About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
முத்தம் 9
"என்ன இது கொடுமையான வாழ்க்கை! எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்? எனக்குனு என் வாழ்க்கையில பெருசா எந்த ஒரு கனவும் கிடையவே கிடையாது. ஆனா, மத்த பொண்ணுங்க மாதிரி பாசம், நேசம், காதல் இதெல்லாம் வச்சுக்கணும் என்கிற ஆசை எனக்கும் இருக்கு தானே? எனக்குனு ஒரு காதல், எனக்குன்னு ஒரு இணை, எனக்குன்னு ஒரு குடும்பம். இதெல்லாம், எனக்கு தேவ தானே? இப்படி எல்லாம் கைகூடி வர நேரத்துல.. ஏன்!! எனக்கு திரும்பியும் அதிர்ச்சியான விஷயத்தை கண்ணுல காட்டுறீங்க?? கடவுளே!!!! அதுவும் அந்த அமுதன்.. அதிரூபன் தன்னுடைய ஃப்ரண்ட்னு சொல்றான். எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. எனக்கு ரூபன் வேண்டாம்! ரூபன் கூட இருக்கணும்னா.. அவன் ஃப்ரெண்ட லைப் லாங் சந்திக்கிற மாதிரி இருக்கும், அப்படி சந்திக்கிற மாதிரி இருந்தா? பழசு எல்லாம் வெளி வந்துரும். அதனால எனக்கு ரூபன் வேண்டாம். எனக்கு அதிரூபன் வேண்டாம் அதிரூபனை ஆராதனாவே கல்யாணம் செஞ்சுக்கட்டும்." என அழுது புலம்பினாள் பாவை. அறைக்கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்து கதவை திறந்தவள் அவளுடைய தந்தையின் மார்ப்பில் புதைந்து "அப்பா!! அமுதன் திரும்பியும் என் வாழ்க்கையில் விளையாட வந்துட்டான். எனக்கு நிம்மதி வேணும் பா. அதனால.." என விழியில் ஓடும் நீரை துடைத்தவளிடம் "அதனால் என்னடா? நீ மாப்ள கூட தானே வாழப்போற? அப்புறம் என்ன தான் சொல்ல வர?" என சரியான கேள்வியை கேட்டார் "நா என் காதலை தியாகம் செய்ய வேண்டியது இருக்கு. ரூபன் எனக்கு வேண்டாம். இந்த கொஞ்ச நாள் நினைவும் எங்களுடைய சில சின்ன சின்ன நினைவுகள் மட்டும் எனக்கு போதும் பா. அவரு அவருக்கு பிடிச்ச மாதிரி வாழட்டும் பா." தன் மகளின் இந்த யாசகப்பேட்சை கேட்டதும் சுதாகர் "நீ அவன் பெயர் கெடகூடாதுனு உன் காதலை விட்டு தர. இந்த தியாகம் உனக்கு தேவை தானா? ஒரு முறை வேண்டாம்னு சொல்லிட்டா பிறகு ஒன்னும் பண்ண முடியாது கண்ணா." இருந்தாலும் யோசனை செய்யாமல் "கண்டிப்பா பா எனக்கு அதிரூபன் வேண்டாம் பா. நீங்க அவங்க கிட்ட சொல்லிக்கோங்கப்பா. நான் அதிரூபனை தனியா கடைசியா ஒரு தடவை சந்திச்சு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டு வந்துடுறேன்." என்றதோடு அறையினுள் புகுந்து கொண்டாள். "இப்ப என்ன செய்யங்க?" என பைரவி தன்னவனை பார்த்த கேட்க "நல்லவேளை பத்திரிக்கை இன்னும் அடிக்கல. நம்ம நேர்ல போய் சொல்லிட்டு வந்துடுலாம் பைரவி." "உங்க மகளுக்கு பித்து பிடிச்சுனு பார்த்தா உங்களுக்குமா?" " இல்ல பைரவி எவ்வளவோ கேட்டு பார்த்தாச்சு வேண்டாம்னு பிடிவாதமா இருக்கா. வேண்டாம்னு சொல்றானா.. அப்ப ஏதோ இருக்கு தானே? அது நம்ம கேட்டு தெரிஞ்சுக்கிறதுக்கு முயற்சி செஞ்சா, அவ நம்ம கிட்ட சொல்ல வேணாம்னு நினைக்கிறா. அதனால இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்ற. நேர்ல போய் சொல்லிட்டு வந்துடலாம்."
இருவரும் அதிரூபனை பார்க்க வீட்டிற்கு சென்றார்கள். அதே சமயத்தில் அவனும் மருந்து வாசனையில் வளம் வர பிடிக்காது என தாயிடம் கோபமாக பேச மூவரும் வீட்டுக்கு சென்றார்கள். ஸ்கந்தன் மாதங்கியை இரண்டாவது முறையாக காதலை வளர்த்து கொள்ள அவளை கூட்டி சென்றான். தன் தந்தை நகுலனுக்கு துணையாக அங்கேயே இருந்த அமுதன் ஆராதனாவை பார்க்கவில்லை. பிறகு "ஹலோ என் மாமா இங்க தான் அட்மிட் ஆகி இருக்கார். நா பார்க்கணும்னு சொல்றேன் உங்கள் எல்லாருக்கும் பைத்தியம் புடிச்சிருச்சா? நா இங்க பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க? என் மாமா இங்கே தான் இருக்காருன்னு இவ்வளவு தூரம் வந்திருக்கேன். அவர் எந்த வார்டுல இருக்காரு? எந்த ரூம் நம்பர்னு கூட சொல்ல மாட்டேங்கறீங்க? இல்ல ஓட்டிக்கு கூட்டிட்டு போய்ட்டீங்களா? அவ்வளவு பெரிய அடிபட்டுருச்சா? ஏதாவது சொல்லுங்களேன்?? நான் இப்படி லூசு மாதிரி கத்துக்கிட்டு இருக்கேன்!" என ஆராதனாவின் குரலை கேட்டு அமுதன் ஓடோடி வந்தான். அமுதன் வருவதை பார்த்த செவிலியர் ஒருவர் "சார் இந்த மேம் ரொம்ப கத்துறாங்க சார். பேஷன்ட் எல்லாரும் பதறுறாங்க காலங்காத்தால வந்து இப்படி கத்துனா, நாங்க என்ன சார் பண்றது? நீங்களே கொஞ்சம் இவன்கிட்ட சொல்லிருங்க சார்." "இவ்வளவு நேரம் கத்திக்கிட்டு இந்தேன் நீங்க எல்லாம் ஒன்னும் பேசவே இல்ல ஊமைனு நினைச்சிட்டு இருக்கேன். நல்ல வேலை இவங்களாவது பேசினார்களே. யார் அந்த சார்? இவர்ட்ட பேசினா எல்லாம் தெரியுமா?" என்ற ஆராதனா அமுதனை பார்த்தாள். "நீ எப்படி இங்க வந்த?" "மை டார்லிங் நீ இந்த ஹாஸ்பிடல்ல தான் ரன் பண்ணிக்கிட்டு இருக்கியா? சொல்லவே இல்ல? ஆம்பிஷன்,ட்ரீம் எல்லாம் என்ன மண்ணா போச்சா?" ஆராதனா ஏற்கனவே காதல் செய்தது வேறு யாரையும் அல்ல இந்த அமுதனை தான் இவனை தான் திருமணம் செய்து கொண்டு/ தன் தாயார் முன் வந்து நின்றால் அதைப் பார்த்த தாயார் தான் தூக்கில் தொங்கினார். அவளை தனியாக அழைத்து சென்றவன் "என் வாழ்க்கைய விட்டுட்டு போயிட்ட தானே? திரும்பி எதுக்கு இங்க வந்த? நான் உன்னை கூப்பிட்டேனா? உனக்கு என்ன வந்துச்சு? கனவுக்கான வேலைகள் ஒரு பக்கம் போயிட்டே தான் இருக்கு. என் பிரண்டு அதிரூபன் கிட்ட நான் ஹெல்ப் கேட்டு இருக்கேன். அவன் கண்டிப்பா எனக்கு ஹெல்ப் செய்வான். ஓகேவா நீ கேட்டதுக்கு பதில் சொல்லிட்டேன்." அதிரூபனின் பெயரைக் கேட்டதும் ஆச்சரியமாக துள்ளி குதித்தாள் அதை பார்த்த அமுதன் "என்ன லூசு பிடிச்சிருச்சா? இப்படி துள்ளி குதிக்கிற? என்ன பாத்தா உனக்கு லூசு மாதிரியா தெரியுது? என் காதல வெட்டி விட்டுட்டு நீ பாட்டுக்கு உங்க அம்மா கடைபிடிச்ச வாக்கை தேடி ஏதோ ஒரு பயணம்.. தேடி போய்ட்ட. நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?" "இங்க பாரு நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லவே இல்ல? அதே சமயம் நான் உன்னை காதலிச்சேனா கிடையவே கிடையாது! உன் கனவுக்கு நீ என்னை யூஸ் பண்ணிக்கிட்ட, அதுக்காக காண்ட்ராக்ட்ல நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவ்வளவு தானே ஒழிய நான் ஒன்னும் உன்னை விரும்பல, மனசார உன்ன விரும்பினேனா? அப்படி இருந்தால் எதுக்கு நான் எங்க அம்மா கொடுத்த வாக்கை தேடி போகணும். சி அமுதன் உன்னை நான் விரும்பனும் நினைச்சது கிடையாது. உன் கனவுக்கு நீ ஹெல்ப் பண்ண என்னை கூப்பிட்ட, நான் ஒத்துக்கிட்டேன். எனக்கும் அது ஒரு வகைல ட்ரீமா தான் இருந்துச்சு. ஆனால் சொசைட்டி நம்மளை எப்படி பார்க்கணும் என்பதற்காக நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்ட. நானும் எந்தவித ஒரு யோசனையும் செய்யாம என் கனவுக்காவும், உன் கனவுக்கு நான் ஒரு சாவியை இருப்பேன் என்பதற்காகவும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால் நீ ஒன்னும் தாலி கட்டளை ஜஸ்ட் ரிங் தான மாட்டினோம் அத கழட்டி வைக்க ரெண்டு நிமிஷம் போதுமில்ல? நீ என்னமோ ரெண்டு வருஷமா என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்ட மாதிரியும், என்ன அவ்வளவு ஆசையோட காதலிச்ச மாதிரியும், உங்க கனவுக்கு நான் அப்படியே உதவி செய்யும் போதெல்லாம் என்ன ரசிச்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்க. நீ என்ன நேச்சியா இல்ல, என்கிட்ட வந்து உன் காதல் தான் சொன்னியா? பெருசா பேச வந்துட்டுடான், நான் வீட்டுக்கு போறேன். ஆனா கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன். முதல் நீ ஏதோ எங்க அம்மாவோட வாக்கு தேடி போயிட்டேன்னு சொன்னேன்ல.. எங்க அம்மாவுக்கு வாக்கு கொடுத்த அந்த நல்ல ஜீவன் யாரை தெரியுமா? அது உன் பிரண்ட் அதிரூபன் அம்மா தான். நான் கல்யாணம் பண்ணிக்க போறதும் அவரை தான். சோ ஆர்யன் மாமா என் கனவுக்கு குறுக்க வர மாட்டார். அப்புறம் என்ன நான் என் மாமா கிட்ட சொல்லிடுவேன். நாமே கல்யாணமே பண்ணிக்காம நல்ல பிரண்ட்ஸாவே அந்த ட்ரீம நோக்கி பயணம் செய்வோம் வரேன்." என்றதோடு அவ்விடம் விட்டு சென்றாள். பின் அமுதன் 'என் தேவதையை பார்த்தாச்சு சந்தோஷப்படவா? இல்ல அவ அதிரூபனை ஆர்யன்னு சொல்றதை நினைச்சு குழம்பிப்போகவா? யார் அந்த ஆர்யன்?' என குழப்பத்தில் இருந்தான் அமுதன்.
ஜெயவள்ளி தன் மகனுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் வேளையில் வீட்டினுள் நுழைந்தார் சுதாகர் மற்றும் அவரது மனைவி பைரவி. "வாங்க சம்மந்தி." என அவர்களை அன்போடு அழைத்தார்கள். அதிரூபன் "மாமா வாங்க சானக்கியா வரல?" என ஆசையாக கேட்டான். "அது வந்து சம்மந்தி என் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. அதனால.. நீங்க வேற இடம் பாருங்க." என்றதும் "என்ன சொல்றீங்க? ஏற்கனவே பத்திரிகைகள் அடிக்க கொடுத்துட்டேன் மாதங்கி இப்ப தான் சொன்னாள். அவங்க வீட்லையும் எல்லாம் சொந்தக்காரங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு கல்யாணமும் ஒரே நாள்ல நடக்க போகுதுன்னு மூணு வீடும் மொத்த சந்தோஷத்தில் கொண்டாடலாம்னு பாத்தா.. இப்போ திடீர்னு வேண்டாம் சொல்றீங்களே? என் பையன் வாழ்க்கை என்ன ஆகுறது?" என கேள்வி கேட்டார் ஜெயவள்ளி "ஜெயு நீங்க பேசினதுக்கு பதில் சொல்லவே இல்ல. நா கேக்குறேன், அங்கிள் உண்மையாவே சானக்கியா தான் இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொன்னாளா இல்ல வேற ஏதாவது பிரச்சனை இருக்கா?" அதிரூபனின் கேள்விக்கு பதில் சொன்னார் பைரவி "நாங்க நிறைய தடவை கேட்டு பார்த்துவிட்டோம். அவ மாட்டவே மாட்டேன்னு இருக்கா! இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லைன்னு சொல்லிட்டாப்பா. நீங்க வேணும்னா அவ கிட்ட கேட்டு பார்த்துக்கோங்க. நாங்க எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணிட்டோம்." என்ற அவரது வார்த்தைகளை பைரவி கொட்டிதீர்த்ததும் காட்டு தீ போல் தன் இரு சக்கர வாகனத்தில் சானக்கியாவின் வீட்டை நோக்கி சென்றான் அவளின் அதிரூபன்.
****
"ஹேய் சானக்கியா? எங்கடி இருக்க? அடியேய் சானக்கியா? வாடி வெளிய!! நீ வராத நா உள்ளே வரேன்." தன் ரூபன் பேசுவதை கேட்டு கொண்டு உள்ளுக்குள் முடங்கி அழுது கொண்டு இருந்த பாவையவள் முன் வந்து புயல் போல் நின்றான். "சானக்கியா!!" என அவள் கண்ணீர் துளிகளில் இருப்பதை கவனித்து கட்டியணைக்க விடுக்கென்று அதிரூபனின் கரத்தை தட்டிவிட முடிந்தும் தோற்று போனாள். "ரூபன்! என் ரூபன்! இப்ப நீ ரொம்ப மாறிட்ட, நீ நா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா.. இப்ப எனக்கு உன்னோட இருக்க ஆசை தான். என்ன செய்ய விதி விளையாடுது." என தன்னவளின் இறுதி பேச்சில் கவலை தெரிய "என்ன விதி விளையாடுது? என்ன பிரச்சனைனாலும் நா பார்த்துப்பேன். நீ என்னோட இருப்பியா?" என்றதும் அவளது இமைகள் உன்னை அறியாமல் மூடியது அதை அதிரூபன் சம்மதமாக எடுத்துக் கொண்டான்.
ஒரு சின்னத் தாமரை! என் கண்ணில் பூத்ததே! அதன் மின்னல் வார்த்தைகள் என்னுள்ளம் தைக்கின்றதே! இதை உண்மை என்பதா? இல்லை பொய் தான் என்பதா? என் தேகம் முழுவதும் ஒரு வெண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே!
இருவரிடமும் நடந்தது ஒரு சின்ன வார்த்தைகளில் சொல்லப்படாத..அழகிய இரவு நேர கூடல் நிலவின் துணையின்றி பகலில் தடவு ஜன்னல்கள் அனைத்தும் துணிகளால் மூடப்பட்டு சூரியனின் தீற்றில் ஒளிர்விட்ட நேரத்தில் கோபத்தை கலைக்கும் படியாக ஓர் உறவு கூடலில். அந்த அறையில் அழகாக அவர்களது காதலை ஒரு படி மேலே பறக்க வைத்து கொண்டு இருக்கையில் சில நேரம் அமைதி பூங்காவாக அந்த அறை இருக்க அந்த நேரம் "லவ் யூ அம்மு." என சானக்கியா தன்னையறிமால் கூற அதில் நின்றது அந்த அழகான பயணம் "என்ன அம்முவா? யார்டி அந்த அம்மு?" என்றதும் "ரூ..ரூ..ரூபன் நா ஒன்னும் பண்ணல." என போர்வையினுள் அழுதவள் "ச்சி! மத்தவங்க கூட சகவாசம் வைச்சிருக்க. என்ன பொண்ணு நீ. என்னை உன் வசிய வலையில் விழ வைச்சு இப்ப, என்னை நீ ஏமாத்திட்டல. நா போறேன்." என அவன் அவனுடைய உடையை அணிந்து கொண்டு வெளியே செல்ல அவளோ அவளது இரவு உடையை அணிந்து கொண்டு அதிரூபனை தடுக்க அவன் ஓங்கி அவளை அடித்தான் "உனக்கு நா ஆராதனா கூட ஆசிரியை பழகுனது பிடிக்கல. நீ அவ மேல வைச்சிருக்க பொறாமை ஜெயிக்க போய்யும் போய்யும் என் காதல் தான் உனக்கு கிடைச்சதுல. உன் முதல் முடிவு சரி தான். உனக்கும் எனக்கும் குறிச்ச அதே முகூர்த்ததுல எனக்கும் ஆராதனாவுக்கும் திருமணம். நந்தகி ஆன்டிக்கு கொடுத்த வாக்கையாச்சும் நா காப்பாற்ற நினைக்கிறேன்." என்றதோடு கிளம்பினான்.
உள்ளுக்குள்ள முள்ள வைச்சு எதுக்கு நீ சிரிச்ச? காதல் எனும் பேரச்சொல்லி..கழுத்த நீ நெறிச்ச உன்ன நெனச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா? என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா..!
இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..! (முதல் பாகம்) - Comments Thread Our newest member: Vijianand Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page