All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

[Sticky] நெஞ்சோரம் உன் சஞ்சாரம்

 

VSV 23 – நெஞ்சோரம் உன் சஞ்சாரம்
(@vsv23)
Member Author
Joined: 3 months ago
Posts: 6
Topic starter  
சஞ்சாரம் 1
 
 
மும்பையின் கடற்கரையோரம் அமைந்திருந்தது அந்த ஏழு நட்சத்திர ஹோட்டல்,
மேலே தொங்கிக் கொண்டிருந்த சாண்டிலியரிலிருந்து மெல்லிய மஞ்சள் வெளிச்சத்துடன் காதை உறுத்தாத மெல்லிசை கசிய, மனதை மயக்கியது அந்த ஹோட்டலின் கஃபே.
 
அதன் மூலையில் குசன் சோபாவில் முழங்காலின் மீது மறுகாலின் பாதத்தை வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தவன் சிறு மேசை மீதிருந்த மக்கை எடுத்து காஃபியை அருந்தினான். காஃபியிலிருந்து எழுந்த மெல்லிய ஆவியின் வழியே மேசை மீது சொகுசாய் சாய்ந்திருந்த டப்பைப் பார்க்க, அது அதே ஹோட்டலின் ஆடம்பர அறையொன்றின் உள்ளே நடப்பதை படம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. 
 
அந்த அறையில் இருந்தவன் பெயர் நிதீஷ் பாட் மும்பையின் பிரதான மாஃபியக்களில் ஒருவன்.
 
கட்டுக் கட்டாய் இறுகியிருந்த தேகம், வெளியே இருவர் மிஷின் கன்னுடன் காவல், உள்ளே பல்க்காய் பத்து பேர், இடையில் கைத்துப்பாக்கி என்று அக்மார்க் மாஃபியா என்பதன் அடையாளமாய் நின்றான். மும்பையின் டிஐஜி கூட நெருங்க நூறு தரம் யோசிக்கும் ஒரு மனிதன். அவனோ நெஞ்சை ஒரு கையால் அழுத்தியவாறு காச நோய் கண்டவன் போல் இருமிக் கொண்டிருந்தான். அவன் படும் அவஸ்தையை நிதானமாய் பார்த்தவாறே காஃபியை சுவைத்தான் அவன்.
 
அவன் பீனிக்ஸ்...
 
அங்கே அவனைப் பரிசோதிப்பதற்காய் அழைக்கப்பட்ட மருத்துவர் வரவும் அவன் கீழே விழவும் சரியாய் இருந்தது. அவனைப் பரிசோதித்த மருத்துவர் தலையை ஆட்டி  உதட்டை பிதுக்கினார்.
 
“ச்சு ச்சு, ஹார்ட் அட்டாக் ஆர் சச் எ கில்லர்” போலியாய் பரிதாபப்பட்டான்.
 
டப்பில் ஒரு ப்ரோக்ராமை இயக்க நிதிஷின் அறை சுவற்றில் ஒட்டியிருந்த பட்டன் போன்ற காமரா இரண்டாய் உடைந்து குப்பைதொட்டி அருகே கீழே விழுந்தது. சாதரண கண்களுக்கு கோர்ட் பட்டன் போலதான் தோன்றும்.
“இந்த மும்பை சுத்த போர், ட்ராபிக் ட்ராபிக்.. கடற்கரையில சூரிய உதயம் கூட இல்ல. கொஞ்சம் இயற்கை கொஞ்சும் இடமா வேலையை தாரங்களா?” சோம்பலுடன் சொன்னவன் போனை எடுத்து பார்க்க, டார்க் வெப்பில் இருந்து வந்த சில குறுஞ் செய்திகளைக் காட்டியது அது.
 
‘பீனிக்ஸ் டார்கெட் இன் கேரளா, ஆர் யூ இண்டர்ஸ்டட்’ ரகசிய கோட் வோர்டில் கேட்டது.
 
“ஹ்ம்ம் திங் ஒப் டெவில், பட் ஐம் த டெவில் ஹியர். கொல்லம் கண்டவனுக்கு இல்லம் தேவையில்லை. நமக்குதான் யாதும் ஊரே யாவரும் கேளீர் பாலிசி சோ, நோ பிரச்சனை”
 
“வேற ஏதாவது வேண்டுமா சார்?” பேரர் பணிவாய் கேட்டான்.
 
கீழே விழுந்திருந்த நப்கின்னை காட்டி “அதை எடுத்து தா” என்றவன் பேரர் குனிந்து எடுக்கவே சட்டென முழங்கால் நிலத்தில் முட்டாமல் குதிகாலில் அமர்ந்து “என்னைப் பார்” என்றான்.
 
அவனை நோக்கிய அந்த பேரரின் கண்களை ஆழ்ந்து நோக்கி விரல்களால் அவன் முன்னே சொடக்கிட்டான் “நீ என்னை பார்த்ததே இல்ல. நான் யாரென்றே உனக்குத் தெரியாது ரைட்” வசிகரிக்கும்  மெல்லிய குரலில் கூறவே பேரரும் “உங்களை யாரென்றே எனக்குத் தெரியாது. நான் உங்களைப் பார்த்ததே இல்ல” மந்திரித்து விட்டது போல் கூறினான்.
 
“குட்” மெல்லிய ராகத்துடன் கூறி புன்னகைத்தவன் மேசை மீது இரண்டு நோட்டை வைத்து விட்டு டப்புடன் வெளியேறினான்.
 
கஃபேயின் ஹாலை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கவும் அந்த நீதிஷ்ஷின் உடலை ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரவும் சரியாய் இருந்தது. அதைப் பார்த்தவாறே வெளியே சென்றவனுக்கு மாபியா நிதிஷை அமரர் நிதிஷ் ஆக்கிய தருணம் கண் முன் நிழலாடியது.
 
**
 
சரியாக இரண்டு நாட்களுக்கு முன்,
 
இரண்டு மாதத்திற்கும் மேல் நிதிஷை கண்காணித்து இருந்தான், அவனின் அத்தனை பழக்கங்களும் அத்துப்படியாய் இருந்தது. அதிலிருந்து அவனின் ஒரு பழக்கத்தை கண்டிருந்தான். தன் சிகரட்டை யாருடனும் பகிர்வதில்லை. இன்னொருவர் சிகரெட்டையும் பிடிப்பதில்லை.
 
அன்றும் ஹோட்டல் வாசலில் காரை நிறுத்தி விட்டு வல்லேட்டிடம் கார் கீயை எறிந்து விட்டு செல்ல, வல்லெட் வேடத்தில் இருந்த பீனிக்ஸ் அதை பிடித்துக் கொண்டான். காரில் அமரவே கூடவே நிதிஷின் அடியாள் ஒருவனும் அவனுடன் ஏறினான்.
 
அந்த அடியாளின் கண் முன்னேயே லாவகமாய் நிதிஷின் சிகரெட் கேசை மாற்றிவிட்டான். உண்மையில் இந்த வேலையை வந்த இருபது நாட்களிலேயே முடித்துக் கொண்டு சென்றிருப்பான். நிதிஷின் சிகரெட் கேசை போலவே இன்னொரு கேசை வாங்குவதற்கு தாமதமாகிவிட்டது. எந்தளவு வேலையை சரியாய் செய்தான் என்றால், இப்போது நிதிஷ் வைத்திருந்தது அவன் சிகரெட் கேஷே இல்லை. சில நாட்களுக்கு முன்னரே அதை மாற்றிவிட்டான். இப்போது அசலை வைத்து விட்டு போலியை எடுத்துவிட்டான் அவ்வளவுதான்.
 
காரை பார்க் செய்து பவ்யமாய் திறப்பைக் கையில் கொடுக்க அலட்சியமாய் அதை வாங்கி கொண்ட அந்த அடியாள் காரை திறந்து சிகெரட் கேசையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
 
அதில் உள்ள ஏழு சிகரெட்டில் இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ரசின் எனப்படும் ஒருவித விசத்தை ஊசி முலம் செலுத்தியிருந்தான். நிதிஷின் புகை பழக்கத்தின் அடிப்படையில் அதிலுள்ள அத்தனையையும் ஒரே நாளில் முடித்துவிடுவான். இன்னொரு விதமாய் சொன்னால் அவனின் ஆயுள்காலம் ஒரேயொரு நாள்.
 
இறக்கும் போது உடலில் விசத்தின் வடு கூட இருக்காது. அனைத்தும் சுவாசம் மூலமாய் காற்றில் கலந்துவிடும்.
 
அவன் செல்வதையே திருப்பதியான புன்னகையுடன் பார்த்தான் பீனிக்ஸ்.
 
முகத்தில் அணிந்திருந்த முகக்கவசம் அடையாளத்தை மறைக்க அவன் உதடுகள் முணுமுணுத்தது “கிரியோசிட்டி கில்ஸ் பட் இக்நோரன்ஸ் இஸ் பனிஷ்மென்ட்”. போனை எடுத்து தட்டியவாறே வெளியேறினான்.
 
அத்தனை நேரம் கோமாவில் இருந்த சிசிடிவி உயிர் பெற்று தன் வேலையை மீண்டும் தொடங்கியது.
 
வாஷ்ரூமிலிருந்து வயிற்றை பிடித்துக் கொண்டு வெளியே வந்த உண்மையான வல்லெட் குழப்பதுடன் நின்றான். ஒரு மணி நேரத்திற்கு முன் நன்றாய் இருந்த வயிறு திடிரென கலவர பூமியானதன் காரணம் அவனுக்கு புரியவேயில்லை.
பீனிக்ஸ் மனோவசிய கலை மூலம் அவனை மைன்ட் கன்றோல் செய்தது இந்த பிறவியில் அவனுக்குத் தெரியப் போவதேயில்லை.
 
 
அதே நேரம் சென்னை,
 
‘உண்மையை தேடி’ என்ற பெரிய போர்ட்டை தாங்கி நின்றது அந்த நான்கு மாடிக் கட்டிடம். தமிழ்நாட்டின் பிரபலமான இன்வெஸ்டிகேசன் ஜெர்னலிச கட்டுரைகளை மாத இதழாய் வெளிவிடும் பத்திரிக்கை நிறுவனம் அது.
 
அதன் எடிட்டர் அறை...
 
சுற்றிலும் இருளாய் இருக்க ப்ரொஜெக்டர் திரையில் சில செய்தி துண்டுகள், வெவ்வேறு மாநிலங்களின் நகரங்களில் நடந்த சில தற்கொலைகள் தொடர்பானவை அது.
 
“இது அனைத்திலும் ஒரு ஒற்றுமை. அனைவரும் பதினாறு வயதுப் பெண்கள். நல்ல குடும்பத்தை சேர்ந்த நன்றாக படிக்கும் பெண்கள், ஒழுக்கமானவர்கள். ஆனால் சோசியல் மீடியாவில் அவர்கள் ஆடைகளை களைந்த வீடியோ வந்ததால் சூசைட், நண்பர்களிடம் விசாரித்த போது ஒரு சில நாட்களாய் அவர்கள் நடத்தையில் வித்தியாசம் தெரிந்தது”
 
கணனியில் தட்டி விட அடுத்த செய்தி துண்டுகள் சில.
 
“இவர்கள் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த கொலையாளிகள், கிரிமினல்கள். இவர் பின்னணியும் சமூகத்தில் நல்ல குடும்பத்தை சேர்ந்த நன்றாக இருந்தவர்கள். இதற்கு முன் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடவில்லை, ஈடுபட காரணமும் இல்லை.”
 
அடுத்ததாய் சில தொழிலதிபர்களின் படங்கள் வர “இவர்கள் அனைவரும் ஒரு வங்கிக் கணக்கிற்கு மாதம் குறிப்பிட்ட தொகை செலுத்துகின்றார்கள். ஆனால் அது தொடர்பாய் அவர்கள் கம்பனியில் எந்த கணக்கும் கட்டப்படவில்லை. கேட்டாலும் சொல்ல தயாராக இல்லை. அந்த வங்கி மக்சிகோவில் இருக்கு”
 
“இட்ஸ் சிண்டிகேட் கிரைம்” அந்த பத்திரிகையில் இன்வெஸ்டிகேசன் ஜர்னலிஸ்ட் ஆக பணிபுரியும் பௌலோமியின் குரல் அந்த அறையில் எதிரொலித்தது.
லைட்டை தட்டி விட்ட எடிட்டர் ராமநாதன் கேட்டார் “எதை வைத்து இதை சிண்டிகேட் கிரைம் என்று சொல்றீங்க மிஸ் பௌலோமி”.
 
“இந்த பணம் எல்லாம் ஒரே கணக்கிற்கு தான் போயிருக்கு”
 
“சரி அதை வேண்டுமானால் அப்படி வைத்துக் கொள்ளலாம். ஆனா அந்த பெண்களின் தற்கொலைக்கும் திடிரென குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் என்ன தொடர்பு”
 
“உங்களுக்கு அதற்கான பதிலை சீக்கிரமே தாரேன் சார். ஆனா அதற்கு நான் கொச்சின் போகணும்”
 
சிறிது நேரம் யோசித்த எடிட்டர் “சரி உங்களுக்கு மூன்று மாதம் டைம் தாரேன். கூடவே மூன்று ஸ்டாப் அலகேட் பண்ணுறேன். அதற்குள் இது தொடர்பாய் சிறு சாட்சியாவது உங்களால் காட்ட முடிந்தால் சரி இல்லாவிட்டால் இந்த டாபிக்கை இதோட விட்டுறணும்” என்றார் கண்டிப்பாய்.
 
“நிச்சயமாய் சார். கொச்சின்ல ஒரு விசில்ப்லோவேர சந்திக்கதான் போறேன்” என்றாள் நம்பிக்கையுடன்.
 
எதிரிகளுடன் இருந்து கொண்டே, அவர்களின் சட்ட விரோத செயல்கள் பிடிக்காமல், அது பற்றிய தகவல்களை பொருத்தமான நபர்களுக்கு கசிய விடுபவர்களை விசில்ப்ளோவர் என்று அழைப்பார்கள்
 
“கேர்புல் அது ட்ராப்பா கூட இருக்கலாம். யாரையாவது துணைக்கு அனுப்பவா?” அவள் மறுப்பாள் என்று தெரிந்தே கேட்டார்.
 
“இல்ல சார் வேணாம். நானே பார்த்துக் கொள்ளுறன். தேவையென்றால் கேட்கிறன்”
 
“கவனம் வேற மாநிலம்.... அஹ் ஒவ்வெரு நாளும் நைட் பதினோரு மணிக்கு எனக்கு போன் எடுங்க மிஸ் பௌலோமி”
 
“நிச்சயமா சார்”
 
 
 
“ஹலோ நான் எடிட்டர் ராமநாதன், அந்தப் பெண் இன்றிரவு கொச்சின் போறாள்”
 
“சரி நான் பார்த்துக் கொள்கிறேன். யாரையாவது கூட அனுப்பி வைத்தால் ஒரு ஸ்பை கூடவே இருப்பது போலிருக்கும்” கரகரத்தது போல் கேட்டது அந்தக் குரல்.
 
“கேட்டேன் வேண்டாம் என்றுவிட்டாள்”
 
“ம் சரி மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” அழைப்பை துண்டித்த அந்த மனிதர் சாய்ந்து அமர்ந்தார். அறையில் அவருக்கு பின்னிருந்து கசிந்த மெல்லிய வெளிச்சத்தில் முகம் தெரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்து விட்டு முன்னிருந்த மைக்கை தட்டினார்.
 
“ஹலோ தேவராஜ்”
 
“சொல்லுங்க ஹிப்னோஸ்”
 
“அந்த சிவநாதனின் மகள் விசில்ப்லோவேரை சந்திக்க இங்கே வருகிறாள்”
 
“முடித்துவிடவா?”
 
“வேண்டாம், பத்திரிகை ரசாபாசம் ஆகிவிடும், வேறு ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்த விசில்ப்லோவேர் யாரென்று கண்டுபிடி”
 
 
அடுத்த நாள் காலை, விமான நிலையம்
 
‘ஹ்ம்ம் அழகு ஆபத்தை சந்திக்கும் இடம்... கேரளா, கடவுளின் பூமி’ தனக்குள் சொல்லியவாறே விமான நிலையத்தின் லகேஜை எடுக்கும் பகுதிக்கு வந்தான் பீனிக்ஸ். அவன் கண்கள் அந்த இடத்தை கவனமாய் அலச லகேஜ் வருவதற்காய் பெல்ட் அருகே காத்திருந்தான்.
 
“அதை எடுங்கள்” என்றவாறே ஓடி வந்தாள் ஒரு பெண்.
 
திரும்பிப் பார்க்க ஒரு லகேஜ் மட்டும் தனியாய் போய்க் கொண்டிருந்தது. அவன் அதை எடுத்து கீழே வைக்கவும் அருகே வந்தவள் பெயரைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டாள், அவளுடையதுதான்.
 
“தங்யூ” என்று நிமிர்ந்து பார்க்க இடம் காலியாய் இருந்தது. “முகத்தை பார்க்கலேயே, ஒரு நன்றியை கூட வாங்கமா போய்ட்டார்” தோளை குலுக்கியவாறே செல்ல சற்று தூரத்தில் அவள் கண்ணுக்கு மறைவாய் நின்ற பீனிக்ஸ் வெளியே வந்தான்.
 
மெல்லிய நீலத்தில் போலோ நெக் டீசேர்ட், கறுப்பு ஜீன்ஸ், கழுத்தில் தொங்க விட்டிருந்த கறுப்புக் கண்ணாடி, அவன் கில்லர் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
 
ஜீன்ஸ் போகேடினுள் கை விட்டு காலை குறுக்காய் ஊன்றி அருகேயிருந்த தூணின் மீது சாய்ந்து நின்றவன் “என்ன கண்ணுடா சாமி” வாய்க்குள் முனகினான். “உண்மையில் அழகு ஆபத்தை சந்திக்கும் இடம்தான்” தனக்குத்தானே  சொல்லியவாறே ஒரு பக்க உதட்டால் மட்டுமாய் சிரித்து தலையை குலுக்கினான் “வேண்டாம் பீனிக்ஸ், நீ செய்யும் வேலையை விட இது ஆபத்து அதிகம்” தன்னைத்தானே எச்சரித்து வேகமாய் அங்கிருந்து சென்றுவிட்டான்.
 
 
“அவளை கொல்ல ஏற்பாடு செய்துவிட்டாயா?” ஹிப்னோஸின் கையாள் தேவரஜ்தான் அந்த பத்து மாடி கட்டிடத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் அமர்ந்து கேட்டான். நேற்றுதான் ஹிப்னோசிஸ் இந்த இலக்கத்தை கொடுத்து பேச சொல்லியிருந்தார். கொச்சின் நகரை விட்டு நன்றாக தள்ளி இருந்த குட்டித் தனியார் தீவில் அமைந்திருந்தது. சுற்றிலும் ஒரு பத்து சிறு வீடுகள் அவ்வளவுதான் அந்த தீவில் இருக்கும் கட்டிடம். இறால் ஏற்றுமதி இறக்குமதி என்ற பெயரில் அத்தனை குற்றங்களையும் அந்தத் தீவில் செய்து கொண்டிருந்தார்கள்.
 
“ஏற்பாடு செய்திருகின்றேன், இன்றுதான் வருவான் வந்ததும் சொல்கிறேன். ஆனா” மறுபுறம் டார்க்வெப் மூலமாய் அழைப்பில் வந்தவன் பதிலளித்தான்.
 
“என்ன ஆனா ஆவன்னா?”
 
“அவனை சம்மதிக்க வைப்பது கடினம். அவன் செய்தால் செத்தவன் நிழலுக்கு கூட சந்தேகம் வராது”
 
“பணம் பிரச்சனையில்லை அவனையே ஏற்பாடு செய்”
 
“சிலவேளை தன் வேலைக்கு என்று குறித்த நேரம் கேட்பான். உடனடியாய் நடக்காது அதுதான் பிரச்சனை”
 
“சரி மேலிடத்தில் பேசிவிட்டு சொல்கிறேன். எத்தனை நாட்கள் வேண்டும்”
 
“இன்று வருவான், சம்மதித்தால் கேட்டுச் சொல்கிறேன். இது ப்ரோஃபசனல் கில்லர் தொடர்பான வேலை. நீ எனக்கு எடுப்பது போல் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. கொஞ்சம் காலம் எடுக்கும்”
 
போனை வைத்த தேவராஜ் சிறிது நேரம் யோசித்து விட்டு கொச்சின் துறை முகத்தில் இருக்கும் தன் அடியாள் ஒருவனுக்கு உத்தரவிட்டான் “நாயர், இன்று அந்த சிவநாதனின் மகள் கொச்சின் வருகிறாள். வாட்ஸ் அப்பில் படம் அனுப்பியிருகின்றேன். பின் தொடர்ந்து எங்கே தங்கியிருக்கிறாள்? யாரை சந்திக்கின்றாள் என்று பார்.”
 
 
 
அந்த அறையின் ஓர் பக்க சுவர் முழுவதும் சிறுசிறு செய்தி துண்டுகளை ஒட்டி முடித்து இடையில் கைவைத்து அனைத்தையும் திருப்தியாய் நோக்கினாள் பௌலோமி. இன்று காலைதான் விமானம் மூலம் வந்து இறங்கியவள் வந்ததுமே வேலையை தொடங்கிவிட்டாள். சாப்பாட்டிற்கு கூட வெளியே செல்லவில்லை. ஆப் மூலம் எடுத்த மதிய உணவை வாங்க சென்ற போது அருகே இருந்த வீட்டினர் காலி செய்யவே வியப்புடன் நோக்கினாள்.
 
அப்பா காணமல் போய் முதல் தடவை இங்கே வந்த போது அவர்கள்தான் அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.
 
“பேடிக்கண்ட மோளே, கீழே உள்ள ப்ளோர் தான் போறோம் ஏதாவது தேவையென்றால் ஒரு போன் செய்” என்றார் அந்தப் பெண்மணி.
 
“ஏன் அப்படி” குழப்பத்துடன் கேட்டாள்.
 
“இதுல கொஞ்ச வேலை செய்ய போறாங்களாம்.”  
அவர்களிடம் விடைபெற்று உள்ளே சென்றவள் சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலையில் ஆழ்ந்துவிட்டாள். இப்போதுதான் முடிந்தது, நேரத்தைப் பார்க்க மாலை நான்கு என்றது கடிகாரம். வெளியே செல்லத்தான் வேண்டும்.
 
காலையில் வரும் போது சிலர் பின் தொடர்வதைப் கவனித்து அவர்களை திசை திருப்பி விட்டு வந்திருந்தாள். இப்போது வெளியே சென்றால் நிச்சயமாய் அவளை பின் தொடரதான் செய்வார்கள். அதற்கெல்லாம் பயந்தால் இந்த தொழிலை செய்ய முடியாது, அலட்சியமாய் தலையை குலுக்கி விட்டு சென்றாள்.
 
டாக்சியில் ஏறி “தமன்னம் மார்கெட்” என்றாள். இது அவர்களின் இடம் ஒரேடியாய் தவிர்க்க முடியாது. ஆனால் சுத்தலில் விடலாம், அதைதான் செய்ய செய்ய போகிறாள்.
 
வாட்ஸ் ஆப் மூலமாய் விசில்ப்லோவரிற்கு சந்திக்கும் இடத்தை தகவல் அனுப்பினாள். என்கிரிப்டட் மெசேஜ், அவர் பார்த்ததும் தானாகவே அழிந்து விடும்.
அவள் எதிர் பார்த்தது போலவே பாதி வழியிலேயே அவளை பின் தொடர தொடங்கினார்கள். மார்கேட்டினுளும் பின் தொடர்ந்தார்களே தவிர அவளை எதுவும் செய்ய முயலவில்லை. சற்று யோசித்தவள் ஆள்நடமாட்டம் குறைந்த இடத்திற்கு சென்றாள். சற்று எச்சரிக்கையடைந்து அவளை பார்த்தார்களே தவிர நெருங்கவில்லை. நீண்ட புருவம் நெளிய யோசித்தவளுக்கு நொடியில் புரிந்தது. அவர்களுக்கு விசில்ப்லோவரை பற்றி தகவல் கிடைத்திருகின்றது.
 
இப்போது வர வேண்டாம் என்று சொல்லி விடலாம். ஆனால் இவர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. இப்போது விசில்ப்லோவர் யாரென்று அறிவதுதான் இவர்களின் நோக்கம். விசில்ப்லோவரை ஏதாவது செய்துவிட்டால் கிடைக்க கூடிய மொத்த ஆதாரமும் போய் விடும். இல்லை என்று வர சொன்னால் இத்தனை முயற்சிகளையும் செய்யும் ஒரு நல்லவருக்கு ஆபத்தாய் முடியும்.
 
“அர்ர்க்” தலையில் கை வைத்து மெலிதாய் தொண்டைக்குள் கத்தினாள்.
  
போனை எடுத்து வாய்ஸ் நோட் அனுப்பியவள் வேகமாய் நடக்க அவளை விடமால் பின் தொடர்ந்தார்கள். சனசந்தடியுடன் குறுக்கும் நெடுக்குமாய் இருந்த கடைகளின் வழியே வேக நடையுடன் சென்றாள். எதிர் பாராமல் வழியில் வந்தவருடன் மோத இருவர் கையிலிருந்த பொருட்களும் கீழே சிதறின.
 
“சாரி சாரி” அவருடைய பொருட்களை கையில் கொடுத்தவள் எழுந்து வேகமாக சென்றுவிட்டாள். அவள் செல்லவே பின்னால் வந்தவர்கள் அவனை பிடித்துக் கொண்டதை கடைக் கண்ணால் பார்த்தவாறே எதிரே தென்பட்ட கடையினுள் நுழைந்தாள்.
அதன் முதலாளி கேட்டார் “எந்த மோளே பிரேதம் (பேய்) கண்டது போலே தொனனணு”
“இல்ல கொஞ்ச குட்டி பிசாசுகள தான் பார்த்தேன். பேயை இனிதான் பார்க்கனும்” புன்னகைத்தவள் “தாங்க்யூ” மறு பக்க வழியில் வேகமாக வெளியேறினாள்.
‘எது பேயைப் பார்க்கணுமா?’ போகும் அவளையே முழி பிதுங்க பார்த்தார் அந்தக் கடைக்காரர்.
 
 
***
 
அந்த சந்து இருட்டாய் இருக்க முன்னே தெரிந்த வெளிச்சத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பௌலோமி. நேரம் பத்து மணியை கடந்திருக்க, பின்னால் வந்தவர்களை சுத்தலில் விட்டதில் எங்கோ பாதை மாறிவிட்டாள். போகும் இடமெல்லாம் சந்து பொந்தாகவே இருக்க எலி போல் அத்தனை சந்துகளிலும் ஓடி கடைசியாய் இந்த சந்திற்குள் வந்தால், எதிரே பிரதான சாலை தெரிந்தது.
குறைந்தது ஒரு ஓட்டோ டாக்சியாவது கிடைக்கும் அவர்களிடமிருந்து தப்பியதை விட இடம் தெரியாத இடத்தில் நடந்து களைத்து போனாள். பின்னால் காலடி சத்தம் கேட்கவே கூர்ந்து கேட்டாள். குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள். முதலில் நாலு பேர்தான். இப்போது ஆட்கள் சேர்ந்து விட்டது புரிந்தது.
 
அவளுக்கு நன்றாகவே கராட்டி தெரியும். ஆனாலும் ஆபத்து அதிகம். ஒன்று கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நடந்து களைத்திருந்தாள். அடுத்து அவர்கள் அனைவருமே ரவுடிகள் அதிலும் பல்கான ரவுடிகள் என்பது மாலையிலேயே கவனித்திருந்தாள். பத்து ரவுடிகளிடம் நேரடியாக சண்டை போடுவதை மூளை வன்மையாய் மறுதலித்தது. சட்டென வேகமாய் ஓட தொடங்க அவர்களும் பின்னால் துரத்த தொடங்கினார்கள்.
 
எதிர்பட்ட வளைவில் திரும்பியவள் கல்தூணின் மீது மோதி நின்றாள்.
 
“ஹேய் ஈசி லவ்” அவனில் மோதி விழப் போனவளை பிடித்துக் கொண்டான் அவன்.
 
 
This topic was modified 3 weeks ago by VSV 23 – நெஞ்சோரம் உன் சஞ்சாரம்

   
ReplyQuote
VSV 23 – நெஞ்சோரம் உன் சஞ்சாரம்
(@vsv23)
Member Author
Joined: 3 months ago
Posts: 6
Topic starter  

உங்களின் கருத்துகளை மறக்காமல் இந்த திரியில் சொல்லுங்கள். ஆவலாய் காத்திருக்கிறேன்.

https://kavichandranovels.com/community/topicid/73/

 


   
ReplyQuote
VSV 23 – நெஞ்சோரம் உன் சஞ்சாரம்
(@vsv23)
Member Author
Joined: 3 months ago
Posts: 6
Topic starter  
சஞ்சாரம் - 02
 
“ஹலோ ஜென்டில்மேன்ஸ்” மெல்லிய புன்னகையுடன் பார்த்தவன் “ஒஹ் ஒருத்தர் கூட ஜென்டில்மேன் இல்ல” கண் மூடித் திறந்து புருவத்தை ஏற்றி இறக்கியவன் “ஹலோ ரவுடீஸ்” என்றான்.
பௌலோமிக்கு அவன் இலகுத் தன்மையிலும் பேச்சிலும் வந்த சிரிப்பு நிலைமையின் தீவிரம் உரைக்க முறுவலாய் மலர்ந்தது.
 
“ஏய் யார் நீ?” தலைவன் போலிருந்தவன் முன்னே வந்தான்.
 
“ம்ம்..., இரவின் நிசப்தத்தை கலைக்க விரும்பாத ஒருவன்” பண்ட் போக்கேடினுள் கையை விட்டுப் புன்னகைத்தான். அவன் பதிலில் மலர்ந்த கண்களை அவனை நோக்கித் திருப்பினாள் பௌமி.
ஓடியதில் பிரதான வீதிக்கு அருகே வந்திருக்க அதிலிருந்த மின்விளக்கின் வெளிச்சம் அவன் மீது நன்றாகவே விழுந்தது.
 
ஆறரை அடி உயரத்தில், சற்று மெலிந்த தேகத்துடன் நின்றவன் நீண்ட கைகள் முழங்காலை தொட்டு விடும் போலிருந்தது. அடர்ந்த புருவத்தின் கீழ்  தீட்சயன்யமான கண்கள் அந்த இருளைக் கூட துளைத்து விடும் போல் பார்த்துக் கொண்டிருந்தது. நீண்ட கூர் நாசி, படத்தில் வரைந்தது போல் இதழ்கள். சதுர தாடை, ஒற்றைக் காதில் சிறிய கடுக்கன். கைகளை கால்சட்டை பையினுள் விட்டு கால்களை அகட்டி நின்ற விதத்தில் ஒரு அலட்சியம்.
 
‘இவர்களை இவனால் அடிக்க முடியுமா?’ என்ற சந்தேகத்தை தள்ளி வைத்தது சற்று முன் அவனோடு மோதியதில் இன்னும் வலித்துக் கொண்டிருந்த நெஞ்சு.
 
“இவனை போட்டுத் தள்ளிட்டு அந்த குட்டிய இழுத்திட்டு வாங்கடா?” சிறு பெண் தங்களை இத்தனை நேரம் சுற்ற விட்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில் கத்தினான் நாயர்.
 
“ஏய் குட்டி கிட்டி என்றா பல் எகிறிரும்” பாய்ந்து கொண்டு முன்னால் சென்றாள் பௌமி.
 
“ஈசி லவ்” அவள் தோளைப் பிடித்து நிறுத்தினான் அவன். 
 
கத்தியுடன் அவனை நோக்கி வரவே, ஒரு கையால் லாவகமாய் பௌமியை தன் பின் கொண்டு வந்து வாய்க்குள் நகைத்தான். ஒரு அசைவில் அவன் கையை முறுக்கி கத்தியை பறித்து, பின் புற முழங்காலில் உதைக்கவே அந்த ரவுடிகளின் தலைவன் மண்டியிட்டான். அடுத்ததாய் இரண்டு எலும்புகள் உடைந்த சத்தம் கேட்க, அவன் முதுகின் பின்னிருந்து எட்டிப் பார்த்த பௌலோமி கண்களை விரித்தாள்.
 
லேசாய் திரும்பி அவள் கண்களைப் பார்த்தவன் தலையை குலுக்கி விட்டு மீண்டும் நாயரிடம் திரும்பினான்.
 
அடுத்தடுத்து வந்த இருவரும் நொடியில் முதல் வந்தவன் போல் விழவே எதிரில் நிற்பவன் சாமானியன் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு தெளிவாய் புரிந்தது.
 
மூவரும் கார்டூன் போல் எக்குதப்பாய் விழுந்து கிடக்க கையில் இல்லாத தூசியை தட்டி “அடுத்தது யார்?” நிமிர்ந்தவன் கண்கள் வேட்டைக்கு செல்லும் புலியைப் போல் பளபளக்க அந்தக் கண்களை மீறி அருகே செல்ல எவனுக்கும் துணிவு வரவில்லை.
 
போகேடினுள் கை விட்டு “குட் தூக்கி செல்லுங்கள்” என்றான். பயத்துடன் அவன் மீது ஒரு கண்ணை வைத்தவாறே மூவரையும் தூக்கிச் சென்றார்கள்.
 
அவர்கள் செல்வதைப் பார்த்தவன் அவளிடம் திரும்பினான். இத்தனை கலவரத்திலும் அவன் முகம் சாதாரணமாய் இருந்தது.
 
“யூ ஒகே” மிகமிக மென்மையாய் ஒலித்தது அவன் குரல்.
 
தலையை வேகமாக ஆட்டி “எனக்கு ஒன்றுமில்லை, தேங்க்யூ” பதிலளித்தாள். அந்த இரவின் மெல்லிய வெளிச்சத்தில் அவளை சுற்றி ஏதோ மென்மையாய் படர்வதைப் போல் உணர்ந்தாள். அவள் பார்வை அவன் முகத்திலேயே இருந்தது. ‘யாரிவன்’
 
அந்தப் பக்கம் வந்த டாக்சியை கை போட்டு அவன் மறித்ததை பார்த்தவள் கேட்டாள் “நான் பௌலோமி அலைஸ் பௌமி, பௌமி என்றே கூப்பிடலாம் உங்கள் பெயர்”.
 
“பிரஜன்”
 
கார் கதவைத் திறந்து விட தயக்கத்துடனேயே ஏறினாள். வளைவில் திரும்பும் வரை காரையே உதட்டை கடித்தபடி பார்த்தான் பிரஜன். உணர்ச்சியற்ற அவன் முகத்தில் ஒரு மெல்லிய சலனமாய் குழப்பரேகை படர்ந்தது.
 
அவள் வந்த அதே சந்துக்குள் திரும்பி இருளாய் இருந்த ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.
 
ஒருவர் வந்து கதவைத் திறக்க மஞ்சள் நிற மின்குமிழ் உள்ளே மெலிதாய் வெளிச்சத்தை கசிய விட்டுக் கொண்டிருந்தது.
 
“ஃபிக்சர்”
 
“பீனிக்ஸ்”
 
தலையாட்டவே “உள்ளே வா, ஐந்து நிமிடம் தாமதம்” அவர் கண்கள் கூர்மையாய் அவனைத் துளைத்தது. அவர் கண் முன் நிற்பவன் பீனிக்ஸ். இருட்டுலகின் முதல் தர காண்ட்ராக் கில்லர். அவர்தான் அவனுக்கு பயிற்சி அளித்தார். அவனை நேரில் பார்த்த யாருமே உயிருடன் இல்லை. அவன் ஒரு வேலையை எடுத்து அதை முடிக்கமால் விட்டதாய் சரித்திரமேயில்லை. அவன் உண்மையான முகமும் பெயரும் தெரிந்தவர் இந்த ஃபிக்சர் மட்டும்தான்.
 
“உங்கள் வீட்டின் முன்னே சின்ன பார்ட்டி, நீங்க இங்கே இருப்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன், சொல்லிட்டு வரவா?”
 
“ஹா ஹா வெரி பஃன்னி”
 
“ஒரு அசைன்மென்ட் செய்யுறியா?”
 
“உங்களுக்கே என் பாலிசி தெரியும்” உள்ளே சென்று காஃபியை கலந்து இருவருக்கும் எடுத்து வந்தவன் நீட்டினான் “இந்த வயதின் பின்னர் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே”
 
“அத விடு இந்த வேலையெல்லாம் புலி வாலை பிடித்த கதை. லுக் முதலில் நீ இதைப் பார், அதன் பிறகு முடிவெடு. அவர்கள் நீதான் வேண்டுமென்று டிமாண்ட் செய்யுறாங்க”
 
“நோவன் வான்ட்ஸ் த டெவில், யார் அவர்கள்” கோப்பிற்காக கையை நீட்டினான்.
 
“நோ ஐடியா, கவனம் இது வெறும் பகையோ, அரசியலோ, சொத்துக்காகவே போல தெரியல. இது வேற ஏதோ. சிபிஐயும் இதில் இன்வோல்வ்.” சில நேரங்களில் கொலை செய்ய சொல்லி கேட்பவர்களும் தங்கள் அடையாளத்தை மறைப்பது உண்டு.
 
அவர் பீடிகையில் ஒற்றை புருவத்தை உயர்த்தி கோப்பை திறந்து பார்த்தான். உள்ளே பௌமி அவள் அப்பா சிவகுமார் தோளில் சாய்ந்து கொண்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.
 
கண்களோடு சேர்த்து உதடுகளையும் அழுத்தமாய் மூடினான் பீனிக்ஸ்.
 
***
குளித்து வந்து தோள் வரையே நின்ற கூந்தலை துவட்டியவாறே தோல் பையில் இருந்த அந்தக் கோப்பையும் பெண் ட்ரைவையும் வெளியே எடுத்தாள்.
 
சிறு வெற்றிப் புன்னகையுடன் அதை லப்பில் கொளுவியவளுக்கு அந்த நாயரின் கண்ணை சுற்றி விட்டு பாக்கை வாங்கிய தருணம் கண்ணில் வந்தது.
 
 
மார்க்கெட்டினுள் அவர் சொன்ன அடையாளங்களை வைத்து அவர் நின்ற இடத்தை பார்த்து விட்டிருந்தாள். எனவே வேண்டுமென்றே யாரென்றே தெரியாத ஒருவர் மீது மோதி நாயரின் ஆட்களை திசை மாற்றி விட்டு அந்த கடையின் மறு வழியாக வெளியே வரும் போது நொடியில் எதிரில் நின்றவர் கையில் இருந்த பாக்கை வாங்கிக் கொண்டு வெளியே சென்றுவிட்டாள். அத்தோடு நிலைமையை கூறி மீதி விவரங்களை மீண்டும் ஒரு நாள் சந்திபோம் என்று ஏற்கனவே ஒலி வடிவில் செய்தி அனுப்பி இருந்தாள்.
 
சில வங்கி அறிக்கைகள், கூரியர் செய்ததற்கான பற்று சீட்டுகள் என்று சில ஆவணங்களுடன் இருந்த பென் ட்ரைவ்வை ஆராய அதில் சில கம்பனிகள் குறித்த ஒரு நிறுவனத்திற்கு டொனேஷன் கொடுத்ததிற்கான ஆவணங்களுடன் அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதமும் இருந்தது.
‘இதை வாசிப்பவர் யாராய் இருந்தாலும்’ என்று விநோதமான முறையில் தொடங்கிய அந்தக் கடிதத்தை யோசனையுடன் படித்தாள்.
 
இது மிகமிக அபாயமான வேலை. இதற்கு முன் இது தொடர்பாக நான் தகவல் கொடுத்த இருவரும் இறந்துவிட்டனர். ஒருவர் கேரளாவை சேர்ந்த போலீஸ் நாராயண் குட்டி, மற்றவர் தமிழ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் சிவகுமார். இருவரும் இறந்தது விபத்தில்தான். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னை எப்போது வேண்டுமானாலும் கண்டு பிடிக்கலாம்.
 
அதனால் இது தொடர்பான ஆதாரங்களை பத்திரமான இடத்தில் வைத்துள்ளேன். அந்த இடத்தை இந்தக் கடிதத்தில் சொல்ல முடியாது. இந்தக் கடிதம் அவர்கள் கையில் மாட்டி விட்டால் அத்தனையும் போய்விடும். இதில் உங்களை நீங்களே ஈடுபடுத்த முன்னர் ஒரு எச்சரிக்கை. நிச்சயமாய் நூறு வீதம் உங்களின் உயிருக்கு ஆபத்து இருக்கு. மேற் கொண்டு இதை தொடர விரும்பினால், இதில் இருக்கும் மின்னஞ்சல் மூலமாய் டார்க் வெப்பில் தொடர்பு கொள்ளுங்கள். இப்போதைக்கு அது மட்டும்தான் பாதுகாப்பான செய்தி பரிமாற்றமாக இருக்கு. நான் உயிரோடு இருந்தால் அடுத்த சந்திப்பதற்கான இடத்தை சொல்கிறேன்.
 
இவர்கள் செய்வது சமூகத்திற்கு விரோதமானது. கொலை கஞ்சா என்பதையெல்லாம் தாண்டி அபாயகரமானது. வெவ்வேறு மாநிலங்களில் நடந்த தற்கொலைகள் எல்லாம் தற்கொலைகளே இல்லை. திட்டமிடப்பட்ட கொலைகள்
 
வெல்விஷர்.
 
பிஎஸ்: கவனமாய் இருங்கள்.
 
சாய்ந்து அமர்ந்தவள் முகத்தில் ஆயிரம் யோசனை சிதறல்கள். ஆங்கிலத்தில் இருந்த அந்தக் கடிதத்தில் உண்மை இருப்பதாகவேபட்டது. விசில்பொqலோவரை அவர்கள் தேடுவதைததான் அவளே பார்த்தாளே. ஆபத்தை பற்றி அதிகமாய் யோசிக்கவில்லை, இந்நேரம் அவள் யாரென்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் நேற்று விமான நிலையத்தில் இருந்தே பின்தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.
 
அவள் சிந்தனையெல்லம் இப்போது அந்த நாயரின் ஆட்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இவரை சந்தித்து ஆதாரங்களை பெற வேண்டும், எப்படி என்பதிலேயே உலன்றது.
 
டார்க் வெப்பில் நுழைந்து அக்கவுண்ட் உருவாக்கினாள். பெயரைக் கேட்க சற்று யோசித்தவள், சிறு முறுவலுடன் ‘வேடன்’ என்று கொடுத்தாள். அது யூசர் நேம் நோட் அல்லோவ்ட் என்றது.
 
‘வேடன்007’ என்று கொடுத்து விட்டு ஜேம்ஸ் பாண்ட்டை போல் கையை வைத்து அபிநயம் பிடித்தாள்.
கேமரா மூலம் அவளின் செயல்களை பார்த்துக் கொண்டிருந்த கண்ணுக்கு சொந்தக்காரனின் உதடுகளில் முறுவல் பூத்தது.
 
அவர் கொடுத்த மின்னஞலுக்கு தகவலை அனுப்பினாள்.
 
‘நான் சிவகுமாரின் மகள் பௌலோமி, என்னிடம் அப்பா தந்த சில ஆதாரங்கள் இருக்கு. ஆனால் அவை மட்டுமே போதாது. உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் சேர்த்தால்தான் என்னால் எதுவும் செய்ய முடியும்.’
 
அவள் தகவல் அனுப்பியதுமே சாட்டிற்கு வந்தவர் “அவர்களுக்கு என் மீது சந்தேகம் வந்துவிட்டது. அதனால் என் ஊருக்கு வந்து விட்டேன். குறைந்தது ஆதாரங்களை உங்கள் கையில் தரும் வரையாவது உயிருடன் இருக்க வேண்டும். சோ கொஞ்ச நாள் வைட் செய்வோம்.”
 
“சரி ஆனால் ஒவ்வொரு நாளும் பதினோன்றறைக்கு எனக்கு மெசேஜ் பண்ணுங்கள்”
 
“ஒகே, விபி இன்கம்மிங் என்று வரும்.” என்றதோடு அவர் ஆஃப்லைன் போய்விட்டார்.
 
சற்று நேரம் யோசித்தவள் அவள் நண்பன் ஜோனுக்கு அழைத்தாள் “ஹாய் ஜோன்”
 
“ஹேய் வாட்ஸ் அப், எங்கே ஆளையே காணோம்.”
 
“ஒரு இன்வெஸ்டிகேசன்ல இருக்கிறன் உன் ஹெல்ப் வேணும்”
 
“சொல்லு”
 
“இங்கே சிலருடைய போன் நம்பர் இருக்கு அதை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கணும். அடுத்து டார்க் வெப் மூலமாய் தொடர்பு கொண்ட ஒருவர் எங்கே இருக்கிறார் என்று தெரிய வேண்டும்”
 
“போன் நம்பர் வைச்சு இடம் கண்டு பிடிப்பது நோ ப்ரோப்லேம். பட் டார்க் வெப் கஷ்டம் அதுதான் டார்க் வெப் நிறைய பேர் பயன்படுத்துவதன் காரணம்”
 
சற்று நேரம் அவள் அமைதி காக்க “டார்க் வெப்பா இருந்தாலும் இணையத்தின் வழியே தான் பயன்படுத்த முடியும். அதுக்கு பயன்படுத்தும் நம்பர் ஏதாவது இருந்தாலும் கண்டு பிடிக்கலாம்” என்றான் அவன்.
 
“என்னிடம் வாட்ஸ் அப் நம்பர் இருக்கு அதை ட்ரை பண்ணி பார். அவர் இதற்கு முன் விபி டிரஸ்ட் என்ற டிரஸ்ட்டில் கணக்காளார இருக்கிறார் என்று அப்பா ஒருதரம் சொன்னவர். அவர்கள் டேட்டா பேசில் இருந்து எடுக்க முடியுமா?”
 
“எடுக்கலாம் அதில் ஒரு சிக்கல்”
 
“என்ன?”
 
“அவர் எப்படி இருப்பார் என்று எனக்கு தெரியாது”
 
“உன்னை... அவர் பற்றிய தகவல்கள் அனுப்பி இருக்கிறேன். எடுத்திட்டு எனக்கு எஸ்எஸ் போடு” என்றதோடு அழைப்பை துண்டித்தாள்.
 
சோபாவில் சாய்ந்து அமர்ந்தவளுக்கு தன்னை காப்பாற்றியவன் நினைவு வர உதடுகளில் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டது. ‘ஹ்ம்ம் ஹன்ட்சம் மன்’
 
 
அந்த ஹோட்டலின் முன் இறங்கியவள் கையிலிருந்த கார்ட்டை நோக்கினாள். பீச் அருகே இருந்த பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆர்ட் எஃக்சிபிசன், அதன் மூலம் வரும் வருமானத்தை விபி டிரஸ்ட்டுக்கு கொடுப்பதாக அச்சடிக்கப்பட்டிருந்தது. இங்கே அவளுக்கு சில தகவல்கள் கிடைக்கலாம் போலிருக்கவே வந்திருந்தாள்.
 
அந்த பார் டேபிளில் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டியாவாறு சாய்ந்து நின்று சுற்றுப் புறத்தை கூர்மையாய் போல் கவனித்துக் கொண்டிருந்தவன் கண்கள் அவள். உள்ளே வரும் போதே கண்டு கொண்டன. சட்டென திரும்பி சிறு கண்ணாடிக் குடுவையில் இருந்த திரவத்தை அப்படியே வாயில் கவிழ்த்தான். கண்கள் மூடியிருக்க மனமோ கண்ட காட்சியை மீண்டும் ஓடவிட்டது.
 
தோளுக்கு சற்றுக் கீழேயே நின்ற கட்டை கூந்தல், நீள் வடிவ முகம், துருதுருவென நெளிந்த புருவத்தின் கீழ் அங்குமிங்குமாய் ஓடிய விழிகள், நீண்ட நாசியின் கீழ் கீறிவிட்டது போன்ற இதழ்களுக்கு போட்டிருந்த வைன் நிற லிப்டிக் அவனை மயக்கியது. அதே நிறத்தில் உடலோடு ஒட்டிய நீள கவுன், அதில் தொடைக்கு சற்றுக் கீழிருந்து ஆரம்பித்த வெட்டு அவளின் நீண்ட வடிவான கால்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. காலில் குதி வைத்த சாண்டில்.
 
‘அவள் நீ செய்யும் வேலையை விட ஆபத்து இங்கிருந்து போ’ மீண்டும் எச்சரித்தது மூளை. கண்ணைத் திறந்தவனுக்கு முன்னே இருந்த கண்ணாடியில் கோட்டைக் கழற்றி வைப்பது கண்ணில் பட ‘வி’ வடிவில் கழுத்து அகன்று தோளை விட்டு இறங்கியிருக்க கழுத்தும் அதன் கீழும் பளிச்சென தெரிந்தது. “ஒஹ்” என்றான் தொண்டைக் குரலில்.
 
முன்னே நின்ற பார் அட்டெண்டன் “டிட் யூ அஸ்க் சம்திங் சேர்” விசாரித்தான்.
 
“வன் மோர் ப்ளீஸ்” சிறு கண்ணாடி குடுவையை உயர்த்திக் காட்டியவன் பார்வை மீண்டும் அவள் விம்பத்தில் பாய்ந்தது. அவனை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தாள். அவன் மனமோ பத்து நாளைக்கு முன் சென்றது.
 
 
அன்று கோப்பைக் கையில் கொடுத்த ஃபிக்சர் அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்து பீனிக்ஸ் இந்த அசைன்ட்மெண்டை எடுக்க சந்தர்ப்பமேயில்லை. ஆனால் வேறொரு காரணத்துக்காய் அவன் எடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
 
முழுமையாக கோப்பை படித்து முடித்தவன் நிமிர்ந்து பார்த்தான். அவர் முகத்திலிருந்தே அவன் மனதைப் படித்தவனாய் “டென் சி, சிக்ஸ் மன்ந்ஸ்” என்றான்.
 
‘ஒகே டீல் தென்”
 
கடந்த பத்து நாட்களாய் அவளைத்தான் நிழல் போல் தொடந்து கொண்டிருந்தான். அவன் அசைன்ட்மென்ட்டை ஏற்றுக் கொண்டதில் நாயரின் ஆட்களை பின் வாங்க சொல்லியிருந்தான் ஹிப்னோஸ்.
 
இந்தப் பத்து நாளில் அவள் அதிகம் செய்தது, ஊரை சுற்றுவது, பீச் போவது, தங்கியிருக்கும் அப்பர்ட்மென்டின் கீழே இருக்கும் பார்க்குக்கு வந்து அங்கிருக்கும் குழந்தைகளுடன் விளையாடுவது, பெருசுகளை வம்புக்கு இழுப்பது, அருகேயுள்ள கஃபேயில் லப்பையும் தூக்கிக் கொண்டு காஃபி குடிக்க வருவது.
 
கடலையோடு விளையாடிய பௌமி...
 
குழந்தைகளுடன் குழந்தையாக ஐஸ்க்ரீம் குடித்த பௌமி
 
பெஞ்சில் அமர்ந்து சண்டை போட்ட மனைவியை சமாதனபடுத்த முயன்ற பெரியவர் கையில் ரோஜாவை வைத்து சென்ற பௌமி
 
யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து ஜெர்மன் செப்பார்ட் நாயுடன் சம்மணமிட்டு அமர்ந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பௌமி,
 
இத்தனை காலம் இறுகிப் போயிருந்த அவன் மனதை இளக வைத்த பௌமி
 
அவன் நாள் முழுதும் பௌமியால் நிறைந்தது. தலை கோதியவன் அப்படியே பிடரியை பிடித்துக் கொண்டு அண்ணாந்து வானம் பார்த்தான். இது என்ன உணர்வு என்றே அவனுக்கு புரியவில்லை. இத்தனை நாள் இறுகியிருந்த அவன் மனம் இலவம் பஞ்சாய் பறகின்றது. சிரிக்கவே தெரியாத அவன் இதழ்கள் அவளை எங்கு கண்டாலும் அனுமதியின்றி புன்னகையில் விரிகின்றது. அவன் கைபேசி சத்தம் போடவே எடுத்து காதுக்கு கொடுத்தான். கண்களோ உள்ளே சென்ற அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
 
“நாளை ஒரு ஆர்ட் எச்சிபிசன்...” ஃபிக்சர் தான் எடுத்திருந்தார்.
 
***
 
“ஹாய்” உற்சகமாய் குரல் கேட்க சலனமின்றி திரும்பிப் பார்த்தான்.
 
“பிரஜன் ரைட்” கையை நீட்டினாள் “நான் பௌலோமி அலைஸ் பௌமி, அன்று சரியாய் அறிமுகப்படுத்த சந்தர்பம் கிடைக்கல”
 
“எஃக்ஸ்கியூஸ் மீ, பட் உங்களை எனக்குத் தெரியுமா?” சலனமின்றிக் கேட்டான்.
 
“நிச்சயமா அன்று நீங்கள்தானே என்னைக் காப்பற்றியது. பத்து நாளைக்கு முதல் அந்த முட்டு சந்து”
“லுக் மிஸ்... இப்ப என்ன பெயர் சொன்னீர்கள்?” வேண்டுமென்றே யோசிப்பது போல் நடித்தவன் “அஹ் பௌலோமி அலைஸ் பௌமி, மே பி ஜஸ்ட் ஸ்மால் ஹெல்ப் ஆபத்தில் உதவி செய்திருப்பேன். இதையெல்லாமா ஞாபகம் வைத்திருப்பார்கள்?” அவளிடமிருந்து பார்வையை திருப்பி கையிலிருந்த கண்ணாடிக் குடுவையை பார்த்தவாறே கேட்டான்.
 
பௌமிக்கு சட்டென முகம் விழுந்துவிட்டது.
 
“ஒஹ்” என்று திரும்பியவள் கண்களில் விழுந்தான் நாயர்.
 
‘இவனுக்கு ஞாபகபடுத்துவதை விட வந்த வேலை முக்கியம்’ என எண்ணியவளாய் “ஸீ யூ” என்றவள் கூட்டத்திடையே நுழைந்து நாயரைப் பின்தொடர்ந்தாள். அந்த இடம் கொச்சினின் தொழிலதிபர்களால் நிரம்பியிருந்தது. ஆண் பெண் வயதானவர் இளைஞர் யுவதிகள் என பாதிபேராவது அந்த டிரஸ்ட்டை நம்பி உதவும் எண்ணத்துடன் வந்திருந்தனர். ஒரு புறமாய் வரைந்த சித்திரங்களை வைத்திருக்க, மறுபுறத்தில் இடத்தில் போப்பே உணவு முறை, பழசாறு என்றிருந்தது. இன்னொரு இடத்தில் டிஜே என்று களை கட்டியது.
 
நாயர் திறந்து சென்ற கதவின் முன்னே இரண்டு பேர் காவலுக்கு நிற்க உள்ளே செல்ல முடியவில்லை. அதற்கு அருகிலேயே விதவிதமான பழசாறுகளை அதற்குரிய தாங்கிகளில் போட்டு வைத்திருக்க அதற்குள் ஒன்று கரண்டி போல் சுழன்று கொண்டிருந்தது. அந்த மேசையின் ஓரம் ஒதுங்கி, பழசாறுகளை பார்ப்பது போல் அந்தக் கதவையே கவனித்துக் கொண்டிருந்தாள்.
 
“அந்த வூட்அப்பிள் நல்லா இருக்கும்” என்றான் அருகே பழசாறை பார்வையிட்டுக் கொண்டிருந்த அவன்.
 
ஆச்சரியமாய் பார்க்க “ஹாய் ஐம் சங்கர்” தன்னைத்தானே அறிமுகபப்டுத்தினான்.
 
“பௌலோமி” என்றவள் பார்வை மீண்டும் கதவு நோக்கி பாய “எனக்கும் சேம் டவுட்தான்” என்றான் அவன். எதுவும் பேசவில்லை, ஆனால் சற்று எச்சரிக்கையாய் நோக்கினாள்.
 
“பயப்பட வேண்டாம், சிபிஐ” தாழ்ந்த குரலில் கூறியவன் “நீங்க பௌலோமி சிவகுமார் தானே” அவள் அடையாளத்தை உறுதிப்படுத்தினான்.
 
அவள் யாரென்பதை எதிரிகள் நன்றாகவே அறிவார்கள். எனவே அடையாளத்தை மறைக்கக் பெரிதாய் முயற்சி எடுக்கவில்லை. ஆமோதிப்பாய் தலையை அசைத்து வைத்தாள்.
 
பாரின் முன் போட்டிருந்த ஸ்டூலில் இந்தப் பக்கம் திரும்பியிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரஜன் தடை இறுகியது. கையிலிருந்த கிளாசை அப்படியே வாயில் கவிழ்த்தவன் திரும்பி பார்க்கமால் அதை பின்புறமாய் எறிந்தான். சற்று முன் அவனே அவளை தெரியாது என்று அனுப்பி வைத்தது எல்லாம் அவன் நினைவில் இல்லை. அந்த புதியவன் குனிந்து அவள் காதில் ஏதோ சொல்ல, இங்கே இவனுக்கு ஏகத்துக்கும் எகிறியது.
 
“இது சரி வராதுடா பிரஜன் என்ட்ரியை போடு” நிதானமாய் நடந்தவன் வழியில் வந்த பேரரின் தட்டிலிருந்த பழசாறு நிரம்பிய கிளாசை எடுத்தவாறே சென்றான்.
 
“அந்த மூன்றாவது வரிசையில் பத்தாவது கிளாஸ். ஐந்தாவது வரிசையில் பதின்மூன்றாவது கிளாஸ். ப்ரீயா இருக்கும் போது ட்ரை பண்ணுங்கள்” கண்களை சிமிட்டியவாறே தனக்கு ஒரு கிளாசை எடுத்துக் கொண்டான். கெட்டிக்காரன்தான் நாசூக்காய் தன் கைபேசி இலக்கத்தை சொல்லிவிட்டான்.
 
“இவர் எந்த ரவுடிகளிடமிருந்து காப்பற்றினார்” பௌமியின் தோளை சுற்றி கையைப் போட்டவன் சங்கரைப் பார்த்த பார்வையில் சங்கர் பஸ்பமாகமல் இருந்ததே அதிசயம். அவனின் ஆழ்ந்த கருநிறக் விழிகள் முன்னிருந்தவனை அளவிட நொடியில் இனங் கண்ட மூளை எச்சரித்தது ‘அவன் போலிஸ் விலகியிரு’.
 
“அஹ் போலீஸ்” மிகமிக மென்மையான குரலில் சொன்னான். அந்தக் குரலின் தற்பாரியம் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
 
“பிரஜன்” கண்களை விரித்தாள் பௌமி.
 
புதிதாய் இணைந்தவனை அழுத்தமாய் பார்த்தது சங்கரின் கண்கள் “சங்கர்” கைகளை நீட்டினான். ஒரு பார்வையில் தன்னை அடையாளம் கண்டவனை வியக்கமால் இருக்க முடியவில்லை.
 
“ஒஹ் நைஸ் டு மீட் யூ” வேண்டுமென்றே அழுத்தமாய் பிடித்து கை குலுக்கினான் பிரஜன்.
 
“ஸ்ட்ரோங் ஹா” சிறு கேலியாய் கேட்ட சங்கர் “இட்ஸ் வோண்டேர்புஃல் டு மீட் யூ மிஸ்டர் பிரஜன்” கிளாசை உயர்த்தி காட்டிவிட்டு விலகி காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தில்  கேட்டான்.
 
“பீனிக்ஸ் எப்ப கொச்சின் வந்தான்?”

   
ReplyQuote
VSV 23 – நெஞ்சோரம் உன் சஞ்சாரம்
(@vsv23)
Member Author
Joined: 3 months ago
Posts: 6
Topic starter  

உங்களின் கருத்துகளை மறக்காமல் இந்த திரியில் சொல்லுங்கள். ஆவலாய் காத்திருக்கிறேன்.

https://kavichandranovels.com/community/topicid/73/

This post was modified 2 weeks ago by VSV 23 – நெஞ்சோரம் உன் சஞ்சாரம்

   
ReplyQuote

You cannot copy content of this page