About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 4
அமைதியாக உணவை உண்ணும் விஷ்ணு தேவனை தனுஷ் மற்றும் மணியம்மை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..
அங்கே அறையில் பரந்தராமன் மகனை முறைத்து..“ எனக்கு பிடிக்காதவங்களை இங்கே யாரும் பேசக்கூடாது அவ்ளோ தான் உன்னையும் சேர்த்து தான் சொல்றேன் பார்த்தீபன் மீறி அவன்ட்ட பேசணும்னு நினைச்சியேன்னா அப்படியே போயிடு..” விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றார் அவர்...
பார்த்தீபனுக்கு தந்தையின் மீதே அத்தனை எரிச்சலாக இருந்தது...“ ச்சைய், மனுஷனா இவர் ” என்று திட்டிவிட்டு விஷ்ணு தேவன் பக்கம் பார்க்காது வீட்டை விட்டு வெளியேறினான்...
உணவை உண்டு முடிந்த விஷ்ணு தேவன் கைகளை சுத்தப்படுத்துவதற்காக சமயலறைக்கு நாற்காலியை விட்டு எழுந்தபோது..மணியம்மையும் அவன் பின்னே வர நினைத்தவரை தடுத்து நிறுத்தி அவனே சென்றான்..
சமயலறையில் இருந்து வெளியே வந்த சமயம் தாடியை நீவி , மீசை முறுக்கி விட்டு அவன் நடந்து வந்த போது அவனின் நெஞ்சில் வந்து மோதி இருந்தது பூங்கொத்து ஒன்று.. சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை உடல் விரைக்க அப்படியே நின்றிருந்தான் அவன்..
ஆம்! சத்தியவாணி அவனின் நெஞ்சில் சாய்ந்து முதுகோடு அணைத்து விம்மி விம்மி அழுது கொண்டு இருந்தாள்..
பரந்தாமனின் பேச்சையும் மீறி அவள் வந்திருந்தாள்..அவன் அவளை பதிலுக்கு அணைக்க முற்படவில்லை..இப்படி நடு கூடத்தில் அவனை கட்டியணைத்து நிற்பது அவனுக்கே சங்கடமான நிலைதான்..
மணியம்மை, தனுஷ் இருவரும் இக் காட்சியை பார்த்து திகைத்து போய் நின்று விட்டனர்..
அவனின் உடல் மொழியை கண்டு கொண்ட இருவரும் திகைப்பில் இருந்து உடனே மீண்டனர்...
சத்திய வாணி மீது விஷ்ணு தேவனுக்கு மாமன் மகள் என்ற பாசமே தவிர வேறு எதுவும் இல்லை..வேறு எதையும் அவனிடத்தில் இருந்து எதிர்பார்க்கவும் கூடாது அப்படி ஏதேனும் நேர்ந்தால் அவனின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதே தெரியாது..
“வாணி முதல்ல என் மேல சாஞ்சி இருக்காம விலகி நில்லு..” அவள் மனதினை புண்படுத்த விரும்பாமல் இலகுவாக அவன் கையாள நினைத்தான்.. அவனின் வார்த்தை அழுத்தமாகத் தான் அவளிடத்தில் வெளிப்பட்டது..
அதனை உணர்ந்த சத்தியவாணி கண்ணீரை கையால் துடைத்துக் கொண்டு விலகி நின்றாள்..
“வாணி இனிமே யார் முன்னாடியும் சரி கூடத்துல இந்த மாதிரி நடந்துக்காத நம்மலை பாக்குறவங்களோட பார்வை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது அதே நேரம் உங்க அப்பா என்ன சொல்றாரோ அதை கேட்குறது தான் உனக்கு நல்லது..என்னை பார்க்க நினைச்சல்ல? ”
“ ம்..மாமா உங்கள இப்ப பார்த்துட்டேன்..” விழியுர்த்தி அவனை பார்த்ததுமே அவள் மனம் லேசாக இருப்பதை போல் உணர்ந்தாள் அவள்..
“ ஹம்..சரி நல்லா படி உங்க அப்பா சொல்றதை கேளு இப்ப நீ போகலாம்..” என்று கூறிவிட்டு மாடி படிகளில் விரைவாக ஏறி தன் அறையில் புகுந்து கொண்டான் அவன்...
அவன் போகும் வரைக்கும் பார்த்திருந்தவள் மணியம்மை நோக்கி திரும்பினாள்..“ என்ன வாணி! ”
“ ஒண்ணும் இல்ல அம்மாச்சி ”
“ நீ ஒண்ணும் இல்லன்னு சொல்லலாம் ம்மா.. உன் மனசு என்ன நினைக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..அவன் போக்கு வேற ஆத்தா அவன் பக்கம் போக நினைக்காத.. எப்பவும் ஓரே போல இருக்க மாட்டான்..” அவள் தலையை வருடி இரு பொருள் பட சொல்லி விட்டு உணவு மேசையில் இருந்த பாத்திரங்களை கழுவதற்காக சமயலறை பக்கம் எடுத்துச் சென்றார் அவர்..
அவளும் பெரு மூச்சுடன் அவள் அறைக்கு சென்றிருந்தாள்..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலை யோசனையில் அன்றைய இரவு கடந்து மறுநாள் காலை நன்றாக விடிந்து இருந்தது...
விஷ்ணு தேவன் ஒரு வருடத்திற்கு பின் தன் சொந்த வீட்டுக்கே வந்ததால் நல்ல உறக்கத்தில் இருந்தான்..
இசைகவி வீட்டிலோ வினோதினி காலையில் குளித்துவிட்டு கெசட்டில் முருகனின் சுப்ரபாதத்தை ஓட விட்டார்..
உத்திஷ்ட சுப்ரமண்ய ஸ்வாமின்
கருணாகர கார்த்திகேய நாத
உத்திஷ்ட தேவி சனந்தன நாத
லோகோ மங்களம் ஆவஹ
வீடு முழுவதும் சாம்பிராணி புகையின் வாசம்.. அப்போது தான் மேகனநாதன் வெளியே உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டில் அடி வைக்க நினைத்த போதே குப்பென்று சாம்பிராணி புகையின் வாசனை வீசவும் ‘ இப்படியே வீட்டுக்குள்ள போனா இவளே நமக்கு மார்னிங் பிராக் பாஸ்ட் கட்டு பண்ணிடுவாளே! ’ மனதிற்குள் புலம்பியவர் காலை பின்னுக்கு எடுத்து வீட்டை சுற்றி பின் பக்கமாக சென்றார் அவர்..
இசைகவி , இமாயா இருவரும் சுப்ரபாதம் செவிகளில் கேட்டதும் சம்மணம் கொட்டி படுக்கையிலே அமர்ந்தாள்..இன்னும் தரையில் கால் வைத்து இறங்கவில்லை அவ்வளவு தூக்கம் கலக்கம் ஆளுக்கு ஆள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தார்கள்..
தாய்க்கு பயந்து படுக்கையில் இருந்து எழுந்து நேரே குளியலறைக்கு தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள நுழைந்தனர்...
காலை உணவாக சப்பாத்தியும் குர்மாவும் மூவருக்கும் வினோதினி பரிமாறினார்...
தாயின் கையில் சமைத்த உணவை இருவரும் உண்ண..மேகநாதனோ மனைவியை காதல் பொங்க உணவை வாயில் திணித்து கொண்டு பார்த்தார்..
ஓர விழியால் கணவரனின் பார்வையை அவர் கண்டு கொண்டாலும் காணாது போல் அவரும் நாற்காலியில் அமர்ந்து உணவை உண்டு கொண்டு இருந்தார்..
இமாயா தமக்கையின் காலை பெரு விரலால் சுருண்டி விழிகளால் அவள் அருகே அழைக்கவும் என்னவென்று கேட்க குனிந்த போது “ ஆர்யன் நம்ம அப்பா போலவே காதல் பொங்க உண்ண பார்ப்பாரோ? ” சப்பாத்தியை விழுங்கிக் கொண்டு அவள் கேட்க..
“ ப்ச்..ஆர்யன் பத்தி சாப்பிடுற நேரத்துல பேசியே ஆகணுமாடி? ” விழிகளை சலிப்பாக உருட்டி அவள் கேட்க...
“ ஆர்யன் இதுல வீக்னு சொல்லு பட் தினமும் உன் கனவுல இம்சை பண்ற தேவா மட்டும் டஜன் கணக்குல காதலை திறந்து கண்ணுல காட்டுவார் போல..ம்..ம்..ம்..அப்படித்தானே டி ” அவள் தோளில் இடித்து மெதுவான குரலில் கேட்டபோது “ சாப்பிடுற நேரத்துல என்ன பேச்சு இமாயா? ” தாயிடம் அதட்டும் குரல் அவளை நோக்கி பறந்து வந்ததும்..“ நான் பேசலை அம்மா ” டக்கென்று வாயை மூடிக் கொண்டு பம்மிய தங்கையை கண்டு மெலிதாக சிரித்து விட்டு உணவை உண்டாள்..
அதன் பின்னர் இருவரும் உடை மாற்றிவிட்டு கீழே வந்தனர்..இமாயா கல்லூரிக்கு செல்வதற்கு செம்மஞ்சள் நிற டாப், வெள்ளை நிற ஜீன்ஸ் அணிந்து அவள் ஆயத்தமாக இருக்க..
பட்டர் சிவப்பு கலந்த தங்க ஜரிகை வேலைப்பாடு உடைய இலகுவான பட்டு புடவை அணிந்து , பார்ப்போரை கண்ணை கவராத சின்ன நகைகள் அணிந்து இருந்தாள் அவள்..
மேகநாதனும் தன்னுடைய நகை கடைக்கு செல்வதற்கு ஆயத்தமாகி வெளியே வந்தார்..
“ ரெண்டு பேரும் இன்னும் கிளம்பலையா? ” கைக்கடிகாரத்தை அணிந்த வண்ணம் இருவரையும் நோக்கி கேட்டார்..
“ அம்மாக்கிட்ட சொல்லிட்டு கிளம்புறோம் ” இருவரும் சொல்ல..“ காலைலயே சுப்ரபாதம் போட்டு தான் உங்க ரெண்டு பேரையும் எழுப்ப வேண்டியதா இருக்க.. இல்லன்னா ரெண்டு பேரும் எந்திரிச்சி வந்துருவீங்களா டி ? இதுல உங்கள விட பெரியவங்க தான் இலக்கியாவும் இனியாவும் அவங்க ரெண்டு பேரையும் நானே எழுப்பிவிட அவசியமே கிடையாது தெரியுமா ? எவ்ளோ நல்ல பிள்ளைங்க...” மூவருக்கான மதிய உணவை கட்டி கையில் கொடுத்திருந்தார் அவர்..
இசைகவி முன்னர் பிறந்த இரு தமக்கைமாரையும் இவ்வாறு தான் சொல்லி இருவரையும் வெறுப்பேற்றி வைப்பதில் அவருக்கு காலை பொழுது போவதே இல்லை..
“ சரி நேரமாச்சு ரெண்டு பேரும் கிளம்புங்க..கவி மாப்பிள்ளை உன்கூட காலைல பேசுனாரா? ” வினோதினி கேட்டதுமே அவளுக்கு ஞாபகம் வந்தது அலைபேசி அணைத்து வைத்திருப்பதை தாயின் முன் அலைபேசியை எடுக்க முடியாதே ! ஏதாவது அவரிடம் கூறி சமாளிப்போம் என்று நினைத்தவள் “ ஆர்யனுக்கு வொர்க் பிஸியா இருக்கும் அம்மா..அவர் கால் பண்ணா சொல்றேன் பாய் அம்மா..அப்பா அப்படியே வந்துருங்க..” அவரிடம் தப்பிப்பதற்காக பதிலை சொல்லிவிட்டு வெளியே சென்றாள்..
இமாயா “ பாய் அம்மா ” அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு “ அப்பா பாவம் அம்மா அவருக்கும் ஒரு முத்தம் கொடுக்குறது.. மார்னிங் இருந்து உங்க காதல் தரிசனத்தை எதிர்பார்த்துட்டு இருக்காரு..” தூர நின்று அவர்களுக்கு செவியில் கேட்கும் வரைக்கும் சத்தமாக சொல்லிவிட்டு இசைகவியின் வண்டியில் ஏறி புறப்பட்டு இருந்தாள் அவள்..
“ சரியான கேடி..” செல்லமாக மகளை திட்டிவிட்டு திரும்பியவர் கணவரை நோக்கி “ நீங்க இன்னும் கிளம்பலையா? ” என்று கேட்க..“ இ..இதோ கிளம்புறேன் வினோ ” தடுமாறிபடி மனைவிடம் விடைபெற்று அவர் புறப்பட்டு விட்டார் அவர்..
அவர் சென்றதும் சிரித்துவிட்டு உள்ளே சென்றார்..
இமாயாவை கல்லூரியில் விட்டுவிட்டு அவளின் தந்தை நகை கடையை நோக்கி வண்டியை விட்டாள்...
‘ இளங்கலை ஜுவல்லரி ’ என்ற உருண்டை தமிழ் எழுத்துக்களால் தங்க நிறுத்தினால் பொறிக்கப்பட்ட நகை கடை முன்பு அவள் வண்டி வந்து நின்றது..
வெண்ணிற நிறப் பூச்சு பூசப்பட்ட பரந்து விரிந்த கட்டிடம் , சதுர வடிவிலான கண்ணாடி சுவர்கள் அமைக்கப்பட்டு இருக்க..வெளிப்புறம் இருந்து பார்த்தால் நகை கடையின் உள் அமைப்புக்கள் நன்றாக விளங்கும்...
இளங்கலை ஜுவல்லரியை மலர்ந்த முகத்துடன் உள்ளே நுழைந்தாள்..அங்கு இருக்கும் பணியாட்களுக்கு உதட்டில் உறைந்த புன்னகையுடன் தலை அசைத்து அவளின் பிரத்யேக அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் இசைகவி..
மேகநாதனுக்கு அடுத்தாக பணியாட்களின் சின்ன முதலாாளி இசைகவியே! மேகநாதன் இலகுவில் அவரின் முகத்தை காட்டுவதில்லை அதனால் பணியாட்கள் அவரை கண்டால் பயமாக தான் இருக்கும் ஆனால் இசைகவி அப்படி அல்ல அனைவரிடமும் பழகி இயல்பாக ஒன்ற கூடிய பாவையவள் அதனாலே அங்குள்ள பணியாட்களுக்கு அவளை அதிகமாக பிடிக்கும் ஒரு காரணம்...
நாற்காலியில் அமர்ந்தவளுக்கு வேலையில்லாமல் சும்மா இருப்பதே கடுப்பாக இருந்தது..இதுவே , ரேடியோ ஸ்டேஷனில் என்றால் சந்தோஷமாக இருந்து இருப்பாள் போலும் ,
பார்த்தீபன் முழு போதையில் அவனின் பீச் ஹவுஸ்ஸில் நீண்ட சோஃபாவில் குப்புற படுத்திருந்தான்..பரந்தராமனின் பேச்சு அவன் கோபத்தை கிளப்பிவிட்டு இருக்க..பீச் ஹவுஸ்ஸில் போதையில் என்றுமில்லாது உறங்கிக் கொண்டிருக்க , அவனின் அலைப்பேசி அலறியது..
அலைப்பேசியை கைகளால் துளாவி தட்டு தடுமாறி கட்டுமஸ்தான உடலுக்கு கீழ் நசுங்கி போய் இருக்கும் அலைப்பேசியை எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தது தான் தாமதம் “ டேய் தண்டம் நீ எல்லாம் சோறு திங்குறீயா இல்ல வெறும் முட்டைகோஸ் திங்குறீயா டா ? ஒருத்தியை லவ் பண்ணிட்டு ப்ரெக்னன்ட் ஆக்கி வச்சி இருக்க நீ எங்கே இருந்து டா பொறந்த? ” ஒருத்தி காட்டு கத்தாக அவனிடம் கத்திக் கொண்டு இருக்க..
கலைந்த கேசமும், சிவந்த விழிகளுடன் சோஃபாவை விட்டு எழுந்து அமர்ந்தான் பார்த்தீபன்..
“ ஹேய்! கரெக்ட் ஆஹ் சொல்லு உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குனது இவன் தானே ! ” கல்லூரியின் வகுப்பறையில் நீள் விருக்கை சுற்றி பெண்கள் நின்று கொண்டு இருக்க நடுவில் அவளது தோழியும் அவளும் அமர்ந்திருந்தாள்..
“ ஏய்! எவடி அது காலங்காத்தால கொசு மாதிரி ‘ங்ஙேய்ங் ’ கத்திட்டு இருக்க..யாரு எவன்னு விசாரிக்குற பழக்கம் இல்லையா? நீ இருக்குற இடம் தெரிஞ்சிக்க எனக்கு அவ்ளோ நேரம் போகாது மவளே! உன்ன ” பார்த்தீபனுக்கு போதை இறங்கியதோடு காலை அவன் எழும் முன்னர் ஒருத்தி அவன் எண்ணிற்கு அழைத்து பயங்கரமான குற்றத்தை அல்லவா அவன் மீது சுமத்தப்பட்டு இருக்கிறாள்..
அதை கேட்ட அவனுக்கே உச்சஸ்தானியில் ஏறியது..
“ இமாயா இது அவன் வாய்ஸ் இல்லடி வேற யாரோ ? ” என்று பாதிக்கப்பட்ட தோழி சொன்னதும் விழிகள் தெறித்து விழுந்து விடும் அளவிற்கு அதிர்ந்து விழித்தாள் இமாயா...
தொடரும்...
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page