All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 8

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

 

அத்தியாயம் 8

உதயன் வேற யுகனிகாவிடம் உண்மையைக் கூறி இருக்கவே, இனி தன்னைக் கண்டாலே நிச்சயம் கோபம் கொள்வாள் என்பதை அறிந்தான் ஆதி. அதிலிருந்து தான் எப்படி மீண்டு வர நினைத்து நாட்கள் தான் கடந்ததை தவிர ஒரு வழியும் கிடைக்கவில்லை.

உதயனைக் கண்ட நொடி அவனை திட்டி தீர்த்து விட்டான். அவனும் அடிக்காத குறையாக பதிலுக்கு விட்டான்.

"நீ தப்பு பண்ணிட்டு என்ன சொல்லாத. நான் என்னடா பண்ண முடியும் " இருவரும் மாறி மாறி சண்டையிட்டது தான் மிச்சம் தீர்வு கிடைக்கவில்லை.  ஒரு வழியாக இனி அவளை தான் மறைந்து காண்பதற்கு நேராக அவளிடமே தன் காதலை கூறி அவளை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்து விட்டான்.

அன்று ஏகாதசி என்பதால் பெருமாள் கோவிலுக்குச் சென்றால் யுகனிகா. அவள் கோவிலுக்குள் நுழைவதை பின் தொடர்ந்து வந்த ஆதி கண்டான்.

'நிச்சயம் கோவிலில் கூட்டம் என்பது இன்று இருக்கத்தான் செய்யும் கோவிலில் வைத்து தன் காதலை வெளிப்படுத்தினால் நல்லது அதை விட அவள் தன்னை செருப்பால் அடிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்காது அல்லவா ? என நினைக்கவே,

'கையால அடிச்சா என்னடா பண்ணுவ ' என்க,

'என் பொண்டாட்டி ஓட கை தானே வாங்கிக்க வேண்டியது தான்.'

'அப்படியா அப்போ செருப்பும் உன் பொண்டாட்டியோட செருப்பு தானே ?'

'ஆமா இருந்தாலும் சுத்தி எல்லாரும் முன்னாடியும் அவமானப்படக் கூடாதுல ' என தன் மனதிடமே தானே பேசிக்கொண்டு அங்கிருந்த ஒரு பைப்பில் தன் கை கால்களை மட்டுமே சுத்தப்படுத்திக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான்.

அவன் சிறு வயதிலிருந்தே இந்த கோவில் இந்த ஊரில் இருக்கிறது தான். ஆனால் அந்த கோவிலுக்கு எத்தனை முறை வந்திருக்கிறான் என்றுக் கேட்டால் ஒரே ஒரு முறை தான் அதுவும் கும்பாபிஷேகம் வைக்கும் போது மட்டும் தான் வந்திருந்தான்.

அவனின் தங்கை, அம்மா, அப்பத்தா மூவரையும் வாசலிலே இறக்கி விட்டுச் சென்று விடுவது தான் அவனின் பழக்கம். கோவிலுக்குச் சென்று விழுந்து விழுந்து சாமி கும்பிடுவது ஒரு நாளும் அவனுக்கு பழக்கம் என்பது இல்லாத ஒன்று. ஆனால் இன்று தன்னவளுக்காக அவளிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் ? என்ற எண்ணத்திலே கோவிலுக்குள் நுழைந்தான். அங்கு முதலில் ஒரு சிறு விநாயகர் ஓரமாக இருக்கவே, அங்குச் சென்று வணங்கிக் கொண்டே இருந்தாள்.

அவளின் பின்னால் சென்று அமைதியாக இருக்கவே, மொத்தமே ஒரு நாலைந்து பேர் மட்டும் தான் இருந்தனர். இவளோ நீண்ட நேரமாக விழிகள் மூடி வேண்டிக் கொண்டிருக்க, ' என்னடா இது ரொம்ப நேரமா புள்ளையார் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கா, அப்படி என்ன பிள்ளையாரிடம் வேண்டுற ' அவளை தான் ரசித்தவாறுக் கண்டு கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நொடியும்  ஏன் ஒவ்வொரு பொழுதுகளும் தன்னவள் பேரழகு தான்.  அன்று தலைக்கு குளித்திருக்கவே கூந்தலில் அழகு பஞ்சு போன்ற மிருதுவாக  காற்றில் அசைந்தாடியது.

வேண்டி விட்டு விழி திறந்தவள் திரும்ப, அவளுக்கு பக்கவாட்டில் அவளைக் கண்டவாறு நின்றிருந்த ஆதி தான் விழிகளில் விழுந்தான். அவனைக் கண்டதுமே அனல் கக்கும் விழிகளோடு முறைத்தவளோ விலகி அந்த பிள்ளையாரைச் சுற்றி வந்தாள். அவனும் அவளின் பின்னாலேச் சுற்ற அசௌகரியமாக உணர்ந்தாள்.

இவன் ஏன் இப்படி செய்கின்றான் ?எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியதுப் போல் தான் அவனின் மீது இன்னும் அதிகளவு இச்செயலால் கோபத்தோடு தான் சுற்றி வந்தாள். நிம்மதியாக சாமியை கூட கும்பிட விடமாட்டேன் என்கிறானே என்ற எண்ணம்.

கற்பூரத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டவளோ பெருமானை வழிபட்டு அங்கிருந்து நகர, அவளின் அருகில் வந்தவனோ, "ஒரு நிமிஷம் டீச்சரம்மா. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்க, அவளோ மாட்டேன் என்று விழிகளாலே அவனை ஒதுக்கினாள்.

முன்னே நடக்க மீண்டும் அவளின் அருகிலேயே சற்று இடைவெளி விட்டு நடந்து வந்தான்.

"நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா ? எனக்கு சுத்தி வளைச்சி எல்லாம் பேச தெரியாது. இந்த சன்னதியில் வச்சி நான் நேராவே உன்கிட்ட கேட்கிறேன் " என்று அவள் நடக்க அவனும் ஒத்துப் போய் நடந்து கொண்டேக் கேட்க,

அவளின் விழிகளோ அங்கே தேங்காயை விடலைப் போட்டிருந்த இடத்தை தான் கண்டது. அந்த தேங்காய் பிடுங்கி உன் மீது போட்டு விடுவேன் என்பது தான் அவளின் அந்த பார்வைக்கான அர்த்தம்.

'அடியாத்தி கொல்ல பார்க்குறாளே கொலைகாரி சமாளிக்கிறது பெரிய கஷ்டமாக இருக்கும் போலையே ' என நினைக்க அவளோ பெருமானின் முன்னேச் சென்று என்று வணங்கிக் கொண்டு இருந்தாள்.

"நீ இப்பவே சொல்லணும்னு அவசியம் இல்ல. பொறுமையா கூட சொல்லு. நான் உனக்காக எத்தனை வருஷம் ஆனாலும் காத்துக்கிட்டு இருப்பேன் " என்க, ஐயரோ தீர்த்தம் திருநீர் அனைத்தும் கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

சுற்றி சில ஆட்கள் இருக்க அதனாலே அவள் மௌனம் சாதித்தாள். அவள் மட்டும் வாயை திறந்தால் அந்த நொடி நிச்சயம் அவமானப்பட்டு தான் போய் விடுவான் ஆதி என்பதை அவனும் உணர்ந்து தான் இருந்தான். இருந்தும் விடாது சுற்றி சுற்றி வந்தான். அவளோ கோபுரத்தை சுற்றி வர அவனோ அவளை சுற்றி வர ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தாள்.

"இங்க பாருங்க நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் நான் விடுறேன். இந்த வார்த்தையை நீங்க கோவிலுக்கு வெளியில வச்சி சொல்லியிருந்தீங்கன்னா அப்புறம் நான் மனுஷியாவே இருந்திருக்க மாட்டேன். நீங்க என்ன காதலிச்சா நான் உங்களை உடனே கல்யாணம் பண்ணிக்கணுமா ? என்னால முடியாது இனிமே என் பின்னாடி வராதீங்க மரியாதையா சொன்னா போயிருவீங்கன்னு நினைக்கிறேன். கோவிலுக்கு வந்து என்ன நிம்மதியா சாமி கும்பிட விடுங்க " என்றவளோ சிறிது நேரம் அங்கிருந்த ஒரு இடத்தில் அமர்ந்து விடவே,

இப்பொழுது அதற்கு மேலே தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து அங்கிருந்துச் சென்று விட்டான். அவன் சென்றதை உணர்ந்த பின் தான் அவளுக்கு நிம்மதியான உணர்வு.

இது என்ன தனக்கு வந்த சோதனை ? இவன் ஏன் தன்னிடம் வந்து இவ்வாறெல்லாம் பேசுகிறான் ? கடவுளே நிம்மதியா மனசுக்கு சஞ்சலம் இருக்கக் கூடாதுன்னு உன்னை தேடி வந்து இருக்கேன். ஆனா ஏன் இங்க இப்படி சோதிக்கிற ? இதுல இருந்து என்ன நீ தான் காப்பாத்தணும் ' என வேண்டி விட்டு அந்த கோவிலிருந்து வெளியேறினாள்.

ஆனால் அந்த பெருமாளோ தினமும் வரும் யுகனிகாவை விட்டுவிட்டு திடீரென தன்னைக் காண வந்த ஆதிக்கு உதவி புரிய நினைத்தார்.

நாட்கள் சென்று இரு வாரங்கள் கடந்த நிலையில் அவரிடம் பேச முடியாமல் தவித்தான் ஆதி அவளை தினமும் கண்டு கொண்டு தான் இருக்கிறான்.  ஆனால் பேச வேண்டுமென உள்ளமோ துடித்தது. என்ன செய்யலாம் யோசிக்க அப்பொழுது தான் அவனின் விழிகளில் விழுந்தது அந்த பேருந்து.

வழக்கமாக அவளோடு பள்ளிக்கு சிலர் செல்வார்கள் அதுவும் அவள் வேலைப் பார்க்கும் பள்ளியில் படிக்கும் பெண்கள் ஆண்கள் தான். அதில் ஒரு பெண் அவனுக்கு தெரிந்த சொந்தக்காரப் பெண்ணாக இருக்கவே விடுமுறை நாளன்று ஆத்துக்கு குளிக்கச் சென்றவளை பிடித்து விட்டான்.

"ஏய் குழலி இங்க வாடி " என்கவே,

"என்னத்தான் அதிசயமா இருக்கு நீரா என்னை கூப்பிட்டீங்க ? பொம்பள புள்ளைய பார்த்தாலே வம்பு இழுக்கிறது உங்களுக்கு பொழைப்பா போச்சு. நான் ஒருத்தி  இருக்கேங்கிறது இப்ப தான் உங்க கண்ணுக்கு தெரியுது போல " என்றுக் கேட்கவே,

"அது எப்படி இந்த மாமா மறப்பேன் சொல்லு. உன் அண்ணன் கிட்ட பிரெண்டு பிடிச்சதே எதுக்கு உன்ன சைட் அடிக்க தானே ? சீக்கிரம் காலேஜ் முடிச்சு இந்த மாமனை கட்டிக்கோ "

"அது சரி தான் இந்த வார்த்தைyai எங்க அப்பாரு கிட்ட சொல்லுங்க பாப்போம். "

"ஏன் உங்க அப்பனுக்கு என்ன கொம்பா மொளச்சிருக்கு. குடிசாமி தானே ரெண்டு பாட்டில் வாங்கி கொடுத்த ஈஸியா கரெக்ட் பண்ணி விடுவேன் "

"இங்க பாருங்க அத்தான் ஒழுங்கா பேசுங்க. எங்க அப்பா பேரு குருசாமி, குடிசாமி கிடையாது "

"அப்படியா ஊருக்குள்ள எல்லாரும் இப்படி சொல்றதா  கேள்விப்பட்டேன். உங்க அப்பனே என்கிட்ட அடிக்கடி வாங்கி குடிச்சிட்டு தானடி இருக்கான் "

"இப்ப என்ன வேணும் உங்களுக்கு,  எதுக்கு போன என்ன கூப்புட்டீங்க ? எனக்கு வேலை கிடக்கு " என்று கோவமோடு கிளம்பவே,

"எப்படி கோவத்துல மூக்கு விடக்கிறத பாரு என் மாமன் மகளுக்கு " என்றதும், அடுத்த நொடியும் அவள் சிரித்து விட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்.

"சரி சரி நான் விஷயத்துக்கு வரேன். நம்ம ஊர்ல இருந்து நீ ஸ்கூலுக்கு போகும்போது ஒரு டீச்சரை வரும்ல ஊருக்கு ஒதுக்குப்புறமா கூட அவங்க வீடு இருக்குல "

"அவங்களுக்கு என்ன இப்போ ?" என்றுக் கேட்கவே

"அந்த டீச்சரோட போன் நம்பர் எனக்கு வேணும்"

"அது எதுக்கு உங்களுக்கு ?தெரிஞ்சா என்னை திட்டும் "

"அதெல்லாம் தெரியாம பார்த்துக்கலாம் அவங்க அம்மா காய்கறி எல்லாம் விக்குது அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டேன். அவங்க அம்மா கிட்ட போன் கிடையாதா. நல்ல ஃப்ரெஷ்ஷா இருக்கு அப்படின்னு சொன்னாங்க. அதான் நேரடியா என்னென்னலாம் இருக்குன்னு கேட்டு வாங்கலாம்னு நினைச்சேன். அது போக நம்ம கிட்ட தானே பாலும் ஊத்துறாக "

"என்னால எல்லாம் தர முடியாதுப்பா "

"அப்படியா அப்ப சரி நீ பஸ்ல அந்த பின்னாடி படிக்கட்டுல தொங்கிட்டு ஒருத்தன் வருவான்ல அவன் கூட அந்த கே ஆர் காலேஜ்ல படிக்கிறானே. பேரு வரமாட்டேங்குது. அவன் நோட்டு புக்கை கூட நீ வச்சு இருப்பியே. திரும்ப வந்து  உன்கிட்ட வாங்கிட்டு போவானே " என்று முக்கியமான விஷயத்தை சரியாக கவனித்து இப்பொழுது அதைக் கூறவே,

அதிர்ந்த குழலியோ ஒரு நொடி திடுக்கிட்டு பயந்து விட்டாள். அந்த பருவ வயதில் அவளுக்கு வரும் ஒரு ஈர்ப்பு தான் அவனின் மீது. ஆனால் இந்த விஷயம் தன் தந்தைக்கு தெரிந்தால் தன்னை படிக்கவே விட மாட்டார்கள் என்பது குரலில் நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்.

அதனாலே இப்பொழுது, "
நம்பர் இப்ப என்கிட்ட இல்ல என் போன்ல தான் டீச்சர் நம்பர் பதிஞ்சி வச்சிருக்கேன். நாளைக்கு எடுத்து தாரேன் " என்க,

"மறக்காம நாளைக்கு பஸ் ஸ்டாண்டுக்கு வரும் போது எடுத்துட்டு வந்துரு இல்லன்னு நினைச்சுக்கோங்க நாளைக்கு சாயந்தரம் உங்க அப்பா எப்படி  சம்பளம் வாங்கிட்டு சரக்கு அடிக்க ஒயின் ஷாப் தான் வருவாரு. அந்த நேரம் நானும் போய் சொல்லிடுவேன் பார்த்துக்கோ " என்று மிரட்டவே,

"ஐயோ அதெல்லாம் வேண்டாம் நீங்க செஞ்சாலும் செய்வீங்க. நான் சும்மா தான் பார்த்தேன். எங்களுக்குள்ள எதுவும் இல்லப்பா. உங்களுக்கு என்ன நம்பர் தானே வேணும், நான் நாளைக்கு தரேன் வாங்கிக்கோங்க அத்தான். என்ன ஆளை விடுங்கப்பா " அங்கிருந்து வேகமாய்ச் சென்று விட்டாள்.

செல்வதைக் கண்டு சிரித்தவாறு நின்று இருந்தான் ஆதி.

மறுநாள் அவளிடம் கேட்டது போன்றே பேருந்து நிலையத்தில் யுகனிகாவை பார்ப்பதற்காக காத்திருக்க அங்கே வந்த குழலி ஒரு சின்ன துண்டு சீட்டில் கைபேசி நம்பரை எழுதி அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றிருந்தாள்.

இப்பொழுது சில நாட்களாக இந்த பேருந்து நிலையத்தில் அடிக்கடி ஆதியை தான் சந்திப்பதை அறிந்தே தான் இருந்தாள் யுகனிகா. ஆனால் அவளோ எனக்கெனவென்று இருந்தாள். அவன் தன்னை காண்பதற்காக தான் இப்படி எல்லாம் செய்கிறான் என்பதை புரிந்துக் கொண்டாள். அவனிடமிருந்து தப்புவதற்காகவே சீக்கிரம் ஸ்கூட்டி வாங்க வேண்டும் என நினைத்தாள்.

மதிய நேரம் போல் லஞ்ச் டைம் என்பதால் உணவருந்தி முடித்து சிறிது நேரம் கைபேசியை நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்த யுகனிகாவிற்கு புதிதாக ஒரு நம்பரில் இருந்து, ' ஹாய் ' என்ற மெசேஜ் குறுஞ்செய்தியாக வந்தது.

அவளோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டுவிட, ' சாப்பிட்டாச்சா, ஸ்கூல் லைப் எப்படி இருக்கு, இன்னிக்கு என்ன சாப்பாடு ' என்று மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தியாக வந்துக் கொண்டு இருக்க அதனை எடுத்துப் பார்த்தாள். அவளுக்கு யாரென்று தெரியவில்லை புதிதாக ஒரு நம்பர் என்பதால், "யார் நீங்க ? " என்று கேட்டாள்.

'உனக்கு தெரிஞ்சவன் தான் நீ இந்த நம்பர ப்ளாக் பண்ணா நான் வேற நம்பர்ல இருந்து உன்ன காண்டக்ட் பண்ணுவேன் அதனால நான் தினமும் உன்கிட்ட குட் நைட் குட் மார்னிங் அப்பப்போ சாப்பிட்டியா அப்படிங்கற மெசேஜ் மட்டும் கேட்பேன். நீ அதுக்கு ரிப்ளை பண்ணா மட்டும் போதும் " என்று குறுஞ்செய்தியாக அனுப்பவே,

யாருன்னே தெரியாது இவனுக்கு எதுக்கு நான் மெசேஜ் அனுப்பனும் முடியாது என்றவளோ அப்பொழுதே அந்த நம்பரை பிளாக்கில் போட்டு விட்டாள். அவள் நிச்சயம் இதனை செய்வாள் என்பதை அறிந்தே தான் வைத்திருந்தான் ஆதி.

கருத்துக்களை பகிர,

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page