைத்தான் ரிஷி.
அவளை தன் கூட்டிலிருந்து வெளியே வரவைத்தான் . அவளது இயல்பினை அழகாக மாற்றியமைத்தான்.
ரிஷியின் தாய் தந்தையோடு இருக்கும் தருணங்களை நேசிக்க ஆரம்பித்தாள் வந்தனா.
அழகிய திருமண பந்தத்தில் அடுத்த அடியினை எடுத்து வைத்தார்கள் இருவரும்…
ஆம்!....அழகியலாக மலர்ந்த காதலுக்கு சாட்சியாக அழகிய பெண் குழந்தையை ஈன்றறெடுத்தாள் வந்தனா.
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் ஆராதனா மற்றும் சூர்யாவின் வருகை....
ஆராதனாவும் தேவ்வும் தத்தம் நினைவலைகளிலிருந்து வெளிவந்தனர்.
தேவ் அடுத்த சில நாட்களில் சிகிச்சையை தொடங்குவதற்குண்டான ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.
இடையில் அவரது தாய்
” என்னப்பா… லயவர்ஷினிக்கு என்ன பதில் சொல்றது?....” என்று அனத்தினார்.
“ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க மா” என சலிப்புடன் கூறினான்.
அவருக்கோ எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி விட வேண்டும் என ஆதங்கம்.
ஆராதனா சூர்யாவுடன் தேவ்வினுடைய மருத்துவமனைக்குச் சென்றாள்.
அவனின் பிரத்தியேக அறையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
உள்ளே வந்த தேவ் ,” ஹாய் சூர்யா ஹவ் ஆர் யூ?...” என்றான்.
“ ஐயம் ஃபைன் டாக்டர் “ என்றான்.
” ம்ம்…குட்” என அவனது தலை முடியை லேசாக கலைத்து விட்டு சிரித்தான்.
“ அகெய்ன் சில டெஸ்ட் எடுத்து பாத்துட்டு லாம்” எனக்கூறி அவளையும் சூர்யாவையும் கீழ் தளத்திலுள்ள ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பார்பதற்கு அழைத்துச் சென்றான்.
” நாங்களே போய்கிறோம் சார்…” என ஆராதனா கூறியதற்கு , “ ஏன்?... நா வர்றதுல உனக்கு என்ன பிரச்சினை? “ எனக்கூறி வாயை அடைத்தான்.
அதன் பின்னர் ஆராதனா எதுவும் பேசவில்லை.
அந்த நேரம் ஆராவின் அலைபேசி சிணுங்கியது.
எடுத்துப் பார்த்ததில் டாக்டர் நேத்ரனின் எண் ஒளிர்ந்தது .
எடுத்து உடனே,” வெரி சாரி நேத்ரன் உங்ககிட்ட பேச முடியல , கொஞ்சம் பிசியா இருந்தேன்” என்றாள்.
“ இட்ஸ் ஓகே ஆரா…டேக் கேர்…சூர்யா எப்படி இருக்கான்?நார்மலா இருக்கானா? ஹார்ட் பம்பிங் செக் பண்ணுனியா?சர்ஜரி கன்பர்ம் பண்ணியாச்சா?....” என அடுக்கடுக்காக கேட்டான்.
ஆராதனாவோ,” இல்ல இனி தான் எல்லாம் டிசைட் பண்ணனும், இப்ப டெஸ்டெல்லாம் திரும்ப எடுக்கறாங்க.சோ இரண்டு மூணு நாள்ல கன்பார்ம் பண்ணிருவாங்க பா” என பதிலளித்தாள்.
“ ஓகே ஆரா , பாத்துக்கோ.யூ டூ டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த் டூ.நான் இன்னும் டென் டேஸ்ல அங்க வருவேன். கொஞ்சம் வேலயிருக்கு அது முடிச்சிட்டு டெல்லி ரிட்டர்ன் ஆயிடுவேன்” எனக் கூறினான்.
அவளும் “ சரி வரும்போது இன்பார்ம் பண்ணுங்க.இங்கயே ஸ்டே பண்ணிக்கலாம், பை..” எனக்கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு திரும்பினாள் தேவ்வோ அவளையேப் பார்த்து கொண்டு இருந்தான்.
அவளோ அதனை கண்டுகொள்ளாமல், "ரிசல்ட்ஸ் இன்னிக்கே பாத்துடலாமா?….வேற ஏதும் டெஸ்ட் இருக்கா?... ஹார்ட் பம்பிங்யெல்லாம் செக் பண்ணனும்ல..” எனக் கூறினாள் .
அவனது மண்டையில் "யாரது நேத்ரன்..?” என்றக் கேள்வியே ஓடிக் கொண்டிருந்தது.
அதனைப் பற்றி காட்டிக்கொள்ளாமல் , "எஸ் ..இன்னிக்கே எல்லா ரிசல்ட்ஸூம் பாத்துடலாம். ஹார்ட் பம்பிங் நாளைக்கு சாயங்காலம் செக் பண்ணி பாக்கலாம்.வேற ஏதாவது தொந்தரவு அவனுக்கு இருக்கா? மூச்சு திணறல், பேசும்போது மூச்சு வாங்குறது,திடீர்ன்னு அதிகமா வேர்க்கறதுன்னு ஏதாவது இஷ்யுஸ் இருக்கா இல்ல இருந்திருக்கா…?” எனக் கேட்டான்.
ஆராதனாவோ, “இப்ப கொஞ்ச நாளா எந்த ப்ராப்ளமும் இல்ல ஆனா கொஞ்ச நாள் முன்னாடி ஓடி விளையாடும் போது கொஞ்சம் மூச்சு திணறல் இருந்தது, மயங்கியும் விழுந்து ட்டான் .”எனத் தெரிவித்தாள்.
“ம்ம்…சரி டெஸ்ட் ரிப்போர்ட் பாத்துட்டு சொல்றேன் " எனக் கூறி விட்டு அவனறைக்குச் சென்று விட்டான்.
அவளும் சூர்யாவும் பரிசோதனை அறையிலுருந்து மெதுவாக நடந்து அவனது அறைக்குச் சென்றார்கள்.
அனைத்து ரிப்போர்ட்களையும் பார்த்து விட்டு "ஹார்ட்க்கு ஃப்ளட் போற இடத்தில கொஞ்சம் ப்ளாக் இருக்கு ,அப்பறம் வால்வ் மஸில்ஸ் கொஞ்சம் திக்கான இருக்கு….சோ இரண்டையும் சரி பண்ணனும். பண்ணிடலாம்.... கவலப்படாதே ஃபுயூச்சர்ல அவன் நார்மல் லைப் லீட் பண்ணலாம். ஒன் இயர் கம்பீளிட் ரெஸ்ட் எடுக்கனும்… டேப்லட்ஸ் கொஞ்ச வருஷத்துக்கு கண்டின்யூ பண்ணனும். சர்ஜரி டேட் நீ டிசைட் பண்ணி சொல்லு… பத்து நாள்ல கூட பண்ணிடலாம்…வேற ஏதும் கேட்கனுமா?.....” எனத் தெளிவாக சூர்யாவின் உடல்நிலை குறித்து விளக்கினான்.
ஆராதனா ஒரு பெருமூச்சுடன், " ரொம்ப தாங்க்ஸ் சார்...அப்பறம் திரும்பவும் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அப்ராக்ஸிமேட்டா சர்ஜரி காஸ்ட் எவ்வளவு ஆகும்.ஏன்னா நான் அதுக்கு ஏத்த மாதிரி அரேஞ் பண்ணனும், சொல்லுங்க ப்ளீஸ்….” என்றாள்.
அவனோ இந்த முறை சரியான தொகையைக் கூறி ,” நீ சர்ஜரிக்கு அப்பறம் கூட பே பண்ணிக்கலாம் அவசரமில்ல….” என்றான்.
"எல்லாருக்குமே இந்த ஆப்ஷன் இருக்கா? ….” எனக் கூறினாள் .
அவள் கூற வருவது புரிந்தது அவளுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கிறானா? என்ற எண்ணத்தில் கேட்டாள்.
அவளது முகத்திற்கு அருகில் வந்தவன் அவளது கண்களைப் பார்த்தவாறே , "முடியாதவங்களுக்கு சாரிட்டி மூலமா கூட ஏற்பாடு பண்ணுவோம்..” என அழுத்தமாக கூறினான்.
அவளோ அவனை விட அழுத்தமாக “ என்னால கட்ட முடியும் சார்…. ஆப்ரேஷன்க்கு முன்னாடியே பே பண்ணிடுவேன் சார்…. நாளைக்கு எப்ப வரணும் சார்…சர்ஜரி டேட் நாளைக்கு சொல்லிடுறேன்” எனக் கூறினாள்.
” ஈவ்னிங் நாலு மணிக்கு வந்துடு” எனக் கூறி விட்டு ,“நேத்ரன் யாரு?...” என்றான்.
”ஒட்டு கேட்டீங்களா?” என்றாள்.
“அது.. என் வேலயில்ல காதுல விழுந்துச்சு…” என நக்கலாக கூறி விட்டு அவளைப் பார்த்தான்.
“ அதே உங்களுக்கு தேவையில்லாதது தான் சார், நான் கிளம்புறேன் “ எனப் பேச்சை கத்திரித்து சூர்யாவுடன் கிளம்பிச் சென்றாள்.
அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான்.
அவளிடம நிறையவே மாற்றங்கள், அனைத்தும் வாழ்வில் அடிபட்டதால் வந்தது எனப் புரிந்தது. கைகளை கட்டி அவள் சென்ற பாதையை வெறித்து கொண்டிருந்தான்.
அத்தியாயம் 13
ஆராதனா சூர்யாவுடன் வந்தனாவின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வந்தனாவும் ரிஷியும் மருத்துவமனையிலுருந்து இன்னும் வரவில்லை என்பதனால் சகானா விஜயாம்மாவிடம் சமர்த்தாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
சூர்யாவை பார்த்தவுடன் தத்தி தத்தி அழகாக ஓடி வந்தாள்.அவள் ஒடி வருவதைப் பார்த்த சூர்யாவும் ஓடி அவளைப் பிடிக்கப் போனான்.
ஆராதனாவோ, “ ஓடாத…. சூர்யா நில்லு மெதுவா போ…” எனக்கூறி கொண்டே பின்னால் வேகமாக வந்து சூர்யாவை ஓடாமல் தடுத்தாள்.
” ஏன் அம்மூ? என்னைய ஓடவே விடமாட்டேங்குறீங்க,எல்லாரும் எப்படி ஓடி விளையாடுறாங்க நான்.. மட்டும்தான் எப்ப பார்த்தாலும் உக்காந்தே விளையாடுறேன்…” எனச் சிணுங்கினான்.
அவளுக்கோ மனம் பாரமாகிப் போனது.
ஆம்!....ஓடியாடி விளையாட வேண்டிய பருவத்தில் மருந்து மாத்திரைகளோடு போராடிக்கொண்டிருக்கிறானே இந்த பாலகன்.
“கவலப்படாதே சீக்கிரம் நீயும் ஓடியாடி விளையாடலாம் சூர்யா, ஓகே வா?....” எனக் கூறினாள்.
“ டாக்டர் சார் என்னய சீக்கிரம் மருந்து குடுத்து விளையாட வச்சிருவாரா?..... நெக்ஸ்ட் டைம் அவர்கிட்ட சீக்கிரம் என்னய விளையாட வச்சிட்டாருன்னா இன்னும் பிக் சாக்லேட் பார் அவருக்கு கொடுப்பேன்னு சொல்லுவேன்….” எனக் கூறினான்.
ஆராதனாவோ , “ சீக்கிரம் அவர் உன்னய கியூர் பண்ணிடுவார் தங்கம்…நீ வேணா பாரு …. டாக்டர் சார் கூடவே விளையாடப் போற….” எனக் கூறி அவனின் கன்னம் கிள்ளினாள்.
“ அய்... ஜாலி! ஜாலி! நான் ஓகே ஆகிட்டா , ஃபர்ஸ்ட் டாக்டர் சார் கூடத்தான் விளையாடுவேன்……” எனக் கூறி சிரித்தான்.
ஆராதனாவோ, “அத அப்புறம் பாத்துக்கலாம் இப்ப சாப்பிட்டுட்டு டாப்லெட்ஸ் போடலாம் வா” என்று கூறி சகானாவை தூக்கி வைத்தவாறே சூர்யாவை உணவு உண்ணும் மேசைக்கு அழைத்துச் சென்றாள்.
“ அம்மூ! சகானா ரொம்ப கியூட் ல” எனக் கூறினான்.”
"ஆமா .. சூர்யா.. சகானாகுட்டி அழகு தங்கம் தான்” எனக்கூறி சகானாவின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
அழகாக சிரித்தபடி தத்தி தத்தி நடந்தாள் சகானா.
ஆராதனா அவளுக்கும் ஊட்டிவிட்டு வாயைத் துடைத்து விட்டாள்.
சிறிது நேரத்தில் ரிஷியும் வந்தனாவும் வந்து விட்டனர் .
மகளை கொஞ்சி விட்டு தங்களை சுத்தப்படுத்தி கொண்டு வந்தனர்.
ஆராதனாவே இருவருக்கும் தேநீர் கலந்து கொடுத்தாள்.
விஜயாம்மா வீட்டு சாமான்கள் வாங்க சென்று விட்டார்.எனவே சூர்யாவும் சகானாவும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
“ என்ன ஆரா? தேவ் என்ன சொன்னார் ?... ப்ராப்ளம் ஒண்ணும் இல்லையே?....” என வந்தனா கேட்டாள்.
“ ப்ராப்ளம் ஒண்ணும் இல்லடி.நாளைக்கு ஹார்ட் பம்பிங் மட்டும் செக் பண்ணிடலாம்.அப்பறம் சர்ஜரி டேட் நம்மள பிக்ஸ் பண்ணிக்க சொன்னார்.” என்று கூறி விட்டு ரிஷி யைப் பார்த்து,” அப்பா என் பேர்ல் கொஞ்சம் ஃபிகசட் டெபாசிட் போட்டுருக்காங்க எனக்கு அது எடுக்கனும் அதுக்கு மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" எனக் கூறினாள்.
ரிஷி ஏதோ கூற வர , வந்தனாவோ ரிஷியின் தோளைத் தொட்டு அமைதியாக இருக்கும்படி சைகை செய்து விட்டு, “ சரி ஆராதனா அத எடுத்துடலாம்.ஆனா அது போதுமா?...சர்ஜரிக்கு பின்னாடி செலவுகள் இருக்கும் தானே.அதுக்கு என்ன பண்ணுவ?” எனக் கேட்டாள்.
” ஒண்ணும்… பிரச்சினை இல்லை டி,என்னோட நகை கொஞ்சம் இருக்கு அதை வச்சு யூஸ் பண்ணிக்கலாம்.”என கூறிவிட்டு, “ பத்து நாள்ல சர்ஜரி வச்சுக்கலாம் டி, சீக்கிரம் பண்ணுறது நல்லது. “ எனக் கூறினாள்.
ரிஷிக்கும் வந்தானாவிற்கும் சரி என்பதை தவிர வேறு எதுவும் கூறமுடியாத நிலை.
மறுநாள் தேவ் வின் மருத்துவமனைக்குக் சென்று சூர்யாவின் பரிசோதனையை முடித்து விட்டு அறுவை சிகிச்சையின் தேதியை குறித்து விட்டு வந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன.இடையில் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கான தொகையை செலுத்த வந்திருந்தபோது தேவ் எதுவும் கூறாமல் அவளை ஒரு பார்வை மட்டுமே பார்த்தான்.அதைனை கண்டுகொள்ளாமல் பணத்தை செலுத்தி விட்டு சென்று விட்டாள்.
நிராகரிப்பின் வலியை இப்போது தேவ் நன்றாகவே உணர்ந்தான்.
உயிரற்ற பொருளோ உயிருள்ள பொருளோ எதுவாயினும் அருகில் இருக்கும் போது அதனுடைய அருமை நமக்கு தெரிவதில்லை.நம்மை விட்டு அது தொலைவில் சென்றால் தான் அதனை கைக்குள் வைத்துக் கொள்ள மனம் பரபரக்கும். தேவ்வின் மனநிலையும் அதே போல்தான் இருந்தது.
இதனிடையே தேவ் வின் தாயும் தந்தையும் மிகவும் பிடிவாதமாக லய வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவனுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
அவனுக்கோ சரியென்றோ வேண்டாமென்றோ சொல்லமுடியாத நிலை.அவன் மனது அவனுக்கே புரியாத நிலையில் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தத்தளித்தான்.முதலில் சூர்யாவின் அறுவை சிகிச்சையை முடித்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என்று நினைத்திருந்தான் .
அறுவை சிகிச்சைக்கான நாளும் வந்தது.சூர்யா முதல் நாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.அவனது உடல்நிலை சீராக உள்ளதா என மணிக்கொருதரம் பரிசோதனை செய்யப்பட்டது.
தேவ்வினுடைய நேரடி கண்காணிப்பில் இருந்தான் சூர்யா.அவனே தனிப்பட்ட முறையில் சூர்யாவை நன்றாக பார்த்துக் கொண்டான்.சிறிது நேரம் சூர்யாவுடன் பேசி அவனது விருப்பங்களை தெரிந்து கொண்டான்.
காலையிலிருந்து ஆராதனாவுடன் வந்தனா துணையாக இருந்தாள் . பின்னர் வந்தனாவை இரவில் சகானா தேடுவாளென வீட்டிற்கு அனுப்பி விட்டாள் ஆராதனா . சிறிது நேரம் கூட கண்ணுறங்காமல் விழித்தே இருந்தாள் ஆராதனா.மனம் முழுவதும் ஏதோ பாரம் அழுத்தியது.
மறுநாள் விடியல் யாருக்கும் காத்திராமல் அழகாக விடிந்தது . விடிந்து சற்று நேரம் கழித்து தேவ்வினுடைய அறைக்குச் சென்றாள் ஆராதனா.அவனோ வீட்டிற்கு செல்லாமல் அவனுடைய அறைக்குள்ளே அமைந்திருக்கும் குளியலறையில் குளித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்வதற்கான நீல நிற உடையில் இருந்தான்.
” மே ஐ கம் இன் சார்” என அனுமதி கேட்டாள்.
“உள்ள… வா ஆரா ” எனக்கூறி விட்டு அவளை அமரச் சொன்னான்.
அவளோ , “ எனக்குன்னு இருக்குற உறவு இவன் மட்டும் தான்.எப்படியாவது அவன் சீக்கிரம் குணமாகி வரணும்.என் மேல் என்ன கோவம் இருந்தாலும் அத இங்க காட்டிடாதீங்க.ப்ளீஸ்.உங்ககளுக்கு நான் ரொம்பவே நன்றிக் கடன் பட்டுருக்கேன்.அவன் நல்லபடியா சீக்கிரம் எழுந்து நடமாடனும்.உங்களுக்கு ஏதாவது நன்றிக்கடனா செய்யனும்னு ஆசைப்படுறேன்.ஏன்னா நேத்திலயிருந்து அவன் கூடவே இருந்து அவன நல்லபடியா கவனிச்சுகிட்டீங்க . ரொம்ப தாங்க்ஸ்.” என பயத்தின் காரணமாக முன்னுக்கு பின் முரணாக பேசிக்கொண்டே போனாள்.
முதலில் அவள் கூறியது தேவ்விற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.ஆனால் அவள் பேசப் பேச சூர்யாவின் மீதான அதீத பாசத்தில் முரண்பாடாகப் பேசுகிறாள் எனப் புரிந்தது.
இப்போது அவன் ஏதாவது பேசினால் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் அவளில்லை எனத் தெளிவாக தெரிந்தது.
எனவே தேவ் அவளருகில் வந்து அவளது முகத்திற்கு அருகே அமைதியானக் குரலில்,” ஆராதனா…. டோண்ட் வொர்ரி.அவன் சீக்கிரம் குணமாகி மத்த குழந்தைகளைப்போல விளையாடுவான்.எதிர்காலத்துல அவனால் நார்மல் லைப் லீட் பண்ண முடியும்.ஒரு வருஷத்துக்கு கொஞ்சம் அவன நல்லாப் பாத்துக்கணும்.அப்பறமா அவன ஸ்கூல்ல போட்டுடலாம். ஃபிளீஸ் ஸ்டே காம்”.எனக் கூறி அவளது கைகளைப் ஆறுதலாகப் பற்றி லேசாக அழுத்தினான்.
அவளுக்கும் அது தேவையானதாக இருந்தது.கண்களிலுருந்து கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தோடியது.
அவனே அதை துடைத்து விட்டான்.பின்பு “இதுக்கெல்லாம் கண்டிப்பா உன்னோட நன்றி கடன் நீ காட்டித்தான் ஆகனும்” என அவளை சமாதானம் செய்யும் பொருட்டு பேச்சை மாற்றினான்.
அவளோ கண்களை துடைத்துக் கொண்டே “ நிச்சயமா சார்” என உறுதியாகக் கூறினாள்.
அவனோ,” ஹேய் …ஜஸ்ட் ரிலாக்ஸ்….நா சும்மா சொன்னேன்…நீ போய் ரெடி ஆகு.சூர்யாவை ஆப்ரேஷன் தியேட்டர் கொண்டு போகனும்.” எனக்கூறி அவளைத் தயாராகி வரச்சொன்னான்.
அவள் சூர்யாவின் அறைக்குச் சென்ற போது வந்தனாவும் ரிஷியும் வந்திருந்தனர்.அவளோ வேகமாக தயாராகி வந்தாள்.செவிலியர்கள் வந்து சூர்யாவை தயார் செய்து அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் ஆராதனா.தாய், தந்தை, தமக்கை அவளின் கணவர் என்று தனக்கென இருந்த உறவுகள் அனைத்தும் பறிபோய்விட்டது, மீதமிருக்கும் ஒரே உறவு சூர்யா மட்டுமே அவன் மட்டுமே அவளை மீட்டெடுத்து வைத்திருக்கும் வாழ்வின் ஜீவாதாரம்.அவனைப் பற்றுகோலாய் கொண்டே அவளின் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது .
சற்று நேரத்தில் தேவ் கையுறையையும் முகக்கவசத்தையும் அணிந்து கொண்டே அறுவைசிகிச்சை நடைபெறும் அறைக்குள் நுழைந்தான்.
வந்தனாவோ ஆராதனாவிற்கு அருகில் அமர்ந்திருந்தாள்.ரிஷியோ இருவருக்கும் எதிரே அமர்ந்திருந்தான்.குழந்தை சகானாவை விஜயாம்மாவிடம் விட்டுவிட்டு வந்திருந்தனர்.
இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தான் தேவ்.
கதவுகள் திறந்ததும் பாய்ந்து ஒடி அவனருகே நின்று அவனது முகத்தினை பார்த்தாள் ஆராதனா.
அவனோ முகக்கவசத்தை கழட்டியபடி,” பயப்படாதே... ஆராதனா நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சது. ஐ.சி.யு ல இன்னும் ஒரு நாளைக்கு இருக்கனும்.இப்போதைக்கு இங்கிருந்தே பாத்துக்கோ.நாளைக்கு பக்கத்துல போய் பாக்கலாம் . லிக்விட் புட் தான் போகனும்.நீ முதல்ல போய் ஏதாவது சாப்ட்டு வா..மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.” என்றான்.
அவளோ உணர்ச்சி பெருக்கில் அவனது கைப்பற்றி நன்றி தெரிவித்தாள்.
"இது என்னோட டியூட்டி தான் ஆராதனா.நா பெருசா எதுவும் பண்ணல.சோ நீ இவ்வளவு ஃபீல் பண்ண தேவையேயில்லை…ரிஷி!.. நீ இவங்கள கூப்பிட்டு போய் ஏதாவது சாப்பிட வைச்சு கூட்டிட்டு வா.அவன் கண் முழிக்கும் போது நீ மயங்கி விழுந்துடாதே” என்றவாறு தனதறைக்குச் சென்றான்.
இரு நாட்களுக்கு பின் நன்றாகவே கண் விழித்து பார்த்தான் சூர்யா.
மருந்தின் வீரியத்தினால் துவண்டு போய் இருந்தான் சூர்யா.
அதனைக் கண்டு ஆராதனா வின் மனது வெதும்பியது.இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் அவனை கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.
தேவ்வும் காலை மாலை என இரு வேளையும் அவனை பரிசோதித்து விட்டு சென்றான். மூன்றாம் நாள் காலை டாக்டர் நேத்ரன் தேவ்வின் மருத்துவமனைக்கு வந்து சூர்யாவைப் பார்த்தான்
டாக்டர் நேத்ரன் டெல்லியில் ஆராதனாவோடு பணிபுரியும் மருத்தவர்.வயது இருபத்தி ஒன்பது திருமணம் இன்னும் ஆகவில்லை.மனதில் ஆராதனா வை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு .
ஆனால் தன் விருப்பத்தை இன்னும் அவளிடம் தெரியப்படுத்தவில்லை.அவளுக்கு கஷ்டப்படும் நேரத்தில் உதவி செய்ததால் உரிமை எடுத்துக் கொள்வதாக நினைத்துக் கொள்வாளோ என்ற தயக்கம்.
இந்த முறை அவளிடம் சம்மதம் பெற்றே தீர வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்தான் நேத்ரன்.
யாருக்கு யாரோ?... .காலம் என்ன செய்ய காத்திருக்கிறதோ....... பார்ப்போம்..
அத்தியாயம் 14
சூர்யாவின் அருகிலே இருந்து கவனமாகப் பார்த்து கொண்டாள் ஆராதனா.
வந்தனாவோ தான் இருந்து சூர்யாவை பார்த்து கொள்வதாகவும் இவளை வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்டு வருமாறு கூறினாள்.ஆனால் அதனை ஆராதனா மறுத்து விட்டாள் .
நேத்ரன் ஏற்கனவே ஆராதனாவிற்கு அலைப்பேசியில்அழைத்து தான் வேலையை முடித்துவிட்டு நேராக மருத்துவமனைக்கு வருவதாக கூறியிருந்தான்.
அவன் சூர்யாவின் அறையில் நுழையும் போது,தேவ் சூர்யாவை பரிசோதனை செய்து கொண்டிருந்தான்.
“ வாங்க நேத்ரன்…எப்படியிருக்கீங்க?..” என வரவேற்றாள் ஆராதனா.
நேத்ரனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த தேவ்வோ சட்டென திரும்பிப்பார்த்தான்.
ஆறடிக்கு சற்று குறைவாக,அடர்ந்த சிகையுடன் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் கோதுமை நிறத்தில் இருந்தான் நேத்ரன்.
” ஹலோ சார் ,ஐ யம் நேத்ரன் ஃப்ரம் பி.எல்.கே ஹாஸ்பிட்டஸ், டெல்லி”என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
தேவ்வோ அவனுடன் கைக்குலுக்கி விட்டு “ ஹலோ நேத்ரன்” என்று மட்டும் கூறிவிட்டு ஆராதனாவின் பக்கம் திரும்பி சூர்யாவிற்கு மருந்துகளை கொடுப்பது பற்றி கூறிவிட்டு நகர்ந்தான்.
நேத்ரன் சூர்யாவின் அருகில் வந்து அவனது தலையைக் கோதி விட்டு , "ஹவ் ஆர் யூ லிட்டில் ப்ரின்ஸ்?" எனக் கேட்டான்.
சூர்யா மெதுவாக," ஐ ..யம் ஃபைன் அங்கிள் " எனக் கூறினான்.
பிறகு தேவ்வினைப் பார்த்த நேத்ரன்,” ஹீலிங்க்கு என்ன விதமான டாப்லெட்ஸ் பிரிஸ்க்ரைப் பண்ணிருக்கிங்க டாக்டர் …?” என சாதாரணமாகத்தான் கேட்டான்.
தேவ்விற்கோ சுறுசுறுவென ஏறியது ஏனெனில் ஏற்கனவே ஆராதனா அலைப்பேசியில் பேசிய நேத்ரன் இவன்தான் என யூகித்தான். எனவே சற்றே எள்ளலுடன்,” ஆராதனா கிட்ட சொல்லிருக்கேன்…ப்ளீஸ் கேட்டுக்கோங்க” என தனது அறைக்குச் சென்று விட்டான்.
அவனது பதிலில் ”உனக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை….” என்ற பொருள் மறைமுகமாக இருந்தது.
நேத்ரனின் முகம் நொடியில் மாறி பின்னர் இயல்பாகிவிட்டது.
சிறிது நேரம் ஆராதனாவுடன் பேசிவிட்டு கிளம்பி விட்டான்.
ஆராதனாவோ சூர்யாவை விட்டும் மருத்துவமனையை விட்டும் நகரவேயில்லை.அவளது ஜீவன் சூர்யா மட்டுமே.எனவே கண்ணும் கருத்துமாய் அவனை பெறாத தாயாகப்பார்த்து கொண்டாள்.
ஒரு நாள் வந்தனா அதிரடியாக ஆராதனா வை தனது வீட்டிற்கு அனுப்பி ஓய்வெடுத்து விட்டு வரச் சொல்லி மிகவும் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.
அவளோ அரை மனதாகவே வந்தானவின் வீட்டிற்குச் சென்று சற்று நேரம் ஓய்வெடுத்து திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
மருத்தவமனை வளாகத்தில் சிறிய பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது.
அதனருகே வரும் போது நேத்ரனும் எதிரே வந்தான்.
ஆராதனாவோ ,” ஹாய் நேத்ரன் எப்ப வந்தீங்க?.. ஃபோன் பண்ணிருக்கலாமே சீக்கிரம் வந்திருப்பேனே,கிளம்பிட்டீங்களா? ...“ எனக் கேட்டாள்.
” பரவாயில்ல நீ பர்ஸ்ட் நல்லா ரெஸ்ட் எடுத்தியா?.நான் வந்து ஒன் ஹவர் ஆச்சு.வந்தனாவும் ரிஷியும் தான் நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு அப்படியே மாத்துறதுக்கு வேற டிரஸ் எடுத்துட்டு வரப்போறதா சொன்னாங்க.நோ ப்ராப்ளம் ஆரா…..நான் இன்னிக்கு நைட் கிளம்பனும். வந்த வேலை முடிஞ்சது.அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.தப்பா எடுத்துக்காத ப்ளீஸ்…” என நிறுத்தி அவளது முகத்தைப் பார்த்தான்.
அவளோ அவனைப் புரியாத பார்வை பார்த்து விட்டு,” சொல்லுங்க நேத்ரன் “ என்றாள் .
”நேரடியா விஷயத்துக்கு வர்றேன் .நான்... உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் ஆராதனா.உன்னையும் சூர்யாவையும் நல்லாப் பாத்துப்பேன். நீ என் கூடயிருந்தா என் லைஃப்
நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன்.சோ... வில் யூ அக்சப்ட் மை பிரபோசல்?..” என ஒரு வழியாகக் கூறி முடித்தான்.
அவளோ அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து, “ ஐ யம் சாரி நேத்ரன் ...எனக்கு இப்ப கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லை.நீங்க ஒரு நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என முடித்து விட்டாள்.
நேத்ரனோ,” அப்படி சொல்லாத ஆரா …உனக்குன்னு ஒரு லைஃப் இருந்தா சப்போர்டிவ்வா இருக்கும் எவ்வளவு கஷ்டங்கள் உன் லைஃப் ல...,உன்ன நான் நல்லா பாத்துக்கணும் ன்னு ஆசைப்படுறேன்”என விடாமல் அவளை வற்புறுத்தினான்.
” உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி… நேத்ரன்.ஆனா இப்போதைக்கு என்னால எதைப்பத்தியும் யோசிக்க முடியாது ....சோ...என்னைய வள்புறுத்தாதீங்க.” என அந்த பேச்சை மேலும் தொடர விரும்பாமல், “ உங்க அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்க,சரி நா கிளம்புறேன்.வந்தனாவும் ரிஷியும் வீட்டுக்கு கிளம்பனும் பா....பை நேத்ரன்.சீக்கிரம் டெல்லிக்கு வரப் பாக்குறேன்.நீங்க டீன் கிட்ட மட்டும் கொஞ்சம் சொல்லிடுங்க” எனக் கூறினாள்.
அவனுக்கு புரிந்தது திருமணப்பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை என உடனே ,” சரி ஆராதனா டேக் கேர்.நா டீன் கிட்ட பேசிடுறேன்.சூர்யாவ பாத்துக்கோ,என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளு.வீ ஆர் ஹியர் ஃபார் யூ,பை…” எனக்கூறி விட்டு சென்றுவிட்டான்.
அவளோ அவன் சென்றதை சிறிது நேரம் பார்த்து விட்டு சூர்யாவின் அறையை நோக்கிச் சென்றாள்.
இவை அனைத்தும் கோவிலின் பின்புறம் உள்ள சிறிய பூங்காவில் வட்ட வடிவமைப்பு கொண்ட கல்மேசையில் அமர்ந்திருந்த தேவ் மற்றும் ரிஷி கேட்டுவிட்டனர்.
பூங்காவின் ஒரு பக்கம் அடைப்பாக இருந்ததால் ஆராதனா மற்றும் நேத்ரனால் ரிஷி மற்றும் தேவ்வை பார்க்க முடியாது போனது ,ஆனால் ரிஷி மற்றும் தேவ்விற்கு அவர்களைப் பார்க்க முடியாவிட்டாலும் அவர்களின் உரையாடல் தெளிவாக காதில் விழுந்தது.
தேவ்விற்கு ஆராதனா நேத்ரனை திருமணம் செய்ய முடியாது எனக் கூறியது மயிலிறகு வருடியது போல் இதமாக இருந்தாலும் எங்கே நேத்ரன் திரும்பவும் வந்து அவளை திருமணத்திற்கு மீண்டும் வற்புறுத்திவிடுவானோ என்ற எண்ணம் மோலோங்கியது.
ரிஷியும் தேவ்வும் சற்று நேரத்திற்கு முன்புதான் அருகிலிருந்த கேஃபிடேரியாவில் தேநீர் அருந்திவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
ரிஷி அவனிடம் ஆராதனா கல்லூரியை விட்டு நின்ற பிறகு நடந்த விஷயங்களை அவனிடம் தெரிவித்தான்.
அதைக் கேட்டுவிட்டு அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்த போதுதான்
அவர்களின் பேச்சுக்களை கேட்க நேர்ந்தது.
ரிஷியோ, “ என்னடா இந்த கோதுமை மூஞ்சி இப்படி பேசிட்டு போறான்.நீ என்னடா பண்ணப்போற?”எனக் கேட்டான்.
” தெரியல டா பாப்போம் …” எனக் கூறி கொண்டிருக்கும் போது அவனது அலைப்பேசி அலறியது,எடுத்துப் பார்த்தான் புதிய எண்ணாக இருந்தது.
"யாராக இருக்கும் ?” என யோசித்து கொண்டே எடுத்து,” ஹலோ! “ என்றான்.
“ ஹாய் ! தேவ்.. நான்தான் லயவர்ஷினி பேசுறேன்.எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
” ஹான்…. சொல்லுங்க வர்ஷினி “ எனக் கூறினான்.
“ என்ன ?..ஒண்ணும் தெரியாத மாதிரியே கேக்குறீங்க…இன்னிக்கு உங்க அப்பா அம்மா வந்து நேரடியாக கல்யாணத்துக்கே நாள் குறிச்சிட்டு போய்ட்டாங்க, ஐ யம் சோ... ஹேப்பி. உங்கள நேர்ல பாக்கனும்னு இருக்கு. இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா?” எனத் தொடர்ந்து அவளோ பேசிக்கொண்டே போனாள்.
தேவ்வினுடைய முகமோ மாறியது . பின்னர் ஏதோ அவளிடம் பேசி சமாளித்து விட்டு அலைப்பேசியை அணைத்தான்.
” என்னடா என்ன ஆச்சு?” என ரிஷி அவனின் தோளினைத் தொட்டான்.
தேவ்வோ,” வீட்ல வரன் பாத்து கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்க” என சுருக்கமாக வீட்டில் நடந்ததை கூறினான்.
” ஏன்டா.. இவ்வளவு நடந்திருக்கு ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல நீ….” எனக் கேட்டான் .
” அதான் இப்ப சொல்லிட்டேனே” என்றான் தேவ்.
ரிஷியோ, “ எப்பா.. டேய்…என்னால முடியல டா…ஏன்டா நீ இப்படி இருக்க…?” என ஆதங்கத்தை காட்டினான் ரிஷி.
தேவ் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான் பின்னர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து ,” எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்” எனக் கேட்டான்.
"சொல்லு டா” என்றான் ரிஷி.
அவனிடம் சில விஷயங்களைப் பகிர்ந்தான் தேவ்.
அதனை கேட்ட ரிஷியோ, "இதெல்லாம் சரி வருமா டா? “ என சிறிதே கலக்கத்துடன் கேட்டான்.
“ ட்ரை பண்ணி பாக்கலாம் ரிஷி “ என்று கூறிவிட்டு யோசனையுடன் தனது அறைக்குச் சென்றான்.
பிறகு சூர்யாவின் உடல்நிலையை கேட்டுவிட்டு ஆராதனாவைப் பார்த்தான்.
அவளோ சூர்யாவை கவனிப்பதிலேயே மும்முரமாக இருந்தாள்.
அதன்பிறகு தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.
வீட்டிற்கு வந்தவுடன் அவனது தாயார் அவனுக்கு உணவினை பரிமாறி விட்டு அவன் சாப்பிட்டு விட்டு வரும் வரை காத்திருந்தார்.
அவன் கை கழுவி விட்டு வந்தப் பின்.” தேவ், உன்கிட்ட பேசணும் பா” என்றார்.
அவனோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் , “ அதான் அவசர அவசரமா போய் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டீங்களே…வேற என்ன புதுசா?” என கத்தரித்து பேசினான்.
” அதில்லை... பா” என ஆரம்பித்தவரை கைகளை பூந்துவாலையால் துடைத்த வாறே அவரை கையமர்த்தி ,” ம்ம் …உங்க கிட்ட பேச விரும்பமில்லை….உங்க இஷ்டம் போல செய்யுங்க..” என முடித்து விட்டு வேகமாக மாடிக்குச் சென்றான்.
லதாவோ விக்கித்துப் போய் நின்றார்.
பிரசாத் அவரருகில் வந்து, "என்னடி?... இப்படி பேசிட்டு போறான்.என்ன பண்றது இப்ப?....” எனப் பதட்டமாக கேட்டார்.
லதா சிறிது நிதானித்து கொண்டு,” பாத்துக்கலாம் விடுங்க “ என ஒரே வார்த்தையில் முடித்து கொண்டார்.
பிரசாத்திற்கோ தலையை பிய்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
தலையில் கை வைத்தவாறு அமர்ந்துவிட்டார்.
நாட்கள் அதன்போக்கில் சென்றது .
சூர்யாவின் உடல்நிலை தேறி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
அனைத்திற்க்கும் தேவ் முன்னிருந்தான்.சூர்யா கிளம்பும் முன் தேவ்வின் முன்னால் வந்து ,” நா சீக்கிரம் சரியாகிட்டா நீங்களே வந்து என் கூட வந்து விளையாடுவீங்கன்னு அம்மூ சொன்னாங்க” என்று கூறிவிட்டு தேவ்வை பார்த்தான்.
தேவ்வோ திரும்பி ஆராதனாவை ஆழ்ந்து பார்த்தான்.
அவளோ சிறு திடுக்கிடலோடு அவனைப் பார்த்தாள்.
அவனோ அதை பொருட்படுத்தாமல் அவளிடம் சூர்யாவிற்கு தர வேண்டிய மருந்துகள் மற்றும் பத்திய உணவுகளை கூறி அவற்றை பின்பற்றச் சொன்னான்.
அவளோ அதையெல்லாம் கவனத்துடன் கேட்டுக் கொண்டே,” திரும்பவும் ரொம்ப நன்றி சார்...சூர்யாவ பெர்சனல் கேர் எடுத்து டீரிட்மெண்ட் பண்ணதுக்கு.”எனக் கூறி விடைபெற்றுச் சென்றாள்.
அவள் சென்ற பிறகு அவனின் மனதும் அவளுடனே சென்றது போன்றதொரு உணர்வு.
நெடுநேரம் அவள் சென்ற வழியேப் பார்த்து கொண்டிருந்தவன் தன்னிலை அடைவதற்கு நீண்ட நேரமானது.அப்போது தான் புரிந்தது அவனுக்கு தன்னுடைய இதயத்தை ஊடுருவிக் கொண்டு ஆராதனா சென்றுவிட்டாளென.
நேச விதையானது ஆழமாக ஊன்றி அவனது மனதில் விருட்சமாக வளரத் தொடங்கியது .
அத்தியாயம் 15:
ஆராதனாவைப் பார்த்து பத்து நாட்களாகி விட்டது.
அன்று ஞாயிற்று கிழமை.மெதுவாக தன் விழிகளைத் மெல்லத்திறந்து நேரத்தைப் பார்த்தான் தேவ் .
கடிகாரம் எட்டு பதினைந்தை காட்டியது சோம்பலாக எழுந்து அமர்ந்தான்.
லயவர்ஷினியை இன்று காலை ஒன்பதரை மணிக்கு காஃபி ஷாப்பில் சந்திப்பதாக கூறியிருந்தான்.
அதே சிந்தனையுடன் கண்ணாடி முன் நின்று தனது முகத்தை பார்த்தான்.நான்கு நாட்களாக மழிக்கப்படாததால் கன்னத்தில் லேசான முடிகள் எட்டிப் பார்த்தது.அவற்றை தடவியவாறு யோசனையுடன் நின்றிருந்தான்.
தான் செய்யப்போவது நிச்சயமாக அனைவருக்கும் வருத்தம் தரும் தான்.ஆனால் என்ன செய்வது இதனைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை.எது நடந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தயாராகி கிளம்பி கீழே வந்தான்.
அவனது தாய் உணவு பரிமாற நின்றிருந்தார்.
அவனோ தாயிடம் பேசாமல் உணவினை உண்டுவிட்டு கிளம்பிவிட்டான்.
அவருக்கோ வருத்தமாகத்தான் இருந்தது . இருந்தாலும் மகன் தன்னை மீறி எதுவும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் தானும் உணவு உண்டுவிட்டு எழுந்தார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
தேவ் சரியான நேரத்திற்கு காஃபி ஷாப்பிற்கு சென்றுவிட்டான்.
அங்கு அவன் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட மேசையில் அமரந்திருந்தான்.
சற்று நேரத்தில் .அடர்நீல நிற சல்வாரில் முடியை தோளின் இரு புறமும் படர விட்டு தேவதையென முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவனிற்கு எதிர்புற நாற்காலியில் வந்தமர்ந்தாள்.
”ஹாய்!….தேவ் குட் மார்னிங், வந்து ரொம்ப நேரமாச்சா?” எனக் கேட்டபடி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ இல்ல... ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் ஆச்சு".
எனக் கூறினான் தேவ்.
“ கேக்குற கேள்விக்கு மட்டும் ஒன்வேர்ட் அன்ஸர் மாதிரி பதில் சொல்றீங்க,” என கேலியாகக் கூறினாள்.
அதற்கும் அவன், ” அதிகம் பேசி பழக்கமில்லை “. என ஒரு வரியில் முடித்தான்.
அவளோ , "பார்றா….அதுக்கும் ஒரு வரி தானா?...” எனக் கேட்டுவிட்டு தோளைத் குலுக்கினாள்.
"நான்அப்படித்தாங்க….சரிமுதல்ல ஏதாவது ஆர்டர் பண்ணிடலாம் ,எனக்கு கோல்ட் காஃபி, உங்களுக்கு?” எனக் கேட்டான் தேவ்.
அவளோ,” எனக்கு ஹாட் சாக்லேட் “என்றாள்.
தேவ் ஆர்டர் செய்துவிட்டு அவளைப் பார்த்தான்.
“ சரி சொல்லுங்க….உங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டு போயிட்டாங்க…எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு, ஆனா...? உங்க வாய்ல இருந்து இன்னும் நீங்க என்னை பிடிச்சிருக்குன்னோ இல்லை என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதம்முன்னோ சொல்லல.ஓப்பனா எதா இருந்ததாலும் பேசிடுங்க…” என்றாள்.
அவனோ ஒரு பெருமூச்சுடன்,” நான் சொல்றது நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல.பட் எனக்கு இது விட்டா வேற ஆப்ஷன் இல்ல…” என்று கூறி நிறுத்தினான்.
அவளது முகம் மாறியது , "சொல்லுங்க தேவ்….”என்றாள்.
அவனோ மிகுந்த தயக்கத்துடன் தான் கூற வேண்டியவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி முடித்தான்.
அவளது முகமோ கோபத்தில் சிவந்தது, "என்ன ?...என்னைய பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு...?” என சிறிது சத்தமாக பேச ஆரம்பிக்கும் முன் அவர்கள் ஆர்டர் செய்தது வந்தது.
தேவ்வோ, “ முதல்ல இத சாப்பிடுங்க ப்ளீஸ்…. அப்புறம் நான் சொன்னத யோசிச்சு பாருங்க.நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க” எனக் கூறினான்.
அவளோ அவனை முறைத்தவாறே தனது ஹாட் சாக்லேட்டை எடுத்து பருகினாள்.
அவனும் தனது கோல்ட் காஃபியைப் பருகினான்.இருவரும் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.
லயவர்ஷினியோ,” உங்க முடிவுல மாற்றம் இல்லையா?....” எனத் திரும்பக் கேட்டாள்.
“ இல்ல ..அண்ட் ஐ யம் சாரி" என்றான்.
அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,” நான் வீட்டுக்கு போய் மெஸேஜ் பண்ணுறேன்” என மிடுக்காக கூறிவிட்டு தான் சாப்பிட்டதற்கான பணத்தையும் அவனிடம் வைத்து விட்டு வெளியேறினாள்.
அவனோ ஒரு பெருமூச்சுடன் பணத்தை செலுத்தி விட்டு கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவுடன் தன் தாயினை அழைத்து தனது திருமணச் செலவுகளை தானே பார்த்து கொள்வதாகவும் அதற்கான தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுவதாக கூறினான். மேலும் திருமணத்திற்கு பெண்ணிற்கான நகைகள் மற்றும் புடவையை தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டான்.
அவனது பெற்றோருக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை அவனது நடவடிக்கையில்.
ஆனால் அவன் மீதுள்ள நம்பிக்கையில் அவர்களோ,” சரிப்பா…நீ சொன்னபடியே செஞ்சிடலாம்” எனக் கூறினார்கள் .
இங்கு சூர்யாவின் உடல்நிலை நன்றாகவே தேறிக் கொண்டு வந்தது.
இடையில் ஒரு நாள் தேவ்விடம் சூர்யாவுடன் மறுபரிசோதனைக்குச் சென்று விட்டு வந்தாள் ஆராதனா.
ஒரு நாள் ரிஷி, ஆராதனா மற்றும் வந்தனா அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ரிஷி ,”தேவ் இன்னுமே ரெண்டு ஹாஸ்பிட்டல் கட்டியிருந்திருக்கலாம் ஆனா நடுவுல ஏற்பட்ட பிரச்சினையில இருந்து அவனால மீண்டு வரவே ரொம்ப நாளாச்சு” எனக்கூறி பெருமூச்சு விட்டான்.
“ ஏன்? என்ன ஆச்சு?...” என ஆராதனா கேட்டாள்.
“நீ காலேஜ் விட்டு போறதுக்கு முன்னாடி தான் அவனுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. தேவ்வோட அப்பா பிரசாத்தோட பார்ட்னர் ஒருத்தர் பல கோடி ரூபாய் மோசடி பண்ணிட்டார் .அது மட்டுமில்ல போலி வைரத்தை விக்கறத்துக்கு தேவ்வோட அப்பாவோட பெயரை யூஸ் பண்ணிக்கிட்டார்.அந்த பழியும் தேவ்வோட அப்பா மேல விழுந்ததுனால அவருக்கு சிவியர் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.நிலைமை ரொம்பவே கை மீறி போயிடுச்சு.தேவ்வாலையும் சமாளிக்க முடியாம ரொம்பவே திணறி போயிட்டான்.சேவிங்க்ஸ் எல்லாம் கடன் அடைக்கவே சரியா போச்சு. மதுரையில அவங்களுக்கு இருக்குற பரம்பரை வீட்டையும் விக்குற அளவுக்கு அவ்வளவு கடன். எல்லாத்தையும் சமாளிச்சான்.நடுவுல ஒரு வருஷம் அவங்க அப்பாவோட வியாபாரத்தை அவரோட ஃபிரண்ட் மணிகண்டன் சாரோட சேர்ந்து தூக்கி நிறுத்தவும், பழைய நிலைக்கு இல்லாட்டியும் கடனில் லாம் வாழற அளவுக்கு வியாபாரத்தை சரி பண்ணி வச்சான்.அவ்வளவு ஃபிரஷர் அவனுக்கு.அவங்க அப்பா பிழைச்சு வந்ததே பெரிய விஷயமா இருந்தது.அவரோட உடம்பையும் ரொம்பவே கேர் எடுத்து பாத்துக்கிட்டான்.அவன் தனியா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்கனும்ன்னு ரொம்ப போராடினான்.கடைசில எங்க ஹாஸ்பிட்டல் மட்டுமில்லாம வெளியே சில ஹாஸ்பிட்டல்ஸ்ன்னு வித்தியாசம் பாக்காம உழைக்க ஆரம்பிச்சான் .ஒன்றை வருஷத்தில தேவையானத சேர்த்தது மட்டும் இல்லாமல் அவன் பீடியாட்ரீக் கார்டியாலஜி சர்ஜரில(pediadric cardiology surgery)ரொம்ப பிரபலமாகிட்டான்.இப்ப அவனுக்கு நல்லா பேரும் புகழும் கிடைச்சிருக்குன்னா..அவனோட அவனோட கடுமையான உழைப்பு மட்டும்தான் காரணம்.அதனால இப்ப முன்னுக்கு வந்துட்டான் .நடுவுல இந்த பிரச்சனை மட்டும் இல்லன்னா இன்னும் ரெண்டு ஹாஸ்பிட்டல் நிச்சயமா கட்டிருப்பான். மணிகண்டன் சாரோட பொண்ணதான் தேவ்க்கு பேசி முடிச்சிருக்காங்க.இன்னும் இருபது நாள்ல கல்யாணம்” என கடைசியாக ஒரு குண்டைத் தூக்கி போட்டு விட்டு அவனது வாழ்க்கையில் நடந்தவற்றை முழுவதுமாக பகிர்ந்து கொண்டான் ரிஷி.
வந்தனாவிற்கு ஏற்கனவே மேலோட்டமாக தெரியும் என்றாலும் சில விஷயம் அவளுக்கு புதிதுதான், அதிலும் கடைசியாக அவன் சொன்ன தேவ்வின் கல்யாண செய்தியை கேட்டு திடுக்கிட்டு ஆராதனாவைப் பார்த்தாள்.
ஆராதனா ஏற்கனவே ஒரளவு ஊகித்திருந்தாலும் ரிஷியின் வாயினால் கேட்கும் போது மனதில் சுருக்கென்று வலி தைத்தது.கண்களும் கலங்கத் தயாரானது.
இருப்பினும் அதனை உள்ளிழுத்து கொண்டு ,” ஓ..ஹோ…அப்படியா சந்தோஷம்” எனக் கூறி குனிந்து கொண்டாள்.காதல் கொண்ட மனமோ தவியாய் தவித்துப் போனது.
ரிஷியோ வந்தனாவை நோக்கி ,"அவளை பார்த்து கொள்.." எனும் விதமாக கண்ணால் சைகை செய்து விட்டு வெளியே கிளம்பினான்.
வந்தனாவோ,” ஆரா….” என்று அழைத்தது தான் தாமதம். அவளைக் கட்டிக் கொண்டு கதறி விட்டாள் பெண்ணவள்.
அவளது முதுகு அழுகையில் குலுங்கியது.
அவளது முதுகினை ஆதரவாக தட்டிக் கொடுத்தாள் .
மனதில்,” இந்தப் பெண் இன்னும் என்னென்ன கொடுமைகள் பார்க்க வேண்டுமோ ?......” என நினைத்தாள்.
அவளுக்குத் தெரியவில்லை இதை விட அவளது மனதினை குத்திக் கிழிக்க வைக்கும் சம்பவம் நடக்கப்போவதென...தெரிந்திருந்தாலும் தடுக்க முடிந்திருக்குமோ????என்னவோ?...
தேவ்வினுடைய வீட்டிலோ கல்யாணக்களை வந்திருந்தது.
லதாவும் பிரசாத்தும் மிக மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.
திருமாங்கல்யம் வாங்குவதற்கு மட்டும் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான் .
மற்ற எதிலும் அவர்களை அவன் தேவையின்றி அலைய வைக்கவில்லை.
திருமாங்கல்யம் வாங்கும் அன்று லயவர்ஷினியையும் அழைத்திருந்தனர். ஆனால் அவளோ தனக்கு மாதாந்திர பிரச்சினை எனவே வர இயலாது எனக்கூறி விட்டாள்.
எனவே தேவ், அவனது பெற்றோர் மற்றும் ரிஷி கடைக்குச் சென்று திருமாங்கல்யத்தை வாங்கினார்கள்.
பத்திரக்கை அடித்து வந்தாகிவிட்டது.தெரிந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தாகி விட்டது.
ரிஷியின் தாய் தந்தைக்கு நேரிலேயேப் போய் அழைத்து விட்டு வந்தனர்.
ஓரு வாரம் கழித்து தீடீரென ஒரு நாள்
தேவ் மற்றும்அவனது பெற்றோர் ரிஷியின் வீட்டிற்கு வந்தனர்.
வந்தனாதான் கதவைத் திறந்தாள். முதலில் அவர்களை பார்த்து சற்றே அதிர்ந்து போனாள் பின்னர் சமாளித்து கொண்டு,” வாங்க தேவ் சார்…வாங்கம்மா,வாங்கப்பா…உள்ள வாங்க….”என அவர்களை வரவேற்று அமர வைத்தாள்.
”ஒரு நிமிஷம் டீ போட்டு எடுத்திட்டு வந்துடுறேன்..” என அவர்கள் மறுத்து கூறும் முன்னரே உள்ளே சென்று ரிஷியை அழைத்து விவரத்தை கூறினாள்.
ரிஷி அவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தான் தான்.ஆனால் இப்படி திடீரென்று வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
தன் மகளை ஏந்தியபடி வந்தவன்,”வாங்கப்பா,
வாங்கம்மா. எப்படியிருக்கீங்க?.வாடா தேவ்..” எனக்கூறி யபடி அமர்ந்தான்.
உள்ளே சமையலறைக்குள் இருந்த வந்தனாவிற்கோ கோபமாக வந்தது.” இப்ப எதுக்கு வந்துருக்காங்கன்னு தெரியலயே, ஆரா வேற உள்ளதான் இருக்கா…ம்ம்” என நினைத்தபடி டீ போட்டு அனைவருக்கும் கொடுத்தாள்.
ரிஷியின் மகள் தேவ்வினுடைய மடியில் அமர்ந்திருந்தாள்.
சில நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு ,தேவ்வினுடைய தந்தை பத்திரிகை எடுத்து,” தேவ்வோட கல்யாணத்துக்கு வந்துடுங்க.நீங்க ரெண்டு பேரும்தான் முன்னயிருந்து நடத்தி கொடுக்கனும்” என்று கூறி பத்திரிகை கொடுத்தார்.
வந்தனாவோ ரிஷியை முறைத்தப்படி நின்றாள்.
” இரண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கோங்க…” என்றார் தேவ்வின் தாய் லதா.
அதனை இருவரும் வாங்கிக் கொண்டு நகருமுன்,” வந்தனா…சூர்யாவோட…” என உள்ளிருந்து பேசிக்கொண்டே வந்த ஆராதனா தேவ் மற்றும் அவனது பெற்றோரைப் பார்த்து திகைத்து நினறாள்.
ரிஷியோ உடனே,” இவங்க தேவ்வோட பேரண்ட்ஸ்.பத்திரிக்கை வைக்க வந்திருக்காங்க” என முந்திரி கொட்டைத் தனமாக பேசி மனைவியின் பார்வையில் பஸ்பமானான்.
மனதினுள்.” அய்யோ எப்படி சமாளிக்கப் போற ரிஷி…..?” என நினைத்தவாறே மனைவியைப் பார்த்து,
"ஃப்ளீஸ் …எனக்கு அவங்க வருவாங்கன்னு தெரியாது…” என சைகையில் உரைத்தான்.
அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், "இன்னிக்கு இருக்கு உங்களுக்கு கச்சேரி…..” என மெதுவாக வாயசைத்தாள்.
அவனோ தன் பின்னந்தலையைக் கோதியவாறு வேறு பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தான்.
ஆராதனாவோஉள்ளேப் போன குரலில்,” வாங்க “என்று மட்டும் கூறி விட்டு நின்றாள்.
ரிஷியோ,” இது வந்தனா வோட ஃப்ரெண்ட் ஆராதனா “ என அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
தேவ்வின் தாயோ ,” அந்தப் பொண்ணுக்கும் ஒரு பத்திரிகை கொடு தேவ்.. நீயும் கண்டிப்பா என் பையனோட கல்யாணத்துக்கு வந்திடனும் …சரியா?” என்றார் .
அவளோ கனத்த இதயத்துடன்,” சரிங்க… மா” எனக் கூறி அவனிடமிருந்து பத்திரிகையை கைகள் நடுங்க வாங்கிக் கொண்டாள்.
“ஆராதனா!..” என்று அழுத்தமாக அழைத்தான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.அவனோ அவளருகில் வந்து அவளது கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,” கண்டிப்பா கல்யாணத்துக்கு நீ வரணும்…. நான் உன்கிட்ட கடைசியாக கேக்குற விஷயம் இதுதான்.. ஃப்ளீஸ் “ என மெல்லிய குரலில் அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் கூறினான்.
அவளோ அதிர்ந்து” ஏன் என்னை மேலும் மேலும் இப்படி வதைக்கிறாய்?...” எனும் விதமாக கண்கள் கலங்கியபடி அவனது முகத்தைப் பார்த்தாள்.
அவனோ,” கண்டிப்பா நீ வருவேன்னு எதிர்பாக்குறேன்” எனக் கூறி விட்டு அவளது கலங்கிய முகத்தை பாராமல் விறுவிறுவென வெளியே சென்று விட்டான்.
அவனது பெற்றோர் வந்தனாவிடம் குழந்தையைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் இவர்களை கவனிக்கவில்லை.
ஆனால் வந்தனாவும் ரிஷியும் கவனித்து கொண்டுதான் இருந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து தான் மகன் இல்லாததை கவனித்தனர்.” அவன் வெளியே போயிட்டான் மா” எனக் கூறினான் ரிஷி.
" சரிப்பா..நாங்களும் கிளம்புறோம்.கல்யாணத்துக்கு முதல் நாளே வந்துடுங்க பா.ஆராதனாவையும் அழைச்சிட்டு வந்துடுங்க” எனக் கூறி விடை பெற்றனர்.
வெளியே வந்த பிறகுதான் தேவ்விற்கு சுவாசம் சீரானதுப் போன்ற உணர்வு.
இடுப்பில் இரு கைகளையும் வைத்து ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டான்.
இங்கு ரிஷியின் அறையிலோ,” நில்லுங்க.. ரிஷி ஓடாதீங்க…மாட்டினீங்க.. சட்னி தான்…..” என கணவனை ஒரு வழியாகக் கிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி வந்தனா.
” வேணாம் …டார்லிங்….நா சொல்றத கேளு மா….புருஷன் அடிக்கறதெல்லாம் மகாப் பாவம்…. அதெல்லாம் நீ பண்ணாதே தங்கம்….” என கட்டிலைச் சுற்றி கபடி ஆடிக் கொண்டிருந்தான் ரிஷி…
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: HorrorStryRdr Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page