About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 6
நாட்கள் ஒவ்வொரு நாளும் வண்ணங்கள் போன்று கடந்து கொண்டே இருக்க ஆதியின் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டாள் யுகனிகா.
அவனை ஒரு முறை தான் பார்த்திருந்தாள் அவள். ஆனால் ஆதியோ அவளை எண்ணிலடங்காத முறை இது வரை பார்த்து விட்டான். தினமும் பள்ளிக்குச் செல்லும் போது வரும் போது அவளின் வீட்டினை தாண்டி செல்லும் போது, விடுமுறை நாட்களில் அவள் தோட்டத்தில் வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, கோவிலுக்குச் செல்லும் நொடி இப்படி அவள் எங்குச் சென்றாலும் ஆதியின் விழிகளோ அவளைத்தான் சுற்றியே வந்தது. ஆனால் என்ன அவள் முன்னே சென்றது அவன் ஒரு பொழுதும் நிற்கவில்லை.
நாட்கள் கடந்தால் நிச்சயம் தங்களின் முதல் சந்திப்பு அவளுக்கு ஓரளவு மறந்து விடும். அதன் பிறகு அவளிடம் தன் காதலை கூறி காதலிக்க வைக்கலாம் என நினைத்தே விலகி இருந்தே ரசித்து வந்தான்.
அவளின் குணம் பண்பு அனைத்துமே இந்த சில நாட்களில் கண்டு விட்டான். தித்திக்கும் தேன் மலராய் அவள் இருக்க வண்டாய் உருவெடுத்து அவளில் தொலைத்து மாறிவிடத்தான் உள்ளம் துடித்தது.
திருமணம் செய்தால் இவளைத்தான் திருமணம் செய்வேன் என்ற அளவுக்கு அவனோ வந்து விட்டான். அவன் யுகனிகா பின்னே சுற்றும் விஷயம் மற்றும் யாவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
யாருக்காவது தெரிந்து பிரச்சினை வரக்கூடாது சுகமாக தங்களின் காதல் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆதி இருக்க, அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்பதை வருங்காலத்தில் விதியும் அவனுக்கு உணர்த்தியது.
உதயனின் ரைஸ்மில்லில் இருந்த கயிற்று கட்டிலில் வெளியே படுத்தவாறு விட்டத்தைப் பார்த்து யுகனிகாவோடு கனவு உலகில் இருந்தாள் ஆதி.
தோப்பு வேலை, பண்ணை வேலை இளைஞர் பட்டாளம் கொடுக்கும் வேலைகள் இப்படி அவனுடைய வேலைகள் எல்லாம் முடித்து விட்டு ஆதி மற்ற நேரங்களில் எல்லாம் உதயனோடு தான் எந்த நொடியும் இருப்பான்.
அதேபோல் தான் உதயன் டிராவல்ஸ், சுகர் பேக்டரி, ஜவுளிக்கடை என்று அவனின் தொழில்களையும் வெற்றிகரமாக பார்த்துக் கொண்டாலும் மற்ற நேரங்களில் ஆதியோடு தான் இருக்க விரும்புவான். அவன் உயிராக நேசித்த இருவர் ஒருவன் ஆதி இன்னொருவன் இவ்வுலகில் இல்லை. இருந்தாலும் அவனின் அன்பு என்றுமே மாறாத ஒன்று தான். அதனை யாராலும் ஈடு கொடுக்க முடியாது.
இவர்கள் இருவர் பார்க்கும் தொழிலுக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் ஒருவருக்கொருவர் வேலை சம்பந்தமாகப் பகிர்ந்து கொள்வார்கள். கணக்கு வழக்குகளை எல்லாம் முடித்துக் கொண்டு தன் கைபேசியை நோண்டியவாறு ஆதி படுத்திருந்த அந்த கயிற்றுக் கட்டிலில் வந்து அமர்ந்தான் உதயன். அவன் வந்ததும் அருவம் உணர்ந்து எழுந்து அமர்ந்தான்.
"என்னடா ஏதோ பலமான சிந்தனையில இருக்கே ? விட்டத்தை பார்த்து யோசிச்சிட்டு கிடக்க. முகம் வேற பிரகாசமா இருக்கே என்னடா விஷயம் ?" என்றுக் கேட்கவே,
இவனுக்கு தெரிந்த பெண் என்றாலுமே தன் காதலை தன் நண்பனான உதயனிடம் அப்பொழுது கூற வேண்டாம் என நினைத்திருந்தான்.
"ஒன்னுமில்லையே சும்மா தான் " என்க, இன்னும் சில நாட்களில் அறுவடை இருக்க அதைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.
அப்படியே நேரம் செல்ல உதயன் கைபேசி ஓசை எழுப்பியது. அதில் யுகனிகாவின் தந்தை உத்தமன் தான் அழைத்திருந்தார்.
"இவரா இவர் எதுக்கு சாயங்கால நேரம் என்ன கூப்பிடுறாரு ? என்ன விஷயமா இருக்கும் ? " எனக் கேட்டவாறு திரையைக் காண, அதைக் கேட்ட ஆதியோ, "யாருடா அது?" என்றான்.
"தெரிஞ்சவங்க தான்டா அன்னிக்கு கூட நீ பஸ்ல ஒரு பொண்ணு கிட்ட சண்டை போட்டேல. அவளோட அப்பா தான் " எனக் கூறி அழைப்பினை எடுத்தான்.
"ஹலோ சொல்லுங்கப்பா " என்க,
"ஆஹா நம்ம மாமனார் தான் பேசுறாரு போல. இவனுக்கு அப்பாவா அப்பா நமக்கு முறை தான் வேணும் ஏதோ ஒன்னு. எப்படியோ சுத்தி புத்தி இப்ப சொந்தமாகியாச்சு " என குதூகலமாக மனதிற்குள் ஆதி நினைத்துக் கொண்டிருக்க,
"அப்படியாப்பா சரி. நான் ஒரு அரை மணி நேரத்துல கிளம்பிடுவேன். வெயிட் பண்ண சொல்லுங்க. நான் பத்திரமா கூட்டிட்டு வந்துடுறேன் நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் பார்த்துக்குறேன் வச்சிருறேன் " எனக் கூறி அழைப்பினை துண்டித்தான்.
"என்னடா என்ன விஷயம் கூட்டிட்டு வர சொல்றாரு போல ?" என்றுக் கேட்கவே,
"ஆமாடா அவர் பொண்ணு இங்க நம்ம ஸ்கூல்ல தான் இருக்கா. இன்னைக்கு நம்ம ஊருக்கு பஸ் போகாதாம். ஏதோ காத்து அடிச்சதுல ரோட்டுல மரம் விழுந்துடுச்சாம். பைக் மட்டும் தான் போகுது இப்ப தான் தகவல் அவருக்கு தெரிஞ்சிருக்கும் போல. அதான் பாப்பா அங்க இருக்கா ஸ்கூல்ல விட்டு வரும் போது நீ கூட்டிட்டு வந்திருப்ப, எப்படி நீ ஊருக்கு இங்க வரத்தானே செய்யணும் அப்படின்னாரு. நானும் சரின்னு சொல்லிட்டேன். இன்னும் அரை மணி நேரம் இருக்கு ஸ்கூல் முடிய. அதுக்கப்புறம் போவோம் " என கூறி முடிக்கும் முன்னரே மறுபடியும் அவனின் கைப்பேசி ஓசை எழுப்பியது. இப்பொழுது உதயனின் தந்தையிடமிருந்து வந்தது.
"சொல்லுங்கப்பா " என்கவே,
'இவன் ஒருத்தன் எல்லாத்தையுமே அப்பா அப்பான்னு சொல்றான். மரியாதையாக பேசுறான் தான் இப்படி எல்லாத்தையும் அப்பான்னு சொன்னா பார்க்குறவன்லாம் என்ன நினைப்பாங்க ' என அதி தீவிரமாக யோசனை செய்வது போல் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தான்.
தந்தையிடம் பேசி முடித்து வைத்த உதயனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அங்கும் இங்கும் சில நொடி நடந்துவாறு இருக்கவே, 'என்ன ஆச்சு இவனுக்கு குட்டி போட்டு பூனை மாதிரி அங்கிட்டு இங்கிட்டும் எதுக்கு இப்படி சம்மந்தமே இல்லாமல் நடந்துக்கிட்டு இருக்கான் ' என நினைத்தவனோ அதை அவனிடமிருந்து கேட்டான்.
"டேய் திடீர்னு அப்பா இங்க இருந்த மாதிரியே சென்னைக்கு கிளம்ப சொல்றாருடா. அங்கு ஏதோ மிஷின் ஒன்னு புதுசா லாஞ்ச் பண்ணி இருக்காங்களாம். அதை போய் விசாரிச்சுட்டு வர சொல்றாரு. ஊருக்குள்ள பஸ் வராது நீ வீட்டுக்கு வந்துட்டு போக முடியாது இங்கிருந்த மாதிரியே போகவாம் "
"சரி நைட்டு தான் பஸ் இருக்குல. நீயே டிராவல்ஸ் பஸ் தானடா நடத்துற உன் கிட்டயும் அவ்வளவு பெருசா இருக்கும் போது உனக்கு என்னடா பிரச்சனை ?" என்றுக் கேட்கவே,
"மறந்துட்டியா இப்ப தான் யுகனிகாவை அவளோட வீட்டுல விட சொன்னதும் சரின்னு சொல்லி அவ அப்பாகிட்ட ஒத்துக்கிட்டேன். இப்ப நான் போகணும்னா அவள போய் வீட்டுல வேற விடனும். நான் என்னடா பண்ணுவேன். ஒரே நேரத்தில் இரண்டு வேலை. இப்ப நான் அவளை கூட்டிட்டு போய் வீட்டுல விட்டு திருப்பி நான் வீட்டிலிருந்து இங்கே வரதுக்குள்ள என்னோட டிராவல்ஸ் பஸ் எல்லாம் கிளம்பி போயிரும். அதான் என்னன்னு ஒரே யோசனையா இருக்குடா " என்று புலம்பி கொண்டு இருந்தான்.
ஆதியின் மனமோ, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா !' என்ற நினைப்பில் தான் தலையைச் சற்று சாய்ந்து சந்தோஷத்தில் நினைத்து துள்ளிக் கொண்டிருந்தான்.
' ஆகா நமக்கு தானா வாய்ப்பு கிடைக்க விடக்கூடாது ' என நினைத்தவனோ,
"இது தான் உன் பிரச்சனையா ?நான் வேணா ஹெல்ப் பண்றேன். நீ உங்க அப்பா சொன்ன மாதிரியே சென்னைக்கு போயிரு. நான் எப்படியும் நம்ம ஊருக்குத்தான் போகணும். கூட்டிட்டு போறேன் "
"டேய் உனக்கும் அவனுக்கும் ஏற்கனவே ஆகாது நீ அவளை பார்த்தாலே எரிஞ்சு வேற விழுகுவே. அவளும் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டா ஏதாவது பேசுவா உங்களுக்குள் சண்டை வரும் "
"மச்சான் அதெல்லாம் என்னைக்கோ எப்போவோ நடந்தது. இன்னுமாடா அதை நான் நினைச்சுக்கிட்டு இருக்கப் போறேன். அதெல்லாம் தூசி மாதிரி தட்டி விட்டேன்டா. உனக்கு பிரெண்டுன்னா அவ எனக்கும் பிரெண்டு மாதிரி தான். கவலைப்படாதே உனக்கு வேணா கால் பண்ணி சொல்றேன் நம்பலைன்னா வீடியோ கால்ல கூட வா " என்க,
"நீ என் பெஸ்ட் பிரெண்டுடா உன்ன நம்பாம நான் இருப்பேனா. ஆனா அவன் எப்படி உன் கூட வருவா. அது தான் இப்ப ஒரு பெரிய யோசனையாவே இருக்கு "
"அவளுக்கு இப்ப வேற வழி இல்ல. நம்ம ஊருக்கு போகணும்னா இங்க இருந்து நம்ம ஊருக்கு நடந்தே போனா நடுராத்திரி தான் வந்து சேருவா அதுக்கு நான் பக்குவமா கூப்பிடுறேன். அன்னைக்கு நடந்தது தப்பு என் மேல தான் அப்படின்னு சொல்லி நான் மன்னிப்பு கூட கேட்டுக்குறேன் போதுமாடா. அதை பத்தி நான் பேசவே மாட்டேன். அவ பேசினா சாரி கேட்கிறேன். இப்பவாவது நான் அவளை கூட்டிட்டு போய் விடவா. நீ உன் வேலையை பார்க்குறியா " என்றதும் நண்பனின் தோளில் தட்டியவனோ, "நண்பன்டா நீ " என்றான்.
நேரங்கள் கடக்கவே உதயனின் பைக்கை எடுத்துக் கொண்டான் ஆதி.
"டேய் உன்னோட பைக் இங்க தான்டா இருக்கு இப்போ அதை எடுத்துட்டு போறேன். ஏன் பைக்கை நான் நாளைக்கு வந்து எடுத்துக்கிறேன்டா. புல்லட்டில போனா தான் செட் ஆகும். நான் இதிலேயே போறேன் " எனக் கூறியவனோ நேரம் ஆகிவிட்டதால் யுகனிகாவை அழைக்க பள்ளியை நோக்கிச் சென்றான்.
பதினைந்து நிமிடப் பயணத்திற்கு பிறகு ஆதியின் பள்ளியின் முன் வந்து நிற்க அந்த நொடி தான் சரியாக மாணவர்கள் எல்லாம் வெளியேச் சென்றவாறு இருந்தனர்.
பள்ளிக்கு முன் தான் பேருந்து நிறுத்தம் எப்படியும் பேருந்து நிலையத்திற்கு அவள் வரவேண்டும் என்பதால் அந்த கேட்டின் வாசலிலே சில நிமிடங்கள் காத்துக் கொண்டிருக்க, ஹேண்ட்பேக்கினை போட்டுக்கொண்டு கையில் இரண்டு மூன்று நோட்டுகளை வைத்தவாறு நடந்து வந்தாள் யுகனிகா.
சேலை, சுடிதார், ஸ்கர்ட் என்று அவள் உடுத்தும் உடைகள் அனைத்துமே அவளுக்கு அப்படியே பொருந்து இருக்க மார்டன் உடையில் எப்படி இருப்பாள் ? என மனக்கணக்கில் நினைத்துவாறு இருக்க, அவளோ அவளை கண்டு கொள்ளாது பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல தாண்டியே சென்று விட்டாள்.
ஹாரன் ஓசை ஒன்றில் தலையை சிலுப்பியவனோ பள்ளிக்குள் காண அவளோ அங்கு இல்லை.
'என்னது இது அதுக்குள்ள மாய மந்திரம் மாதிரி காணாம போயிட்டா ' என திரும்பி சுற்றிப் பார்க்கவே, தன்னை தாண்டி செல்வதைக் கண்டவனோ 'நல்ல வேளை இங்க தான் போய்க்கிட்டு இருக்கா புடிச்சிரலாம் '
நினைத்தவனுக்கு அப்பொழுது தான் ஒரு யோசனை வந்தது.
இப்பொழுது தான் சென்று அவளிடம் ஊருக்கு வா என கூறினால் வர மாட்டாள் நடந்தே வருவாளே தவிர தன்னோடு பைக்கில் அவள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் முன்னே இருந்த ஹெல்மெட்டை எடுத்து தன் மண்டையில் மாட்டி விட்டான்.
'டேய் ஆதி ஊர் போய் சேருற வரை அவ கிட்ட ஒரு வார்த்தை கூட நீ பேசாதே. நீ பேசிட்ட அப்பறம் நீ உதயன் இல்ல ஆதின்னு அவ கண்டு பிடிச்சிருவா. அதனால எப்படியாவது வாயை கட்டிட்டு அமைதியா வாடா. அவ கூட நீ டிராவல் பண்ற ஃபர்ஸ்ட் பைக் டிராவல் என்ஜாய் பண்ணுடா ' என மனதிற்குள் நினைக்க, பேருந்து நிறுத்தத்தின் ஓரம்
நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளின் முன்னே பைக்கில் வந்து நிற்கவே, இப்பொழுது எல்லாம் அவளுக்கு நன்றாக பழகி விட்டது உதயனின் பைக் ஓசையும் நம்பர் பிளேட்டும் அது உதயன் தான் என்பதை உணர்ந்தாள். ஆனால் திடீரென அவன ஏன் ஹெல்மெட் போட்டுக் கொண்டு இருக்கிறான் ? யோசித்தவாறு நின்றிருக்க,
'அய்யோ இப்ப எதுக்கு நான் வந்து நினைக்கிறேன்னு காரணத்தை சொல்லணுமே. வாய் வேற துறக்கணுமா. அந்த லூசு பையன் வாய்ஸ் நமக்கு வரவே வராது. இப்ப என்ன பண்ண ?' என யோசித்தவன் அவளிடம் கரங்களை காட்டி தன் பின்னே ஏறு என்று சைகையால் கூறினான்.
ஏன் உதயன் இவ்வாறெல்லாம் செய்கிறான் ? புரியாது குழம்பி போய் நின்றாள். அவள் உதயனின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்க அந்த மரியாதை தான் அவளால் அவனிடம் எரிச்சலோ கோபமோ கொள்ள முடியவில்லை.
"இல்ல பஸ் வந்துரும்ல நான் பஸ்ஸில வந்துக்கிறேன். நீங்க போங்க " அவன் ஊருக்குத்தான் செல்ல நினைக்கிறான் அதனாலே தன்னை அழைக்கிறான் என நினைத்து அவளாகவே கூற,
அவனோ தன் தலையின் அடிக்கிறேன் என நினைத்து ஹெல்மெட்டின் மீது அடித்துக் கொண்டான். அதைக் கண்டு இவளோ சிரிக்க, அவளில் அந்த பற்கள் சிப்பியில் இருந்து விரியும் முத்துக்கள் போன்று தான் வெண்பற்கள் காட்சிக் கொடுத்தது. அதுவும் லேசாக காதோரம் இருக்கும் அந்த கருமை மச்சம் அவளின் பால் வண்ண தேகத்துக்கு திருஷ்டி பொட்டாகத்தான் காட்சியளித்தது.
"என்ன ஆச்சு ஏன் நிக்கிறீங்க ? நீங்க போங்க " என்க,
'இவளை எப்படியாவது அழைத்துச் செல்ல வேண்டும் எப்படி ' என்று யோசித்தவாறே இருந்தான்.
தொடரும்...
படித்து விட்டு தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி ேட்டுக்கொள்கிறேன்.
Latest Post: " உயிருள்ளவரை யான் உனதே!" Our newest member: Aruna Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page