All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] நெஞ்சம் 4

 

VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்
(@vsv35)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 5

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு முறைத்துக் கொண்டிருக்கவே, அதைக் கண்ட உதயனோ, "என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும் ?" என்றான்.

"உனக்கு தெரிஞ்ச பொண்ணாடா. எதுக்கு நீ இவ கூட பேசிக்கிட்டு இருக்க ? திமிரு பிடிச்சவ சரியானவளா இருக்காடா " என்று ஆதி கூறவே,

"யாரு நானா நீங்க தான் காட்டுமிராண்டி மாதிரி திமிரா இருக்கிறீங்க. ஒரு பொண்ணு கிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னு கூட தெரியல " என்று தன் கரத்தினை நீட்டி எதிர்த்துப் பேசவே, இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டான்.

உதயன் இருவருமே தன் நண்பர்கள் என்றான பின் யார் பக்கமும் இப்பொழுது அவனால் சாய முடியாது. உண்மை என்ன என்பதை அவன் அறிய நினைத்தான்.

"சரி விடுங்க டேய் கொஞ்சம் அமைதியா இருடா. என்னோட பிரெண்டு தான். இவனும் நானும் சின்ன வயசுல இருந்து ஒண்ணாவே படிச்சோம் ரிலேட்டிவ்ஸ். ஆதி இவ என்னோட ஃப்ரெண்ட் " என்று இருவரையும் அறிமுகப்படுத்தி வைக்க,

"உங்களோட ஃப்ரெண்ட்டா என்ன சொல்றீங்க ? ஆனா உங்களுக்கு இருக்கிற நல்ல பண்பு எதுவுமே இவங்க கிட்ட சுத்தமா இல்ல "

"ஏய் என்னடி ரொம்ப பேசிக்கிட்டு இருக்கே ? " தன் பைக்கில் இருந்து இறங்கி அவளை நோக்கி வர முயற்சிச் செய்ய, இடையில் புகுந்து தடுத்தான் உதயன்.

"டேய் கொஞ்சம் அமைதியா இருடா ஏன்டா. யுகனிகா நீ போ " என்றதும் உதட்டை சுழித்துக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள்.

"நீ வண்டியை எடு போகலாம் " எனக் கூறவே, ஆதியும் தன் பைக்கினை எடுக்க அவனின் பின்னே அமர்ந்துக் கொண்டான்.  ஆதியின் மாந்தோப்பிற்கு பயணிக்க, செல்லும் வழியில் என்ன நடந்தது என்பதைக் கேட்டான். ஆதியும் நடந்த அனைத்தையும் கூறினான்.

"பஸ் டிக்கெட்க்கு காசு இல்லடா சரி நம்ம ஊரு பொண்ணு தான. ஒரு டிக்கெட் எடும்மா சொன்னதுக்கு என்ன பேச்சு பேசுற. நான் உனக்கு பிச்சை போட்டேன்னு ரொம்ப பேசினா நான் விடுவேன்னா. ஒரு சின்ன பிரச்சனையை பெரிசாக்குனது அவ. ஆனால் கோவம் மட்டும் ஏன் மேல படுறா "

"சரி விடு ஆதி என்ன இருந்தாலும் நீ அவ பக்கத்துல போய் உட்கார்ந்து இருக்க கூடாது அத்தனை பேரும் முன்னாடியும்... எனக்கு தெரியும் நீ இதுக்கு முன்னாடி பஸ்ல அதிகமா போனது கிடையாது. இருந்தாலும் நீ கொஞ்சம் அவ கிட்ட இருந்து தள்ளியே இரு "

"என்னமோடா இதுக்கப்புறம் நான் அவளை பார்க்கவே கூடாது. ஆமா நம்ம ஊரு தானாமே எங்க இருக்கா. நீ வேற உன் பிரெண்டுன்னு சொல்லுற. இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே "

"நான் காலேஜ் படிக்கும் போது தெரியும். நம்ம ஊருக்கு வந்து அஞ்சு வருஷம் கிட்ட ஆக போதுடா இப்போ என் ஸ்கூல்ல தான் டீச்சர் வேலை பார்க்கிறா. ஊருக்கு வெளியில ரோட்டு ஓரமா தான் இவங்க வீடு இருக்கு "

"அந்த புதுசா கொஞ்ச நாளைக்கு முன்னாடி கட்டுனாங்களே ஒத்த வீடு மட்டும் இருக்குமே அது இவ வீடு தானா ? அங்க கூட ரெண்டு மூணு மாடு இருக்கு நம்ம கிட்ட தான் பால் ஊத்துறாங்க "

"ஆமாடா அவங்களே தான். ஆமா என்னடா உன் மேல சரக்கு அடிச்ச வாசனை வருது குடிச்சியா ?" உதயன் கேட்கவே,

"ஆமான்டா பங்காளி ட்ரீட் தரேன்னு சொன்னா சரின்னு லைட்டா கொஞ்சம் அடிச்சேன் அது காலையில அடிச்சது. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா போதை தெளிஞ்சிருச்சி "

"எத்தனை தடவை சொல்லுறேன். இந்த பழக்கத்தை விடு விடுன்னு கேட்கவே மாட்டேங்குற. ஊருக்குள்ள உங்க அப்பாக்குன்னு ஒரு நல்ல பெயர் இருக்கு அதை கெடுத்துடாதே சொல்லிட்டேன் "

"நீ உன் புலம்பலை ஆரம்பிக்காத " எனக் கூறியவாறு இவர்கள் இருவரும் பயணித்துக் கொண்டு சென்றிருக்க, இங்கே தன் வீட்டுக்குள் நுழைந்தாள் யுகனிகா.

"என்னாச்சும்மா ஏன் ஒரு மாதிரியா வர்ற ?"  என்று அவளின் அன்னை பொன்னி கேட்க,

"கொஞ்சம் தலைவலியா இருக்கு ஒரு காபி போட்டு கொடுக்கிறியா நான் பிரெஸ்அப் ஆகிட்டு வரேன் " என்றதும் அவரும் சரி எனக் கூறினார். இவளோ தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

சிறிது நேரம் சென்று வெளியே வர அவளுக்கான காபி சூடாக இருந்தது. அதனை பருகியவளுக்கு ஆதி நினைவு தான் வந்தது. அவன் தன்னை முண்டக்கண்ணி என்று கூறியதை நினைத்தவளுக்கு அவள் அறியாது அவளின் விழிகள் தன் முன் இருந்த கண்ணாடியில் தான் பதிந்தது.

யுகனிகாவிற்கு அவளின் விழிகள் எப்பொழுதுமே உருண்டையாக பெரிய வடிவில் தான் இருக்கும். அதுவும் கோபத்தில் விழித்துப் பார்த்தால் கூடவே மூக்கு லேசாக விடைக்க, கண்கள் வெளியே தெறித்து விடும் அளவுக்கு தான் இருப்பாள். அதை வைத்து தான் அவன் முண்டக்கண்ணி என்று கூறியதை உணர்ந்தவளுக்கோ ஆத்திரம் அவனின் மீது கட்டுக்கடங்காது இருந்தது.

விதியோ இவர்களின் முதல் சந்திப்பிலே முட்டல் மோதல்களை தான் கொடுத்திருந்தது.

அதன் பின் நாட்கள் கடக்க பேருந்திலேச் செல்ல வரவென்று இருந்தாள் யுகனிகா. பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் ஊரை தாண்டி அவளின் வீடு இருப்பதால் நடந்து வருவதற்கு ஒரு கிலோமீட்டர் தூரம் ஆகும். தினமும் காலை ஒரு கிலோமீட்டர் மாலை ஒரு கிலோமீட்டர் என்றால் அதுவே அவளுக்கு ஒரு அசதியை கொடுத்தது.

ஸ்கூட்டி வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அதற்கானப் பணம் தன்னிடம் இப்போதைக்கு இல்லை. அதனால் முதலில் அதற்கு தான் சேர்க்க வேண்டும் என நினைத்தாள்.  வீட்டிற்கான கடனை எல்லாம் முடித்து விட்டதால் இப்பொழுது எந்த ஒரு இடையூறும் இல்லாது வாழ்ந்து வந்தனர். அடிக்கடி அவளின் தந்தை கூட ஸ்கூட்டி இப்பொழுதே வாங்கிக் கொள்ளலாம் என்று தான் கூறிக் கொண்டிருந்தார். ஆனால் இவள் தான் ஒரு வருடம் போகட்டும் என்று தன் சம்பளத்தில் வீட்டுக்கு தேவையானதுப் போக மீறி எடுத்து சேர்த்து வைத்துக் கொண்டே வந்தாள்.

ஆதியுடான முதல் சந்திப்புக்கு பின் இரண்டு நாட்கள் அவனைப் பற்றி நினைத்தாள். அதன் பின் அவன் ஒருவன் இல்லை என்பதையே மறந்து போய் விட்டாள். அதே போல் தான் அவனுக்கும் அன்று மாலை நேரம் இருட்டிக் கொண்டு வந்தது. பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக அவளால் நடக்க முடியவில்லை. புடவை வேறு தடுக்கிக் கொண்டிருக்க மலையும் சாரலாக பெய்துக் கொண்டிருந்தது.
ஏற்கனவே மதியம் நேரம் ஒரு பாட்டம் பெய்து விட்டு இருக்கும் போல தரையெல்லாம் ஈரமாக இருக்கவே வழுக்கி விடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து கால் வைத்து அந்த சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

மழையோ பெரிதாக ஆரம்பிக்கவே மழையோடு மழையாக நடந்து வர, அதே நேரம் புல்லட்டின் ஓசை அவளின் செவியைத் தீண்டிச் சென்றது. அந்த சத்தம் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

'இப்படித்தான் போறவங்களுக்கு டிஸ்டர்ப் பண்ற மாதிரி வண்டியெல்லாம் ஏன்தா தயாரிக்கிறாங்களோ ?' என்று புலம்பிக் கொண்டு தனக்குப் பின்னே வந்த அந்த வண்டியின் சத்தத்தை கேட்டு தன் செவியை மூடினாள்.

பின்னே ஆதி தான் அந்த புல்லட்டில் வந்துக் கொண்டிருந்தான்.

தொப்பலாக நனைந்திருந்தால் உடையோ அவளின் மேனியோடு ஒட்டிக்கொண்டு இருந்தது. ஆதியின் பார்வையிள் ஒரு பெண் நடந்துச் செல்ல இருபுறமும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் மட்டுமே இருக்க, அவனின் விழிகள் அவளின் பின்னழகின் மீது தான் விழுந்தது. இயற்கை வாசம் ரம்யமானப் பொழுது யாராக இருந்தாலும் அதனை ரசிக்கத்தான் தூண்டும். ஆனால் யுகனிகாவோ அதற்கு மாறாய் எரிச்சலோடு நடந்து வந்தாள்.

சிவந்த மேனி இப்பொழுது வெளீர் நிறமாக மாறியிருக்க, நடந்துச் செல்பவளைக் கண்டு அப்படியே தன் புல்லட்டின் வேகத்தை முற்றிலும் குறைத்தான். அவளின் அந்த நீண்ட பின்னழகும் அசைவுக்கு ஏற்றவாறு அந்த ஈரத்திலும் பின்னல் ஆடும் அழகு ரசிக்க வைத்தது.

அப்பொழுது எதிரே சில ஆடுகள் கூட்டம் தங்களின் வீடுகளை நோக்கிச் செல்வதற்கு மழையோடு மழையாக அந்த சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்தது. அதனால் வண்டியை ஓரமாகத்தான் அவனும் ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த ஆடுகளை தாண்டினால் தான் அவனால் முந்திச் செல்ல முடியும். அவளின் பின்னே அவன். ஆனால் அவளோ அதனை உணரும் நிலையில் இல்லை. அவனை பொறுத்தவரை வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதால் அந்த தார் சாலையில் அருகில் இருந்த அந்த மண் தரையில் நடந்து விழக் விடக்கூடாது என்ற எண்ணத்தில் சென்றுக் கொண்டிருக்க இவனோ பின்னாடி சைக்கிளை விட மெதுவாக உருட்டிக்கொண்டே வந்தான்.

இரண்டு நிமிடமாவது சென்றிருக்கும் அந்த ஆடுகள் கடந்துச் செல்வதற்கு அதுவரை அவளை மட்டும் தான் ரசித்தான். அவள் யார் என்று தெரியாது ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு பெண்ணையும் இப்படி அவனின் விழிகள் கண்ட ரசித்ததில்லை. ஏனோ அவனுக்கு உள்ளுக்குள் ஒரு ஆர்வம். பின்னழகே இப்படி தன்னை இழுக்கிறது என்றால் அவளின் முன்னழகு வதனம் எப்படி இருக்கும் ? முகத்தைக் காண ஆவலோ தூண்டியது.

ஆடுகள் கூட்டம் சென்றது இப்பொழுது தன் புல்லட்டின் வேகத்தை கூட்டியவனோ அவளைத் தாண்டி முன்னே சென்றான். கண்ணாடி மிரர் வழியாகக் கண்டவனோ ஒரு நொடி யோசித்துப் பின் அவள் யாரென புரிந்துக் கொண்டான்.

இவளையா தான் ரசித்தோம் ?அவனாலே நம்ப முடியவில்லை. அன்று அவளிடம் சண்டையிட்ட நினைவுகள் இப்பொழுது அவனுக்கு ஏனோ இன்பமாக நெஞ்சினில் தாக்கியது. அவனை அறியாது இதழில் புன்னகை பூத்தது.

ரோஜாவின் மீது பட்ட மழைத்துளிகள் கீழே சொட்டு சொட்டாக விழுவதுப் போல் அவளின் கூந்தலில் பட்டு முகத்தில் வடிந்து அவளின் மேனியில் இருந்து கீழே பூமியின் மீது விழும் மழைத்துளியாக தான் இருக்க நினைத்தான்.

அவனின் புல்லட் பாதையில் நேராகச் சென்றாலும் அவன் பார்வையோ மிரரில் பதிந்த அவளின் பிம்பத்தில் தான் இருந்தது. அவ்வளவு தெளிவாக  தெரிந்தாள். தெளிவாக தெரிவதற்காகவே அவன் வண்டியை நிறுத்தியே விட்டான்.

அங்கு ஒரு மிகப்பெரிய வேப்பமரம் ஒன்று இருக்கவே மழைக்காக ஒதுங்குகிறேன் என்ற பெயரில் அந்த வேப்ப மரத்தின் கீழ் சென்று நின்றான். அவள் இங்கு வருவதற்கு எப்படியும் நாலைஞ்சு நிமிடங்கள் ஆகிவிடும் தூரத்தில் தான் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அவள் நடந்து வரும் அந்த ஒவ்வொரு நொடியும் இவனின் விழிகளோ அவளைத்தான் கண்டது. தன்னை ஒருவன் முன் நின்று காண்கிறான் என்பதை அவளோ உணரவில்லை.

அவளுக்கு முன்னே ஒரு இரண்டு ஆட்டுக்குட்டிகள் திடீரென கத்திக் கொண்டு வந்தது. அந்த இரண்டு சின்ன குட்டிகளுமே அதன் அன்னையை இழந்திருந்தது. கூட்டத்தோடு கூட்டமாய் அவர்கள் முன்னேச் சென்றிருந்த ஆடுகள் தான். இந்த குட்டிகள் அதோடு  செல்ல வேண்டி இருக்க இதுகளால் நடக்க முடியாமல் பின்னே கத்திக் கொண்டு இருக்கவே அதனை கண்டு பின் திரும்பிக் கண்டாள். அவர்கள் தூரத்தில் சென்றிருந்தனர்.

"அண்ணே அண்ணே.. " என்று தூரத்தில் நடந்த செல்பவரை கண்டு இவளோ அழைக்க, அவருக்கு இடியிலும், மலையிலும் செவியில் விழவே இல்லை.

அந்த குட்டிகளும் நடக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்து அந்த இடத்திலேயே நின்று கத்திக் கொண்டிருந்தது. இவளும் சற்று அருகில் இருந்த ஒரு குச்சியை எடுத்து அதனை அடித்து அன்னையை நோக்கி ஓடு என்று கூறிப் பார்த்தாள். அது கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்து இவளின் கால்லை சுற்ற ஆரம்பித்தது.

'அய்யோ இது என்னடா வம்பா போச்சு ' என நினைத்து அந்த குட்டிகள் இரண்டையும் தன் கரங்களில் தூக்கினாள்.

'இப்ப என்ன பண்ண,  ஐயோ ! அவரு வேற ரொம்ப தூரத்தில் போயிட்டாரு. ஏன் குட்டிக்களா நீங்க இப்படி சேட்டை பண்றீங்க ? நான் பாவம் இல்லையா உங்களுக்கு ' என்று உதட்டை குவித்து கொஞ்சிக் கொண்டு அதன் நெற்றியில் முத்தம் வைத்து தன்னோடு அவள் அந்த இரண்டு குட்டிகளையும் அணைத்துக் கொண்டாள். அதை கண்ட ஆதிக்கோ மெய்சிலிர்த்து விட்டது அவளின் அந்த அணைப்பு.

அந்தக் குட்டிகளாக தான் இருக்கக் கூடாதா அவளின் மார்புச் சூட்டில் இந்த குளிருக்கு இதமாக அவளோடு ஒன்றி விட அவனின் உள்ளம் துடித்தது.

இது என்ன திடீரென ஒரு பெண்ணின் மீது தனக்கு இத்தகைய எண்ணம் தோன்றுகிறது. அவனுக்கு அது அதிசயமாக தான் இருந்தது ஆனால் ஏனோ யுகனிகாவை அவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது.

இது தான் காதலா தெரியாது. பார்த்ததும் காதல் வருமா தெரியாது. ஆனால் அந்த நொடி ஆதிக்கு அவளை முற்றிலும் பிடித்து விட்டது. அவளின் அந்த மென்மையான குணம் விலங்குகளின் மீது அவள் காட்டிய அந்த அக்கறை அணைப்பு அதுவே அவனை ஈர்த்தது.

 

தொடரும்...

கருத்துக்களை பகிர

https://kavichandranovels.com/community/vsv-35-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-comments/

 

This topic was modified 4 weeks ago by VSV 35 – நெஞ்சமதில் தஞ்சமவள்

   
ReplyQuote

You cannot copy content of this page