About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
வர்ணம் - 48
அரியாங்குப்பம் சர்ச்சில், முட்டிக்கால் போட்டபடி அவர்கள் சொன்னதை செய்து வீடியோ எடுத்த சரத், அங்கேயே அவனுடைய ஆபீஸ் லேப்டாப்பை ஓபன் செய்து, மெயில் ஐடியில் வீடியோவை அப்லோடு செய்து கொண்டிருந்தான்.
இடையே ஆனந்த் கால் செய்ததை கூட அவன் எடுக்கவில்லை. அவனை தலையிட வைத்தால், ஆளை புடிக்கிறேன், ..... (censored) புடிக்கிறேன்னு குழப்பி விட்ருவான். பேசாமல் பணத்தை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளலாம்.
வேர்வை வழிய, பிபி எகிறி கொண்டிருக்க, சரத் வாட்சில் டைம் பார்த்தான். அவர்கள் சொன்ன கணக்கில், அரை மணி நேரம் முடிந்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் வீராம்பட்டினம் அனாதை இல்லத்திற்கு சென்று, பணத்தை கொடுத்து ரிசிப்ட் வாங்க வேண்டும். அதை அப்லோடு செய்ய வேண்டும். நெட் வேறு ஸ்லோவா இருக்குதே!!! ஐயோ!! என்று கத்தினான். பட்டு பட்டுன்னு லேப்டாப்பில் வெறுப்பாக அடித்தான்.
ஐயோ!!! இது வேற டேமேஜ் ஆயிட போகுது. அப்புறம் அவனுங்க சொன்னத செய்ய முடியாது.
டேய் யாருடா நீங்க???
அவன் போன் அடித்தது unknown நம்பர்.
எடுத்துப் பேசினான்.
ஜானி நக்கலாக, "யாராவது உன்னை போன் பண்ணி பணம் கொடு, அதை செய், இதைச் செய்ன்னு பிளாக்மெயில் பண்ணா... ஃபர்ஸ்ட் எதை வைத்து பிளாக் மெயில் பண்றாங்களோ அந்த விஷயம், அவன் கிட்ட இருக்கான்னு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கோணும்.
அப்புறம் தான் அவங்க சொன்னபடி செய்யோணும்.. அதுக்கப்புறம் பணம் கொடுக்கோணும்.
சம்ஜா?
சரத்: என்ன சார் சொல்றீங்க?
ஜானி: லேப்டாப்பை நான் தான் தூக்கிட்டு போனேன்னு உனக்கு தெரியுமா? கேமரா என்கிட்ட தான் இருக்குன்னு உனக்கு தெரியுமா? கன்பார்ம் பண்ணிக்கவே இல்லையே? நீல்லாம் ஆபீஸ்ல எப்படி அவ்வளவு பெரிய பதவில இருக்கிற? முட்டாப் பயலே"
சரத் பதறி போய், "என்ன சொல்றீங்க? நீங்க தான் என்னுடைய வைஃப் ஃபோன் நம்பர், சுஷ்மிதா கூட நான் சேட் பண்ண டீடைல்ஸ், எடுத்த போட்டோஸ் பத்தி எல்லாத்தையும் கரெக்டா சொன்னீங்களே..."
ஜானி: "சொன்னேன் தான்.. இருந்தாலும் இந்த நிமிஷம் உன் லேப்டாப்பும் கேமராவும் என்கிட்ட இருக்கான்னு நீ கேட்டு கன்பார்ம் பண்ணிருக்கணும். Sample கேட்டுருக்கணும். ஓகே விடு. இனிமே உன்னை யாராவது பிளாக் மெயில் பண்ணா, இந்த தவறை பண்ணாதே. சரி, உன் மெயில் ஐடிக்கு இரண்டு போட்டோ sample அனுப்பிருக்கேன். அத பாரு... இந்த டாஸ்க் முடிக்கிறதுக்கு ஒன் ஹவருக்கு மேல ஒரு செகண்ட் ஆச்சினாலும், அந்த போட்டோவை தான் நெட்ல அப்லோட் பண்ணுவேன். எப்படி ஓகே வான்னு பார்த்து சொல்லு."
காலை கட் பண்ணினான். சரத் அவசர அவசரமாக mail ஓபன் பண்ணி பார்க்க, அவன் ஜட்டியோடு நிற்கும் ஒரு போட்டோவும், அரைகுறை உடையில் சுஷ்மிதா தோளில் கைபோட்டு நிற்கும் ஒரு போட்டோவும் இருந்தது.
Bastards, டென்ஷன் படுத்துறாங்களே! 😩😩 பேசி பத்து நிமிஷத்தை வேஸ்ட் பண்ணிட்டானுங்க.
கால் வந்த நம்பருக்கு போன் பண்ணினாலும், லைன் கிடைக்காது.
Plss dont do it...i will do the task perfectly .. என்று மெயில் அனுப்பி விட்டு, கிளம்பினான்
இந்தக் குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு. எங்கே என்று தெரியவில்லை? தலையை பிய்த்துக் கொண்டான்.😖😖
லேப்டாப், மொபைல் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு, காரை நோக்கி ஓடினான்.
"எப்புபுபுபுபுடி....", என்று ஜானி கேட்டதும், சூப்பர்ண்ணே என்று ரிஷாந்த் சிரித்ததும்,
😄😄😄 அந்த சீன் முடிவதற்குள், ஓவர்லாப்பில் கேட்டது.
சரத் காரை பரபரப்பாக கிளப்பினான். வீராம்பட்டினம் போகும் சாலை நோக்கி திருப்பினான். நேரமின்மை காரணமாக, காரை பதட்டத்தில் தாறுமாறாக ஓட்ட... பைக்கில் வந்தவன், சைக்கிளில் வந்தவன், பாதசாரிகள் எல்லாம், கண்டமேனிக்கு அவன் பிறப்பை சந்தேகப்பட்டார்கள்... அவன் பிறக்கும் போது வந்த வழியை திட்டினார்கள், அவன் ஆணுறுப்பை சாடினார்கள், தாய், தங்கையை வம்புக்கு இழுத்தார்கள்.
ஆபீஸ்ல எவ்வளவு கௌரவமாக இருந்தோம்? என்னைப் பார்த்தாலே எல்லோரும் நடுங்குவார்கள். இப்போ ரோட்டில் போறவன் வர்றவன்ல்லாம் திட்றான். இனிமே எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது. சரத்திற்கு அழுகை அழுகையாக வர, அடக்கிக் கொண்டான்
Overlap: ஜானியும் ரிஷாந்த்தும் ஸ்லோ மோவில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அனாதை இல்லம் எங்கே இருக்கிறது என்று விசாரித்தபடியே சென்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது.
சரத்துக்கு படபடப்பாக இருந்ததால், லேசாக கண்ணை கட்டியது. நேற்றிலிருந்து சரியாக சாப்பிடாததால், இன்னும் சோர்வாக இருந்தது. முகத்தை துடைத்துக் கொண்டு காரை ஓட்டினான். லெஃப்ட் சைடில் இருந்த அனாதை இல்லத்தை கவனிக்காமல், ரைட் சைடு பார்த்துக் கொண்டு சென்றான். அதை தாண்டி சென்று, ரோட்டோரமாக ஒருத்தனிடம் விசாரிக்க, வந்த பாதையில் சற்று முன்னால் தான் இருக்குதுன்னு அவர் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டு காரைத் திருப்பினான். அனாதை இல்லம் வாசல் வந்ததும், சடன் பிரேக் அடித்து நிறுத்தினான். பணம் இருக்கும் பேக்கை தூக்கிக்கொண்டு, அடித்துப் புரண்டு உள்ளே ஓடினான்.
பத்து நிமிடத்திற்கு பிறகு,
ஆர்பனேஜ் டைரக்டர் பாதர் மைக்கேல், அவரை ஆச்சரியமாக பார்த்து," ஏன் சார் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?"
சரத்: இன்னைக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள்ள கஷ்டப்படுற குழந்தைகளுக்கு டொனேஷன் கொடுக்கணும்ங்கறது என்னுடைய வேண்டுதல். அது நிறைவேற்றுவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. அதனால தான் இவ்வளவு பதட்டம். தயவு செய்து சீக்கிரமாக வாங்கிட்டு ரிசிப்ட்டை குடுங்க.
பாதர் அவனை திகைப்பாக பார்த்தார். அவர் மனக்கண்ணில், சரத் வானளாவிய அளவுக்கு உயர்ந்து மனிதருள் மாணிக்கமாக நின்றார்.
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா?
சரத் வாச்சை பார்த்துக் கொண்டிருந்தான்.
அனாதை இல்லத்தின் குழந்தைகள் ஒரு சில பேர் அவனை சூழ்ந்து கொண்டு, "தேங்க்யூ சார், தேங்க்யூ சார்", என்று சோர்வான முகத்தில், நம்பிக்கை பொங்க நன்றி தெரிவித்தார்கள்.
சரத் மனசுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்ற. அடுத்த நொடி, அய்யய்யோ டைம் ஆயிடுச்சு என்று அவர்களை விலக்கிவிட்டு ஓடினான்
இரவு 7 மணி,
ஒயிட் டவுனில், பீச் பக்கத்தில் இருக்கும் க்ளூனி ஹாஸ்பிடல் சென்று, ஜான்சி அம்மா உடல்நலத்தை விசாரித்துவிட்டு, ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அங்கிருந்த ஒரு திருப்பத்தில் ஸ்கூட்டியை திருப்பும் போது, எதிரே வந்த பைக் காரன்,
பட்டார்... என்று அவள் ஸ்கூட்டி மேல் மோதி விட..
ஷீபா நிலைகுலைந்து கீழே சரியப் போனவள், எப்படியோ சமாளித்து காலை ரோட்டில் ஊன்றி நின்றாள்.
கோபமாக அவனை பார்த்து, "ஏம்பா திருப்பத்தில் இப்படித்தான் ஹை ஸ்பீட்ல வருவீங்களா?" என்று கத்த,
பைக் காரன் பின்னால் உட்கார்ந்து இருந்த பாக்யா எட்டி பார்த்தாள்.
"ஹேய் பாக்கியா... நீயா?"
"மேடம் நீங்களா? அடி எதுவும் படலையே...", என்று கேட்டபடியே, பைக் பின் சீட்டில் இருந்து இறங்கி, அவளை நோக்கி வந்தாள்.
ஷீபா: இல்ல, அடி எதுவும் இல்ல. ஜஸ்ட் மிஸ்...
பைக்கில் அவளைப் பார்த்து பளிச்சென்று சிரித்தபடி இருக்கும், தலையில் ஜெல் வைத்த, ஸ்டைலாக டி-ஷர்ட் போட்டிருந்த, Ray ban இளைஞனையும், பாக்யாவையும் மாத்தி மாத்தி ஷீபா பார்த்தாள்.
பின்னர், சந்தேகமாக
"ஆமா யாரு இது?", என்று கேட்டாள்.
பாக்யா திருதிருன்னு முழிக்க, ஷீபாவுக்கு புரிந்து போனது. ஓஹோ இதுதான் அவள் பாய் பிரண்டு!!! இவன் தான் அவளின் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம்.
Rascal, இவனை சும்மா விடக்கூடாது!!!
ஷீபா: இவன் தான் உன் பாய் பிரண்டா? இப்ப கூட உன்னை கட்டாயப்படுத்தி தான் பீச்சுக்கு கூட்டிட்டு வந்துருக்கானா? வசமா மாட்டிக்கிட்டான். சின்ன பொண்ணுனா இஷ்டத்துக்கு மிரட்டுவாங்களா? உனக்கு யாருமே இல்லன்னு நினைச்சுகிட்டானா? இரு, நாலு வார்த்தை நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்கிறேன்.
பாக்யா எக்கு தப்பாக ஏதாவது ஆகிவிடப் போகிறதென்று அவளின் கையை பிடித்து, "ஐயோ!!! மேடம் வேண்டாம். இப்ப கேட்காதீங்க. இது சரியான இடமில்லை."
ஷீபா: பயப்படாத பாக்கியா. உனக்கு அட்வைஸ் பண்ண பண்ண, என்னோட பர்சனல் பிராப்ளங்கள், ஒரு சில விஷயங்களில் நானே தைரியம் ஆயிட்டேன். நீ ஏன் இன்னும் பயப்படுற?? இன்னைக்கே பேசி ஒரு முடிவு எடுத்துருவோம்.
மல்யுத்த கோதாவில் குதிக்கப் போவது போல், ஷீபா துப்பட்டாவை எடுத்து இடுப்புக்கு முன்னால் ஒரு முடிச்சு போட்டு கட்டி கொண்டு, அவனை வெறியோடு பார்த்தாள்.
பாக்கியா பதட்டமாக நிற்க, பைக் இளைஞன் என்ன நடக்கிறதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.
பாக்கியா ஷீபாவை பிடித்து இழுத்து, அவளை ஆப் பண்ண முயற்சிக்க, அவள் கேட்பதாக இல்லை.
இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று பாக்யாவுக்கு தோன்ற, பாக்யா அவனைப் பார்த்து, "சுரேஷ் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு...", என்று சொல்லிவிட்டு, ஷீபா கையை பிடித்து ஓரமாக இழுத்து சென்றாள்.
பாக்யா: மேடம், நான் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும். தயவு செய்து கொஞ்சம் பொறுமையா கேளுங்க. எல்லாம் ஜானி சார், சொன்னதுனால தான் அப்படி பேசினேன். ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா....
என்று ஆரம்பித்து... ஆபீஸ் நான்காவது மாடியில் அவள் பேசியதை ஜானி கேட்டது, சரத்துக்கு கொடுத்து கொண்டிருக்கும் ட்ரீட்மென்ட், ஷீபாவுக்கும் பாக்யா மூலமாக கொடுத்த ட்ரீட்மென்ட், எல்லாவற்றையும் வரிசையாக சொன்னாள்.
அவள் சொல்வதைக் கேட்க கேட்க... ஷீபாவின் முகம் மாறியது. சற்று முன்னால் இருந்த ஆக்ரோஷ முகம் நெகிழ்ந்து, இலகுவாகி, கண்களில் கண்ணீரின் பளபளப்பு தெரிந்தது. உதடுகளில் விசும்பல்கள் அணை கட்டியிருந்தது.
எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும், பாக்யா: "இதெல்லாம் உங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா வேற வழியில்லாமல் சொல்லிட்டேன். எல்லாமே உங்க நல்லதுக்காக தான் எங்க சாரும், ஜானி சாரும் பண்ணாங்க. Pls madam தயவு செய்து பிரச்சனை எதுவும் பண்ணிடாதீங்க, வெளியில் யார்கிட்டயும் சொல்லாதீங்க..."
ஷீபா: இப்ப அவங்க எங்க இருப்பாங்க?... என்று கேட்கும் போது அவள் குரல் கமறியது.
பாக்யா: தெரியல மேடம். நீங்க அவங்களுக்கு போன் பண்ணி பாருங்க.
தொடரும்
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..! (முதல் பாகம்) - Comments Thread Our newest member: Kousalya A Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page