All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 1.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

 

 

 

 

 

தேடல் - 1.

 

காலையில் எழுந்தவனோ தங்கள் வீட்டியில் உடற்பயிற்சிக்கென்று அமைத்திருந்த அறைக்குள் நுழைய, அங்கே ஓடுபொறியில் ஓடிக்கொண்டிருந்த நண்பனோ, அவனை கண்டு "குட் மார்னிங் மச்சி" என்று கூற,

 

 

பதிலுக்கு "குட் மார்னிங் மச்சி" என்று கூறியவனோ சட்டை கழட்டிவிட்டு அங்கிருந்த, இன்னொரு ஓடுபொறியில் ஓட தொடங்கிவிட்டான்.

 

 

ஒருமணி நேரம் அமைதியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனோ, அருகிலிருந்த நண்பனிடம் "டேய் சசி.. அவ நேத்தே டெல்லி வந்துட்டாடா.. டிராவல் பண்ணி வந்ததுல டையடாயிருக்கு பிரெண்ட் கூட ஸ்டே பண்ணிட்டு மார்னிங் வருறதா சொன்னா.. அனேகமாக இந்நேரம் கிளம்பி இருப்பா.. இன்னைக்கு அவளுக்கு பர்த்டே.. சோ அத மனசுல வச்சிட்டு ஒழுங்கா நடந்துக்க" என்று கூற,

 

 

அதைக் கேட்டு இதழ் குவித்து ஊதியவனோ "நீயாவது.. அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வையேன்டா.. இது செட் ஆகாதுன்னு.."

 

 

 

"இங்க பாரு.. அவ ஒன்னும் சின்ன குழந்த இல்ல.. எடுத்து சொல்லி புரிய வைக்கிறதுக்கு.. அவ உன்ன தான் பிடிச்சுருக்குன்னு ஒத்த காலுல நிக்கும் போது.. நான் என்ன பண்ண முடியும்"

 

 

"உன் அத்தை பொண்ணு தான அவ நீயே கட்டிக்க.. அம்மாவும் அதான் ஆசைப்படுறாங்க"

 

 

"பைத்தியம் மாதிரி பேசாதடா.. உனக்கு பிடிக்கலங்குறதுக்காகலாம் நான் அவள கட்டிக்க முடியாது.. எனக்கு அவ அத்தை பொண்ணுங்கறதயும் தாண்டி.. ரெண்டு பேரும் நல்ல பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்.. இனியும் அப்படி தான்.." என்று கூறி கடுப்பானவனை கண்ட சசியோ "டேய் ஆதி.." என்றவாறு அவன் தோலில் கை போட,

 

 

அவன் கையை தட்டிவிட்டவனோ "போடா.. அத்தை தான் புரியாம பேசுறாங்கன்னா.. நீயும் ஏன்டா.. புரியாத மாதிரி படுத்துற"

 

 

"இப்படியே பிடிவாதமா இருந்து.. அவ வாழ்கைய கெடுத்துக்குவாளோனு பயமா இருக்குடா"

 

 

"அந்த அக்கறை இருந்தா.. நீயே அவள கட்டிக்க வேண்டி தான.. அவ உன்மேல உயிரயே வச்சிருக்காடா.. அது மட்டுமில்ல நீ தான் அவளுக்கு பெர்பெக்ட் மேட்சும் கூட.. பழைய வாழ்க்கைய மறந்துட்டுட்டு தாராவ கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழ பாரு.. அவ்வளவு தான் நான் சொல்லுவேன்.. இதுக்கு மேல உன் இஷ்டம்" என்று கூறி அங்கிருந்து விடை பெற்றவனின் முதுகையே வெறித்து பார்த்தவனோ "அய்யோ கடவுளே.. அவ வாரான்னு நினைச்சாலே பயந்து வருது.. வந்து என்ன டார்ச்சர் பண்ண போறாளோ" என்று புலம்பிவிட்டு அங்கிருந்து தன்னறைக்குள் சென்றான்.

 

 

உடற்பயிற்சி அறையில் இருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்து திறன்பேசியை நோண்டி கொண்டிருந்தவனோ அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து "வந்துட்டா போல" என்று கூறியவாறே கதவை திறந்து வாசலில் நிற்பவளை கண்டு "ஹேப்பி பர்த்டேடி சரவெடி" என்று கூற,

 

 

அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லாதவளோ தன் இரு கரம் கொண்டு அவனை தள்ளிவிட்டு விட்டு வேகமாக மாடியேறி சசியின் அறைக்குள் நுழைந்து "உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க" என்று அவன் எதிரே நின்றவாறு சீற,

 

 

அதைக் கேட்டு மார்புக்கு இடையே கைகளை கட்டி நின்றவனோ "உன்ன இல்ல"

 

 

"ஒரு பொண்ணோட உண்மையான காதல இன்சல்ட் பண்றோம்ன்னு கொஞ்ச கூட குற்றயுணர்ச்சியே இல்லையா.. உனக்கு"

 

 

"சத்தியமா இல்ல"

 

 

"முடிவா என்ன சொல்ல வர.. இந்த தடவையும்.. என்னோட காதல வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டீயா"

 

 

"ஆமா.. எவ்வளவு நாள் தான் தனியாவே வாழுறது அதான் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன்"

 

 

"ஓகே பைன்.. உன் முடிவ சொல்லிட்ட.. என்னோட முடிவையும் சொல்றேன் கேட்டுக்கோ.. என் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனா அது உன் கையால மட்டும் தான்.. இல்லன்னா கடைசிவர உன் நினைப்போட வாழ கூட நான் ரெடி தான்.. பேச்சுக்கு சொல்றேன்னு நினைக்காத.. உன்மேல சத்தியமா.. அதான் உண்மை" என்று கூறி கொண்டிருக்க, 

 

 

அப்போது, அங்கு வந்தவனை கண்டு அவன் புறம் திரும்பியவளோ, தன் கைப்பையில் இருந்த பார்சலை எடுத்து அவன் கையில் வைத்துவிட்டு "இதுல பொண்ணுங்க போட்டோஸ் இருக்கு.. அத்த கொடுத்து அனுப்பினாங்க.. உனக்கு யார பிடிச்சிருக்கோ செலக்ட் பண்ணிட்டு.. இதோ நிக்குறாரே உன் பிரெண்ட் அவர்கிட்ட கொடுத்து.. எந்த பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னா.. ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில கல்யாணமாம்.. அப்படின்னு அத்தை சொன்னாங்க" என்று வரும் கண்ணீரை அடக்கி கொண்டே முகத்தை தாழ்த்தி கூறியவளோ, அவர்களிடமிருந்து விடை பெற்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

 

போகும், அவளை பார்த்தவாறே "என்னடா சொல்லிட்டு போறா"

 

 

"கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்"

 

 

"ஏன்டா, இவ்வளவு அவசரம்.. கொஞ்சம் யோசிக்கலாம்ல"

 

 

"இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.. நான் டூ டேஸ் ஃப்ரீ தான் சோ சீக்கிரம் போட்டோஸ் பாத்துட்டு கொடுத்தா.. நானும் பொறுமையா பாத்து செலக்ட் பண்ணுவேன்"

 

 

"உன்ன திருத்தவே முடியாதுடா" என்று கூறி கையில் வைத்திருந்த பார்சலை கொண்டு தன் தலையில் அடிப்பவனை கண்ட சசியோ "என்ன திருத்துறது இருக்கட்டும்.. உள்ள போனவள சமாதானம் பண்ணி கூட்டிட்டு வா.. வெளியே எங்கயாவது போகலாம் அவளுக்கும் கொஞ்சம் ரிலக்ஸா இருக்கும்"

 

 

"இந்த வெங்காய அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. பர்த்டே அதுவும் அழ வச்சிட்டு.. நல்லவன் மாதிரி பேசுறத பாரு"

 

 

"சொன்னத செய்டா.. நான் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்" என்று கூறி அவன் வெளியே சென்றதும் கதவை தாழியிட்டவனோ குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

 

இப்போது அழும் நண்பியை சமாதானம் படுத்த எண்ணி அவளறைக்குள் நுழைந்தவனோ படுக்கையில் குப்புற படுத்தவாறே அழுது கொண்டிருப்பவளின் அருகில் அமர்ந்து தலையை வருடியவாறு "தாரா.." என்று அழைத்த மறுகணம் "ஆதி.." என்று அவனை கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள்.

 

 

சிறிது நேரம், அவளை அழவிட்டு தலையை வருடியவனோ "பர்த்டே அதுவுமா ஏன்டி இப்படி அழுகுற.."

 

 

"முடியலடா.. அவன் என்ன கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்றான்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது"

 

 

"கொஞ்சம் நாள் அவன விட்டு பிடிக்கலாம்.. தானா வழிக்கு வருவான் பாரு" என்று கூற,

 

 

அதைக் கேட்டு விரக்தி புன்னகை வீசியவளோ நண்பன் தனக்காக வருந்துவதை கண்டு, அவனை வம்பிழுக்க எண்ணி "அது சரி.. எனக்கு இன்னைக்கு பர்த்டே ஒரு விஷ் கூட பண்ணனும் தோணவே இல்லைல"

 

 

"கொய்யால.. டோர் ஓபன் பண்ணினதும் வீஷ் பண்ணினேன்.. நீ அதெல்லாம் கேக்குற நிலமைலயா இருந்த.. வந்ததும் உன் ஆளோட தரிசனம் காண.. என்ன தள்ளிவிட்டுட்டு ஓடிட்டு.. மனசாட்சியில்லாம உன்னால எப்படிடி இப்படி கேக்க முடியுது"

 

 

"ஈஈ.. நான் இருந்த காண்டுல காது கேட்டிருக்காது போல.."

 

 

"வாயில அசிங்கமா வருது.. என் வாய கிளராம போய் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா.. வெளிய போகலாம்" என்று கூறிவிட்டு தன்னறைக்கு சென்று ரெடியாகி சோஃபாவில் அமர்ந்து, அவள் கொடுத்த பார்சலை பிரித்த சமயம் அவனின் திறன்பேசி அலற, அழைப்பை ஏற்றவனோ "ஹலோ அம்மா"

 

 

"என்னடா தாரணி வந்துட்டாளா.. நான் பொண்ணுங்க போட்டோஸ் கொடுத்து விட்டேனே கொடுத்தளா.. நீ பிரிச்சி பாத்தியா"

 

 

"அம்மா அம்மா போதும்.. உங்க அத்தன கேள்விக்கும் பதில் சொல்லியே நான் டையட் ஆகிடுவேன் போல.. கொஞ்சம் ப்ரேக் விடலாமே"

 

 

"சரி சொல்லு டா.. பொண்ணுங்க போட்டோஸ் எல்லாம் பாத்தியா.. உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா"

 

 

"அம்மா.. பொறுமையா பாக்கலாம் என்ன அவசரம்.. அவுட்டிங் போக வேண்டியிருக்கு.. எல்லாம் முடிச்சிட்டு ஃப்ரீயானதும் பாத்துட்டு சொல்லுறேன்" 

 

 

"சரி சரிடா.. சசி பையனும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதா அவங்க அம்மா சொன்னாங்க.. கேக்கவே சந்தோசமா இருந்துச்சு.. எங்க அவன் வாழ்க்க இப்படியே போயிடுமோம்ன்னு பயந்துட்டேன்.. அடுத்து மறுபடியும், அவன் மனசு மாறுறதுக்குள்ள சீக்கிரம் அவங்க அம்மா கல்யாணம் பண்ணி வைக்க ஆசப்படுறாங்க.. ரெண்டு பேரும் போட்டோ பாத்துட்டு.. எந்த பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டீங்கன்னா ஒரே மேடையிலயே கல்யாணம் வச்சிடலாம்"

 

 

"சரிமா.. பாத்துட்டு சொல்றேன்.. நீங்க இருக்கிற அவசரத்துக்கு இன்னைக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்க போல.."

 

 

"ரொம்ப பேசாதடா.. எனக்கு கிட்சென்ல கொஞ்சம் வேலை இருக்கு.. அப்புறம் கூப்பிடுறேன்" என்று கூற, அழைப்பை துண்டித்தவனோ கையிலிருந்த பார்சலை பிரித்து அதிலிருந்த புகைப்படம் ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டிருந்தவனின் கண்ணில் ஒரு பெண்ணின் புகைப்படம் பட, அப்புகைப்படத்தை கண்டதும் ஆடவனின் இதழில் ஒரு வெக்க புன்னகை ததும்பியது.

 

 

புகைப்படத்தை வருடியவாறே கீழே இருந்த அவளின் பெயரை படித்தவனோ அவளை செல்லமாக "மகிழ்.." என்று மனதிற்குள் அழைத்தவனின் எண்ணமோ காலத்தை பின்னே நோக்கி அழைத்து சென்றது.

 

 

 

ஒரு வாரத்திற்கு முன்பு,

 

 

டெல்லியிலிருந்து 300 கிலோ மீட்டரை கொண்ட உத்தர்காந்த் மாநிலத்தை சேர்ந்த மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் மிசூரி (Mussoorie) மலைக்கு வேலையால் மனதில் உண்டாகும் அழுத்ததை குறைக்க எண்ணி, அடிக்கடி ஆதி இங்கே வருவதுண்டு, அவனுக்கு மனதிற்கு பிடித்தமான இயற்கையின் அழகை ரசிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று, 

 

 

உத்தர்காந்திற்கு வேலை விஷயமாக வந்தவன் வேலையெல்லாம் முடித்துவிட்டு, இந்த மலையை நோக்கி காரை செலுத்தியவனோ, மலை பகுதிக்கு கீழே ஓரமாக காரை நிறுத்திவிட்டு நடந்து வந்து மலை ஏற தொடங்கிவிட்டான்.

 

 

சிறிது தூரம் மலை ஏறியவனின் கண்ணில் பட்டது என்னவோ மலை உயரத்தில் கீழே பார்த்தவாறு நின்றவளை கண்டு 'தற்கொலை செய்து கொள்ள போகிறாளோ' என்று நினைத்து பயந்தவன், அவளை காக்க எண்ணி வேகமாக மலையேறி அவளின் பின் நின்றவாறு அவளின் கையை பிடித்து இழுக்க, அவளோ "ச்சோட் முஜே.. ச்சோட் முஜே.. க்ருப்பயா தோ ச்சோட் முஜே" (விடுங்க விடுங்க.. யார் நீங்க.. என்ன விடுங்க பிளீஸ்) என்று கூற, தன்னை சாக தான் விட சொல்கிறாள் என்று நினைத்தவனோ, அவளை இழுத்து கன்னத்தில் ஓங்கி பளாரென்று அறைய, தான் அடித்த வலியில் கன்னத்தில் கைவைத்து கண்ணீர் வடித்தவாறு தன்னை நிமிர்ந்து பார்ப்பவளின் முகத்தை முழுமையாக கடந்ததும் வேகமாக துடித்த இதயமோ, 'அவள் தனக்கானவள்' என்று உரைக்க, அதை உணர்ந்த ஆடவனோ பார்த்த நொடியில் தன் இதயத்தை கவர்ந்தவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

 

 

அவளோ தீயாய் முறைத்தவாறே "தும்னே முஜே க்யூன் மாரா? ( நீங்க.. எதுக்கு என்ன அடிச்சீங்க) என்று தான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் நிற்பவனின் முகத்திற்கு நேரே சொடகிட்டவளோ "ஜாவாப் தோ" (பதில் சொல்லுங்க) என்று தான் கேட்டதற்கு முறைப்பை பதிலாக அளித்தவனை கண்டு "கிறுக்கு பையனா இருப்பான் போல" என்று வாய்க்குள் முனுமுனுத்தது, அவனின் காதில் விழ "வாட்" என்று  சீறினான்.

 

 

அவளோ "அய்யோ.. இவனுக்கு தமிழ் தெரியுமான்னு வேற தெரியலயே.. இப்போ என்ன சொல்லி சமாலிக்கிறது இருக்கிற காண்டுல மறுபடியும் அடிச்சிட்டான்னா.." என்று கூறி கன்னத்தை பொத்தியவாறு "நத்திங்.." கூறியவளின் செயலை கண்டு இதழ் கடித்து சிரித்தவனோ "நீ கிறுக்கு பையன்னு சொன்னது எனக்கு நல்லாவே கேட்டுச்சு.. தற்கொலை பண்ணிக்க டிரை பண்ணின உன்ன காப்பாத்தலாம்ன்னு வந்ததுக்கு.. அப்படியே போய் சேருன்னு விட்ருக்கணும்.. ஹெல்ப் பண்ண வந்து உன்கிட்ட பேச்சு வாங்குறேன் பாத்தியா.. என் கிரகம்" என்று புலம்பியவனை கண்டு அதிர்ந்து விழித்தாள்.

 

                    தேடல் தொடரும்...

 

இப்படிக்கு 

Vsv42😍😍


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 8 months ago
Posts: 124
 

@vsv42 மகிழ் - ஆதி, சசி - தாரணி இவங்க தான் ஜோடியா. சூப்பர்


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

@vsv11 pakkalame.. nandri sis


   
ReplyQuote

You cannot copy content of this page