நேசம் – 21
நர்த்தனாவை சிவந்து வீங்கி இருந்த முகத்தோடு பின்பக்க வீட்டில் அடைத்து வைத்திருக்க.. அதற்காகவே அவ்வளவு நேரமும் காத்திருந்த நாகராஜன் அவள் இழுத்து வரப்பட்ட செய்தி அறிந்து கொலை வெறியோடு அந்த வீட்டை நோக்கி பாய்ந்து சென்றார்.
அங்கே பயத்தில் கோழிக் குஞ்சாக நடுங்கி தரையில் காலை சேர்த்து அணைத்தபடி நர்த்தனா அமர்ந்திருக்க.. “ஏன்டி ஓ**ளி நா** என்ன வயசாகுது உனக்கு..? அதுக்குள்ளே ஆம்பள தேவையா போச்சோ..” என்றவாறே வந்தவர், எட்டி நர்த்தனாவை மார்பிலேயே மிதிக்க.. பெரும் அலறலோடு பின்னே சரிந்திருந்தாள் நர்த்தனா.
“எச்**க** நா** உன்னை இத்தனை வருஷமா பிச்சை எடுக்க விடாம என் பிள்ளைக்கு சமமா நடத்தி சோத்தை போட்டு பாதுகாப்பா வெச்சு வளர்த்ததுக்கு நீ காட்டின நன்றி கடன் இது தானா..! உன்னை எல்லாம் அன்னைக்கு உங்க அப்பனை கொன்னப் போதே சேர்த்து கொன்னு இருக்கணும்.. இல்லை எப்படியாவது போய் தெருவில் பிச்சை எடுன்னு விரட்டி விட்டு இருக்கணும்.. நா** குளிப்பாட்டி நடு வீட்டில் வெச்சாலும் அது புத்தியை தான் காட்டும்னு சொல்றது சரியா தானே இருக்கு..!” என்றவரின் வார்த்தைகளில் அவ்வளவு நேரம் அடிப்பட்ட வலியில் துடித்துக் கொண்டிருந்தவள் திகைத்துப் போய் அவரை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“என்னடி அப்படி பார்க்கறே.. உங்க அப்பனை கொன்னது யாருன்னு உனக்கு தெரியாதா..! நான் தான்.. அந்த நல்ல காரியத்தை செஞ்சேன்.. ஏன்னு தெரியுமா..? இதோ உன்னை மாதிரியே திமிர் எடுத்து போய் கண்டவளையும் தேடிப்போனான்.. அவனுக்கு ஒருத்தி பத்தலைனா நம்ம ஜாதியிலேயே இன்னொருத்தியை தேடிக்க வேண்டியது தானே..! போயும் போயும் நம்மகிட்ட வேலை செய்யறவ கூடவே தொடர்பு வெச்சுருந்தான், ஜாதி கெட்ட பைய.. அதான் கூட பொறந்தவன்னு கூட பார்க்காம போட்டு தள்ளினேன்.. அவனையே கொன்ன எனக்கு நீ எல்லாம் தூசுடி..” என்று இன்னொரு மிதி அவள் முகத்திலேயே மிதித்தார் நாகராஜன்.
பிள்ளைகளுக்கு அப்போது விடுமுறை நேரம். பக்கத்து ஊரில் இருக்கும் சுஜாதாவின் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அங்கு கிடா வெட்டி விருந்து நடந்து கொண்டிருக்க.. தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் சுஜாதா.
எப்போதும் விஷ்வா மைதிலி நர்த்தனா என அனைவரோடும் செல்வது தான் அவரின் வழக்கம். ஆனால் நர்த்தனா இப்படி வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகு மைதிலியை நாகராஜன் நடத்தும் முறையில் பெரும் மாற்றம் வந்திருந்தது.
பெண்ணை ஒழுங்காக வளர்க்கவில்லை என சொல்லி முகத்திற்கு நேராக மைதிலியை தினமும் அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தார் நாகராஜன். அதில் மைதிலி ஒரு கட்டத்தில் நாகராஜன் முன் வருவதை முற்றிலும் தவிர்த்து அறைக்குள்ளேயே ஒடுங்கிப் போனார்.
அந்த வீட்டின் கடைக்குட்டியான விஷ்வாவை எப்போதுமே சுஜாதா தனியாக செல்லம் கொடுத்து கவனிப்பார் என்பதால் அவனை தன்னோடு அழைத்துச் செல்ல தான் இன்றும் முயன்றார் சுஜாதா.
ஆனால் அன்று அவனுக்கு கொஞ்சம் காய்ச்சலாக இருந்ததில் மைதிலி வேண்டாம் என மறுத்து விட, சுஜாதா தன் இரு பிள்ளைகளோடும் கிளம்பிச் சென்று விட்டிருந்தார்.
இதில் மருந்து கொடுத்து உறங்க வைத்திருந்த விஷ்வாவின் அருகில் கவலையோடு அமர்ந்திருந்த மைதிலி, தொடர்ந்து தோட்டத்தின் பக்கம் இருந்து ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததில் எழுந்து சென்று ஜன்னல் அருகே நின்று, கவலையோடு பின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்க.. அங்கிருந்து கேட்ட அழுக்குரல் அவர் மனதை ஏதோ செய்தது.
அதில் கவலையும் பதட்டமுமாக அங்கே பார்த்தவர், ‘என்ன நடக்கிறது..?’ என புரியாமல் நின்றிருக்க.. நாகராஜனின் ஆக்ரோஷமான குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததில் பயந்தே போனார் மைதிலி.
மெதுவாக அவர் விஷ்வாவை திரும்பிப் பார்க்க.. அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனின் தூக்கத்தை கலைக்காமல் மெல்ல அங்கிருந்து வெளியில் வந்தவர், சிறு தயக்கத்தோடே தோட்டத்து வீட்டை நோக்கி சென்றார்.
பல வருடமாக அந்த வீட்டை நாகராஜன் எதற்காக பயன்படுத்துகிறார் என அறிந்திருந்தவர் என்பதால் எப்போதும் இது போலான நேரங்களில் மைதிலி அங்கு செல்ல மாட்டார்.
இன்று ஏதோ ஒன்று அவரை அங்கு இழுத்துச் செல்ல.. மனம் எதையோ எண்ணி பதைபதைக்க.. தடதடக்கும் இதயத்தோடு மைதிலி அந்த இடத்தை நெருங்கவும் நாகராஜன் மைதிலியின் கணவரை கொன்றதைப் பற்றி பெருமையாக சொல்லவும் சரியாக இருந்தது.
அதைக் கேட்டு நிற்க முடியாமல் தடுமாறி மைதிலி அருகில் இருக்கும் மரத்தை பிடிக்க.. அதே நேரம் உள்ளிருந்து நர்த்தனாவின் அழுகுரல் அவருக்கு கேட்டது. இது மைதிலியின் அடி வயிற்றை கலங்கச் செய்ய.. மெல்ல திறந்திருந்த கதவு வழியே உள்ளே எட்டிப் பார்த்தவர், நர்த்தனா அங்கே இருந்த நிலையைக் கண்டு திடுக்கிட்டார்.
ஒரு நொடி செய்வதறியாது திகைத்து நின்றாலும் உடனே தன் மகளைக் காப்பாற்ற எண்ணி வேகமாக உள்ளே செல்ல முயன்றவரை நாகராஜனின் ஆட்கள் பிடித்து நிறுத்த.. அதே நேரம் மைதிலியை திரும்பி பார்த்திருந்த நர்த்தனா “ம்மா..” என்று அழுகுரலில் அழைத்தாள்.
“தனாம்மா..” என்று மைதிலி பரிதவிப்போடு அழைக்கவும் “வா.. வா.. உன்னை தான் தேடிட்டு இருந்தேன்.. இப்படி ஒரு பொண்ணை பெத்து வளர்த்து வெச்சதுக்கு இவ என்ன நிலைக்கு ஆளாகறான்னு நீயும் பார்க்க வேண்டாம்..” என்று திமிரோடு பேசியவர், “அவளை அடிச்சு கொல்லுங்கடா..” என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டார்.
அதில் நான்கு பேர் நர்த்தனாவை வேகமாக நெருங்க.. அவர்களை தடுக்க முயன்றார் மைதிலி. இதை கவனித்த நாகராஜன் மைதிலியை ஒற்றை கையில் பிடித்து இழுத்து பின்னே தள்ள.. அங்கிருந்து சுவரில் மோதி கீழே விழுந்தார் மைதிலி.
அதற்குள் தன்னை நெருங்கியவர்களை கண்டு மிரண்டு பின்னே நகர்ந்த நர்த்தனா “பெரியப்பா வேண்டாம்.. ப்ளீஸ் வேண்டாம்.. என்னை விட்டுட சொல்லுங்க, நான் உங்க கண்ணுலேயே படமாட்டேன்.. இந்த ஊர் பக்கமே வரமாட்டேன், எங்கேயாவது போயிடறேன் ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள்.
“நீ போயிட்டா நாகராஜன் தம்பி பொண்ணு எவனையோ காதலிச்சு வீட்டை விட்டு ஓடி போயிட்டான்னு காலத்துக்கும் பேச மாட்டாங்களா..? இப்போவே என் கூட இருக்கறவனுங்களை தவிர யாருக்கும் தெரியாம இதை மறைச்சு வெச்சு இருக்கேன்..” என்றார் நாகராஜன்.
“இல்லை பெரியப்பா.. இனி எப்போவும் நான் இந்த பக்கம் கூட வரமாட்டேன், வேணும்னா நான் செத்துட்டேன்னு கூட சொல்லுங்க..” என்று அவசரப்பட்டு நர்த்தனா சொல்லவும், “அப்படித்தான் சொல்ல போறேன்.. ஆனா பொய்யா சொல்ல எனக்கு விருப்பமில்லை..” என்றவர், “என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..?” என்று திரும்பி தன் ஆட்களை பார்த்து கத்தினார்.
“அய்யய்யோ.. உங்களை கையெடுத்து கும்பிடறேன் விட்டுடுங்க, என் பொண்ணை விட்டுடுங்க..” என்று மைதிலி கதறிக் கொண்டு மீண்டும் முன்னே வர பார்க்க.. அங்கிருந்த இருவர் மைதிலியை தடுத்து பிடித்துக் கொண்டனர்.
அவரால் நர்த்தனாவை நெருங்கவும் முடியவில்லை. தன் முன்னே நர்த்தனாவை அடித்து துன்புறுத்துவதை காணவும் முடியவில்லை. இதில் உயிர் வலியோடு ஒரு பக்கம் மைதிலி கதறிக் கொண்டிருக்க.. மற்றொரு பக்கம் அதே வலியோடு நர்த்தனா தட்டுத்தடுமாறி நகர்ந்து வந்து நாகராஜனின் காலை பிடித்தபடி “பெரியப்பா என்னை விட்டுடுங்க.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.. என் வயித்தில் ஒரு உயிர் இருக்கு.. அந்த உயிர் இன்னொருத்தருக்கு சொந்தமானது, நான் அதை அவர்கிட்ட பத்திரமாக கொண்டு போய் சேர்க்கணும்..” என்று அரைகுறை நினைவோடு மடங்கி அமர்ந்து தன் வயிற்றை பிடித்தபடி கதறினாள் நர்த்தனா.
“ஓ இது வேறயா..? அவன் கூட நீ போனதே அசிங்கம்னு சொல்லிட்டு இருக்கேன்.. அந்த அசிங்கத்துக்கு சாட்சியா ஒண்ணை சுமந்துட்டு வேற வந்து நிற்கறியா நீ..? எவ்வளவு தைரியம் இருந்தா இதை என்கிட்டேயே சொல்லுவே..?” என்றவர், கொஞ்சமும் யோசிக்காமல் அவளின் வயிற்றில் எட்டி உதைத்து இருந்தார்.
இதில் நிலை குலைந்து நார்த்தனா பின்னே சரிய.. “ஐயோ பெரிய மாமா.. என் பொண்ணை விட்டுடுங்க, அவளை விட்டுடுங்க..” என்று மைதிலி கதறியதெல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போக.. திடீரென ஏதோ புகுந்தது போல் ஆக்ரோஷமான நாகராஜன் “உனக்கு ஆம்பள தானடி வேணும்.. அதுக்கு ஏன் கண்டவனையும் தேடி போறே..? நானே வர சொல்றேன்..” என்றவர் அங்கு இருந்த பத்து பேரையும் பார்த்து “இவளை உங்க விருப்பம் போல என்ன வேணாலும் செஞ்சுக்கோங்க..” என்று விட்டு வெளியேறினார்.
அந்த வார்த்தை தன் காதில் விழுந்த நொடி திடுக்கிட்டு நிமிர்ந்த நர்த்தனா, தன் வலியையும் பொருட்படுத்தாமல் வயிற்றை ஒரு கையால் பிடித்தபடி அமர்ந்த வாக்கிலேயே மெல்ல அவரை நோக்கி நகர்ந்து “பெரியப்பா..” என தீனமான குரலோடு அழைத்தபடி வந்து கொண்டிருக்க.. அங்கங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தன் ஆட்களை திரும்பி முறைத்தவர் “நான் சொன்னது உங்க காதலில் விழலையா..?” என்றார்.
இதில் கோபத்தில் சொல்கிறாரோ என ஆரம்பத்தில் தயங்கி நின்றவர்கள் எல்லாம் இப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயல.. இதைக் கண்டு பாய்ந்து சென்று அவர்களின் குறுக்கே நின்று தடுக்க முயன்ற மைதிலியை முத்து பிடித்து இழுத்து வெளியில் தள்ளி இருந்தான்.
அதில் வந்து வெளியே விழுந்த வேகத்தில் படிக்கட்டில் தலை மோதிக்கொள்ள ரத்தம் சொட்ட சொட்ட எழுந்து நின்ற மைதிலி வேகமாக முன்பக்க வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த நாகராஜனின் முன் சென்று நின்று தடுத்து அவர் காலில் விழுந்து கெஞ்ச.. “ச்சீ விடு..” என்று மைதிலியை உதறித் தள்ளினார் நாகராஜன்.
“பெரிய மாமா இது ரொம்ப தப்பு.. நீங்க இப்படி செய்யக்கூடாது, அவளும் உங்க பொண்ணு மாதிரி தானே..!” என மைதிலி கதறியதெல்லாம் கொஞ்சமும் நாகராஜனின் காதில் விழவே இல்லை.
“உங்களுக்கு பிடிக்கலைனா சொல்லிடுங்க.. நானும் என் பிள்ளைகளும் கண்காணாத ஏதாவது ஒரு இடத்துக்கு போயிடறோம், உங்க முன்னே காலம் முழுக்க வரவே மாட்டோம்.. எங்களுக்கு சொத்து சுகம் எதுவுமே வேண்டாம்.. என் பிள்ளைகள் மட்டும் போதும்.. அவங்களை என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க..” என்று மைதிலி கெஞ்சிக் கொண்டே இருக்க.. ஒரு கட்டத்தில் ஆத்திரமானவர் தன்னை நடக்க விடாமல் காலை பிடித்து தடுத்துக் கொண்ட பின்னே வந்த மைதிலியின் கூந்தலை பிடித்து தூக்கி “ச்சீ நா** என்னையே தடுக்க நினைக்கறியா..?” என ‘பளார்’ என்று கன்னத்தில் அறைந்திருந்தார்.
“பொண்ணை ஒழுங்காக வளர்க்க துப்பில்லை.. என்னடி எனக்கு பிச்சை போடறியா..? உன் சொத்தை வெச்சு நான் என்ன செய்ய போறேன்..? நீ என்ன எனக்கு சொத்து கொடுக்கறது..? நானா பார்த்து உனக்கு ஏதாவது பிச்சை போட்டா தான் உண்டு, முதலில் அதை தெரிஞ்சுக்கோ..
இங்கே நான் நினைக்கறது தான் நடக்கணும்.. நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்கணும், இன்னைக்கு உன் பொண்ணு ஓடி போனதை நானும் அப்படியே விட்டா.. இந்த ஊரில் இருக்கும் ஒருத்தனும் என் பேச்சைக் கேட்க மாட்டானுங்க.. இந்த ஊருக்கு மட்டுமில்லை நம்ம சாதிக்கும் இங்கே நான் தான் தலைவன்..
என் வீட்டில் நடக்கும் தப்பை நான் எப்படி சரி செய்யறேன்னு பார்த்தா தான் நாளைக்கு அவன் வீட்டுக்குள்ளே போய் நான் நாட்டாமை செய்ய முடியும்..? இந்த நாளு மாசமா எவனும் மூஞ்சுக்கு நேரா கேள்வி கேட்க தயங்கிட்டு இருக்கானா அதுக்கு என் மேலே அவன் வெச்சு இருந்த நம்பிக்கை தான் காரணம்.. அந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டாமா..?” என்றவரின் குரலில் அத்தனை பழிவெறி வழிந்தது.
“மா.. மா.. நீ.. ங்க.. நினைச்சா..” என அப்போதும் மைதிலி கெஞ்சலோடு எதுவோ சொல்ல வருவதற்குள், “அவளுக்கு அப்பன் புத்தி அப்படியே இருக்கு.. அவ செஞ்ச தப்புக்கு உன் மக அனுபவிச்சு தான் ஆகணும்.. இடையில் புகுந்து தடுக்க நினைச்சா உனக்கும் அதே கதி தான்..” என்று துளியும் இரக்கமில்லா கொடூர குரலில் சொல்லிவிட்டு மைதிலியைப் பிடித்திருந்த தன் கையை ஆக்ரோஷமாக நாகராஜன் உதற.. அதில் பின்னே போய் சரிந்த மைதிலி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்திருந்தார்.
நாகராஜன் சொல்லிய வார்த்தைகளோ இல்லை தன் மகள் இந்நிலையில் இருந்தும் காப்பாற்ற முடியவில்லையே என்ற எண்ணமோ ஏதோ ஒன்று தண்ணீரில் விழுந்த மைதிலியை எதிர்த்துப் போராட விடாமல் செய்ய.. அப்படியே அமிழ்ந்து போக தொடங்கினார் மைதிலி.
ஒரு நொடி நாகராஜனும் இதை எதிர்பார்க்காமல் திகைத்துப் போய் அருகில் சென்றாலும், பின் என்ன நினைத்தாரோ “போகட்டும் சனி**” என்று விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினார்.
இவை அனைத்தையும் மாடி அறையின் ஜன்னலில் இருந்து திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா. சற்று முன்பே அவனுக்கு விழிப்பு வந்திருந்தது. அறை இருளில் மூழ்கி இருக்க.. அருகில் மைதிலி இல்லாததை கண்டு மெல்ல எழுந்தவன், தண்ணீர் குடிப்பதற்காக ஜன்னலுக்கு அருகில் வர.. மைதிலி தயங்கித் தயங்கி அந்த வீட்டிற்கு செல்லும் காட்சி அவன் பார்வையில் விழுந்தது.
சிறு வயதிலிருந்தே அந்த வீட்டுப் பக்கம் செல்லவே கூடாது என தன்னை கண்டித்து வைத்திருந்தவர், ‘இப்போது ஏன் அங்கே செல்கிறார்..?’ என்று குழப்பத்தோடும் உறக்கம் கலையா விழிகளோடும் அவன் நின்றிருக்க.. அதற்குள் உள்ளிருந்து கலவையான சத்தங்களும் பெரும் குரல் எடுத்து யாரோ அழுவதும் கேட்டது.
இதில் ‘இறங்கி அங்கே செல்வதா..? வேண்டாமா..!’ என அவன் நினைத்திருக்கும் போதே, அங்கிருந்து நாகராஜன் கோபமாக வெளியில் வருவதும் அவரின் பின்னேயே வந்த மைதிலி நாகராஜனின் காலில் விழுந்து கதறுவதும், அவர் அடுத்தடுத்து செய்த அத்தனையும் அவனுக்குத் தெரிந்தது.
இதில் திகைத்து போய் தன் கண் முன்பே தன் அன்னை இறப்பதை விழிகளில் வழிந்த நீரோடு பார்த்தபடி செய்வதறியாது நின்றிருந்தான் விஷ்வா. அவனுக்கு எப்போதுமே நாகராஜன் என்றால் பயம் அதிகம். மைதிலியும் அதற்கேற்றார் போல் நாகராஜனை பற்றி பயம் கொள்வது போலவே சொல்லி தான் சிறு வயதில் இருந்தே வளர்த்திருந்தார்.
தன் கணவனை இழந்து நாகராஜனின் கட்டுப்பாட்டில் இந்த வீட்டில் இருக்கும் போது அவருக்கு பிடிக்காத எதையும் பிள்ளைகள் செய்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை எப்போதுமே மைதிலிக்கு உண்டு. இப்படி சொல்லி மைதிலி வளர்த்திருந்தும் நர்த்தனா துணிந்து இப்படி ஒரு காரியத்தை செய்திருந்ததை மைதிலியாலேயே நம்ப முடியவில்லை.
அதில் உண்டான கோபத்தோடு இருக்கும் நாகராஜனிடம் தெரியாமல் கூட விஷ்வா எந்த வகையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்றே கடந்த நான்கு மாதங்களாக அவனுக்கு பல புத்திமதிகளை சொல்லிக் கொண்டே இருந்தவர், நாகராஜனின் கண்முன்னே மட்டும் சென்றுவிடக்கூடாது, அவர் கோபப்படும்படி நடந்து விடக்கூடாது என்று தினமும் மந்திரத்தைப் போல உச்சரித்துக் கொண்டே இருந்தார்.
அதில் அவரைப் பார்த்து பயந்து போய் நின்றிருந்தவன், நாகராஜன் அங்கிருந்து வேகமாக வீட்டிற்குள் நுழைவதை கண்ட பிறகே மெல்ல அழுகையோடும் பதட்டத்தோடும் அந்தக் கிணற்றை நோக்கி ஓடினான்.
மைதிலி கிணற்றில் விழுந்த சத்தத்தை கேட்டு வீட்டிற்குள் இருந்த இருவர் வேகமாக வந்த போதும், “அப்படியே சாகட்டும் விடுங்க..” என்று அவர்களை தடுத்து விட்டு நாகராஜன் சென்றிருக்க.. அவர்களும் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எண்ணி வீட்டிற்குள் சென்று விட்டிருந்தனர்.
இதில் இருட்டில் தயங்கி தயங்கி கிணற்றடியை நெருங்கிய விஷ்வா “ம்மா.. ம்மா..” என்று சத்தம் வராமல் கதறிக் கொண்டே உள்ளே பார்க்க.. அவனுக்கு இருளில் எதுவுமே தெரியவில்லை.
கிணற்றில் குதித்து மைதிலியை எப்படியாவது காப்பாற்றி விட முடியுமா என்று எண்ணிய விஷ்வாவுக்கும் நீச்சல் சுத்தமாக தெரியாது. பகலிலேயே அந்த கிணற்றுக்குள் பாரக்க பயமாக இருக்கும்.. அத்தனை பெரிய ஆழமான கிணறு அது.
ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் கிணற்றின் மேல் ஏறுவதும், பின் பயத்தில் இறங்குவதுமாக விஷ்வா இருக்கும் போதே வீட்டிற்குள் இருந்து தீனமாக முணுகும் நர்த்தனாவின் குரல் கேட்டது.
இதில் திகைப்போடு அந்தப் பக்கம் திரும்பி பார்த்தவன், ‘தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் குரல் தன் அக்காவோடதோ..?’ என்று தோன்ற.. சத்தம் வராமல் மெதுவாக இறங்கி வீட்டின் பின்பக்கமாக நகர்ந்தான்.
வீட்டின் கதவும் பூட்டப்படாமல் லேசான இடைவெளியில் திறந்து தான் இருந்தது. ஆனால் அங்கு சென்று இவனை யாராவது பார்த்துவிட்டால் என்ற பயத்தோடு பின்பக்கமாகச் சென்றவன், அங்கிருந்த ஜன்னல் வழியே பார்க்க.. நர்த்தனா அங்கிருந்த கோலத்தை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
அதில் சட்டென முகத்தை மூடிக்கொண்டு அப்படியே தரையில் மடிந்த அமர்ந்து முட்டியில் முகம் புதைத்து சத்தம் வராமல் அழத் தொடங்கினான் விஷ்வா. பதினான்கு வயதை இப்போதே தொட்டிருக்கும் சிறு பாலகன் அவனுக்கு நடப்பது அனைத்தும் புரிந்தும் புரியாத நிலை தான்.
ஆனால் ஒரு பக்கம் தாய் இறந்து கிடக்க.. மறுபக்கம் தமக்கையும் இப்படி ஒருநிலையில் இருப்பதை கண்டவனுக்கு பயத்திலும் பதட்டத்திலும் மனம் பரிதவிக்க.. உடல் நடுங்கத் தொடங்கியது.
கண்முன் கண்ட காட்சியில் குறைந்திருந்த காய்ச்சல் அதிகரிக்க.. இருளில் அப்படியே அமர்ந்து செய்வதறியாது அழுது கொண்டிருந்தான் விஷ்வா. அதே நேரம் உள்ளிருந்து “ஏய் நாகராஜன் அண்ணனை கூப்பிடுவோமா..?” என்று முத்து சொல்லும் குரல் கேட்டது.
அந்த குரலில் எழுந்து பார்க்க நினைத்தாலும் அவன் மனம் பதறி அதை தடுக்க.. அதில் உண்டான பயத்தோடு அசையாமல் விஷ்வா அப்படியே அமர்ந்திருக்க.. அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தார் நாகராஜன்.
கிட்டத்தட்ட அரை உயிர் மட்டுமே மிச்சமிருக்க.. விழிகளில் உண்டான வலியோடு அவரை நர்த்தனா பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “இவ இன்னும் உயிரோட தான் இருக்காளா..? மானஸ்தியா இருந்தா செத்துருப்பாளேடா..!” என்று எகத்தாளமாக கேட்டப்படியே சிரித்தார் நாகராஜன்.
இதில் பெரும் நகைச்சுவையை கேட்டது போல் அங்கிருந்தவர்கள் எல்லாம் சிரிக்க.. “என்னடி ஓடு***ளி நா** இப்போ உனக்கு புரிஞ்சுருக்குமே நம்ம ஜாதிக்காரனுக்கும் மத்தவனுக்கும் இருக்க வித்தியாசம்..” என்றவாறே அவளை நெருங்கியவரை கண்டு நர்த்தனாவின் கைகள் தானாக அவளின் வயிறை தாங்கி பிடித்தது.
“அட ஓடு**ளி கழுதை.. இன்னும் அந்த கருமத்தை காப்பாத்த தான் நினைக்கறியா நீ..? என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாதுன்னு இன்னும் உனக்கு புரியலை பார்த்தியா..!” என விழிகளிலும் இதழிலும் வழிந்த எகத்தாளத்தோடு சொல்லியவர், திரும்பி தன் அருகில் நின்றிருந்தவனின் கைகளில் இருந்த கத்தியை பறித்து சட்டென நர்த்தனாவின் வயிற்றில் ஆழமாக கீறி இருந்தார்.
யாரும் எதிர்பாரா நொடியில் சட்டென இது நடந்து முடிந்திருக்க.. “ஐயோ..” என்ற கதறலோடு எழுந்து தன் வயிற்றை இருக்கைகளாலும் நர்த்தனா தாங்கி பிடிக்க முயல.. ஆனால் பாவம் அவளால் அசைய கூட முடியவில்லை.
சற்று முன் பத்து மிருகங்களும் சேர்ந்து அவளை சிதைத்து சின்னா பின்னமாக்கியிருக்க.. அவள் உடல் அசைய முடியா நிலையில் அப்படியே நர்த்தனா கதறிக் கொண்டிருந்தாள்.
அதற்குள் வயிற்றில் போட்ட கீறலை மேலும் ஆழமாக்கியவர், துளியும் மனிதத் தன்மையில்லாமல் சட்டென குனிந்து அவள் வயிற்றுக்குள் கையை விட்டு பையில் இருந்து பொருட்களை எடுப்பது போல் அங்கிருந்த உறுப்புக்களை பிடித்து வெளியே இழுத்து கொண்டிருந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிர்வலியில் துடித்துக் கொண்டிருந்தவளின் நினைவெங்கும் ஒருவனே நிறைந்திருக்க.. ‘என்னை மன்னிச்சிடுங்க தீபன்.. என்னால் உங்க வாரிசை காப்பாத்த முடியலை..’ என்று மனதார அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு தன் குழந்தை இப்படி ஒரு கொடூர அரக்கனின் கையில் சிக்கி கொண்டிருப்பதை காப்பாற்ற முடியவில்லையே என்ற பரிதவிப்போடு கிடந்தவளுக்கு நாகராஜனிடம் கெஞ்சுவதற்கு கூட அவளின் உடல் உத்துழைக்கவில்லை.
மனம் வலியிலும் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியா அழுத்தத்திலும் துடித்துக் கொண்டிருக்க.. “இது தானடா கர்ப்பப்பை..?” என்று சந்தோஷ கூக்குரலிட்டு சிரித்தார் நாகராஜன்.
அதில் அரை விழியை திறந்து நர்த்தனா அவரைப் பார்க்க முயல.. கை முழுக்க ரத்தம் வழிய அவள் உடலில் இருந்து ஒரு உறுப்பை கிட்டத்தட்ட பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தார் நாகராஜன். இதில் உயிர் வலியில் தன் இறுதி நொடியில் இருந்த நர்த்தனா ‘இந்த பாவம் உங்களை சும்மா விடாது..!’ என்று மனதிற்குள் நினைக்க.. அதே நேரம் “இப்படி வெட்டினா ஈசியா எடுத்துடலாம் ண்ணே..” என முத்து நாகராஜன் செயலுக்கு துணை நின்றான்.
“இந்தக் கருமத்தை அப்படியே காலில் போட்டு நசுக்கினா தான் என் மனசு ஆறும்டா..” என்றவர், தன் கையில் இருந்ததை பலம் கொண்ட மட்டும் தரையில் வீச.. அந்த நொடியே நர்த்தனாவின் உயிர் அவள் விழி வழி வெளிவருவதற்கு தயாராக.. நர்த்தனாவின் நெஞ்சுக்கூடு ஒருமுறை முழு வேகத்தில் ஏறி இறங்கியது.
அடுத்த நொடி நாகராஜன் தன் வலது காலை அந்த சதை குவியலின் மீது முழு வேகத்தில் இறக்க.. இதற்கு மேலும் அவள் உயிர் தாக்குபிடிக்க முடியாமல் நர்த்தனாவை விட்டு அவள் குழந்தையோடு சேர்ந்தே பிரிந்து இருந்தது.
கொடூர சிரிப்போடு இதையெல்லாம் செய்து கொண்டிருந்த நாகராஜனை புன்னகையோடு பார்த்த முத்து “இப்போ சந்தோஷமா இருக்கீங்களா..? நாலு மாசமா உங்க முகத்தை பார்க்க முடியலை.. இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு..” என்றான்.
“அந்த நா**யும் சேர்த்து இழுத்துட்டு வந்து இருந்தா இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன்டா முத்து, அவன் தப்பிச்சுட்டானே..!” என்றார் நாகராஜன். “நாங்க போகும் போது அவன் வீட்டில் இல்லை ண்ணே.. அவன் வருவதற்காக காத்திருந்து பார்த்தோம், ஆனா அவன் வரலை.. மணியும் பதினொன்னு ஆகிடுச்சு, இதுக்கு மேலே காத்திருந்து நம்ம திட்டத்தில் ஏதாவது பிரச்சனையாகிட கூடாதேன்னு தான் சட்டுன்னு வேலையில் இறங்கிட்டேன்.” என்றான் முத்து.
“அதுவும் சரி தான், இவக் கொடுத்த தைரியம் தானே அவனை துணிஞ்சு ஒரு முடிவு எடுக்க வெச்சது.. முதலில் இவளை தான் முடிக்கணும், அவனை பொறுமையா பார்த்துக்கலாம் தான்.. உனக்கு தான் வீடு தெரியுமில்லை, இப்போ இல்லைனாலும் ஒரு நாள் அவனையும் தூக்கணும் புரியுதா..?” என்று நாகராஜன் மிரட்டலாக சொல்லிக் கொண்டிருக்க.. வெளியே அமர்ந்த நிலையிலேயே லேசாக எம்பி ஜன்னலில் வழியே அழுகை சத்தம் வெளியில் கேட்டு விடாமல் இருக்க தன் இரு கைகளையும் வாயில் வைத்து மறைத்தபடி அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
இதேநேரம் சுஜாதா வீடு திரும்பி இருந்தார். வழக்கமாக திருமணமானதில் இருந்தே நாகராஜன் சுஜாதாவை எங்கும் இரவு தங்க அனுமதித்ததில்லை. அது அவரின் தாய் வீடாக இருந்தாலும் சரி. பிள்ளைகள் விடுமுறைக்கு சென்றாலும் கூட அழைத்துச் சென்று விட்டு, மாலை வரை அங்கிருந்து விட்டு கிளம்பி விடுவார் சுஜாதா.
இன்று பூஜை விருந்து என கொஞ்சம் தாமதமாகி இருக்க.. தன் தம்பியின் உதவியோடு வீடு வந்து சேர்ந்தவர், நள்ளிரவில் அவர் உள்ளே வர விரும்பாததை புரிந்து கொண்டு வாசலிலேயே வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
நேராக விஷ்வாவை தேடி தான் சுஜாதா சென்றார். அவன் உடல்நிலை பற்றி அறிய எண்ணி அங்கே சென்றவர், அறையில் யாரும் இல்லாததை கண்டு குழம்பி, அடுத்து மைதிலியின் அறைக்குச் சென்று பார்க்க.. அங்கும் யாருமில்லை.
ஆனால் மைதிலியின் அறை வெளியில் தாழிடப்பட்டிருந்தது. விஷ்வாவின் அறையில் மின்விசிறி ஓடிக்கொண்டிருப்பதை கண்டு இப்போதே இருவரும் எங்கோ சென்று இருப்பார்கள் என நினைத்து வீடு முழுக்க தேடியவர், அவர்கள் எங்கும் இல்லாததை கண்டு யோசனையாக.. பின்பக்க வீட்டில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
அதில் அங்கே செல்ல தயங்கி சுஜாதா நின்று இருந்தாலும், மனம் ஏனோ அவரை அங்கு செல்ல சொல்லி முரண்டியது. யோசிக்காமல் இருளில் இறங்கி அங்கு வந்த சுஜாதா, இறுதியாக கண்டது நாகராஜன் காலுக்கு அடியில் சிக்கி இருந்த சிசுவை தான்.
அடுத்த நொடி “ஐயோஓஓஓஓஓ..” என்ற பெரும் கதறலோடு பதறி கொண்டு வந்த சுஜாதா, நாகராஜனின் காலை பிடித்து அகற்றி விட்டு “என்ன காரியம் செஞ்சு இருக்கீங்க..?” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார்.
“நம்ம குடும்பத்தையும் ஜாதியையும் காப்பாத்திருக்கேன்..” என்று திமிராக நாகராஜன் பதில் சொல்ல.. “நீங்க செய்யறது பாவம்ன்னு உங்களுக்கு புரியவே புரியாதா..? ஏன் இப்படி பாவத்துக்கு மேலே பாவமா செஞ்சுட்டு இருக்கீங்க..? பொண்ணு மாதிரி பார்த்து வளர்த்தவளை இப்படி சிதைச்சு வெச்சுருக்கீங்களே..! உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..? ஐயோ தனாம்மா.. தனா எழுந்திரும்மா..” என்று சுஜாதா கதறிய கதறல் விஷ்வாவை வெளியில் இருந்து மேலும் கதற செய்தது.
“இதெல்லாம் நாளைக்கு நம்ம குழந்தைங்க தலையில் தானே வந்து விடியும்..! மைதிலி.. மைதிலி எங்கே..? இதையெல்லாம் பார்த்தா எப்படி தாங்குவா..?” என திடீரென நினைவு வந்தவராக பதறி சுஜாதா எழுந்து கொள்ள.. “அவ உயிரோட இருந்தா தானே பார்க்க..?” என்றார் சிறு குற்ற உணர்வும் இல்லா குரலில் நாகராஜன்.
அதைக் கேட்டு திடுக்கிட்ட சுஜாதா “என்ன சொன்னீங்க..?” என்று பதற.. “அவ பொண்ணு ஓடிப் போன துக்கம் தாங்காம கிணத்தில் விழுந்து தற்கொலை செஞ்சுகிட்டா..” என்ற நாகராஜனை நம்பாமல் பார்த்த சுஜாதா “இதை நான் நம்புவேன்னு நினைக்கிறீங்களா..? அப்படி அவ செஞ்சுக்கணும்னு நினைச்சுருந்தா நாலு மாசம் சும்மா இருந்திருக்க மாட்டா.. மைதிலி எங்கே..?” என்று மீண்டும் கேட்க.. “அதான் சொன்னேனே கிணத்தில் விழுந்துட்டா..” என்றார் நாகராஜன்.
ஓரளவு நடந்திருப்பது என்ன என்று சுஜாதாவுக்கு தெளிவாக புரிந்தது. “அவளா விழுந்தாளா..? இல்லை..!” என்று அழுகையோடு சுஜாதா கேட்கவும் “நான் தான் கொன்னேன்.. என்னை தடுக்க நினைச்சா அதான் அவளையே இல்லாம செஞ்சுட்டேன்..” என்று கூறவும், வேகமாக ஓடிச் சென்று கிணற்றைப் பார்த்த சுஜாதா “மைதிலி..” என்று கத்த.. “அவ பரலோகம் போய் சேர்ந்து பல மணி நேரம் ஆகி இருக்கும்..” என்று வீட்டிற்குள்ளிருந்தே நக்கலாக குரல் கொடுத்தார் நாகராஜன்.
“இப்படி பாவமா சுமந்துட்டு நிற்கறீங்களே..! நமக்கும் பிள்ளைங்க இருக்கு, நாளைக்கு அவங்க எப்படி நிம்மதியா வாழ முடியும்..? ஒரு நிமிஷமாவது இதைப் பற்றி யோசிச்சீங்களா..?” என்று மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு கதறிய சுஜாதா சட்டென நினைவு வந்தவராக “வி.. விஷ்வா.. விஷ்வா எங்கே..?” என பதற.. “என்னை கேட்டா..!” என்றார் அலட்சியமான குரலில் நாகராஜன்.
விஷ்வாவை எண்ணி அடி வயிறு கலங்க.. “அவ.. அவனையும் நீங்க எதுவும் செஞ்சுடலையே..!” என்று உயிரை கையில் பிடித்து கொண்டு கேட்டார் சுஜாதா. “அவனை நான் எதுவும் செய்யலை..” என்றார் அதே அலட்சியமான குரலில் நாகராஜன்.
அப்போதும் “குழந்தையை காணோமே..! நான் வீடு முழுக்க தேடிட்டேனே..!” என்று சுஜாதா பதட்டமாக.. ‘எங்கே தன்னை கண்டுபிடித்து விடுவார்களோ..?’ என்று பயந்து நடுங்கி ஒடுங்கி அங்கே இருளில் மறைந்து உட்கார்ந்தான் விஷ்வா.
அவனுக்கு இப்போது நாகராஜனை மட்டுமல்ல இந்த வீட்டில் இருக்கும் யாரைப் பார்த்தாலும் பயமாக இருந்தது. யாரையும் நம்ப அவனால் முடியவில்லை.
இவர்கள் தன்னையும் ஏதாவது செய்து விடுவார்களோ என்று மட்டுமே அந்த நொடி அவனுக்கு தோன்ற.. பயத்தோடு இருளில் ஒடுங்கி அவன் அமர்ந்திருக்க.. அதே நேரம் நர்த்தனாவை தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தான் தாரக்.
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா