All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள் - 8

 

VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்
(@vsv6)
Member Author
Joined: 3 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 8 

 

திம்மரசனை பார்த்ததும் சகுந்தலாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டது.. யாரை இந்த ஜென்மம் முழுவதும் பார்க்கவே கூடாது என்று நினைத்தாரோ அவனே தன் கண் முன்னால் வந்து நிற்கின்றானே.. 

 

தன் மகன் அனுபவித்த வேதனை ரணமாய் உள்ளத்தை கூறுப் போட, சட்டென்று அந்த இடத்தை விட்டு அகல நினைத்தவரின் நெஞ்சமோ, சுருக்கென்று வலித்தது.. வலது கரம் கொண்டு தன் இதயத்தின் வலியை சிறிதாவது குறைக்க முயன்றவரின் பலன் அனைத்தும் பூஜ்ஜியம் தான்.. வினாடிகள் கடக்க, கடக்க இன்னும் வலி அதிகரித்துக் கொண்டேயிருந்தது.. 

 

“துகிலா” என்றவரின் கரங்கள் நடுக்கத்தில் நடுங்கி, உடல் தளர்ந்து, கால்கள் தள்ளாடி கீழே விழ போனவரை சட்டென்று தங்கள் கரங்களில் தாங்கிக் கொண்டனர் துகிலனும், அவிரனும்.. 

 

“அம்மா.. அம்மா.. என்னாச்சிம்மா?” என அவிரன் தவிப்புடன் தன் தாயின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.. அவனுக்கு தன் தாயை தவிர வேறெதும் உலகமில்லையே..

 

சகுந்தலாவின் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டேயிருந்தது.. தன் முன்னால் தன் இருமகன்களையும் ஆழமாக பார்த்தவர், “துகிலா” என உடைந்து போன குரலில் சொன்னவரின் கண்களில் கண்ணீர் வழிய துகிலனின் முகத்தை வருடிக் கொண்டிருந்தவரின் கண்களோ சட்டென்று மூடிக் கொண்டது.. 

 

“அம்மாஆஆஆ” என்ற துகிலாவின் அலறல் குரலில், ஜீப்பில் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்த அருவி பட்டென்று கண்ணை திறந்தாள்.. 

 

“அவிரா அம்மாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டுப் போ. நான் பின்னாடியே வந்திடுறேன்” என்ற துகிலனின் கையை அழுத்தமாக பற்றினான் அவிரன்.. 

 

“அண்ணா ப்ளீஸ்ண்ணா.. எனக்குப் பயமா இருக்கு நீ வா.. இங்கே ஏதும் பிரச்சினை வேண்டாம்.. நாம சேர்ந்தே ஹாஸ்பிட்டல் போகலாம்.. இங்கே உள்ள பிரச்சினையை வந்துக்கூட பார்த்துக்கலாம்” என்றவனை திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தான்.. 

 

“இங்குள்ள பிரச்சினை தீருமா? தீர்க்க முடியுமா உன்னால்?” என கண்களில் அனல் தெறிக்க கேட்டவனைக் கண்டு அவிரன் உடல் உதறல் எடுக்க, “அண்ணா அம்மாவை முதல்ல பார்ப்போம்” என்றதும், சகுந்தலாவை தன் இருகரங்களில் ஏந்தியவன், காரில் அமர வைத்தான்.. 

 

“அவிரா காரை எடு.. நீ ஹாஸ்பிட்டல் போ நான் கண்டிப்பா பின்னாடி வர்றேன்.. அம்மாவுக்கு எதுவும் ஆகாது. அவுங்க மட்டுந்தான் நமக்குன்னு இருக்கிற உறவுன்னு அவுங்களுக்கு நல்லாவே தெரியும்.. அவுங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் கண்டிப்பா உயிரோடவே இருக்கமாட்டேன்.. இதையும் அவுங்கக்கிட்ட சொல்லிடு” என்றவன் கார் அங்கிருந்து செல்லும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.. 

 

“இது.. இது அவர் குரலாச்சே.” என சட்டென்று ஜீப்பை விட்டு இறங்கியவளின் நேர் எதிர் வந்து நின்றான்  திம்மரசன்.. 

 

அவனைப் பார்த்ததுமே பயத்தில் இரண்டெட்டு பின்னால் வைத்தாள் அருவி.. தீர்க்கமான பார்வையை அவள் செலுத்தியவனின் மனமெங்கும் வன்மமே.. 

 

“எங்கே போற?” என்றவனை தாண்டி அருவியின் பார்வை துகிலன் மேல் அழுத்தமாக பதிந்தது.. கூட்டத்திற்கு நடுவே நின்றிருந்த துகிலனின் பின்பக்கம் மட்டுமே தெரிந்தது. அவன் தான் கார் செல்லும் பாதையையே பார்த்துக் கொண்டிருக்கிறானே.. 

 

அவனவள் படும் பாட்டை எங்கே அறிவான் அவன்?.. 

 

“நான் அவர்க்கிட்ட போகணும்?..” என வேகமாக அங்கிருந்த போக முயன்ற, அருவியின் கையை சட்டென்று பிடித்தான் திம்மரசன்.. 

 

“யாரு அவரு.. உன் புருஷனா?” என்றவனை விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. 

 

“என்ன அப்படி பார்க்கிற?.. நீதானே. அவரு.. அவருன்ன.. அப்போ அந்த அவரு உன் புருஷனா தானே இருக்கணும்” என்றவனைக் கண்டு வெடுக்கென்று முகத்தை திருப்பினாள் அருவி..

 

அவனின் அநாகரீகமான பேச்சு ஏனோ ரசிக்க தோன்றவில்லை.  

 

“என்னடி மூஞ்சை திருப்புற?.. உன்னை அரெஸ்ட் பண்ணியிருக்கு.. அதை நியாபகத்துல வச்சிக்கோ.. தப்பிச்சி ஓடப்பார்த்த மூஞ்செலியை நசுக்கிப் போடுற மாதிரி கால்ல போட்டு நசுக்கிடுவேன்.. நசுக்கி” என்றவனின் கையை பட்டென்று தட்டிவிட்டார் செவ்வந்தி.. 

 

“யாருய்யா நீ?.. என் பொண்ணு கையை எல்லாம் பிடிக்கிற?.. ஏங்க போலீஸ் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கண்டவன் எல்லாம் என் பொண்ணு கையை தொடுறான்” என எகிறிக் கொண்டிருந்த செவ்வந்தியின் முன்பாக வந்து நின்றார் நந்தினி.. 

 

“யம்மா.. அவர் ஒன்னும் கண்டவன் இல்லை. அவர் தான் இந்த ஜில்லாவோட ஏசிபி.. இன்னைக்குத்தான் சார்ஜ் எடுத்திருக்கார்..” என்றதும் செவ்வந்தி தயக்கமாக அருவியைப் பார்க்க, அவளும் பயத்துடன் தான் தன் தாயைப் பார்த்தார். 

 

“சார் என் பொண்ணு எந்தத் தப்பும் பண்ணலை சார்.. அந்த வருண் கடன்காரன் தான் என் பொண்ணு மேல வீண் பழியைப் போட்டுட்டான்.. என் பொண்ணை பொண்ணு பார்க்க வந்தவன் அவக்கிட்ட பிரச்சினை பண்ணியிருக்கான். கையை எல்லாம் பிடிச்சி வம்பிழுத்திருக்கான் சார்.. அதுனால தான் அவளோட ஓனர் அவனை அடிச்சி விரட்டியிருக்காரு” என்ற செவ்வந்தியை கழுத்தை சரித்துப் பார்த்தவனின் இதழ்களில் வன்ம புன்னகை.. 

 

அருவியின் காதோரம் சற்று சரிந்த திம்மரசன், “ஓனரா.. கம்பெனிக்கு ஓனராஆஆ.. இல்லை உனக்கே ஓனரா??” என்றவனின் அநாகரீகமான பேச்சில்  முகம் சுழித்தாள் அருவி.. 

 

அவன் பேசியதைக் கேட்ட செவ்வந்தி கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தார்.. பணபலம மட்டுமல்ல, அதிகார பலமும் அவனிடம் இருக்கிறதே. இதனால் தன் கோபத்தை அடக்கியவாறே நின்றுக் கொண்டிருந்தார் செவ்வந்தி. 

 

தன் பெண்ணுக்கு எந்தவித வம்பும் வந்துவிடக்கூடாதே.. அதனால் தன் வாயை மூடிக் கொண்டு நின்றிருந்தவர் திம்மரசனை பதிலுக்கு முறைக்கவும் தவறவில்லை.  

 

“வார்த்தையை அளந்து பேசு” என்ற கர்ஜனைக்குரலில் சட்டென்று திரும்பினான் திம்மரசன்.. 

 

அவன் நேரெதிரில் கோபத்தின் உச்சியில் நின்றுக் கொண்டிருந்தான் துகிலன்.. அவனின் உள்ளமோ தீக்கனலை அள்ளிவீசினாற் போன்று தீஞ்சுவாலை போல் சுடர்விட்டு எரிய தயாராக இருந்தது..  

 

அவனின் கோபத்தை ரசித்த திம்மரசனின் இதழ்களில் வன்ம புன்னகை.. இதைத்தானே அவன் எதிர்பார்த்தது.. அவன் கோபப்பட வேண்டும். அவனின் கோபத்தை இவன் ரசித்துப் பார்க்க வேண்டுமென்பது தான் அவன் போட்டு வைத்திருந்த திட்டமே.. 

 

“வாங்க.. வாங்க.. மிஸ்டர் துகிலன்.. அப்படிக் கூப்பிடலாமா?.. இல்லை தென்காசி ஜமீன்தார் அய்யா வாங்கன்னு கூப்பிடலாமா?” என கைகட்டியபடி பேசிய திம்மரசனைக் கண்டு பல்லைக் கடித்தான் துகிலன். அவனைப் பற்றிதான் இவனுக்கு தெரியுமே.. 

 

அவன் எப்பொழுது எப்படி பேசுவான்?.. எப்படியெல்லாம் சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பான்?.. என்பதைக்கூட அறிந்து வைத்திருப்பவன் அல்லவா அவன்.. 

 

“அவளை விடு” என்ற துகிலனைக் கண்டு எகத்தாளமாக சிரித்த திம்மரசனின் பார்வை இப்பொழுது அருவியின் மேல் தான் குரோதத்துடன் படிந்தது.. 

 

“விடணுமா?.. விட்டாப் போச்சி?.. நந்தினி நீங்க கிளம்புங்க.. இந்தப் பொண்ணை டார்ச்சர் பண்ணதுக்கு அந்த வருண் மேலேயும், அவுங்க அம்மா மேலேயும் கேஸ் போட்டு உள்ளே தள்ளுங்க” என்றதும் அருவியை விட்டுவிட்டு போலீஸ் ஜீப் சிட்டாக புறப்பட்டுச் சென்றது…. 

 

தான் சொன்னதும் செய்த திம்மரசனை கண்கள் இடுங்க பார்த்தான் துகிலன்.. அவன் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லையே.. 

 

தனக்கு எதிரில் நின்றுக்கொண்டிருந்த இருவரையும் புரியாமல் பார்த்தாள் அருவி.. இருவரும் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பது போல் தெரிந்தாலும், இருவருக்குள்ளும் ஒரு எரிமலையின் சீற்றம் இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுதே அவளுக்கு தெரிந்தது. 

 

“போ ம்மா. உன் ஓனர் கூப்பிடுறாருல்ல” என்ற அருவியின் கைகளை திம்மரசன் தொடச் சென்றதும் தாமதம், சட்டென்று அருவியின் கையைப் பிடித்த துகிலனின் கைகள், நிமிடத்தில் அவளை தன் பக்கம் இழுத்து தனக்கு பின்னால் பாதுகாப்பாக நிற்க வைத்திருந்தது.. 

 

அவன் இழுத்த வேகத்தில் திம்மரசுவே ஒரு நிமிடம் பயந்து விட்டான்.. தன் பயத்தை மறைக்க வானம் அதிர சிரித்தவனின் பார்வையைக் கண்டு உடல் ஜில்லிட்டுப் போனது அருவிக்கு.. 

 

“ஏங்க?.. யார் இவரு?” என அருவி மென்குரலில் தான் கேட்டாள்.. 

 

“அதை நான் சொல்லுறேன்” என்ற திம்மரசுவை எரிப்பது போல் பார்த்தான் துகிலன்.. 

 

“உன்கிட்ட கேட்டாங்களா யாராவது? உன் வேலை என்னவோ அதைப் பார்த்துட்டுப் போ.. சும்மா இவளை டார்கெட் பண்ணின?.. அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பாக முடியாது?..” என எச்சரிக்கும் குரலில் சொன்னவன், மெல்ல அங்கிருந்து புறப்பட, அவர்களின் முன்னால் வந்து நின்றான் திம்மரசன்.. 

 

“அது எப்படி இவளை விடமுடியும்?.. இவ என்ன உன் பொண்டாட்டியா? விட்டுட்டு அப்படியே போக?.. கள்ளக்காதலி தானே..” என்ற திம்மரசுவை அடிக்கவே கை ஓங்கிவிட்டான் துகிலன்.. 

 

“மாமாஆஆஆ” என்ற குரலில் அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஒட்டுமொத்தமாக திரும்பியது.. 

 

எதிரில் இருப்பவள் பெண்ணா?.. இல்லை வானத்தில் இருந்து இறங்கிய தேவதையா? என மற்றவர்கள் சந்தேகப்படும் அளவிற்கு, வெண்ணைய்யில் செய்த சிலையாக வளவளப்பான தேகத்தோடும், பார்ப்பவர்களை ஈர்க்கும் தோற்றமுடைய சாந்தமான முகத்தையும் உடையவள், அழகுப்பெட்டகமாக நின்றிருந்தவளின் வதனமோ கோபத்தில் சிவந்திருந்தது.. 

 

“என்ன மாமா பண்ணிட்டு இருக்கீக?.. என்ற வூட்டுக்காரை அடிக்க கையை ஓங்குறீக?” என்றவளைக் கண்டு பல்லைக் கடித்தான் துகிலன்.. 

 

அவளிடம் பேசக்கூட அவனுக்கு மனமில்லை.. முகத்தை வெடுக்கென்று வேறு பக்கமாக திருப்பியவனின் கரமோ, அருவியின் கைகளை அழுத்தமாக பற்றிக் கொண்டது.. 

 

தன் கைகளோடு இணைந்த கரத்திற்கு சொந்தமானவனை தான் அண்ணாந்து பார்த்தாள் அருவி. 

 

அவனும் அந்நேரம் அவளை தான் திரும்பிப் பார்த்தான் அருவியை.. அவளின் விழிகளில் ஒரு வித பயம். 

 

“நான் இருக்கிறேன்” எனும் விதமாய் தலையாட்டிட, அவளும் ‘ம்’ எனும் விதமாய் தலையாட்டினாள்.. 

 

அவர்கள் இருவரின் சம்பாஷனைகளை பார்த்த செவ்வந்திக்கு தூக்கிவாரிப்போட்டது.. 

 

தன் மகளா இது? இரு நாட்களுக்கு முன்பு வரை வேறு ஒருவனுடன் திருமணத்திற்கு தயாராகி நின்ற தன் மகளா இது? என அதிர்ச்சியில் பார்த்தவர் திரும்பி பார்க்க, அங்கு துகிலனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாக ஒரு பெண்.. 

 

“சொல்லுங்க மாமா.. என்ற வூட்டுக்கார் மேல கை வைக்கிற அளவுக்கு ஆகிடுச்சா?.. அவரு போலீஸ்காருங்கிற மரியாதை தான் வேண்டாம்.. ஆனா உங்க கூட பிறந்தவுகங்கிற மருவாதை கூடவா இல்லாமப் போச்சி”.. என்றவளை எரிக்கும் பார்வை பார்த்தவன்,

 

“யாரு யார்க்கூட பிறந்தவன்?.. அவிரன் மட்டும்தான் என்கூட பிறந்தவன்.. அவன் தான் என் ரத்தம்.. வப்பாட்டிக்கு பொறந்தவன் எல்லாம் என் ரத்தம் ஆகிடமுடியாது சாரதா” என அழுத்தமாக சொன்னவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் திம்மரசன்.. 

 

சுடர்விட்டு எரியும் வேள்வித்தீயாய் அவனின் வதனமோ கோபம் என்னும் அக்கினியில் கொழுந்து விட்டு எரிந்தது.

 

“என்னைய்யே அடிக்கிறீயா?” என்ற துகிலனும் பதிலுக்கு பதில் திம்மரசனின் முகத்தை தன் கைத்தடத்தை பதித்திருந்தான்.. 

 

This topic was modified 4 weeks ago by VSV 6 – அடங்காவாரிதியானவனின் கிளிஞ்சல் இவள்

   
ReplyQuote

You cannot copy content of this page