About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
"வாவ் டாடி இவ்ளோ நல்லா எடுத்து சொல்றீங்க! சத்தியமா சொல்றேன் எங்களுக்குள்ள சண்டை வருமா? என்ன,ஏது எதுவுமே என்னால கனிச்சி சொல்ல முடியாது, ஆனா இன்னும் ரெண்டு வருஷத்துக்கு படிப்பு விஷயமாகவும் நான் அவளுக்கு கைடன்ஸ் பண்ணியே ஆகணும். ஒரு வாத்தியாராகவும் இருக்கணும்,ஒரு புருஷனாவும் இருக்கணும். ரெண்டு ரிலேஷன்ஷிப்பை எப்படித்தான் நான் ஒரு ஆள் காட்ட போறேன்னே தெரியல? டாடி என் லைஃப் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருக்கு. அதுக்கு என்ன சொல்யூஷன் டாடி?" என தனக்குள் இருக்கும் ஒரு குழப்பத்தை தீர்த்துக் கொள்ள கேட்டான் அதிரூபன். "லைஃப் காம்ப்ளிகேட்டடா இருந்தாதான் பிற்காலத்துல ஸ்மூத்தான லவ்லி ட்ராக் போகும். நீ இப்பவே ஸ்மூத்தான லேப்ல கேட்டேனா? அது பின்னால காம்ப்ளிகேட் ஆகும் பா. அப்போ உனக்கு உன் பிளவட் மேல சந்தேகம்..துரோகம் பண்ணிட்டாங்க, நம்பிக்கையை உடைக்கிற அளவுக்கு கோவம் வரும். அதனால எந்த எக்ஸ்பெக்டேஷன்சுமே வச்சுக்காத. நாள் போன போக்கில் காதலும் அப்படியே வளர்ந்துகிட்டே போகும். சண்டைகளின் போது நீங்க ஒவ்வொருத்தரும் எப்படி புரிஞ்சு வெச்சுக்கறீங்க என்பதை பொறுத்து காதலுடைய அளவு கூடும். அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும். இதுக்கும் மேல வாழ்க்கையின் அனுபவத்தில் தெறிஞ்சுக்க." என்றதோடு நகைக்க ஆரம்பித்தார் அனைவரும் நகத்துக் கொண்டே இருந்தார்கள் சில நேரத்திற்கு மௌனம் நிலவியது எந்த பேச்சும் இல்லை அப்போதுதான் அதிரூபனின் தலைமையாசிரியர் அவனுக்கு அழைத்தார்.
***
"என்ன சானக்கியா வந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்ட. பிறகு என்ன? உன்னுடைய ரிசர்ச் விஷயம் எல்லாத்தையும் அவர்ட சொல்லிட்டியா? அதுக்கு என்ன சொன்னார்?" என அதிரூபனுக்கு மதிப்பு கொடுத்தே பேசினார் சுதாகர். "எல்லாத்துக்குமே ஓகே பா. ஆனா, அதைவிட ஒரு ஷாக் என்ன தெரியுமா? இப்போ வந்துட்டு போனாரே இந்த ரூபன். இவர்கிட்ட தான் நான் ரெண்டு வருஷம் பி.ஹச்.டி பண்ண போறேன்! இது நெனச்சாலே எனக்கு தலை வலிக்குது பா!!" என மீண்டும் கதறத் தொடங்கினாள் ஆனால் இதை கேட்ட சுதாகருக்கு அத்தன இன்பம் "சூப்பர்ல! மாப்பிளை கிட்டயே படிக்கப் போற, உனக்கு கைடு வீட்டு அழையனும், காலேஜுக்கும் போகணும் இந்த மாதிரி எந்த டிஸ்ட்ரிக்சன்ஸுமே கிடையாது. மொத்தமா உனக்கு அலைச்சலே கிடையாது! வீட்டிலேயே இரு. உன் புருஷனை உனக்கு எல்லாத்தையும் சொல்லித் தருவான். உன் புருஷன் கிட்ட டாக்டர் பட்டம் வாங்கினதும். உங்க வீட்டிலேயே அப்படியே உன் வாழ்க்கையை தொடங்குகிறது. இதுக்கு மேல என்ன வேணும்? சொல்லு யாருக்காவது இப்படி அமையுமா? எனக்கு எல்லாம் இப்படி அமைந்திருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் தெரியுமா? என்ன பண்றது எங்க காலம் அப்படி போயிருச்சு." கணவன் முடிக்க பைரவி "என்னங்க! இப்படியா பேசுவீங்க? அதுவும் என் முன்னாடி! இனிமே உங்களுக்கு நைட்டு டின்னர் கட்டு. இது தான் நா உங்களுக்கு தர தண்டனை." என விளையாட்டுக்கு தான் பைரவி சொன்னார். "ஹப்பாடா! உங்க அம்மா சமையல் இருக்கே ஏதோ ஹோட்டல்ல போய் சாப்பிட்ட மாதிரி இருக்காது, வீட்டில் செய்து சாப்பாடு மாதிரி இருக்காது, என்னமோ பழையதை புதுசா சூடு பண்ணி கொடுக்கிற மாதிரியே இருக்கும். அதுவும் முக்கியமா சில சமயம் குழம்பு வச்சுட்டா நினைச்சுக்கோ.. அதையே நைட்டுக்கு ஊத்திருவா. ஐயோ அதிலிருந்து எப்படித்தான் எஸ்கேப் ஆகுறது?? நினைச்சேன். நீ சொல்லியே. எனக்கு அதை தண்டனையாக கொடுத்துட்டா. நான் நைட்டு தினமும் போயி என் மச்சான் வீட்டில சாப்பிட்டு வருவேன்." "வாட் மச்சான் வீட்டில?? சாப்பிட்டு வரீங்களா! என் சமையலை இவ்வளவு குத்தமா பேசுறீங்க? நீங்க எவ்வளவு நல்லா ருசிருச்சு சாப்பிடுவதை பார்க்கும் போது.. இந்த பைரவி சமையல தவிர வேற யாரு சமையல் என் புருஷனுக்கு பிடிக்காதுன்னு நினைச்சா! நீங்க என்னடானா இருப்பதிலேயே எல்லார் வீட்டு சமையலும் பிடிக்கும், என் பொண்டாட்டி சமையல் தான் பிடிக்காதுன்னு சொல்றீங்க? இப்படி எல்லாம் சொல்லலாமா? இங்க பாரு சானக்கியா நீ சமைக்காமலேயே இருந்திருக்க. உன் மாமியாருக்கு தெரிஞ்சு அடுத்து உன்னைய சமைக்க சொன்னாங்கன்னா, நீ ஏதோ சமைச்சு உன் புருஷன் கிட்ட கொடுத்து, அவன் நல்லா இருக்குன்னு சொன்னா!! அதை நம்பவே நம்பாதே!! அவை நல்லா இல்லைன்னு சொன்னா கூட நம்பு அவ்வளவு தான் நா சொல்லுவேன்." என கணவன் மனைவி இருவரும் மூத்த பிள்ளையை கண்முன் வைத்துக் கொண்டே சண்டை போட்டார்கள். "இங்க பாரு சானக்கியா அப்பா சொல்றேன். இது இயற்கை! புருஷன் வந்து சாப்பிடுவான்.. ஆனா பொண்டாட்டி சமையல் நல்லாவே இருக்காது. அதே பொண்ணு அவங்க கொழுந்தனாருக்கு சமைச்சு கொடுத்தாலும் சரி, நாத்தனார் சமைச்சு கொடுத்தாலும் சரி, அவங்க மாமியார் சமச்சி கொடுத்தாலும் சரி, அவங்களுக்கு பிடிக்கும். புருஷனுக்கு பிடிக்காது! இதை உன் அம்மாகிட்ட சொல்ல வந்தேன். உன் அம்மா என்னடானோ, நீங்க என் சமையலை இப்படி கொச்சைப்படுத்தி பேசுறங்குற மாதிரி கேட்கிறா? அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? நானே பாவம்!.." என சொல்லி முடிப்பதற்குள் வேறு ஏதோ அழைப்பு வர சுதாகர் 'அப்பாடா எஸ்கேப்!!!' என்றது போல் அவ்விடம் விட்டு சென்றார். "உன் அப்பா சொல்றதெலாம் நீ மனசுல வைச்சிக்காத நல்ல பொண்ணா படிக்கணும், கல்யாணத்துக்கு பிறகு மாமியாரை மதிச்சு இருக்கணும். இது என் அம்மா எனக்கு சொன்னது." என மகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தன் தலைமை ஆசிரியின் இருப்பிடத்திற்கு சென்றவன் அவரிடம் "மேம், மை ஐ கம் இன்?" என மரியாதையுடன் கேட்டான். அதிரூபன் தன் தொழிலுக்கு முதல் மரியாதையை தருபவன். அப்படி இருக்க, அவனது தலைமை ஆசிரியை திருமதி ரஞ்சனா தான் இவனுக்கு வேலை வாங்கி தந்தவர். அதனால், அவர் தனக்கு என்ன வேலை கொடுத்தாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டான். அவரது வீட்டினுள் நுழைந்தவன் "என்ன விஷயமா என்னை வர சொன்னீங்க மேம்?" என கேள்வியை எழுப்ப "அதான், நா ஏற்கனவே சொன்னேன் தானே. உன்கிட்ட இரண்டு பொண்ணுங்க வந்து முனைவர் பட்டம் வாங்க படிக்க வருவாங்க." னு சொன்னதை கேட்டதும். "எஸ் மேம். முதல்ல நா அவங்களை டெஸ் பண்ணனும். அவங்க எதுல விருப்பமா இருக்காங்களோ. அந்த டாப்பிக்ல அவங்க ரிசர்ச் பண்ணா.. நல்லா இருக்கும். சோ, ஐ ஹேவ் அனதர் பிளன்." இப்படி சற்று நேரம் ரஞ்சனாவுடன் பேசி முடிந்தவுடன் அதிரூபன் வீட்டிற்கு வந்து சேரும் வழியில் ஒரு நங்கை கையை காட்ட அவனும் நிறுத்தினான். "சார், நா பக்கத்துல இருக்குற என் அத்த வீட்டுக்கு போகணும். கொஞ்சம் டிராப் பண்ண முடியுமா?" என்றாள் சுருண்டிருந்த முடியை காதுமடலுக்கு பின் கோதியவாறு. அவளை பார்த்ததும் 'ஆஹா!! இவ்வளவு அழகா இருக்கா? இவ பெயர் என்னவா இருக்கும்?' என கேட்பதற்கு முன் அவனது வண்டியில் ஏறினாள் பாவை. "சார், யூ லுக் ஹன்சம். நா ஆராதனா நீங்க?" என அந்த பெண்ணவள் கேட்க "அதிரூபன். நீங்க..? ஐ மின் நா உங்களை எங்கையோ பார்த்திருக்கேன்? ஆனா.. எங்கனு தான் நினைவுக்கு வரவே மாட்டேங்கிது." அதற்கு ஆராதனா "ஐயடா, வாய்ப்பு இல்ல. ஸ்டாப்!!!" என நிறுத்த சொல்ல. 'என்ன இவ என் வீட்டுக்கு முன்ன நிறுத்த சொல்லுறா?' "தாங்க்ஸ் அதிருப்." "ஹலோ! ஐயம் அதிரூபன். ஸ்பேல் இட் கரேக்ட்." என அவனது பெயரை சரியாக சொல்லும் படி கண்டித்தான். அவள் உள்ளே சென்றதும் "தொல்ல விட்டது." என்ற படி எதர்ச்சியாக திரும்ப "ச..சானக்கியா? நீ என்ன இங்க?" என அதிர்ந்து தத்தி தத்தி கேட்டான். "அந்த பொண்ணு யார்? உரிமையா அவளை நீங்க பைக்ல கூட்டிட்டு வந்திருக்கீங்க? நா உங்க வீட்டுக்கு படிக்க வந்தேன். அவ எதுக்கு இங்க வந்தா?" என படிப்படியாக கேள்வியை கேட்க 'எனக்கு தான் தெரியாதே! நா என்ன சொல்லுவேன்.' "அவ மாதங்கி பிரண்ட். வா நம்ம படம் பார்க்க போவோம்." "நா என்ன கேட்டேன். நீங்க என்ன செய்யுறீங்க? படம் பார்க்க நா வரமாட்டேன்!" என பிடிவாதமாக நின்றாள். "பார்த்தியா, நா வேட்டையன் படத்துக்கு டிக்கட் வாங்கி வைச்சிருக்கேன்." அந்த டிக்கட்டை காட்டவும். "அட! ரூபன் படம் பார்த்துட்டு வந்ததும் நம்ம ஒன்னா சேர்ந்து ரீல்ஸ் பண்ணுவோம்." என்றாள் நகைச்சுவையாக. 'ரீல்ஸ்! என்ன சானக்கியா என்னை இப்படி கவுத்துட்ட.' என மனதளவில் இனி என்ன நடக்குமோ என பயந்தான் அதிரூபன். வீட்டில் ஜெயவள்ளி சமையல் வேலையை செய்து வந்தார். அவரை தவிர வேறு யாரும் அங்கு இல்லை. மாதங்கி தன்னவனை காண சென்றிருக்கிறாள், வைனவேந்தன் ஜோசியரை பார்க்க சென்றுள்ளார் அதனால், வீடு வெறிச்சோடி காணப்பட்டது. இவளை பார்த்த ஜெயவள்ளி "வா, ஆரு. ஆளே மாறிட்ட? ரொம்ப அழகா இருக்க."என அவளை பார்த்ததும் சந்தோஷம் இல்லாத படி ஏதோ கடமைக்கென பேசினார். "கடமைக்கு பேசிறது சரியில்ல. என்னை பத்தி சொல்றது இருக்கட்டும். என் அம்மா நந்தகிக்கு நீங்க கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா? இல்ல மறந்து போயிட்டிங்களா?" என அவரை பார்த்து கேட்டாள்.
சில வருடங்களுக்கு முன்..
"நந்தகி! என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?" என ஜெயவள்ளி எல்லோருக்கும் முன் அவள் பக்கம் சென்று கேள்வி எழுப்பினாள். நந்தகி யாரென்றே தெரியாத பெண். காதல் திருமணம் செய்து ஜெயவள்ளியின் தாயார் விற்பனைக்கு விடும் வாடகை வீட்டில் தங்கி வந்தவர்கள். நந்தகி கணவன் வெளிநாட்டுக்கு சென்ற சமயத்தில் விமானம் வெடித்தது. அதிலிருந்து, நந்தகி தனிமையாக வாழ வேண்டிய சூழல். அதே நேரத்தில் ஜெயவள்ளி கருவுற்றாள். அப்போது அதிரூபனுடன் தான் இரவு பொழுதை கழித்து வருவார் நந்தகி. காரணம், அவளது கணவனின் பெயர் அதி எனும் வார்த்தையில் தொடங்குவது தான். அப்போது ஒரு பொழுதில் நந்தகி "ஜெயவள்ளி, எனக்கு பொண்ணு பிறந்தா..அதிரூபனுக்கு கட்டி வைச்சு உனக்கு சம்மந்தி ஆக ஆசைப்படுறேன்." என விளையாட்டுக்கு கேட்டது தான் "என்ன? கண்டிப்பா சொல்றேன், என் மருமகள் உன் வயித்துல இருந்தா..கண்டிப்பா நானே மனசு மாறுனாலும் விதி அவங்களை சேர்த்து வைக்கும். ஒரு வேளை அந்த விதி என் பையன் மனசை மாத்துச்சு, நானே உன்னை தேடி வந்து உன் பொண்ணுக்கு திருமணம் செஞ்சி வைப்பேன். இது சத்தியம்." என நந்தகியிடம் சத்தியம் செய்தது என அனைத்தையும் நந்தகி தன் மகளுக்கு கூறியிருந்தார். அதனால், தான் இன்று ஜெயவள்ளியை சந்தித்து இவையெலாம் கேட்டதும் பழையன அனைத்தும் அவருக்கு ஞாபகம் வந்தது. ஜெயவள்ளி தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காகவும், எதிர்காலத்திற்காகவும் அவர்கள் சொந்த ஊரைவிட்டு இதோ, இத்தனை வருடமாக கோவையில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வபோது தன் தோழியை பார்க்க சொந்த ஊருக்கு சென்றாள். அதுவும் அவளது தாயார் உயிரோடு இருந்த போது. பின் அங்கு செல்வதற்கு ஜெயவள்ளிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனை வருடத்திற்கு பின் ஆராதனாவை பார்த்தவர் "என்னை மன்னிச்சிடு ஆரு! நா அப்ப சத்தியம் செஞ்சது உண்மை தான். ஆனா..இப்ப அதிக்கு வேற சம்மந்தம் பார்த்தாச்சு. உனக்காக ஒருத்தன் கண்டிப்பா உனை தேடி வருவான். என்னை மன்னிச்சிடு!" என கூறினார்.
இச்சு தா 💋 கொஞ்சம் பிச்சு தா😘
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..! (முதல் பாகம்) - Comments Thread Our newest member: Vijianand Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page