All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நெஞ்சம் 7

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 7

பைக்கில் வந்து நின்ற உதயனைக் கண்டு கிளம்பு எனக் கூறினாலும் அவன் அப்படியே இருக்கவே என்ன ஆயிற்று இவங்களுக்கு யோசித்தவாறு தான் நின்றாள் யுகனிகா.

அதே நேரம் அவளின் கைபேசி ஓசை எழுப்பியது. அதனை எடுக்க அவளின் தந்தையிடம் இருந்து வர , நடந்த அனைத்தையும் கூறினார். அதனால் தான் தன்னை உதயன் அழைக்க வந்திருக்கிறானா ? என நினைத்தவளோ, "சரிப்பா " எனக் கூறி அழைப்பினை துண்டித்து விட்டாள்.

"மரம் விழுந்துடுச்சி பஸ் ஊருக்கு போகாது அதனால நீங்க என்ன கூப்பிட வரீங்கன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருந்தா நான் வரப்போறேன். எதுக்கு அமைதியாகவே இருக்கிறீங்க ? ஆமா நான் எத்தனை தடவை உங்ககிட்ட ஹெல்மெட் போடுங்க ஹெல்மெட் போடுங்கன்னு சொல்லி இருக்கேன். ஒரு தடவையாவது நீங்க போட்டு இருக்கீங்களா உதயன் ? ஆனா இன்னைக்கு ஆச்சரியமா இருக்கு நீங்க ஹெல்மெட் போட்டது. இனிமே ஊருக்குள்ள வண்டி ஓட்டினாலும் சரி இல்ல இந்த சிட்டில ஓட்டினாலும் சரி ஹெல்மெட் போட்டு ஓட்டுங்க. நேரமாச்சு போகலாமா " என்றதும், அவனும் பைக்கை எடுக்கவே சரி என கூறி பின்னே ஏறி அமர்ந்தாள். பக்கவாட்டில் இருந்த பிடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். இருவருக்கும் இடையில் சில இடைவேளை இருந்தது.

உதயனாக இருந்தால் கூட அவள் தள்ளித்தான் அமர்ந்திருப்பாள். உதயன் என்று தான் அவள் நினைக்க, ' ஆஹா என்ன ஒரு அக்கறை ஹெல்மெட் போட சொல்ற. இவளை கல்யாணம் பண்ணிக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் ' என மனதுக்குள் நினைத்தவாறு தங்களின் முதல் பயணத்தை ஆரம்பித்தான்.

ஊரினை நோக்கிச் செல்ல எப்பொழுதுமே தன்னிடம் பள்ளி பற்றியோ அன்றைய நாள் பொழுது எப்படிச் சென்றது என்றெல்லாம் பேசிக்கொண்டே வருபவன் இன்று ஏன் அமைதியாக இருக்கிறான் ? எப்பொழுதுமே யுகனிகா அவளாக உதயனிடம் பேசியது கிடையாது. உதயன் பேசினால் மட்டுமே பேசுவாள். அப்படித்தான் அவளும். அமைதியாக வர ஆனால் இன்று ஏனோ வித்தியாசம் தென்பட்டது.

உதயன் ஆதி இருவருமே ஒரே உடல் அளவு தான் கொண்டவர்கள். என்ன ஆதி சற்று கருமை நிறம் உதயன் வெளிர் நிறம். முழுக்கை சட்டை மட்டும் போட்டிருந்ததால் உணராதுப் போனால் யுக. ஆனால் உதயனிடம் எப்பொழுதுமே சந்தனம் கலந்த நறுமணம் மட்டுமே வீசும். ஆனால் இன்று என்ன அந்த வாசனை வரவில்லையே ?ஒரு வேளை ரைஸ்மில்லிருந்து வருவதால் அப்படி தோன்றுமோ தனக்கு என எண்ணினாள்.

"என்னாச்சு உதயன் அமைதியாவே வர்றீங்க ?" என்றுக் கேட்கவே,

அவனோ ஒரு கரத்தினை மட்டும் முன்னே சாலையைக் காட்டி பைக் திறக்கினான்.

"இன்னைக்கு வாய் திறந்து பேசவே மாட்டீங்க போல. எனக்கு புரியுது மழை பெஞ்சதால ரோடு எல்லாம் சரியில்லாம இருக்கு. அதனால பார்த்து ஓட்டுறீங்கன்னு. அதை வாயை தொறந்து தான் சொல்ல வேண்டியது தானே ?"

அவனோ தன் கரங்களை மாட்டேன் என்று ஆட்டவே, " புதுசா ஏதோ விளையாடுறீங்க போல ?  சரி ஓகே நீங்களா பேசுற வரை நானும் பேச மாட்டேன் " என்றவள், அதன் பின் வேடிக்கைப் பார்த்தவாறே வந்தாள். அவள் அப்படியே வரட்டும் அதுவே தனக்கு நல்லது என நினைத்தான். 

ஆதி மிரர் வழியாக அடிக்கடி அவளைப் பார்த்தவாறு தான் இருந்தான். காலையில் எப்படி புத்தம் புது மலராகச் சென்றாலோ அப்படியே இப்பொழுதும் இருக்க அவளிடம் இருந்து வரும் வாசனை அவனின் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தது. காதில் ஆடும் அந்த முத்து வைத்த ஜிமிக்கி சத்தமில்லா ஆட்டம் சந்தோஷத்தின் அடையாளமாக அதுவும் சிணுங்கி கொண்டு இருந்தது. 

அரை மணி நேரப் பயணம் அன்று நாப்பது நிமிடப் பயணமாக மாறியது. இதே ஆதி மட்டும் தனியாக அந்த சாலையில் சென்றிருந்தால் பதினைந்து நிமிடத்திலேச் சென்றிருப்பான். அந்த வேகத்தில் செல்பவன் இன்று தன்னவளுக்காக மெல்ல வருகிறான். 

ஒரு வழியாக நேரம் சென்று அவளின் வீட்டு முன்னே வந்து இறக்கி விட இறங்கிக் கொண்டவளோ, "சரி நான் வரேன் " என அவன் தலையை மட்டும் அசைக்கவே,

" எங்க போறீங்க ? "என தடுத்தாள். 

'அய்யோ ! ஒருவேளை கண்டுபிடிச்சிட்டாலோ ' மனமோ நினைக்க,

"அங்கிருந்து இவ்வளவு தூரம் என்ன கூட்டிட்டு வந்தீங்க வீட்டுக்குள்ள வந்துட்டு போகலாம் இல்ல தண்ணியாவது குடிச்சிட்டு போங்க. அப்பறம் எங்க அப்பா நான் தான் உங்களை கூப்பிடலைன்னு சொல்லி என்னை திட்டிக்கிட்டு இருப்பார் வாங்க உள்ளக்க " என்று கூப்பிடவே அவனும் தனக்கு நேரம் ஆகிவிட்டது தான் செல்கிறேன் என்று சைகையிலே கூறினான்.

"பாப்போம் இப்படியே நீங்க எத்தனை தடவை தான் என்கிட்ட பேசுறீங்க அப்படின்னு. சரி பார்த்து போங்க " என்றவள் கேட்டினை திறந்து உள்ளே நடக்க, அவளை தன் கைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்தவனோ உதயனுக்கு அனுப்பி விட்டான்.

குறுஞ்செய்தியில் அவளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டேன் பார்த்துக்கொள் என அவளின் புகைப்படத்தோடு அனுப்பி விட்டான். தான் அவனுக்கு அழைத்து இப்பொழுது கூறினாலும் அவன் நம்பாமல் மறுபடியும் யுகனிகாவிற்கு அழைக்க வாய்ப்பு இருக்கிறது  அதனாலே இப்பொழுது டேட் அண்ட் டைம் வருவதுப் போல் அனுப்பி விடவே அவனும் ஓகே சிம்பிள் அனுப்பி விட்டான். பின் அங்கிருந்து கிளம்பிய ஆதிக்கு கரங்களோ அழுத்தத்தை கூட்டி மின்னல் வேகத்தில் செலுத்தினான். அவனின் மனமும் ஆனந்த துள்ளலில் இருந்தது. அவனின் கைகளை மீறித்தான் அந்த பைக் அப்பொழுதுச் சென்று கொண்டிருந்தது. 

இத்தனை நாட்களில் இந்த அளவுக்கு மகிழ்ச்சி கொண்டதில்லை. இதற்கு முழு காரணமும் அவள் அவள் மட்டுமே !அவளை சமாளிப்பது மிகப்பெரிய கடினம் என்பதையும் இந்த சில மணி நேரங்களில் புரிந்துக் கொண்டான்.  இவளை எப்படி தான் காதலிக்க வைப்பது தன் காதலை கூறினால் ஏற்றுக் கொள்வாளா எது எப்படியோ நினைத்த நேரங்களில் எல்லாம் தான அவளைப் பார்க்க முடியும் கடவுளே தனக்கு அவளிடம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எண்ணினான்.

அந்த வார இறுதியில் வீட்டில் காய்கறிகள் தீர்ந்து விட்டது வாங்கி வா என்று உதயனிடம் அவனின் அன்னை கூறி இருக்கவே சரியென வழக்கம் போல் ஒரு பையை எடுத்துக்கொண்டு விடுமுறை நாளான அன்று யுகனிகாவின் வீட்டிற்கு வந்திருந்தான். 

வீட்டில் வெளியே இருந்த திருனையில் அமர்ந்து நாளை பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் அதற்காக அவள் குறிப்பு எடுத்துக் கொண்டிருக்க உதயன் வருவதைக் கண்டதும் புன்னகைத்தாலே தவிர வாங்க என்று வாய் திறந்து அழைக்கவில்லை. எப்பொழுதுமே தன் வீட்டுக்குள் வந்தாலே இன்முகமாக வரவேற்பாலே இன்று என்னாயிற்று இவளுக்கு ? ஒரு புன்னகையுடன் நிறுத்தி விட்டாலே. ஒரு வேளை எதுவும் பிரச்சனையாக இருக்குமோ ? என நினைத்து அவளின் முன்னே வந்து நின்றான்.

"என்ன மேடம் ரொம்ப பிஸியா இருக்கீங்க போல கண்டுக்கவே மாட்டாங்க ? " என்க, 

"யாரு நானா நல்லா இருக்குங்க அன்னைக்கு நீங்க ஸ்கூல்ல இருந்து எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற வரைக்கும் நடுவில் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை என்கிட்ட. அப்பவே நான் சொன்னேன்ல நீங்களா பேசுற வரைக்கும் நான் பேசமாட்டேன் அப்படின்னு மறந்து போயிட்டீங்களா என்ன ? இப்ப வந்து ரொம்ப பிஸியான்னு கேக்குறீங்க ? அன்னைக்கு மௌன விரதமா இன்னைக்கு மட்டும் அந்த மௌன விரதம் இல்லையோ ?"  என்று அவனிடம் சகஜமாக கேட்டாள். உதயனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவனோ தன் நண்பனோடு இவளை அனுப்பி வைத்ததே மறந்து இருந்தான்.

"என்ன சொல்ற நீ எனக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது நான் எதுக்கு மௌன விரதம் எடுக்க போறேன் ?" என்றான்.

" அப்படியா அப்ப அன்னைக்கு நீங்க அமைதியா வந்தீங்க அதுக்கான காரணத்தை சொல்லுங்க இப்போ ? " என்றுக் கேட்கவே, 

"வாப்பா தம்பி நீ வருவேன் எனக்கு தெரியும்  அதனால தான் நான் காயை காலையில பறிச்சு வச்சுட்டேன். உங்க அம்மா எனக்கு போன் அடிச்சு தகவல் சொல்லுச்சுப்பா. நான் காயை எடுத்துட்டு வரேன். உள்ளக்க வாப்பா " என்று வெளியே வந்த பொன்னி கூற,

"இல்லம்மா இருக்கட்டும் நான் யுகனிகா கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் "  எனக் கூறி எதிரே இருந்த திருனையில் அமர்ந்தான். அவரும் எப்பொழுதும் போல் உள்ளேச் சென்று விட்டார்.

சற்று தன் மூளையை கசக்கி யோசித்த பின்னர் தான் அவனுக்கு தான் சென்னை செல்லும் போது இவளை ஆதியோடு அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்தது.  அந்த நொடி ஏன் இவள் தான் வந்ததாக கூறுகிறாள் புருவத்தை சுருக்கி யோசித்தான். 

"என்னாச்சு உதயன் ?"

"அன்னிக்கு நான் ஒன்னும் உன்னை கூப்பிட வரலையே. என் பிரெண்டு ஆதி தானே உன்னை கூப்பிட வந்தான்.  நீ என்ன என்னை சொல்ற ?" என்று நொடி அதிர்ச்சியோடு அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து விட்டாள்.

ஆதி எனக் கூறியதும் யார் என்றெல்லாம் ஞாபகம் வரவில்லை. ஆனால் வேறு ஒருவனோடு தான் வந்திருக்கிறோம் என்பது தான் அவளுக்கு அந்த நொடி அதிர்ச்சியே...

"அப்போ அன்னைக்கு ஹெல்மெட் போட்டது நீங்க இல்லையா ? அது உங்களோட பைக் தானே ? என்கிட்ட பேசாம அமைதியாவே வந்ததும் நீங்க தான் நான் நினைச்சேன் யார் ஆதி ?" 

'போச்சு இந்த தற்குறி இப்படி பண்ணி வச்சி இருக்கானா. அன்னைக்கு பிரச்சனை இல்லாம இவளை கொண்டு வந்து விடனும் ஏதோ பண்ணி தொலைஞ்சிட்டான். இப்ப நான் தெரியாத்தனமா வாயை வேற விட்டுட்டேனே. என்ன பண்ணலாம் வேற வழி இல்ல சொல்லி தொலைவோம் 'என நினைத்தவனோ, ஆதி யார் எனக் கூறவே அவளுக்கு முதல் சந்திப்பு அந்த பேருந்தில் வைத்து நடந்தது நினைவுக்கு வந்து விட்டது.

அது நடந்து எப்படியும் மூன்று நான்கு மாதங்கள் ஆவது இருந்திருக்கும். ஆனால் உதயன் கூறிய நொடியை அப்பட்டமாக தன் உள்ளத்தில் அந்தச் செயல் இப்போது நடந்ததுப் போன்று தன் விழிகளுக்கு முன் வரவே, ஒரு நொடி யுகனிகாவே அதிர்ச்சி தான் அடைந்தாள்.

"அவங்களா அவங்க கூடவா அன்னைக்கு நான் பைக்ல வந்தேன். இச்சே என்னை ஏமாத்திட்டான் ராஸ்கல்  என்னையும் ஒரு முட்டாள் ஆக்கிட்டான் " என்று பற்களை கடித்துக் கொண்டு அவனை வசைபாட,

"யுகனிகா கொஞ்சம் பொறுமையா இரு  எதுக்கு நீ அவன் மேல கோபப்படுற அவனே அதை மறந்துட்டான். அதே மாதிரி நீயும் மறந்துரலாம்ல அது ஏதோ தெரியாம அப்படி நடந்துப் போச்சு அதையே ஏன் மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். அன்னைக்கு அவன் தான் நானே போய் அவளை வீட்டில விட்டுருறேன் பத்திரமான்னு சொன்னான். அவன் நினைச்சா கோபத்துல என்னால முடியாதுன்னு சொல்லி இருக்கலாம். ஆனா அப்படி பண்ணலை "

"எனக்கு ஒன்னும் அவனோட உதவி தேவையில்லை. அவன் தான் வந்திருந்தான்னு தெரிஞ்சா நான் நடந்தே வந்திருப்பேன். உங்களுக்குத்தான் என்னை பத்தி நல்லாவே தெரியும்ல உதயன். எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. என்ன பொறுத்த வரைக்கும் அவன் ஒரு அன்னியன் தான்.  எங்களுக்கான முதல் சந்திப்பு அதுவே கடைசி சந்திப்பாவே இருக்கட்டும். அவன நான் பார்க்கவே விரும்பல. ஒரு சிலர் பார்த்தாலே பிடிக்காது அப்படித்தான் அவன் எனக்கு. இனிமே அவனை பத்தி எதுவுமே பேசாதீங்க. என் முன்னாடி வராமல் இருந்தாலேபோதும் " எனக் கூறி அங்கிருந்த தன் புக் நோட்ஸ் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

சிறிது நேரத்தில் பொன்னியும் பைநிறைய காய்கறிகளைக் கொண்டு வெளியே வர அதனை வாங்கியவனும் அதற்கான பணத்தினை கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று கூறினான். அவரும் சரி என்றதும் நேராக தன் வீட்டிற்குச் சென்று அந்த காய்கறிகள் பையை கொடுத்தவனோ ஆதிக்கு தான் அழைப்பு விடுத்தான்.

அவளிடம் தான் இந்த விஷயத்தை கூறவில்லை சரி தன்னிடமாவது ஒரு வார்த்தை இவன் கூறி இருந்தால் இப்பொழுது தான் இவளிடம் கூறாமல் இருந்திருக்கலாம். இந்த லூசு பையன வச்சுக்கிட்டு என்ன தான் பண்ணவோ புலம்பியவாறு அவனின் அழைப்புக்காக காத்திருந்தான்.

"என்னடா சொல்லு மச்சான் ?" என்க, 

"அன்னைக்கு யுகனிகாவை நீ வீட்டுக்கு கூட்டிட்டு போனா அப்போ ஹெல்மெட் போட்டு என்னை மாதிரி நடிச்சு தான் கூட்டிட்டு போயி அவள வீட்டுல விட்டையா. என் கூட வரேன்னு தான் அவன் நினைச்சுக்கிட்டு இருந்தான்னு உனக்கு தெரியுமா தெரியாதா ?"

"நல்லாவே தெரியும் அடிக்கடி உதயன் உதயன்னு உன் பேரை தான் சொல்லிக்கிட்டு இருந்தா அதுக்கு என்ன இப்போ ?"

'லூசு மாடு அதை நீ என்கிட்ட சொல்லி இருக்கணும்ல. நான் இன்னைக்கு அவ கிட்ட பேசும் போது இதை சொல்லி தொலைஞ்சிட்டேன். அவ உன் மேல கோவமா இருக்கா இன்னும் அந்த பழைய விஷயத்தை மறக்காமல் தான்டா இருக்குறா " எனக் கூறியநொடி அதிர்ந்து தன் நெஞ்சிலே கை வைத்து விட்டான் ஆதி நூலறுபட்ட பட்டம் போல் சுருங்கினான்.

 

தொடரும்...

 

கருத்துக்களை பகிர

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page