All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 13

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

நைட் லைஃப் - 13

இரவு மணி ஒன்றை தாண்டி இருக்க, அடர்ந்த வனம் போல் இருக்கும் நாற்பது ஏக்கர் தென்னந்தோப்பில் ஆறேழு ஆட்கள் கையில் பெரிய கத்தியுடன் ஓடிக் கொண்டு இருந்தார்கள். கிழக்கு திசையில் இவர்கள் தேட, வடக்கு திசையில் கையில் துப்பாக்கி உடன் ஐந்து வெளிநாட்டு அடியாட்கள் ஒரு பக்க தேடிக் கொண்டு இருந்தார்கள். தென்னந்தோப்பாக இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததனால் நிறைய முற்புதர்களும், செடிகளும் அங்கு ஆங்காங்கே வளர்ந்திருக்க ஒரு ஆளை அந்த இருட்டில் தேட அவர்களுக்கு கடினமாய் இருந்தது. தென் பக்கமாய் தோப்பின் கடை பகுதியை நோக்கி ஒருவன் உயிரை காத்துக் கொள்ள ஓடிக் கொண்டு இருந்தான். அங்கு இருக்கும் ஒரு மோட்டார் ரூம் பின்னே அமைதியாய் ஒளிந்துக் கொண்டான். நான்கு ஐந்து நாட்கள் சித்திரவதையினால் ஏற்பட்ட காயங்கள் அவன் உடம்பில் காய்ந்திருக்க சுவற்றில் சாய்ந்து மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தான். அவனை தேடி இரண்டு கும்பல் அலைகிறது. ஏற்கனவே அவனின் நாக்கை அறுத்து அவனை கொடுமை படுத்தியது மட்டும் இல்லாமல் மேலும் அவனின் உடலில் பல தீ காயங்களை உண்டாக்கி இருந்தார்கள். நேரம் கடந்துக் கொண்டே இருக்க இரு குழுவின் கண்ணிலும் சிக்காமல் தண்ணி காட்டிக் கொண்டு இருந்தான் அவன். தீடிரென்று வானில் ஒரு வானூர்தி சத்தம் கேக்க அனைவரும் அன்னாந்து பார்த்தார்கள். வானூர்தியை கண்டதுமே ஒளிந்து கொண்டு இருந்தவனுக்கு இன்னும் பயம் அதிகரித்தது. மீண்டும் எழுந்து எங்காவது ஒளிந்துக் கொள்ள ஓட ஆரம்பித்தான். 

 

தோப்பின் பின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தில் அந்த வானூர்தி தரை இறங்கியது. பல முறை வந்து போவது போல் அங்கு ஏற்கனவே இடத்தை ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள். தரை இறங்கியதுமே அதிலிருந்து ஐம்பது வயதுமிக்க ஒருவரும் முப்பது வயதுமிக்க ஒரு ஆடவனும் அதிலிருந்து இறங்கினார்கள். அந்த ஆடவன் இடத்தை ஒரு முறை சுற்றி பார்த்து, “இங்க தான் லிட்டில் மௌஸ் இருக்கா?” என்று கேட்க அந்த பெரியவர் இறுக்கத்துடன் தலையை அசைத்தார். 

 

“டேம்.. இந்த இடியட்ஸ் இன்னும் அவனை கண்டு புடிக்கலை..” என கோவமாய் கூறியவன் அவனின் கோட்டில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோப்பின் உள்ளே வேகமாய் ஓட ஆரம்பித்தான். அவன் பின்னே அந்த பெரியவர் நிதானமாய் நடந்து வந்தார். உள்ளே ஓடியவன் அவனின் போனை எடுத்து சமிஞ்சை வரும் இடத்தை நோக்கி வேகமாய் ஓட ஆரம்பித்தான். சுற்றிலும் கும் இருட்டாக இருக்க எதிரில் இருப்பவர்களை பார்க்கவே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் அவனுக்கு இருட்டு பழக்கப்பட்ட ஒன்றாய் இருக்க அவனால் அருகே இருப்பவர்களை உணர முடிந்தது. சமிஞ்சை காட்டிய இடத்திற்கு சென்றவன் சரியாக அவனின் லிட்டில் மௌஸ்க்கு எதிரே நின்றான். வாயை பொத்திக் கொண்டும் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தவன் எதிரில் நிற்பவனை கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான். அவன் வந்து முழுதாய் ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் தம்மை கண்டு பிடித்து விட்டானே என்று பயம் அவனுக்கு இன்னும் அதிகரித்தது. அவனின் முட்டை விழிகளை பார்த்து துப்பாக்கியால் முகத்தாடையை தேய்த்தவன், “லிட்டில் மௌஸ் ஐ காட் யூ” என்று சிறு பிள்ளை உடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் விளையாடுவது போல் கூறிட எதிரில் இருப்பவனுக்கு கதிகலங்கியது. 

 

“கம் ஆன், நம்ம கொஞ்சம் பேசலாமா குட் பாய்யா வா பாப்போம்” என்று சிறுவனை அழைப்பது போல் கொஞ்சலாக கூறினாலும் அவனின் முகம் நொடி பொழுதில் இறுகியது. கீழே இருந்தவனின் முடியை கொத்தாக பற்றி அவனை தர தரவென்று இழுத்து சென்றான். வலியில் அவனால் கத்த கூட முடியவில்லை. அவனை தர தரவென இழுத்துக் கொண்டு வர அந்த முதியவர், அவரின் ஆட்கள், பின் வெளிநாட்டை சேர்ந்த ரவுடி கும்பல் என அனைவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். வானூர்தி நிறுத்தப்பட்டு இடத்திற்கு அவனை இழுத்து வந்தவன் தரையில் மண்டி போட வைத்தான். ‘லிட்டில் மௌஸ்’யின் முடியை அழுத்தி பிடித்து தன்னை பார்க்க செய்தவன், அவன் முகத்தருகே நெருங்கி, “யூ ஆர் மைன்.. மை ஸ்லேவ் உன்னோட மாஸ்டரையே எதிர்த்து இவ்வளவு தூரம் வந்துட்டில்ல..” என்று கேட்டவன் இளக்காரமாய் சிரித்தான். அவன் சிரிப்பில் ஆத்திரம் நிறைந்து இருந்தது. சுற்றி இருப்பவர்களுக்கு அவன் சிரிப்பே பயத்தை கொடுத்தது. அவன் விடையத்தில் யாரும் தலையிட்டால் அவனுக்கு பிடிக்காது என்று அறிந்தவர்கள் அமைதியாய் வேடிக்கை பார்த்தார்கள். 

 

“நான் உன்ன என்னவோ நினைச்சேன்.. ஆனா தம்மா துண்டு இருந்துட்டு நீ என்ன என்ன வேலை பார்த்து இருக்க.. ஹான்.. லிட்டில் மௌஸ் யூ டேர் டு கோ அகைன்ஸ்ட் மீ..” என்று பல்லை கடித்துக் கொண்டு கூறியவன் அவனின் முடியை விட்டு தன்னை கட்டுப்படுத்த பார்த்தான். ஆனால் மண்டியிட்டு இருந்தவன் அவனையே தைரியமாய் நிமிர்ந்து பார்க்க அது அவனுக்கு சுருக்கென்று கோவத்தை கொடுத்தது. பளார் என்று அறை விட அந்த ஆடவனின் உதடு கழிந்தது. தரையில் பொத்தென்று விழுந்தாலும், முதலாளிக்கு விசுவாசமாய் மீண்டும் எழுந்து மண்டியிட்டான். அதில் திமிராக சிரித்தவன் துப்பாக்கியால் அவனின் நெற்றியை தேய்த்தான்.

 

“கம் ஆன், என்ன இன்னும் கோவப்படுத்தாம நான் கேக்குறதை குடுத்துரு.. அது தான் உனக்கு நல்லது” என மீண்டும் சிறு பிள்ளையிடம் இருந்து விளையாட்டு பொருளை கேட்பது போல் கேக்க மண்டியிட்டு இருந்தவன் மறுப்பாக தலையை அசைத்தான். இவ்வளவு தூரம் கொடுமை படுத்தியும் தைரியமாய் முடியாது என்கிறானே என அவனுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. 

 

“நோ? லிட்டில் மௌஸ் என் கிட்ட அந்த பதில் சொல்லவே கூடாது” என சிரிப்புடன் கூறியவன் மண்டியிட்டு இருந்தவனின் வலது தோள்பட்டையில் சுட்டான். அதில் அலறினான் அவன். சுடு பட்ட இடத்தை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டவன் வலியில் அழுகை உடனே கத்தினான். எள்ளலாக அவனை பார்த்தவன் அவனின் முகத்தை காலால் திருப்பி, “லிட்டில் மௌஸ் இந்த டிராமா எல்லாம் எனக்கு புடிக்காது.. ஒழுங்கா சொல்லு.. உன்ன கொல்லுறது மட்டும் என் வேல இல்ல” என்றிட அவை எல்லாம் அவன் காதில் விளைவே இல்லை. வலியில் துடித்துக் கொண்டு இருந்தான். அவன் இன்னும் எழாமல் இருப்பதை கண்டவன் மீண்டும் அவனின் முடியை கொத்தாக பற்றி மண்டியிட வைத்தான். “கொடுத்துரு லிட்டில் மௌஸ், மாஸ்டர் சொன்னா நீ கேக்கணும்” என்று அவனின் தலையை தடவி கொடுத்தான். வலியை பொறுத்துக் கொண்டு அவனின் மாஸ்டர் விழியை பார்த்து மீண்டும் மறுப்பாக தலையை அசைக்க அந்த கொடுங்கோலன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. துப்பாக்கியை அவனின் கோட்டின் உள்ளே வைத்தவன் பின்னே இருக்கும் அவனின் ஆட்களை கண்டு, “இவன் கிட்ட செக் பண்ணிங்களா இல்லையா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவர்கள் சம்மதமாய் தலை அசைக்க அவனின் லிட்டில் மௌஸ் பக்கம் திரும்பி அவனின் முகத்தாடையை இறுக்கி பிடித்தான். 

 

“அப்போ உன் கிட்ட அது இல்ல.. அப்போ நீ ஏன் இருக்கணும்” என்று லேசான சிரிப்புடன் கூறி அவனின் பாக்கெட்டில் இருந்து சிறிய கத்தி ஒன்றை எடுத்தான். அவனின் லிட்டில் மௌஸ் கையில் அந்த கத்தியை கொடுத்து அழுத்தமாய் அவனை பார்த்தான். 

 

“எனக்காக நீ என்ன என்னவோ பண்ணிட்ட.. இப்போ எனக்காக செத்துரு..” என புன்னகை முகமாகவே கூறினான். அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு தான் இவன் சைக்கோவா என்ற குழப்பம் உண்டானது. லிட்டில் மௌஸ்சின் கையில் இருக்கும் கத்தியை அவனின் கழுத்தை நோக்கி கொண்டு செல்ல அவனோ அவனை கொல்ல விடாமல் தடுக்க பார்த்தான். மண்டியிட்டு இருந்தவனின் தலையை ஒரு கையால் பிடித்தவன் மறு கையால் அவனின் கையில் இருக்கும் கத்தியை அவனின் தொண்டையில் இறக்க ரத்தம் இவன் முகத்திலும் தெரித்தது. அப்படியே அவனை தள்ளி விட லிட்டில் மௌஸ்ஸின் உடல் தரையில் பொத்தென்று விழுந்தது. இருந்தும் அந்த கொடுங்கோலனுக்கு ஆத்திரம் குறையவே இல்லை. அவனின் துப்பாக்கியை எடுத்து ஆறு முறை இறந்து கிடந்தவனின் உடலில் சுட்டான். 

 

அவனுக்கு பின்னால் இருப்பவர்கள் வாயை பிளந்துக் கொண்டு அவற்றை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் இது வரை கொலை செய்து இருக்கிறார்கள் தான்.. ஆனால் இந்த அளவிற்கு வெறித்தனத்துடன் கொலை செய்பவனை இப்பொழுது தான் நேரில் பார்க்கிறார்கள். அந்த முதியவருக்கு வேர்த்து கொட்டியது. கோவத்துடன் அந்த முதியவர் பக்கம் திரும்பியவன், “இவன எரிச்சிடுங்க, போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கூட கிடைக்க கூடாது.. இப்படி ஒருத்தன் சாவு வெளியவே தெரிய கூடாது.. தப்பா ஏதாவது நடந்துச்சு அப்பறம் இவன் நிலைமை தான் உங்களுக்கும்” என்று மிரட்டி விட்டு வானூர்தியில் அவன் மட்டும் ஏறி கிளம்பினான். அவனின் எண்ணம் எல்லாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலே ஓடிக் கொண்டு இருந்தது.

 

“ஐயா இவன இங்கயே எறிச்சரலாமா?” என்று ஒரு அடியாள் அந்த முதியவரிடம் கேக்க, அவரோ அவனை பயங்கரமாய் முறைத்து, “புத்தி இல்லாதவன் மாதிரி பண்ணாத.. இது என்னோட இடம்.. நால பின்ன பிரச்சனை ஆச்சுன்னா நான் மாட்டுறதுக்கா.. ஊருக்கு வெளிய போய் இவன எறிச்சுருங்க” என்று உத்தரவாக கூறியவர் தோப்பின் வெளியே சென்றார். அவரின் அடியாட்கள் எல்லாம் சடலத்தை தூக்கிக் கொண்டு சென்றார்கள். பிரச்சனை இத்துடன் முடிந்தது என்று அவர்கள் நினைக்க அவர்கள் அஜாக்கிரதையினால் தான் இனி பிரச்சனை வெடிக்க போகிறது என்று தெரியாமல் இருந்தார்கள். 

 

மார்கழி மாதத்தில் விடியற் பொழுதில் பனி இறங்க குளிரில் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு சொகுசான மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஒருவன். அவனின் நிம்மதியான தூக்கத்தை அவனின் போன் கலைத்தது. யார் என்று அரை தூக்கத்திலே அவன் பார்க்க ஃபாரின் எண்ணில் இருந்து அழைப்பு வரவும் உடனே வேகமாய் எழுந்து அமர்ந்தான். 

 

“ஹலோ, சொல்லுங்க சார்..” என்று கேக்க, அழைப்பின் எதிர் புறத்தில் இருந்தவன், “நான் சொன்ன தேதியில எனக்கு சரக்கு வந்தே ஆகணும்.. அதுக்கான வேலைய பாக்க ஆரம்பி” என்று ஒரு வாக்கியத்துடன் அழைப்பை துண்டித்தான். கட்டளை வந்ததுமே வேலையை இன்று துவங்க நினைத்தான். 

 

அங்கு வீட்டில் மித்திரனும் ராகவ்வும் இந்த கேஸ் சம்பந்தப்பட்டு அனைத்து கோப்புகளையும் விரித்து வைத்து தீவிரமாய் பேசி கடைசியில் மிக முக்கியமான ன்றை கண்டு பிடித்தார்கள்.  


   
ReplyQuote

You cannot copy content of this page