All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 4

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 22
Topic starter  

முத்தம் 4

 

 "நீங்க என்ன சொல்றீங்க? மாமா மாமானு என் மனசுல நா அவரை சுமந்துட்டு வரேன். அவரை தவிர வேற யாரையும் நா மனசுல நெனச்சது கிடையாது. நீங்க இங்க வந்ததும், எப்படி என் அம்மா உங்க தோழி நந்தகியை மறக்கலாம். நல்ல வேளை அம்மா ஊர்ல இல்ல. அந்த சம்மந்தமே வேணாம், என் மாமானுக்கு நா இருக்கேன் அத்த." என தன் பிடிவாத குணத்தை துணையாக வைத்து கொண்டு பேசினாள் ஆராதனா. கண்களை துடைத்தபடி ஆராதனாவை பார்த்தார் அப்பொழுது "அம்மா!" என்ற சத்தத்தோடு உள்ளே வந்தாள் மாதங்கி. அவளை பார்த்தவள் “இது யாருமா?" என்ற கேள்வியோடு அவளை நோக்கி நடந்து வந்தவள். "மாது. இவ என் தோழி மகள். பெயர் ஆராதனா." என சிறிதாக அறிமுகம் செய்து வைத்தார். "ஓ! ஜெயூ உனக்கு பிரண்ட்லாம் இருந்திருக்காங்களா? சொல்லவே இல்ல?" என அதிரூபன் செல்லமாக பேசுவது போல் பேசினாள். "அடியேய்? போ போய் உன் வேலைய பார். அதிக்கு தங்கச்சி னு அப்பப்போ நிருப்பிக்கிற!" என இவரும் செல்லமாக கூறினார்.

 

அந்த பக்கம் மாதங்கியின் அண்ணன் அவனது வருங்கால துணையோடு படம் பார்க்க சென்றான். அங்கு சானக்கியாவின் தோழி மோனிகா வந்தாள். அவளை பார்த்ததும் தன்னவனை கண்டு கொள்ளாது ஓடோடி சென்று "மோனி!!!" என கட்டியணைத்தவள் "உன்ன பார்த்து ரொம்ப யுகம் ஆச்சுடி." என்றதும் "யுகமா? பைத்தியம் நேத்து ராத்திரி வரை உன்னோட தானே இருந்தேன். சார் முன்னாடி லூசு மாதிரி பேசுற பக்கி." என இறுதியாக தோழியை திட்டவும் செய்தாள். "ரூபன் எதுவும் சொல்ல மாட்டார். நாங்க இப்படிதான் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். வாங்க உள்ள போகலாம்." என வலது கரத்தில் தோழியின் இடது கரவிரல்களை கோர்த்தவள் தனது இடது கரத்தை தன்னவனது வலது கரத்தினுள் கோர்த்த படி நடந்து சென்றாள். இதை பார்த்தவன் தன் மனதினுள் 'சானக்கியா, எல்லா உறவுக்கும் சரிசமமா அன்பு கொடுக்குறா. ஐ லைக் இட்.' 

 

அந்த விண்மீன்கள் தான்..உன் கண்ணினிலே வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே! இன்று உன் கையிலே நான் நூல்பொம்மையே ஏஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே!! ஓ..பெண்ணே! பெண்ணே! என் கண்ணே! கண்ணே! உண்மை சொன்னால் என்ன? உன்னை தந்தால் என்ன?

 

அவர்கள் அவர்அவர்க்குறிய இடத்தில் அமர்ந்து படம் பார்க்க. தன் பக்கத்தில் அமர்ந்தவளின் காதுக்கு அருகை சென்று "சானக்கியா! முத்தம் ஒன்றை பிச்சு தா. ஹூம், பிளீஸ் பா. மோனிகாவ கவணிச்ச மாதிரி என்னை கவனி." என்றான் காதலாக. "ஒரு முத்தம் மட்டும் பிச்சு தந்தா..போதுமா மை லவ்லி ரூபன்?" என அவனவளுக்கு சரிசமமாக. இதில் வியந்த பார்வையோடு அவளிடம் "கொடு? என்ன நீ இப்படியெல்லாம் கேக்கவே கூடாது." என தன்னவளின் முகத்தை தனக்கு ஏற்றார் போல் திரும்பி அவளது இரு கன்னக்குழியில் முத்தத்தை கொட்டியவன் இறுதியாக பாவையவளின் இதழை கொய்தான். மறுபக்கம் "படம் செம்மையா போய்ட்டு இருக்கு சானக்கியா, உன் ஃபேவரேட் ஃபகத்பசில் வந்துட்டார். என்ன இன்னும் அமைதியாவே இருக்க.." ஏதோ தவறாக இருக்கிறது என்று மோனிகா நினைத்தது போல் திரும்பி பார்வையிட மோனிகா அவளது மனதில் 'வேட்டையனை பார்க்க வந்தோம். ஆனா..நீ உன் ஆளை நல்லா வேட்டையாடுற. கடவுளே! எனக்காக படைக்கப்பட்ட வேட்டையன் எங்க இருக்கானோ? இவள நம்ம டிஸ்டப் பண்ணாலும்..சார் திட்டுவார் நம்ம ரஜினி படத்தை பார்க்க வேண்டியது தான்.' என்றதோடு தன் தோழி அவளது வேலையை பார்க்கட்டும் வந்த வேலையை பார்ப்போம் என அவள் படம் பார்க்க தொடங்கினாள். திடீரென குண்டு சத்தத்தை கேட்டவள் அதிரூபனை தள்ளிவிட்டு "ஆ!!! நான் கிடையாது!" என பதறியதும் மோனிகா அதிர்ச்சியில் கத்த அனைவரும் அவர்களை தான் பார்த்தனர். "சானக்கியா? என்ன படத்துல நடந்தது. மோனிகா தண்ணி எடு." என அவளை கட்டளையிட தண்ணீரை குடித்தவள் மூச்சை மெதுவாக விட ஆரம்பித்தாள். அவனும் சற்று அமைதியாக தன்னவனை பார்த்து "நீ கேட்டத கொடுத்தேன். இப்ப முத்தத்தில் இதழ் பிச்சு ரத்தம் வந்திருக்கு ரூபன்." என சிரிக்க "அட சானக்கியா உனக்கும் ரத்தம் வந்திருந்தது. தண்ணி குடிச்சதும் இல்ல. மோனிகா ஈவினிங் ஒரு நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துடுங்க. உங்க இரண்டு பேர்கிட்டையும் கோஸ்டின் கேக்கணும்." என்றதும் அங்கு ரொமன்ஸ்க்கு முற்றுப்புள்ளி வைக்க படத்தை பார்க்க தொடங்கினார்கள். படத்தை பார்த்து முடித்ததும் அதிரூபன் தன்னவளை விட்டு வண்டி எடுத்து வர 'ச்ச! இப்படி கேள்வி கேட்பேன்னு சொல்லுறான்? இப்ப மோனியோட வீட்டுக்கு போக வேண்டிய தான்.' என முடிவு செய்து அவளுடன் சானக்கியா வீடு வந்த சேர அதிரூபன் அலைபேசியில் அழைத்தான். காரணம், அவள் பத்திரமாக வீட்டுக்கு வந்துவிட்டாளா? என்பதை இப்போது இருந்து கடமையாக வைத்து கொண்டான். சுதாகர் சற்று சிந்தனையில் இருந்தார் அவரிடம் அவரது மனைவி "என்னங்க! காஃபி ஆறிடுச்சு. அப்படி என்ன யோசனையில இருக்கீங்க?" என பைரவி கேள்வி எழுப்ப "அது பைரவி.. நம்ம சானக்கியா வந்ததும் நேரா ரூம்க்கு போயிட்டாள். பிறகு இப்ப வரை வரவே இல்லை என்னவா இருக்கும்?" என இறுதியாக அவர் கூறிய வார்த்தைகள் பைரவிக்கு பயத்தை தந்தது.

 

 ****

 

வீட்டிற்கு வந்தவுடன் ஆராதனா அவளது அன்னையின் புகைப்படத்தை பார்த்து "என்னை பெற்ற நந்தகியே! உன்ன உன் தோழி ஜெயவள்ளி மறந்துட்டா. உன்ன மட்டும் இல்லமா, உனக்கு பண்ண சத்தியமும் பாலாபோச்சு. ஏன் அம்மா என்னை விட்டுட்டு போன? நா ஒருத்தனை விரும்பினனால தான் நீங்க இந்த சத்தியத்தை பத்தி சொன்னிங்க. அன்னைக்கி, நீங்க உங்க தோழிக்கு துரோகம் செஞ்சதா நெனச்சு தற்கொலை பண்ணினது ரொம்ப தப்பு மா!! எனக்குனு இப்ப யார் இருக்கா? அம்மா..என்னை பாட்டு பாட வைச்சு தூங்க வைக்க நீ வா மா. என் செல்ல நந்தகி வா பிளீஸ்!" என தனியாக அந்த வீட்டில் தன் தாயாரின் புகைப்படத்தை பார்த்து தழுதழுத்த குரலில் அழுதவள் சற்று நேரத்திலேயே நித்திரை தேவியின் அழைப்பை ஏற்றாள். அப்போது அங்கு வந்த அவளது ஆசிரியர் ரஞ்சனா 'நந்தகி இந்த அக்காவை பார்க்கணும்னு உனக்கு ஏன் தோணவே இல்ல? நீ ஏன் இறந்து போன காரணத்தை ஆரு சொல்லிட்டா. இப்ப நீ தான் அவளை கதறவைக்கிற நந்தகி.' ஆம், நந்தகி ரஞ்சனாவின் இளைய சகோதரி. சிறுவயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். தன் தங்கை காதலித்து திருமணம் செய்தது ரஞ்சனாவிற்கு துரோகம் செய்தது போல் தோன்றியது அதிலிருந்து ரஞ்சனா நந்தகியிடம் எந்த ஒரு தொடர்பும் வைத்து கொள்ளவில்லை. அவளது பிரிவு நாளடைவில் புத்திர பாக்கியம் இல்லாத ரஞ்சனாவை வாட்டி வளைத்தது, உயிர் கொடுக்க முடியாத ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு செய்யாது இருத்தல் நல்லது என எண்ணி ரஞ்சனாவின் கணவர் அவளை பிரிந்து சென்றார். கல்லூரியில் வேலை பார்த்த போது ஆராதனாவின் மீது அன்பு வந்ததற்கு காரணம் அவளது தாயாரின் பெயர் தான். ஆனால், அந்த சமயத்தில் தன் தங்கையின் மகள் என ரஞ்சனாவிற்கு தெரியாது. பின் ஒரு நாளில் ஆராதனா தன் தாயின் சிறுவயது கதையை அவளது தோழனிடம் கூறியதை ஏதார்த்தமாக கேட்டதில் இருந்து புரிந்து கொண்டார். அன்றிலிருந்து, இன்று வரை ஆராதனாவை கவனித்து வருவதை பொறுப்பாக செய்து வருகிறார். இத்தனை வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தவர் இன்று தன் தங்கை கொடுத்த உயிரை தன் உயிராக வளர்த்து வருவதை பெரிய பாக்கியமாக நினைத்து வருகிறார் ரஞ்சனா. 

 

இடிவிழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்..நீ போன நாள் தொட்டு பூ சூடல..விடிஞ்ச பின்னாலும் ஒரங்குற ஆளு சேதாரம் நீ செய்ய கண் மூடல..உன்ன நா நெஞ்சுக்குள்ள அடகாத்து வெச்சேன்..அத நீ பொய்யின்னா மனம் தாங்கல உலகே கண் வைக்க உறவான உன்ன ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல! உசுரே! உசுரே! நான் தானே!!! முழுசா ஒடஞ்சு போனேனே!! 

 

என்பது போல் மனம் உடைந்து உறங்கும் ஆராதனாவை பார்த்த ரஞ்சனா அவளை எழுப்ப சென்ற போது வேலை விஷயமாக அலைபேசி அலறியது. அதனால், அவரோ அலைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தார்.  

 

அதிரூபன் தன்னவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்கிற நிம்மதியில் குளித்து முடித்து லேசான சட்டை போட்டு தொடை வரை இருக்கும் டைட்ஸ் போட்டுவிட்டு பஞ்சு நாற்காலியில் அமர்ந்த தந்தையிடம் "என்ன அப்பா என்ன யோசனையில இருக்கீங்க?" என கேள்வி கேட்டான். ஜெயவள்ளி தன் கணவருக்கு தேநீர் கொடுக்க அப்படியே தன் வேந்தன் பக்கம் அமர்ந்தவர் "ஜோஷியர் என்ன சொன்னார்?" என்று கேட்க "கார்த்திகை மாச முதல் முகூர்த்தம் அமைஞ்சிருக்கு. நம்ம அதிரூபன் ஜாதகத்துல இரண்டு சம்சாரம்னு எழுதி இருக்கு. ஆனா.. ஜோஷியர் இவேன் ஜாதகத்த பார்த்ததும் இந்த ஜாதகத்தார் கல்யாணம் செஞ்சு இருந்திருக்கணுமேனு சொன்னதை கேட்டதும் தூக்கி வாரி போட்டுச்சு.” கணவர் இறுதியாக பேசிய வார்த்தைகளை கேட்ட ஜெயவள்ளி "டேய்! என்னடா அதி எங்களுக்கு தெரியாமல் யாரையாவது காதலிச்சு கல்யாணம் செஞ்சீயா?" அதிர்ச்சியாக கேட்டார். "ஜெயவள்ளி! என்ன நீ இப்படி கேக்குற? நா முழு மனசா காதலிச்ச பொண்ணு இந்த சானக்கியா தான். இன்னைக்கி தியேட்டர்ல இரண்டு பேரும்.." அப்போது தான் அவன் தான் என்ன பேசி வருகிறேன் என்பதை புரிந்த படி நிறுத்த பெற்றோர்கள் இருவரும் அவனை பார்த்த போது அதிரூபனின் வெட்கத்தை அவனை பெற்ற ஜெயவள்ளி புரிந்து "ஹய்யோ! என் பையன் வெட்க படுறான்! ஏதாவது ரொமான்ஸ் நடந்ததா?" என்றதும் பெண்கள் எப்படி தங்களின் முகத்தை மூடிக்கொள்வார்களோ. அதிரூபன் அலைபேசியில் அழைப்பு வராதது போல் சிறு புன்னகையோடு அவ்விடம் விட்டு சென்றான்.

 

தன் படுக்கை அறைக்கு சென்றவன் தன் வருங்கால மனையாளின் புகைப்படத்தை பார்த்தவன் சில நேரம் கனவில் மிதந்தான்..

 

அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்து பயணம்.. உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்..அருகில் இருந்தால் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம் கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்..அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா?

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘

 

https://kavichandranovels.com/community/vsv-comments-and-discussions-vsv-3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page