About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
முத்தம் 14
"அப்பா பாத்தீங்களா அண்ணனை. சானக்கியா அண்ணி வீட்டுக்கு டிரஸ் பேக் பண்ணிருக்கான்." "ஏன் மாது?" "ஏனா.. அவன் அங்க தங்கப்போறான். ஸ்கந்து இங்க வரேன்னு சொல்லிருந்தார். இவேன் இருந்தா என்னை பத்தி விதன்டாவாதமா பேசுவான். அதான், பேக் பண்ணி அனுப்பிருக்கேன்." தந்தையும் மகளும் சிரிக்க ஜெயவள்ளி "அட நேரமாச்சுங்க மாப்பிளை வீட்டுகாரங்க வந்துட்டாங்க. மருமகனும் வெயிட் பண்ணுறார். நம்ம தான் லேட் அதி!!!" என இறுதியாக மகனை அழைக்க "வரேன் ஜெயு. இன்னைக்கி சானக்கியா அவளுடைய வீட்டுக்கு வர சொல்லிருக்கா. அதான், டிரஸ் பேக் பண்ணிருக்கேன். போகலாமா?" என்றதோடு கதவை பூட்டி கொண்டு அந்த சாவியை தன் இடுப்பில் சொருகிய தாயை பார்த்து "ஜெயு! சாவி கொடுங்க நா வைச்சிருக்கேன்." "இந்த அம்மா மகன் சென்டிமென்ட் தாங்க முடியவில்லை!" என வைனவேந்தன் மற்றும் மாதங்கி ஒன்றாக பேச "உங்க அலப்பறைகள் தான் எங்களால தாங்க முடியவில்லை." என பதிலுக்கு தாயும் மகனும் பேச அந்த நேரத்தில் அவர்களின் சந்தோஷத்தை வார்த்தைகளின் அளவை அளவிட முடியாத அளவில் லான்ஸ்பேரி மற்றும் லூதர் "லவ்லி ஃபேமிலி பேபி.(அழகான குடும்பம் குட்டி)" என்றான் லூதர்.
கடைக்கு வந்ததும் அதிரூபனின் விழிகள் அவனின் சானுவை தான் தேடியது ஆனால் அவளை பார்க்கவிடாமல் அவளது தங்கை தேவகி "மாமா! அக்காவை உங்களுக்குக்காக நா ரெடியா இருக்கேன் மாமா." தேவகி பேசியதை கேட்ட பைரவி "வயசுக்கு தக்க பேசு தேவகி. வா டி என் அருமை மகள் தேவகி உன்னை உன் மாமாவோட தனியாவிடவே கூடாது." என்றதும் "அம்மா! மாமா அக்கா எங்க இருக்கானு எனக்கு மட்டும் தான் தெரியும்." என்றதும் தான் அதிரூபன் "தேவகி..என் சானு எங்க?" என்றான் அவளோ "அம்மாகிட்ட இருந்து என்னை காப்பாத்தி காட்டுங்கள் சொல்லுறேன்." என்றாள் திடமான குரலில் மற்றவர்கள் கடையினுள் செல்ல அதிரூபன் பைரவியிடம் "அத்தை தயவு செஞ்சு தேவகிய விடுங்களேன். நான் தேவகி கூட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. அதோட, இவளுக்கு நான் தான் டிரஸ் வாங்கி தரணும்னு என்கிட்ட ஆல்ரெடி கேட்டுட்டா." "உண்மையிலேயே கேட்டியா? தேவகி" என சந்தேகத்தோடு கேட்டார் "அம்மா அக்கா மேல ப்ராமிஸ் மா! நான் அக்கா மாமாவோட ஃபோன்ல பேசிட்டு இருக்கும் போது நா ஃபோனை அக்காகிட்ட இருந்து வாங்கி மாமா கிட்ட கேட்டேன். ஏன்? உரிமையோட நான் கேட்க கூடாதா? என் மாமா கிட்ட நான் கேட்காம வேற யார் கேட்பா?" மகளின் இந்த துடுக்குதணம் பைரவிக்கு எப்போதுமே சந்தோஷத்தை தரும் ஆதலால் "சரி, நீயாச்சு உன் மாமாவாச்சு. சம்மந்தி!" என ஜெயவள்ளியை தேடி சென்றார். "உன் அக்கா எங்க?" "மாமா?உடனே கேட்டா நான் சொல்லிடுவேனா? எனக்கு முதல்ல பப்ஸ் வாங்கி கொடுங்க அதுக்கு அப்புறம் சொல்றேன்." தேவகி கேட்ட உணவை அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு "இப்பயாவது சொல்லேன் உன் அக்கா எங்க இருக்காங்கனு?" "மாமா சாப்பிட்டு இருக்கும் போது கேக்க கூடாது? பொறை ஏறும்ல. போய் தண்ணி பாட்டில் வாங்கிட்டு வாங்க." தேவகி மீண்டும் அவனுக்கு கட்டளையிட்டால். "இந்தா தண்ணி, வயிறார குடிச்சிட்டு அவை எங்கன்னு மட்டும் சொல்லு." "அட மாமா மொதல்ல குடிக்க விடுங்க மாமா. பிறகு சொல்றேன். அப்புறம் வெண்ணிலா ஃப்ளேவர் ஐஸ்கிரீமும் வாங்கி கொடுங்க. மார்கழி மாசம் வந்துருச்சுன்னா குளிர் அடிக்கும். அதோட, நான் யாருகிட்ட கேட்கனு நினைச்சுட்டு இருந்தேன் நீங்க சிக்கிட்டீங்க. எனக்கு ஒரே ஒரு வெண்ணிலா ஐஸ்கிரீம்.. வாங்கி கொடுப்பீங்களா?" இதற்கு அதிரூபன் எப்படி பதிலளிக்க என தெரியாமல் மனதில் 'குட்டிபிசாசு. நா தான் என் சானுவுக்கு புடவை சூஸ் பண்ண அவளை தேடுனா. அத்த இவளை கூட்டிட்டு போயிருந்திருக்கலாம். நா கெடுத்துட்டேன். ஹா! ஃபோன் பண்ணி பார்ப்போம்?' என அலைபேசியை எடுத்து அவளுக்கு அடிக்க என்ன "மாமா நீங்க இந்த மாதிரி அக்காவை தேடி கண்டுபிடிக்க போன் போடுவீங்கன்னு தெரிஞ்சு தான் அக்கா என்கிட்ட மொதல்ல ஃபோனை கொடுத்துட்டு போய் இருக்காங்களே! அவங்க போன் என் கையில் இருக்கிறது கூட தெரியாமல் இவ்வளவு நேரம் என் கூடவே இருந்து இருக்கீங்க. ஐயோ!! உங்களை நினைச்சா ரொம்ப மொக்கையா இருக்கு மாமா. ஐஸ்கீரிம்?" பிறகு தேவகிக்கு அவள் கேட்டதை வாங்கி தர "சரி இப்பயாவது உங்க அக்கா எங்க சொல்ல முடியுமா?" "மாமா ஐஸ்கிரீம் முழுசா ரசிச்சு,ருசிச்சு சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்றேன்." இதற்கு மேல் அதிருபனினால் பொறுமையை கடைபிடிக்க முடியவில்லை "அடியேய் தேவகி, நான் உன் அக்காக்கு புடவை வாங்கி கொடுக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டு இருக்கேன் தெரியுமா? எங்க அம்மா பாட்டுக்கு வேற ஒரு புடவ எடுத்து அது அவளுக்கு புடிச்சி போய்.. அதுவே கல்யாணத்துக்கு கட்டுனா எப்படி இருக்கும்? எனக்கு அது பிடிக்காது! இல்ல ஐ பீல் வெரி பேட்! அதனால என்னுடைய மனைவிக்கு நான் தான் புடவை வாங்கி கொடுப்பேன்! அதுக்கு நான் அவளை எங்க இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருந்தா.. நீ பப்ஸ் வாங்கி கொடுங்க, ஐஸ்கிரீம் வாங்கி கொடுங்கனு என்கிட்ட கட்டளையை அடுக்கிட்டே போற? போய் படிக்கிற வேலையை பாரு." என்றதும் "சாரி மாமா.. அக்கா மேல மூனாவது ஃப்ளோர்ல தனியா உங்களுக்காக காத்து இருக்காங்க. அதுவும் டிரையல் ரூம் பக்கத்துல. சோ, அங்க போய்க்கொங்க. அவங்க உங்ககிட்ட ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமா? நீங்க அவங்ககிட்ட எதுக்கோ கெஞ்சிகிட்டு இருக்கீங்களா? அத தருவதற்காக சரி இடம் தேடணும் அதுவரை நீ கொஞ்ச நேரம் உன் மாமாவை டிலே பண்ண வைனு சொன்னாங்க. மத்தபடி நான் வேணும்னே இதெல்லாம் பண்ணல எல்லாமே உங்க வைஃப் உடைய பிளான் தான்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றால் சானக்கியாவின் தங்கை. 'சானு ஐயம் கம்மிங்.' என நினைத்து கொண்டே தேவகி சொன்ன தளத்திற்கு வந்தவனின வழிபந்துகள் அவனின் வருங்கால இணையை தேடியது. திடீரென, அவனது கரத்தை பிடித்தவள் "ரூபன்! என்னோட வா ரகசிய இடம் வரைக்கும். அந்த இடத்தை பார்த்தால் உனக்கே புரியும் என பாட்டாக பாட." "சானு மொக்கையா இருக்குடி. எங்க தான் கூட்டிட்டு போற?" என மீண்டும் கேள்வி கேட்டான் "நீ கேக்குற இதழ்பூட்டை நா இந்த இடத்துல தான் கொடுப்பேன்." என உடை மாற்றும் அறைக்கு அவனோட அவள் அந்த நான்கு புறமும் கண்ணாடி அறையில் ஏதோ அதிசயத்தை கண்டெடுத்தது போல் "வாவ்! என்னால வெயிட் பண்ணவே முடியாது நீ எனக்கு இச்சு தா அப்படியே கொஞ்சம் பிச்சு தா." "கொஞ்சம் மட்டும் போதுமா ரூபன்?" இதற்கு மேல் அங்கு வார்த்தைகள் அனைத்தும் இடம்பெறவில்லை. அவர்களின் இந்த இதழ்பூட்டு நெடு நேரமாக நீண்டு கொண்டு இருந்தது.
****
"கல்யாண புடவை எடுக்கணும். இவளுக்கு புடவை காட்டுங்கள்." என ஜெயவள்ளி தன் மகளுக்கும் மருமகளின் தோழியான லான்ஸ்பேரிக்கும் புடவை எடுத்து கொண்டு இருக்கையில் மாதங்கி ஸ்கந்தனிடம் விழி வழியில் 'இது எப்படி? சொல்லு ஸ்கந்து?' என கேட்க 'என்ன டேஸ்ட் இது? நல்லாவே இல்ல வேற எடு.' என ஜாடையாக பதில் பேச "எனக்கு எதுக்கு ஆன்டி இந்த சேரிஸ்? நா லெகங்கா வாங்கிக்கிறேன். அதோட, நா ஒன்னு கேட்டா செய்வீங்களா?" என லான்ஸ்பேரி ஜெயவள்ளியிடம் பேச "சொல்லுமா என்ன கேட்கணும். எதுவானாலும் நாங்க செய்றோம்." என சிரிப்போடு கூறினார் பைரவி "அது ஆன்டி அங்க அந்த பொண்ணு என்னை போல வயிற்றில் குழந்தைய சுமக்குறா. பட், (ஆனா) அவள் எதுக்கு இரண்டு கை நிறைய பேங்கில்ஸ் (வளையல்கள்) போட்டிருக்கா?" "அது வந்து இங்க ஒரு சடங்கு. உன்ன போன்ற தாய்மையை அடைய போகும் பெண்கள் கை நிரம்பி வளையல் போடுறது எதுக்குனா குழந்தை அந்த சத்தத்தை கேக்கும், போது குடும்பம் ஒன்னு வரப்போகுது, அதுக்காக பல பொறுப்பு,கடமையும் சேர்ந்து வரப்போகுது அம்மாவுக்கு அந்த குழந்தையை பெத்தெடுக்க உனக்கு வர வலியை தாங்க உன் உடல்நிலை கோளாறு ஏற்பட்டால் இருக்க இந்த சீமந்தம் செய்யுறது வழக்கம்." என ஜெயவள்ளி பேசியதை கேட்டதும் "எனக்கும் அந்த சம்(சீ)மந்தம் செய்யணும். இப்படி பேங்கில்ஸ் போடணும்." என ஆசையாக கேட்கும் அந்த பெண்ணின் உணர்ச்சிகளை புரிந்து "கண்டிப்பா. இவங்க எங்கேஜ்மென்ட் அப்போ உனக்கு சீமந்தம் செய்யுவோம்." என பைரவி கூறினார். "ஐடியா நல்லா இருக்கு அப்படியே நம்ம செஞ்சுக்கலாம் ஆமா பொண்ணு மாப்பிள்ளை எங்க ஆளையே காணோம்?" என சுதாகர் கேட்க "ஆமா, தேவகி உன் மாமாவோட நீ தானே இருந்த? அவர் எங்க?" என கேள்வி எழுப்பும் ஜெயவள்ளியை பார்த்து "அது அக்காவை தேடி போயிருக்கார். இப்ப வந்துடுவாங்க" பைரவி பதறபோக அவளது கணவர், அவர்கள் இருவரிடமும் ஒரு பதட்டம். பின் மாதங்கி "நா அண்ணாவுக்கு ஃபோன் பண்ணி பார்க்குறேன்." என அதிரூபனுக்கு அழைக்க தங்கையின் அழைப்பில் தான் ஜோடிப்புறாக்கள் இருவரும் இதழ்பூட்டில் இருந்து வெளிவர "சொல்லு மாதங்கி?" "அ..அண்ணி உங்களோடு தான் இருக்காங்களா?" "ஆமா மாது என் கூட தான் இருக்கா. நாங்க உடனே அங்க வரோம்." என்றதோடு பெரியவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்ததும் தேவகி "அக்கா, மாமா உங்க இரண்டு பேரு உதட்டுல ரத்தம் எப்படி?" என கேட்கவும் பெரியோர்கள் அனைவருக்கும் ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. "எதுக்கு இவ்வளவு அவசரம் மச்சான்? நான் தான் உங்களை போல இருக்கணும். ஏனா, இன்னும் முப்பது நாள்ல காஷ்மீர் போயிடுவேன். என்ன பண்ண எனக்கு கொடுத்து வைச்சது அவ்ளோ தான்." என ஸ்கந்தனின் நக்கல் பேச்சு அவர்கள் இருவரையும் வெட்கத்திற்கு உள்ளாக்கியது. "சாணிக்காய்(சானக்கியா)க்கு வெட்கம் பொங்கி வருதே!! "லான்ஸ்பேரிக்கு வளைபூட்டு வைச்சே ஆகணும்." என சானக்கியா பேச அனைவரும் சிரிக்க மாதங்கி "அண்ணி நீங்க ரொம்ப லேட். ஆல்ரெடி நாங்க முடிவு பண்ணிருக்கோம். நாளும் குறிச்சாச்சு. நீங்க தான் ரொமான்ஸ் பண்ண போய்ட்டிங்க." இந்த பேச்சை கேட்க கேட்க சானக்கியாவின் வெட்கத்தை புகைபடமாக எடுத்தான் அதிரூபன். "சரி சரி போதும். புடவை எடுக்கலாம் வாங்க." என திருமணத்திற்கு புடவை எடுக்க அமர்ந்தார்கள்.
முத்தத்தில் வெட்கம் வருதே😍
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page