All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 9

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

நெஞ்சம் 9

 

ஆதி அனுப்பிய குறுஞ்செய்திகள் எல்லாம் பதில் செல்லாமல் இருக்கவே, அவள் தன் நம்பரை பிளாக் செய்து விட்டால் என்பதை அறிந்தான்.

நிச்சயமாக செய்வால் என்பதையும் அறிந்தே தான் வைத்திருந்தான். அதனாலே உடனே வேறு ஒரு சிம்கார்டை போட்டு மறுபடியும் வாட்ஸ் அப்பில் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான். அவளை தொந்தரவு செய்கிறோம் எனத் தெரிந்தும் அவளிடம் பேச வேண்டும் என துடிக்கவே இதனைச் செய்தான்.

'எப்படித்தான் இவனுக்கு என் நம்பர் கிடைச்சதோ 'புலம்பியவளோ இருந்தாள்.

மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கும். ஆனால் ஆதி செய்த மிகப்பெரிய தவறு அவன் தேர்ந்தெடுத்த இந்த வழிகள் தான்.
அவளுக்கு இவனின் மீது ஒவ்வொரு செயலிலும் கோபமும் எரிச்சலும் அதிகரித்துக் கொண்டே இருந்ததே தவிர சற்று குறைந்த பாடே இல்லை.

புதிதான நம்பரில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பினால் இம்முறையும் பிளாக் செய்தாள். தான் தொடருவேன் என்று அனுப்பவே அவளோ அதனை மியூட்டில் போட்டு விட்டாள். அதனைத் தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் அதில் கூறியதுப் போலே எழுந்ததுமே அவளிடம் குட் மார்னிங், உறங்கும் போது குட் நைட் ,இடை இடையில் ஒரு சில பேச்சுவார்த்தைகள் அவளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிக் கொண்டிருந்தான். அவள் நிச்சயம் பார்க்க மாட்டால் என்பது தெரியும் இருந்தாலும் அனுப்பினான்.

இப்படியே நாட்கள் கடக்க ஒரு நாள் தன் கைபேசியில் கேலரி ஓப்பன் செய்து அதனைப் பார்த்துக் கொண்டிருக்க, அதில் எடுத்ததுமே ஆதியின் புகைப்படமாகத்தான் குவிந்த வண்ணம் இருந்தது. அவன் ஆத்துக்கு குளிக்கச் செல்லும்போது கிணற்றில் நீச்சல் அடிப்பது எங்கேயாவது வெளியில் சென்றால் இப்படி ஒவ்வொரு புகைப்படமாக அவன் அனுப்பி கொண்டே தான் இருந்தான். அது எல்லாம் அவளது கேலரியில் வந்தவாறு இரு. அதை இப்பொழுது தான் கவனித்தாள். அதைத்தான் இத்தனை நாட்கள் கவனிக்காமல் விட்டு விட்டோம் என்று இப்பொழுது புரிந்தது. அவள் அறியாது அவளின் விழிகளோ அவனின்
புகைப்படத்தை பார்க்கத்தான் செய்தது.

அவன் இப்பொழுது வரை தனக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறான் என்பது புரியவே, அப்படி என்ன தான் இருக்கிறது என்று ஒரு முறை அதை ஓபன் செய்துப் பார்த்தாள். அதில் அவளை அவன் அக்கறையாக ஒவ்வொரு நொடியும் விசாரிப்பது ஏதோ நெருடுவது போன்று தோன்றியது. இதை தான் வளர விடக்கூடாது இது ஆபத்து என்பது புரிந்தாலும் அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தான் தெரியவில்லை தன்னை விட்டு ஆதியை தான் விலக்கி வைக்க வேண்டும் அதுவே அவனுக்கு நல்லது என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது. நிச்சயம் வேறொரு ஆடவனை மனதால் நினைக்க முடியாது.

அந்த நொடி உணரவில்லை ஆதி எந்த எல்லைக்கும் செல்வான் என்று.

அந்த குறுஞ்செய்திகளை வாசிக்கும் போதெல்லாம் அவளையும் மரியாதை விழிகளில் கண்ணீர் வர நினைவுகள் எங்கோச் செல்ல, வேகமாய் எழுந்து தன் அறைக்குச் சென்று தரையில் மடிந்தவளோ அழுது கரைந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் கண்ணீர் விட்டு அழுதாள்.

இனி பேருந்தில் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தவளோ தந்தை மற்றும் உதயனின் உதவியோடு ஸ்கூட்டி ஒன்றே புதிதாக வாங்கினாள். முழுத் தொகையும் கொடுத்து விட்டாள். தான் ஸ்கூட்டியில் சென்றால் பேருந்து நிலையத்தில் வைத்து ஆதியை பார்க்க தேவையில்லை அவனும் தன்னை பார்க்க மாட்டான் என்ற நினைப்பில் எப்பொழுதும் போல் பேருந்துக்குச் செல்லாமல் சற்று நேரம் தாழ்த்தி மெல்ல சென்று விடலாம் என்று நினைப்பில் ஸ்கூட்டியிலே சென்றாள்.

இப்படியே இரு நாட்கள் கடந்த நிலையில் ஆதிக்கோ பெரும் யோசனை. குறுஞ்செய்தியில் 'ஏன் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை உடம்புக்கு எதுவும் முடியலையா ? வீட்டுல இருக்கியா ?  காய்ச்சலா, என்னாச்சு ? நல்லா தானே இருக்கே   ஸ்கூலுக்கு போகலையா ? ' என்று மாறி மாறி குறுஞ்செய்திகள் அனுப்பியும் அவளோ அதனைக் கண்டு கொள்ளவே இல்லை.

இப்படியே விட்டால் சரி வராது என நினைத்த ஆதியோ ஒரு நாள் காலை நேரம் அவளின் வீட்டு பக்கமே வந்து விட்டான். வழக்கம் போல் தான் இருந்தது அவள் வீட்டிற்கு புதிதாக ஒரு ஸ்கூட்டி நிற்பதைக் கண்டான். ஒரு வேளை அவள் தான் இந்த வாகனத்தை வாங்கி விட்டாளோ என நினைத்து அங்கையே சில மணி நேரம் சுற்றிக்கொண்டு இருக்க, நேரங்கள் கடந்து பள்ளிச் செல்ல கிளம்பி வெளியே வந்தவள் வழக்கம் போல் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவள் கேட்டை தாண்டி வெளியே வந்து ரோட்டில் செல்லும் போது தான் அவனுக்கு காரணம் புரிந்தது.

'ஓஹோ டீச்சர் மேடம் ஸ்கூட்டி வாங்கிட்டீங்களா ?  ரொம்ப நல்லாதாப் போச்சு ' என நினைத்தவனோ அன்றிலிருந்து ஸ்கூட்டியின் பின்னே பாலோ செய்ய ஆரம்பித்தான். வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விடுத்து பெண்ணின் பின்னே சுற்றுவதே அவனுக்கு வேலையாகிப் போனது.

ஒரு நாள் அப்படித்தான் திடீரென ஸ்கூட்டியில் செல்லும் போது நிறுத்தி விட்டாள். பின்னே அவளைத் தொடர்ந்து வந்த ஆதியும் தன் பைக் நிறுத்தவே அவனைக் கண்டவளோ தன் அருகே வருமாறு அழைத்தாள்.

'என்ன ஒரு அதிசயம் நம்ம ஆள் நம்மள கூப்பிடுது. எப்படியோ பூஜை தான் பண்ணுவா இன்பமா வாங்கிக்க வேண்டியது தான் ' என நினைத்துக் கொண்டு அவள் அருகில் வர,

"இங்க பாருங்க அன்னைக்கு கோவில்ல வச்சே தெளிவா சொல்லிட்டேன். இனிமே என் பின்னாடி இப்படி சுத்தாதீங்கன்னு என்னால உங்களை காதலிக்க முடியாது சொன்னா புரிஞ்சுக்கோங்க. எதுக்கு இப்படி என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க ?"

"எதுக்கு இப்படி சொல்ற ? எனக்கு என்ன குறைச்சல் நீ மட்டும் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு ராணி மாதிரி வாழலாம். நான் உன்னை சந்தோஷமா பார்த்துப்பேன். இப்படி நீ வேலைக்கு போகணும் கூட அவசியமே இல்லை "

"எனக்கு எதுவுமே வேண்டாம் தயவு செய்து உங்களை கை எடுத்து கெஞ்சி கேட்கிறேன். என்ன தொந்தரவு பண்ணாதீங்க ? இதுக்கு மேல நான் என்ன சொல்லணும் எனக்கு தெரியல. " என கூறி அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நிற்காது தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்

'என்ன இவ எப்ப பார்த்தாலும் இதே தான் சொல்லிக்கிட்டு இருக்கா.  இது செட்டாகாது என்ன பண்ணலாம் ? ' என யோசித்தவன் சரி சில நாட்கள் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து அவளின் பின்னே தொடர்வதை விட்டுவிட்டான். நாட்கள் கடக்க அவளும் நிம்மதியாகத்தான் பள்ளிக்குச் சென்று வந்துக் கொண்டிருந்தாள்.

மாதங்கள் கடக்க ஆதியால் தினமும் காணாமல் இருக்கவே முடியவில்லை. அவ்வப்போது அவளை நேராகவே சந்தித்து வந்தான். அன்று அப்படித்தான் ரோட்டோரமாக தன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவளிடம் வந்தான்.

"என்னம்மா மாடு மேய்க்கிற போல, நான் வேணா எதுவும் உதவி பண்ணனுமா ?" என்று ஏதோ அவள் தன் அத்தை பெண் என்பதுப் போல் கிண்டலாகக் கேட்கவே,

அவனை முறைத்தவளோ பதில் ஏதும்கூறாது மாடுகளைப் பற்றிக் கொண்டு ரோட்டோரமாக நடந்துச் சென்றாள்.

"என்ன நீ ரிஜெக்ட் பண்றதுக்கு அப்படி என்ன காரணம்ன்னு சொன்னால் நல்லாத்தான் இருக்கும் "

"காரணம் என்னன்னு சொன்னா நீங்க என்ன விட்டு விலகி போயிருவீங்களா ?"

"அதெல்லாம் முடியாது இந்த ஜென்மத்துல நீதான் என் பொண்டாட்டின்னு நான் இந்த நெஞ்சில பச்ச குத்தின மாதிரி பிக்ஸ் பண்ணிட்டேன். அது அழியவே அழியாது _

"அப்புறம் எதுக்கு காரணம் கேக்குறீங்க ?  இப்படியே காலம் முழுக்க கல்யாணம் பண்ணாமலே சுத்திக்கிட்டு கிடங்க, நான் உங்களை காதலிக்கலை, உங்களை கல்யாணம் பண்ணவும் மாட்டேன். உங்களுக்கான வாழ்க்கையை நீங்களே வீணாக்கிக்கோங்க " என்றவள் அங்கிருந்து மாடுகளை பற்றிக் கொண்டுச் சென்று விட்டாள்.

இப்படி அடிக்கடி அவளை சந்திக்க அவளுக்கு அது தலைவலியை தான் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இதற்கு தீர்வு காண நினைத்தவளோ நேராக உதயனிடம் கூறலாம் என நினைத்து அவனின் உதவியை நாடினாள்.

வழக்கம் போல் உதயன் வீட்டுக்கு வரவே காய்கறிகளைப் பறித்து வருகிறேன் எனக் கூறி பொன்னி வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்குச் சென்று விட்டார்.

"அப்புறம் ஸ்கூல் லைப்ல எப்படி போகுது ?" என்று வழக்கம்போல் அவளிடம் எப்பொழுதும் வந்தாலும் என்ன கேட்பானோ அதையே தான் அன்றும் கேட்டான். அவளும் அதற்கு பதில் கூறிவிட்டு பின் யோசனையாய் தயங்கிக் கொண்டு நிற்கவே, அவள் தன்னிடம் எதையோ பேச நினைக்கிறாள் என்பதை உணர்ந்தான் உதயன்.

"என்னாச்சு என்கிட்ட ஏதாவது சொல்லணுமா தயங்காம சொல்லுங்க ?"

"உங்க பிரெண்டு ஆதி என்னை ரொம்ப டார்ச்சர் படுத்துறாரு.  என் பின்னாடியே சுத்தி சுத்தி வராரு. நானும் எவ்வளவோ தடவை அவர்கிட்ட சொல்லி பாத்துட்டேன் ஆனா அவர் கேட்கவே மாடேங்காரு ஏதோ என்னை கல்யாணம் பண்ணனும் என்னை காதலிக்கிறேன் பைத்தியம் மாதிரி  பார்க்கும்போதெல்லாம் உளறிட்டு இருக்காரு. எனக்கு இது சுத்தமா பிடிக்கல. என்னோட கடந்த காலத்தை பத்தி உங்களுக்கு தெரியும்ல. என்னால அதுல இருந்து என்னைக்குமே மீண்டும் வர முடியாது. அப்படி இருக்கும் போது உங்க பிரெண்டு பண்றது சுத்தமா எனக்கு பிடிக்கவே இல்லை. தயவு செய்து அவரை இனிமே இப்படி பண்ண வேண்டாம் நீங்க சொல்றீங்களா ? நான் எவ்வளவோ சொல்லிட்டேன் செருப்பால அடிக்காத குறை தான் அந்த அளவுக்கு நான் அவர்கிட்ட பேசிட்டேன். அவர் கேட்கவே மாட்டேங்குறாரு " என்க, இந்த விஷயம் உதயனுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

"என்ன சொல்ற நீ ஆதி உன்னை காதலிக்கிறேன்னு உன் பின்னாடி சுத்துறானா ? என்கிட்ட இதை பத்தி அவன் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல "

"எப்படி சொல்லுவாங்க அவங்க சொல்லி நீங்க அதுக்கு எதிர்த்து பேசுவீங்கன்னு தெரிஞ்ச கூட சொல்லாம இருக்கலாம். நீங்க நம்பலைனா ஒரு நிமிஷம் " எனக் கூறி தன் கைபேசி எடுத்து அவனிடம் அதனைக் காட்டவே, அதில் அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் அவன் புகைப்படம் என்று அனைத்தையும் கண்டான் உதயன். அவனுக்கோ கட்டுக்கடங்காத அளவுக்கு ஆத்திரம் தன் நண்பனின் மீது.

'ஒரு பெண்ணுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிந்த பின் அவளை இப்படியா இவன் தொந்தரவு செய்வான் ? தன் நண்பனா இவன் ?  ஆதி இவ்வாறு எல்லாம் இருக்க மாட்டானே. ஏன் இப்படி செய்கிறான் ? ' இன்னுமே முழுதாக நம்ப முடியவில்லை என்றாலுமே நம்பித்தான் ஆக வேண்டும். அவனின் செயல்கள் எல்லாம் அப்படித்தான் இருந்தது.

"சரி நீ எதை பத்தியும் யோசிக்காத. இனிமே அவன் உன் பக்கம் வராம நான் பார்த்துக்குறேன். அவன் கிட்ட நான் இதை பத்தி பேசுறேன் " என்றதும்,

"தேங்க்ஸ் உதயன் நான் இதை முன்னாடியே சொல்லி இருக்கணும். நானே பார்த்துக்கலாம் நினைச்சேன். ஆனா என்னால முடியல. அவன பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு "

"சரி விடு நீ எதை பத்தியும் நினைத்து டென்ஷன் ஆகாத நான் பார்த்துக்கிறேன். ஆமா இந்த விஷயம் அப்பா அம்மாக்கு தெரியுமா ?" எனக் கேட்க,

"இல்ல அவங்களுக்கு தெரியாது தெரிஞ்சா அவங்களும் ஏதாவது நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாங்கல. அவன் கிட்ட போய் பிரச்சனை பண்ணுவாங்க எதுக்கு நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழும் போது அதனால தான் நான் சொல்லலை " என்றாள்.

"ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்களுக்கு இது தெரியாமலே இருக்கட்டும் " என்ற நொடி பொன்னி காய்கறிகளோடு வரவே, அதனை வாங்கிக் கொண்டு அங்கிருந்துச் சென்று விட்டான்.

உதயனின் எண்ணம் முழுவதும் ஆதியின் மீது கடும் கோபத்தோடு தான் இருந்தது. கூடவே இருந்து குழி பறித்து விட்டானே தன்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவன் கூறவில்லையே என்ற ஆத்திரம் தான் உச்சந்தலையில் ஏறிக்கொண்டு நின்றது.

 

கருத்துக்களை பகிர,

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page