About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 13
அவள் சொன்ன வார்த்தை அவனை மறுக்க முடியாத மகிழ்ச்சியிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது..
“ வெயிட், வாட் ? நீ..நீங்க என்னை கனவுல பார்த்தீங்களா? ரியலி ? ” சின்னதொரு சந்தேகம் எழுந்தது..அதனை தெளிவு படுத்திக் கொள்ளவே அவளிடம் கேட்டான்..
மெல்ல சிரித்த அவள்..“ உண்மையைத்தான் சொல்றேன் தேவா சார்..ஆரியனை எப்போ எனக்கு நிச்சயம் பண்ணாங்களோ அதுக்கு அடுத்த வந்த டேஸ்ல, குட்டி தூக்கம் போட்டாலும் நீங்க தான் கனவுல வருவீங்க.. லாஸ்ட் ஆஹ்..அது நிஜத்துலையும் நடந்துருச்சி பாருங்களேன்..சோ எக்சைடட் இப்படி நெருக்கத்துல உங்க கண்ண பார்த்ததும் நான் காணுற கனவும் ஒரே போலத்தான் இருக்கு பைன்ட் பண்ணிட்டேன்..” விழிகளை தாழ்த்தி ஒரு வித வெட்கப் புன்னகையுடன் சொன்னாள் அவனிடம்..
அவன் விழிகளில் ஒளி மின்னியது..புருவம் நெரித்து தலை சற்று கீழே குனிந்த அவனின் உதட்டில் சிறிய சிரிப்பு..அதே சிரிப்புடன் அவளைப் பார்த்தான்..
அவளுக்கே அவனை ரசிக்கும் படியாக ஆண்மையின் இலக்கணமாக இருந்தான் அவன்.. மனதில் எழுந்த துள்ளல் மறைத்து நேராக விழிகளுடன் கலந்து குரலை செருமி “ வெல் , தினமும் உங்க கனவுல நான் வந்தால் , உங்ககிட்ட வீட்டு வாடகை கேட்கலாமா ? ” மர்ம புன்னகையுடன், நகைச்சுவாயாக கேட்டான்...
உதட்டை சுருக்கி , விழிகளாலே அவனை முறைத்து “ ஓஹ்..அப்ப நான் உங்க கிட்ட சொன்னதெல்லாம் பொய்ன்னு என்கிட்டையே நீங்க விளையாடுறீங்களா சார் ? ” வேண்டும் என்றே வான் நீல நிற டி-ஷர்ட் ஒன்றினை எடுத்தாள்..
திடீர் என்ற முகிழ்ந்த அவளின் கோபத்திதை ரசித்த அவனின் கண்கள்..“ இல்லையா பின்ன ? ” குறும்புடன் கேட்டான்.. அவளின் கையில் இருந்த டி- ஷர்டினை பறித்து இருந்த இடத்திலே வைத்து விட்டு வெண்ணிற டி- ஷர்டினை கொடுக்க, முறைப்புடனே வாங்கிக் கொண்டாள் இசை..
“ அப்புறம் செகண்ட் டைம் மீட் பண்றோம்..என்கூட ஒரு காஃபி...” என்று அவன் கேட்க..
அவள் மீதான காதலை சொல்லிவிட்டான்... அவளும் மறைமுகமாக சொன்னாள்..ஒரு வேளை அவன் விளங்கி கொள்ளவில்லையா? அவனைப் பார்க்க..
“ யோசிக்கிறீங்க போல..”
“ ஆமா , உங்களை பத்திதான் யோசிச்சிட்டு இருக்கேன்..”
“ இங்கே வச்சி வெளிப்படையா எதுவும் பேச முடியாது இசை..நம்ம ரெண்டு பேத்துக்குள்ளையும் இருக்குறது பர்சனல் சோ கிரவுண்ட் ஃப்ளோர் இருக்கு அங்கே போய் பேசலாம்..” ஃபேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்தவாறு பதிளலித்தான்..
“ டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க..இமாயா கிட்ட சொல்லிட்டு வந்துர்றேன் ” என்றாள்..சிறு தலையசைப்பை கொடுத்ததும் இமாயா எங்கே என்று தேடிச் சென்றாள் அவள்..
கருப்பு நிற கோட் சூட் அணிந்து பெண்களுக்கான உடை தளத்தில் சுற்றிக் கொண்டிருந்தான் பார்த்தீபன்..
அவனின் கல்லூரி மாணவி கண்ணில் பட்டதில் இருந்து அவளைத் தேடிக் கொண்டு இருக்கிறான்..அவள் தானே விழிகளில் சிக்காமல் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டு இருக்கிறாளே..
“ நம்ம புரூப் லேடிஸ் செக்ஷன்ல எதுக்கு சுத்திட்டு இருக்கார்..அவர் தேடுறதை பார்த்தா ? அவர் ஆளை மிஸ் பண்ணி இருப்பார் போலயே..” சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “ இமாயா! ” தமக்கையின் குரல் பின்னிருந்து கேட்டதும் குர்த்தி ஒன்றினை பார்ப்பது போல் பாவனை செய்து “ ஹான் இசை ..” சாதாரணமாக திரும்பினாள்..
“ உன்னை எங்கெல்லாம் தேடுறது..சரி உனக்கு டிரஸ் எடுத்துடீயா? ” என்று அவள் கேட்க..“ எடுத்துட்டேன் தான் ஆனா பொம்மைக்கு போட்டு விட்டு இருக்குற டிரஸ் தான் வேணும்.. யார்கிட்ட கேட்குறதென்னே தெரியல இசை..” சேகமான முகத்தை வைத்து சொல்ல..“ விஷ்ணு சாரை பார்த்துடீயா? ” என்று கேட்டாள்..“ பார்த்து பேசிட்டேன் டி.. நீயும் வந்தா நல்லா இருக்கும் அதுக்காக தான் உன்னை அழைச்சிட்டு போக வந்தேன்...” என்றாள்...
“ நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துர்றேன் நீ போ இசை..”
“ சரி இசை சீக்கிரம் வா உனக்காக காத்துட்டு இருப்பேன்.."
“ ஓகே ..ஓகே ” கை அசைத்து அவளை அனுப்பி வைத்தாள்..
பொம்மைக்கு அணிவித்திருந்த உடையை இவள் எடுக்கத்தான் நினைத்தாள் , அதற்குள் இவள் பார்த்தீபன் நிற்பதை கண்டு விட சட்டென்று ஒரு இடத்தை தேடி ஒளிந்து கொண்டாள் அவள்..
இசைகவியிடம் சும்மா கதையளந்துவிட்டாள்..
“ இசை கிட்ட ஏதோ சொல்லி சமாளிச்சிட்டோம் இப்ப புரூப் கிட்ட இருந்துலையா தப்பிக்கணும்..கோட் சூட்டுமா பக்கா பிஸ்னஸ் மேன் டிரஸ்ல இல்லையா சுத்திட்டு இருக்கார்..ஒரு வேளை விஷ்ணு சார் தம்பியா இருக்குமோ? ” நாடியை தட்டி யோசிக்க, அவன் கண்ணில் அகப்படாமல் ஒளிந்து கொள்ள மறந்தாள் அவள்..
“ நீ விஷ்ணு சார் தம்பியா கூட என்னை நினைச்சுக்கலாம்..” செவி அருகினில் பார்த்தீபன் குரல் ஒலித்திட, துள்ளி விலகி நின்றாள்..
‘ ச்சே ச்சே ஒளிஞ்சிக்க மறந்துட்டேனே ' மனதிற்குள் திட்டிக் கொண்டாள்..
“ சார் அப்ப விஷ்ணு சார் தம்பியா ? ” பொறுமையை இழுத்து வைத்து கேட்க..தூணில் முழங்கையை ஊன்றி கீழ் கண்ணால் நோக்கினான்..
‘ இன்னிக்கி புரூப் கைல மாட்டனும்னு சிம்ம ராசிக்கு நல்ல காலம்னு சன் டீவில ஜாதகம் சொல்லி இருப்பாங்க போல க்கும்..’ மனதிற்குள் சலிப்பாக சொல்லிக் கொண்டாள்..
“ பை த வே.. சும்மா இருக்குறவனை உசுப்பேத்துற வேலை பொண்ணுங்களோட வேலையா தான் இருக்கு..”
“ என்னதுக்கு பொண்ணுங்களை இழுக்குறீங்க ” புரியாது கேட்க..
“ பொத்தம் பொதுவா சொன்னேன்..நீ ஏன் காண்டாகுற..? ” அவனைப் பார்க்கவே சலிப்பாக இருந்தது...
“ உனக்கு ஒரு கதை சொல்றேன் கேட்டுக்க..என் ஃபோன்க்கு காலங்காத்தாலே தூக்கத்தை கெடுக்குற மாதிரியே ஒரு ஃபோன் காலு..ஆன்சர் பண்ணா என்னமோ நான் அந்த பொண்ண ரேப் பண்ணி வயித்துல புள்ளைய கொடுத்துட்டேன்னு என் மேல பழி தூக்கி போட.. அதுவும் காலேஜ் படிக்கிற பொண்ணு மனுஷனுக்கு ஆத்திரமும் கோபமும் வருமா இல்லையா மாயா ? ”
‘ ஐயோ! நம்மலத்தான் சொல்றாரு.. நான் தான் சாரி கேட்டேனே எல்லாம் அந்த திவ்யா கிறுக்கி பண்ண வேலை போச்சி இவர் கிட்ட மாட்டனும்னு விதி தலைலயே எழுதி ஒட்டி இருக்கே..’ மனதிற்குள் அலறியவள், வெளியே தைரியமான பெண் புலி..எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்று நினைப்பவள் இமாயா..
“ சார்..அவ...அவங்க தப்பான ஆளுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்லையா..” அவனை சமாளிப்பதற்காக கூற..
“ வாட் ? இதை நீ சும்மா விட சொல்றீயா ஹான் ? என்மேல விழுந்த பழி வுமனைசர்..அந்த பொண்ணு மட்டும் கைல வசமா சிக்குனேனு வச்சிகோயேன் நிஜமாவே ப்ராக்டிகல்ல நடத்தி காமிச்சிருவேன் ” பற்களை கடித்துக் கொண்டு அவன் உறும..
அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது..அவன் உடல்மொழி பார்த்தவளுக்கு முதல் முதலாக அச்சம் அதுவும் அவன் மீது..விளையாட்டுக்கு சொல்வதாக தெரியவில்லை கொலவெறியில் இருக்கிறான் என்பது போலத் தெரிந்தது..
அவளின் உடல் மொழியை கடைக்கண்ணால் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் குத்தாட்டம் ‘ என்கிட்டையே பிரான்க்கா இருக்குடி உனக்கு எப்படி அலற வைக்கிறேன்னு பாரு சர்க்கஸ் குட்டி ’ மனதில் கருவி கொண்டு, வெளியே கொலைவெறியில் இருப்பது போல் இருந்தது அவனின் தோற்றம்..
‘ டி திவ்யா நீ மட்டும் என் முன்னாடி இருந்த ஆரியன் தங்கச்சி கூடன்னு பார்க்க மாட்டேன் என்னைய புரூப் கிட்ட கோர்த்து விட்டுடீல ’ அவள் மீது தான் அவளின் கோபம் திரும்பியது.. தற்போது இவனை சமாளிக்க வேண்டுமே..
“ சார் அந்த பொண்ணு அறியா புள்ளையாக்கும்..மனிதாபிமானதா நினைச்சு மன்னிக்குறது..” என்றதும் அவன் அவளை பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டாள்..
‘ இவள வச்சி சுத்தல்ல விடணுமே..என்ன பண்ணலாம்..’ என அவன் சிந்திக்க.. இவனிடம் மாட்டிக் கொண்டு முழித்தாள் பெண் புலி இமாயா..
“ என்னைய பிரான்க் பண்ண பொண்ணு சாரிலாம் கேட்டா..என் மேல விழுந்த பழிக்கு சரி ஆகிடுமா என்ன ? ” இல்லை என்று அவள் தலையசைக்க..
“ தட்ஸ் ரைட் , அதுனால நான் என்ன சொல்றேனோ அதெல்லாம் நீ கேட்கணும்.. சர்க்கஸ் குட்டி..இன்னிக்கி மாட்டினல்லடி..” அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்ட விதத்திலே புரிந்து போனது..
அன்று அவனிடம் வாயடித்த பெண் அவள் என்று அவளைப் பற்றி தேடி அறிந்து தான் சரியாக இங்கே வைத்து பிடித்துள்ளான்.. அவனுக்கும் அவள் இங்கு வருவாள் என்று தெரியவில்லை அதற்கு ஏற்ற போல் இயற்கை ஏற்படுத்தி கொடுத்து விட்டதே இனி எங்கணம் அவனிடம் இருந்து தப்பிச் செல்வது..
அவனை மிரட்டியோடு பார்த்துக் கொண்டு இருக்க.. அவனின் அலைபேசி அலறியது.. அவனுக்கு அழைத்து பேசியது விஷ்ணு தேவன் தான் ஆனால் அவனுடன் இமாயா இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியாது அல்லவா அதுமட்டுமா விஷ்ணுவின் காதல் விவகாரமும் அவனுக்குத் தெரியாது இனிதான் தெரிந்து கொள்ள போகிறான்..
“ என்கூட வா கிரவுண்ட் ஃப்ளோர் போகலாம்..” என்று அவன் அழைத்ததும் தான் ஞாபகம் வந்தது இசையும் வரச் சொல்லிவிட்டு தானே சென்றாள்..
“ நீங்க போங்க சார்..நானு டிரஸ் வாங்கிட்டு வந்துர்றேன்..” அவனிடம் தப்பிச் சென்று, அவளுக்கான உடையை கடை ஊழியரிடம் வாங்கி பில் போடச் சொல்லி கொடுத்துவிட்டு திரும்பும் சமயம் , அவளுக்காக நின்றிருந்தான்..
ஒரு பெருமூச்சுடன் அவள் செல்ல..அவள் பின் தொடர்ந்தான் பார்த்தீபன்..
கிரவுண்ட் ஃப்ளோரில் இருக்கும் சிறிய உணவுத்தில் இருவரும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.. நேரம் சென்றதே தவிர இருவரும் பேசிக்கொள்ளவில்லை..
“ ஜானு சிஸ்டர் எங்க தேவா சார்..” அவனிடம் பேச்சு கொடுக்க கேட்டாள்..
“ பசங்க இருக்குறதால ரொம்ப நேரமா இங்கே இருக்கல்ல இசை , அதுனால முன்னாடியே கிளம்பி வீட்டுக்கு போயிட்டாங்க..” என்றான்..
“ ம்ம்..சரி ” என்ற போது “ சாப்பிடறதுக்கு புட் ஆர்டர் பண்ணட்டுமா? ” என்று கேட்டான்..
அவளிடம் பதில் வராமல் போனது
ம், அவளைப் பார்க்க..யாரை கண்டாலோ தெரியவில்லை நாற்காலியை விட்டு எழுந்து நின்றாள் இசை..
தொடரும்..
@vsv4 இமாயாவா இருக்கும். பார்த்திபன் ட இருந்து தப்பிக்கிறேன்னு இசையோட லவ்வ கண்டு பிடிச்சிட்டா. ஆனா பார்த்திபன் கிட்ட இருந்து யாராலும் அவள காப்பாத்த முடியாது. 🥰🥰🥰
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page