All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட்லைஃப்- 7

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Member Author
Joined: 3 months ago
Posts: 27
Topic starter  

 

நைட் லைஃப் - 7

இரவு பத்து மணி போல் நான்கு பேரும் மெத்தையில் உறங்க செல்ல யுகித்தாவின் போன் அலறியது. யாரென்று பார்க்க அவள் உடன் படித்த திவாகர் அழைத்திருந்தான். 

 

“சொல்லு டா இப்ப கால் பண்ணி இருக்க?” என கேட்க, “யுகி செம்ம கேஸ் ஒன்னு மாட்டி இருக்கு, தங்கம் கடத்துனவங்களை போலிஸ் புடிச்சி இருக்காங்க அவங்களை நியூஸ்ல போட ப்ரெஸ்க்கு இன்பர்மேஷன் வந்திருக்கு, நான் கம்பெனில நீயும் நானும் போறோம் சொல்லிட்டேன். கிளம்பி இரு பத்தே நிமிசத்துல வரேன்” என்று அவன் அவசர அவசரமாய் கூறிட, துப்பாட்டாவை எடுத்துக் கொண்ட யுகி, “சரி நான் கீழ வரேன் வந்து பிக் பண்ணிக்க” என்று கூறியவள் தோழிகளிடம் தலையசைத்து விட்டு வெளியே கிளம்பினாள். திவாகர் சீக்கிரமாய் வந்திட இருவரும் காவல் நிலையத்திற்கு சென்றார்கள். மொத்த செய்தியையும் இருவரும் கவர் செய்து விட்டு கடத்தல்காரர்களையும் புகைப்படம் எடுத்து விட்டு வெளியே வந்தார்கள். புகைப்படங்களை பார்த்துக் கொண்டே வந்த திவாகர், “யுகி எப்படியாவது நம்ம பெர்மனன்ட் ஆகணும்.. இந்த மாதிரி நடக்குற எல்லாத்தையும் நம்மலே கவர் பண்ணி நல்ல பேரு எடுக்கணும்” என ஆர்வமாய் கூறினான். 

 

“டேய் இந்த கேஸ்லாம் பத்தாது டா.. ஸ்னப் அப் நியூஸ் பெரிய விஷயம் அதனால அதை விட பெருசா ஒன்னு நம்ம குடுக்கணும்.. நம்ம ஆபீஸ்ல அந்த விஷயத்தை மக்கள் மறக்கனும்னு நினைக்குறாங்க அதுக்கு தகுந்த மாதிரி நம்ம யோசிக்கணும்” என்றவள் அவனின் ராயல் என்பில்ட் பைக்கில் ஏறி அமர்ந்தாள். 

“உனக்கு ஓட்ட தெரியுமா?” என ஆச்சரியமாய் கேக்க, ஹெல்மட்டை அணிந்தபடியே மண்டையை ஆட்டினாள். 

 

“ஸ்னப் அப் நியூஸ் ஓவர் டேக் பண்ற அளவு என்ன பண்ணலாம்? ஏதாச்சும் கிசு கிசு நியூஸ் குடுப்போமா?” என கேலியாக கேட்க காரி துப்பினாள் யுகி. அவனோ இது பழக்கம் தான் என்று நினைத்து புகைப்படங்களை பார்த்துக் கொண்டே வந்தான். ஒரு இடத்தில் மிட்நைட் பிரியாணி கடையை பார்த்தவள், “திவா பிரியாணி” என்று பல்லை காட்ட அவனும் அவளுக்கு ஏற்றார் போல் சம்மதமாய் தலை அசைத்தான். இருவருக்கும் சாப்பாடு விடையத்தில் அப்படி ஒரு ஒற்றுமை. வண்டி மீது கேமரா பையை வைத்து விட்டு இருவரும் அந்த கும்பலில் அடித்து பிடித்து பிரியாணியை வாங்கினார்கள். “எப்பா நைட் கூட இவ்ளோ கூட்டமா இருக்கே இந்தா புடி” என்றவாறே அவளிடம் ஒரு தட்டினை கொடுக்க நுகர்ந்து பார்த்தவள் அதன் வாசனையில் மெய்மறந்து நின்றாள். “பிரியாணினா பிரியாணி தான் யா” என்றவள் சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்டாள். இருவது பேர் அந்த இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு பேசிக் கொண்டு இருக்க நள்ளிரவு நேரம் போலவே தெரியவில்லை. 

 

ஆங்காங்கே கும்பலாக நின்று சாப்பிட்டுக் கொண்டு இருக்க திடீரென்று மேற்சட்டை இல்லாத ஒருவன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்து திவாகர் கேமரா பையை தூக்கிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தலைதெறிக்க ஓடினான். “டேய்.. பேக் டா” என யுகி கத்த அப்படியே தட்டை போட்டு விட்டு திவாகர் ஓடிட யுகியும் பின்னாலே ஓடினாள். அங்கு இருப்பவர்கள் எல்லாம் என்ன நடந்தது என்று அதிர்வுடன் பார்த்தார்கள். மற்றவர்கள் உடனே அவர்களின் பொருள் பத்திரமாய் இருக்கிறதா என்று கவனித்தார்கள். திவாகர் அந்த ஆடவனை துரத்திக் கொண்டு செல்ல அவனோ எங்கே செல்வது என்று தெரியாமல் ஒரு முட்டு சந்தில் ஓடினான். வேகமாய் ஓடிய திவாகர் அந்த ஆடவனின் காலை இடறி விட அவன் பொத்தென்று தரையில் விழுந்த.

 

“திருட்டு நாயே.. உன்ன” என்று பல்லை கடித்தவன் அவனின் வயிற்றிலே ஓங்கி மித்து அவனின் கேமரா பையை வெடுக்கென்று பிடுங்கினான். மேலும் இரண்டு முறை அவனை உதைத்து விட்டு திவாகர் செல்ல பார்க்க அந்த ஆடவன் அவனின் காலை பிடித்துக் கொண்டு அவனை சொல்ல முடியாத வார்த்தைகளுடன் பார்த்தான். கோவம் கொண்ட திவாகர் அவனை மேலும் உதைக்க வர அப்பொழுது தான் அந்த ஆடவனின் வாயை கவனித்தான். ரத்தம் காய்ந்திருக்க ‘நா’ துண்டிக்கப்பட்டு இருந்தது. அதில் திகைத்தவன் அந்த ஆடவனை தொட சென்றான். அவனோ மிரண்டு கையெடுத்து கும்பிட, கேள்வியாக பார்த்த திவா மேலும் பேச வர திடீரென்று அந்த இடத்திற்கு இரண்டு பேர் வந்தார்கள். எங்கே இருந்து எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை. அந்த குறுகிய சந்தில் ஆள் அரவமே இல்லை. 

 

“ஏய் இவன் கூட என்ன பண்ற நீ?” என்று கர்ஜனையாக ஒருவர் கேக்க, “என் பேக் திருடிட்டு வந்துட்டான்.. அதான் துரத்திட்டு வந்தேன்” என்றான் திவாகர். 

 

“போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து தப்பிச்சி வந்ததும் இல்லாம திருட வேற செஞ்சி இருக்கியா நட டா ஸ்டேஷன்க்கு” என்று இன்னொருவர் கூறி அந்த ஆடவனை இழுக்க அவனோ மிரட்சியுடன் எழுந்தான். 

 

“தம்பி ரொம்ப நேரம் இங்க இருக்காத கிளம்பு” என்று இன்னொருவர் கூறிட சம்மதமாய் தலையசைத்த திவாகர் அந்த சந்தை விட்டு வெளியே வந்தான். யுகி அப்பொழுது தான் மூச்சிரைக்க அவனிடம் ஓடி வந்தாள். கடையில் இருந்து வெகு தூரம் வந்திருந்தான் திவாகர். 

 

“டேய் பேக் வாங்கிட்டியா” என மூச்சிரைக்க அவள் கேக்க பையை காட்டிட, சரியாக அந்த இரண்டு பேர் சட்டையில்லாத ஆடவனை அழைத்து சென்றார்கள். “யாரு டா அவங்க?” என்று யுகி கேக்க, “போலீஸ், அவன் அக்கியுஸ்ட் போல.. தப்பிச்சி வந்து இருக்கான்” என யோசனை உடனே கூறினான் திவாகர். “கேமராக்கு ஒன்னும் ஆகலல்ல” என்று கேட்ட யுகியின் கண்கள் அந்த ஆடவனின் முதுகு தண்டின் அடிபகுதியில் இருக்கும் டேட்டூவில் பதிந்தது. திவாகர் கேமரா பத்தி கூறிட யுகி அந்த ஆடவனை காரில் ஏற்றுவதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கார் அங்கிருந்து கிளம்பிட, “டேய் போலீஸ் ஸ்டேஷன் இந்த பக்கம் இருக்கு இவங்க ஆப்போசிட் பக்கம் போறாங்க?” என்று குழப்பமாய் கேக்க, “எனக்கும் ஒன்னும் புரியல யுகி, அந்த பையனோட நாக்கும் கட் ஆகி இருந்துச்சு. எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு” என்று கூறிட அதிர்ந்த யுகி, “அப்போ நம்ம என்னனு பாக்கலாம் வா” என்றாள்.

 

“ஆனா உனக்கு ஏதாவது..” என்று அவன் கூற வரும் முன்னே, “உன் அக்கறை வெங்காயம் புரியுது.. ஆனா இது தான் என் வேலை.. நான் பண்ணியே ஆகணும்” என தீர்மானமாய் கூறியவள் நேரே அவர்கள் வண்டி இருக்கும் இடத்திற்கு சென்று வண்டியை எடுத்தாள். கண்ணெட்டும் தூரத்தில் தள்ளியே இருவரும் அந்த காரை பின்தொடர்ந்தார்கள். 

 

“திவா நீ எதுக்கும் கேமரா ஆன்லையே வச்சி இரு” என்று கூறிட அவனும் பின்னால் அமர்ந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தான். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மிகப்பெரிய பங்களா வாசலில் கார் நிக்க இருவரும் வண்டியை விட்டு இறங்கி வீடியோ எடுக்க எதுவாய் மறைந்து நின்றார்கள். வாசலிலே கார் நீண்ட நேரம் நின்றது. ஒரே ஒரு ஆள் மட்டும் காவலுக்கு நின்றிருந்தவரிடன் பேசிக் கொண்டு இருந்தான். பத்து நிமிடத்திற்கு பின்பு கார் கதவை திறந்து அந்த ஆடவனை மட்டும் இருவரும் உள்ளே இழுத்து சென்றார்கள். அந்த கார் அங்கு இருந்து அப்படியே சென்றது. இருவரும் சத்தமே இல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியே வந்த பின் தான் அடக்கி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டார்கள். 

 

“டேய் என்ன டா நடக்குது இங்க.. அப்போ இவங்க போலீஸ் இல்லையா? எதுக்கு டா மினிஸ்டர் வீட்டுக்கு வந்து இருக்காங்க இவங்க? அந்த பையன் யாரா இருக்கும்?” என கேள்வியாக கேட்டாள். 

 

“யுகி நம்ம இங்க இருக்குறது safe இல்ல.. முதல்ல வீட்டுக்கு போலாம் நாளக்கி நம்ம இதை பத்தி பேசலாம்” என்று கூறி அவளை அங்கிருந்து அழைத்து சென்றான். என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று இருவருக்குமே பலத்த சிந்தனையாக இருந்தது. யுகியை வீட்டில் விட்டு விட்டு அவன் வீட்டிற்கு சென்றான் திவாகர். 

 

அடுத்த நாள் காலையில் அனைவரும் வேலைக்கு கிளம்பி செல்ல, கம்பெனியில் திவாகரை பார்த்தவள் இரவு நடந்ததை பற்றி பேசிக் கொண்டு இருந்தாள். இருவரும் ஒரு முடிவு எடுத்தவர்களாய் அவர்களை டீம் லீட்யிடம் சென்று அவர்கள் எடுத்த வீடியோவை போட்டு காட்டினார்கள். இதை பார்த்ததும் லீட் கிருஷ்ணன் அதிர்ந்தார். 

 

“இது எத்தன மணிக்கு நடந்துச்சு? உங்களை அந்த ஆளுங்களுக்கு நியாபகம் இருக்குமா?” என்று கேட்டார். 

 

“யுகிய பாக்கலன்னு நினைக்குறேன்.. ஆனா என் கிட்ட அவங்க பேசுனாங்க சார்.” என்றிட தலையில் கை வைத்து விட்டார்.

 

“இதோட காப்பி எதுவும் வச்சிக்காதிங்க.. இந்த விஷயம் வெளிய தெரிய வேணாம்.. இதை நியூஸ்ல போட்டா உங்க ரெண்டு பேருக்கும் தான் பிரச்சனை.” என்றார் கிருஷ்ணன். அதற்கு யுகியோ, “சார் ஆனா இது ரொம்ப பெரிய விஷயம்.. இத நியூஸ்ல போட்டு அது மூலமா போலீஸ் அந்த பையனை காப்பாத்த பாப்பாங்கல..” 

 

“மத்தவன் உயிரை விட உன் உயிரை பத்தி யோசி… உன் பிரென்ட்ட பாத்து இருக்காங்க.. இந்த நியூஸ் உங்களால தான் வெளிய தெரிஞ்சிதுன்னு வச்சிக்க உங்களை தான் அடுத்து டார்கெட் பண்ணுவாங்க.. இந்நேரம் வரைக்கும் அந்த பையனை உயிரோட வச்சி இருப்பாங்களா? அவன் வேண்டப்பட்டவனா இல்ல வேண்டாதவனா என்னனே தெரியலை. இந்த விஷயத்தை இதோட மறந்துருங்க” என்று அவர்கள் மீது இருக்கும் அக்கரையில் கூறினார் கிருஷ்ணன். மினிஸ்டர் வீடு என்பதனால் அவரும் இதனை போட யோசித்தார். யுகியும் திவாகரும் மறுத்து பேச முடியாமல் அவர் அறையிலே அந்த பென்டிரைவ்வை வைத்து விட்டு வெளியே வந்தார்கள். 

 

“என்ன டா.. இந்த விஷயம் இப்படியே முடிக்க சொல்லிட்டாரு.. இது அநியாயமா இல்ல” என வருந்தினாள். “யுகி நம்ம மீடியால தான் இருக்கோம்.. உண்மை எல்லாத்தையும் வெளிய கொண்டு வர்றது அவ்ளோ சுலபம் இல்ல” என ஆறுதல் கூறினான். அரை மனதாக தலையை அசைத்தவள் மற்ற வேலையை பார்க்க சென்றாள். இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு விட்ட ரத்தினம் கிருஷ்ணனிடம் சாதாரணமாய் பேசுவது போல் பேசி அந்த பென்டிரைவ்வை எடுத்துக் கொண்டு அவர் அறைக்கு வந்து விட்டார். முழுதாய் வீடியோவை பார்த்தவர் முகத்தில் வில்ல சிரிப்பு தோன்றியது. இதனை வெளியிட்டு ஸ்னப் அப் கேஸ்யில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தார். இதனால் மினிஸ்டர் மூலம் பிரச்சனை வரும் என்று அறிந்தவர் அந்த ஆடவனை காரில் இருந்து இறக்கும் காட்சியை மட்டும் கட் செய்து வீட்டை தெரியாதபடி வீடியோவின் குவாலிட்டி குறைத்து மங்கலாய் சிசிடிவியில் பதிந்த காட்சி போலவும், கருப்பு வெள்ளை நிறத்தில் எடிட் செய்து அதனை அதனை சேனலில் முக்கிய செய்தியாக போட்டு விட்டார். 

 

மதிய வேளையில் நாளிதழ் அச்சிடும் இடத்திற்கு சென்றிருந்த யுகிக்கு திவாகரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவள் அழைப்பை ஏற்ற உடனே, “யுகி நம்ம எடுத்த வீடியோ லீக் ஆகி இருக்கு மேனேஜர் சொட்ட சேனல்ல போட்டான்.. எதுக்கும் பத்திரமாவே இரு” என்று அவசர அவசரமாய் கூறிட அதிர்ச்சியில் உறைந்தாள் யுகி.    


   
ReplyQuote

You cannot copy content of this page