All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (09)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

அத்தியாயம் 9

 

 

 

 

அவன் முகத்தில் அத்தனை குறும்பு இழையோடியது..

 

“ அப்பாடி! என்ன பார்வை இது ? ” அவள் முன்னே அவன் கேட்டதும், உடனே தெளிந்து அசட்டு சிரிப்பை உதிர்த்தாள்..

 

“ சாரி..தேவா சார்..கால் பண்ணி பேசுன அப்ப வாய்ஸ்க்கும் நேரடியா நீங்க பேசுறது வாய்ஸ்க்கும் கொஞ்சம் டிபரண்ட் அதான் சட்டுன்னு அப்படி நடந்துகிட்டேன்.. திடீர்னு வந்து இருக்கீங்க? ” ஹெட்செட்டை கழட்டி வைத்து விட்டு “ டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க இதோ வந்துர்றேன்..” விழிகளை சுருக்கி அவள் அவனிடத்தில் கெஞ்சிய விதம் பிடித்துப் போனது..

 

“ ஓகே ” என்றதும் காயத்திரியிடம் சென்று “ காயு ஈவினிங் ப்ரோக்ராம் நீ பண்றீயா டி விஷ்ணு தேவன் சார் இங்கே விசிட் பண்ணி இருக்காரு ” ஒரு வித படபடப்புடன் அவள் சொல்ல..“ ஓகே நான் பாத்துக்குறேன் இசை அப்புறம் சார் உன்னைத்தான் மீட் பண்ண வந்து இருக்காரு..” புன்னகையுடன் சொல்லிவிட்டு அவள் சென்றாள்..

 

‘ என்னை பார்க்க தானா ? ஆனா எதுக்கு? ’ அவள் மனதில் எழுந்த கேள்வியை அவளால் தடுக்க முடியவில்லை...

 

ரேடியோ ஜாக்கி ஸ்டுடியோ அவள் சென்ற போது கிரண் அவ்விடம் வந்தான்..

 

“ இசை விஷ்ணு சார் உனக்காக கெஸ்ட் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருக்காரு..அங்கே போ..” என்றான்.. சரியென தலை அசைத்து அங்கு சென்றாள்..

 

மாலை நேரத்திற்கான தேநீரும், சிற்றூண்டியும் அவனுக்காக வழங்கப்பட்டு இருந்தது..

 

அவள் வரும் வரைக்கும் தேநீரை பருகி கொண்டு இருந்தான்..

 

கண்ணாடியுடே தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்தவளுக்கு குழப்பமாக இருந்தது காரணம் அவனைப் நேரில் பார்த்ததில் இருந்து சொல்ல முடியாத உணர்வு அவளைத் தொட்டு செல்வதை என்னவென்று பெயர் வைப்பது..

 

அவன் முன்பு வந்து “ ஹாய் சார் ” அவன் எதிரில் நின்றவளை புன்னகையுடன் நோக்கியவன் எழுந்து  “ ஹலோ இசை ” இயல்பாக அவள் பெயரை அழைத்து அவள் முன் கரத்தை நீட்டினான்..

 

தயக்கத்துடனே ஒரு வித லேசான சிரிப்புடன் அவன் கரத்தைப் பற்றினாள்..

 

அவனின் தொடுகை, மனதினுள் சிறிதாக முளை விட்டிருக்கும் அவள் மீதான நேசத்தை தற்போது அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று அவளுக்கு உணர்த்திவிட விரும்பவில்லை அவன்..

 

இயன்றளவு தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அவள் கரங்களை பற்ற வேண்டியதாகிப் போனது..

 

இருவரும் கைகளை குலுக்கினர்..அவனின் கண்கள் அவளை அர்த்தம் பொதிந்த பார்வை நோக்கியதும் அவளும் பார்த்துவிட்டால் தான் முகத்தில் அரும்பிய புன்னகை நொடியில் காணாமல் மறைந்தது..

 

அவன் தொடுகை வேண்டுமானால் உணர்த்தாமல் இருக்கலாம் ஆனால் அவன் கண்கள் காட்டிக் கொடுத்தது..அவன் விழிகளை பார்த்தவளுக்கு மனதில் சிறு துடிப்பு..

 

அதன் பின்னர் இருவரும் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்..

 

“ உங்களை தேடி நான் இங்கே வர காரணம் உங்கிட்ட இருந்து ஒரு காரியம் ஆகணும்..” பீடிகை போட்டு சொல்ல..

 

“ புரியும் படியாக சொல்லுங்க தேவா சார் ? ” அவனிடம் கேட்டாள்..

 

“ எதேச்சையாக ஈவினிங் மழை நேரத்துல இதழியல் FM உங்க வாய்ஸ் கேட்டேன்..உங்களை நேர்ல சந்திச்சு உங்க கூட பேசணும்னு  நினைச்சேன் இசை..இப்போலாம் நான் உங்க ப்ரோக்ராம்ஸ் ரொம்ப விரும்பி கேட்குறேன்..அதே சமயம் எங்களுடைய துணிக்கடை விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் பற்றி ப்ரோமோஷன்ஸ் செய்வதற்காக உங்க ரேடியோ மூலம் ரீச் பெற முடியுமா? ப்ராசஸ் என்னன்னு பகிரலாம் ? ” என்றான்

 

“ நன்றி தேவா சார்! உங்க நல்ல பாராட்டுக்கு... கண்டிப்பா , உங்க கடையை ப்ரோமோட் செய்ய எங்க  அட்வெர்ட்டிசிங் டீமுடன் தொடர்பு கொள்ளலாம்.. அவங்க  முழு ப்ராசஸ் உங்களுக்கு எக்ஸ்பிளைன் செய்வாங்க.. இது மூலம் உங்க ஸ்டோர் அதிக ரீச் ஆகும்.." என்றாள் அவள்..

 

“ விளம்பரபடுத்துற சமயம் முக்கியமா உங்க குரலா தான் இருக்கணும் இசை..வேற ஆர்ஜே குரலா இருக்கக்கூடாது.. உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரியும்னு நினைக்கிறேன்..” என்றான்..

 

அவனுக்கு வைத்திருந்த தேநீரை பருகி முடித்தான் அவள் தான் திகைத்து இருந்தால், அவனிடத்தில் இத்தனை உறுதியை எதிர்பார்க்கவில்லை அவள்‌‌..

 

“ உங்களுக்கு சம்மதம் தானே இசை ? ” மிரட்டும் தொனியில் கேட்டவன் தற்போது சாதாரண குரலில் கேட்கிறான்..“ டீம் கிட்ட கேட்டுட்டு..” பேச்சினை கை உயர்த்தி வேண்டாம் என்று சொன்னான்..

 

“ நானே சொல்றேன் இசை.. ஜஸ்ட் உங்ககிட்ட பர்மிஷன் மட்டுமே கேட்டது.. எப்படியும் நோ சொல்ல வாய்பில்ல எனிவேஸ் உங்களை மீட் பண்ணனது ஐ ஆம் ஹாப்பி இசை.. நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்..” கை குலுக்கி அவளிடம் விடைபெற்று சென்றிருந்தான்..

 

அவன் சென்றதும் இருக்கையில் அமர்ந்தவளுக்கு விஷ்ணு தேவனின் சிந்தனையை தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தது..

 

அவள் குரலை விரும்பி கேட்கும் உலகத்தில் ஏகப்பட்ட ரசிகர்களாக இருக்கலாம் வாட்சப் , ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் கூட ஆனால் இவன் இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்காது இருந்தவளுக்கு அழைப்பு விடுத்து கதைத்தவன் ஆயிற்றே!

 

இதோ நேரில் வந்து பேசிவிட்டு செல்கிறான்..

 

அவள் குரல் மட்டுமே அவனின் டெக்ஸ்டைல்ஸ்க்கான விளம்பரத்திற்கு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்கிற கட்டளையிட்டு சென்றுவிட்டான்..

 

அவனின் துணி கடைக்கான விளம்பரம் ஒலிபரப்பு செய்ய தனிப்பட்ட முறையில் அவளின் குரல் வேண்டும் அதற்காகவே , அவன் இங்கு அவள் தேடி வந்தது அதுவும் நிறைவேறிவிட்டது..

 

இரு கைகளின் ஸ்பரிசம் உணர்த்திடாத ஒன்று அவன் விழிகள் உணர்த்தியது..

 

வெகு அருகில் அவன் விழிகளை பார்த்திருந்தாள் புரிந்து இருக்குமோ என்னவோ அதற்கான சந்தர்ப்பம் கூடிய விரைவில் அமைந்து விடும் என அவளே எதிர்பாராதது ஒன்று!

 

அவளின் அலைபேசிக்கு ஆரியனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது..

 

“ நைட் டின்னர் வெளியே போகலாம் கவி சோ உங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன் ஓகே சொல்லிட்டார்..நானே உன்னை கார்ல பிக்கப் பண்ண வரேன்...” அவன் அனுப்பி இருக்க..

 

பதிலாக “ ஓகே ஆரியன் ” அனுப்பி வைத்தாள்.. அவளின் வண்டியை கொண்டு செல்ல..அவள் வீட்டின் சாரதி வருவார் அதனால் ஆரியன் உடன் செல்ல எந்தப் பிரச்சினையும் இல்லை..

 

6.30 மணி போல் அவளை அழைத்துச் செல்ல ஆரியன் வந்திருந்தான்..

 

அவளும் ஆரியனுடான மனஸ்தாபத்தை மறந்து இயல்பு நிலைக்கு மாறி இருந்தாள்.. அதனால் தான் அவன் இரவு உணவுக்கு அழைத்ததும் ஒப்புக் கொண்டது..

 

அவன் கார் வந்து நின்றதும் காயத்திரியிடம் சொல்லிவிட்டு அவனோடு புறப்பட்டு இருந்தாள்..

 

விஷ்ணு தேவன் வீட்டிற்கு செல்ல , அவன் கார் சத்தம் கேட்டதும் மூன்று பிள்ளைகளும் ஓடி வந்தனர்..

 

ஜனார்த்தனி அவன் வரும் வரைக்கும் காத்திருந்தாள்..ஓய்வு நேரங்களில் ஜனார்த்தனியிடமும் பிள்ளைகளிடமும் நவீன்ரன் அலைபேசியில் கதைப்பது உண்டு..

 

அதே சமயம் பிள்ளைகளுடன் காணோளியில் அலைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்த நவீன்ரன் திடீர் மூன்றும் கூச்சல் இட்டு கத்தியவாறு கூடத்திற்கு ஓடிவிட்டனர்..

 

“ ஜானு தேவா வந்துட்டானா அது தானா பசங்க கத்திட்டு ஓடுறாங்க? ” மனைவியிடம் கேட்டான்..

 

“ ஆமாங்க மார்னிங் போனவன் இப்ப வீட்டுக்கே வர்றான்..” 

 

“ சரி ஜானு தேவா பாரு.. நான் அப்புறமா பேசுறேன்..” என்றான்..

 

“ சரிங்க..” அவளும் அலைபேசியை வைத்துவிட்டு கூடத்திற்கு சென்றாள்..

 

“ மாமா..” மூவரும் அவனிடம் ஓட , தமக்கை பிள்ளைகளை வாரி அனைத்துக் கொண்டான் அவன்..

 

“ மாமா இங்கே நைட் டைம்ல ஹோட்டல் எல்லாம் சூப்பரா இருக்கும்னு என் கசின்ஸ் சொல்லி இருக்காங்க.. இன்னிக்கு நம்மல கூட்டிட்டு போறீங்களா மாமா ? ” என்று அவனிடம் கேட்டது யாமினி..

 

ஜனார்த்தனி வேண்டாம் என்கிற வார்த்தையோ அவள் கூறவில்லை..

 

அவனோடு நேரத்தை செலவழிக்க விரும்பும் பிள்ளைகளை அவனிடமே கேட்டுக் கொள்ளட்டும் என விட்டு விட்டாள்..

 

“ யாமி குட்டி சொன்னா அழைச்சிட்டு போகாம இருப்பேனா? மூனு பேரும் சீக்கிரம் போய் ரெடி ஆகிட்டு வாங்க..ஒரு டென் மினிட்ஸ்ல பிரஷ் ஆஃப் ஆகிட்டு வரேன்..” அவன் கூறி பிள்ளைகளை கீழே இறக்கி விட்டதும் துள்ளி குதித்து மூவரும் ஓடிவிட்டனர்..

 

“ ஜானு அம்மா நீ வர மாட்ட போல.."

 

“ நான் மட்டும் வீட்டுல தனியா இருந்து என்ன பண்ண போறேன் டா..போய் பிரஷ் ஆஃப் ஆகிட்டு வா காஃபி போட்டு வைக்கிறேன்..” சிரித்தபடி அவள் சொல்ல..

 

தலையசைத்து விட்டு அவன் அறைக்குச் சென்றிருந்தான்..

 

அனைவரும் கிளம்பி இரவு உணவுக்காக பிரசித்தி பெற்று இருக்கும் கோல்டன் ஸ்டார் ஹோட்டலுக்கு காரில் பயணித்தனர்..

 

ஆரியனும் இசைகவியும் அவர்கள் வர வேண்டிய ஹோட்டலுக்கு வந்து இறங்கினர்..

 

காரை விட்டு இறங்கிய இசைகவி விழியுர்த்தி ஹோட்டலின் பெயர் பலகையை ஏறிட்டுப் பார்த்தால் கோல்டன் ஸ்டார் ஹோட்டல் என தங்க நிறத்தால் ஆங்கில எழுத்துக்கள் அழகாக பொறிக்கப்பட்டிருந்தது..

 

“ கவி என்ன வெளியே நின்னுட்டு இருக்க வா உள்ள போகலாம்..” அவள் கரங்களோடு தன் விரல்களை கோர்த்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான்..

 

இரவு நேரத்தில் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது..அதன் அழகை விழிகளில் நிரப்பிக் கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..அவனும் அமர்ந்ததும் அவளுக்கு பிடித்த உணவையும் அவனுக்குமானதையும் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்..

 

இசைகவி ஹோட்டலையே சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள்..

 

மேசை மீது வைத்திருந்த அவள் கரத்தில் , அவள் தளிர் விரலை பற்றி ஏதோ அணிவிப்பது போல் உணர்ந்தாள் இசைகவி..

 

அதே சமயம் ஹோட்டல் உள்ளே நுழைந்திருந்தனர் விஷ்ணு தேவன், ஜனார்த்தனி, பிள்ளைகள்.. அவர்கள் புக் செய்து வைத்த மேசை இசைகவி அமர்ந்திருக்கும் பக்கத்து மேசை தான் அங்கு வந்து அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்..

 

ஆரியனிடம் அதிர வைக்கும் பரிசினை கொடுப்பான் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லை..

 

“ ஆரியன்! ” விழிகளை அகல விரித்து அழைத்திட , வசீகரிக்கும் புன்னகையை அவளை நோக்கி வீசினான்..

 

பூனைக்கண் விழிகள் அவனுடையது, வசீகரமாக தோற்றம், சிவந்த நிறம், திமிரும் கர்வமும் அதிகம் உடையவன் தான் ஆரியன் எத்தனையோ பெண்கள் அவனிடம் வந்தாலும் அவனை எளிதில் மடக்க முடியாமல் இருந்தது அவனின் அலட்சியமான பார்வையாக இருந்தாலும் மேகநாதன் அவனை அவர் மகளுக்கு வருங்கால மாப்பிள்ளையாக கேட்டிருந்தார் அவனின் தந்தை மகேந்திரனிடம் கேட்க..

 

பெரிய சம்மதத்தை தட்டி கழிக்கும் அளவிற்கு அவர்களின் குடும்ப பிண்ணனி காரணமாக அமையவும் இல்லை , இசைகவியின் அழகிலும் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால் ஆரியன் சம்மதம் கேட்டு முடிவு செய்து இருந்தனர்..

 

ஆரியனுக்கும் இசைகவியை நேரில் சென்று பார்த்தும் பிடித்து விட அவள் மீது ஈர்ப்பு உண்டாகி இருந்தது..

 

அதுவோ சில தினங்களில் காதலாக மாறிவிட, அவளை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைத்திருப்பது சாத்தியம் இல்லை என்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திலே புரிந்து போனது..

 

அதனால் தாழ்ந்து சென்ற அவள் மனம் கவர நினைத்தான் அதற்கான ஏற்பாடே இரவு உணவிற்காக கோல்டன் ஸ்டார் ஹோட்டலுக்கு அவளை அழைத்து வந்தது..

 

“ நான் பேசுனதுக்கு நீயே மூட் குழம்பி போய் இருப்ப, ஐ ஆம் ரியலி சாரி கவி நான் அன்னைக்கு ஆஃபிஸ்ல உன்கிட்ட அப்படி பிஹேவ் பண்ணி இருக்க கூடாது..என்னை மீறி கோபத்துல வெளிவந்த வார்த்தைகள் தான் ஐ ஆம் சாரி..” அவளிடம் மன்னிப்பை கூறினான்..

 

அவள் விரலில் அவன் அணிவித்த மோதிரத்தை பார்த்தால் நடுவில் வெள்ளை கல் பதித்து சுற்றி வர குட்டி குட்டி வெள்ளை கற்கள் பதித்த தங்க நிற மோதிரம், அவள் விரலுக்கு அழகாக மின்னி கொண்டிருந்தது..

 

அவள் உதடுகள் அழகாக விரிந்து சிரித்தது..அவள் புன்னகையை ரசித்துப் பார்த்தான் ஆரியன்..

 

“ வாவ் ! இட்ஸ் சோ பியூட்டி ஃபுல் ரிங் தேங்க் யூ சோ மச் ஆரியன்..” அவனிடம் சொல்ல..அவனோ இருக்கையை விட்டு எழுந்து உடலை வளைத்து முன்னோக்கி அவள் முகம் அருகில் குனிந்து, அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் மென்மையாக “ ஐ லவ் வித் யூ கவி ! ” அவன் காதலையும் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டான்..

 

அவள் வாயை லேசாக பிளந்து அதிர்ச்சியுடன் ஆரியனை பார்த்தாள்..

 

மேசையின் பக்கத்தில் அமர்ந்து இருந்த விஷ்ணு தேவன், அவளை பார்த்து விடவும் கை முஷ்டிகள் இறுகியது..மனமோ லேசாக வலித்தது , கண்ணாடி துகள்கள் ஓரமாக வெடித்து சிதறி விடும் போல் இருந்தது..

 

இருக்கும் இடம் கருதி பொறுமையாக இருந்தான் அவன்..

 

இனிதே ஆரம்பம் ஆகும்..

 

 

தொடரும்..

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
 

@vsv4 பாவம் இவனும் பர்மிஷன் கேக்கல, அவனும் பர்மிஷன் கேக்கல. ரெண்டு பேரும் அவளுக்கு ஜஸ்ட் இன்பார் பண்றானுங்க. தேவன் என்ன பண்ணப் போறான்னு பாக்க காத்திருக்கேன்...


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

@vsv11 மிக்க நன்றி விழி சிஸ் 😍😍💞💞💞


   
ReplyQuote

You cannot copy content of this page