About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 6
“பர்ஸ்ட் நைட்டா… யோவ்வ் என்ன விளையாடுறீயா நீ?.. நான் குடும்ப கஷ்டத்துக்கும், எங்கக்காவோட கல்யாணத்துக்கு காசு சேர்க்க வேலைக்கு வந்தா.. நீ பாட்டுக்கு பர்ஸ்ட் நைட்டுக்கு வா ன்னு சொல்லுற?.. இங்கே பாரு என்கிட்ட இந்த வேலையெல்லாம் வச்சிக்காதே.. அப்புறம் கதம் கதம் பண்ணி விட்டுருவேன்” என அவள் இரு கைகளையும் வெட்டுவது போன்று கையை காட்டிவிட்டு பட்டாசாய் பொறிந்து தள்ள,
“முடிச்சிட்டீயா?.. இன்னும் இருக்கா?” என கை இரண்டையும் குறுக்காக கட்டியபடி நின்றிருந்தவனின் தோரணயைக் கண்டு எரிச்சலுடன்,,
“என்ன சார் ரொம்ப நக்கல் பண்றீங்க?..” என்றவளை ஒற்றைக் கையை உயர்த்தி தடுத்தவன்,,
“கவிதா?” என்றதும் அங்கிருந்த சேரை ஒழுங்குப்படுத்திய பெண் திரும்பிப் பார்த்தாள்..
“நாளைக்கு ஆறு மணிக்கு பர்ஸ்ட் நைட் வந்திரு” என அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தினான்..
அவளும் லேசாக சிரித்துக் கொண்டே, “எங்கே அண்ணா வரணும்?” என்றவளை திகைத்துப் பார்த்தாள் மதி..
“எங்கே வரணுமா?” என்றவள் ஓரக்கண்ணால் அங்கிருந்த அவிரனை சந்தேகமாக பார்த்தாள்…
“அவனா நீ?” என ஒரு கேவலமான பார்வையை அவன் மீது செலுத்தினாள்…
அவளின் எண்ணம் போகும் பாதையை அறிந்தவன்,
“ஹேய்ய்ய.. லூசு.. நாம பண்ணப் போறது.. நம்ம ஹெல்த் மினிஸ்டரோட பொண்ணுக்கு நடக்கப்போற பர்ஸ்ட் நைட்க்கு.. நாளைக்கு அந்தப் பொண்ணுக்கு கல்யாணம். ஈவ்னிங் நாம பர்ஸ்ட் நைட் அலங்காரம் பண்ண மினிஸ்டரோட பார்ம் ஹவுஸ்க்குப் போறாம்.. அதுக்கு 5 பேரை அழைச்சிட்டுப் போறேன்.. அந்த டெக்ரேஷன் பண்றதுக்கு தான் உன்னை வா ன்னு சொன்னேன்.. போதுமா?”
“டெக்ரேஷன் பண்ணப் போறோமா?” என மழுப்பலாக கேட்க,
“பின்னே உன் கூட பர்ஸ்ட் நைட் கொண்டடாவா கூப்பிட்டேன்?” என்றவனின் குரலே சற்று இறுகியிருந்தது..
“இங்கே பாரு நீ ரொம்ப கஷ்டப்படுறன்னு மைதிலி சொன்னா. அவளுக்காகத் தான் உன்னை நான் வேலைக்கு சேர்த்தததே.. இந்தக் காசையெல்லாம் எடுத்துட்டுப் போ நாளைக்கு வா. வந்துட்டா சப்பை மூஞ்சிக்காரி” என்றவனை பார்த்து சமாளிப்பாக சிரித்தவள், அங்கிருந்து குடுகுடுவென ஓடிச்சென்று தன் போனை தான் எடுத்தாள்..
அவள் அழைத்தது என்னவோ அருவிக்கு தான்.. ஆனால் அவள் தான் பேசக்கூடிய நிலையிலேயே இல்லையே.. மனம் முழுவதும் தீவிர சிந்தையில் தான் இருந்தது..
இப்பவும் அவளுக்கு துகிலன் சொன்ன வார்த்தை தான் ஓடிக்கொண்டேயிருந்தது.. அவர் ஏன் அப்படியொரு வார்த்தை சொன்னார்.. நடந்த கலவரத்தில் எதையாவது சொல்லியிருப்பார் என அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிவிட்டு வந்தாலும் மனதின் ஓரத்தில் அதைப் பற்றிய சிந்தனைகள் ஓடிக் கொண்டேயிருந்தது..
“ப்ச்ச்” சலிப்பாக வீட்டிற்குள் நுழைய, அங்கு ஸ்வீட் பாக்ஸூடன் +நின்றுக் கொண்டிருந்த தங்கையை தான் புருவம் சுருக்கினாள்..
“அக்கா வந்துட்டீயா?.. நான் எத்தனை தடவை போன் பண்ணேன்?.. ஏன் எடுக்கலை?” என்ற உற்சாக குரலில் உடைந்துப் போனாள் அருவி.
அவளால் அந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவரவே முடியவில்லை..
“பஸ்ல வந்தேனா அந்த சத்தத்துல எதுவும் கேட்கலை” என்றவளின் முன்பாக வந்து நின்றார் செவ்வந்தி..
“உன் பைக்குக்கு என்னாச்சி?” என்ற பின்பு தான் அவளுக்கு பைக்கை பற்றிய நியாபகமே வந்தது..
“பைக்க்க.. அம்மா.. அது” என இழுத்துக் கொண்டிருந்தவளுக்கு கண்களில் கண்ணீர் ததும்பியது..
ஏனோ அத்தனை நேரம் இருந்த தைரியம் அவளை விட்டுச் செல்ல தன் தாயின் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்..
திடீரென்று இப்படி உடைந்து அழுத அருவியை திகைத்துப் பார்த்தாள் மதி..
“அக்கா என்னாச்சி க்கா?” என மதி ஒரு புறம் கேட்க,
“ஹேய்ய் என்னடி ஆச்சி.. அருவி ம்மா. அம்மா கிட்ட சொல்லுடா” என்ற குரலில் இன்னும் உடைந்து அழ ஆரம்பித்தாள் அருவி..
“இன்னைக்கு வருண் வந்தான் மா?” என்றவள் வருண் பேசிய பேச்சை மட்டும் சொல்லிக் கொண்டே அழுதாள். ஆனால் சிறிதும் துகிலன் கடைசியாக பேசிய வார்த்தைகளை பற்றி மூச்சே விடவில்லை.
அவளுக்கே அதைப் பற்றிய தெளிவில்லை. அப்படியிருக்க, அதைப் பற்றி ஏன் பேசுவானேன் என நினைத்து தான் மறைத்தாள். ஆனால் அதுவே பிரச்சினையின் விடியலாய் இருக்கும் என்பதை அவள் அக்கணம் எதிர்பாக்கவில்லை.
“அக்கா அந்த வருண் இவ்வளவு பேசியிருக்கான்? நீ சும்மாவா விட்ட? அவனை நாலு வெளு வெளுத்துட்டு வந்திருக்கலாம்ல? இரு அவனை என்ன பண்றேன் பாரு” என்ற மதியிழகியின் கையைப் பிடித்து இழுத்தவள்,
“அவனை மூர்த்தியும், அவரும் சேர்ந்து நல்லா அடிச்சிட்டாங்க” என்றவளுக்கு துகிலனை அண்ணா என்றழைக்க ஏனோ நா தடுமாறியது.
“சரி விடுடி.. போய் முகத்தை கழுவிட்டு வா.. காபி போட்டுத் தர்றேன்” என செவ்வந்தி அடுப்பாங்கரையை நோக்கிச் சென்றிட,
“அந்த அவரு எவரு க்கா?” என கண்களில் குறும்பு மின்ன கேட்டாள் மதி..
“அவரா? அப்படியெல்லாம் யாருமில்லையே” என்றவள் வேகமாக பின்னால் செல்ல, மதியும் அவள் பின்னாடியே சென்றாள்.
“அக்கா என்கிட்ட எதையோ நீ மறைக்கிற?.. சைக்கிள் கேப்புல அம்மாக்கிட்ட நீ யாரையோ அவருன்னு சொன்னீயே.. அது எவரு?” என கரெக்டாக பாய்ண்ட் பிடித்து பேசியவளைக் கண்டு திருதிருவென விழித்தாள் அருவி..
“அப்படில்லாம்…..” என மழுப்பலாக பதில் சொல்ல முயன்ற அருவியை பார்த்து கையை குறுக்காக கட்டியபடி அழுத்தமாக நின்றாள் மதி..
“அக்கா… ஒழுங்கா இப்போ என்கிட்ட சொல்லுறீயா?.. இல்லை அம்மாக்கிட்ட சொல்லட்டுமா?” என்றதும் படபடப்பாக திரும்பினாள் அருவி..
“ஏன்டி என்னை சாவடிக்கிற?.. அது... அது.. யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டீயே?” என கிசுகிசுக்கும் குரலில் ரகசியம் பேச,
“யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன்.. சொல்லு க்கா” என்றவளின் காதோரம் குனிந்தவள்,
“உனக்கு துகிலன் அண்ணா தெரியும்ல” என ரகசியக்குரலில் கேட்க,
“ஆமா உன் ஓனர்.. போன தடவை ஆயுத பூஜைக்கு கூட பார்த்தேனே. சும்மா சூப்பரா ஹீரோ மாதிரி இருந்தாங்க.. ஆமா அவுங்களுக்கென்ன?” என்றவளின் காதோரம் குனிந்தவள்,
“அவரு.. என் கூட காலம் முழுக்க வாழணும்னு ஆசைப்படுறேன்னு சொன்னாருடி” என சொல்லி முடிப்பதற்குள் வாயை பிளந்தபடி நின்றாள் மதி..
“நெசமாவா க்கா சொல்லுற?. அந்த அண்ணனா அப்படி கேட்டாக..”
“சத்தியமா அவுகதாண்டி கேட்டாக.. எனக்கு அவுக கேட்டதுல இருந்தே படபடன்னு வந்திருச்சி. என் கையைப் பாரு எப்படி ஜில்லுன்னு இருக்குன்னு” என்றவள் மதியின் கையை தொட, அவள் சொன்னது போலவே அருவி கைகள் சில்லிட்டு தான் இருந்தது..
“நீ என்னக்கா சொல்லிட்டு வந்தே?” என ஆர்வமாக கேட்ட மதியை சுவாரசியமே இல்லாமல் பார்த்தாள் அருவி..
“என்னடி சொல்லணும்.. ஒன்னுமே சொல்லலை.. எதுவும் சொல்லவும் தோணலை எனக்கு.. அப்படியே வந்திட்டேன்” என பெருமூச்சு விட்டபடி கயிற்றுக்கட்டில் சரிந்து வான் நோக்கி படுத்தாள் அருவி…
“வாழ்க்கை என்கிட்ட மட்டும் ஏன்டி இப்படி கண்ணாமூச்சி விளையாடுது?” என கண்களை மூடியபடி படுத்தவளின் விழியோரம் சிறு கண்ணீர்..
“எனக்கென்னமோ?.. அவுக உன்னை காதலிக்கிறாருன்னு நினைக்கிறேன்” என சொல்லிக் கொண்டே அருவி மேலேயே படுத்தாள் மதி..
“நீ வேற ஏன் டி.. நான் எங்கே அவர் எங்கே?.. எனக்கும் அவருக்கும் ஏணி வச்சாக்கூட செட்டாகாது.. இதெல்லாம் படிக்குற கதையில, படத்துல ரசிக்கலாம்.. ஆனா நிஜத்துல இதெல்லாம் நடக்காத ஒன்னு..” என இருவரும் கொல்லைப் புறத்தில் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அருவியின் போன் அலறியது.
“ஏய்ய்ய்.. அருவி உன் போன் தான்டி” என்ற செவ்வந்தியின் குரலில் வேகமாக போனை எடுத்துப் பார்த்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. அது துகிலனின் நம்பர் தான்..
“யாருக்கா?” என பின்னால் நின்று போனை எட்டிப் பார்த்த மதியின் இதழ்களில் சிறு வெட்கப் புன்னகை..
அதில் அழகாக துகிலனின் போட்டோவுடன் அவன் பெயரும் சேர்ந்தே வந்தது..
“அக்கா உன் அவரு க்கா” என சிரிப்புடன் சொன்னவளை திகிலடித்தாற் போன்று பார்த்தவள்,
“ஏய்ய்.. சும்மா இரு டி அம்மா காதுல விழுந்திடப் போகுது” என்றவளுக்கு ஏனோ படபடப்பு தான் அதிகரித்தது..
“அக்கா பேசுக்கா.. போன் அடிச்சிக்கிட்டே இருக்கு பாரு” என்றவளே அருவி சுதாரிப்பதற்குள், போனையும் அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கரில் போட்டு விட, அருவிக்கோ தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை..
“என்னடி பண்ணித் தொலைச்ச? லூசு” என அருவி மதியை திட்ட,
“ஹலோ அருவி” என்ற கம்பீரக்குரலில் முதல் முறையாக தன்னை தொலைத்து நின்றாள் அருவி..
நீண்ட நேரம் அமைதியாக இருப்பதை உணர்ந்தவன், “ஹலோ அருவி லைன்ல இருக்கீயா?..” என்ற கம்பீரக்குரலில்,
“ஹான் இருக்கேன்” என மெல்லிய குரலில் அழைக்க,
“பக்கத்துல யாராவது இருக்காங்களா? அப்படி இருந்தா தனியா வா” என கிசுகிசுக்கும் குரலில் கேட்டவனைக் கண்டு இதயமோ படபடவென துடித்தது..
“தனியாவா?” என கேட்டவளைக் கண்டு மதி அவளை விட்டு இரண்டெட்டு தள்ளி நின்றுக் கொண்டாள்..
“பேசுக்கா..” என கையால் சைகை செய்ய,
“தனியா தான் இருக்கேன்..” என மென் குரலில் பெண்ணவள் படபடப்புடன் சொல்ல,
“நீ போற வழியில் அவன் ஏதாவது பிரச்சினை பண்ணானா?”
“எவன்?” என கேட்டவளைக் கண்டு பல்லைக் கடித்தான் துகிலன்.
“அதான் அந்த வருண்..” என இறுகியக் குரலில் கேட்டான்..
“இல்லை எதுவும் பண்ணலை” என சொல்லி முடிப்பதற்குள் அந்தப்பக்கம் போன் கட்டாகி விட்டது.
போனையே வெறித்துப் பார்த்தவளின் அருகில் வந்து நின்றாள் மதி..
“என்னக்கா பேசுனாரு? என்றவளை திரும்பி பார்த்தவள்,
“அந்த வருண் பிரச்சினை பண்ணானான்னு கேட்டாங்க.. அப்புறம் கட் பண்ணிட்டாங்க” என்றவளை விசித்திரமாக பார்த்தாள்..
“அவ்வளவுதான் கேட்டாங்களா க்கா?” என்ற மதியின் முகம் சட்டென்று வாடி விட்டது..
“அதுக்கு நீ ஏன்டி பீல் பண்ணுற?” என்றவளை பார்த்து வாட்டமான முகத்துடனே,
“அவரு ஏதாவது லவ் டயலாக் பேசி.. உன்னைக் கல்யாணம் பண்ணி.. அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்து” என்றவளின் வாயை இறுக்கமாக பொத்தினாள் அருவி..
“இங்கே பாரு மதி.. ஆகாசத்துல கோட்டை கட்டுற மாதிரியிருக்கு உன்னோட பேச்சு.. நடக்கிற விஷயத்தை பத்தி மட்டும் பேசலாம்.. போய் பொழைப்பை பாரு” என்றவள், என்னதான் மறக்க முயன்றாலும்.. அவளுக்கு மனதின் ஒரு ஓரத்தில் துகிலனின் வார்த்தைகள் ஓடிக் கொண்டுதானிருந்தது..
அதே சமயம் வீட்டிற்குள் நுழைந்த அவிரனின் கண்களில் சோகத்துடன் அமர்ந்திருந்த சகுந்தலா தான் பட்டார்..
“என்னம்மா பான்ட்ஸ் பவுடர் போடலையா?.. முகமெல்லாம் டல்லா இருக்கு பாரு?” என சிறு சிரிப்புடன் சொன்னவனை கோபத்துடன் திரும்பி பார்த்து முறைத்தவர்,
“என்னடா நக்கலா?.. ஹான் என்ன நினைச்சிட்டு இருக்கான் உன் அண்ணன்..?” என்றவரை புருவம் சுருக்கி பார்த்தான்.
“அண்ணனா?.. ஏன் அவன் என்ன பண்ணினான்?” என்றவன் தன் தோள்பையில் கொண்டு வந்திருந்த ஜூஸ் பாட்டிலை எடுத்துக் குடிப்பதற்குள், அவன் கைகளில் இருந்ததை வெடுக்கென்று பிடுங்கி ஒரே மடக்கில் கடகடவென குடித்து முடித்தார் சகுந்தலா..
“அடப்பாவி” என்பதைப் போல் வாயில் கை வைத்தவனை பார்த்து தீயாய் முறைத்தவர்,
“என்னடா உங்கம்மாவுக்கு ஒரு ஜூஸ் குடிக்கக் கூட உரிமையில்லையா?” என்றவரின் கையில் இன்னுமொரு ஜூஸ் பாட்டிலை திணித்தான்..
“இது மட்டுமில்லைம்மா. இன்னும் எத்தனை வேணும்னாலும் குடி. தயவுசெஞ்சு என்ன விஷயம்னு மட்டும் சொல்லிட்டு குடி” என கேட்ட அவிரனின் தோளில் சாய்ந்தவாறே அமர்ந்தார்.
“நான் உங்களை எல்லாம் ஏன்டா பெத்தேன்?” என ஆவேசமாக கேட்டவரை பார்த்து திருதிருவென முழித்தான் அவிரன்..
பின்னே இன்டர்நேஷனல் மதரின் கேள்வியை அல்லவா கேட்டு விட்டார்..
“அம்மா” என கெஞ்சல் குரலில் அழைத்தவனைப் பார்த்து, தன் இரு கண்களையும் உருட்டியவர்,
“ஏன் பெத்தேன்.. உங்களைப் பெத்துட்டு நான் படுறபாடு இருக்கே” என அங்கலாய்த்துக் கொண்டிருந்தவரின் முன்னால் அவிரன் தன் இரு கண்களாலும் பேசாதே பேசாதே என கண் காட்டினான்..
அவர் எங்கே அவனை பார்த்தார்?.. அவர்பாட்டுக்கு ஒரு மூச்சு புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார்.. முழுக்க முழுக்க துகிலனையும், அவிரனையும் சிறு பிள்ளையில் இருந்து வளர்த்ததை தான் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
“இப்போ மட்டும் அவன் கண்ணு முன்னாடியிருந்தா..” என ஆவேசமாக சொல்லிக் கொண்டே திரும்பியவர் எதிரில் கைகளை கட்டியபடி நின்றுக் கொண்டிருந்த துகிலனை பார்த்ததும் திகைத்து நின்று விட்டார்..
“ஆத்தி இவன் எப்போ வந்தான்?.. முருகா கோர்த்து விட்டுட்டீயே?” என்றவரை சலிப்பாக பார்த்தவன் இரு பக்கமும் தலையாட்டிவிட்டு வேகமாக தன்னறைக்கு சென்று விட்டான்..
“நல்லவேளை டா எதுவும் சொல்லாம போறான்?” என்பதற்குள், மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்த துகிலன் சட்டென்று நின்று விட்டான்..
சகுந்தலா பயத்தில் வேகமாக தன் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு திருதிருவென முழித்தபடி நிற்க,
தன் தாயைப் பார்த்த அவிரனிற்கு சிரிப்பு தான் வந்தது..
“யம்மா மூச்சை விட்டுத் தொலை.. வம்பா செத்துப் போயிடாதே” என்றவனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்..
“பயமா இருக்குடா” என்றவரின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் அவிரன்.
“அவிரா.. இன்னும் ரெண்டு நாள்ல பொண்ணு பார்க்கப் போறோம்னு சொல்லு. பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு..” என்றதும் சகுந்தலாவின் முகம் பிரகாசமாக,
“நிஜமாவா துகிலா.. உனக்கு அந்தப் பொண்ணை பிடிச்சிருக்கா?.. யாருடா அந்தப் பொண்ணு? உன்னையே மயக்கியிருக்கான்னா கண்டிப்பா அது பேரழகியா தான் இருக்கணும்?..” என்றவரின் முன்பாக வந்து நின்றவன்,
“நான் ஜெயிலுக்கு போன விஷயத்தைப் பத்தி பொண்ணு வீட்டுக்காரங்கக்கிட்ட மூச்சே விடக்கூடாது..” என்றவனை பேரதிர்ச்சியுடன் பார்த்தார் சகுந்தலா..
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page