All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 10

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 10

 

அது மெட்ரோ ரயில். அவள் ஏறும் முதல் மெட்ரோ அது. 

 

நிலையத்திற்குச் சென்று நகரும் படிக்கட்டின் மூலம் கீழே இறங்கச் சொன்னதுமே, உடைமைகளை இளாவிடம் கொடுத்து விட்டு முதல் ஆளாக அவள் இறங்கிச்‌ சென்றாள். பின் மேலே வரும் படிக்கட்டின் உதவியுடன் மேலே வந்து, ஒவ்வொரு பெட்டியாக வாங்கிக் கொண்டு கீழே இறங்கி பின் மேலே ஏறி விளையாட, 

 

"கோகிலா!. நீ என்ன சின்னப்பிள்ளயா?" என்ற அதட்டல் அவளை அப்போதைக்கு அமைதிப்படுத்தினாலும் பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு, ஒற்றை வழிப் பாதையில் செல்லும் போதும்‍, ரயில் வந்து நின்றதும் மறைந்த குறும்பு மீண்டும் தலை தூக்கியது. 

 

துள்ளிக் குதித்து உள்ளே ஏறியவளுக்கு மத்திய வேளையில் கூட்டமில்லாது காத்தாடிய ரயில் பெட்டி வசதியாய் போனது.

 

கண்ணாடி வழியே தெரிந்த மும்பையை விழிகளை விளங்காது 'அது என்ன அத்தான்…?' 'இந்தப் பில்டிங்ல என்னென்ன இருக்கு?' என வளவளத்தபடி வந்தவளுக்கு, அவனும் சலிக்காது பதில் தந்தது நான் ஆச்சரியம். 

 

அவளின் துறுதுறுப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.  

 

சில மணி நேரம் சென்றபின், 

 

"அது தா zeron consultant." என ஒரு கண்ணாடி மாளிகையைக் காட்டி, "அதுல ஃபேர்த் ப்ளோர்ல நீ வேல பாக்கப் போற." என்றான்.

 

"வாவ்!!...." என வாயைப் பிளந்தவள் அந்தக் கட்டிடம் கண்ணை விட்டு மறையும் வரை தலையைத் திருப்பவே இல்லை. 

 

"அத்தான் உங்க அப்பார்ட்மெண்ட் எப்ப வரும்? ஜங்ஷன்ல இருந்து ஒரு மணி நேரத்துக்குள்ள உங்க வீடு வந்திடும்னு மாமா சொன்னாங்க. நாம நாலு மணி நேரமா சுத்திட்டு இருக்கோம். இன்னும் ஏ உங்க அப்பார்ட்மெண்ட் வரல?" என்க,

  

"என்னோட அப்பார்ட்மெண்ட் மும்பைல பாந்த்ரா ஏரியால இருக்கு. நாம இப்ப நவி மும்பைல இருக்கோம்." 

 

"மும்பை, நவி மும்பை. ரெண்டும் ஒன்னில்லயா?"

 

"நோ."

 

"பக்கத்துல பக்கத்துல."

 

"நீ சவுத், நா நார்த். நமக்கு இடைல 30 கிலோ மீட்டர் தான்."

 

"அப்ப நீங்க என்ன பாக்கனும்னா இதே மாறிப் பல மணி நேரம் ட்ராவல் பண்ணித்தா வரனுமா.?"

 

"ஆமா."

 

"Oh my god!!... நா இப்ப என்ன பண்ணுவேன். எனக்கு பாஷ புரியாதே. உதவிக்கி நீங்க இருப்பிங்கங்கிற தைரியத்துல தா, நா பெட்டியோட வந்தேன். ஐயோ அவ்ளோ தானா? என்னோட அறைகுறை இங்கிலீஷ் வச்சி எப்படி நா ஒரு வர்ஷம் ட்ராவல் பண்ணுவேன். உனக்கு அறிவே இல்ல கோகோ, என்ன ஏதுன்னு தெரியாம காண்டராக் வரைக்கும் சைன் பண்ணி வேலைக்கின்னு வந்து நிக்கிற. அத்தோட அத்தான் இருக்காருங்கிற தைரியத்துல எதையும் விசாரிக்காம... ஹா...ங்... இப்ப நா என்ன பண்றது." எனப் புலம்ப, 

 

"கோகோ நா பீஏ வேல பாக்குறேன். வீட்டுக்கு வர்றது லேட் நைட் ஆகும். உங்கூடவே இருக்குறது கஷ்டம். 

 

அத்தோட உன்ன எங்கூட தங்க வைக்க முடியாது. பக்கத்துல வீடு பாத்தா டெய்லி நீ மூணு மணி நேரம் தனியா போய்ட்டு, தனியா தா வந்தாகனும். ஹாஸ்டல் உனக்குச் செட்டாகாது. 

 

அதான் உன்ன சேஃபான இடமா பாத்து வைச்சிருக்கேன். என்னோட ஃப்ரெண்ட் வாடகைக்கு இருந்த ஃப்ளாட் தான். அந்த ஃப்ளாட் ஓனர் கூடப் பக்கத்து அப்பார்ட்மெண்ட்ல தா இருக்காங்க. தமிழ் ஃபேமிலி தான். உனக்கு எந்த உதவினாலும் அவங்க செய்வாங்க. அவங்க பொண்ணு கூட நீ வேல பாக்கப் போற காம்ப்ளக்ஸ்ல தா வொர்க் பாக்குறா. 

 

நீ பொண்ணுங்கிறதுனால அவங்க கூட தா தங்கச் சொன்னாங்க. பட் உனக்கா ப்ரைவசி இருக்காது. ஏற்கனவே ஆள் தங்குன ஃப்ளாட்டுங்கிறதுனால எதுவும், நாம வாங்க வேண்டியது இல்ல." என அவன்‌ சொன்ன சொற்களைக் கேட்கமாட்டேன் என்பது போல் திரும்பிக் கொண்டாள் அவள். 

 

நெரூள். இங்குத் தான் கோகோ தங்க வீடு பார்த்துள்ளான். 

 

‘இத வீடுன்னு சொன்னா சொன்னவனோட கண்ணுல கண்டிப்பா‌ கோளாறு இருக்குன்னு அர்த்தம்.’ என்பது கோகோவின்‌ எண்ணம். 

 

ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவு தான். ஆனால் லக்கேஜ்ஜிற்காக ஆட்டோவைப் பிடித்து ஏறி அமர்ந்தனர்.  

 

உயரத் தூக்கிய கழுத்தை இறக்கவே மறந்து, வானுயர கட்டப்பட்ட அடுக்குமாடியை பார்த்தபடி வந்தவளின் கழுத்து தானா இறங்கியது அந்த அப்பார்ட்மெண்ட்டை பார்த்து. 

 

"அது தா அப்பார்ட்மெண்ட்டா? இங்க தா நா தங்கனுமா?"

 

"பழைய அப்பார்ட்மெண்ட் கோக்கி." 

 

"எப்ப சத்ரபதி சிவாஜி காலத்துல கட்டுனதா.?" என்றவளை முறைத்தவன் வாட்ச்மேனிடம் இருந்த நோட்டில் தன் பெயரை எழுதி விட்டு உள்ளே சென்றான். 

 

மற்ற அனைத்து கட்டிடமும் புத்தம் புதிது என்று சொல்லும் படி பளிச்செனப் பல்லைக் காட்ட, கோகோ தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த அடுக்குமாடி கட்டிடம், கறை படிந்த பல்லைப் போல் காட்சி தந்தது. தான் வசிக்கப் போகும் கட்டிடத்தைப் பார்க்கவே மனம் ஒப்பவில்லை. 

 

'இதில் எப்படி?' என்ற எண்ணத்துடன் இளவேந்தனை பின் தொடர்ந்தாள் கோகோ. 

 

எட்டாவது தளம், அவளுக்கென இளா பார்த்து வைத்த வீடு உள்ளது. 

 

"நீ ஃப்ரெஸ்ஸாகிட்டு வா. நா போய்ச் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்." எனச் சென்று விட்டான்.

 

சோஃபாவை விரித்து விட்டால் அது பெட், மடக்கி வைத்தால் அது சோஃபா. அதன் பக்கவாட்டில் இருவர் சேர்ந்து நிற்கலாம். ஐந்து பேர் மொத்தமாக வந்து நின்றால், 'கூட்டம் கும்பல் ஜாக்கிரதை' என்று அட்டை மாட்டும் சூழல். 

 

நல்ல வேளையாக சோஃபா இருந்தது. அது மட்டுமே இருந்தது. சுவரில் கடிகாரம். ஒரு மின் விளக்கு. அதுவும் அப்போது எரியாது மக்கர் செய்தது. சமையலறை, ஒரு வழிப் பாதைபோலிருந்தது.

 

ஆனால் கோகோவின் நல்ல நேரம் அங்குச் சமையல் செய்வதற்கு சில பாத்திரங்கள் இருந்தன. இருந்தும் என்னப் பிரயோஜனம். 

 

பால்கனி என்று ஒன்று இருந்தது. அது ஒரு அடி ஸ்கேலின் அளவு தான் இருக்கும். அதிலும் பூந்தொட்டிகளைத் தொங்க விட்டு இடம் நிரப்பப்பட்டு 

இருந்தது. 

 

“கொஞ்சம் உடம்பு வச்சாக் கூட இதுக்குள்ள போக முடியாது போலயே.” எனப் புலம்பியபடி வீட்டைச் சுத்தம் செய்து குளிக்கும் எண்ணத்துடன் குழாயைத் திறந்தால் நீர் நூல் விட்டுக் கொண்டிருந்தது.  

 

"அத்தான் தண்ணி சரியா வரமாட்டேங்கிது. உப்பு அடச்சிருக்கும் போல." என இளாவிற்கு ஃபோன் செய்ய, "அதெல்லாம் நல்லாத்தா வரும். குறை சொல்லாம வேலையப் பாரு." என்றான்.

 

"நல்லா வருதா!?. ஏதோ குழாய் மூலமா கங்கை நதியே வர்ற மாறில பேசுறாரு." என முணங்கியபடியே சுத்தம் செய்தாள்.  

 

"நீ டயர்டா இருக்கியா?."

 

"இல்ல. குத்தால அருவில குளிச்சதுனால புத்துணர்ச்சியோட இருக்கேன்." என்றாள் கடுகடுப்பாக. 

 

"சரி நீ தூங்கு. ஊர சுத்திக் காட்டலாம்னு நினைச்சேன்." 

 

"இதோ! வந்திட்டேன் அத்தான்." என்றவள் கரம் கோர்க்க வர, 

 

"விலகி நின்னு கூட ஊர் சுத்தலாம்." என்று ஒரு அடி இடைவெளி விட்டு நடந்தான்.

 

அன்றைய இரவு முழுவதும் இருவருக்கும் உறக்கமே இல்லை. அவளுக்குப் பிடிக்கும் என்று அனைத்து இடத்தையும் சுற்றிக் காட்டினான். அதில் அவள் வேலைக்குச் சென்று வரும் வழியும் அடக்கம்.

 

எங்கு ஏற வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற அடிப்படைகளைக் கூறியிருந்தான்.

 

"நாளைக்கி நீ ஜாப்ல ஜாயின் பண்ணனும். ஆல் தி பெஸ்ட்." என்றவன் நாளை அவளின் அலுவலகம்வரை வருகிறேன் என்க, அவனுக்குப் பலமான கைக்காட்டலை தந்து அனுப்பி வைத்தாள் கோகோ. 

 

"நா என்ன எல்கேஜி பாப்பா வா?. ஸ்கூல்ல கொண்டு போய் விட்டு, ஜன்னல் வழியா எட்டி எட்டி பாத்து, ஸ்கூல் முடியுற வர நின்னு ரிட்டன் கூட்டீட்டு போக. நா பாத்துப்பேன் அத்தான்." என்றவளின் நம்பிக்கை கூட அவனுக்கு இல்லை.

 

அவன் அறிந்தவரை ஏதோ குளறுபடி நடந்துள்ளது. அது தங்கள் மீது இல்லை தான். ஆனாலும் எப்படி எவ்வித அனுபவமும் இல்லாத கோகோவை அவர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்‌ என்ற எண்ணம் தோன்ற,

 

 "நீ மேனேஜ் பண்ணப்பல்ல." என்றவனிடம் தலையை வேகமாக ஆட்ட, 

 

"எதுவும் ஒன்னுன்னா கால் பண்ணு. நா உடனே வந்திடுவேன். ஆஃபிஸ்ல என்ன நடந்தாலும் சொல்லு." என்றவனுக்கு ரிபேக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தெரியாது. 

 

"என்னோட விருது கனவ நிறைவேற்றாம நா இந்த இடத்த விட்டு... ஆமா இந்த இடத்தோட பேரு என்ன சொன்னிங்க.?" எனக் கேட்டுத் தெரிந்து கொண்டவளுக்கு குதுகலம்.

 

தன்‌ ராஜ மாதா ரிபேக்கா உடன் பணி புரியும் வாய்ப்பு அல்லவா இது. 

 

பொழுது அழகாய் புலர்ந்தது.

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 11

https://kavichandranovels.com/community/topicid/113/


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 4 months ago
Posts: 60
 

@vsv11 🤣🤣🤣 coco ninaichale pavam paduratha sirikuratha theriyalaye..mathavagala kadhara vidama iruntha okay 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

@vsv4 அவா கதற தான் விடுவா. நன்றி தேவிசை சிஸ்.  🥰🥰🥰


   
ReplyQuote

You cannot copy content of this page