All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

Page 3 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 441
 
ஜானகி மந்திரம் 19 A
 
இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் ​மதிய உணவு இடைவேளை. 
 
கல்லூரி வளாகம் வழக்கமான சத்தங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தாலும், மைதிலிக்கும் மனோவுக்கும் அந்த நிமிடம் ஒரு தனிமை தீவு போலவே இருந்தது. காலையிலேயே அவன் அனுப்பிய அந்த மெசேஜ்— "I want to hear your voice. மதியம் 1:30-க்கு கால் பண்றேன். ஓகேவா?" —
 
அதை மைதிலி எத்தனை முறை படித்தாள் என்பதற்கு அவளுக்கே கணக்கு இல்லை.
 
முதலில் மறுத்தாள். பிறகு தவிர்த்தாள்.
 
ஆனால் —
 
திரும்பத் திரும்ப அவன் insist பண்ணியதால், ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.
 
​சஞ்சுவும் இந்துவும் அவர்கள் கிளாசில் இருப்பார்கள். டிபார்ட்மெண்ட் சிம்போசியம் விஷயமாக அவர்கள் அலைந்து கொண்டிருந்ததால் இருவரையும் அவள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
 
கேண்டீன் பக்கமும் மரத்தடிகளிலும் மாணவர்கள் ஒருவரையொருவர் லஞ்ச் பாக்ஸைப் பிடுங்கி சாப்பிட்டபடி சினிமா மற்றும் கிரிக்கெட் பற்றி ஆரவாரமாக கலாட்டா செய்துகொண்டிருந்தனர்.
 
​மறுபுறம், மாணவிகள் சிறு சிறு குழுக்களாக வராண்டாக்களில் உலவியபடி, மெல்லிய சிரிப்புடன் ரகசியங்களை பகிர்ந்துகொண்டு தங்களுக்குள் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர்.
 
மைதிலி மட்டும் மெல்ல பிரிந்து காமர்ஸ் பிளாக் கிரவுண்ட் ப்ளோர் லேடீஸ் ரெஸ்ட் ரூம் பகுதிக்கு முன்னால் இருந்த அந்த நிழலான வராண்டாவிற்கு வந்தாள். அங்கே நடமாட்டம் குறைவாக இருந்தது.
சுவர் மீது வருடங்களின் மெல்லிய சிதைவு. பூச்சு உரிந்த தடங்கள்.
 
அருகில் நின்றிருந்த ஒரு முதிர்ந்த வெள்ளை சம்பா மரம். அதிலிருந்து உதிர்ந்த பூக்கள், தரை முழுக்க பரவியிருந்தன.
 
பால் வெள்ளை இதழ்கள்.
 
மஞ்சள் மையம்.
 
வெயிலில் மின்னியது.
 
அவள் ​கையில் இருந்த அந்தப்  நோக்கியா போன், அவள் உள்ளங்கையின் சூட்டில் வேர்த்திருந்தது.
 
மதியம் 1:31.
 
போன் ரிங் டோனை வெளியிட.... மைதிலி தயக்கத்துடன் 'அட்டெண்ட்' செய்து காதுக்கு கொடுத்தாள்.
 
​மறுமுனையில் ஒரு நொடி மௌனம்... பிறகு ஒரு மெல்லிய சிரிப்புடன் கலந்த அந்த காந்தக் குரல் ஒலித்தது.
 
​மனோ: "ஹலோ... சன்ஷைன்? இருக்கியா?"
 
மைதிலிக்கு திடீர் படபடப்பு. ​இவ்வளவு காலம் எழுத்துக்களாக பார்த்த அந்த மனிதன், இப்போது ஒலியாக தன் காதுக்குள் இறங்குவதை மைதிலியால் நம்ப முடியவில்லை.
 
​மைதிலி: (தொண்டையை சரிசெய்தபடி மெல்லிய குரலில்) "ம்... இருக்கேன்..."
 
மைதிலி தூணை பிடித்தபடி நின்றுகொண்டே இருந்தாள்.
 
அவளது மூச்சு மெதுவாக சீராகிக் கொண்டிருந்தாலும் —
இதயம் மட்டும் இன்னும் அவசரத்தில் துடித்துக் கொண்டே இருந்தது.
 
அதே நேரம் —
 
ஃபுட்பால் கிரவுண்ட்.
 
மனோ —
 
ஒரு பெரிய மரத்தடியில்
ஒரு காலை மடக்கி, மரத்தில் தூக்கி வைத்து சாய்ந்து நின்றிருந்தான்
 
​மனோ: "வாவ்... தேங்க்ஸ்.  தெரியுமா? இவ்வளவு நாள் உன் மெசேஜ் படிக்கும்போது எனக்குள்ள ஒரு வாய்ஸை நானே கிரியேட் பண்ணி வச்சிருந்தேன். ஆனா நிஜம் அதைவிட ரொம்ப அழகா இருக்கு. Your voice has a soul, Sunshine. ஒரு சின்ன பயம் இருக்கு... ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கு."
 
​மைதிலிக்கு தன் கைகள் வேர்ப்பது புரிந்தது. ஒரு பக்கம் தன் நிஜ அடையாளத்தை மறைக்கிறோம் என்ற 'Insecurity', இன்னொரு பக்கம் அவனது வார்த்தைகள் தரும் போதை.
 
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கித் தவிக்க, வராண்டாவின் அந்த தூணைப் பலமாக பற்றிக்கொண்டாள்.
 
மனோ: "இப்ப நான் காலேஜ்லதான் இருக்கேன்... நீ எங்க இருக்க? இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?"
 
தான் அவனுக்கு மிக அருகில்தான் இருக்கிறோம் என்பதை சொல்ல முடியாமல் மௌனமானாள். அவளது 'Silence'-ஐ புரிந்துகொண்டது போல மனோவே தொடர்ந்தான்.
 
​மனோ: "சரி... ஓகே ஓகே. நீ சொல்ல வேண்டாம், நான் உன்னை போர்ஸ் பண்ணல. எங்களுக்கு இப்போ லஞ்ச் பிரேக். பசங்கல்லாம் கேண்டீன்ல கத்திக்கிட்டு இருக்காங்க... நான் அங்கிருந்து எஸ்கேப் ஆகி இப்போ கிரவுண்டுக்கு வந்துட்டேன். இங்க ஒரு மரத்தடியில தனியா நின்னுதான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்."
 
மைதிலி: "நிஜமாவே என்கிட்ட பேசணும்னு தோணுதா மனோ? நான் எப்படி இருப்பேன்னு கூட உங்களுக்கு தெரியாதே..."
 
மனோ: (ஒரு மெல்லிய புன்னகையுடன்) "உன் முகம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாதுதான். ஆனா, உன் பேச்சு மூலமா நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியும் சன்ஷைன்.
 
மைதிலி: அப்படியா நான் எப்படிப்பட்டவ, ஒரு சாம்பிள் சொல்லுங்க பாப்போம்...
 
படபடப்பு அவளுக்கு குறைந்து கொண்டே செல்ல, சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
 
மனோ: “சொல்லட்டுமா…?”
 
சிறிது இடைவெளி.
 
“நீ ரொம்ப யோசிப்ப…
 
ஒவ்வொரு வார்த்தையும் type பண்ணுறதுக்கு முன்னாடி இரண்டு தடவை யோசிப்ப…
யாரையும் hurt பண்ணக்கூடாது னு நினைப்ப…
 
ஆனா உனக்குள்ள என்ன கஷ்டமோ  — அத மட்டும் சொல்ல மாட்ட…”
 
மைதிலி அசைவின்றி நின்றாள்.
 
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் —
 
அவளுக்குள்ள ஒலித்தது.
 
மைதிலி: “அவ்வளவு easyஆ analyse பண்ணிட்டீங்களா…?”
 
மனோ: (சிரித்தபடி)
 
"Analysis இல்ல சன்ஷைன்… feeling… நீ எப்படிப்பட்டவளா இருப்பன்னு என்னால பீல் பண்ண முடியுது.."
 
சிறிது மௌனம்.
 
அந்த மௌனம் — சொல்லாத உணர்ச்சிகளால் நிரம்பிருந்தது. மைதிலி உதட்டோரம் புன்னகை.
 
மனோ:.“நான் ஒரு விஷயம் கேக்கலாமா…?”
 
மைதிலியின் விரல்கள்
போனை இன்னும் பலமாக பற்றின.
 
“ம்… கேளுங்க…”
 
மனோ: “நீ இப்போ சிரிக்கிறியா…?”
 
அவள் சற்று திகைத்தாள்.
 
இவனுக்கு எப்படி தெரியும்?
 
மைதிலி: எதுக்காக அப்படி கேக்குறீங்க?
 
மனோ: “தெரியல… but I can literally feel your smile right now."
 
மைதிலி — முதன்முறையாக —
சிறிது வெளிப்படையாக சிரித்தாள்.
 
“இல்ல…ஆனா இப்போ சிரிக்கறேன்…”
 
அந்த பதிலுக்கு பிறகு —
மறுமுனையில் ஒரு பெருமூச்சு.
 
மனோ: Good… நீ சிரிக்கணும் சன்ஷைன்…
சன்ஷைன்ங்கற பேருக்கு ஏத்த மாதிரி எப்பவுமே சிரிக்கணும், எல்லாரையும் சிரிக்க வைக்கணும். அதுதான் சரி.
 
அந்த பதில் மைதிலியின் உள்ளத்தை உருகச் செய்தது.
 
அவள் வரண்டாவில் நடை பயின்றாள். கீழே கிடந்த சம்பா பூக்களை கவனமாக மிதிக்காமல் நடந்தாள்.
 
மைதிலி: “நீங்க எப்பவுமே இப்படி தான் பேசுவிங்களா…?”
 
மனோ: “யார்கிட்ட…?”
 
மைதிலி: “ என்னை மாதிரி… யாருன்னே தெரியாத பொண்ணுங்க கிட்ட…”
 
சிறிது நேரம் —
 
மௌனம். மௌனத்தில் லேசான காயம்.
 
பின்னர்,
 
மனோ:
 
“இல்ல… இதெல்லாம் நான் யார்கிட்டயும் பேச மாட்டேன்…
நீ-ங்கறதுனால தான் பேசுறேன்… ஏன்னா நீ எனக்கு ரொம்ப important அதான்."
 
அந்த பதில் — மைதிலியை நடக்கவிடாமல் நிறுத்தியது.
 
அவள் தரையில் இருந்த வெள்ளை பூக்களை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
 
மைதிலி: “நான்… உங்களுக்கு ரொம்ப importantஆ…?”
 
அந்த கேள்வி — அவளுக்கே பயமாக இருந்தது.
 
மறுமுனையில் —
 
ஒரு அர்த்தமுள்ள சிரிப்பு.
 
மனோ: “அது உனக்கே தெரியாதா…?”
 
அவள் எதுவும் பேசவில்லை.
 
மனோ: “நான் சொல்லணுமா…?”
 
மைதிலியின் மூச்சு — மெல்ல தடைபட்டது.
 
“ம்…”
 
மனோ: “எனக்கு எல்லாரும் இருக்காங்க.. அவங்களையெல்லாம் இம்பார்ட்டன்டா நான் நினைக்கல. ஆனா நீ இல்லனா… என் நாள் முழுசும் empty தான்…நீ online இல்லனா… நான் wait பண்ணுறேன்… நீ reply lateஆ கொடுத்தா… நான் irritate ஆகுறேன்…இதல்லாம்… important இல்லனா என்ன…?”
 
அந்த வார்த்தைகள் —
 
மைதிலியின் உள்ளத்தில் ஆழமாக பதிந்தது. அவள் இதயம் உருகி வழிவது போலிருந்தது. மெதுவாக சுவரில் சாய்ந்து கண்களை மூடினாள்.
 
ஒரு நொடி —
 
அவள் எல்லாத்தையும் மறந்து — அந்த உணர்வை மட்டும் உணர்ந்தாள்.
 
Cut to — Close up
 
அவள் முகத்தில் பரவச நடுக்கம்.
 
உதட்டில் பிறக்கும் சிறிய புன்னகை.
 
முன்பக்கம் கிரவுண்டில் மாணவர்கள் சத்தம்…
 
கலாட்டா, சிரிப்பு  கூச்சல்.
 
அனைத்தும் மெதுவாக மங்க ஆரம்பித்தது.
 
Fade out — Background noise
 
மீதமிருப்பது —அவன் குரல் மட்டும்.
 
Echo effect —
 
"நீ இல்லனா… என் நாள் முழுசும் empty…"
 
அந்த வார்த்தைகள் —
 
அவள் மனதுக்குள் மெல்ல மெல்ல ஒலித்துக் கொண்டே இருந்தது.
 
Visual — Slow Motion
 
காற்று லேசாக வீசியது.
 
அவள் தலைமுடியின் சில கூந்தல்கள் — முகத்தை வருடின.
 
Insert shot —
 
தரையில் இருந்த வெள்ளை சம்பா பூக்கள் காற்றில் புரண்டு நிமிர்ந்தன.
 
Cut — Extreme close up
 
அவள் மூடிய கண்களின் மூலைகளில் ஒளிரும் ஈரப்பதம்.
 
அந்த நொடி —
 
அவள் எங்கும் இல்லை.
 
காலேஜ் வராண்டா மறைந்து,
 
சம்பா பூக்களின் வெள்ளை வெறுமை.
 
அந்த வெறுமையின் நடுவில் —
 
அவன் குரல் மட்டும்.
 
அவள் — அந்த குரலை பிடித்து கொண்டு நிற்கிறாய்
 
Heartbeat sound — slow… லப் டப்
 
ஒரு நொடி —
 
அவள் எல்லாத்தையும் மறந்தாள்.
 
யார்… எங்கே… எப்படி…
 
எதுவும் இல்லை.
 
Only feeling.
 
அந்த உணர்வு — அவளை முழுக்க நிரப்பியது.
 
மனோவின் குரல் கேட்க--- Cut Back to reality.
 
“இப்போ நான் சொன்னது, உன் நெஞ்ச தொட்ட மாதிரி
ஃபீல் பண்ணுன இல்லையா ?”
 
மைதிலி கண்களை சட்டென்று திறந்து திகைத்தாள்.
 
அடப்பாவி! இவன் எப்படி கண்டு பிடிக்கிறான்?
 
மைதிலி: எப்படி பீல் பண்றேன்னு சொல்றீங்க?
 
மனோ — மரத்திலிருந்து நேராக நின்றான்.
 
"அது என்னமோ தெரியல சன்ஷைன். உன் silence கூட அதிகமா பேசுது … மத்த விஷயங்களில் கரெக்டா இருக்கனா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா உன் விஷயத்தில் மட்டும் எனக்கு உள்ளுக்குள்ள தோணுது, அதை சொல்றேன்.."
 
மைதிலி அந்த வராண்டாவில் இருந்து நடக்கத் தொடங்கினாள்.
 
மைதிலி:
 
“நீங்க ரொம்ப dangerous…”
 
மனோ சிரித்தான்.
 
அவனும் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
 
மரத்தடியை விட்டு — காலேஜ் பில்டிங் நோக்கி.
 
மனோ: “ஏன்…?”
 
மைதிலி: “மனசுல இருக்கிறதல்லாம் கண்டுபிடிச்சுட்றீங்க…”
 
மனோ — நடந்தபடி ஸ்டைலாக தலையை கோதினான்.
 
“நீ தான் சொல்லாம எல்லாத்தையும் சொல்லிருரியே…”
 
மைதிலி — ஒரு நொடி நின்றாள்.
 
“நானா…?”
 
மனோ:
 
“yes… நீ உன்னை மறைக்க முயற்சி பண்ணுற… ஆனா ஒவ்வொரு வார்த்தையிலும் நீ தெரிஞ்சுட்ற…What can i do? ”
 
சற்றும் தூரத்தில் அவள் கிளாஸ் கேர்ள்ஸ் வருவதை கவனித்ததும்,
 
மைதிலி அவசரமாக: சரி ஓகே. நான் அப்புறமா பேசறேன்.... என்றாள்.
 
மனோவும் அவசரமாக: எப்ப?... என்று கேட்க,
 
மைதிலி: text பண்ணுங்க... ஓகேவா bye.
 
என்றபடி அவன் பதிலை  எதிர்பார்க்காமல் காலை கட் செய்தாள்.
 
ச்சே! வச்சிட்டாளே! இன்னும் கொஞ்ச நேரம் பேசிருக்கலாம்.
 
மொபைலை பாக்கெட்டில் போட்டபடி மனோ நடக்க ஆரம்பித்தான். 'இவ கண்டிப்பா நம்ம காலேஜ் ஸ்டூடண்டா தான் இருக்கணும். ஆனா இவ்வளவு பேருக்கு நடுவுல இவளை எப்படிக் கண்டுபிடிக்கிறது?' என்ற யோசனை அவன் தலையை குடைந்தது.
 
இப்போது —
 
மைதிலி வராண்டாவை கடந்து காமர்ஸ் பில்டிங்கின் முன்புறம் வந்தாள்.
 
முன்னால் —
 
கிரவுண்ட்.
 
அதே நேரம் —
 
மனோவும் கிரவுண்டிலிருந்து
அந்த பக்கமாக நடந்து வந்தான்.
 
சற்றும் எதிர்பாராத அந்த நொடியில், இருவேறு துருவங்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் தூரத்தில் இருந்தார்கள்.
 
எதிரே வரும் மனோவை பார்த்து விட்டாள். தற்செயலாக அவனை எதிரே பார்த்ததும், மைதிலிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
​மனோ காமர்ஸ் பில்டிங்கை கடந்து மெயின் பில்டிங் நோக்கி செல்வதற்காக வந்தான். மைதிலி சட்டென்று தலையை குனிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
 
​அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாண்டிச் சென்ற அந்த விநாடி...
 
​மனோவின் உடலில் இருந்து வீசிய அந்த 'அசாரோ விசிட்' பெர்ஃப்யூம் வாசனையால் மைதிலி மனதிற்குள் ஒரு சுகந்தமான நடுக்கம்.
 
தன்னிடம் இப்போது பேசிய அந்த சன்ஷைன் குரலின் அதிர்விலேயே லயித்துப்போயிருந்த மனோ, எதிரே வந்த பெண்ணை துளியும் கவனிக்காமல் கடந்து சென்றான்.
 
​மைதிலி மட்டும் ஒரு கணம் நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் ஸ்டைலாக நடந்து சென்று கொண்டிருந்தான்.
 
'இவன் தேடும் அந்த சன்ஷைன் கேர்ள் நான்தான் என்று தெரிந்தால், இவன் இன்னும் இப்படியே அன்பாக இருப்பானா?' என்ற கேள்வி அவள் கண்களில் ஒரு மெல்லிய ஈரத்தை வரவழைத்தது.
 
தொடரும் 


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page