All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (06)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 2 months ago
Posts: 56
Topic starter  

அத்தியாயம் 06

 

 

 

அவள் முன் நின்ற ஆரியனை கண்ட இசைகவிக்கு இவன் எப்போது வந்தான் என்ற எண்ணமே தோன்றியது..

 

அடுத்து ஊழியர்கள் முன்னிலையில் காட்சிப் பொருளாக நிற்க வேண்டாம் என்று நினைத்தவள் “வாங்க ஆரியன் உள்ள போய் பேசலாம்..” அவனை அழைத்து விட்டு அவளின் அறைக்குச் சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் அவள்..

 

அவளின் நாற்காலிக்கு நேரே இருக்கும் நாற்காலியில் ஆரியனும் வந்து அமர்ந்து கொண்டான்..

 

“ பிஸ்னஸ் சம்மந்தமாக வெளியூர் போனீங்களே ஆர்யன்.. மார்னிங் நீங்க இங்கே வந்தது எனக்கு சப்ரைஸ் ஆஹ் இருக்கு..? போன விஷயம் என்ன ஆச்சு ? ஏதாவது பிரச்சினையா ? ” புருவத்தை உயர்த்தி கீழ் கண்ணால் அவனை நோக்கி கேட்டாள்..

 

“ ரோஸ் போக்கே உனக்கு தான் இசை.. பிஸ்னஸ் விஷயமா தான் வெளியூர் போனேன்..பட் ஏர்போர்ட்டில் நைட் வரைக்கும் ஃப்ளைட் ஆக வெயிட் பண்ணேன்.. நோ யூஸ் ஊர்ல மழை காரணமாக ஃப்ளைட் வர்றது கென்சல் பண்ணிட்டாங்க சோ அப்பவே வீட்டுக்கு கிளம்பிட்டேன்.. உனக்கு ஃபோன்ல மெசேஜ் பண்ணி இருப்பேன்  நீ பார்க்கல்லையா இசை ? ” என்று அவன் கேட்டான்..

 

அலைபேசி அனைத்து வைத்திருப்பதை அவள் எப்படி அவன் முன்பு கூறுவாள்..

 

“ மார்னிங் லேட் ஆஹ் எந்திரிச்சுட்டேனா அதான் ஃபோன் பார்க்க டைம் இருக்கல ஆர்யன் நேரே ஜுவல்லரி ஷாப்க்கு கிளம்பி வந்துட்டேன்..” ஒருவாறாக சமாளித்தாள் அவள்..

 

“ ஃப்ரீயா விடு இசை.. இன்னிக்கு ஈவினிங் உனக்கு ப்ரோக்ராம் இருக்கு தானே இசை ? ” எதற்காக கேட்கிறான் என்று அவளுக்கு புரிந்தது...

 

“ ஆமா ஆரியன் இன்னிக்கி என்ன ட்ராப் பண்ண வர போறீங்களா? ” அவள் கேட்டாள்..

 

அதற்கு அவனோ “ ஜுவல்லரி ஷாப் வொர்க் பண்ற இதுல ரேடியோ ஸ்டேஷன்ல நீ ப்ரோக்ராம் வேற பண்ற இது தேவையா ? அவங்க குடுக்குற சேலரிய அனாதை இல்லங்களுக்கு குடுக்குற இதுக்காக தான் நீ வேலைக்கு போகணுமா இசை ? ” அவள் அங்கு செல்வது அவனுக்கு பிடிக்கவில்லை அதே சமயம் அவள் சம்பாதிக்கும் பணத்தை ஏதோ தண்டச் செலவு செய்வதாக அவன் நினைக்கிறான்..

 

“ நீங்க சொல்ல வர்றது என்னால ஏத்துக்க முடியாது ஆரியன்.. எனக்கு பிடிச்சதனால தான் அங்கே ஒரு ஆர்ஜேயா வொர்க் பண்றேன் உங்களுக்கு பிடிக்கலைன்னா விட்டுடுங்களேன் ரெண்டு பேருக்கும் ஜஸ்ட் நிச்சயதார்த்தம் மட்டும் தான் ஆகி இருக்கே தவிர மேரேஜ் இல்ல நீங்க எனக்கு ஆர்டர் போட்டு அத கேட்குறதுக்கு நான் இன்னும் உங்க மனைவியும் ஆகல தாலியும் கட்டல..” இவ்விடயம் பற்றி ஆரியன் எதை பேசினாலும் டக்கென்று அவளுக்கு கோபம் வந்து விடும்.. இதற்கு முன்னர் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவளால் இன்றைய அவனின் பேச்சு அவளுக்கு எரிச்சலை கொண்டு வந்தது..

 

“கூல் இசை இதுக்கு ஏன் நீ இவ்ளோ கோவப்படுற? சரி நான் இத பத்தி எதுவும் பேசல விடு..அது இருக்கட்டும் இன்னிக்கு நாம அவுட்டிங் போயிட்டு வரலாமா? ” சிறு எதிர்பார்ப்புடன் அவளிடம் கேட்டான்..

 

“ரேடியோ ஸ்டேஷன்க்கு போகணும் ஆர்யன் உங்ககூட அவுட்டிங் வர டைம் இல்ல...” மேசையில் வைத்திருந்த கோப்புகளை புரட்டி பார்க்க துவங்கினாள்..சொல்ல போனால் அவனுடன் சேர்ந்து வெளியே செல்வதற்கு இஷ்டமும் இல்லை அவளின் எரிச்சலும் குறையவுமில்லை...

 

ஆர்யனுக்கு மனதில் புரிந்தாலும் அவள் மீதே அத்தனை சீற்றம்.. மேசையில் வைத்திருந்த பூங்கொத்தை அவன் கரங்கள் அழுத்தமாக பற்றியது..‘மேரேஜ் ஆனதும் நான் சொல்றதை தானே நீ கேட்கணும் அப்ப பார்த்துக்குறேன் அழகாக இருக்குற காரணதுக்காக மேரேஜ் பண்ண ஒத்துகிட்டா ஓவரா தான் பண்றா ’ உள்ளுக்குள் அவனுக்கு எரியாமல் இல்லை..

 

“வேற வேலை எதுவும் இல்லையா ஆர்யன் ? ”

 

“முதல் தடவையா உன்ன தேடி ஜுவல்லரிக்கு வந்து இருக்கேன் ஒரு டீ ஆர் காஃபி குடுக்குற பழக்கம் இங்கே இருக்குறவங்களுக்கு இல்லை போல.. ” அவனின் உதடு இகழ்ச்சியாக வளைய, சரியாக அந்நேரம் பார்த்து கடை ஊழியன் அவனுக்கான தேநீரை வைத்துவிட்டு சென்றதும் அவனின் முகம் கருத்துப் போனது...

 

“நீங்க காஃபி டீ கேட்கலைனாலும் ஜுவல்லரி ஷாப்க்கு முதல் தடவையா வர்றவங்களுக்கு குடுக்க தான் செய்வோம் ஆரியன்..இந்த பழக்கம் எப்போதிலிருந்து இருக்கு..” என்று சொன்னாள்...அவனது முகம் இறுக்கத்தை தத்தெடுத்தது..

 

மீண்டும் அவளிடம் சென்று வாதிட்டு அவன் பேச விரும்பவில்லை..அவளுடன் எதிர்வாதமிடும் போது அவனது தன்மானத்தை சீண்டுவது போல் உணர்கிறான் ஆரியன்..

 

நாற்காலியை விட்டு எழுந்தவன் மேசையில் இரு கைகளையும் ஊன்றி உடலை முன்னோக்கி வளைத்து அவள் முகம் அருகில் நெருங்கி “இசை எனக்கு நேரமாச்சி நான் கிளம்புறேன் மெசேஜ், கால் பண்ணா ரிப்ளை பண்ணு எந்த நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்..ம்..” அவனின் பார்வையை நேருக்கு நேர் எதிர் கொண்டவளின் வலது புருவம் நெற்றி வரை உயர்ந்தது..

 

“ ஓகே பாய் ” அவள் கன்னத்தை தொட அவன் கரம் நீண்ட போது அதற்கான இடம் அவள் கொடுக்கவில்லை..அவனது கரத்தை பிடித்து “ இது பப்ளிக் பிளஸ் நீங்க எப்படி பிஹெவ் பண்றீங்கன்னு கண்ணாடி சுவர் , சிசிடிவில வெளிச்சம் போட்டு காட்டும் சோ அடக்கி வாசிங்க..” உறுத்தி பார்த்துவிட்டு அவன் கரத்தை விட்டாள்..

 

எதுவும் கூறாமல் அவன் வெளியேறி விட்டான்..இது தான் இசை மற்றவர்களுக்காக தன்னை தாழ்த்தி கொள்ள விரும்பாதவள், கோபமும் வரும் தன்னை சந்திக்கும் நபர்களை பொருத்து, சரியோ தவறோ முகத்துக்கு நேராக பேசிவிடும் துணிச்சல் அவளிடம் உண்டு.. எதற்காகவும் தன் தொழிலையோ எதுவென்றாலும் விட்டுக் கொடுக்காதவள் காதல் என்று வந்தால் என்ன நேருமோ?..

 

விஷ்ணு தேவனுக்கு தமக்கையுடனும் அவளின் குழந்தைகளுடனும் அன்றைய பொழுது அழகாக கழிந்தது..அதே போல் மாலை நேரம் ஆனதும் கூடத்தில் இருந்த சுவற்றில் பெரிதாக மாட்டி இருந்த கடிகாரத்தின் மீது பார்வை பதிந்து மீண்டது..

 

அறைக்குச் சென்றான் , கட்டிலில் அமர்ந்தவன் அலைபேசியில் ஹெட்செட்டை பொருத்திக் கொண்டு காதில் மாட்டிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டான்..

 

ஜன்னல் வேறு திறந்து இருந்தது..லேசாக மழைத்துளிகள் நிலத்தில் வீழ்ந்தது..மழைநீரை செம்மண் உறிஞ்சிக் கொண்டது..மெல்லிய தீண்டலாக தென்றலின் குளிர்மை காற்று அவன் மேனியை ஸ்பரிசித்து மயிர்க்கால்கள் சிலிர்த்து போய் குத்தி நின்றது..

 

இதழியல் FM இல் ஆர்ஜே இசைக்கு பதிலாக ஆர்ஜே காயத்திரியின் குரலில் நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பாகின..

 

மூடி இருந்த விழிகள் திறந்தது..உடனே அலைபேசியில் இருந்து தனுஷ் அழைப்பு விடுக்கப்பட்டது..

 

மழை குளிர்மையில் அப்போது தான் தலையணையில் தலை வைத்தும் அவன் கண்கள் சிறிது சிறிதாக மூட ஆரம்பித்த போது அவனின் அலைபேசி அலறியதும் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான் தனுஷ்..

 

அவன் பாஸ் தவிர வேறு யாரு அழைத்திட முடியும்.. அழைப்பை ஏற்றான்..“ தனுஷ் இதழியல் FM ல ஆர்ஜே இசை டுடே ஏன் ப்ரோக்ராம் பண்ணலன்னு கேட்டு எனக்கு உடனே சொல்லு டா..” அவன் சொன்னான்..

 

“ ஹான்..இதோ இப்பவோ கேட்டு சொல்றேன்..” என்றான்..

 

மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது..“ சாருக்கு எதுக்கு ஆர்ஜே இசை பத்தி கேட்குறாரு? என்னமோ நாம ரேடியோ ஸ்டேஷன்ல விசாரிச்சிட்டு சாருக்கு இன்பார்ம் பண்ணுவோம் ” அதற்கான தேடலில் இறங்கினான் தனுஷ்...

 

இதழியல் FM இன் வாடிக்கையாளர் சேவை மையத்தின் எண்ணை தேடி அதற்கு அழைப்பு விடுத்திருந்தான்..

 

இசைகவி வெளியே பொழியும் மழையினை வெறித்த பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்..இன்றைய மனநிலை அவளுக்கு உகுந்ததாக இருக்கவில்லை.. எல்லாம் ஆரியன் பற்றிய எண்ணமே சுழன்று கொண்டு இருந்தது...

 

காயத்திரியும் அவளை வற்புறுத்த விரும்பாது அவளின் நிகழ்ச்சி அவளே எடுத்து செய்துக் கொண்டு இருந்தாள்.. ரேடியோ நிகழ்ச்சியை நடத்தும் போது ஆர்ஜேவின் மனநிலை எந்தவொரு குழப்பும் சோர்வும் பிரச்சினையுடையதாக இருக்கக் கூடாது.. இந்த மனநிலையே தற்போது இசைகவிக்கு உள்ளது.. அவளால் நிகழ்ச்சியை மகிழ்வாக நடத்த முடியாது..

 

அதே சமயம் அலுவலக அறையில் கிரண் வேலை பார்த்து கொண்டிருந்த போது தொலைபேசியில் அழைப்பு வந்தது..அதனை ஏற்ற போது “ வணக்கம் சார் விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் இருந்து மேனேஜர் தனுஷ் பேசுறேன்..” என்றான்..

 

“ சொல்லுங்க சார் இதழியல் FM நிகழ்ச்சிகள் பத்தின தகவல்கள் ஏதும் தெரிஞ்சிக்கணுமா? ” கிரண் கேட்டான்..

 

“ ஈவினிங் ப்ரோக்ராம் செய்றது ஆர்ஜே இசை தானே இன்னிக்கி ஏன் அவங்க ப்ரோக்ராம் நடத்தல??”

 

“ அவங்க ரேடியோ ஸ்டேஷன் வந்து தான் இருக்காங்க பட் ப்ரோக்ராம் ஜாயின் பண்ணாததுக்கு காரணம் எனக்கு தெரியாது சார் அவங்களுக்கு பதிலா ஆர்ஜே காயத்திரி ப்ரோக்ராம் நடத்துவாங்க சார்..” என்றான் அவன்..

 

“ ஓஹ்.. அவங்களுக்கு பர்சனலா ப்ராப்ளம் ஏதா..” அவன் விஷயத்தை கேட்க அவனிடம் போட்டு வாங்க முயற்சிக்க..“ சார் சார்.. நீங்க கேட்டதுக்கு பதில் சொல்லிட்டேன் இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது.. க்ளையண்ட் கேர் டெஸ்க் அழைத்து பேசியமைக்கு மிக்க நன்றி சார்..”என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்..

 

“ ரைட்.. நமக்கு கிடைச்ச டிடெயில்ஸ் மட்டும் சாருக்கு சொல்லுவோம்..” சொல்லிக் கொண்டு விஷ்ணு தேவனிற்கு அழைத்தான்..“ சொல்லுடா ? ” அவன் கேட்டதும் ‘ என்னா அவசரம் நாம பொறுமையா சொல்லிப்போம் ’ மனதில் நினைத்தான்..

 

“ சார் இசை என்கிறவங்க வொர்க்ல ஜாயின் பண்ணி தான் இருக்காங்க ஆனா அவங்க இன்னிக்கி ப்ரோக்ராம் கேன்சல் பண்ணிட்டு இன்னொருத்தருக்கு ஒப்படைச்சி இருக்காங்க..அவங்களை பத்தி க்ளையண்ட் கேர் டெஸ்க் கேட்க முயற்சி பண்ணினேன் அவ்ளோ தான் சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க சார்..” தனுஷ் சொன்னதும் மறுமுனையில் பெருத்த அமைதி நிலவியது..

 

காரணமே இல்லாமல் அவனின் மனம் இசையின் திசை பக்கமாக இழுத்துச் சென்றது அதனை இழுத்து பிடித்து வைத்தவன்..“ ஓகே டா ..நீ இதை மட்டும் பண்ணு ஆர்ஜே இசை ஓட ஃபோன் நம்பரை வாங்கி குடு அவங்க கிட்ட பேசணும்..” அவன் தலையில் பாறாங்கல் இறக்கி வைக்க அதிர்ந்து போனவன் “ எதேய்! ” வாய்விட்டே சொல்லிவிட்டான்..

 

அதில் உதட்டுக்குள் மெலிதாக புன்னகைத்தவன் “ சொன்னதை செய்டா ” என்று அழைப்பை துண்டித்தான்..

 

“ எங்கே போய் முடியுமோ ” என்று புலம்பிக் கொண்டே அவன் சொன்னதை செய்தான்..

 

தனுஷிற்கு இசைகவியின் அலைபேசி எண் மட்டும் கிடைக்கவே இல்லை...

 

மறுநாள் காலை வில்லியம் தேசாப் விஷ்ணு தேவனின் தந்தை இறந்து ஒரு வருடத்திற்கான ஆண்டு சிரார்த்தம் கொடுப்பதற்கு ஜனார்த்தனி, பிள்ளைகள்,மணியம்மை , தனுஷ், விஷ்ணு தேவன் அனைவரும் அவ்வூரில் இருக்கும் பெரிய கோயிலுக்கு சென்றிருந்தனர்..

 

அங்கே வில்லியம் தேசாப் மறைந்த தினத்தை (திதியை ) நினைவு கூர்ந்து சடங்குகள் அனைத்தும் நடைபெற்றது..

 

தனுஷ் எங்கெங்கோ தேடி ஓய்ந்து  இசை கவியின் அலைபேசி எண்ணை தேடி விஷ்ணு தேவனின் கையில் கொடுத்திருந்தான்..

 

 

 

தொடரும்....

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 2 months ago
Posts: 70
 

@vsv4 சூப்பர் 👌👌👌👌👌👌


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 2 months ago
Posts: 56
Topic starter  

@vsv11 தேங்க் யூ சோ மச் விழி சிஸ் 💙💙💙💙


   
ReplyQuote

You cannot copy content of this page