About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 2
"நீ கிறுக்கு பையன்னு சொன்னது எனக்கு நல்லாவே கேட்டுச்சு.. தற்கொலை பண்ணிக்க டிரை பண்ணின உன்ன காப்பாத்தலாம்ன்னு வந்ததுக்கு.. அப்படியே போய் சேருன்னு விட்ருக்கணும்.. ஹெல்ப் பண்ண வந்து உன்கிட்ட பேச்சு வாங்குறேன் பாத்தியா.. என் கிரகம்" என்று புலம்பியவனை கண்டு அதிர்ந்து விழித்தவளோ,
"நிஜமாலே கிறுக்கு தான் போல" நினைத்துவிட்டு, அவனிடம் "ஹலோ மிஸ்டர் ஆர்வகோளாறு.." என்று அழைத்தவளை,
தன் புருவம் அசைத்து ஏற இறங்க பார்வை பார்த்தவனோ "ஆதிரன்.." என்று கெத்தாக தன் பெயரை கூற,
"ம்க்கும்.. இவன் பண்ணின கேன தனத்துக்கு.. இந்த கெத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று நினைத்து சலித்தவளோ "ஓகே மிஸ்டர் ஆதிரன்.. உங்க நல்ல உள்ளத்தை நான் பாராட்டுகிறேன்.. அதே சமயம் காண்டாமிருகம் போல உடம்ப வளத்து வச்சிருக்கிற நீங்க கொஞ்சமாச்சும் அறிவ வளத்துருந்தா.. தற்கொலை பண்ணிக்க போறவ எதுக்கு கைல கேமராவோட சாக போறான்னு யோசியிருக்கலாம்" என்று அவன் தன்னை இழுத்ததில் தன்னிடமிருந்து கீழே விழுந்து கிடந்த கேமராவை பார்வையால் பார்க்கும்படி காட்டி கூற,
அதைக் கண்டவனோ "அய்ய.. அப்போ அவ தற்கொலைக்கு முயற்சி பண்ணலயா.. நம்ம தான் தப்பா புரிஞ்சிக்கிட்டோமோ.. கொஞ்சம் நிதானமா பேசிருக்கலாம்" என்று சிந்தித்து கொண்டிருந்தவனின் மனசாட்சியோ "இதெல்லாம் அவள அடிக்கிற முன்னாடியே யோசிக்கிருக்கணும்.. அதுலயும்.. உன் பேர சொல்லி வேற வான்டடா நீயா அசிங்க பட்டுக்கிறியே" என்று கூறி நக்கல் செய்ய,
அதில் கடுப்பானவன் "நீ எனக்கு தான மனசாட்சி.. அவளுக்கு சப்போட் பண்ற.. ஏற்கனவே பயங்குற காண்டுல இருக்கேன் மூடிட்டு இருந்துரு பாத்துக்க" என்று தன் மனசாட்சியை அடக்கி கொண்டிருந்தவனின் முகத்திற்கு நேரே சொடகிட்டு "ஹலோ மிஸ்டர் ஆர்வகோளாறு.. சாரி சாரி ஆதிரன்.. நீங்க ஆர்வகோளாறுன்னு தான் நினைச்சேன் பட் நீங்க தனியா பேசிட்டு இருக்குறதா பாத்தா மூளையும் கோளாறு போல.. நான் எனக்கு தெரிஞ்ச டாக்டர் ரெக்கமெண்ட் பண்றேன்.. ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டீங்கன்னா சீக்கிரம் கியூர் ஆயிடும்.. டோண்ட் வொர்ரி மிஸ்டர் ஆதிரன்" என்று நக்கலாக சிரிக்க,
அவனோ "ரொம்ப பேசாத.. தப்பு என்மேல தான் பின்னால இருந்து பாக்கும் போது.. நீ கீழ பாத்து குடிக்கிறது போல தான் இருந்துச்சு.. கைல கேமரா இருந்தத கூட.. நான் கவனிக்கல" என்று கூறி கொண்டிருக்க, அவனின் வார்த்தையை மதிக்காதவளோ, கீழே கிடந்த தனது கேமராவை கையில் எடுத்து "பக்கி பையன் கேமராவ உடைச்சுட்டான்" என்று முனுமுனுக்க,
அதைக் கேட்டு கடுப்பானவனோ "என்னடி சொன்ன.. நானும் பாத்துட்டே இருக்கேன் ஓவரா தான்டி எகுறர.. சச்சின் மூவி ஷாலினி ரேஞ்ச்க்கு இருந்துட்டு சவுண்ட் சரோஜா ரேஞ்க்கு பேசுறடி.. இதுக்கு மேல சத்தம் கொடு அப்படியே ஒன்னு செவியிலயே விட்டேன்னு வை.. பொட்டுன்னு போயிடுவ.." என்று கூறியதை கேட்டவவளோ
"ஆத்தி ஓவரா காண்டாகுறானே.. இதுக்கு மேல அடக்கி வாசிப்போம் இல்லன்னா அடிச்சாலும் அடிச்சிடுவான்.. ஏற்கனவே அடிச்சதே காது வின்னு வின்னு தெரிக்குது.. அப்புறம் அவன கோளாறுன்னு சொன்னதுக்கு.. நான் தான் காது கோளாறாகி சுத்துவன் போல.. அடியே மகி பயத்தை மட்டும் வெளிய காட்டிக்காம கெத்த மெயின்டெய்ன் பண்ணு" என்று முக பாவனையை மாற்றி மாற்றி யோசித்த கொண்டிருந்தவளை, உள்ளுக்குள் ரசிக்க தவறாத ஆடவனோ வெளியே கோபமாக நிறப்து போல் தான் காட்டிக் கொண்டு "மிஸ் சவுண்ட் சரோஜா பயந்துட்டீங்க போல"
"தேவை இல்லாம காண்டாக்காதீங்க.. எவ்வளவு முக்கியமான போட்டோஸ்லாம் இதுல இருக்கு தெரியுமா.. உங்களால தான் என் கேமரா உடஞ்சி போச்சு... சோ நீங்க பண்ணின தப்ப.. நீங்க தான் சரி பண்ணி தரணும்" என்று கூற,
அவனோ "என்ன இவ ஒத்த டயலாக்குகே இப்படி பம்புறா.. இவள போய் போல்ட் கேரக்டர்ன்னு நினைசிட்டேனே.. டேய் ஆதி இப்படியே மெயின்டெய்ன் பண்ணு இல்ல ஏறிடுவா" என்று நினைத்தவனோ "சரி வா போலாம்" என்று உரிமையாக கையை பிடிக்க, கையை உதறிவிட்டவளோ "என்ன இதெல்லாம்"
"நீ தான தப்ப.. சரி பண்ண சொன்ன.."
"அது தெரியுது.. எந்த உரிமைல என்கைய பிடிக்கிறீங்க.. நான் என்ன உங்க பொண்டாட்டியா"
"அப்போ உரிமையா கொடுத்துட்டு பிடிக்க சொல்லுறியா.. நான் சிங்கிள் தான்.. உனக்கு ஓகேனா சொல்லு மிங்கில் ஆகிக்கிறேன்"
"இடியட்.. முன்ன பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்படி தான் பேசுறதா கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல.."
"அப்போ பழகிட்டு பேசுவோமா"
"மிஸ்டர் ஆர்வகோளாறு.. உங்கள போல எல்லா விஷயத்தயலும் கோளாறா இருக்கிற ஆள்கிட்டலாம் நான் பழக மாட்டேன்"
"அது எப்படி சொல்லுறீங்க பழகி பாத்தா தான தெரியும் சவுண்ட் சரோஜாக்கு பிடிக்குதான்னு"
"ச்சே.. உங்கள போல கோளாறு கிட்ட பேசி புரிய வைக்க முடியாது.. நீங்க எனக்கு பண்ணின உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆதிரன்.. தள்ளுங்க நான் போறேன்.." என்று கூறி செல்பவளின் கரம் பற்றியவனோ "யாரோட வயித்தெரிச்சலும் எனக்கு வேண்டாம்.. சோ.. நானே உன்னோட கேமராவ பழையபடி திருப்பி தரேன்.. வா போலாம்" என்று கை பிடித்து இழுக்க,
தன்னை தீயாய் முறைப்பவளை கண்டு "ரொம்ப பண்ணாதடி ரேப்பா பண்ணேன்.. கைய தான பிடிச்சேன் முறைக்காம வாடி" என்று கூறி, தன் கார் அருகில் செல்ல, அவன் இழுத்து இழுப்பில் சென்றவளோ "அடியே மகி.. இப்படி வந்து சிக்கிட்டியே.. உனக்கு இந்த இடம் புதுசு எந்த ஷாப்.. எங்க இருக்குன்னு கூட தெரியாது சோ கோவத்த கன்ட்ரோல் பண்ணிட்டு பொறுமையா இரு.. பையனும் நல்லவனா தான் இருக்கான்.. சோ ஒன்னும் பண்ண மாட்டான்.. எல்லாம் அந்த கிரகம் பிடிச்சவனால வந்துது.. இருக்குடா.. உனக்கு வேலைய முடிச்சிட்டு வந்து கைமா பண்றேன்" என்று ஒருவனை அர்ச்தித்தவாறே அவனுடன் காரில் ஏறி கொள்ள, காரை நேராக மின்சார பொருள் பழுது பார்க்கும் இடத்தில் வந்து நிறுத்தியவனோ இறங்கி கடைக்குள் செல்ல பின்னயே அவளும் சென்றாள்.
உள்ளே வந்தவனிடம் கடையிலிருந்தவரோ "ஆவோ ஜீ.. க்யா சமஸ்யா ஹை?" (வாங்க சார்.. என்ன பிராப்ளம்)
"கேமரா டூட் கயா.. க்யா இஸே டீக் கியா ஜா சக்தா ஹை?" (கேமரா கீழே உடைந்து விட்டது.. சரி செய்ய முடியுமா?)
"யே கைஸே டூட் கயா?" (எப்படி உடைந்தது) என்று கேட்க,
மகியோ, அவருக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் ஆதிக்கு கேட்கும்படி "ஹான்.. ஒரு குருட்டு கபோதி வந்து தள்ளிவிட்டு உடச்சிட்டான்" என்று கூற, அவளை முறைத்தவனோ "டீக் கார்னே மே கித்னா சமய லகேகா" (சரி செய்ய எவ்ளோ நேரம் ஆகும்?)
"ஆப் இஸே தீன் கன்டே பாத் பிராப்த கார் சக்தே ஹை" (நீங்க.. இதை மூணு மணி நேரம் கழிச்சு வாங்கிட்டு போலாம்) என்று கூற, அதைக் கேட்டு அவளுடன் காரின் அருகில் வந்தவனோ "வண்டியில ஏறு"
"இப்போ.. எங்க"
"த்ரீ ஹார்வஸ் ஆகும்ல.. அதுவர இங்கேயே இருக்க முடியாது.. வெளிய போயிட்டு வரலாம்"
"அதுனால ஒரு பிராப்ளம் இல்ல.. உங்களுக்கு வேணும்ன்னா.. நீங்க போங்க.. நான் இங்கேயே இருப்பேன்"
"இங்க பாரு கேமரா மறுபடியும் பழைய மாதிரி உன்கைல கொடுக்கிற வர உன்னவிட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்.. ஒழுங்கா வண்டியில ஏறு"
"ஈஸ்வரா என்ன இப்படி ஒரு கிறுக்கு கிட்ட மாட்டிவிட்டியே.." என்று தனக்குள் புலம்பியவளோ "இங்க பாருங்க.. நான் ஒன்னும் உங்க கையாள் இல்ல.. உங்க இஷ்டத்துக்குலாம் என்னால ஆட முடியாது" என்று கூறிவிட்டு அக்கடையிலிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டவளின் எதிரே அமர்ந்தவனோ உள்ளுக்குள், அவளை ரசித்தும் வெளியே முறைத்தவாறே பார்த்து கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து எதையோ யோசித்தவளோ தன்னை முறைப்பவனை கண்டு "எப்படி கேக்குறது.. ஓவரா வேற பேசிட்டோம்.. கோளாறு வேற முறைச்சிட்டே இருக்கே.. அடிச்சிட்டானா என்ன பண்றது.. ஆபத்துக்கு பாவம் இல்ல.. கேட்டு பாப்போம்" என்று தயங்கியவாறு அவன் அருகில் சென்றவளோ "மிஸ்டர் ஆதிரன்.." என்று மென்மையாக அழைக்க,
அவனோ "என்ன" என்று புருவம் உயர்த்தி வினவ,
அவளோ "பசிக்குது ரெஸ்டாரன்ட் போலாமா" என்று கேட்க,
அதைக் கேட்டு இதழ் கடித்து சிரிப்பவனை கண்டு கொண்டவளோ "இப்போ.. எதுக்கு சிரிக்குறீங்க"
"இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி சவுண்ட் சரோஜா பேசுனது நினைச்சி சிரிச்சேன்"
"சாரி தெரியாம பேசிட்டேன்.. இப்போ எனக்கு பசிக்குது வருவீங்களா.. இல்ல நானே போயிக்குறேன்" என்று கூறி செல்பவளை புருவம் உயர்த்தி பார்த்தவனோ, அவள் பின்னே வந்து "சேந்தே போலாம்.. வண்டியில ஏறு" என்று கூறி காரில் ஏறியவனோ, அவள் ஏறியதும் சாலையில் கவனத்தை செலுத்தியவாறு காரை ஓட்டினான்.
காரின் ஜன்னல் வழியே பார்வையை செலுத்தி கொண்டிருந்தவளோ நிறைய ரெஸ்டாரன்ட்டினை கடந்து வந்ததை கண்டு "ஏங்க நிறைய ரெஸ்டாரன்ட் தாண்டி வந்துட்டோம்.. எங்கையும் நிறுத்தாம இப்படி போய்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்"
"நான், இந்த மாதிரி லோ கிளாஸ் ரெஸ்டாரன்ட்ஸ்லாம் சாப்பிட மாட்டேன்.." என்று கூறி சாலையில் கவனத்தை செலுத்த,
"டேய் கோளாறு நீ பணக்காரன் தான்டா.. ஆனா.. என் நிலைம புரியாம படுத்துறீயே.. சரி இவனுக்கு எந்த ரெஸ்டாரன்ட்ல கார நிறுத்த மனசு வருதோ அப்போ நிறுத்தட்டும் அதுவர இப்படியே சாஞ்சி தூங்குவோம்" என்று நினைத்து இருக்கையில் சாய்ந்து உறங்கி விட்டாள்.
ஒருவழியாக காரை ஒரு இடத்தில் நிறுத்தி தூங்கி கொண்டிருந்தவளை எழுப்பி "இடம் வந்திருச்சு இறங்கு" என்று கூறி இறங்கியவனோ, அவள் இறங்குவதற்காக கார் கதவை திறக்க, இறங்கி தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தவளை கண்டவனோ "பயப்படாத என் வீடு தான் உள்ள வா" என்று கூறிவிட்டு உள்ளே செல்ல,
அவளோ "அய்யோ இவன நல்லவன்னு நம்பினேனே.. வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்.. கடவுளே இந்த கோளாறு கிட்ட இருந்து.. நீ தான் என்ன காப்பாத்தனும்" என்று பயந்தவாறே அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் நுழைந்தவளை கண்டவனோ "வாசல இருந்து வீட்டுக்குள் வர உனக்கு இவ்வளவு நேரமா" என்று தான் கூறியதை கேட்காமல் வீட்டை ஆராய்ச்சி செய்பவளை கண்டு சிரிப்பை கட்டுப்படுத்தியவனோ "பயப்படாத உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன்" என்று ஒரு பார்சலை கொடுத்தவனோ
"நீ இதுக்காக தான் ரெஸ்டாரன்ட் போகனும்ன்னு சொன்னன்னு தெரியும்.. மேல ரைட் சைட்ல இருக்கிற எல்லா ரூமும் ஃப்ரீ தான் நீ எதுனாலும் யூஸ் பண்ணிக்க.." என்று கூறிவிட்டு சமையல் அறைக்குள் நுழைய,
"இவனுக்கு எப்படி தெரியும்" என்று புலம்பியவாறே அவன் தனக்காக கொடுத்த பார்சலிருந்த உடை மற்றும் சானிடரி பேட்ஸ் உடன் அறைக்குள் இருந்த குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திவிட்டு யோசனையுடன் பழைய ஆடையை மடிக்க எடுத்தவளோ அதிலிருந்த ரத்த கரையை கண்டு ஒரு வித சங்கடத்துடன் அவன் தனக்காக யோசித்ததை நினைத்து
"ஓ.. இத பாத்து தான் ரெஸ்டாரன்ட்ல கூட கூட்டிட்டு போகாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான் போல.. ச்ச இவன போய் தப்பா நினைசிட்டேன" என்று புன்னகைத்தவாறே தன் கைப்பையில் ஆடையை மடித்து வைத்துவிட்டு வெளியே வந்து, அவனை தேட
"கிட்சென் வா" என்று குரல் கொடுக்க,
உள்ளே வந்தவளை அமர கூறி சாப்பிட கொடுத்துவிட்டு தானும் சாப்பிட அமர்ந்தான்
சாப்பிட்டு கொண்டிருந்தவனை கண்டவளோ "தேங்க்ஸ்.."
"பார்டா.. சவுண்ட் சரோஜாக்கு.. இவ்வளவு சாப்ட்டாலாம் பேச தெரியுமா" என்று தான் கூறியதை கேட்டு புன்னகைத்தவளை கண்டு "சவுண்ட் சரோஜாக்கு.. இந்த சாப்ட் ரோல் செட்டாகல.. ஒருவேளை ஒரு நல்லவன திட்டினத நினைச்சி ஃபீல் பன்றியா என்ன"
"தோடா.. கோளாறு பண்ணின வேலைக்கு ஃபீல் ஒன்னு தான் குறை.. அது சரி நான் தூங்குன கேப்ல போய் எல்லாம் வாங்குனீங்களா.. என்ன"
"இல்ல இல்ல.. அது என் பிரென்ட்க்காக வாங்கின ட்ரெஸ்.. பேட் வந்து அவ போன வாரம் வந்தப்போ ஒரு பேக் யூஸ் பண்ணிட்டு மிச்சம்.. இன்னொரு பேக் தான்.. உனக்கு கொடுத்தேன்"
"உங்க பிரெண்ட் ரொம்ப லக்கி.." என்று நிறுத்தி "இப்போ.. உங்க பிரெண்ட் இங்க இல்லையா"
"எஸ்.. சென்னை போயிட்டா.. எனக்கு இங்க வொர்க் இருந்துச்சு பிரேவியஸ் மந்த் தான்.. இங்க வந்தேன்"
"ஓ.. உங்களுக்கு சென்னையா"
"ம் சென்னை தான்.. பட் எப்போ எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது.." என்று கூறி ஒரு அட்டை நீட்டியவனோ "இது என்னோட கார்ட் அதிகமா யாருக்கும் ஷேர் பண்ண மாட்டேன்.. உனக்கு கொடுக்கணும்ன்னு தோணுச்சு தேவைப்பட்டா யூஸ் பண்ணிக்க" என்று கூற,
அதை வாங்கி பார்த்தவளின் கண்களோ அதிர்ந்து விரிந்தன.
தேடல் தொடரும்...
இப்படிக்கு
Vsv42😍😍
Phone illa sis camera.. nandri sis 😍😍
Currently viewing this topic 1 guest.
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Mohana Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page